Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 9 பிப்ரவரி, 2022

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 7 - அர்ச். இஞ்ஞாசியார் (திருநாள் - ஜூலை 31)

 கற்பு என்ற உன்னத வரம் பெற்ற அர்ச். இஞ்ஞாசியார் (திருநாள் - ஜூலை 31)



சேசு சபையைத் தோற்றுவித்த அர்ச். இஞ்ஞாசியார், மனந்திரும்பிய திவ்ய இரட்சகர் சபை நிறு வனரான அர்ச் அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார், வெது வெதுப்புள்ள ஆத்துமங்களில் தேவசிநேக நெருப்பை மூட்டுவதற்காக, இத்தாலி நாடெங்கும் ஞான தியானப் பிரசங்கங்களை நிகழ்த்தினார். 1745ம் வருடம், ஞான தியான பிரசங்கங்கள் நிகழ்த்துவதற்காக, ஃபோஜ்ஜியா நகருக்கு சென்றார். ஏட்ரியாடிக் கடலை ஒட்டியிருந்ததால், இந்நகரம் கப்பல் வழி வியாபாரத்தில் சிறந்து விளங்கியது; பண்டைய அபுலியா இராஜ்யத்தின் தலைநகரமானஃபோஜ்ஜியா, செல்வ செழிப்புடனிருந்தது; கிறீஸ் துவ வேதத்தின் பழம்பெரும் காலத்தின் துவக்கத்தில், மனுக்குலத்தை மீட்க மனிதவதாரமெடுத்த திவ்ய சுதன் மேலுள்ள நேசப் பெருக்கத்தால், ஜெருசலேம் நகரை நோக்கி திருயாத்திரை போகத் தீர்மானித்தார். தன் பாவங்களை நினைத்து பட்ட உத்தம மனஸ்தாபத்தினாலும், அதிகமாய் தேவசிநே கத்துக்காக வீரத்தன்மையான கிரியைகள் செய்யவேண்டும் என்ற ஆசையாலும், கடின தபசு செய்து, தன் சரீரத்தை உபாதித்து, உலகத்திலிருந்து மறைந்திருக்க ஆவலுற்றிருந்தார். ஏற்கனவே கசை யால் தன்னை அடித்துக்கொள்ள துவக்கியிருந்தார்.

அருந்தவப் பிரீதியால், அவர் மனம் கர்த்துாசியர் சபையை நாடிச் சென்றது. திருயாத்திரை போய் வந்தவுடன் அதில் உட்பட திட்டமிட்டிருந்தார். ஆனால் "சேசு" என்ற மகா பரிசுத்த திருநாமத்தை விருதாகவும், "சர்வேசுரனுடைய அதிமிக தோத் திரம்" என்பதை விருதுவாக்கியமாகவும் கொண்டு, திருச்சபையின் நன்மைக்காக அயராது, போர் புரியும் படையணி என, நவமாய் ஒரு துறவற சபையை ஸ்தாபிப்பதற்காக, இஞ்ஞாசியாரைத் தெரிந்து கொண்ட பரம் கர்த்தர், அவர் கர்த்தாசியர் சபையில் உட்படத் திருவுளமாகவில்லை. ஆயி னும், அர்ச். இஞ்ஞாசியார், ஆயுள் பரியந்தம், கர்த்துாசியர்சபையின் மேல் வெகு அன்பு வைத்திருந் தார். ஓர் இரவு, அவர், இலொயோலா மாளிகையிலுள்ள தம் அறையிலிருந்த தேவமாதாவின் படத் திற்கு முன்பாக முழந்தாளிட்டு வெகு உருக்கத்துடன், பரிசுத்தக் கன்னித்தாயின் திவ்யகரங்களில், தன்னை சேசுநாதர் சுவாமிக்கு முழுவதும் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருடைய மாளிகை எங்கும் ஓர் பலமான அதிர்ச்சி உண்டானது. அதனால் பலகணிக் கண்ணாடிகள் உடைந்து போயின.

சுவரிலும் ஓர் பிளவு உண்டாகி, இந்நாள் வரை இந் நிகழ்வுக்கு அத்தாட்சியாயிருக்கின்றது. அர்ச்சிஷ்டவர், பரிசுத்த கற்பு என்னும் புண்ணியத்தில் ஸ்திரமாய் ஜீவிப்பதற்கு வேண்டிய தேவ வரப்பிரசாதத்திற்காக அமலோற்பவமாதாவிடம் அதிக உருக்க மாக ஜெபித்து வந்தார். ஓர் இரவில், அர்ச். இஞ்ஞாசியார் ஜெபித்துக் கொண்டிருக்கையில், அர்ச். அமலோற்பவமாதா, திவ்ய குழந்தை சேசுவுடன் மாட்சிமிக்க பேரொளியுடன் காட்சியளித்தார் கள். தேவமாதா, இஞ்ஞாசியாரையே சற்று நேரம் உற்று நோக்கியபடி, காட்சி கொடுத்தார்கள். தேவ மாதா, ஒன்றும் பேசவில்லை. திவ்ய குழந்தை சேசுவும், அவரை அளவற்ற அன்புடன் நோக்கி னார். பரிசுத்த ஜோதிமயமான அக்காட்சியை இஞ்ஞாசியார், கண்குளிரப் பார்த்தார். துாயதேவசிநே கப் பெருக்கத்தால் இருதயம் தாவித்துடிக்க, ஒப்பிலா அழகு சோபனம் வாய்ந்த அவ்விரு திரு வதனங்களையும் கூர்ந்து நோக்கினார். அப்பொழுது, அவருடைய ஆத்துமம், அருட்பிரகாச தீட்சை பெற்றது. அமல உற்பவ இராக்கினியையும், அவதரித்த திவ்ய சுதனையும் தரிசித்த அர்ச் இஞ்ஞாசி யாரின் கண்கள் அன்று முதல், உலகமாய்கைகளின் கவர்ச்சியினின்று முற்றிலும் விடுபட்டது. பரலோகக் காட்சியால், பூலோக இன்பங்களை இருதயம் வென்றது. ஆதாமின் மக்களை, அலைக்கழித்து சிந்தை குலையச் செய்யும் ஐம்புல மாய்கை அன்றே அவரைவிட்டு அகன்றது. அன்று முதல், ஜீவிய கால மெல்லாம், கற்பு என்கிற புண்ணியத்தில் ஓர் அசரீரியைப் போல் ஜீவிக்கும் உன்னத வரத்தை அடைந்தார். இத்தரிசனத்திற்குப் பின், இஞ்ஞாசியார், பரலோக ஏக்கமுடையவர் போல், நட்சத்தி ரங்கள் துலக்கமாய்ப் பிரகாசிக்கும் இரவு நேரத்தில், வானத்தையே வெகுநேரம் பார்த்துக்கொண்டி ருப்பார். அவர் பூரண சரீர சுகம் அடையும் வரைக்கும், இன்னும் சிறிது காலம் அம்மாளிகையிலேயே தங்க நேர்ந்தது. அந்நாட்களை வீணாக்காமல், அவர், ஜெபத்திலும், ஞானவாசகத்திலும் கழித்தார். அடிக் கடி, ஆத்தும் சோதனை செய்வார். மற்றவருடன் உரையாடும் போது, ஞான காரியங்களைப் பற்றியே பேசுவார். வாசித்த ஞானகாரியங்களை நன்றாக மனதில் பதியவைக்கும்படி, அவற்றை ஓர் புத்தகத் தில் திருத்தமான அட்சரங்களில் எழுதிவைப்பார். சேசுநாதர் சுவாமியுடைய திருவாக்கியங்களை யும் கிரியைகளையும், பொன்னிறமான அட்சரங்களிலும், தேவதாயாரைக் குறித்தவைகளை நீல நிறத்திலும், மற்ற அர்ச்சிஷ்டவர்களைச் சார்ந்தவற்றை வேறுநிறங்களிலும் எழுதிவைத்தார். இலொயோலா மாளிகையைலிட்டுப் போகும் போது, அவர், தம்முடன் எடுத்துக்கொண்டு போன பொக்கிஷம் இப்புத்தகம் ஒன்று மட்டுமே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக