Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 10 ஆகஸ்ட், 2024

May 4. St. Monica, அர்ச். மோனிக்கம்மாள்

 

மே 0️4️ம் தேதி

அர்ச். மோனிக்கம்மாள் திருநாள்


 

திருச்சபையின் மாபெரும் வேதபாரகரும், தூய  ஞானத்தினுடைய மாபெரும் ஆசிரியருமான அர்ச். அகுஸ்தீனாரின் தாயாரான அர்ச். மோனிக்கம்மாள், வட ஆப்ரிக்காவிலுள்ள தகாஸ்தே என்ற இடத்தில் கி.பி.331ம் வருடம் பிறந்தார்கள். மோனிக்கம்மாள், அர்ச். அகுஸ்தீனாருக்கு பூலோக ஜீவியத்தை மட்டுமல்லாமல் ஞான ஜீவியத்தையும் அளித்தவர்களாக, அதாவது, பரலோக ஜீவியத்திற்கான மறுபிறப்பையும் அவர் அடையும்படிச் செய்து, அவருக்கு இரட்டிப்பான தாயாராகத் திகழ்கின்றார்கள்!  மோனிக்கம்மாளின் பெற்றோர்கள் நல்ல கிறீஸ்துவர்களாயிருந்ததால், மோனிக்கம்மாளை அடக்கவொடுக் கத்திலும், கிறீஸ்துவ புண்ணியத்திலும் வளர்த்தனர்; சிறு வயதிலிருந்தே பக்திமுயற்சிகளை அனுசரித்து வந்தார்கள்;  இரவில் உறக்கத்தை மேற்கொண்டு, அந்நேரத்தை, ஜெபத்தில் செலவழிப்பது, சர்வேசுரனை அதிகமாக மகிழ்விக்கக் கூடிய புண்ணியம் என்பதை தன் தாயிடமிருந்து  கற்றறிந்த நாள் முதல், மோனிக்கம்மாள், இரவில் எழுந்து ஜெபிக்கத் துவக்கினார்கள்.  ஏழைகள் மேல் அதிக இரக்கமுள்ளவர்களாக, அர்ச். மோனிக்கம்மாள், அநேக நேரங்களில் தனக்குண்டான உணவை முதலாய், ஏழைகளுடைய பசியைப் போக்குவதற்காக அளித்து ஏழைகளைப் பராமரித்து வந்தார்கள். அர்ச். மோனிக்கம்மாள் எப்போதும் அலங்காரத்தைத்  தவிர்த்தவர்களாக, எளிமையாகவும் அடக்கவொடுக்கமாகவும் ஆடை அணிந்து வந்தார்கள்; கன்னியாஸ்திரியாக சர்வேசுரனுக்கு தன்னை அர்ப்பணிக்க ஆசித்தார்கள்; ஆனால், பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, திருமணம் செய்து கொண்டார்கள்; ஒரு உத்தமமமான கிறீஸ்துவ மனைவியாக ஜீவித்தார்கள்; மற்ற திருமணமான பெண்களுக்கெல்லாம், நன்மாதிரிகையாகத் திகழ்ந்தார்கள்; ஆனால், மோனிக்கம்மாளுடைய கணவன், பத்ரீசியுஸ்,  மூர்க்கக் குணமுடையவராக, ஒழுக்கக்கேட்டிலும், அனேக துர்ப்பழக்கங்களுக்கு  அடிமையாயிருந்ததாலும்,பக்தியுள்ள தன் மனைவியை ஆயிரக்கணக்கான வழிகளில், சித்திரவதைச் செய்து உபத்திரவப்படுத்தி வந்தார்; இருப்பினும், மோனிக்கம்மாள், எப்போதும் தன் கணவனை தயவுடனும் பெருந்தன்மையுடனும், சிநேகத்துடனும்  நடத்தினார்கள்; ஒருபோதும்,கணவனுடைய துர்க்குணங்களுக்காகக் கடிந்துகொண்டதில்லை! அநேக சமயங்களில் தன்னை சபித்துத் திட்டியபோதிலும் கணவனுக்கு எதிராக ஒரு முரண்பாடான வார்த்தையும் கூறாமல், மோனிக்கம்மாள் எப்போதும் தாழ்ச்சியும் சாந்தமும் உடையவர்களாக இருந்தார்கள். கணவனுடைய கோபம் நீங்கியவுடன், கிறீஸ்துவ அமைதியுடன், கணவன் செய்த குற்றத்தைப் பற்றி, மோனிக்கம்மாள், எடுத்துரைத்து வந்தார்கள்; கணவனின் மனந்திரும்புதலுக்காக இடைவிடாமல், சர்வேசுரனிடம் இரவு பகலாக ஜெபித்து வந்தார்கள்; கொஞ்சமாக,கொஞ்சமாக மோனிக்கம்மாள் தன் கணவனை மனந்திருப்பி வந்தார்கள்; இறுதியில், பத்ரீசியுஸ் தான் அனுசரித்து வந்த மாணிக்கேயப் பதிதத்தை விட்டு விட்டு, உத்தம கத்தோலிக்கராக மனந்திரும்பி முன்மாதிரிகையான மேம்பட்ட ஜீவியம் ஜீவிக்கலானார்.

                மோனிக்கம்மாளுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர்; இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். அவர்களுக்கு கிறீஸ்துவ ஞான உபதேசக் கல்வியைக் கற்பிப்பதில் மோனிக்கம்மாள் மாபெரும் கவனத்துடன் இருந்தார்கள். மூத்த மகன் அகுஸ்தீன்,  கீழ்ப்படியாத மகனாக இருந்தார்; குறிப்பாக அவருடைய தந்தை இறந்தபிறகு, ஒரு முரட்டுத்தனமான ஜீவியம் ஜீவித்து வந்தார்; சுதந்திரமாக எந்த அறிவுரையையும் கேட்க விருப்பமில்லாமல் பக்தியுள்ள தாயாருடைய அச்சுறுத்தல்களையும் கண்டு கொள்ளாமல், தன் இஷ்டம்போல் ஜீவித்து வந்தார்; அச்சமயம் மாணிக்கேயப் பதிதத்திலும் சேர்ந்திருந்தார்.

                அதேசமயம், அர்ச். மோனிக்கம்மாள், விதவையாகிவிட்ட தனது ஜீவிய அந்தஸ்தின் கடமைகள் மட்டில், அர்ச். சின்னப்பர், தீமோத்தேயுவிற்கு எழுதிய முதல் நிரூபத்தின் அறிவுரைகளின் விதிமுறைகளை முறையுடன், அனுசரிக்கலானார்கள். தினமும் திவ்யபலி பூசை தவறாமல் பக்தியுடன் கண்டு வந்தார்கள்; ஏழைகளுக்கு தர்மம் செய்து தாராளமாக உதவி வந்தார்கள்; தேவையற்ற உரையாடல்களில் ஈடுபடாமலும்,தேவையற்ற இடங்களுக்குச் செல்லாமலும், ஞான வாசகங்கள் வாசிப்பதிலும், ஜெபிப்பதிலும், உழைப்பதிலும் இடைவிடாமல் ஈடுபட்டிருந்தார்கள்;  ஏகாந்த ஜீவியத்தை நேசித்தவர்களாக, தனிமையில் அமைதியான ஜீவியம் ஜீவிப்பதில் இளைப்பாறினார்கள்; மூத்த மகனுடைய துர்ப்பழக்கத்தினுடைய தீய ஜீவியத்தைப் பற்றிய கவலை மட்டுமே, அர்ச். மோனிக்கம்மாளைப் பெரிதும் பாதித்தது! தனது மகன் அகுஸ்தீனுடைய மனந்திரும்புதலுக்காக மோனிக்கம்மாள், திரளான கண்ணீர் விட்டு அழுதுகொண்டே, இரவு பகலாக சர்வேசுரனிடம் தொடர்ந்து மன்றாடி ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்; இதே கருத்திற்காக மற்றவர்களிடமும், குருக்களிடமும் துறவியரிடமும், வேண்டிக் கொள்ளும்படி விண்ணப்பித்து வந்தார்கள்; ஒருநாள் ஒரு மேற்றிராணியாரிடம், தன் மகனுக்காக வேண்டிக் கொள்ளும்படி கேட்ட போது, அந்த மேற்றிராணியார், மோனிக்கம்மாளிடம், “சமாதானமாகப் போங்கள்! ஒரு மகனுக்காக ஒரு தாய் சிந்தும் இவ்வளவு அதிகமான கண்ணீர்கள் ஒருபோதும் வீண்போகாதுஎன்று கூறி அனுப்பி வைத்தார். மேற்றிராணியாரின் இவ்வார்த்தைகள், மோனிக்கம்மா ளுக்கு ஆறுதல் அளித்தன;  ஆனால், அச்சமயம், அர்ச். மோனிக்கம்மாள் கண்ட ஒரு பரலோகக் காட்சியில், சர்வேசுரன் தாமே பிரத்தியட்சமாக, அகுஸ்தீனாருடைய மனந்திரும்புதலைப் பற்றி அறிவித்ததைக் கண்டபிறகு, மோனிக்கம்மாள் மாபெரும் ஆறுதலடைந்தார்கள்.

                அதேசமயம், அகுஸ்தீனார், சொல் இலக்கணத்திற்கான உயர்கல்வியை கற்றபிறகு, கார்த்தேஜ் நகரை விட்டு, உரோமைக்குச் செல்ல தீர்மானித்தார்.மோனிக்கம்மாள் பெருமுயற்சி செய்து, தன் மகனை உரோமைக்குச் செல்வதைத் தடுக்கப் பார்த்தார்கள். மோனிக்கம்மாள் தேவாலயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, இரகசியமாக அகுஸ்தீன், உரோமைக்கான பயணத்தைத் துவக்கினார்; உரோமையை அடைந்தவுடன் அகுஸ்தீனுக்கு, உயிருக்கு ஆபத்தான பெரிய வியாதி வந்தது. இதைப்பற்றிக்கூறும்போது, “என் தாயாருடைய பக்திமிகுந்த ஜெபங்களால்  தான், என் நித்தியக் கேட்டை அடையும் படியாக, நான் அப்போது  பாவத்திலேயே இறந்து போகவில்லை!” என்று பிற்காலத்தில் அர்ச். அகுஸ்தினார் குறிப்பிடுகின்றார்.

                மகனுடைய வியாதியைப் பற்றி அறிந்ததும், மோனிக்கம்மாள், உடனே மகனைக் கண்காணித்து, இரட்சணியப்பாதையில் சேர்த்து விடுவதற்காக உரோமைக்குச் செல்லத் தீர்மானித்தார்கள்; உரோமையை அடைந்ததும், மோனிக்கம்மாள், தன் மகன் உரோமைக்கு சொல் இலக்கணத்தைக் கற்பிப்பதற்காக அழைக்கப்பட்டிருப்பதை அறிந்தார்கள்; அச்சமயம், தன் மகன் மிலான் நகர மேற்றிராணியாரான அர்ச். அம்புரோசியாருடன் நிகழ்த்திய உரையாடல்களினால் பெரு மாற்றத்தை அடைந்திருப்பதைக் கண்டு மோனிக்கம்மாள் மிகவும் அகமகிழ்ச்சியடைந்தார்கள்; அர்ச். மோனிக்கம்மாள், அர்ச். அம்புரோசியாரிடம், தன் மகனுடைய  முழு மனந்திரும்புதல் வரை, தளர்வில்லாத கண்டிப்புடன் ஞான உபதேசத்தைக் கற்பிக்கும் படி விண்ணப்பித்தார்கள்.

                இறுதியாக, சர்வேசுரன் தமது இரக்கத்தினால், இப்பரிசுத்த விதவையான அர்ச். மோனிக்கம்மாளின் ஆவலை நிறைவேற்றத் திருவுளம்கொண்டார். அகுஸ்தீனார், மாணிக்கேயப் பதிதத்தைப்புறக்கணித்து கைவிட்டார்;  மேலும், கத்தோலிக்கராக தனது 30வது வயதில், அர்ச். அம்புரோசியாரிடம் ஞானஸ்நானம் பெற்றார்;

அர்ச். மோனிக்கம்மாளின் இடைவிடாத ஜெபங்களுடையவும் கண்ணீர்களுடையவும் பலனாகத்தான், இவ்வுன்னதமான மனந்திரும்புதல் நிகழ்ந்தது; இதன்பின், அர்ச். மோனிக்கம்மாள், தன் மகனுடன் ஆப்ரிக்காவிற்குத் திரும்ப ஆசித்தார்கள்; ஆனால், ஓஸ்டியாவை அடைந்ததும், அர்ச். மோனிக்கம்மாளுக்கு இலேசான காய்ச்சல் வந்தது; அப்போது தன் தாயார் பரலோக மகிமைகள் பற்றி உரையாடிய உரையாடலின் இறுதிப்பகுதியைப் பற்றி, அர்ச். அகுஸ்தீனார் பின்வருமாறு விவரிக்கின்றார்: “என் மகனே! என்னைப் பொருத்தவரை, இந்த உலகத்திலிருந்து, இன்னும் வேறு ஒன்றையும், நான் எதிர்பார்க்கவில்லை!  நான் இறப்பதற்கு முன் உன்னை ஒரு கத்தோலிக்கனாக பார்க்க வேண்டும் என்கிற ஒரே ஒரு ஆவல் எனக்கு இருந்தது! நான் கேட்டதற்கு மேலாக சர்வேசுரன் இக்காரியத்தில் எனக்கு அருளியிருக்கிறார்! ஏனெனில், நீ சர்வேசுரனுக்கு ஊழியம் செய்வதில் ஈடுபட்டிருப்பது மட்டுமல்லாமல், நீ பூலோக சந்தோஷத்தையெல்லாம் அருவருத்துப் புறக்கணித்தும் விட்டிருக்கிறாய்! ஆதலால், இனி நான் செய்யக்கூடிய  வேறு  என்ன காரியம் இவ்வுலகில் இருக்கிறது?”

                அர்ச். மோனிக்கம்மாளுடைய  வியாதி அதிகரித்தது்  ஒன்பது நாட்களுக்குப் பிறகு,மோட்சத்தை தன் வாழ்நாளெல்லாம் மிகவும் ஆசித்த அர்ச். மோனிக்கம்மாள், அநேக புண்ணியங்களால் அலங்கரித்திருந்த தனது ஆத்துமத்தை தனது சிருஷ்டிகரிடம் ஒப்படைக்கும்படியாக, தனது 56வது வயதில் 387ம் வருடம் ஆகஸ்டு 27ம் தேதியன்று பாக்கியமாய் மரித்தார்கள். அர்ச். மோனிக்கம்மாள் இறப்பதற்கு முன்பாக, தன் இரு மகன்களிடமும், கூறியதைப் பற்றி அர்ச். அகுஸ்தீனார், பின்வருமாறு விவரிக்கின்றார்: “நீங்கள் எங்கே அடக்கம் செய்ய விரும்புகிறீர்களோ, அங்கே என் சரீரத்தைக் கிடத்துங்கள்!  நான் இறந்ததைப் பற்றிய எந்த நினைவும் உங்களைக் கஷ்டப்படுத்துவதற்கு அனுமதியாதேயுங்கள்! நான் உங்களிடம் ஒரே ஒரு  காரியத்தைத்தான் கேட்கிறேன்: நீங்கள் எங்கிருந்தபோதிலும், எல்லாம் வல்லவரும் சர்வாதி கர்த்தருமானவரின் பரிசுத்த பலிபீடத்தின் முன்பாக என்னை நினைவு கூருங்கள்!”  கல்லறையின் அருகில் தனது பரிசுத்த தாயாரின் சரீரத்தைக் கிடத்தியபடி, மரித்தோருக்கான திவ்யபலி பூசை நிறைவேற்றப்பட்டது, என்பதை அர்ச். அகுஸ்தினார் எழுதி வைத்தார்.

அர்ச். மோனிக்கம்மாளே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!


for Daily Saints History - Click here

May 3 - Finding of the Holy Cross, - திருச்சிலுவைக் கண்டெடுக்கப்பட்ட திருநாள்

 

மே 0️3️ம் தேதி

திருச்சிலுவைக் கண்டெடுக்கப்பட்ட திருநாள்

 


            நமதாண்டவர் பாடுபட்டு மரித்த பரிசுத்த சிலுவைக் கண்டெடுக்கப்பட்ட திருநாளை, திருச்சபை இன்று கொண்டாடுகிறது. பெரிய வெள்ளின்று,  சிலுவையானது மனிதர்களுடைய இரட்சணியத்தினுடைய கருவியாக மாற்றப்பட்டதைக் கண்டதும், பசாசினுடைய ஆங்காரம் மிகப் பயங்கரமாகத் தாழ்த்தப்பட்டது!  ஆண்டவருடைய பரிசுத்தப் பாடுகளின் பெரிய வாரத்திற்கான திருவழிபாட்டின்  முன்னுரைஜெபத்தில்,  திருச்சபைமனுக்குலத்தை ஒரு மரத்தினால் வெற்றிகொண்ட பசாசானவன், ஒரு மரத்தினால் தோற்கடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டான்என்று அறிவிக்கிறது! இவ்விதமாக முறியடிக்கப்பட்ட பசாசு,அவனுடைய சீற்றத்தை, பரிசுத்த சிலுவையின் இரட்சணிய மரத்தின் மீது பாயவிட்டான்; பசாசு. சிலுவையை அழித்து நிர்மூலமாக்கியிருப்பான்; ஆனால், அது, அவனுடைய வல்லமைக்கு அப்பாற்பட்டது என்பதை அறிந்தவனாக,அதை அவசங்கைப் படுத்தவும், பார்வையிலிருந்து மறைக்கவும் மாபெரும் முயற்சியில் ஈடுபட்டான்; ஆகவே, அதைப் புதைத்து விடும்படி, யூதர்களை பசாசு தூண்டி ஏவி விட்டான்.

                கல்வாரியின் அடியில், ஆண்டவருடைய கல்லறையிலிருந்து வெகு அருகிலிருந்த மிக ஆழமான ஒரு துளையினுள், ஆண்டவருடைய பரிசுத்த சிலுவையும், அதன் மேல் பொருத்தப்பட்டிருந்த “INRI” என்று பிலாத்துவினால் எழுதும்படி செய்யப்பட்ட தலைப்புப்பலகையும், இரு கள்வர்களின் சிலுவைகளும், எறியப்பட்டன! பின் அந்த துளை, குப்பைகளாலும் மண்ணினாலும் அடைக்கப்பட்டு மூடப்பட்டது.

                நமதாண்டவரை சிலுவையில் அறைந்து நாற்பது வருடகாலத்திற்குப் பிறகு, ஜெருசலேம் நகரம், உரோமையர்களால் அழிக்கப்பட்டது. பின், கல்வாரி மலையின் மேல் உரோமையர்கள் வீனஸ் என்ற அஞ்ஞான தேவதைக்கு ஒரு கோவிலைக் கட்டினர். கி.பி.313ம் வருடம், மகா கான்ஸ்டன்டைன் சக்கரவர்த்தி கிறீஸ்துவராக மனந்திரும்பிய பின், அவருடைய தாயாரான அர்ச். ஹெலன், ஆண்டவர் பாடுபட்டு மரித்த உண்மையான பரிசுத்த சிலுவையைக் கண்டுபிடிப்பதற்காக, ஜெருசலேமுக்கு திருயாத்திரைச் சென்றார்கள்.

நமது தெய்வீக அரசரான திவ்ய சேசுகிறீஸ்துநாதரின் செங்கோல் (சிலுவை)  அதனுடைய கல்லறையிலிருந்து, ஒரு அரச மகிமையுடைய கரத்தினால் வெளியே உயர்த்தப்பட  வேண்டியிருந்தது! நமதாண்டவர், பாடுகளின்போது, எந்த இடத்தில் யூதர்களால் மாபெரும் நிந்தை அவமானங்களாலும், இழிவுகளாலும், தாழ்த்தப்பட்டாரோ, அதே இடத்தில், மகா கான்ஸ்டன்டைனின் தாயாரும்  அர்ச்சிஷ்ட சக்கரவர்த்தினியுமான ஹெலனம்மாள், உலகத்தினுடைய உண்மையான இராஜாதி இராஜாவான  நமதாண்டவருக்குரிய சகல மகிமைகளையும் செலுத்தும்படியாக பரலோகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்! கான்ஸ்டன்டைன் சக்கரவர்த்தியின் கட்டளையினால்,வீனஸ் தேவதையின் கோவில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது! அர்ச். ஹெலனம்மாளின் கட்டளையின்படி, கல்வாரியைச் சுற்றிலுமுள்ள நிலப்பகுதி தோண்டப்பட்டது; மூன்று சிலுவைகளும் கண்டுபிடிக்கப்பட்டன; இம்மூன்று சிலுவைகளில் ஆண்டவருடைய பரிசுத்த சிலுவை எதுவாக இருக்கும் என்பதைப் பரிசோதிக்க அர்ச். ஹெலன், ஒரு சாகப்போகிற நோயாளிப் பெண்ணைக் கூட்டிவரும்படிச் செய்து, மூன்று சிலுவைகளையும் தொடச் செய்தார்கள்; ஆண்டவர் பாடுபட்டு மரித்த பரிசுத்த சிலுவையை அப்பெண் தொட்டபோது,உடனடியாக புதுமையாகக் குணமடைந்தாள். அந்த சிலுவையே, ஆண்டவருடைய சிலுவை என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

                தமது இரட்சணிய அலுவலின்  மகிமையின் அடையாள சின்னமாகிய சிலுவையின் கொடியை, பூமியிலிருந்து உயர்த்தியதன் மூலமாக,  இந்த அஞ்ஞான உலகத்தின் மீதான தமது வெற்றியை, நமதாண்டவர் இவ்விதமாக நிறைவேற்றி முடித்தார்;  ஆனால் அந்நாள்வரை, யூதர்களுக்கு இடறலாகவும், அவமானச் சின்னமாகவும், அஞ்ஞானிகளுக்கு மடமையாகவும் திகழ்ந்த சிலுவை, இப்போது, ஆண்டவருடைய இரட்சணிய அலுவலின் மகிமையின் சின்னமாக மாறியது! சிலுவை, மனுக்குல இரட்சணியத்தினுடைய மகிமையின் சின்னமாகத் திகழ்கிறது! சிலுவை, கிறீஸ்துவர்களின் மகிமையான அடையாளச் சின்னமாகவும், பாதுகாக்கும் சின்னமாகவும் திகழ்கிறது!

                326ம் வருடம், அர்ச். ஹெலன் ஆண்டவருடைய மெய்யான சிலுவையைக் கண்டுபிடித்தார்கள்; பிலாத்து கட்டளையிட்டிருந்த “INRI” பெயர்ப்பலகை ஆண்டவருடைய சிலுவையில் பொருத்தப்படும்படி அர்ச். ஹெலன் கட்டளையிட்டார்கள்மேலும், அர்ச். ஹெலன், கல்வாரி மலையில் நமதாண்டவரின் பரிசுத்தப்பாடுகளுக்கும் பரிசுத்த மரணத்திற்கும், அடக்கத்திற்கும்  தோத்திரமாகக் ஒரு பசிலிக்கா தேவாலயத்தைக் கட்டுவித்து, ஆண்டவரின் பரிசுத்த சிலுவையை அதில் ஸ்தாபிக்கும்படிச் செய்தார்கள். இப்பசிலிக்கா தேவாலயம், ஆண்டவருடைய மகிமைமிகு கல்லறையையும், ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்த ஸ்தலத்தையும், உள்ளடக்கியுள்ளது! இதற்கு அடுத்ததாக ஆண்டவருடைய பரிசுத்த சிலுவை 300 வருட காலம் புதைக்கப்பட்டிருந்த இடத்திலும் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது; இங்கு நீண்ட தூர நடைபாதை படிக்கட்டுகளால் அமைக்கப்பட்டது! அது, பரிசுத்த சிலுவை புதையுண்டிருந்த ஆழமான ஒரு குகை வரை நீடித்திருக்கும். அந்த குகைதான் பரிசுத்த சிலுவையின் கல்லறையாயிருந்தது.

ஆண்டவரின் பரிசுத்த சிலுவையிலிருந்து, ஒரு பெரிய துண்டை வெட்டியெடுத்து, அர்ச். ஹெலன், புதிய ஜெருசலேமாகிய  உரோமைக்கு அனுப்பி வைத்தார்கள். விலைமதிப்பில்லாத இந்த பொக்கிஷத்தை, மகா கான்ஸ்டன்டைன், உரோமையிலுள்ள செஸ்ஸோரியன் தோட்டத்தில், தான் கட்டியிருந்த ஒரு பசிலிக்கா தேவாலயத்தில் பூஜிதமாக ஸ்தாபிக்கும்படிச் செய்தார். பின்னர் இந்த தேவாலயம், ஜெருசலேமின் பரிசுத்த சிலுவை பசிலிக்கா தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது.  பின் வந்த எல்லா நூற்றாண்டுகளிலும், ஆண்டவரின் பரிசுத்த சிலுவையிலிருந்து சிறு சிறு துண்டுகள் வெட்டப்பட்டு, கத்தோலிக்க அரசர்களுக்கும், துறவற மடங்களுக்கும் அன்பளிப்பாக அளிக்கப்பட்டன!

! சிலுவையே! எங்கள் ஏக நம்பிக்கையே! வாழ்க! (50 நாள் பலன்)


for Daily Saints History - Click here

August 10 - St. Lawrence, அர்ச்‌. லாரன்ஸ்

 

ஆகஸ்டு 1️0️ம்தேதி

 

உரோமை தலைமை தியாக்கோனும்ஸ்துதியரும் வேதசாட்சியுமான அர்ச்‌.  லாரன்ஸ்திருநாள்


 

                இவர்‌, 225ம்வருடம்‌, ஸ்பெயினில்‌, ஹூஸ்கா என்ற இடத்தில்பிறந்தார்‌. இளைஞராயிருந்தபோது, இவர்உயர்கல்வி கற்பதற்காக சரகோசாவிற்கு அனுப்பப்பட்டார்‌; அங்கு தான்‌, இவர்எதிர்காலத்தில்‌ 2ம்சிக்ஸ்துஸ்பாப்பரசராக திருச்சபையை ஆளவிருந்தவரைச்சந்தித்தார்‌; இருவரும்‌, ஸ்பெயினை விட்டு உரோமாபுரிக்குச்சென்றனர்‌. 257ம்வருடம்‌, 2ம்சிக்ஸ்துஸ்பாப்பரசரானதும்‌, லாரன்ஸ்‌, இப்பாப்பரசரிடம்‌, உரோமையின்ஏழு பேர்களில்ஒருவராக தியாக்கோன்பட்டம்பெற்றார்‌. இவர்தலைமை தியாக்கோனாக பொறுப்பேற்றார்‌; திருச்சபையின்திரவிய சாலையின்பொறுப்பையும்‌, ஏழைகளுக்கு தர்மம்அளித்துப்பராமரிக்கும்அலுவலையும்கொண்டிருந்தார்‌; அச்சமயம்‌, பெர்ஷிய நாட்டில்போரில்ஈடுபட்டிருந்த அஞ்ஞான உரோமைச்சக்கரவர்த்தியான வலேரியன்‌, உரோமாபுரியிலிருக்கும்எல்லா கத்தோலிக்கக்குருக்களையும்கொன்றுபோடும்படியான ஒரு அரச ஆணையை அனுப்பினான்‌; உரோமையிலுள்ள அஞ்ஞான விக்கிரகங்களைப்பாதுகாக்கும்நோக்கத்துடனேயே இந்த அரச ஆணையை அனுப்பியிருந்தான்‌.

                ஏனெனில்‌, அந்நேரம்‌, இதற்கான தீவிரப்பிரச்சாரத்தின்போது வலேரியன்‌, மிக ஆபத்தான துன்பங்களுக்கு ஆளானான்‌; அதன் காரணமாக,அவன்விரைவிலேயே பெர்ஷியர்களால்பிடிக்கப்படவும்‌, அதன்விளைவாக, மரண தண்டனையையும்‌, அடையவும் கூடும்என்கிற ஆபத்தான நிலையிலிருந்தான்‌; வலேரியனுடைய இந்த அரச ஆணையின்உடனடி விளைவாக, 258ம்வருடம்‌, ஆகஸ்டு 6ம்தேதியன்று, 2ம்சிக்ஸ்துஸ்பாப்பரசர்‌, அர்ச்‌. காலிக்ஸ்துஸ்பாப்பரசரின்கல்லறைச்சுரங்கத்தில்‌, திருவழிபாடு நடத்திக்கொண்டிருந்தபோது, கைது செய்யப்பட்டு, வேதசாட்சியாகக்கொல்லப்பட்டார்‌. அதே சமயத்தில்‌, பாப்பரசருடன்கூட அவருடைய தலைமை தியாக்கோனான அர்ச்‌. லாரன்சும்கைது செய்யப்பட்டார்‌; அனால்‌, இவர்திருச்சபையின்திரவியசாலையின்பொறுப்பாளர்என்பதை, உரோமை ஆளுநன்அறிந்தவுடன்‌, இவரிடமிருக்கும்திருச்சபையின்திரவியசாலையை, மூன்று நாட்களுக்குள்‌, தன்னிடம்ஒப்படைத்தால்‌, இவரை உயிருடன்விட்டு விடுவதாகக்கூறினான்‌. அர்ச்‌. லாரன்ஸ்விரைவாக செயல்பட்டு, திருச்சபையின்திரவியத்தை, பணத்தை, ஏழைகளுக்குப்பகிர்ந் தளித்தார்‌; மூன்று நாட்களுக்குப்பிறகு, ஏழைகளையும்முடவர்களையும்‌, உரோமை ஆளுநன்முன்பாகக்கூட்டி வந்து, “இதோ! நான்உங்களிடம்காண்பிப்பதாக வாக்களித்திருந்த திருச்சபையின்பொக்கிஷ திரவியங்கள்,‌ இந்த ஏழைகளிடம்இருக்கிறது! இப்பொக்கிஷங்களுடன்கூட, திருச்சபையின்கிரீடங்களாகத்திகழும்‌, ஏழை விதவைகள்‌, மற்றும்சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கன்னியர்கள்என்கிற முத்துக்களையும்‌, விலை மதிப்பில்லாத இரத்தினக்கற்களையும்சேர்த்துக்காண்பிப்பேன்‌! திருச்சபை மெய்யாகவே, மிகுந்த செல்வ வளமுடையதாக உங்களுடைய சக்கரவர்த்தியை விட, அதிக செல்வ வளமுடையதாகத்திகழ்கிறது!” என்று கூறினார்‌.

                உரோமை ஆளுநன்‌, இதைக்கேட்டு மிகவும்சீற்றமடைந்தான்‌; அர்ச்‌. லாரன்ஸை, மெதுவாக அதே சமயம்‌, மிகக்கொடிய வேதனை நிறைந்த மரணத்தை அளிக்கும்படியான மரண தண்டனைக்குத்தீர்ப்பிட்டான்‌; அதற்காக, ஒரு பெரிய இரும்புக்கட்டில்தயார்செய்யப்பட்டது; அதன்அடியில்எரியும்கரிகளால்‌, அது,‌ சூடேற்றப்பட்டது;அந்த கட்டில்மேல்படுக்க வைத்து, அர்ச்‌.  லாரன்ஸை, உயிருடன்மெதுவாக, வறுத்தெடுக்க உத்தரவிட்டான்‌. பரிசுத்த தியாக்கோன்லாரன்ஸ்‌, சூடேற்றப்பட்டுக்கொண்டிருந்த அந்த இரும்புக்கட்டிலில்‌, கிடத்தப் பட்டு, நீண்டநேரம்தாங்கமுடியாக அந்த சூட்டினால்‌, வறுத்தெடுக்கப்படுகிற மிகப்பயங்கரமான வேதனையை அனுபவித்த பிறகு, “சகோதரரே! என்னுடைய ஒரு பக்கம்நன்றாக வெந்து விட்டது; அடுத்த பக்கமும்நன்றாக வேகும்படியாக, என்னைத்திருப்பிப் போடுங்கள்‌!” என்கிற தனது மிகப்பிரசத்திபெற்ற வாக்கியத்தை, பரலோக மகிழ்ச்சியுடனும்‌, இனிய முகத்துடனும்‌, கொலைஞர்களிடம்கூறினார்‌. பின்பரலோகத்தை நோக்கி, உரோமாபுரியின்மனந்திரும்புதலுக்காக ஜெபித்து வேண்டிக் கொண்டார்‌; அதன்பின்மரித்தார்‌!

                அர்ச்‌. லாரன்சின்வேதசாட்சிய மரணத்தின்இக்காட்சியைக்கண்ட உரோமை செனட்டர்களில்அநேகர்‌, மனந்திரும்பினர்‌! அவர்களே, எரிந்துபோன அர்ச்‌. லாரன்சின்பரிசுத்த சரீரத்தை, பக்திபற்றுதலுடன்‌, சுமந்து சென்று, பூஜிதமாக திவோலியினரு கிலிருக்கும்‌, வெரோனா வயல்வெளியிலுள்ள ஒரு குகையில்பூஜிதமாக அடக்கம் செய்தனர்‌. 258ம்வருடம்ஆகஸ்டு 10ம்தேதி,அர்ச்‌. லாரன்ஸ்‌, வேதசாட்சியாக, உயிருடன்சூடேற்றப்பட்ட ஒரு இரும்புக்கட்டிலில்வறுத்தெடுக்கப்பட்டுக்கொல்லப்பட்டார்‌. 

                ஏறக்குறைய நூறு வருடங்களுக்குப்பிறகு, மகாக்கான்ஸ்டன்டைன்பேரரசர்‌, அர்ச்‌. லாரன்சின்கல்லறையின்மேல்ஒரு தேவாலயத்கைக்கட்டினார்‌. பின்னாளில்‌, முதலாம்தமாசுஸ்பாப்பரசர்‌, இத்தேவாலயத்தை சீரமைத்து, பெரிய பசிலிக்கா தேவாலயமாகப்புதுப்பித்துக்கட்டினார்‌. இது தான்‌, சான்லொரன்சோ ஃபுவோரி லே முரா என்று, இக்காலத்தில்அழைக்கப்படுகிற அர்ச்‌. லாரன்ஸ்தேவாலயம்‌.  இந்த தேவாலயத்தில்‌, முதல்வேதசாட்சியாக மரித்த அர்ச்‌. முடியப்பருடைய பரிசுத்த சரீரமும்கூட, பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டி ருக்கிறது! 2ம்பெலாஜியுஸ்பாப்பரசர்‌, இப்பசிலிக்கா தேவாலயத்தைப்புதுப்பித்துக்கட்டியபோது, கான்ஸ்டான்டிநோபிளிலிருந்த அர்ச்‌.  முடியப்பருடைய பரிசுத்த சரீரத்தை, இப்பசிலிக்கா தேவாலயத்திற்கு இடமாற்றம்செய்தார்‌! இந்த பசிலிக்கா தேவாலயத்தில்‌, ஹிலாரியுஸ்பாப்பரசரும்‌ 9ம்பத்திநாதர்பாப்பரசரும்அடக்கம்செய்யப்பட்டிருக் கின்றனர்‌. அர்ச்‌. லாரன்ஸ்கிடத்தப்பட்டிருந்த அந்த பெரிய இரும்புக்கட்டில்‌, லூசினாவில்‌, அர்ச்‌. லாரன்ஸ்தேவாலயத்தில்‌, 2ம்பாஸ்கால்பாப்பரசரால்பூஜிதமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது!

                அர்ச்‌. லாரன்ஸ்திருநாளன்று, அர்ச்‌. லாரன்சின்பரிசுத்தத்தலை அடங்கிய அருளிக்கப்பேழை, வத்திக்கானில்பொது வணக்கத்திற்காக வைக்கப்படும்‌!  1557ம்வருடம்‌, ஆகஸ்டு 10ம்தேதி, அர்ச்‌. லாரன்ஸ்திருநாளன்று, அர்ச்‌. குவென்டின்என்ற இடத்தில்நிகழ்ந்த போரின் போது, அடைந்த வெற்றியின்நினைவாக ஸ்பெயின்அரசரான 2ம்பிலிப்அரசர்‌, அர்ச்‌. லாரன்சிற்குத்தோத்திரமாக ஒரு மாளிகையைக்கட்டினார்‌. இக்கட்டிடம்‌, அர்ச்‌. லாரன்சிற்கு மகிமையாக அவர்வேதசாட்சியாகப்பாடுபட்டு மரித்த இரும்புக்கட்டில்வடிவத்தில்அமைக்கப்பட்டது!

தியாக்கோனும்‌, வேதசாட்சியுமான அர்ச்‌. லாரன்ஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!