Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

August is the Month of Immaculate Heart of Mary - August 1

 


ஆகஸ்டு 1ம் நாள்


 

போற்றுதற்குரிய மகா பரிசுத்த தேவமாதாவின் மாசற்ற திரு இருதயத்தின் மீதான பக்தியினுடைய மையப்பொருள்

 

மகா பரிசுத்த தேவமாதாவின் போற்றுதற்குரிய மாசற்ற திரு இருதயம்அர்ச்.யூட்ஸ் அருளப்பர்

மகா பரிசுத்த தேவமாதாவின் மாசற்ற திரு இருதயம், போற்றுதற்குரிய மாசற்ற திரு இருதயம் என்று அழைக்கப் படுவதற்கான காரணங்கள்: சர்வேசுரனுடைய ஏகக் குமாரனும், நமதாண்டவருமான திவ்ய சேசுகிறீஸ்து நாதருமானவர் தாமே, சகல சிருஷ்டிகளிலிருந்து, தன்னிகரற்றவர்களும், ஒப்பிடப்படமுடியாதவர்களுமான மகா பரிசுத்த திவ்ய கன்னிமாமரியைத் தம்முடைய பரிசுத்தத் தாயாராகத் தேர்ந்தெடுத்து, அவர்களாலேயே, தாம் போஷிக்கப்படவும், ஆண்டு நடத்தப்படவும், வேண்டுமென்று, தயவுடன் திருவுளம் கொண்டார்! மேலும், ஆண்டவர் தமது மகா பரிசுத்த மாதாவை, நம்முடைய  திவ்ய இராக்கினியாகவும், நமது தாயாராகவும், நம் எல்லா தேவைகளிலும், நம் நிச்சயமான அடைக்கல தஞ்ச ஸ்தல மாகவும் இருக்கும்படியாகவும், நமக்கு அளித்திருக்கிறார்! ஆகவே தான், நமதாண்டவர். தாம் தமது மகா பரிசுத்த மாதாவை மகிமைப்படுத்துவதைப் போலவும், சிநேகிப்ப தைப் போலவும், நாமும், நம் மகா பரிசுத்த தேவமாதாவை மகிமைப் படுத்தவும், சிநேகிக்கவும் வேண்டுமென்று ஆசிக்கின்றார்!

மகா பரிசுத்த மரியாயின் மதுரமான இருதயமே! என் இரட்சணியமாயிரும்!

மகா பரிசுத்த மரியாயின் மாசற்ற இருதயமே! வாழ்க!  


August the Month of Immaculate Heart of Mary - August 1



Download - Catholic Books

புதன், 10 ஜூலை, 2024

வேத சாட்சிகளான ஏழு பரிசுத்த சகோதரர்களின் திருநாள்


 ஜுலை 🔟ம் தேதி

வேத சாட்சிகளான ஏழு பரிசுத்த சகோதரர்களின் திருநாள்

ஜனுவாரியுஸ், ஃபெலிக்ஸ்,ஃபிலிப், சில்வன், அலெக்சாண்டர், விடாலிஸ்,மார்டியாலிஸ் என்கிற ஏழு பரிசுத்த சகோதரர்களின் தாயார் அர்ச்.ஃபெலிசிடாஸ், ஒரு பக்தியுள்ள பணக்கார கிறீஸ்துவ விதவையாயிருந்தாள். இவள் தேவசிநேகத்திற்கடுத்த பிறர்சிநேக அலுவல்களில் மிக தீவிரமாக ஈடுபட்டு அநேக ஏழைகளையும் நோயாளிகளையும் பராமரித்து பணிவிடை புரிந்து வந்தாள்; இவள் தன்னுடைய இந்த மிகச்சிறந்த பிறர்சிநேக அலுவல்களால் அநேக அஞ்ஞானிகளை மனந்திருப்பி கத்தோலிக்க வேதத்தில் சேர்த்தாள்.
இதைக் கண்டு பொறாமைகொண்ட அஞ்ஞான உரோமைப் பூசாரிகள், உரோமை சக்கரவர்த்தியான மார்குஸ் அவுரேலியுஸிடம், அர்ச்.ஃபெலிசிடாஸைப் பற்றி முறையிட்டனர்: இப்பெண்மணி, உரோமையர்களில் அநேகரை கிறீஸ்துவர்களாக்கியதால், உரோமைக் கடவுள்கள் உரோமாபுரியின் மீது கோபமாயிருக்கின்றன; ஆகவே, ஃபெலிசிடாசும் அவளுடைய குடும்பத்தினரும்,  இக்கடவுள்களின் கோபத்தை அமர்த்த பகிரங்கமாக  உரோமைக் கடவுள்களுக்கு பலி செலுத்தவேண்டும்!  அதற்காக அக்குடும்பத்தை நிர்ப்பந்திக்க வேண்டும்! என்று கூறினர். 
உடனே சக்கரவர்த்தி, உரோமை ஆளுநனான புப்ளியுசிடம், இக்காரியத்தை உடனே கவனிக்கும்படி கட்டளையிட்டான். உயர்குல பெண்மணியான அர்ச்.ஃபெலிசிடாசிடம் இந்த ஆளுநன் உயர்ந்த மதிப்பு கொண்டிருந்தான். சக்கரவர்த்தியின் இந்த கட்டளையைப் பற்றி அவளுக்கு எடுத்துக்கூறி, எப்படியாவது, உரோமை விக்கிரகங்களுக்கு பலிசெலுத்தி விட்டு தப்பித்துக்கொள்ளம்படி ஆலோசனை கூறினான். ஆனால், அர்ச்.ஃபெலிசிடாஸ், சிறிதளவும் அஞ்சாமல்,  “நானும் என் மகன்களும் எங்கள் சத்திய வேதத்தின் விசுவாசத்தை ஒருபோதும் புறக்கணிக்கமாட்டோம்; கைவிடமாட்டோம்; அதில் உறுதியாக இருப்போம்! எங்கள் ஆண்டவர் திவ்ய சேசுகிறீஸ்துநாதர்சுவாமிக்காகக் கொல்லப்பட்டு இறந்தால், என் மகன்கள் , நித்திய மோட்சப் பேரின்ப பாக்கியத்தை அடைவார்கள்; நித்திய ஜீவியத்தை ஜீவிப்பார்கள். ஆனால், அவர்கள் ஒருவேளை பசாசுகளான உங்கள் தெய்வங்களுக்குப் பலிசெலுத்துவார்களேயாகில், நித்திய நரகத்தின் கதியையே அவர்கள் அடைவார்கள்” என்று ஸ்திரமான குரலில் கூறினாள். இருப்பினும் , மனம் மாறுவதற்கு, புப்ளியுஸ், ஒரு நாள் அவகாசம் கொடுத்தான். அடுத்த நாள் மார்ஸ் விக்கிரகத்தின் கோவிலுக்குச் சென்று, நீதிபதியின் ஆசனத்தில் அமர்ந்தான்; ஃபெலிசிடாசும் , அவளுடைய ஏழு குமாரர்களும், வரவழைக்கப்பட்டனர். அஞ்ஞான விக்கிரகங்களை வழிபடும்படி அவர்களுக்குக் கூறினான்.
அர்ச்.ஃபெலிசிடாஸ், தன் ஏழு மகன்களிடம், “என் பிரிய மகன்களே! அந்த கொடுங்கோலனை நோக்கிப் பார்க்காதீர்கள்!  ஆனால், உங்கள் கண்களை பரலோகத்தை நோக்கி உயர்த்துங்கள்! இதோ! அங்கேயிருக்கிற உங்கள் சர்வேசுரனும் இரட்சகருமான  திவ்ய சேசுகிறீஸ்துநாதர் சுவாமியை நோக்கிப் பாருங்கள்! “ என்று கூறினாள். அரச கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் அதை மீறவும் தன் முன்பாகவே, தன் மகன்களுக்கு, ஃபெலிசிடாஸ் கூறுவதைக் கேட்டதும், புப்ளியுஸ் சீறிப்பாய்ந்தான்; உடனே ஃபெலிசிடாஸை தடிகளால் கொடூரமாக் காட்டமிரான்டித்தனமாக அடிக்கும்படி கட்டளையிட்டான்; பின்னர் அவளுடைய மகன்களில் ஒவ்வொருவராக கூப்பிட்டான்; அஞ்ஞான விக்கிரகங்களுக்கு பலி செலுத்த நயமாகப் பேசி அவர்களை சம்மதிக்க பெருமுயற்சி செய்தான்; ஆனால், ஏழு சகோதரர்களும், சத்திய கத்தோலிக்க வேத விசுவாசத்தில் ஸ்திரமாக நின்றனர்: பரிசுத்த தைரியத்துடன் ஏக பரிசுத்த அப்போஸ்தலிக்க கத்தோலிக்க விசுவாசத்தை பகிரங்கமாக உச்சாரணம் செய்தனர்! இத்தகைய தன்னிகரற்ற உன்னதமான வீரத்துவத்தை இதுவரை பார்த்திராத புப்ளியுஸ் மாபெரும் திகைப்பில் ஆழ்ந்தான். நடந்தவற்றையெல்லாம், அவன் சக்கரவர்த்தியிடம் தெரிவித்தான். கொடுங்கோலனான சக்கரவர்த்தி, ஃபெலிசிடாஸையும் அவளுடைய மகன்கள் எல்லோரையும் கொன்று போட கட்டளையிட்டான்.
அர்ச்.ஜனுவாரியுஸ், இரும்புகுண்டுகளாலான சாட்டைகளால் இறந்துபோகும் வரை அடிக்கப்பட்டார்;ஃபெலிக்ஸ் மற்றும் ஃபிலிப் ஆகிய இருவரும் தடிகளால் அடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்; சில்வானுஸ், உயரமான இடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டுக் கொல்லப்பட்டார். அலெக்சாண்டர், விடாலிஸ், மார்டியாலிஸ் ஆகிய மூவரும், வாளால் தலை வெட்டிக் கொல்லப்பட்டார்கள். இவ்விதமாக, ஏழு சகோதரர்களும் வேதசாட்சி முடியைப் பெற்றுக் கொண்டனர். அர்ச்.ஃபெலிசிடாஸ், சிறையில் அடைக்கப்பட்டு, 4 மாத காலம் சகல கொடிய உபாதைகளையும் அனுபவித்தபிறகு, 164ம் வருடம் தலைவெட்டிக் கொல்லப்பட்டாள். வேதசாட்சி முடியைப் பெற்று தன் குமாரர்களுடன் நித்தியப் பேரின்ப பாக்கியத்தை அடைந்தாள்.

வேதசாட்சிகளான ஏழு பரிசுத்த சகோதரர்களே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!

ஞாயிறு, 7 ஜூலை, 2024

June 6 - வேதசாட்சியான அர்ச். தாமஸ் மூர் (St. Thomas Moore)

ஜுலை 0️⃣6️⃣ம் தேதி

வேதசாட்சியான அர்ச். தாமஸ் மூர்



இவர் 1478ம் வருடம், பிப்ரவரி 7ம் தேதியன்று, லண்டன் மில்க் தெருவில் பிறந்தார். இவருடைய தந்தை சர் ஜான் மூர். இவர் மிக திறமையான வக்கீலாகவும் பின்னர் நீதிபதியாகவும் இருந்தார். தாமஸ், அக்காலத்தில் லண்டனிலிருந்த மிகச் சிறந்த பள்ளிக்கூடங்களில் ஒன்றான அர்ச்.அந்தோணியார் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றார்; 1490ம் வருடத்திலிருந்து, இவர், 1492ம் வருடம் வரை கான்டர்பரி அதிமேற்றிராணியாரும், இங்கிலாந்தின் சான்சலருமான வந்.ஜான் மோர்டன் ஆண்டகையின் இல்லத்தின் உள்அலுவல்களைக் கவனிக்கிற அலுவலராகப் பணிபுரிந்தார். பின், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி படித்துவிட்டு, லண்டனில் வக்கீலாக வேலை பார்த்தார்; இதுவே, இவரை இவருடைய 26வது வயதில், பாராளுமன்றத்திற்குக் கொண்டு போய் விட்டது.

1516ம் வருடம், இவர், “கற்பனை உலகம்” என்ற அர்த்தத்தில் “உடோபியா” என்கிற உலகப் புகழ் பெற்ற புத்தகத்தை எழுதினார்;  இது, இங்கிலாந்து அரசனான 8ம் ஹென்றியை மிகவும் கவர்ந்தது. அரசன்,  இவரை அரண்மனையில், பல்வேறு உயர்பதவியில் அமர்த்தினான்; இறுதியில், 1529ம் வருடம், 8ம் ஹென்றி அரசன் இவரை இங்கிலாந்தின் சான்சலராக நியமித்தான்.

1530ம் வருடம் எட்டாம் ஹென்றியின் முதல் மனைவியான ஆரகன் நாட்டின் கத்தரீனுடனான திருமணத்தை இரத்து செய்ய அனுமதிக்கும்படி பாப்பரசரிடம் விண்ணப்பம் கோரி எழுதப்பட்ட கடிதத்தில் இவர் கையெழுத்திட மறுத்தார்; இந்த கடிதத்தை இங்கிலாந்திலுள்ள திருச்சபை அதிகாரிகளும் நாட்டின் உயர்அதிகாரிகளும் எழுதியிருந்தனர். பாப்பரசர் மற்றும் இங்கிலாந்து அரசன் இருவருடைய அதிகாரங்களுக்கிடையே எது உயர்ந்த அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது என்பதின்பேரிலான முரண்பாடான கருத்து உச்சக்கட்டத்தை அடைந்தபோது,தாமஸ், அர்ச்.இராயப்பரின் ஸ்தானத்தில், அவருடைய வழியில் வந்த திருச்சபையின் தலைவரான அர்ச்.பாப்பானவருக்கு ஆதரவாக இருந்தார்; பாப்பரசரே, இங்கிலாந்து நாட்டு அரசனை விட அதிக அதிகாரத்தைக் கொண்டவர் என்பதின் பேரில் உறுதியான தீர்மானத்துடன் தாமஸ் இருந்தார்.

1531ம் வருடம், 8ம் ஹென்றி, தாமஸை தனிமைப்படுத்தி தனியாக வைத்தான்; பின்னர், பாப்பரசருக்கு ஆதரவளித்த எல்லா மூத்த திருச்சபை அதிகாரிகளையும், அகற்றினான்; மேலும், பாப்பரசருக்கு இங்கிலாந்தின் மீது எந்த அதிகாரமும் இல்லை என்ற தனது தப்பறையான நிலைப்பாட்டை, உறுதிப்படுத்தும்படியாக, 8ம் ஹென்றி, இங்கிலாந்து திருச்சபை அதிகாரிகள் உரோமையிலிருக்கும் பாப்பரசருக்கு எந்த விண்ணப்பத்தையும் அனுப்பக்கூடாது என்பதன் பேரிலான ஒரு தடைச் சட்டத்தை , இயற்றினான்.

1534ம் வருடம், பாப்பரசர் அரசர்கள் மீது அதிகாரம் கொண்டிருக்கிறவர் என்கிற திருச்சபையின் போதனையில் உறுதியாக இருந்த தாமசும், இவருடைய நண்பரும் மேற்றிராணியாருமான அர்ச்.ஜான் ஃபிஷரும்,  இங்கிலாந்தில் திருச்சபைக்குத்  தலைவராக தன்னையே பிரகடனம் செய்த அரசன் 8ம் ஹென்றியின் தலைமை அதிகாரத்தை ஏற்க மறுத்தனர்; மேலும் பகிரங்கமாக அரசனுடைய முதல் மனைவி கத்தரீனுடனான திருமணம் இரத்தானதை இருவரும், ஏற்க  மறுத்தனர். ஆகையால் இருவரும் கைது செய்யப்பட்டு,லண்டன் கோபுரத்தில் அடைக்கப்பட்டனர்!

15 மாதங்களுக்குப் பிறகு, அர்ச்.ஜான் ஃபிஷர் மேற்றிராணியார் வேதசாட்சியாகக் கொல்லப்பட்ட 9 நாட்களுக்குப் பிறகு, அர்ச்.தாமஸ் மூர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு, தேசத் துரோகி என்று தீர்ப்பிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. அர்ச்.தாமஸ் முர்,  தனக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று நிரூபித்தார்! பின் நீதிமன்றத்தில், “உங்கள் கருத்திற்கு சாதகமாக ஒரு மேற்றிராணியார் இருந்தால், என் கருத்திற்கு சாதகமாக நூற்றுக்கணக்கான அர்ச்சிஷ்டவர்கள்  இருக்கின்றனர்! உங்களுக்கு சாதகமாக ஒரு பாராளுமன்றம் இருந்தால்,  ஆயிரம் வருட காலமாக திருச்சபையில் நிகழ்ந்த எல்லா பொதுச்சங்கங்களும் எனக்கு ஆதரவாக இருக்கின்றன” என்று எல்லோர் முன்பாகவும் அர்ச்.தாமஸ் மூர் கூறினார்.  பின்னர் தூக்கு மேடையில்,  இவருடைய தலையை வெட்டிக் கொல்லப் படுவதற்கு முன்னதாக, தன் மரண தண்டனையைக் காண வந்த மக்களிடம், ‘நான் அரசனுடைய நல்ல ஊழியனாயிருந்தேன்! ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, முதலில் சர்வேசுரனுடைய நல்ல ஊழியனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

அர்ச்.தாமஸ் மூர் 1535ம் வருடம் ஜுலை 6ம் தேதி  தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். லண்டன் கோபுரத்தில், அர்ச்.இராயப்பர் சிற்றாலயத்தில் ஒரு அடையாளம் குறிக்கப்படாத கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். தேச துரோகிகள் கொல்லப்படும்போது, இங்கிலாந்தில் கொல்லப்பட்டவர்களின் தலைகளை லண்டன் பாலத்தில் ஒரு கோலின் மேல் குத்திக் காட்சிக்கு வைத்திருப்பது வழக்கம். அந்த வழக்கத்தின்படி, ஒரு மாத காலம் அர்ச்.தாமஸ் மூரின் தலை லண்டன் பாலத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர்,அது, தேம்ஸ் நதியில் எறியப்படுவதற்கு முன்னதாக, அர்ச்.தாமஸ் மூரின் மகள், மார்கிரட் ரூபர், அர்ச்சிஷ்டவரின் பரிசுத்த தலையை மீட்டு, பத்திரமாக பூஜிதமாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தாள்.  இப்போது, கான்டர்பரியிலுள்ள அர்ச்.டன்ஸ்டன் தேவாலயத்திலுள்ள ரோபர் பாதுகாப்புப் பெட்டகத்தில் அர்ச்.தாமஸ் மூரின் பரிசுத்தத் தலை பாதுகாக்கப்பட்டு வருகிறது! அர்ச்.தாமஸ் மூர் ஜீவிய காலத்தில்  அணிந்திருந்த மயிர்ச்சட்டை, தெற்கு பிரன்ட் அருகிலுள்ள சியோன் துறவற மடத்தில் பாதுகாக்கப்படுகிறது.

13ம் சிங்கராயர் பாப்பரசர் 1886ம் வருடம் டிசம்பர் 29ம் தேதி இவருக்கு முத்திப்பேறு பட்டம் அளித்தார்; 11ம் பத்திநாதர் 1935ம் வருடம் 19ம் தேதியன்று இவருக்கு அர்ச்சிஷ்டப்பட்டமளித்தார்.


அர்ச். தாமஸ் மூரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹

 

சனி, 6 ஜூலை, 2024

The Catholic's ready answer

APES AND MEN

The Ape-Theory.-Man bears so striking a resemblance to the ape that we are forced to conclude that he is descended from the ape.

THE ANSWER. 

In the first place, why argue from resemblance to descent? Or, if you argue at all, why not conclude that the ape is a degenerate man? Both arguments would be unsound, but the one would be as good as the other. What interest can you have in thus degrading man by bringing him down to the level of the apei Better argue thus: So striking is the contrast between man and ape that man could not possibly have been evolved from the ape. 

The contrast consists chiefly in this, that man has a soul endowed with reason and free will, which the ape has not. This is abundantly proved by the fact that man, by means of thought and reflection, advances from one invention or discovery to another, whilst the ape, in common with other brute animals, follows his instincts and behaves today precisely as his ancestors did thousands of years ago. He has not learned to build houses, to cook his food, or to do anything characteristic of man in the most rudimentary degree of civilization. The ape's power of mimicry is a superficial attribute which furnishes no proof of reason or thought.

Even in bodily structure the contrast is so obvious, at least to the anatomist, that no basis for the evolutionary theory can be found in that quarter. This is especially evident in the size of the brain, as also in the way in which the skull is joined to the spinal column-a circumstance that determines whether the animal is to have the erect posture of a man or the stooping posture of a beast. "The testimony of comparative anatomy," says Bumüller, "is decidedly against the theory of man's descent from the ape." Man or Ape, p. 59.

Moreover, if such descent were a fact we should find Mo some intermediate forms between the mere ape and the fully developed man. We should have found long before to-day what is popularly known as the missing link; but the missing link has nowhere been discovered, either in fossil remains or in living forms of animal life. The earth has been ransacked, but not a trace has come to light of the much sought for ape-man. Occasionally supposed discoveries have created a flutter in the scientific world, but they have invariably proved to be mares' nests. And yet if Darwin's theory of infinitesimal variations covering enormous periods of time were correct numerous specimens of intermediate forms should have been discovered.

The distinguished scientist Virchow, who certainly can not be accused of undue bias in the matter, bears the following testimony to the actual state of science on the subject:

"If we make a study of the fossil man of the quaternary period, who came nearest to our historical ancestors in the course of descent-or, better, of ascent we find at every turn that he is a man like ourselves. Ten years ago, when a skull was found in a peat-bog, among lake-dwellings, or in some ancient cave, it was thought to furnish indications of a wild and half-developed state of human existence. Men thought they scented the atmosphere of apedom. But since then a gradual change has been wrought in our estimate of such remains. The old troglodytes, lake-dwellers, and peat men have turned out to be a very respectable set of human beings. Their heads are of such a size that many a living man to-day would feel proud if he had one as large. We must candidly acknowledge that we possess no fossil types of imperfectly developed men. Nay, if we bring together all human fossils of which we have any knowledge and compare them with human beings of the present day, we can assert without any hesitation that among living men there is, proportionately, a much larger number of individuals of an inferior type than among the fossil remains thus far discovered. Whether the greatest geniuses of the quaternary age have been lucky enough to have been preserved to our day, I dare not conjecture.... But I must say that no skull of ape or ape-man which could have had a human possessor (or, as we take him to mean, could have been in any half-sense human) has ever yet been found. We cannot teach, nor can we regard as one of the results of scientific research, the doctrine that man is descended from the ape or from any other animal." The

Liberty of Science, p. 30f. In the Congress of Anthropologists held in Vienna in 1889 he adds the following to the words just quoted:

"We have sought in vain the missing links that are supposed to connect man with the ape. The primeval man, the genuine proanthropos, has not yet been found. Anthropologists cannot regard the proanthropos as a legitimate subject for discussion. They may see him in their dreams, but in their waking moments they must acknowledge him to be nowhere in sight. At Innsbruck in 1869 scientists in the fever-heat of discussion believed they could trace the evolution of the ape into the man; to-day we are unable to trace the derivation of one race of men from another. At the present hour we can say that the fossil men discovered stand as far removed from the ape as ourselves. Each living race is distinctively human, and no race has yet been discovered which can be designated as apish or half-apish... It can be clearly shown that in the course of five thousand years no appreciable change of type has taken place." Dr. Bumüller sums up the results of his study of the question in the following statements, every one of which rests upon solid demonstration:

"On no recognized principle of classification can man be associated with the ape; for, to say nothing of his gifts of understanding and speech, he stands quite alone by reason of the vastly superior development of the brain portion of his nervous system, and hence can lay claim to an independent position in the animal kingdom. Neither is his descent from the ape attested by science, for as yet no connecting link has been discovered, either in the higher walks of apedom or in the lower walks of humanity. Even the possibility of a connecting link is disproved by the tendency of apes and half-apes, in the course of their higher development in anatomical structure, to diverge more and more from the human type, and by the testimony of paleontology (the science dealing with remains of extinct species of animals preserved in the earth). Such is the present state of scientific investigation; and its results are in harmony with the view which the human understanding, lay and professional, has ever entertained when not under the tyranny of theori of theories that happen ppen to be the fashion of the hour." Man or Ape, p. 91. Munich, 1900. Dr. Zittel, an acknowledged leader in this branch of science, enumerates in his "Outlines of Paleontology" the most important discoveries made of human remains and makes the following comment: "Such material as this throws no light upon the question of race and descent. All the human bones of determinable age that have come down to us from the European Diluvium, as well as all the skulls discovered in caves, are identified by their size, shape, and capacity as belonging to the homo sapiens [man], and are fine specimens of their kind. They do not by any means fill up the gap between man and the ape."

Dr. Ranke, another eminent paleontologist, speaks with evident sarcasm, and in reference to certain scientific pretensions, of "the famous, or perhaps better, the notorious" relics discovered in the Neanderthal.

Science, after its many wanderings, is coming back to what Holy Writ has told us in words few and simple: "And the Lord God formed man of the slime of the earth, and breathed into his face the breath of life; and man became a living soul" (Gen. ii. 7). "And God created man to His own image" (Gen. i. 27).


வெள்ளி, 5 ஜூலை, 2024

மிலான் நகர அப்போஸ்தலரும் ஸ்துதியருமான அர்ச். அந்தோணி மேரி சக்கரியா - July 5 St. Anthony Mary Zacharia


 
ஜுலை 5ம் தேதி

மிலான் நகர அப்போஸ்தலரும் ஸ்துதியருமான அர்ச்.அந்தோணி மேரி சக்கரியா 

lஅர்ச்.அந்தோணி மேரி சக்கரியா  இத்தாலியில் கிரமோனா நகரில் ஓர் உயர்ந்த குடும்பத்தில் 1502ம் வருடம் பிறந்தார்; அதே நாளில், கிரமோனா கதீட்ரலில் ஞானஸ்நானம் பெற்றார்; இவருக்கு 2 வயதானபோது, இவருடைய தந்தை இறந்தார்; இவரை  வளர்ப்பதும்; இவருக்குக் கல்வி கற்பிப்பதும் இவருடைய தாயாரின் பொறுப்பில் இருந்தது; சிறிய வயதிலிருந்தே, இவருடைய தாயார், ஏழைகள் மேலும் துன்புறுகிறவர்கள் மேலும் இரக்கமுள்ளவராக இவரை வளர்த்தார்கள்; இவரை ஏழைகளுக்கு தாராளமாகத் தர்மம் செய்கிறவராக உருவாக்கினார்கள்.
கதீட்ரலை ஒட்டியிருந்த பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றார்; பேவியா நகர பல்கலைகழகத்தில் தத்துவ இயலைப் பயின்றார்; 1520ம் வருடம், பதுவா நகர பல்கலைக்கழகத்தில், மருத்துவப் படிப்பைத் துவக்கினார்; 22வது வயதில், மருத்துவப் பட்டம் பெற்று, மருத்துவரானார்; கிரமோனாவில் மூன்று வருட காலம் மருத்துவராக பணியாற்றினார். 
1527ம் வருடம், குருப்பட்டத்திற்காகப் படித்தார்; 1529ம் வருடம் பிப்ரவரி மாதம் குருப்பட்டம் பெற்றார்; நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும்  பணிவிடை செய்யும் விதமாக, மருத்துவ மனைகளிலும், நிறுவனங்களிலும், உள்ள  தேவசிநேகத்திற்கடுத்த பிறர்சிநேக அலுவல்களில், இவர் தன்னையே அர்ப்பணித்தார்; குவாஸ்டல்லாவைச் சேர்ந்த லுடோவிகா டொரெல்லி என்ற சீமாட்டியின் ஞான ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டார்; இந்த சீமாட்டியைப் பின்பற்றி, மிலான் நகருக்குச் சென்றார்.
மிலான் நகரில், நித்திய ஞானத்தின் செபக்கூடம் என்கிற துறவற குருக்கள் சபையின் உறுப்பினரானார். இந்த துறவற சபையின் உறுப்பினர்களான சங்.ஃபெராரி மற்றும் சங்.மோர்கியா ஆகிய இரு குருக்களுடன் சேர்ந்து, இவர் அர்ச்.சின்னப்பர் குருக்கள் சபை என்கிற மேற்றிராசன குருக்களுக்கான ஒரு துறவற சபையை ஸ்தாபித்தார்; இச்சபை, பொதுவாக பர்னபைட்ஸ் என்று அழைக்கப்பட்டது; பின்னர், அர்ச்.சின்னப்பருடைய சம்மனசுக்குரிய கன்னியாஸ்திரிகளுக்கான துறவற சபையையும், திருமணமான பொதுநிலையினருக்கான  அர்ச்.சின்னப்பர்  சபையையும் ஸ்தாபித்தார்.

இவர் வாழ்ந்த காலத்தில் வட இத்தாலி, போரினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளை நோயினாலும்,  அலைக்கழிக்கப்பட்டு, வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தது. புராட்டஸ்டன்டு பதிதர்கள், கத்தோலிக்க வேதத்தைத் துவேஷித்து, கத்தோலிக்க வேத விசுவாசத்தின் மீது வெறுப்பை, வட இத்தாலியப் பகுதியில் பரப்பி வந்தனர்; இந்த உபாதனைகள் எல்லாம் இப்பகுதியை மிகுந்த  துயரமான நிலைமைக்குக் கொண்டு போயிருந்தன! இதுவே, இவருடைய துறவற சபையின் சேவையை இப்பகுதியில் ஆற்றும்படி மிக வல்லமையுள்ள விதமாக விண்ணப்பிக்கக் காரணமாயிற்று! அர்ச்.அந்தோணி மேரி சக்கரியா, ஐந்து உறுப்பினர்களுடன்  துவக்கியிருந்த பர்னபைட்ஸ் துறவற சபைக்கு, 7ம் கிளமென்ட் பாப்பரசர் 1533ம் வருடம் திருச்சபையின் அதிகாரபூர்வ ஒப்புதலை அளித்தார்.
வின்சென்சா என்ற நகரில், தேவாலயங்களில், மகா பரிசுத்த தேவநற்கருணைக்கு நிந்தைப் பரிகாரமாக 40 மணி நேர தொடர் ஆராதனையை பொதுமக்கள் மத்தியில் பிரபல்யமடையச் செய்தார்; உன்னதமானவிதமாக, பகிரங்கமாக மகா பரிசுத்த தேவநற்கருணை ஆடம்பரமாக ஸ்தாபிக்கப்பட்டு, 40 மணி நேரம்  இடைவிடாமல் விசுவாசிகளால் ஆராதிக்கப்படும் பழக்கத்தை, இப்பகுதியிலுள்ள தேவாலயங்களில் பரப்பினார்; நமதாண்டவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை  நன்றியறிந்த ஸ்தோத்திரத்துடன் ஞாபகப்படுத்தி சிறிய தேவசிநேக மற்றும் தேவ ஆராதனை முயற்சியை விசுவாசிகள் அனுசரிக்கும் விதமாக தேவாலயங்களில், மத்தியானம் 3 மணிக்கு மணி அடிக்கும் பழக்கத்தையும் துவக்கி வைத்தார்.
1539ம் வருடம், வேதபோதக அப்போஸ்தல அலுவலுக்காக  குவாஸ்டல்லாவிற்கு  சென்றபோது, இவருக்கு காய்ச்சல் வந்தது; அத்துடன் இவர் இடைவிடாமல் அனுசரித்து வந்த கடினமான தபசும் பரித்தியாகங்களும், இவரை மிகவும் பலவீனமடையச் செய்தன! 1539ம் வருடம் ஜுலை 5ம் தேதியன்று, இவர், 36வது வயதில், பாக்கியமாய் மரித்தார். இவருக்குக் குருப்பட்டம் அளித்த வந்.லூக்கா டி சேரியேட் ஆண்டகை இவருடைய அடக்கச் சடங்கை தலைமையேற்று நடத்தினார்.
அர்ச்.சின்னப்பருடைய சம்மனசுகள் என்ற கன்னியர் மடத்தில் இவருடைய பரிசுத்த சரீரம் அடக்கம் செய்யப்பட்டது; இவர் மரித்து 27 வருடம் கழித்து, புதுமையாக அழியாமலிருக்கிறதைக் கண்டறிந்தனர்!  இவருக்கு, 1849ம் வருடம் முத்.9ம் பத்திநாதர் பாப்பரசரால் முத்திப்பேறு பட்டமளிக்கப்பட்டது. இவருக்கு,13ம் சிங்கராயர் பாப்பரசரால், ஆடம்பரமாக உரோமையில், மே 15ம் தேதி, 1897ம் வருடம் அர்ச்சிஷ்டப்பட்டம் அளிக்கப்பட்டது.
இவருடைய அர்ச்.சின்னப்பரின் குருக்கள் துறவற சபையின் தலைமையகமாக, மிலான் நகரிலுள்ள அர்ச்.பர்னபாஸ் தேவாலயம் அளிக்கப்பட்டிருந்தது, என்பது தான், இவருடைய துறவற சபை பர்னபைட்ஸ் என்று அழைக்கப்படுவதற்குக் காரணம்.

ஸ்துதியரான அர்ச்.அந்தோணி மேரி சக்கரியாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹

வியாழன், 4 ஜூலை, 2024

மேற்றிராணியாரும், வேதசாட்சியுமான அர்ச்.ஆஸ்டியுஸ் - July 4 St. austius

ஜுலை 4ம் தேதி

 மேற்றிராணியாரும், வேதசாட்சியுமான அர்ச்.ஆஸ்டியுஸ் திருநாள்

  அஞ்ஞான உரோமை சக்கரவர்த்தியான டிராஜன் ஆண்ட காலத்தில் , இவர் மசதோனியாவைச் சேர்ந்த டிராகியும் என்ற நகரின் மேற்றிராணியாராக இருந்தார். கி.பி.98ம் வருடம் டிராகியும் நகரின் ஆளுனராயிருந்த அக்ரிகோலாவினால், இவர் கைது செய்யப்பட்டார். ஈயக் கம்பிகளாலும், எருது மாட்டின் வாலில் செய்யப்பட்ட சாட்டையாலும் அடிக்கப்பட்டார்;ஆனால், ஆண்டவர் மட்டிலான சிநேகத்தில், ஆஸ்டியுஸ் உறுதியாயிருந்தார். பின், இவருடைய சரீரத்தை முழுவதும், தேனினால் தடவி விட்டனர். ‘குளவிகளும் தேனீக்களும், ஈக்களும் வந்து, அர்ச்சிஷ்டவருடைய சரீரத்தை முழுவதும் மொய்த்து, கொட்டி, தீராத வலிவேதனையை ஏற்படுத்தின!  அஞ்ஞான விக்கிரகமான டயோனிசியுஸை வழிபட மறுத்ததால், அர்ச்.ஆஸ்டியுஸ் சிலுவையில் அறையப்பட்டு, வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார்.
கிறீஸ்துவர்கள் வேதசாட்சியான பரிசுத்த மேற்றிராணியாரின் சரீரத்தை மிகுந்த மேரை மரியாதையுடன் பூஜிதமாக அடக்கம் செய்தனர்.

மேற்றிராணியாரும் வேதசாட்சியுமான அர்ச்.ஆஸ்டியுஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!

புதன், 3 ஜூலை, 2024

July 3 - பாப்பரசர் 2ம் சிங்கராயர் திருநாள் (St. Leo II)

 ஜுலை-3ம் தேதி

பாப்பரசர் 2ம் சிங்கராயர் திருநாள்

இவர் சிசிலியில் பிறந்தார்; இவர் வாழ்ந்த 7ம் நூற்றாண்டின் காலத்தில் மகமதியர்களின் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள அநேக குருக்கள் உரோமைக்குச் சென்றதைப்போலவே இவரும் உரோமைக்குக் குடிபெயர்ந்திருக்க வேண்டும்; 
 கதீட்ரலில் கட்டளை ஜெபத்தை ஜெபிப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டிருந்த இவர், மேற்றிராணியாரின் அரண்மனையில் தங்கியிருக்கும் கதிட்ரல் அதிபர்குழுவின் உறுப்பினராக இருந்தார்.
 இவர், பாப்பரசர் அர்ச்.ஆகத்தோ இறந்தபிறகு, புதிய பாப்பரசராக 681ம் வருடம் ஜனவரி 10ம் தேதியன்று தேர்ந்தெடுக்கப்பட்டபோதிலும், பைசாண்டின் சக்கரவர்த்தியான 4ம் கான்ஸ்டன்டைனால் அங்கீகரிக்கப்படுகிற வரை, 1 வருடம் 7 மாத காலம் வரை காத்திருக்க நேரிட்டது. 682ம் வருடம் ஆகஸ்டு 17ம் தேதியன்று புதிய பாப்பரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாப்பரசரைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசனுடைய அதிகாரத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை நடந்து வந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டது. பாப்பரசர் ஆகத்தோ காலத்திலிருந்து, 4ம் கான்ஸ்டன்டைனுடன் இக்காரியத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை நடந்தது. இவர் பாப்பரசராக 10 மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தார்; ஆனால், இவருடைய ஆட்சிகாலம் மிக பயனுள்ளதாயிருந்தது. இந்த பத்து மாதங்களில் இவர் நிறைவேற்றிய நல்ல அலுவல்கள் இவருடைய பெயரை வரவிருந்த தலைமுறைகள், ஆசீர்வதிக்கும்படியான உன்னத அலுவல்களாயிருந்தன! 
 இவர் பாப்பரசராக இருந்த காலத்தில்,பைசாண்டின் சக்கரவர்த்திகளுக்கும் பாப்பரசருக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட மிகக் கனமான கஷ்டங்கள் தோன்றின! பைசாண்டின் சாம்ராஜ்ஜிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், ராவென்னாவிலிருந்த பாப்பரசருடைய நேரடி ஆளுமைக்குக் கீழிருந்த மேற்றிராணியார்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்தனர்; ஆனால் இம்மேற்றிராணியார்கள் சுயாட்சியுடையவர்களாக மாறுவதற்கு பெரும் முயற்சி செய்து வந்தனர்.
 ஆகவே, இனி வருங்காலத்தில், ராவென்னாவைச் சேர்ந்த எந்த மேற்றிராணியாரும், உரோமையில் பாப்பரசரால் அவரை மேற்றிராணியாராக அபிஷேகம் செய்வதற்கு முன்பாக, மேற்றிராணியாராக செயல்படக் கூடாது, என்று, 2ம் சிங்கராயர் பாப்பரசர், கட்டளையிட்டார். மேலும், திருச்சபையில் பிரிவினை வராமல் தடுப்பதற்காக, பாப்பரசர் மட்டில் இருப்பதை விட சக்கரவர்த்திக்கு, அதிக பிரமாணிக்கமாயிருந்த அநேக மேற்றிராணியார்களை, 2ம் சிங்கராயர் பாப்பரசர், மனந்திருப்பி, அர்ச்.இராயப்பரின் பத்திராசனமாகிய திருச்சபைக்குப் பிரமாணிக்கமாயிருக்கும்படி செய்தார்.
 2ம் சிங்கராயர், கான்ஸ்டான்டிநோபிளில் 680-681ம் வருடம் நிகழ்ந்த 3ம் எக்குமெனிகல் சங்கத்தின் தீர்மானங்களை ஏற்று உறுதிப்படுத்தி அங்கீகரித்தார். இந்த சங்கம், மோனோதேயிசம் என்ற பதிதத் தப்பறையை கண்டித்துக் கண்டனம் செய்தது. இந்த சங்கத்தில் முதலாம் ஹொனோரியுஸ் பாப்பரசர், திருச்சபைக்குப் புறம்பாக்கப்பட்டார்! ஹொனோரியுஸ் பாப்பரசரை திருச்சபை கண்டனம் செய்ததற்கான காரணத்தை தெளிவுடன் வெளிப்படுத்துவதில் 2ம் சிங்கராயர் பாப்பரசர் பெரும் முயற்சி எடுத்து அறிவித்தார்: அதாவது, பாப்பரசர் ஹொனோரியுஸ், மோனோதேயிச தப்பறையை எதிர்ப்பதற்கு போதுமான அளவில் செயல்படவில்லை என்பதற்காகவே , திருச்சபை விலக்கம் அளிக்கப்பட்டார், என்பதை 2ம் சிங்கராயர் பாப்பரசர் அறிவித்தார்.

2ம் சிங்கராயர் பாப்பசரசர் 683ம் வருடம் ஜுலை 3ம் தேதியன்று மரித்தார்.
அர்ச்.ஆகத்தோ பாப்பரசரும், அர்ச்.2ம் சிங்கராயர் பாப்பரசரும், அவர்களுக்கு முன்பு இருந்த பாப்பரசரான ஹொனோரியுஸை(6250638), மோனோதேயிச தப்பறையை வளரும்படி அனுமதித்ததற்காகக் கண்டனம் செய்தனர்.

மோனோஃபிசைட் பதிதத் தப்பறை, நமதாண்டவருடைய முழுமையான மனித சுபாவத்தை மறுத்தது; மோனோதேயிச பதிதத் தப்பறையாளர்களும், அதன் முன்னணியாளரான கான்ஸ்டான்டிநோபிளின் முதலாம் செர்ஜியுஸ் என்ற பிதாப்பிதாவும், நமதாண்டவர் மனித அறிவைக் கொண்டிருந்தார் என்று விசுவசித்தனர்; ஆனால், ஆண்டவர் மனித மனதைக் கொண்டிருந்தார் என்பதை, மறுத்தனர்.

அர்ச்.2ம் சிங்கராயரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹

Book Review - Padre Pio, the Stigmatist" by Charles Mortimer Carty







"Padre Pio, the Stigmatist" by Charles Mortimer Carty is a detailed biography of Saint Padre Pio of Pietrelcina, a Capuchin friar known for his piety, charity, and the stigmata he bore for most of his life. The book, first published in the mid-20th century, offers an in-depth look at the life and works of Padre Pio, emphasizing his spiritual journey, the miraculous phenomena associated with him, and his deep devotion to God.

 





 Overview

The book is divided into several sections, each focusing on different aspects of Padre Pio's life:

1. Early Life and Calling: This section covers Padre Pio's childhood, his decision to join the Capuchin friars, and the early signs of his deep spirituality.

2. Spiritual Struggles and Stigmata: Carty details the physical and spiritual challenges Padre Pio faced, including his battles with demonic forces and the appearance of the stigmata.

3. Miracles and Healings: The author documents numerous accounts of miracles and healings attributed to Padre Pio's intercession, illustrating his reputation as a miracle worker.

4. Opposition and Controversy: This part explores the skepticism and opposition Padre Pio faced from both within and outside the Church, including investigations by Church authorities.

5. Devotion and Legacy: The book concludes with an examination of Padre Pio's enduring legacy, his canonization, and his impact on the lives of countless individuals.

 Strength

- Detailed Research: Carty's work is thoroughly researched, drawing on numerous firsthand accounts, letters, and testimonies from those who knew Padre Pio personally.

- Comprehensive Coverage: The book covers all aspects of Padre Pio's life, providing a comprehensive understanding of his spiritual journey and the phenomena associated with him.

- Inspirational Tone: The biography is written in an engaging and inspirational tone, reflecting the profound impact Padre Pio had on those around him.

 Weaknesses

- Hagiographic Approach: Some readers may find the book to be overly hagiographic, with a strong focus on the miraculous and supernatural aspects of Padre Pio's life.

- Lack of Critical Analysis: While the book is rich in detail, it sometimes lacks critical analysis of the more controversial aspects of Padre Pio's life and the skepticism he faced.

Conclusion

"Padre Pio, the Stigmatist" by Charles Mortimer Carty is a compelling and comprehensive biography of one of the most beloved and mystically gifted saints of the 20th century. It serves as an inspiring read for those interested in the life of Padre Pio and the profound spiritual lessons he imparted. However, readers looking for a more critical examination of his life and the controversies surrounding him may find this book somewhat one-sided.


செவ்வாய், 2 ஜூலை, 2024

July 2 - மகா பரிசுத்த தேவமாதா அர்ச். எலிசபெத்தம்மாளை சந்தித்த திருநாள்

ஜுலை 2-ம் தேதி

மகா பரிசுத்த தேவமாதா அர்ச். எலிசபெத்தம்மாளை சந்தித்த திருநாள் 




இன்று, திருச்சபை தமது திருவுதரத்தில் திவ்ய குழந்தை சேசுவை சுமந்தவர்களாக, மகா பரிசுத்த தேவமாதா, ஆண்டவரின் முன்னோடியான அர்ச்.ஸ்நாபக அருளப்பரை திருவுதரத்தில் சுமந்துகொண்டிருந்த 6 மாத கர்ப்பிணியான தமது உறவினள், அர்ச்.எலிசபெத்தம்மாளை ,சந்தித்த திருநாளைக் கொண்டாடுகிறது.

மகா பரிசுத்த தேவமாதா தமது திருவுதரத்தில் திவ்ய சேசுநாதர்சுவாமியைக் கொண்டவர்களாக அர்ச்.எலிசபெத்தம்மாளை சந்தித்து, அவர்களுடைய வயிற்றிலிருந்த அர்ச்.ஸ்நாபக அருளப்பரை அர்ச்சித்தார்கள்!அவரை ஜென்மப் பாவ தோஷத்திலிருந்து சுத்திகரித்து விடுவித்தார்கள். ஆதலால், அவர் அர்ச்.எலிசபெத்தம்மாளின் வயிற்றில் அக்களிப்பினால் துள்ளினானர். அர்ச்.எலிசபெத்தம்மாள், திவ்ய இஸ்பிரீத்து சாந்துவினால் நிரப்பப்பட்டவர்களாக, “ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீரே! உம்முடைய திருவயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதாமே!”  என்று வியந்து கூக்குரலிட்டபடிக்கூறினார்கள்.

அர்ச்.ஸ்நாபக அருளப்பர் பிறந்த திருநாளுக்கு எட்டுநாட்களுக்குப் பின், மகா பரிசுத்த தேவமாதா அர்ச்.எலிசபெத்தம்மாளை சந்தித்த தேவ இரகசிய திருநிகழ்வின் மினவுதல் திருநாளை திருச்சபை ஆடம்பரமாகக் கொண்டாடுகிறது. அர்ச்.ஸ்நாப அருளப்பர் பிறந்த திருநாளுக்குப் பிறகு, இந்த திருநாள் வருவது, நூதனமாக இருக்கிறது. இருப்பினும், அவருடைய பிறந்த திருநாளுக்கு எட்டு நாட்களுக்குள் இந்த திருநாள்  வருகிறதால், அர்ச்.ஸ்நாபக அருளப்பரின் பிறந்த திருநாள் எவ்வளவு முக்கியமான தேவ இரகசிய திருநிகழ்வாக இருக்கிறது, என்பதை நமக்குக் காண்பிக்கிறது. ஏனெனில், இம்மினவுதல் திருநாளன்று தான்,  அர்ச்.ஸ்நாபக அருளப்பரும், அவருடைய தாயாரான அர்ச்.எலிசபெத்தம்மாளும், திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவரால் நிரப்பப் பட்டனர்! அதற்கு முன்னதாக, நமதாண்டவர் தாமே, அவருடைய மகா பரிசுத்தப் பேழையான மகா பரிசுத்த தேவமாதாவின் திருவுதரத்திலிருந்து, தமது முன்னோடியான அர்ச்.ஸ்நாபக அருளப்பரை, ஜென்மப் பாவக் கறையிலிருந்து சுத்திகரித்து அர்ச்சித்தார். 

இந்த உன்னதமான திருநாளன்று தான், நம் திவ்ய இரட்சகரும், அவருடைய மகா பரிசுத்த மாதாவும், “ஸ்திரிகளிடத்திலே பிறந்தவர்களுக்குள்ளே ஸ்நாபக அருளப்பரைப் பார்க்கிலும், பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லையென்று , மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று நமதாண்டவராலேயே புகழப்பட்ட அர்ச்.ஸ்நாபக அருளப்பரும் , ஆகிய மூன்று பரிசுத்தர்களும், ஆதாமின் வீழ்ச்சிக்குப் பின் மூன்று மாசற்றவர்களும் ஒன்றாகக் கூடிய தினமாக விளங்குகிறது.




இந்த உன்னத திருநாள் மேலும், மகா பரிசுத்த தேவமாதாவாகிய அர்ச்.கன்னிமரியம்மாளைப் பற்றியும் அவர்கள் யார் என்பதைப் பற்றியும், மிக ஆழமான விதத்தில் நமக்குக் கூறுகிறது: அர்ச்.லூக்காஸ் மகா பரிசுத்த தேவமாதா, அர்ச்.எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைப் பற்றி எவ்வாறு விளக்குகிறார் என்பதை, பழைய ஏற்பாட்டில், தாவீதரசர், வாக்குத்தத்தின் பெட்டகத்தை எவ்வாறு சந்திக்கச் செல்கிறார் என்பதன் விவரிப்புடன்  ஒப்பிட்டுப்பார்!
“தாவீதும், யூதாவின் புருஷர்களுக்குள் அவனோடு இருந்த  ஜனங்களும் எழுந்து, தேவபெட்டகத்தைக் கொண்டு வரும்படி புறப்பட்டார்கள். அந்த பெட்டகங்கெருபீம்களின் நடுவே  வீற்றிருக்கும் சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே, அர்ச்சிக்கப்பட்டதால், கர்த்தர் அதின்மேல் வாசம் பண்ணுகிறார்” (2 அரசர் 6:2-3)

“அந்நாட்களிலே  மரியம்மாள் எழுந்து, மலைநாட்டிலே யூதா தேசத்திலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போனார்கள்” (லூக் 1:39)

“அன்றைய தினம் தாவீது ஆண்டவருக்கு மிகவும் அஞ்சினவனாய், கர்த்தருடைய பெட்டகம், என்னிடத்திலே வருவதெப்படி? என்று கூறினான்” (2 அரசர் 6:9)

“என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் எழுந்தருளிவர எனக்குக் கிடைத்ததெப்படி?!” (லூக் 1:43)

“கர்த்தருடைய பெட்டகம் கேட்டையனான ஓபேதெதோம் வீட்டில் மூன்று மாதம் தங்கியிருக்கையிலே,  கர்த்தர், ஓபேதெதோமையும் அவன் வீட்டாரையும் ஆசீர்வதித்தார்” (2 அரசர் 6:11)

“பின்னும் மரியம்மாள்,அவளோடு,  ஏறக்குறைய  முன்று மாதம்  இருந்து,  தன் வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்” (லூக் 1:56) 

“ஆண்டவர் பெட்டகம் தாவீதின் நகரத்திற்குள் பிரவேசமானபோது, சவுலின் குமாரத்தியாகிய  மிக்கோல், பலகணிவழியாய், உற்றுப்பார்த்து, தாவீதரசன் கர்த்தருக்கு  முன்பாக குதித்துக் கூத்தாடுவதைக் கண்டாள்” (2 அரசர் 6:16)
“அப்போது சம்பவித்தது ஏதெனில், மரியம்மாள் சொன்ன வாழ்த்துதலை எலிசபெத்தம்மாள் கேட்ட மாத்திரத்தில், அவளுடைய உதரத்திலிருந்த பிள்ளை துள்ளிற்று!” (லூக் 1:41).

மேற்கண்ட ஒப்புவமையின்படி, அர்ச்.லூக்காஸ், நம் மகா பரிசுத்த தேவமாதாவை புதிய ஏற்பாட்டின் பரிசுத்தப் பெட்டகமாக  நாம் தெளிவாகக் காணும்படி விரும்புகிறார்.

இந்த திருநாள், 1263ம் வருடம் அர்ச்.பொனவெந்தூர் அறிவுரையின்படி,  பிரான்சிஸ்கன் துறவியர், முதன் முதலில் கொண்டாடத் துவக்கினர்;  பின், இந்த திருநாள், பிரான்சிஸ்கன் துறவியரால் பரப்பப்பட்டு, ஐரோப்பா முழுவதும், கொண்டாடப்பட்டது.
கிபி.1389ம் வருடம், 6ம் உர்பன் பாப்பரசர், மேற்கத்திய பிரிவினையைத்  தீர்ப்பதற்காக, எடுத்த  முயற்சிகளில் ஒரு பகுதியாக, கிறீஸ்துநாதருடைய தையலில்லாத ஆடையான  திருச்சபையை கிழித்த  இம்மாபெரும் மேற்கத்திய பிரிவினையை முழுமையாக அகற்றி, அதற்கு முடிவு கட்டி, ஆண்டவரும், மகா பரிசுத்த தேவமாதாவும், திருச்சபையை சந்திப்பார்கள் என்கிற நம்பிக்கையுடன் , இந்த உன்னதத் திருநாளை அகில உலக திருச்சபையின் திருவழிபாட்டின் காலண்டரில், ஜுலை 2ம் தேதியன்று  சேர்த்தார். பின்னர், 1849ம் வருடம், பசாசின் இரகசிய சபையினருடைய புரட்சியின் மீது , திருச்சபை வெற்றியடைந்ததன் காரணமாக, 9ம் பத்திநாதர் பாப்பரசர், இந்த திருநாளை, இரட்டிப்பான  இரண்டாம் தரத் திருநாளாக உயர்த்தினார்.

அர்ச். அத்தனாசியாருடைய வார்த்தைகளால் ஜெபித்து, மகா பரிசுத்த தேவமாதாவின் உன்னத மாட்சிமிக்க பேரழகின் ஆழங்களை உணர்ந்து கொள்! நமக்காக தமது திவ்ய குமாரனிடம்  பரிந்துபேசும்படி மகா பரிசுத்த தேவமாதாவை நோக்கித் திரும்புவோமாக!

அர்ச். அத்தனாசியார் ஜெபம்:
“ஓ! மகா உன்னத திவ்ய கன்னிகையே!  உண்மையாகவே, தேவரீர்  மற்ற எல்லா மகத்துவத்துக்கும் மேலானவர்களாக திகழ்கிறீர்!
 ஏனெனில், ஓ! தேவ வார்த்தையானவரான சர்வேசுரனின் தங்கும் வாசஸ்தலமே! மகத்துவத்தில், உமக்கு சமமானவர் யார்? சகல சிருஷ்டிகளுக்குள்ளே, ஓ! மகா பரிசுத்த திவ்ய கன்னிகையே! நான் யாருடன் தேவரீரை ஒப்பிடுவேன்?  அவர்கள் எல்லாரையும் விட தேவரீர் மகா பெரியவர்களாயிருக்கிறீர்! தங்கத்திற்கு பதிலாக, பரிசுத்தத்தனத்தினால் உடுத்தப்பட்ட ஓ! வாக்குதத்தத்தின் பெட்டகமே!  மெய்யான மன்னாவைக் கொண்டிருக்கும் தங்கப் பாத்திரம் இருக்கிற பெட்டகமாக , அதாவது தேவத்துவம் தங்கி வாசம் செய்யும் மகா பரிசுத்த மாமிசப் பெட்டகமாக தேவரீர் திகழ்கிறீர்!”


July - 1


#Visitation of Our Lady, #St. Elizabeth, #Visitation, 

The Sanctuary of Our Lady of La Vang in Vietnam



In the region of young Ho Ca Dau, there is a place where the Blessed Virgin Mary appeared.

In the former kingdom of Annam, in 1798, Emperor Can Trinh banned the Catholic religion, introduced by Spanish and French missionaries. This marked the beginning of a period of persecutions and the destruction of all places of worship. Christians from Co Vuu, fleeing persecution, sought refuge in the "Rain Forest" at La Vang.

There, the Christians often gathered at the foot of a tree to pray the rosary. One evening in 1798, the Virgin appeared to them dressed in the traditional áo dài, with the Child Jesus in her arms. She said to them, "My children, what you have asked of me, I grant you, and henceforth all who come here to pray to me, I will hear their prayers." In 1802, the persecution subsided, and the villagers returned to their homes. The rumor of the Marian apparition spread, attracting pilgrims: the first chapel was built in 1820.

What the Blessed Virgin had promised, she fulfilled. Due to the numerous graces she bestowed at La Vang, pilgrims flocked there, and the cult of Our Lady of La Vang continued to grow. In particular, in these countries where sterility is considered a curse, many couples received the grace of offspring. Our Lady also provided protection: the ever-present tiger never again entered the territory of La Vang since the apparition, and there were no victims among the devotees of La Vang.


New Persecutions and the First Reconstruction

Around 1830, a new wave of repression fell upon the Christians in the region, under Emperor Tu Duc. Thirty martyrs were burned alive at La Vang, and the sanctuary was destroyed.

As soon as the persecutions ended, in 1886, a modest chapel was rebuilt, and soon a church was erected in 1901. It was consecrated before 12,000 faithful by Bishop Caspar, under the title of Our Lady Help of Christians. On this occasion, Our Lady of La Vang was declared "protector of the Catholics of Vietnam." After the Geneva Accords of 1954 and the partition of Vietnam, the statue of Our Lady of La Vang, which had been kept safe during the Indochina War, was returned to the church; this happened on December 8, 1954.

The church was again destroyed by American bombings launched by North Vietnam during the summer of 1972. Only the bell tower remained. On August 15, 1998, 70,000 faithful nonetheless commemorated the 200th anniversary of the Virgin Mary's apparitions at La Vang. In 2018, the sanctuary's grounds were returned to the Church, and new construction began. But unfortunately, the spirit of the Second Vatican Council and its so-called inculturation came through: the designers wanted the new sanctuary "to be in harmony with Vietnamese culture." It now looks nothing like a church from the outside; it is instead a sort of large pagoda.

Our Lady of La Vang, pray for them and protect the Christians of Vietnam!


Source: Lou Pescadou N° 245 /FSSPX.news

July 1 - நமதாண்டவருடைய விலைமதியாத மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தத்தின் திருநாள்

[ஜுலை 1ம் தேதி

நமதாண்டவருடைய விலைமதியாத மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தத்தின் திருநாள்

நமதாண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதருடைய மகா விலையுயர்ந்த திவ்ய திரு இரத்தத்தின் வேதபோதக துறவற சபையை ஸ்தாபித்தவரான அர்ச்.கஸ்பார், அவருடைய துறவற சபையில் இம்மகா உன்னதத் திருநாளைக் கொண்டாடுவதற்கான அனுமதியை திருச்சபையின் தலைமைப் பீடத்திலிருந்து, 1815ம் வருடம் பெற்றார்.
1848ம் வருடம், நவம்பர் 15ம் தேதியன்று,பாப்பரசருடைய அரசாங்கத்தின் நீதித்துறை அமைச்சரான பெல்லகிரினோ ரோஸ்ஸி என்பவர் கொல்லப்பட்டார். அடுத்த நாள், பசாசின் இரகசிய சபையினரின் தூண்டுதலால், உரோம் நகர மக்களில் சில கலகக்காரர்கள், முடியாட்சி நீங்கி குடியாட்சி வரவேண்டும், சமூக சீர்திருத்தம் வேண்டும், பரிசுத்த உரோமை சாம்ராஜ்ஜியமான ஆஸ்திரிய சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராகப் போரை அறிவிக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளை, முன்வைத்து, கலவரத்திலும், ஆர்ப்பாட்டத்திலும், நாசகார வேலையிலும், ஈடுபட்டனர்.
நவம்பர் மாதம் 24ம் தேதி பாப்பரசர் 9ம் பத்திநாதர், ஒரு சாதாரண குருவானவருடைய  மாறுவேடத்தில், உரோமையை விட்டுத் தப்பிச் சென்றார். சிசிலி நாட்டின் கோட்டையான கயேட்டாவிற்குச் சென்றார். கத்தோலிக்க நாடுகளின் உதவியை நாடினார். பிரான்ஸ் நாட்டின் 3ம் நெப்போலியன் தன் படையை அனுப்பி பாப்பரசரரை மறுபடியும் உரோமையில் ஸ்தாபிக்க தீர்மானித்தான்.
கயேட்டாவில், பாப்பரசருடன்,  மகா விலையுயர்ந்த திவ்ய திரு இரத்தத்தின் வேதபோதக துறவற சபையின் மூன்றாம் தலைமை அதிபரான சங்.ஜியோவான்னி மெரிலினி என்ற குருவானவரும் கூட தங்கியிருந்தார். இக்குருவானர், பாப்பரசரிடம்,  பாப்பரசருடைய நாடுகள் மறுபடியும் மீட்கப்பட்டால், நமதாண்டவருடைய மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தத்தின் திருநாளை அகில உலகமெங்கிலும் கொண்டாடுவதற்கான அனுமதி வழங்குவதற்கான  வார்த்தைப்பாட்டை அளிக்கும்படி ஆலோசனை அளித்தார்.

பாப்பரசரும் இக்காரியத்தைக் கருத்தில் கொண்டிருந்தார்.சில நாட்களுக்குப் பின், 1849ம் வருடம், ஜுன் 30ம் தேதியன்று, பிரெஞ்சுப் படை உரோமையில் நுழைந்து, கலகக்காரர்களான உரோமைக் குடியரசு கட்சியினரின் படையை முறியடித்தது.
பாப்பரசர் 9ம் பத்திநாதர் தமது உள்ளரங்க காரியதரிசியான வந்.ஜோசப் ஸ்டெல்லா ஆண்டகையை சங்.ஜியோவான்னி மெர்லினியிடம் பின்வரும் ஒரு செய்தியுடன்,  அனுப்பி வைத்தார்:
“பாப்பரசர் தம்மையே ஒரு வார்த்தைப்பாட்டினால் கட்டுப்படுத்திக் கொள்வது சாதகமான காரியம் என்று கருதவில்லை! அதற்கு பதிலாக, இம்மகா உன்னதமான திருநாளை உடனடியாக அகில திருச்சபை முழுவதும் கொண்டாடும்படி நீட்டிப்பதற்கு அனுமதியளிப்பதில் மகிழ்வடைகிறார்!”.

அதே வருடம் ஆகஸ்டு 10ம் தேதியன்று, கலகக்காரர்களிடமிருந்து உரோமை விடுவிக்கப்பட்ட வருடாந்திர நாளான ஜுன் 30ம் தேதிக்குப் பின் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று, வருடந்தோறும், நமதாண்டவரின் மகா விலையுயர்ந்த திவ்ய திரு இரத்தத்தின் திருநாளைக் கொண்டாடவேண்டும் என்று, அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் குறிக்கப்பட்டிருந்த திருநாட்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்நோக்கத்துடன் அர்ச்.பத்தாம் பத்திநாதர் பாப்பரசர், இந்த திருநாளை ஜுலை 1ம் தேதிக்கு மாற்றினார். 1933ம் வருடம், 11ம் பத்திநாதர் பாப்பரசர், இத்திருநாளை, நமதாண்டவர் சிலுவையில் அறையுண்ட 1900ம் வருடாந்திர கொண்டாட்டத்தின் ஞாபகார்த்தமாக, முதல் தரத்தினுடைய  இரட்டிப்புத் திருநாளாக உயர்த்தினார்.

“அழிவுள்ள பொன்னினாலும், வெள்ளியாலும்,  இரட்சிக்கப்படாமல், நீங்கள், கிறீஸ்துநாதருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்”
(1 இராய 1:18-19)

“நித்திய பிதாவே! சேசுகிறீஸ்துநாதருடைய விலைமதியாத திரு இரத்தத்தை  என் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், திருச்சபையின் அவசரங்களுக்காகவும், தேவரீருக்கு ஒப்புக் கொடுக்கிறேன்” -100 நாள் பலன்


 நமதாண்டவரின் மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தத்தின் வணக்க மாதத்திற்கான தியானம்

நமதாண்டவரின் திவ்ய திரு இரத்தம் விலைமதியாத திவ்ய திரு இரத்தம் என்று அழைக்கப்படுவதற்கான காரணம்:
நமதாண்டவரின் மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தம் விலைமதியாத திவ்ய திரு இரத்தம் என்று அழைக்கப்படுகிறது! ஏனெனில், அது, மனுவுருவில் மறைக்கப்பட்டிருக்கிற திவ்ய சுதனாகிய சர்வேசுரனுடைய திவ்ய திரு இரத்தமாகவே இருக்கிறது! ஆதலால், அவருடைய பரிசுத்த நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கிறதும், அவருடைய திவ்ய திரு இரத்தத்தினுடைய ஒவ்வொரு துளியும், அவருடைய தேவத்துவத்துடன் ஒன்றிணைந்திருக்கிறபடியால், நமது உச்சிதமான ஸ்துதி ஸ்தோத்திர புகழ்ச்சிகளுக்குத் தகுதியானவையாயிருக்கின்றது! ஆகவே, நமதாண்டவராகிய திவ்ய சேசுநாதருடைய மகா பரிசுத்த திவ்ய திரு இருதயத்தை , நாம் ஆராதிப்பதைப்போல், அவருடைய விலைமதியாத மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தத்தையும் , நாம் ஆராதிக்கிறோம்! மேலும், இன்னும் ஆண்டவருடைய பரிசுத்த மனிதத்துவத்திற்குரிய சகலத்திற்கும்,  சர்வேசுரனுக்கு மட்டுமே செலுத்தக்கூடிய உச்சிதமான வணக்க ஸ்தோத்திர ஸ்துதி புகழ்ச்சிகளுடன் கூட ஆராதனை செலுத்துகிறோம்!

மேலும், ஆண்டவருடைய மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தத்தை அவ்வாறு அழைப்பதற்கான காரணம், அது, தேவ வரப்பிரசாதத்தால் பூரணமாக நிறைந்திருக்கிறவருடைய திவ்ய திரு இரத்தமாக இருப்பதுடன் கூட,  சகல தேவ வரப்பிரசாதங்களுக்கும் ஆதியும் மூலகாரணமாகவும்  விளங்குகிற திவ்ய கர்த்தருடைய திவ்ய திரு இரத்தமாக இருக்கிறது! அவருடன் கூட குடிகொண்டிருக்கிற தேவ வரப்பிரசாதம் அளவில்லாததாகத் திகழ்கிறது! ஆண்டவருடைய தேவ வரப்பிரசாதமானது, மனித சுபாவத்தினால் அவர் கொண்டிருந்த தேவ வரப்பிரசாதம் நீங்கலாக, அவருடைய  திருச்சரீரம் என்கிற திரைச்சீலையின் மறைவை ஊடுருவி, தன்னையே வெளிப்படுத்தியிருந்தது! அதற்கு எந்த வரையரையும் கட்டுப்பாடும் இல்லை!  அர்ச்சிஷ்டவர்கள் சிந்திய திரு இரத்தமானது, மகா விலைமதியாத திரு இரத்தம் என்றும், அவர்களுடைய திரு இரத்தத்தில் நனைந்தெடுக்கப்பட்ட துணிகளை அருளிக்கங்கள் என்றும் நாம் போற்றிப் பாதுகாத்து அவற்றிற்கு வணக்க மேரை செலுத்தி வருகிறோம். அப்படியென்றால், சகல அர்ச்சிஷ்டவர்களுக்கும் இராஜாவாக இருக்கிற நமதாண்டவரின் திவ்ய திரு இரத்தம் எவ்வளவு அதிகமாக விலைமதிப்பில்லாத திரு இரத்தமாகவும், விலைக்குரிய எல்லா அளவிற்கும் மேற்பட்டதாக விளங்க வேண்டும்?
நமதாண்டவரின் விலைமதியாத மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தம் அதன் மகா உன்னதமான நன்மையான விளைவுகளின் காரணத்தினாலேயும், விலைமதியாத திவ்ய திரு இரத்தமாகத் திகழ்கிறது! அதனுடைய ஒரு துளியாது, அகில உலகத்தையும் அதன் சகல பாவாக்கிரமத்திலிருந்தும் சுத்திகரித்துத் தூய்மைப்படுத்தப் போதுமான வல்லமையுடன் திகழ்வதுடன் கூட, இதுவரை பூமியில் ஜீவித்த பல்லாயிரக் கோடிக்கணக்கான சகல மனிதர்களுக்கும்  தேவையான தேவ வரப்பிரசாதங்களைப் பெற்றுத் தரக்கூடிய வல்லமையுடனும் திகழ்கிறது! அப்படியென்றால், அதனுடைய விலைமதிப்பில்லாத மதிப்பு எவ்வளவு அளவில்லாததாக இருக்கிறது! அது, மனிதர்களுக்காக என்ன செய்யாமல் போனது? ஆண்டவருடைய விலைமதியாத மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தம் எனக்காக என்ன செய்யாமல் போனது? நான் எல்லா பாவங்களையும் கட்டிக்கொண்டபோதிலும், அது, என்னைக் கழுவி சுத்திகரித்துத் தூய்மைப்படுத்தியது!   ஓ! என் நேச இரட்சகரே! திவ்ய சேசுவே! தேவரீருடைய விலைமதிப்பில்லாத மகா பரிசுத்த திவ்ய திரு இரத்தத்தின் மீது எப்போதும் அதிகரித்துக் கொண்டிருக்கும் பக்திபற்றுதலை எனக்கருளும்!
“நித்திய பிதாவே! என் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பரிசுத்த திருச்சபையின் தேவைகளுக்காகவும், உமது திவ்ய குமாரனுடைய விலைமதியாத திவ்ய திரு இரத்தத்தை ஒப்புக்கொடுக்கிறேன்!” 100 நாள் பலன்
அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!

ஞாயிறு, 30 ஜூன், 2024

June 26 - வேதசாட்சிகளான அர்ச்.அருளப்பர், அர்ச். பவுல் திருநாள்

ஜுன் 26ம் தேதி

வேதசாட்சிகளான அர்ச்.அருளப்பர், அர்ச். பவுல் திருநாள்

சகோதரர்களான இவர்கள் இருவரும், 354ம் வருடம் மரித்த  மகா கான்ஸ்டன்டைனின் மகளான கான்ஸ்டான்டினாவின் வாரிசுகள்.  வேதவிசுவாசத்தை மறுதலித்தவனும் வேத விரோதியுமான ஜுலியன் சக்கரவர்த்தியாக உரோமையை ஆண்டபோது, இவ்விரு சகோதரர்களையும், சக்கரவர்த்திக்குப் பிரமாணிக்கமாய்’ இருக்கிறதாக உறுதிப்பிணை அளிக்கவும், அஞ்ஞான விக்கிரகங்களுக்குப் பலி செலுத்தவும் வற்புறுத்தினான்: அதற்கு இவ்விரு சகோதரர்களும், அவனிடம்,  “நீர் வேத விசுவாசத்தைப்புறக்கணித்து விட்டு,  சர்வேசுரனுக்கு  சம்பந்தமில்லாத வேறு வழிகளைப் பின்பற்ற சென்று விட்டீர்! அவற்றிற்கும் சர்வேசுரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நீர் நன்கறிவீர்! உம்முடைய இந்த வேத விசுவாச மறுதலிப்பினால், உம்முடன் எதையும் நட்புறவாகக் கொண்டிருக்க நாங்கள் மறுத்து விட்டோம்!” என்று கூறினர். பின், ஜுலியன், முகஸ்துதிக்கான சில வார்த்தைகளையும், சில அச்சுறுத்தல்களையும் எழுதி ஒரு கடிதத்தை இவ்விரு சகோதரர்களுக்கு அனுப்பி, சிந்திப்பதற்கு பத்து நாட்கள் அவகாசம் கொடுத்தான்.

இச்சமயத்தில், அருளப்பரும்,பவுலும், உரோமையிலிருந்து சங்.கிரிஸ்புஸ் என்ற குருவானவரை வரவழைத்தனர்; மேலும், நண்பர்களான கிரிஸ்பினியானுஸ், பெனடிக்டா என்பவர்களை வரவழைத்து, இந்நிலவரத்தைப் பற்றி விளக்கியபிறகு, திவ்யபலிபூசையை பக்திபற்றுதலுடன் கண்டனர்; பின் தங்களுடைய ஆஸ்திகளையெல்லாம்  கிறீஸ்துவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கான விவரங்களை தங்கள் நண்பர்களிடம்  கூறினர். 10 நாட்கள் கடந்தன. 11வது நாள், இவர்கள் இருவரும் வீட்டிலேயே சிறைவைக்கப்பட்டனர்; அஞ்ஞான விக்கிரகங்களுக்கு பலி செலுத்த வற்புறுத்தப்பட்டனர்; சகோதரர்கள் இருவரும் உடனே தங்களுடைய கத்தோலிக்க விசுவாச சத்தியத்தை உச்சாரணம் செய்தனர்! அஞ்ஞான சிலைகளுக்கு  பலி செலுத்த மறுத்தனர்.
362ம் வருடம், ஜுன் 26ம் தேதி, அருளப்பரும் பவுலும்  அவர்களுடைய வீட்டிலேயே தலை வெட்டிக் கொல்லப்பட்டனர்;  இரகிசயமாக, அவர்களள் இருவரும், வீட்டிற்குள்ளேயே புதைக்கப்பட்டனர். இருவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்ததால், இவர்கள் இருவரையும் நாடு கடத்தியதாக ஒரு பொய்யான செய்தியைப் பரப்பி விட்டனர்.
மகா ஆடம்பரமான ஒரு தேவாலயம் இவ்விரு அர்ச்சிஷ்டவர்களுக்கும் தோத்திரமாக, பம்மாகியுஸ் என்ற செனட்டரின் உயிலின் படி,  398ம் வருடம், இவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கட்டப்பட்டது. இப்போது, இந்த தேவாலயம் திருப்பாடுகளின் சபைத் துறவியரால் நிர்வகிக்கப்படுகிறது;  இதில் தான் அர்ச். சிலுவை சின்னப்பர் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் இந்த தேவாலயம், தபசு காலத்தின் முதல் வெள்ளியன்று,  ஸ்தல தேவாலயமாக இயங்கி வருகிறது! இவ்விரு வேதசாட்சிகளின் பெயர்களும்  நடுப்பூசை ஜெபத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன!

363ம் வருடம் ஜுன் 26ம் தேதியன்று, இவ்விரு வேதசாட்சிகள் மரித்த ஒரு வருடத்திற்குப் பிறகு, சரியாக அதே தேதியில், வேதவிரோதியான ஜுலியன், பெர்ஷியர்களுக்கு எதிரான போரில் கொல்லப்பட்டான்.

வேதசாட்சிகளான அர்ச். அருளப்பரே! அர்ச். பவுலே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!

June 27 - இடைவிடா சகாய மாதா திருநாள்


 
ஜுன் 27ம் தேதி
 
இடைவிடா சகாய மாதா திருநாள்

இடைவிடா சகாயமாதாவின் ஆதிமூல சுரூபப் படம், உரோமையிலுள்ள அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார் தேவாலயத்தின் பிரதானப் பீடத்தின் மேல் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. 17 அங்குல அகலமும் 21 அங்குல உயரமும் உள்ள இப்படம், கடினமான ஒரு மரப்பலகையில் ஓவியமாக வரையப்பட்டிருக்கிறது; பின்னணியில் தங்க நிறப் பூச்சு தீட்டப்பட்டிருக்கிறது!
இப்படத்தின் சரித்திரம் 1495ம் வருடத்திலிருந்து துவங்குகிறது; அப்போதே இப்படம் தொன்மையானதாக இருந்தது. கிரீட் என்ற தீவிலுள்ள ஒரு தேவாலயத்தில் இப்படம் ஸ்தாபிக்கப்பட்டிருந்து. இந்த தீவை மகமதியர்கள் கைப்பற்றப் போகின்றனர் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, இப்படத்தை ஒரு வியாபாரி, (திருடி) தன்னுடன் உரோமைக்குக் கொண்டு வந்தார். இந்த அற்புதப் படத்தைச் சுற்றி நிகழ்ந்த பல அசாதாரண நிகழ்வுகளுக்குப் பின்,1499ம் வருடம் , ஜுன் 27ம் தேதியன்று, உரோமையிலுள்ள அப்போஸ்தலரான அர்ச். மத்தேயு தேவாலயத்தில் இப்படம் ஆடம்பரமாக ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வற்புதப் படம் இந்த தேவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னரே, அபரிமிதமான தேவ வரப்பிரசாதங்கள் பொழியத் துவங்கின! இப்படத்தை ஸ்தாபிப்பதற்காக,  சுற்றுப்பிரகார பவனியாக  தேவாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது, வழியிலிருந்த ஒரு வாத நோயாளியின் வீட்டைக் கடந்தபோது, அந்த நோயாளி புதுமையாக குணமடைந்தார்.

  இக்காலம் வரையிலான இவ்வற்புதப் படத்தின் வரலாறு, இத்தாலிய மொழியிலும், இலத்தீனிலும் பதப்படுத்தப்பட்ட ஒரு காகிதத் தோலில் எழுதப்பட்டு, அர்ச்.மத்தேயு தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இவ்வற்புதப்படத்தின் அருகில் மாட்டப்பட்டிருந்தது. இக்காகிதத் தோல்களின் நகல்கள் வத்திக்கான் நூலகத்தில் உள்ளன.
அடுத்த 300 வருட காலத்தில், இவ்வெளிய தேவாலயம், இவ்வற்புதப் படத்தினால் நிகழ்ந்த எண்ணற்ற புதுமைகளால், உரோமையில் மகா பிரபல்யமான திருயாத்திரை ஸ்தலமாக மாறியது.
நெப்போலியனுடைய இராணுவம், 1798ம் வருடம், உரோமையை ஆக்கிரமித்தபோது, இந்த தேவாலயத்தை அழித்தது! அச்சமயம், தேவாலயத்தைக் கவனித்து வந்த அர்ச். அகுஸ்தீனார் சபைத் துறவியர், இவ்வற்புதப் படத்தை பத்திரமாக தங்களுடன் எடுத்துச் சென்றனர். ஆனால், அடுத்த 64 வருடங்களுக்கு இவ்வற்புதப் படம், வெளி உலகத்திற்குக் காணாமல் போனது!
நாளடைவில், துறவியர் கூட இவ்வற்புதப் படத்தைப் பற்றி மறந்துபோயினர். ஆனால், சகோ. அகுஸ்தீன் என்பவர், இளம் துறவியாயிருந்தபோதிலிருந்தே இடைவிடா சகாய மாதாவின் மீது மிகுந்த பக்தி கொண்டவர், போஸ்டருலா என்ற இடத்திற்கு 1840ம் வருடம் மாற்றப்பட்டபோது, அங்கிருந்த சாந்தா மரியா தேவாலயத்தில் இவ்வற்புதப் படத்தைக் கண்டுபிடித்தார். இவர் அடிக்கடி, பீடப்பரிகார சிறுவர்களில் ஒருவரான மிக்கேல் மார்கி என்பவரிடம், மாபெரும் திருயாத்திரை ஸ்தலமாயிருந்த உரோமையின் அர்ச்.மத்தேயு தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த  அற்புதப்படம் இந்த இடைவிடா சகாய மாதா படம் தான், என்று இவ்வற்புதப்படத்தைப் பற்றி கூறுவார். மிக்கேல் இதைப் பற்றி 1855ம் வருடம் திவ்ய இரட்சகர் சபையில் சேர்ந்தபிறகும் கூட நினைவில் கொண்டிருந்தார். இவரிடமிருந்து, இரட்சகர் சபைத் துறவியர், இடைவிடா சகாய மாதாவின் அற்புதப்படம் எந்த தேவாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது, என்பதை அறிந்தனர்.

9ம் பத்திநாதர் பாப்பரசர் சிறுவனாயிருந்தபோது, இவ்வற்புதப் படத்தின் முன்பாக ஜெபித்து வேண்டிக் கொண்டிருந்திருக்கிறார். எனவே, இடைவிடா சகாய மாதாவின் அற்புதப்படம் கண்டுபிடிக்கப்பட்டதைப் பற்றி  ஆர்வத்துடன் அறிந்தபிறகு, இரட்சகர் சபை அதிபருக்கு 1865ம் வருடம் டிசம்பர் 11ம் தேதியன்று, ஒரு கடிதம் எழுதி, அகுஸ்தீனார் சபை துறவியரிடமிருந்து இவ்வற்புதப் படம், இரட்சகர் சபைத் துறவியரிடம் ஒப்படைக்கப்படும்படியும், அர்ச். மத்தேயு தேவாலயத்தின் இடிபாடுகளின் மீது கட்டப்பட்ட அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியாரின் தேவாலயத்தில் இவ்வற்புதப் படம் ஸ்தாபிக்கப்படும்படியும் கட்டளையிட்டார். அதன்படி, 1866ம் வருடம் ஏப்ரல் 26ம் தேதியன்று, மகிமையான வெற்றியின் பவனியாக மகா பரிசுத்த தேவமாதா தாமே, தேர்ந்தெடுத்த அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியாரின் தேவாலயத்திற்கு இவ்வற்புதப்படம் கொண்டு வரப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்டது; இரட்சகர் சபையாரின் பாதுகாவலில் ஒப்படைக்கப்பட்டது.
இவ்விடமாற்றம் நிகழ்ந்தபோது, இரண்டு குறிப்பிடத்தக்க புதுமைகள் நிகழ்ந்தன:  முதலாவதாக, மூளைக்காய்ச்சலினால் சாகக்கிடந்த ஒரு சிறுவன் புதுமையாகக் குணமடைந்தான். இரண்டாவதாக, வாத நோயால், செயலழந்திருந்த ஒரு சிறுமியின் கால் புதுமையாக குணமடைந்தது; அவள் நன்றாக நடக்கத் துவக்கினாள்.

  திருச்சபையின் அதிகாரபூர்வமான இடமாற்றித்திற்குப் பின், இவ்வற்புதப் படத்திற்கு  9ம் பத்திநாதர் பாப்பரசர் தமது அப்போஸ்தலிக்க ஆசீர்வாதத்தை அருளினார்; இவ்வற்புதப் படத்திற்கு  “இடைவிடா சகாய மாதா” என்று பெயரிட்டார். மேலும், இரட்சகர் சபையினரிடம், இந்த நல்ல பாப்பரசர், “இடைவிடா சகாய மாதாவை உலகம் முழுவதும் அறிந்துகொள்ளும்படிச் செய்யுங்கள்” என்று கூறினார்.
இடைவிடா சகாய மாதா என்கிற பட்டத்தினுடைய மகா பரிசுத்த தேவமாதாவின் இவ்வற்புதப் படத்தை ஆடம்பரமாக, திருச்சபையின் அதிகாரபூர்வமான விதமாக  அங்கீகரிப்பதை உலகத்திற்கு அறிவிக்கும்படியாக, 1867ம் வருடம், ஜுன் 23ம் தேதி, வத்திக்கான் அதிபர் சுவாமியார், இவ்வற்புத சுருபப் படத்திற்கு  மகிமையான கிரீடம் சூட்டும் விசேஷ வழிபாட்டின் சடங்கை நிகழ்த்தினார்.

இவ்வற்புதப்படத்தில் காணப்படுகிற கிரேக்க எழுத்துக்களின் அர்த்தம்: 

MP-ΘΥ   -     
(Μήτηρ Θεοῦ) மகா பரிசுத்த தேவமாதா 

OAM
(Ὁρχάγγελος Μιχαήλ),  அர்ச்.மிக்கேல் அதிதூதர்  
OAΓ 
(Ἀρχάγγελος Γαβριήλ, ) அர்ச்.கபிரியேல் அதிதூதர் 

IC-XC
(Ἰησοῦς Χριστός, ) திவ்ய சேசுகிறீஸ்துநாதர்சுவாமி


இடைவிடா சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!

June 28 - வேதசாட்சியும் மேற்றிராணியாருமான அர்ச். இரனேயுஸ் திருநாள் St. Eraneus


 ஜுன் 28ம் தேதி

வேதசாட்சியும் மேற்றிராணியாருமான அர்ச். இரனேயுஸ் திருநாள்

இவர், சின்ன ஆசியாவில் (இன்றைய துருக்கி) கி.பி.120ம் வருடம் பிறந்தார். இவருடைய கத்தோலிக்க பெற்றோர்கள், இவரை ஸ்மிர்னா நகர மேற்றிராணியாரான மகா அர்ச். போலிக்கார்ப்பின்  கண்காணிப்பில் வளரும்படி விட்டிருந்தார்கள். இங்கு, இவரிடம், இரனேயுஸ், பரிசுத்த வேதாகமத்தையும், வேத இயலையும், பயின்றார்; இந்த ஆழ்ந்த வேத அறிவு, இவரை பிற்காலத்தில், திருச்சபையின் மாபெரும் ஆபரணமாகவும், திருச்சபையின் எதிரிகளான பதிதர்களுக்குப் பேரச்சமாகவும் திகழச் செய்தது.
அர்ச்.போலிக்கார்ப்பு இவரை பிரான்சின் கால் பகுதிக்கு அனுப்பினார். இங்கு இவர் பின்னாளில், லியோன்ஸ் நகர மேற்றிராணியாரான அர்ச். போர்தினுஸிடமிருந்து குருப்பட்டம் பெற்றார். இப்பரிசுத்த மேற்றிராணியார் பாக்கியமாக மரித்தபிறகு, 177ம் வருடம், இரனேயுஸ், லியோன்ஸ் நகர மேற்றிராணியாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வேத சத்தியங்களுக்கு எதிராக குழப்பம் செய்த பதிதர்களின் காரியத்தில் இவர் மாபெரும் பொறுமையைக் கடைபிடித்தார்; அவர்களுடைய தப்பறையான பதிதப் போதகங்களுக்கு எதிராக சத்திய போதனையை தெளிவாகப் போதித்து, வேத சத்தியங்களைக் காப்பாற்றுவதில் அயராமல் பாடுபட்டார்; அதே சமயம், பதிதர்களின் போதனையிலிருந்த தப்பறையை அவர்களுக்கு உணர்த்தியதுடன் கூட, அவர்களுடைய ஆத்துமங்களை சத்திய வேதத்திற்குக் கூட்டி வருவதில், அதிக ஆர்வமுள்ள ஆவலுடன் அரும் பாடுபட்டார்.
லியோன்ஸ் நகர மேற்றிராணியாராக அர்ச். இரனேயுஸ், ஞாஸ்டிசம் என்கிற பதிதத்தப்பறையை தன் மேற்றிராசனத்திலிருந்து அழித்து ஒழிக்கப் பெரிதும் பாடுபட்டார்.

ஞாஸ்டிசம் என்கிற பதம், அறிவு என்பதற்கான கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. ஞாஸ்டிக் என்ற பதிதர்கள், ஆண்டவர் ஒரு சில சீடர்களுக்கு இரகசியமாக அளித்த அறிவைத் தாங்கள் கொண்டிருப்பதாகப் பிதற்றித் திரிந்தனர். இப்பதிதத் தப்பறை, அநேகக் கிறீஸ்துவர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தது! அதே சமயம், பல கிறீஸ்துவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது
      இப்பதிதத்தின் பல பிரிவுகளைப் பற்றி   மிக ஆழமாக, முழுமையாக, ஆய்ந்தறிந்தபிறகு, அந்த தப்பறையான கொள்கைகள் எல்லாம் இறுதியில் எவ்வித தர்க்கவாத முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை தெளிவாக விளக்கிக் காண்பித்தார்; அப்போஸ்தலர்களுடைய போதனைகளுடனும், பரிசுத்த வேதாகமத்துடனும்  இப்பதிதத் தப்பறையான போதனைகள் முற்றிலும் முரண்பட்டிருப்பதைத் தெளிவாக,  ஐந்து புத்தகங்களாக எழுதி, விளக்கிக் காண்பித்தார். இக்காலத்திற்கும் இதற்குப் பிறகு வந்த காலங்களுக்கும், வேத இயல் புத்தகங்களான இந்த ஐந்து புத்தகங்களும் மாபெரும் முக்கிய வேத இயல் புத்தகங்களாகத் திகழ்ந்தன! இவர் இப்பதிதத் தப்பறையை அழித்து ஒழிக்கும்படி எழுதிய இவ்வேத இயல் புத்தகங்கள்  அதிக அளவில் இலத்தீனிலும், ஆர்மீனியன் மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டன! இப்புத்தகங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து பரவியதால், ஞாஸ்டிசம் என்ற பதிதத் தப்பறை  அழிந்து முற்றிலும் மறைந்தது.
தமது ஞானமுள்ள பிரசங்கத்தினால், அர்ச்.இரனேயுஸ்,  குறுகிய காலத்தில் அந்த பிராந்தியம் முழுவதையும், கத்தோலிக்க வேத விசுவாசத்திற்குக் கூட்டி வந்து சேர்த்தார். பதிதத் தப்பறைகளுக்கு எதிராக, அநேக புத்தகங்களை எழுதினார். இறுதியில், மற்ற அநேகருடன் சேர்ந்து, அஞ்ஞான உரோமை செவேருஸ் சக்கரவர்த்தியின் கீழ், லியோன்ஸ் நகரில் 202ம் வருடம், கிறீஸ்துவர்களுக்கு எதிராக ஏற்பட்ட வேத கலாபனையின்போது, வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார். 

மேற்றிராணியாரும், வேதசாட்சியும் வேதபாரகருமான அர்ச். இரனேயுஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
 
அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!

June 30 - வேதசாட்சியும் அஞ்ஞானிகளுடைய அப்போஸ்தலருமான அர்ச்.சின்னப்பர் திருநாள் (Feast of St. Paul)

இன்றைய அர்ச்சிஷ்டவர்
 
ஜுன் 30ம் தேதி

வேதசாட்சியும் அஞ்ஞானிகளுடைய அப்போஸ்தலருமான  அர்ச்.சின்னப்பர் திருநாள்

திருச்சபையின் பாரம்பரியம் கூறுவதற்கேற்ப, அர்ச். இராயப்பரும், அர்ச்.சின்னப்பரும் ஒரே நாளில் வேதசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். அர்ச். இராயப்பர், தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார்; ஆனால், உரோமைக் குடிமகனாயிருந்ததால், சிலுவையில் அறையப்படாமல், அர்ச். சின்னப்பர் தலைவெட்டிக் கொல்லப்பட்டார்.
ஒரே நாளில் வத்திக்கானிலுள்ள அர்ச்.இராயப்பருடைய பசிலிக்காவில் திருநாளைக்  கொண்டாடிவிட்டு, 5 மைல் தொலைவிலுள்ள அர்ச்.சின்னப்பர் பசிலிக்காவிற்கு சுற்றுப்பிரகார பவனியாகச் சென்று, அர்ச்.சின்னப்பர் திருநாளைக் கொண்டாடுவது என்பது, அதிக சோர்வை ஏற்படுத்துவதாயிருந்ததால், அர்ச்.சின்னப்பர் வேதசாட்சியாக மரித்தத் திருநாளை ஜுன் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது.
பிறப்பால் யூதராயிருப்பினும், இவர்,தென் துருக்கியைச் சேர்ந்த சிலிசியாவிலுள்ள தார்சுஸ் நகரைச் சேர்ந்த உரோமைக் குடிமகனாகப் பிறந்தார். இவர் பெயர் சவுல்; ஒரு தீவிர யூதராக ஜெருசலேமில் வளர்ந்தார்.

முதல் வேதசாட்சியான அர்ச்.முடியப்பர் யூதர்களால் கல்லால் எறிந்து கொல்லப்பட்டபோது, கல்லெறிந்த யூதர்களுடைய உடைகளை வைத்துக்கொள்ளும் ஒரு இளைஞராக சவுல் அங்கிருந்தார். இவர் தனது அயராத ஆர்வத்தினால், ஆண்டவருடைய சீடர்களை பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிக்கொண்டு, டமாஸ்கஸ் நகரத்திற்குப் பயணமானார்.

ஆனால், வழியில், பரலோகத்திலிருந்து வந்த ஒரு ஒளி இவரைக் கீழே விழத்தாட்டியது.”சவுலே! சவுலே! ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய்?” என்ற குரலொலி கேட்டது. பின்னர், நமதாண்டவர் இவருக்குத் தம்மைக் காண்பித்து, தமது திருச்சபையை மூர்க்கமாக உபத்திரவப்படுத்திய இவரை, மாபெரும் அப்போஸ்தலராக மனந்திருப்பி மாற்றினார்;  உலகத்தின் கடைசி எல்லை வரை தமது சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவரும், அநேக வருட காலம் சிலுவையில் அறையுண்ட ஆண்டவரைப் பற்றிய சிந்தனையைத் தவிர வேறு எந்த நினைவும் இல்லாமல் ஜீவித்து உழைத்த அஞ்ஞானிகளுடைய மாபெரும் அப்போஸ்தலராகவும், ஆண்டவர் தாமே, இவரை மனந்திருப்பி, மாற்றினார். சவுலாக இருந்த இவருடைய பெயர், பவுலாக மாறியது; தமிழில் சின்னப்பராக அழைக்கப்படுகிறார்; அர்ச். இராயப்பருடன் சேர்ந்து, இவரும் தனது வேதசாட்சிய மரணத்தினால்,உரோமாபுரியை சர்வேசுரனுக்கு அர்ப்பணம் செய்தார்.
சுவிசேஷகரும் நமதாண்டவருடைய பிரிய அப்போஸ்தலருமான அர்ச்.அருளப்பருக்கு அடுத்தபடியாக, அர்ச்.சின்னப்பர்,மாபெரும் கிறீஸ்துவ வேத அறிவுத் திறனைக் கொண்டிருக்கிறார். அர்ச். சின்னப்பர் எழுதிய 14 நிரூபங்களும், திருச்சபையினுடைய வேத சத்தியத்தினுடைய வற்றாத தண்ணீர் சுனையாகவும், திருச்சபையின் மாபெரும் அர்ச்சிஷ்டவர்களுடையவும், வேதபாரகர்களுடையவும் ஆறுதலாகவும் ஆனந்த மகிழ்வாகவும் திகழ்கின்றன!

அஞ்ஞானிகளுடைய மாபெரும் அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான அர்ச். சின்னப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹