Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 16 பிப்ரவரி, 2022

அர்ச்சிஷ்டவர்கள் சரித்திரம் 14 - அர்ச் களாட் தெலா கொலம்பியர் (Claude La Colombière) Part - I

 சேசுவின் திரு இருதயத்தின் பக்தியை பரப்பிய அர்ச். க்ளாட் தெலா கொலம்பியரின் ஜீவிய சரிதை




திவ்ய சேசுநாதர் சுவாமி தமது மகா பரிசுத்த திரு இருதயத்தின் அளவற்ற சிநேகத் தை நமக்கு வெளிப்படுத்த, இரண்டு அர்ச்சிஷ்டவர்களைத் தெரிந்தெடுத்தார். அர்ச். மர்கரீத் மரியம்மாளுக்குத் தமது திவ்ய இருதயத்தை காண்பித்த ஆண்டவர், அவளுக்கு ஆத்தும் குருவானவராக, அர்ச். க்ளாட் தெலா கொலம்பியரை அனுப்பினார். இந்த அர்ச்சிஷ்டவர், 1641-ம் ஆண்டு, திவ்ய சேசு பாலன் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட திருநாளன்று (பிப் 2-ம் தேதி) பிறந்தார். பெர்ட்ராண்டு , மார்கரீத் , இவர்களுக்குப் பிறந்த எழுவருள் 3-வதாக பிறந்தவர் தான், நமது அர்ச்சிஷ்டவர். இந்த 7 பேரில் இருவர் குழந்தைப் பருவத்திலேயே இறந்து போயினர். மூவர் குருக்களாகவும், ஒருவர் கன்னியாஸ்திரியாகவும், மூத்த மகன் இல்லரவாசியாகவும் தங்கள் வாழ்க்கையை பின்னாளில் அமைத்துக் கொண்டனர்.

நமது அர்ச்சிஷ்டவரின் பெற்றோர் தங்களது நற்குணங்களால் பிள்ளைகளுக்கு முன் மாதிரிகையாக விளங்கினர். தந்தை பெர்ட்ராண்டு சத்திய வேதத்தினுடைய முன்னேற்றத் துக்காக ஊக்கமாய் உழைப்பதிலும், பல கோவில்கள் கட்டுவிக்க தாராளமாய் பண உதவி புரிவதிலும், ஆர்வத்தோடு இருந்தார். தாய், தனது பிள்ளைகளுக்கு இளவயதிலேயே ஞானோ பதேசம் கற்பித்து, தேவஞானத்திலும், தேவசிநேகத்திலும் வளர்த்து வந்தாள். க்ளாட், 9-வது வயதில் பெற்றோரின் வழிநடத்துதலில், தகுதியான முறையில் புதுநன்மை, உறுதி பூசுதல் ஆகிய தேவ திரவிய அனுமானங்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர் ஆரம்பக் கல்வி பயி லும் பொருட்டு, லயன்ஸ் நகரிலுள்ள சகாயமாதா ஆரம்பப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கே அவர் தேவதாயாரின் பாதுகாவலின் கீழ், தேவ ஞானத்திலும், கல்வியிலும் வளர்ந்து வந்தார். 12-வது வயதில்லயன்ஸ் மாநகரில் சேசு சபை நடத்தி வந்த பிரபலமான கல்லூரியில் சேர்ந்து தன் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது, இளைஞர்களை தேவசிநேகத் தில் வளர்ப்பதில் பேர் பெற்ற சங்.ஜான் சே.ச சுவாமி தான், கல்லூரியின் முதல் வராக இருந்தவர். நமது அர்ச்சிஷ்டவர், இவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். அதன் பயனாக 1658-ம் ஆண்டு தனது 18-வது வயதில் அவிஞ்ஞோன் என்ற நகரிலிருந்த சேசு சபையில் நவசந்நியாசியாக சேர ஆசித்தார்.

மகனின் விருப்பத்தை அறிந்த பெற்றோர், சர்வேசுரனுக்கு நன்றி கூறி அவரை ஆண் டவருக்கு ஒப்புக் கொடுத்தனர். மடத்தில் அவர் சேரும்போது, சங்.ஜான் நவசந்நியாசிகளைக் கண்காணிக்கும் பொறுப்பேற்று அங்கு வந்து சேர்ந்தார். க்ளாட் தெலா கொலம்பியர் அர்ச் சிஷ்டவராவதற்கு, இவர் ஒரு பெரிய தூண்டு கோலாயிருந்தார். “எனது உண்மையுள்ள ஊழியன், என் சிறந்த நண்பன்" என்று சேசுவின் திரு இருதயத்தால் புகழப்படும் அளவிற்கு, பின்னாளில் கொலம்பியர் பெரிய அர்ச்சிஷ்டவரானார்.

அம்மடத்தில் ஒரு வயோதிகக் குருவானவர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருந்தார். கொலம்பியார், இவருக்கு உதவி செய்யும் பொருட்டு அடிக்கடி அவரை சந்திக்க செல்வார். அவர் தான் முதன் முதல், சேசுவின் திரு இருதய நேசத்தைப்பற்றி இவருக்கு விவரித்துக்கூறி, அம்மகாப் பரிசுத்த திவ்யதிரு இருதயத்தின் மீதான பக்தியைத் தூண்டியவர். அவர், தன் மரண வேளையில் எல்லோரையும் தே தேயும் பாடச் சொன்னார். பின், "இரக்கம் நிறைந்த ஆண்டவர் எனக்கருளிய எல்லா வரங்களிலும் மேலானது, சேசு சபையில் நான் இறப்பதே” என்று பேரானந்தத்தோடு சொல்லி, உயிர் நீத்தார். இதைப் பார்த்த நம் அர்ச்சிஷ் டவர், சேசு சபையில் ஆண்டவருக்குகந்த துறவியாய் ஜீவிப்பதே, பாக்கியமான மரணமும், இருதய சமாதானமும் அடைவதற்கு வழிவகுக்கும் என்று உறுதியாக உணர்ந்தார்.

அப்போது மடத்தின் அதிபர் சுவாமியார் அவரை அழைத்து, அவர் தாய் கடின வியாதியில் அவஸ்தைப்படுவதாகவும், அவரைக் காண விரும்புவதாகவும், கடிதம் வந்திருப் பதைக் கூறினார். இருதய வேதனையோடு, மரணப் படுக்கையிலிருந்த தாயை சந்திக்கச் சென்றார். தாய் மகனைக் கண்டதும் எல்லையில்லா ஆறுதலும் மகிழ்ச்சியும் அடைந்தாள். "மகனே! நீ ஒரு நாள் பெரிய அர்ச்சிஷ்டவராவாய்!” என்று கூறினாள். சில நாட்களில் அவ ளுடைய இவ்வுலக வாழ்வு முடிந்தது. அருகிலிருந்து தன் தாயின் மரணத்தைக் கண்ணுற்ற அவர், இவ்வுலக வாழ்வின் அநித்தியத்தை ஆழமாய் உணர்ந்தார். ஆண்டவருக்காக வாழ்வ தொன்றையே தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டார்.

சேசு சபை குருத்துவப் பயிற்சி காலத்தில், குருமாணவர்களை பள்ளிகளுக்கும், கல்லூரி களுக்கும் அனுப்பி, மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும், மேற்பார்வையிடவும் செய்வது வழக்கம். நம் அர்ச்சிஷ்டவரும் அவிஞ்ஞோன் நகரில் கல்லூரி ஆசிரியராகப் பொறுப்பேற் றார். அப்போது அக்கல்லூரியின் தலைமைப் பொறுப்பு சங்கில்பர்ட் என்ற திறமை வாய்ந்த குருவானவரிடம் இருந்தது. அவரிடமிருந்து பதிதர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவும், மாணவர்களை தேவ சிநேகத்தில் நடப்பிக்கவும் கற்றுக் கொண்டார். அச்சமயம் மினவுதல் சபை தொடங்கக் காரணமாயிருந்த வந். பிரான்ஸிஸ் சலேசியார் மேற்றிராணியாருக்கு அர்ச்சிஷ்டப் பட்டம் கொடுக்கப்பட்டது. அவருடைய புண்ணிய வாழ்க்கையைப் பற்றிப் பிரசங்கிக்கும் பேறு. நம் அர்ச்சிஷ்டவருக்குக் கிடைத்தது. இதனால் அர்ச். பிரான்ஸிஸ் சலே சியார் மீது, இவருக்கு விசேஷ பக்தி ஏற்பட்டது. பின்னர், வேத இயலில் பயிற்சி பெறுவ தற்காக, பாரீஸ் நகருக்குச் சென்றார். அங்கே அரச குடும்பங்களுடன் பழகும் சூழல் ஏற்பட் டது. அமைச்சரின் இருபுதல்வர்களுக்குக் கல்விகற்பிக்கும் ஆசிரியரானார். அப்பொழுது தான் திருச்சபைக்கெதிரான ஜான்சனிசப் பதிதம் தோன்றியது. குருமாணவர்களையும், கன்னியாஸ் திரிகளையும், மேற்றிராணிமார்களையும் கூட, தங்கள் வலையில் சிக்க வைக்க வஞ்சகமாக ஜான்சனிசப் பதிதர்கள் முயன்றனர். திருச்சபைக்கு விரோதமான இப்பதிதத்தை முற்றிலும் முறியடித்தது, சேசுவின் திரு இருதயபக்தியே ஆகும். இதற்காகவே, நம் அர்ச்சிஷ்டவர் சேசுவின் திரு இருதயத்தால் தெரிந்துகொள்ளப்பட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக