Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 17 ஆகஸ்ட், 2024

August 12 - St. Clarie, அர்ச்‌. கிளாரம்மாள்

 

ஆகஸ்டு 1️2️ம்தேதி

அர்ச்‌. கிளாரம்மாள்திருநாள்‌.



இவள்‌, அர்ச்‌. பிரான்சிஸ்அசிசியாருடன்சேர்ந்து, அவருடைய 2ம்துறவற சபையான ஏழை கிளாரம்மாள்துறவற சபையை ஸ்தாபித்தாள்‌. இவள்‌ 1194ம்வருடம்‌, ஜுலை 16ம்தேதி, இத்தாலியிலுள்ள ௮சிசி நகரில்பிறந்தாள்‌. கிளாரா என்கிற வார்த்தைக்கு, “ஒளிருகின்ற , அல்லதுதெளிந்தஎன்று அர்த்தமாகும்‌. இவளுடைய தந்தை, பண்டைக்கால உரோமை உயர்குடும்பத்தைச்சேர்ந்த செல்வந்தர்‌; அசிசியில்இவருக்கு சொந்தமாக ஒரு கோட்டை இருந்தது. 1212ம்வருடம்‌, மார்ச்‌ 19ம்தேதி, குருத்து ஞாயிறன்று, அர்ச்‌. பிரான்சிஸ்அசிசியார்‌, தபசுக்காலத்திற்காக நிகழ்த்திய ஒரு ஞான தியானப்பிரசங்கத்தைக்கேட்டபோது, அந்த உன்னதமான தியானப்பிரசங்கத்தினால்‌, அர்ச்‌. கிளாரம்மாள்‌, பெரிதும்மேற்கொள்ளப்பட்டாள்‌.அச்சமயம்‌, இவளுக்கு 18 வயது.

                இரகசியமாக வீட்டை விட்டு, தன்அத்தை பியான்காவுடனும்‌, ஒரு சகத்தோழியுடனும்‌, போர்சியன்குலா தேவாலயத்திற்கு, அர்ச்‌. பிரான்சிஸ்அசிசியாரைச்சந்திப்பதற்காகச்சென்றாள்‌. அங்கு, அந்த தேவாலயத்தில்‌, மகா பரிசுத்த தேவமாதாவின்பீடத்தண்டையில்‌, அர்ச்‌. பிரான்சிஸ்அசிசியார்‌, இவளுடைய தலைமுடியை, கத்தரித்து நீக்கினார்‌;அர்ச்‌. கிளாரம்மாள்‌, தான்அணிந்திருந்த விலையுயர்ந்த செல்வ மகளுக்குரிய ஆடையைக்களைந்து விட்டு, எளிய கன்னியாஸ்திரியின்உடுப்பையும்‌, முக்காட்டையும்‌, ஒரு இடுப்புக்கயிற்றையும்அணிந்துகொண்டாள்‌. இவ்விதமாக, அர்ச்‌. கிளாரம்மாள்‌, ‌ 18வது வயதில்‌, தன்பரிசுத்த கன்னிமையை சர்வேசுரனுக்கு அர்ப்பணித்து. ஆண்டவருடைய ஞான பத்தினியானாள்‌!  பாஸ்டியா என்ற நகரத்திற்கருகிலிருந்த சான்பவுலோவிலுள்ள அர்ச்‌. ஆசீர்வாதப்பர்கன்னியர்மடத்தில்‌, அர்ச்‌. பிரான்சிஸ்அசிசியார்‌, அர்ச்‌. கிளாரம்மாளை விட்டார்‌.அவளுடைய தந்தை, அவளை வீட்டிற்குத்திரும்பி வர வற்புறுத்தினார்‌.

                அச்சமயம்‌, கிளாரம்மாள்‌, தேவாலயத்தின்பீடத்தைக்கெட்டியாகப்பற்றிப்பிடித்துக்கொண்டாள்‌; பின்தன்தந்தைக்கு முன்பாக தனது முக்காட்டை அகற்றி, நீளமானதலைமுடி கூந்தல்எல்லாம்வெட்டப்பட்டு வெறுமையாயிருந்த தன்தலையைக்காண்பித்தாள்‌.  அதன்பின்‌, அர்ச்‌. பிரான்சிஸ்‌, இவளை, பான்சோ என்ற இடத்திலிருந்த சான்ஆஞ்சலோ என்ற இன்னொரு அர்ச்‌. ஆசீர்வாதப்பா்கன்னியர்மடத்திற்கு அனுப்பி வைத்தார்‌. கிளாரம்மாள்‌, இந்த மடத்திலிருந்தபோது, விரைவிலேயே இவளுடைய தங்கை கத்தரீனும்‌, இவளுடன்சேர்ந்து கொண்டு, ஆக்னஸ்என்ற பெயரைத்தேர்ந்து கொண்டாள்‌. இரு சகோதரிகளும்‌, அர்ச்‌. ஆசீர்வாதப்பர்கன்னியர்மடத்திலேயே தங்கியிருந்தனர்‌; பின்னர்‌, அர்ச்‌. பிரான்சிஸ்அசிசியார்‌, சில வருடங்களுக்கு முன்செப்பனிட்டிருந்த அர்ச்‌. தமியான்தேவாலயத்தை ஒட்டியபடி, கன்னியர்மடத்திற்கான ஒரு சிறிய கட்டிடத்தைக்கட்டி, அதில்இரு கன்னியரும்குடியேறினர்‌. நாளடைவில்‌, மற்ற பெண்களும்அங்கு வந்து, அவர்களுடன்சேர்ந்து கன்னியர்களாக , அர்ச்‌. பிரான்சிஸ்அசிசியார்ஏற்படுத்தியிருந்த துறவற விதிமுறைகளை அனுசரித்து ஜீவிக்கலாயினர்‌.

                இதுவே, பிரான்சிஸ்அசிசியாரின்‌ 2ம்துறவற சபையாகும்‌. ஏழைகிளாரம்மாள்கன்னியர்சபை என்றும்அழைக்கப்படுகிறது! பின்னாளில்‌, கிளாரம்மாளின்தாயாரும்‌, இன்னொரு சகோதரியும்கூட , கிளாரம்மாளுடன்சேர்ந்து, கன்னியாஸ்திரிகளாயினர்‌!  அர்ச்‌. தமியான்தேவாலய வளாகம்‌, கிளாரம்மாளின்இப்புதிய கன்னியர்சபையின்மையமாக மாறியது! இதன்காரணமாகவே, சான்தாமியானோ ஏழைப்பெண்களின்துறவறசபை என்றே,அர்ச்‌. கிளாரம்மாள்ஜீவிய காலம்‌, முழுவதும்அழைக்கப்பட்டது! இக்கன்னியாஸ்திரிகளின்அனுதின ஜீவியம்‌, உடல்உழைப்பையும்‌, ஜெபத்தையும்கொண்டிருந்தது! இக்கன்னியாஸ்திரிகள்காலணி அணியாமல்வெறுங்காலில்நடந்துசென்றனர்‌; வெறுந்தரையில்படுத்து உறங்கினர்‌; இறைச்சியை உண்ணாமல்‌, சுத்த போசனத்தையே எப்போதும்அனுசரித்தனர்‌; எப்போதும்பரிசுத்த மவுனத்தை அனுசரித்து வந்தனர்‌.  சிறிது காலத்திற்கு, இக்கன்னியார்சபையை, அர்ச்‌. பிரான்சிஸ்  அசிசியாரே நடத்தி வந்தார்‌; 1216ம்வருடம்‌, அர்ச்‌. கிளாரம்மாள்‌, சான்தாமியானோ கன்னியர்மடத்தின்அதிபர்தாயார்பொறுப்பை ஏற்று கன்னியர்சபையை நடத்தத்துவக்கினாள்‌. அதிபர்தாயாராகக்கூடுதல்பொறுப்பையும்அதிகாரத்தையும்கொண்டிருந்தாள்‌; மடத்தின்தாயாராக இருந்தபோது, சகக்கன்னியரை , குருவானவரின்கட்டளைகளைப்பின்பற்றி நடத்தி வந்தாள்‌; ஆனால்‌, அதிபர்தாயாராக பொறுப்பை ஏற்றபோது, தன்சுய அதிகாரத்தைப்பயன்படுத்தி, சகக்கன்னியரை ஞான ஜீவியத்தில்வழிநடத்தி வந்தாள்‌.

                1228ம்வருடம்‌, 9ம்கிரகோரி பாப்பரசர்‌, கண்டிப்பான தரித்திர வார்த்தைப்பாட்டிலிருந்து கிளாரம்மாளுக்கு விலக்கு அளிக்க ஆசித்த போது,அர்ச்‌.  கிளாரம்மாள்‌,”என்பாவங்களுக்கான மன்னிப்பு எனக்குத்தேவையாயிருக்கிறது; என்பாவங்களுக்கான தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட ஆசிக்கிறேன்‌; ஆனால்‌, நமதாண்டவரான திவ்யசேசு கிறீஸ்துநாதரைப்பின்பற்றுவதற்கான கடமையிலிருந்து விடுவிக்கப்பட நான்ஆசிக்கவில்லை!” என்று பாப்பரசருக்கு பதில்கூறினாள்‌! அதன்படி, பாப்பரசரும்‌, இவளுடைய கன்னியர்சபைக்கு, அட்ட தரித்திரத்தினுடைய சிறப்பு சலுகையினுடைய உரிமையை அளித்தார்‌. இந்த உரிமையின்பிரகாரம்‌, யாரும்‌, இக்கன்னியாஸ்திரிகளிடம்‌, எவ்வித செல்வததையோ, பணத்தையோ சொந்தமாகக்கொண்டிருக்கும்படி நிர்ப்பந்திக்க முடியாது!

                1253ம்வருடம்‌, ஆகஸ்டு 9ம்தேதியன்று, 4ம்இன்னசன்ட்பாப்பரசர்‌, சோலெட்அன்னுவெரே என்கிற பாப்பரசரின்ஆணைமடலைப்பிரகடனம்செய்தார்‌; இது, அர்ச்‌. கிளாரம்மாள்ஏற்படுத்திய சபை விதிமுறையை, குறிப்பாக அட்ட தரித்திர வார்த்தைப்பாட்டின்விதி முறையை, ஏழை கிளாரம்மாள்கன்னியா சபையின்நிர்வாக விதி முறையாக நிச்சயப்படுத்தி உறுதிப்படுத்தியது.  இரண்டு நாட்களுக்குப்பின்‌, ஆகஸ்டு 11ம்கேதியன்று, அர்ச்‌.  கிளாரம்மாள்‌, 59வது வயதில்‌, “! திவ்ய கர்த்தரே! என்னை சிருஷ்டித்ததற்காக தேவரிர்ஸ்துதிக்கப்படுவீராக! ஆசீர்வதிக்கப்படுவீராக!” என்று பக்தி பற்றுதலுடன்உச்சரித்தபடி, தேவசிநேக மிகுதியால்‌,பாக்கியமாய்மரித்தாள்‌. அர்ச்‌. கிளாரம்மாளின்பரிசுத்த சரீரம்‌, இவளுக்கு தோத்திரமாக ஒரு தேவாலயம்கட்டப்படும்வரைக்கும்‌, அர்ச்‌. ஜார்ஜியாரின்தேவாலயத்தில்பூஜிதமாக அடக்கம்செய்யப்பட்டது. 4ம்இன்னசன்ட்பாப்பரசரின்வேண்டுகோளுக்கிணங்க, கிளாரம்மாளுக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்அளிப்பதற்கான ஏற்பாடுகள்‌, உடனடியாக துவங்கின! இவளுடைய பரிந்துரையால்நிகழ்ந்த புதுமைகள்பேரில்நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகள்எல்லாம்வெறும்ஆறு நாட்களிலேயே நிறைவடைந்தன! ஆனால்‌, கிளாரம்மாளுக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்கொடுப்பதற்கான செயல்முறைகள்எல்லாம்‌, முடிவதற்கு இரண்டு ஆண்டு காலம்தேவைப்பட்டது. 

                1255ம்வருடம்ஆகஸ்டு 15ம்தேதியன்று, 4ம்அலெக்சாண்டர்பாப்பரசர்‌, கிளாரம்மாளுக்கு அர்ச்சிஷ்டப்பட்டம்அளித்தார்‌. 1260ம்வருடம்‌, அர்ச்‌.  கிளாரம்மாளின்பசிலிக்கா தேவாலயம்கட்டி முடிக்கப்பட்டது! அக்டோபர்‌ 3ம்தேதியன்று, அர்ச்‌. கிளாரம்மாளின்பரிசுத்த சரீரம்‌, இப்புதிய பசிலிக்கா தேவாலயத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்டு, முதன்மையான பெரிய பீடத்திற்கு அடியில்‌, பூஜித மாக அடக்கம்செய்யப்பட்டது. அர்ச்‌.  கிளாரம்மாளின்மாபெரும்புண்ணியங்களை மகிமைப்படுத்தும்படி, 4ம்உர்பன்பாப்பரசர்‌, 1263ம்வருடம்‌, ஏழைப்பெண்களின்துறவற சபை என்கிற பெயரை, ஏழை கிளாரம்மாள்கன்னியர்சபை என்று , அதிகாரபூர்வமாக மாற்றினார்‌. 600 வருடங்களுக்குப்பின்‌, 1872ம்வருடம்‌, அர்ச்‌. கிளாரம்மாளின்பரிசுத்த சரீரம்‌, அர்ச்‌. கிளாரம்மாள்பசிலிக்கா தேவாலயத்தில்புதிகாகக்கட்டப்பட்ட கீழ்நிலவரைச்சிற்றாலயத்தின்ஷேத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்டு, பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறதை இன்றும்காணலாம்‌. மகா பரிசுத்த தேவநற்கருணைப்பாத்திரத்தைக்கரத்தில்ஏந்தியபடி, அர்ச்‌. கிளாரம்மாள்‌, படங்களில்‌, சித்தரிக்கப்பட்டிருக்கிறதை நாம்காணலாம்‌.

                1224ம்வருடம்அசிசி நகரைத் தாக்க வந்த 2ம்ஃபிரடரிக்அரசனின்படையை நேருக்கு நேராக சந்தித்த அர்ச்‌. கிளாரம்மாள்‌, தேவாலயத்திலிருந்த மகா பரிசுத்த தேவநற்கருணைப்பாத்திரத்தை, எதிரிப்படைகள்முன்பாக, பக்திபற்றுதலுடன்மேலே உயர்த்திப்பிடித்து, அவர்களுக்குக்காண்பித்தாள்‌; திடீரென்று, ஒரு நூதனமான பேரச்சம்‌, ஏதிரிப்படையினரை ஆட்கொண்டது! உடனே, அந்தப்படைவீரர்கள்அசிசி நகர வாசிகளுக்கு ஒரு தீங்கும்செய்யாமல்‌, அந்நகரை விட்டு ஓடிவிட்டனர்‌! 12ம்பத்திநாதர்‌ 1958ம்வருடம்‌, அர்ச்‌. கிளாரம்மாளை, தொலைக்காட்சியின்பாதுகாவலராக ஏற்படுத்தினார்‌.

                அர்ச்‌. கிளாரம்மாள்மிக வும்நோய்வாய்ப்பட்டிருந்தபோது, திவ்யபலிபூசைக்காண்பதற்காக தேவாலயத்திற்குச்செல்லக்கூடாமலிருந்தபோது, அவளுடைய சிற்றறையிலிருந்த சுவரில்‌, புதுமையாக திவ்யபலிபூசையைக்காணும்பாக்கியம்பெற்றிருந்தாள்‌.  EWTN என்ற ஒரு அமெரிக்க கத்தோலிக்க தொலைக்காட்சி அலை வரிசையை, சங்‌.தாயார்ஆஞ்சலிக்கா என்ற ஒரு ஏழை கிளாரம்மாள்சபையைச்சேர்ந்த கன்னியாஸ்திரி ஸ்தாபித்திருந்தார்‌! என்பது குறிப்பிடத்தக்கது!

அர்ச்‌. கிளாரம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!


 

August 11 - St. Philomena, அர்ச்‌. ஃபிலோமினம்மாள்

 

ஆகஸ்டு 1️1ம்தேதி                                                                                                               

வேதசாட்சியான அர்ச்‌. ஃபிலோமினம்மாள்திருநாள்


                இவள் கிரீஸ்நாட்டிலுள்ள கொர்ஃபு என்ற இடத்தில் 291ம்வருடம்பிறந்தாள்‌. இவள்கிரேக்க சாம்ராஜ்ஜியத்தைச்சேர்ந்த ஒரு சிறிய நாட்டின்அரசருடைய மகள்‌. இவள்பிறப்பதற்கு  ஒரு வருடத்திற்கு முன்பாக இவளுடைய தந்தை மனந்திரும்பி கிறீஸ்துவரானார்‌. எனவே இவளுக்கு ஃபிலோமினா என்ற பெயரை வைத்தார்‌. ஒளியின்சிநேகிதர்”‌ என்பது தான் ஃபிலோமினா என்ற பெயரின்அர்த்தமாகும்‌. இவளை இவளுடைய தந்தை  உரோமாபுரிக்குக்கூட்டிச்சென்றார்‌. இவருடைய சிறிய நாட்டிற்கு எதிராக உரோமாபுரி போர் தொடுக்காமலிருப் பதற்கான ஒரு சமாதான ஒப்பந்தத்தில்கையொப்பமிடுவதற்காக உரோமை சக்கரவர்த்தியான தியோக்ளேஷியனை சந்திக்கச்சென்றார்‌. உரோமாபுரியில்தியாக்ளேஷியன்   இவரைச்சந்தித்த போது இவருடைய 13 வயது மகளான ஃபிலோமினாவின்பேரழகினால்பெரிதும்கவர்ந்திழுக்கப்பட்டான்‌. 

                உடனே  பேராசை பிடித்த தியோக்ளேஷியன் இருநாடுகளுக்கும்இடையிலான சமாதான ஒப்பந்தத்தில்இவருடைய மகளான ஃபிலோமினம்மாளை தனக்குத்திருமணம்செய்து வைக்க வேண்டும்என்கிற நிபந்தனையையும்சேர்த்தான்‌. ஆனால் அதற்கு ஃபிலோமினம்மாள் தான் நித்தியத்திற்குமாக  பரிசுத்த கன்னிமை விரத்தத்துவத்திற்கான வார்த்தைப்பாடு கொடுத்திருப்பதாகக்கூறி  தனது நேச பரலோக பத்தாவான திவ்ய சேசு கிறீஸ்துநாதருக்காக தன்னையே  அர்ப்பணித்திருப்பதாகக்கூறி  சக்கரவர்த்தியை மணந்து கொள்ள மறுத்து விட்டாள்‌. ஃபிலோமினம்மாளின்தந்தையான சிற்றரசர் தன்மகளிடம் சக்கரவர்த்தியைத்திருமணம்செய்வதற்கான சம்மதத்தைப்பெறுவதற்காகத்தன்னாலான சகல முயற்சிகளையும்மேற்கொண்டார்‌. ஆனால் இறுதியாக  அதில்தோல்வியடைந்தார்‌.

                கொடிய மூர்க்கனான தியோக்ளேஷியன்சீற்றமிகுதியால் சின்னஞ்சிறிய மாசற்ற சிறுமியான ஃபிலோமினம்மாளை  சங்கிலிகளால்கட்டி  இத்திருமணத்திற்குச்சம்மதிக்கிறவரை  ஒரு இருண்ட படுகுழியான அறையினுள்அடைத்து வைத்தான்‌. திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதற்காக  இம்மாசற்ற  பரிசுத்த சிறுமியை மிகக்கொடூரமான சித்ரவதைகளால்உபத்திரவப்படுத்தினான்‌. கொடிய இச்சித்ரவதைகள் தொடர்ந்து   37 நாட்கள்நீடித்தன. அப்போது  பரலோக பூலோக இராக்கினியான மகா பரிசுத்த தேவமாதா   இச்சிறுமிக்குக்காட்சி அளித்தார்கள்‌ இன்னும்மூன்று நாட்கள்இந்த இருண்ட சிறையிலிருப்பாள்என்றும் அதன்பின் தமது திவ்ய குமார னான திவ்ய சேசுகிறீஸ்துநாதரின்மீதான சிநேகத்திற்காக   இவள்மகாக்கொடூரமான துன்ப உபத்திரவத்தை அனுபவிப்பாள்என்றும்அறிவித்தார்கள்‌. 

                அடுத்த நாள்ஒரு தூணில்கட்டி வைக்கப்பட்டு  மாசற்ற அர்ச்‌. ஃபிலோமினம்மாள் கொடூரமாகச்சாட்டையால்அடிக்கப்பட்டாள்‌ அதன்பின்அவ்விருண்ட சிறையிலேயே குற்றுயிராயிருந்த அர்ச்‌. ஃபிலோமினம்மாளை சாகும்வரை அடைத்து வைத்தனர்‌ அதே இரவில் இரண்டு சம்மனசானவர்கள் தோன்றி  ஃபிலோமினம்மாளை பூரணமாகக்குணப்படுத்தினர்‌. அடுத்த நாள்காலையில்அர்ச்ஃபிலோமினம்மாள்பூரணமாகக்குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன்இருப்பதைக்கண்டு  தியோக்ளேஷியன்அதிசயப் பட்டான்‌.  உடனே  ஃபிலோமினம்மாளின்கழுத்தில்ஒரு இரும்பு நங்கூரத்தைக்கட்டி  தைபர்ஆற்றில்போட்டு மூழ்கடித்துக்கொல்லக்கட்டளையிட்டான்‌. ஆனால் அர்ச்ஃபிலோமினம்மாள் புதுமையாக ஆற்றில்மூழ்காமல்வெளியேறினாள்‌. தன்உடைநனையாமல் புதுமையாக  தண்ணீர்துளி ஒன்று கூட படாதபடி  ஆற்றங்கரையில்ஃபிலோமினம்மாள் நடந்து வந்தாள்‌.

                இப்புதுமையைக்கண்ட அஞ்ஞானிகளில்அநேகர்அந்நேரமே மனந்திரும்பி  கிறீஸ்துவர்களானார்கள்‌. இதைக்கண்டபிறகும்கூட மனமிளகாத கொடியவனான தியோக்ளேஷியன் அர்ச்‌. பிலோமினம்மாளை ஒரு சூனியக்காரி என்றுக்கூறி  சூடேற்றப்பட்ட அம்புகளால் அவளுடைய சரீரத்தை ஊடுருவித்துளைக்கும்படியாக  அவள்மேல்எய்யும்படி உத்தரவிட்டான்‌ ஆனால் புதுமையாக அர்ச்‌. ஃபிலோமினம்மாளுக்குத்தீங்கு செய்யாமல் அந்த அம்புகள்எல்லாம் எய்தவா்கள்மீதேத்திரும்பி வந்து  அவர்களுடைய உடல்களை  சல்லடையாகக்குத்தி ஊடுருவிப்பாய்ந்தன! இப்பெரிய புதுமையைக்கண்டதும் இன்னும்கூடுதலான எண்ணிக்கையில்அஞ்ஞானிகள்மனந்திரும்பி கிறீஸ்துவர்களாயினர்‌! மக்கள்எல்லோரும் சக்கரவர்த்தியை வெறுக்கத்துவக்கினர்‌! பரிசுத்த கத்தோலிக்க வேத விசுவாசத்தின்மீது சங்கை மேரை மரியாதையைக்கொள்ளக்துவக்கினர்‌. அதைக்கண்டு சகிக்கக்கூடாமல் தியோக்ளேஷியன் 304ம்வருடம் ஆகஸ்டு 10ம்தேதியன்று  அர்ச்‌. ஃபிலோமினம்மாளை  தலையை வெட்டிக்கொன்றான்‌பரிசுத்த சின்னஞ்சிறுமியான அர்ச்‌.  ஃபிலோமினம்மாள்மகிமையான வேதசாட்சிய முடியைப்பெற்றாள்‌.  1700 வருடகாலம்அறியப்படாமல்மறைவாக இருந்த பிறகு,  1802ம்வருடம்அர்ச்ஃபிலோமினம்மாளுடைய பரிசுத்த அருளிக்கங்கள் மறுபடியும் உரோமாபுரியிலிருந்த வியா சாலரியா என்ற இடத்திலிருக்கும்அர்ச்‌. பிரிஸ்கிலாவின்சுரங்கக்கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்டன!

            கற்களால்மூடப்பட்டிருந்த இப்பரிசுத்த அருளிக்கங்கள் மாசற்ற இளம்கன்னி வேதசாட்சியான அர்ச்‌. ஃபிலோமினா என்று அறிவிக்கும்அடையா ளச்சொற்கள் மூடியிருந்த அந்த கற்களில்பொறிக்கப்பட்டிருந்தன! அர்ச்‌. ஃபிலோமினாவின்அக்கல்லறையில்  ஃபிலோமினா!  உனக்கு சமாதானம்உண்டாகுக!” என்று எழுதப் பட்டிருந்தது! அவ்வெழுத்துக்களுடன்கூட இரண்டு நங்கூரங்களுடை யவும்  மூன்று அம்புகளுடையவும்  ஒரு குருத்தோலையினுடையவும் வரைபடங்களும்பொறிக்கப்பட்டிருந்தன! அர்ச்‌. ஃபிலோமினம்மாளுடைய பரிசுத்த எலும்புகளின்அருகில் அர்ச்சிஷ்டவளின்சிறிதளவு பரிசுத்த இரக்தம்அடங்கிய ஒரு சிறிய கண்ணாடி குப்பியும்கண்டெடுக்கபட்டது! 1805ம்வருடம் ஆகஸ்டு 10ம்தேதியன்று  அர்ச்‌. ஃபிலோமினம்மாளின்பரிசுத்த அருளிக்கங்கள் இத்தாலியிலுள்ள நேப்பிள்சின்அருகிலுள்ள ஒரு குன்றின்நகரமான முஞ்ஞானோ என்ற இடத்திலுள்ள அர்ச்‌. ஃபிலோமினம்மாளின்ஷேத்திரத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்டன!

                அச்சமயத்திலிருந்து  அநேக புதுமைகள்நிகழ்ந்ததால் அர்ச்‌.  ஃபிலோமினம்மாள்மீதான பக்தி உலகம்முழுவதும்மிகவேகமாகப்பரவியது. இந்த ஷேத்திரத்தில்அர்ச்‌. ஃபிலோமினம்மாளின்பரிந்துரையால்அநேகப்புதுமைகள்நிகழ்ந்தபடியால்உலகம்முமுவதும்பரவியிருந்த அர்ச்‌. ஃபிலோமினம்மாள்மீதான பக்திமுயற்சியின்மத்தியப்பகுதியாக இந்த ஷேத்திரம்விளங்கியது. அகில உலகத்திலிருந்து திரளான திருயாத்ரீகர்கள்இந்த ஷேத்திரத்திற்கு வரத்துவக்கினர்‌. 1835ம்வருடம்வண.பவுலின்ஜாரிக்காட்என்பவள் அர்ச்‌. ஃபிலோமினாவின்பரிந்துரையால் தீராத ஒரு வியாதியிலிருந்து புதுமையாகக்குணம டைந்தாள்‌ இப்புதுமை  உலகம்முழுவதும்மிகவும்பிரசத்தியடைந்தது! அர்ச்ஃபிலோமினம்மாள்மீதான பக்தி  இன்னும்அதிகத்தீவிரமாக பரவியது.

                அர்ச்‌. மரிய வியான்னி அருளப்பர் தான்நிகழ்த்திய எல்லா புதுமைகளும் வியாதியஸ்தரை குணப்படுத்திய புதுமைகளும்  அர்ச்‌. ஃபிலோமினம்மாள்தான் நிகழ்த்தினாள்என்று கூறுவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்‌! அர்ச்‌. ஃபிலோமினம்மாள்மீதான பக்தியை   இவர்தன்ஜீவிய காலமெல்லாம்பரப்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது! 12ம்சிங்கராயர்பாப்பரசர்‌(823-829)  அர்ச்‌. ஃபிலோமினம்மாளுக்குத்தோத்திரமாக பீடங்களும்  சிற்றாலயங்களும்கட்டுவதற்கு அனுமதியளித்தார்‌.   அர்ச்‌. ஃபிலோமினம்மாள்மகா பெரிய அர்ச்சிஷ்டவள் என்று அழைப்பதை இப்பாப்பரசர்வழக்கமாகக்கொண்டிருந்தார்‌.

                16ம்கிரகோரி பாப்பரசர்‌ (1831-1846) முத்‌.பவுலின்ஜாரிக்காட்டிற்கு  ஒரு தீராத நோயிலிருந்து  புதுமையாக அர்ச்‌. ஃபிலோமினம்மாள்குணமளித்ததன்விளைவாக  அர்ச்‌. ஃபிலோமினம்மாளுக்கு  பகிரங்கப்பொது வணக்கம்செலுத்துவதற்கான ஒரு ஆணையை பிரகடனம்செய்தார்‌.  9ம்பத்திநாதர்பாப்பரசர்‌ (1846-1878)  1849ம்வருடத்தில்மரியாயின்பிள்ளைகளுடைய பாதுகாவலியாக  அர்ச்‌. ஃபிலோமினம்மாளை ஏற்படுத்தினார்‌. அர்ச்‌.  பிலோமினம்மாளுக்கு தோத்திரமாக ஒரு விசேஷ திவ்யபலிபூசைக்கு 1854ம்வருடம் அனுமதியளித்தார்‌.  13ம்சிங்கராயர்பாப்பரசர்‌ (1878-1903)  அர்ச்‌. ஃபிலோமினம்மாளின்பக்திசபையை தலைமை பக்திசபையாக உயர்த்தினார்‌ அநேக ஞானபலன்களை அளித்து  அதை வளப்படுத்தினார்‌. அர்ச்ஃபிலோமினம்மாளின்கயிற்றை ஆசீர்வதித்து  அதை அணிந்துகொள்ளும்பக்திமுயற்சியையும்அங்கீகரித்து அனுமதியளித்தார்‌. அர்ச்‌. பத்தாம்பத்திநாதர்பாப்பரசர்‌ (1903-1914)  அர்ச்‌.  ஃபிலோமினம்மாள்மீது மிகுந்த பக்தியைக்கொண்டிருந்தார்‌ அர்ச்‌. ஃபிலோமினம்மாள்மீதான பக்தியை அதிகப்படுத்துவ தில்ஈடுபடுகிறவர்களை உற்சாகப்படுத்தினார்அர்ச்‌. ஃபிலோமினம்மாள்பற்றி தனது முந்தின பாப்புமார்கள்அறிவித்த தீர்மானங்கள்மற்றும்பிரகடனங்கள் எவ்விதத்திலும்மாற்றப்படக்கூடாது  என்று கட்டளையிட்டார்‌.                                                                                                        

        மாசற்ற சிறுமியும்வேதசாட்சியுமான அர்ச்‌. ஃபிலோமினம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!