Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 18 ஜூலை, 2022

உத்தரிக்கும் ஆத்துமங்களுக்கு உதவுவோம்

 


ரித்த விசுவாசிகளுக்காக ஜெபிப்பதும், ஒறுத்தல் பரித் தியாகங்கள் செய்து ஒப்புக்கொடுப்பதும், அனைத்திற்கும் மேலாக திவ்ய பலிபூசை செய்விப்பதும் கிறீஸ்தவ வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறது. உத்தரிக்கிற ஆன்மாக்களின் மீதான பக்தி, விசுவாசிகளின் இருதயங்களில் இஸ்பிரீத்து சாந்துவானவரால் தூண்டப்படுகிற பிறர்சிநேக பக்தியாக இருக்கிறது.

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களின் மீதான நம்முடைய பக்தி உத்தமமானதாக இருக்க வேண்டுமானால், அது ஒரு தெய்வ பய உணர்வாலும், தேவ நம்பிக்கை உணர்வாலும் உயிரூட்டப் பட வேண்டும். ஒரு புறத்தில் சர்வேசுரனுடைய கடுங்கோபமும் அவருடைய நீதியும் நமக்கு மிகுந்த நலம் பயக்கும் தேவ பயத்தை நம்மில் தூண்ட வேண்டும்; மறு புறத்தில், அவருடைய அளவற்ற இரக்கம் மட்டற்றதாகிய ஒரு தேவ நம்பிக்கையை நமக்குத் தர வேண்டும்.

சூரியன் ஒளியாயிருப்பதை விட எவ்வளவோ அதிகமாக சர்வேசுரன் தம்மிலே பரிசுத்த தனமாக இருக்கிறார். பாவத்தின் நிழல் கூட அவர் திருமுன் ஒரு கணமும் நிற்க முடியாது. " அக்கிர மத்தின் மீது தங்க முடியாதபடி உம் கண்கள் மாசற்றவையாக இருக்கின்றன" என்று தாவீது கூறுகிறார். கடவுள் பக்திச்சுவாலகர்களிடம் கூட குற்றம் கண்டுபிடிக்கிறார் என்றால், அற்ப மனிதர்களாகிய நாம் எந்த அளவுக்குக் கடவுளின் திருமுன் அஞ்சி நடுங்க வேண்டும்!


ஆகவே, சிருஷ்டிகளில் அக்கிரமம் தன்னை வெளிப்படுத்தும் போதெல்லாம், கடவுளின் அளவற்ற பரிசுத்ததனம் அதற்குப் பரிகாரத்தை எதிர்பார்க்கிறது. இந்தப் பரிகாரமானது, தேவ நீதியின் முழுக் கடுமையோடு செய்யப்படும் போது, அது பயங்கரமானதாக இருக்கிறது. இந்தக் காரணத்தால் தான் பரிசுத்த வேதாகமம், ''அவருடைய திருநாமம் பரிசுத்தமும் பயங்கரமும் உள்ளது" என்கிறது (அபாக். 1:13). அதாவது, சர்வேசுரனுடைய அர்ச்சியசிஷ்டதனம் அளவற்ற தாக இருப்பதால், அவருடைய நீதி பயங்கரமுள்ளதாக இருக்கிறது.

இந்த பயங்கரமுள்ள தேவ நீதி மிக அற்பமான பாவங்களையும் கூட மிக அகோரமான துன்பங்களைக் கொண்டு தண்டிக்கிறது. காரணம் என்னவெனில், நம் கண்களில் இலகுவான வையாகவும், இலேசானவையாகவும் தோன்றுகிற பாவங்கள், கடவுளின் அளவற்ற பரிசுத்த தனத்தின் முன்பாக மிகவும் அருவருப்புக்குரியவையாகத் தோன்றுகின்றன என்பதுதான். இதனால் தான் இந்த தெய்வீகப் பரிசுத்ததனத்தை நெருங்கிச் செல்லச் செல்ல, அர்ச்சியசிஷ்ட வர்கள் தெய்வீகப் பேரொளியில் தங்கள் அற்பப் பாவங்களையும் மிகக் கனமான பாவங்களாக உணர்ந்தார்கள். பெரும் புனிதர்களும் கூட, அதாவது, அற்பப் பாவங்களையும் கூட மிகுந்த விழிப்புணர்வோடு விலக்கி, மிகப் பரிசுத்தமாக வாழ்ந்த புனிதர்களும் கூட, தங்களுடைய ஒரு சில அற்பமான பாவங்களைக் கண்டு, உலகிலுள்ள சகல பாவிகளிலும் அதிக மோசமான பாவிகளாகத் தங்களைக் கருதினர். அந்த அற்பப் பாவங்களையும் அருவருத்து அவற்றை விலக்குவதற்காக ஒவ்வொரு கணமும் அவர்கள் போராடினார்கள்.

ஆம்! பாவம் அளவற்றதாகிய பரிசுத்ததனத்தை நோகச் செய்வதால், மிக அற்பமான பாவமும் கூட கடவுளுக்கு முன் மிகப் பிரமாண்டமானதாக ஆகிறது. ஆகவே அது மிக கடுமை யான பரிகாரத்தை எதிர்பார்க்கிறது. இதன் மூலம் உத்தரிக்கிற ஆன்மாக்கள் உட்பட்டிருக்கிற மகா கொடிய வேதனையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த வேதனை நம்மை ஒரு பரிசுத்த பயத்தில் ஆழ்த்துகிறது.

உங்கள் மனமாகிய "அறைக்குள் " நுழைந்து, மரித்த உங்கள் தாய் தந்தை சகோதர சகோதரிகள் உறவினர் / நண்பர்கள் / பகைவர்களின் அழுகுரலைக் கூர்ந்து கவனியுங்கள். வாழும்போது, உங்களை எவ்வளவோ பிரியத்தோடு நேசித்தவர்கள் இப்போது படும் துன்பத்தை உணருங்கள். அவர்கள் மீது பரிதாபப்படுங்கள். அவர்கள் தங்களுக்குத் தாங்களே எந்த உதவியும் செய்ய முடியாது. நீங்கள்தான் உங்கள் ஜெபத்தாலும், நற்செயல்களாலும் அவர்களுக்கு உதவ முடியும்.

அதே சமயத்தில் இந்த நவம்பர் மாதம் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிற உத்தரிப்பின் வேதனையையும் சொல்லி நம்மை எச்சரிக்கிறது. மறுவுலகில் இந்த உத்தரிப்பு அகோரமானது தான் எனினும், இவ்வுலகில் எவ்வளவோ எளிதாக நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும் வழிமுறைகளைக் கடவுள் தம் திருச்சபையின் வழியாக நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறார்:



1. பாவங்களை, குறிப்பாக சாவான பாவங்களையும், முடிந்த வரை அற்பப் பாவங்களையும் விலக்க முயல வேண்டும். அடிக்கடி பாவசங்கீர்த்தனம், திவ்ய நன்மை என்னும் தேவத் திரவிய அனுமானங்களைப் பெறுவது பாவங்களை விலக்க நமக்குப் பெரும் உதவியாயிருக்கும்.

2. ஜெபம், குறிப்பாக ஜெபமாலை பக்தி, உத்தரிய பக்தி ஆகியவை உத்தரிக்கிற நெருப் புக்கு எதிராக நமக்குத் தரப்பட்டுள்ள ஆயுதங்களாகும்.

3. பாவப் பரிகாரம் திருச்சபை வழங்கும் ஞானப் பலன்களால் எளிதாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, "திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம். அதேனென்றால் உமது அர்ச்சியசிஷ்ட சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்" என்ற மனவல்லய ஜெபம் ஒரு முறை பக்தியோடு சொல்லப்படும்போது அது பத்து வருடப் பலனைப் பெற்றுத் தருகிறது; அதாவது, பத்து வருடங்கள் கடும் தபசு செய்வதால் வரும் பலனை இந்தச் சிறு மன வல்லய ஜெபம் நமக்குத் தருகிறது. திவ்ய நன்மை உட்கொண்டபின் " மகா மதுரம் பொருந்திய நல்ல சேசுவே...'' என்ற ஜெபம் சொல்லி, சேசுவின் திருக்காயங்களுக்குத் தோத்திரமாகவும், பாப்பரசரின் கருத்துகளுக்காகவும் வேண்டிக்கொள் ளும்போது, நாம் ஒரு பரிபூரண பலனைப் பெற்றுக்கொள்கிறோம். அதாவது, நாம் தேவ இஷ்டப்பிரசாத நிலையிலிருந்து இதைச் செய்யும் போது, நம் பாவங்களுக்கான அநித்திய தண்டனையிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுகிறோம். ஆகவே, ஒன்றில் உத்தரிக்கிற நெருப்பின் மூலம் பாவப் பரிகாரம், அல்லது இவ்வுலகில் பரிகாரம் செய்வதன் மூலம் உத்தரிக்கிற ஸ்தலத்தை முழுமையாகத் தவிர்ப்பது, இரண்டும் நம் கையில் தான் உள்ளது.

வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2 முதல் 9-ம் தேதி வரை எட்டு நாட்கள் தேவ இஷ்டப்பிர சாத (சாவான பாவமில்லாத) நிலையில் இருந்து, பூசை கண்டு, நன்மை வாங்கி, பாப்பரசரின் சுகிர்த கருத்துகளுக்காகவும், உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காகவும் ஒப்புக்கொடுப்பதன் மூலம் ஒரு பரிபூரண பலனை நாம் பெற்று, அதை ஓர் ஆன்மாவுக்கு ஒப்புக்கொடுத்து, அந்த ஆன்மாவை உத்தரிக்கிற ஸ்தலத் திலிருந்து விடுவிக்கலாம். பாப்பரசர் இந்த நவம்பர் மாதம் முழுவதும் இந்தப் பரிபூரணப் பலனை வழங்கி யிருப்பதால், அதை இம்மாதம் முழுவதும் பயன்படுத்தி, உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு உதவலாம்.


ஞாயிறு, 17 ஜூலை, 2022

அர்ச். மார்டின் தே போரஸின் ஜீவிய சரித்திரம் [life History of St. Martin de Porres] 1

அர்ச். மார்டின் தே போரஸின் ஜீவிய சரித்திரம் 


அர்ச். மார்டின் தே போரஸ் பெருநாட்டின் லீமா நகரத்தில் 1579ம் வருடம், டிசம்பர் 9ம் தேதி பிறந்தார். இஸ்பானிய நாட்டின் உயர் குடிமகனான ஜான் தே போரஸுக்கும் அன்னா வெலாஸ்குவஸ் என்ற நீக்ரோ பெண்மணிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த போது, தாயைப் போல் கறுப்பாகப் பிறந்ததால், தந்தை இவரைத் தன் குழந்தையாக ஏற்க மறுத்தார். அதனால், இவரு டைய ஞானஸ்நான பதிவேட்டில், பெயர்தெரியாத தகப்பன் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. சிறிது காலம் கழித்து, ஜான், அதற்காக மிகவும் மனம் வருந்தி, சட்டபூர்வமாக மார்டினையும் அவருக்கு 2 வருடம் கழித்துப் பிறந்த ஜோனையும் தன்னுடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார். மார்டின், இளமைப் பருவத்தின் முதல் வரு டங்களில், தாயாருடனும், சின்ன தங்கையுடனும் ஜீவித் தார். சில சமயம், மார்டினிடம், அவருடைய தாய், கூடையையும் பணத்தையும் கொடுத்து, பொருட்கள் வாங்கும்படி கடைக்கு அனுப்பிவைப்பாள். அவ்வாறு, கடைக்குச் சென்ற போதெல்லாம், அடிக்கடி, அவர் வெறும் கூடையுடன், வீடு திரும்புவார். லீமாவின் கடைவீதிகளில், அநேக ஏழைகள், பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மறுக்க முடியாதவராக, தான் கொண்டு சென்ற பணத்தையெல்லாம் அவர்களுக்கு அளித்து விட்டு வெறும்கூடையுடன், மார்டின், வீடு திரும்புவார். 

காலையிலேயே கடைக்குச் சென்ற மார்டின் வீடு திரும்புவதற்கு மத்தியானம் ஆகிவிடும். ஒரு சில காசுகளை மட்டுமே கொண்டு சென்ற மார்டின், அவற்றைச் செலவிடுவதற்கு, ஏன் அவ்வளவு நேரம் ஆனது? காரணம், அவர், கடைக்குச் செல்லும் போது, வழியில், தேவாலயத்தைக் காண்பார். உடனே, இவ்வுலகில் தனது தகப்பன், தன்னை நிராதரவாக கைவிட்டாலும், ஒருபோதும் தன்னைக் கைவிடாமல் பாதுகாத்துப் பராமரிக் கும் பரலோகத் தந்தையாம் சர்வேசுரனுடைய பரிசுத்த இல்லமாகிய தேவாலயத்திற்குள் செல்வார்; ஒளிமிகுந்த தெருவிலிருந்து விலகி, நூதனமான அமைதியுள்ள சூழலும், ஜெபிக் கத் தூண்டும் சுரூபங்களின் நிழல்களுமுடைய தேவாலயத்திற்குள் சின்னஞ்சிறிய நீக்ரோ சிறுவனான மார்டின் தன் சிறு கால்களால், பீடத்திற்கு முன்பாக விஸ்தாரமாய் பரந்திருக்கும் விசுவாசிகளுடைய பகுதிக்கு , சப்தமின்றி, மெதுவாக நடந்துச் சென்று பீடத்தின் முன் முழங் காலில் இருப்பார். மகா பரிசுத்த தேவநற்கருணையில் வீற்றிருக்கும் திவ்ய சேசுநாதர் சுவாமி யை அத்தியந்த விதமாக ஆராதித்து, தேவ சிநேக முயற்சிகளில், வெகுநேரம் ஈடுபட்டிருப் பார்; ஜெபத்தில் ஆழ்ந்திருப்பார்; அப்போது, பாடுபட்ட சுரூபத்தையோ, அல்லது பெரும் ஆடம்பர அலங்கார பீடங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் தேவமாதாவின் படத்தையோ உற்றுப் பார்ப்பதற்காக, அவருடைய இருபெரிய கண்களும் முழுவதுமாகத் திறந்திருக்கும்; அவை, அவருடைய கறுப்புமுகத்தில் பளீரென்று, அதிக வெண்மையாகக் காட்சியளிக்கும். 

சப்தமும் ஆரவாரக் கூச்சலுமுள்ள அவருடைய வீட்டின் சூழலுக்கு முற்றும் மாறுபாடான அமைதியும் ஆழ்ந்த சமாதானமும் நிலவும் தேவாலயம், மார்டினுடைய இருதயத்திற்கு மிக வும் இனிமையாக இருந்தது. ஆனால், வீட்டிற்குச் சென்றதும், அம்மாவிடம், மார்டின், கணக் கை ஒப்படைக்க வேண்டியிருந்தது. சிறிதளவு பணமே தன்னிடம் உள்ள நிலைமையில், மார் டினுடைய தாயாரால், ஏழைகளின் மீது தன் மகன் காட்டிய பரிவு தயாளத்தை அனுமதிக்க முடியாமல் போயிற்று. மகனே, இன்று நீ செய்த குற்றத்தால், நமக்கு சாப்பிட ஒன்றும் இல்லை. அதனால், நீ மட்டுமல்ல, உன் தங்கையும், நானும் கூட சாப்பிடாமல் இருக்கிறோம் என்று கூறினாள். மார்டின், அதற்கான தண்டனையை அமைதியாக ஏற்றுக்கொண்டார். ஆனா லும், பிச்சைக்காரர்கள், ஏழைகளைக் கண்டால், மறுபடியும் அவர்களுக்கு, அவர் தன்னிடம் இருக்கும் பணத்தை அளித்துவிடுவார். மார்டின் அறிவிலும் திறமையிலும் குணத்திலும் மிகச் சிறந்த சிறுவனாக வளர்ந்துவந்தார். மார்டினுடைய தந்தை, ஜான் தே போரஸ், அச்சமயம், லீமாவிலிருந்து, ஈக்வடார் நாட்டிலுள்ள குவாயாகுவில் என்ற நகரிலுள்ள வேலைக்கு இஸ் பானிய அரசாங்கத்தால் மாற்றப்பட்டிருந்தார். அதனால், அவ்வப்பொழுது லீமாவுக்கு அவர் வந்து போவது வழக்கம். ஒருதடவை, அவ்வாறு லீமாவுக்குச் சென்ற ஜான், தன் இரு பிள்ளை களையும் ஏற்றுக்கொண்டு, தன்னுடன் குவாயாகுவிலுக்குக் கூட்டிச் சென்றார். அவர்களிடம் நல்ல தந்தையாக, அவர்களுக்குத் தேவையான நல்ல கல்வியைக் கொடுப்பதற்காக திறமை யான ஆசிரியர்களை ஏற்பாடு செய்தார். அத்துடன், அவரும், அவருடைய ஓய்வு நேரத்தில் அவர்களுக்குக் கற்பிப்பதில் ஈடுபட்டார். ஒருசமயம், ஜான் தே போரஸ் தன் இருபிள்ளை களுடனும் தெருவில் நடந்து சென்ற போது, வழியில், அவரது மாமா, ஜேம்ஸ் தே மிரான் டாவை சந்தித்தார். பிள்ளைகள் யார் என்று கேட்டபோது, அவரிடம், ஜான், இவர்கள் என் பிள்ளைகள். அன்னா வெலாஸ்குவஸ் தான் இவர்களுடையதாய் என்று பதிலளித்தார். அவர் களுக்கு நல்ல கல்வி அளிக்கும்படியாக இவர்களை என்னுடன் வைத்திருக்கிறேன் என்று பதி லளித்தார்.

அப்போது, மார்டினுக்கு 8 வயது. ஜோனுக்கு 6 வயது. தந்தையுடன் பிள்ளைகள் தங் கியிருந்த காலம் மிகக் குறுகிய காலம். சுமார் நான்கு வருடங்கள் கூட இருந்தனர். பின்னர், மறுபடியும் ஈக்வடாரிலிருந்து, பனாமாவுக்கு ஜான் மாற்றப்பட்டதால், மார்டினைத் தாயா ருடன் லீமாவிலும், ஜோனைத் தன் மாமா ஜேம்ஸ் தே மிராண்டாவின் பொறுப்பிலும் விட் டுச் சென்றார். அவர்களுடைய கல்விக்குத் தேவையான பணத்தைக் கொடுத்தார். மார்டின் நன்கு கல்விகற்பதுடன், வியாபாரத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றும் ஜான் விரும்பி னார். தான் இல்லாத போது, தன் குடும்பம், வறுமையால் துன்பப் படாமலிருப்பதற்குத் தேவையான அளவிற்கு, ஜான், பணத்தைத் தன் மனைவியிடம் கொடுத்து விட்டுப் பனாமா விற்குச் சென்றார். மார்டினுக்கு 12 வயது ஆனதும், தொழில் கற்றுக்கொள்ளும்படியாயிற்று. எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுப்பது என்பதில், மார்டினுக்கு முழு சுதந்திரத்தை, அவரு டைய தந்தைக் கொடுத்திருந்தார். அதன்பிரகாரம், மார்டின், பார்பர் என்னும் முடிவெட் டும் தொழில் கற்றுக்கொள்வதற்காக, மார்சல் தே ரிவெரோ என்பவரது கடைக்குச் சென்றார். அக்காலத்தில் பார்பர் என்பவர், முடியை வெட்டுவதுடன், நோய்களுக்குத் தீர்வுகாணும் வகையில் இரத்தம் எடுப்பது, அறுவைசிகிச்சை செய்வது, காயங்களுக்கு மருந்திட்டு சிகிச்சை அளிப்பது, சாதாரணநோய்களுக்கு மருந்து கொடுப்பது போன்ற பல்வேறு காரியங்களையும் செய்பவராக இருந்தார். அதாவது, பார்பர் என்பவர், முடிவெட்டுபவராகவும், அறுவை சிகிச்சை நிபுணராகவும், மருத்துவராகவும் மருந்து கொடுப்பவராகவும் ஒரே சமயத்தில் செயல்பட்டார். ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் மாபெரும் விதமாக பயன்படும் இத்தொழிலைக் கற்பதில், மார்டின் தீவிரமாக அயராமல் ஈடுபட்டார்.

புதன், 29 ஜூன், 2022

Confession Prayers for Priest in Latin


CONFESSION

Dominus sit in corde tuo et in labiis tuis ut rite confitearis omnia peccata tua

Absolutionis Forma Communis

Misereátur tui omnípotens Deus, et dimíssis peccátis tuis, perdúcat te ad vitam ætérnam. Amen.

Indulgéntiam, absolutiónem, et remissiónem peccatórum tuorum tríbuat tibi omnípotens et miséricors Dóminus. Amen

Dominus noster Jesus Christus te absolvat; et ego auctoritate ipsius te absolvo ab omni vinculo excommunicationis (suspensionis) et interdicti in quantum possum et tu indiges.  Deinde, ego te absolvo a peccatis tuis in nomine Patris, et Filii, X et Spiritus Sancti. Amen.

Passio Domini nostri Jesu Christi, merita beatæ Mariæ Virginis, et omnium Sanctorum, quidquid boni feceris, et mali sustinueris, sint tibi in remissionem peccatorum, augmentum gratiæ, et præmium vitæ æternæ. Amen.

Formula Absolutionis generalis impertiendae Tertiarii in confessionali

Auctoritate a Summis Pontificibus mihi commissa plenariam indulgentiam omnius peccatorum tuorum tibi imnpertior. In nomine Patris, et Filii, X et Spiritus Sancti. Amen.

Exorcismus Contra Diabolum Mutum

Exorciso te omnis spiritus immunde, ut recedas ab hac creatura Dei. In nomine Patris, et Filii, X et Spiritus Sancti. Amen.

 

Excommunications Latae Sententiae

Reserved to the Holy See

1. Profanation of the Consecrated Species

2. Physical violence on the person of the Sovereign Pontiff

3. Attempted absolution of accomplice in re turpi

4. Direct violation of the sacramental seal

5. Episcopal consecration without a pontifical mandate

Reserved to the Local Ordinary

1. Apostasy, Heresy, or Schism

2. Abortion, effectu secuto

3. Violation or divulging of the secret of the confessional by means of technical instrument.

Interdicts Latae Sententiae

1. Physical violence on the person of a bishop

2. Simulation of Mass or the Sacrament of Penance

3. False denunciation of sollicitatio ad turpia

4. Attempt at marriage by a religious in perpetual vows

Suspensions Latae Sententiae

1. Cleric in sacris attempting a marriage

2. Cleric exerting violence on a bishop (added to interdict)

3. Simulation of Mass or the Sacrament of Penance

4. False denunciation of the confessor for solicitation ad turpia by a cleric (added to interdict)

5. Cleric ordained without dismissorial letters

 

Oratio Sacerdotis Antequam Confessiones Excipiat

 

Da mihi, Dómine, sédium tuárum assistrícem sapiéntiam, ut sciam iudicáre pópulum tuum in iustítia, et páuperes tuos in iudício. Fac me ita tractáre claves regni cælórum, ut nulli apériam, cui claudéndum sit, nulli claudam, cui aperiéndum. Sit inténtio mea pura, zelus meus sincérus, cáritas mea pátiens, labor meus fructuósus. Sit in me lénitas non remíssa, aspéritas non sevéra; páuperem ne despíciam, díviti ne adúler. Fac me ad alliciéndos peccatóres suávem, ad interrogándos prudéntem, ad instruéndos perítum. Tríbue, quæso, ad retrahéndos a malo sollértiam, ad confirmándos in bono sedulitátem, ad promovéndos ad melióra indústriam: in respónsis maturitátem, in consíliis rectitúdinem, in obscúris lumen, in impléxis sagacitátem, in árduis victóriam: inutílibus collóquiis ne detínear, pravis ne contáminer; álios salvem, me ipsum non perdam. Amen.


Download in PDF - Click Here

Download in Word - Click Here
 

புதன், 8 ஜூன், 2022

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 37

 அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 37


சகோ. ரெஜினால்டுவைப் பற்றி அந்த பல்கலைக்கழக மாணவர்கள் வேறு என்னவெல்லாமோ கேள்விப்பட்டிருந்தார்கள். பாரீஸ் பல்கலைக்கழகம் உலகிலேயே சிறந்த கல்வி நிறுவனம் என்பதால், அதன் பேராசிரியாக பொறுப்பேற்றிருந்த ரெஜினால்டு, இசை, இலக்கியம், கவிதை, சிற்பம், கலையில் சிறந்த ஞானத்தைப் பெற்றிருந்த மற்ற இளைஞர்களையும் தமது இல்லத்திலேயே கூட்டி, வருங்கால உலகிற்கான சீரிய திட்டங்களை தீட்டுவார். "அவ்வாறு உலகின் உயரிய அந்தஸ்தில் தம்மை நிறுத்தி வைத்திருந்த பேராசியரியர் ரெஜினால்டு, இப்பொழுது, ஜெபத்தையும் தவத்தையும் கடைபிடிக்கும் ஒரு துறவற சந்நியாசியாக எதற்காக மாறவேண்டும்?" என்று தங்களையே வினவிக்கொண்டிருந்த அந்த மாணவக் கூட்டத்தினரை பிரசங்கத் தொட்டியில் இருந்து கொண்டு பார்த்தார், சகோ. ரெஜினால்டு. அவர்களைக் கண்டதும், அவர்களுடைய மனக்குழப்பத்தையும் உணர்ந்தார். உடனே அவர்களை நோக்கி, "சகோதரரே! நான் இம்மடத்தில் சேர்ந்ததற்கான ஒரே காரணம் : நான் இங்கு சிநேகிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதற்காகத் தான் நான் அர்ச்.சாமிநாத சபைத் துறவியானேன்" என்று கூறினார். 

1219ம் வருடம் ஜனவரி மாதம். சகோ.ரெஜினால்டு வந்து இரண்டே மாதங்களில், பொலோஞா அர்ச். சாமிநாதருடைய துறவறமடத்தில் சேர்வதற்காக, தினமும் பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் கூட்டம் வந்து, மடத்தை, முற்றுகையிட்டது. துறவிகளின் ஞானதியான பிரசங்கங்களைக் கேட்பதற்காக வரும் மக்கள் கூட்டம், நாளுக்கு நாள் கோவில் பற்றாத அளவிற்கு, அதிகரிக்கலாயிற்று. மக்கள் கூட்டத்திற்கேற்றபடி தேவாலயத்தை விஸ்தாரப்படுத்துவதும், மடத்தில் சேரும் நவசந்நியாசிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியால், மடத்தைப் பெரிதாகக் கட்டுவதும், அதற்கு தேவைான அதிகப்படியான நிலத்தை வாங்குவதும், துறவற மடத்தின் நிர்வாகத்தின் அத்தியாவசிய அலுவலாயிற்று. சகோ. ரெஜினால்டு பிரசங்கத்தொட்டியில் ஒருமுறை மோட்சகாரியங்களைப் பற்றிப் போதிக்கக் கேட்கும் ஒரு வெதுவெதுப்பான ஆத்துமம், எவ்வளவுக்கு தேவசிநேகத்தினால் பற்றியெரியும் என்றால், அந்த ஆத்துமம் தனது ஜீவிய முறையில் திருப்தியடையாமல், ஆண்டவருடைய எல்லையில்லா சிநேகத்திற்காக ஏதாவது ஊழியம் செய்ய ஆசிக்கும் ' அதுவும் உடனே செய்ய வேண்டும் என்று தன்னை நிர்ப்பந்திக்கும். அதன்படி பொலோஞா நகரத்திற்கு சகோ. ரெஜினால்டு வந்த சில தினங்களில், அந்நகர பல்கலைக்கழக பேராசிரியர்கள், தாங்களும் கறுப்பு வெற்ளை துறவற அங்கியை அணியும் தவச்சபையாராக தான், தங்களுடைய ஜீவியத்தின் இறுதி நாட்களை செலவழிக்க வேண்டும், என்று தீர்மானித்தனர். இவ்வாறாக, சகோ. ரெஜினால்டு, பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும், பேராசிரியர்களையும், தம்பால் ஈர்க்கும் காந்தம் போல, திகழ்ந்தார். 

டயானா என்ற 17 வயது சிறுமி , சகோ. ரெஜினால்டுவின் ஞான தியான பிரசங்கங்களைக் கேட்க வந்தாள். அவள் ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பெண். ஆயினும், சகோ. ரெஜினால்டுவின் ஞானமிக்க பிரசங்கங்களினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவளாக, சகோதரரைப் பின்தொடரலானாள். அவளும் தேவசிநேகத்தினால் உந்தப்பட்டவளாக, தேவ அழைத்தலைப் பெற்றவளாக, தானும் ஒரு கன்னியாஸ்திரியாக வேண்டும் என்று ஆசித்தாள். அர்ச். சாமிநாதருடைய துறவற சபையில் உட்படும்படி, பெரிதும் விரும்பினாள். "நான் அந்த உன்னத கன்னியாஸ்திரிகளுடைய சபையில் உட்படுவதற்கு முற்றிலும் தகுதியற்றவள்" என்று முதன் முதலாக சகோ. ரெஜினால்டுவை சந்தித்தபோது கூறினாள். அப்போது அப்பெண்ணின் கண்களை அவர் உற்று நோக்கினார். பிறகு அவர்களிடையே நடைபெற்ற உரையாடல் : "உன் ஆன்ம குருவானவானவர் யார்?'' "யாருமில்லை. சகோ. ரெஜினால்டு. எனக்கு இதுவரை ஞானகாரியங்களில் ஒருபோதும் யாதொரு ஆர்வமும் இருந்ததில்லை. ஆனால், உங்களுடைய தியானபிரசங்கங்களைக் கேட்டதிலிருந்து, என்னிலே மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன '' "இப்பொழுது, மரணத்தைப் பற்றிய சிந்தனை உன் இருதயத்தில் ஆழ்ந்து பதிந்து விட்டது தானே?" "ஆம். சகோ. ரெஜினால்டு. விரைவாக ஓடி மறைந்து விடும் இவ்வுலக ஜீவியத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். அதற்கு ஏற்ற உத்தம கத்தோலிக்க ஜீவியத்தைக் கைப்பற்றவும் விரும்புகிறேன். ஆனாலும் என்ன செய்வதென அறியாமலிருக்கிறேன்". 

இதைக் கேட்ட ரெஜினால்டு, புன்னகையுடன் அவளிடம், "நீ ஒவ்வொரு வாரமும் இவ்வாறு என்னை இங்கு சந்திக்க வா. இதைப்பற்றி நான் உனக்கு விளக்குவேன். யாருக்குத் தெரியும்? ஒருவேளை ஆண்டவருடைய ஊழியத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர், நல்ல சக ஊழியராக ஜீவிக்கக் கூடும்!'' என்றார். தனது ஜீவியத்தில் மிகுந்த அக்கறையுடனும் நேசத்துடனும் இருக்கும் சகோ. ரெஜினால்டுவினால் பெரிதும் கவர்ந்திழுக்கப்பட்டவளாக டயானா , அர்ச். சாமிநாத சபைத் துறவிகளுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று தமது தாத்தாவான பீட்டர் டி லவல்லோ என்பவரிடம் கூறினாள். அவரும் தமது குடும்பத்துக்குச் சொந்தமான அர்ச். நிக்கோலாஸ் தேவாலயத்தையும், அதை ஒட்டி இருந்த ஒரு சிறு நிலத்தையும், சாமிநாதருடைய மடத்திற்கு சொந்தமாக்கினார். இந்த தேவாலயம், பொலோஞா நகரத்துக்கு வெளியே உள்ள, திராட்சைத் தோட்டத்துக்கு அருகில் இருந்தது. மிகத்தனிமையான இவ்விடம் சபைத் துறவிகளின் தியானத்திற்கு, ஏற்ற இடமாக திகழ்ந்தது. அங்கிருந்து பொலோஞா மடத்தின் அலுவல்களை, சபைத் துறவிகள் எளிதாக நிறைவேற்ற ஏதுவான இடமாக , இருந்தது. சகோ. ரெஜினால்டு வந்தபிறகு அதிகரித்த , நவசந்நியாசிகளுக்குத் தேவையான பெரிய மடத்தைக் கட்டுவதற்கான திட்டமிடும் அலுவல்களுக்கும் ஏற்ற இடமாக இருந்தது.

புதிய மடத்திற்கு, துறவிகள் சென்ற 3ம் மாதத்தில், 1219ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சபையின் அதிபர் அர்ச்.சாமிநாதர், தமது பிரான்சு ஸ்பெயின் நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, பொலோஞா நகருக்கு வந்தார். மடத்திற்கு வந்தவுடன், சகோ. ரெஜினால்டுவை, பாரீஸ் நகருக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். தமது தலைமையில் இதுவரை பொலோஞா நகரில் இந்தக் குறுகிய காலத்தில், வெகு திறமையாகவும், ஞானமுடனும், அநேக ஆத்துமங்களை சிநேகிக்கும்படியாக, ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்த்திட்ட சகோ. ரெஜினால்டுவை, பாரீஸ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள அர்ச். யாகப்பர் மடத்திற்குக் கூட்டிச் செல்லப்போவதாக, சபையின் அதிபர் சுவாமியார் கூறினார். இதை அறிய வந்த சிறுமி டயானா , தமது ஆன்ம வழிகாட்டியான சகோ. ரெஜினால்டுவை இவ்வளவு சீக்கிரமாக இழக்க நேரிடுகிறதே என்ற வருத்தத்தில் ஆழ்ந்தாள். உடனே அதிபர் சுவாமியாரிடம் இதைப் பற்றி முறையிட சென்றாள்.


வெள்ளி, 25 மார்ச், 2022

விவாகரத்து பற்றி தெரியாத கத்தோலிக்கர்கள்

மார்ச் 23, 2022

ஆதாரம்: FSSPX.NEWS



30,000 பேர் வசிக்கும் போஸ்னியா-ஹெர்ஸகோவினாவில் 13,000 கத்தோலிக்கர் உள்ளனர். சிரோகி பிரிஜெக் நகரில், கத்தோலிக்கர்களிடத்தில் விவாகரத்து இல்லை. இந்த குறிப்பிடத்தக்க உண்மையின் விளக்கம் என்னவாக இருக்க முடியும்?

பல நூற்றாண்டுகளாக, துருக்கிய மற்றும் பிற்கால கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ், குரோஷியர்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டனர் மற்றும் அவர்களின் கத்தோலிக்க நம்பிக்கைக்காக கடுமையாக போராட வேண்டியிருந்தது. ஆகையால், இரட்சிப்பு கிறிஸ்துவின் சிலுவையிலிருந்து வருகிறது என்பதை அவர்கள் அனுபவத்தில் அறிந்திருக்கிறார்கள். இது நிராயுதபாணி திட்டங்கள், மனிதாபிமான உதவி அல்லது சமாதான ஒப்பந்தங்கள் ஆகியவற்றிலிருந்து வரவில்லை எனபதையும் அறிந்திருக்கிறார்கள். இருப்பினும் இது சில நன்மைகளைத் தருகிறது.

குரோஷிய திருமண பாரம்பரியம்

இளைஞர்கள் திருமணத்திற்குத் தயாராகும்போது, ​​"நீங்கள் சரியான பொருத்தத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்" அல்லது "சிறந்த பொருத்தம்" போன்ற கருத்துகளால் அவர்களின் காதுகள் இனிமையாக இருக்காது. பாதிரியார் அவர்களிடம் உண்மையாகச் சொல்கிறார்: "உங்கள் சிலுவையை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள். அது நீங்கள் நேசிக்க வேண்டிய சிலுவை, நீங்கள் சுமக்க வேண்டிய சிலுவை, நிராகரிக்கப்படாமல் பொக்கிஷமாக இருக்க வேண்டிய சிலுவை."

திருமண நாளில், மணமகனும், மணமகளும் தங்களுடன் சிலுவையைச் சுமந்துகொண்டு தேவாலயத்திற்குச் செல்கிறார்கள். கத்தோலிக்க குருவானவரால்  ஆசீர்வதிக்கப்படுகிறார், மேலும் அவர் திருமண சடங்கில்  ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறார். மணமகள் முதலில் தன் வலது கையை சிலுவையில் வைக்கிறாள்; இதையொட்டி, மணமகன் தனது கையை மணமகளின் மீது வைக்கிறார், மேலும் இரண்டு கைகளும் சிலுவையில் இணைக்கப்பட்டுள்ளன.

பாதிரியார் தனது கழுத்துப் பட்டை(Stole) நிச்சயிக்கப்பட்டவரின் கைகளில் வைக்கிறார், அவர்கள் தங்கள் சம்மதத்தை உச்சரித்து ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருப்பதாக வாக்களிக்கிறார்கள். இதற்குப் பிறகு, மணமகனும், மணமகளும் முத்தமிடுவதில்லை, ஆனால் தாங்கள் ஒப்பந்தம் செய்த திருமணத்தின் புனிதத்தின் அடித்தளமான சிலுவையை முத்தமிடுகிறார்கள்.

பொருள் மிகவும் அழகாக இருக்கிறது: கணவன் மனைவியை விட்டு பிரிந்தால் அல்லது பெண் தன் கணவனை விட்டு பிரிந்தால், அது அவர்கள் விட்டுச்செல்லும் சிலுவையாகும். இருப்பினும், சிலுவையைக் கைவிடுவது எல்லாவற்றையும் இழப்பதாகும், ஏனென்றால் சிலுவையில் கிறிஸ்து நமக்கு எல்லாமாக இருக்கிறார்.

திருமண சடங்கு முடிந்ததும், வாழ்க்கைத் துணைவர்கள் சிலுவையை வீட்டிற்கு எடுத்துச் சென்று தங்கள் வீட்டில் மரியாதைக்குரிய இடத்தைக் கொடுப்பார்கள். இது குடும்ப பிரார்த்தனையின் மையமாக மாறும், ஏனென்றால் குடும்பம் இந்த சிலுவையிலிருந்து பிறந்தது என்று எல்லோரும் நம்புகிறார்கள்.

ஒரு பிரச்சனை எழுந்தால், ஒரு மோதல் வெடித்தால், இந்த சிலுவைக்கு முன்னால் வாழ்க்கைத் துணைவர்கள் உதவிக்காகத் திரும்புகிறார்கள். அவர்கள் ஒரு வழக்கறிஞரிடம் செல்ல மாட்டார்கள், அவர்கள் ஒரு ஜோதிடரை அணுக மாட்டார்கள், அவர்கள் தங்கள் விவகாரங்களைத் தீர்க்க ஒரு உளவியலாளரை நம்ப மாட்டார்கள்.

அவர்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் முன் தோன்றுவார்கள். அவர்கள் மண்டியிடுவார்கள், அவர்கள் கண்ணீர் சிந்துவார்கள், தங்கள் துன்பங்களை வெளிப்படுத்துவார்கள், எங்கள் தந்தையை நினைத்து ஒருவருக்கொருவர் மன்னிப்பார்கள்: "எங்கள் கடனாளிகளை நாங்கள் மன்னிப்பது போல் எங்கள் கடன்களையும் மன்னியுங்கள்".

சிரோகி பிரிஜேக்கில் விவாகரத்துகள் இல்லாததற்கு இதுவே ஆழமான காரணம்.


ஆதாரம்: theotokos.fr – FSSPX.Actualités

வியாழன், 10 மார்ச், 2022

Devotion to St. Antony Day 24 in Tamil

 இருபத்து நான்காம் நாள்



அர்ச். அந்தோனியாரும் எஸ்ஸெலினோ (Ezzelino) என்னும் கொடுங்கோலனும்



பதுவா பட்டணத்தார் அர்ச். அந்தோனியாருக்கு வெகு மரியாதையும் வணக்கமும் செய்தார்கள். ஆனால் தாழ்ச்சி நிறைந்த அந்தோனியார் அவர்கள் அப்படித் தம்மை மேன்மைப்படுத்துவதால் மனவருத்தப்படுவார். அந்த நகரத்து மேற்றிராணியாரும் உயர்ந்த குருப்பிரசாதிகளுமே அவருக்கு மரியாதை செய்வதிலும், அவருடைய பிரசங்கங்களைக் கவனத்தோடு கேட்பதிலும் மற்றச் சனங்களுக்கு மாதிரியாயிருந்தார்கள். சனங்கள் அவரை வாழ்த்திப் புகழுவார்கள். அச்சமயங்களில் எங்கேயாவது போய் ஒளிந்துகொள்ளத் தேடுவார். அப்படி ஒரு நாள் இவர் ஒளிந்துகொள்ளும்படியாய் சன சந்தடியில்லாத வழியாய்ப் போகும்போது, ஒரு பெண்பிள்ளை கடின வியாதியாயிருந்த தன் குழந்தையைக் கரங்களில் ஏந்திக் கொண்டு அவருக்கு எதிரிலோடித் தன் குழந்தையைச் சௌக்கியப்படுத்த வேண்டுமென்று அழுது மன்றாடினாள். தாழ்ச்சியினால் அர்ச்சியசிஷ்டவர் அவள் மன்றாட்டை செய்யாமலிருந்ததால், """""பாரிசவாய்வுள்ள தன் குழந்தையின்மேல் சிலுவை அடையாளமாவது அவருடைய கையால் வரையவேண்டுமென்று அவள் வெகு அழுகைப் பிரலாபத்தோடு கெஞ்சினாள், அந்தோனியார் தாழ்ச்சியினால் நடுங்கி வியாதிக்காரக் குழைந்தையின்மேல் சிலுவை அடையாளம் போடவே குழந்தை முழு சௌக்கிய மானதைக் கண்ட தாய் சர்வேசுரனுக்கும் அந்தோனியாருக்கும் நன்றியறிந்த தோத்திரங்கள் செலுத்தினாள்.


அவ்விடத்தில்தான் அநேகர் கேட்டுக் கொண்டதின் பேரில் 'ஞாயிற்றுக்கிழமைப் பிரசங்கங்கள்" என்று பெயர் கொண்ட பிரசங்கப் புத்தகமொன்று எழுதினார். அந்நகர் வாசிகளுடைய விசுவாசப் பற்றுதலையும் அவர்களுடைய நல்ல மனதையுங் கண்டு அவர்கள் மட்டில் அன்பு வைத்து அவர்களைத் தம்மாலான மட்டும் பாதுகாத்து வந்தார். 2-ம் பிரேதெரிக் (Frederic II) என்பவனுடைய மருமகன் எஸ்ஸெலினோ என்பவன் வெறோனா (Verona) பட்டணத்தையும் அடுத்த நகரங்களையுந் தன் கொடுங்கோன்மைக்கு உள்ளாக்கி, எங்கே பார்த்தாலும் கொள்ளையடித்து, ஆண் என்றும் பெண் என்றும், பிள்ளையென்றும் பாராமல் எல்லோரையும் பிடித்துச் சித்திரவதை செய்து சொல்லிடங்காத அநியாய அக்கிரமங்களை நடத்தி வந்தான். பதுவா நகர்வாசிகள் அந்தக் கொடிய வேதனைகளில் தாங்கள் அகப்படாதபடித் தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று அந்தோனியாரை மன்றாட, அர்ச்சியசிஷ்டவர், தனியே, செபங்களும் தபசுமே அவருக்குத் துணையாயிருக்க, வேறு ஆயுதமொன்று மன்னியில் வெறொனா பட்டனஞ்சென்று கொடுங்கோலனைப் பார்க்கவேண்டுமென்று கேட்டார் அவனுக்கு முன்பாகக் கொண்டுபோய் விடப்பட்டபோது, தைரியமாய் அவனை நோக்கி 'கொடிய நிஷ்டூரனே, கடவுளின் சத்துராதியே, வெறிகொண்ட நாயே, கிறிஸ்துவர்களுடைய மாசற்ற இரத்தத்தை எத்தனை காலம் சிந்தப்போகிறாய் கடவுள் உனக்கு நியமித்திருக்கும் ஆக்கினைகளுக்கு நீ தப்பித்துக் கொள்ளப் போவதில்லையென்று நீ நிச்சயமாய் அறிந்திரு. உன் அக்கிரமங்களுக்குத் தகுந்த ஆக்கினையாகத் தான் இருக்கும்" என்று சொன்னார்.


 உடனே அவனைச் சுற்றிலுமிருந்த அவனுடைய சேவகர் அர்ச்சியசிஷ்டவரைத் துண்டு துண்டாய் வெட்ட அவன் தங்களுக்குக் கட்டளையிடுவான் என்று எண்ணி கத்திகளைத் தங்கள் கையிலேந்தித் தயாராய் நின்றார்கள். கொடுங்கோலன் பயந்து நடுங்கி அர்ச்சியசிஷ்டவர் பாதத்தில் விழுந்து தன் அக்கிரமங்களை ஏற்றுக்கொண்டு இனிமேல் அப்படிச் செய்வதில்லையென்று வார்த்தைப்பாடு கொடுத்தான் அந்தோனியார் பதுவா நகரத்திற்குத் திரும்பிப் போனார். எஸ்ஸெலினோ என்பவனோ தன்னைச் சுற்றிலுமிருந்தவர்கள் தன்னை இழிவாய் எண்ணுவதை அறிந்து அவர்களைப் பார்த்து: "நீங்கள் ஆச்சரியப்பட்டு என்பேரில் கோபங்கொண்டு என்னை நிந்திக்கவேண்டாம். ஏனெனில் அந்தோனியார் பேசினபோது அவருடைய முகத்தினின்று புறப்பட்ட பிரகாசம் என்னிடத்தில் எவ்வளவு பயங்கரம் உண்டாக்கினதென்றால் அப்போதே நரக பாதாளத்தில் தள்ளப்படுவதாக நினைத்தேன்' என்றான். பிறகு கொடுங்கோலன் சில வெகுமதிகளைத் தன் தூதர் மூலம் கொடுத்தனுப்பிச் சொன்னதாவது: அந்தோனியார். அவைகளை ஏற்றுக் கொண்டால், உடனே அவரைக் கொன்று விடுங்கள், ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவருக்குத் தீங்கு செய்யாமல் திரும்பி வந்துவிடுங்கள் என்று சொல்லி அனுப்பினான் அந்தோனியார் அவர்களைக் கண்ட மத்திரத்தில் அவர்களைக் கடித்து அனுப்பிவிட்டார். நடத்த சங்கதியை அறித்த கொடுங்கோலன் பெருமூச்செறிந்து *அந்தோனியார் சர்வேசுரனுடைய மனிதர் அவர் என்ளைப் பற்றி என்ன சொல்லுகிறதானாலும் சொல்லட்டும் என்றான். இக்காலத்திலும் வேத விரோதிகள் அநேகர்,  இத்தேசத்தில் நம்முடைய வேதத்தைப் பழித்து, இகழ்ந்து நம்மை நித்திக்கிறவர்கள் அநேகர் ஆயினும் நமது வேதத்தில் நாம் உறுதியாயிருந்து நமக்கு வரப்பட்ட நிந்தை அவமான நஷ்டங்களைத் தைரியய்ச் சகிக்கக்கடவோம்.



செபம்


மகா மகிமை பொருந்திய அர்ச் அந்தோனியாரே, உமது செயத்தினாலும் போதனையினாலும், அநேக ஆயிரம் பிரிவினைக்காரரை மனந்திருப்பினீரே, நாங்கள் முழுதும் மனம் திரும்பி சர்வேசுரனுக்கு எங்களை என்றென்றைக்கும் கையளிக்கும்படிக்குக் கிருயை செய்தருளும் ஆமென்.


நற்கிரியை  - பதிதருக்காக வேண்டிக்கொள்ளுகிறது.

மனவல்லயச் செயம்: பதிதருடைய சம்மட்டியான அர்ச். அந்தோனியாரே. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Devotion to St. Antony (day 23) in Tamil

 இருபத்துமூன்றாம் நாள்


பதுவா பட்டணத்தில் நடந்த நிகழ்ச்சிகள் 


சர்வேசுரன் அந்தோனியாருக்கு அளித்தருளின தேவ வரப்பிரசாதமும், ஆத்துமங்களை மனந்திருப்புகிற வல்லமையும் பதுவா பட்டணத்தில்தான் விசேஷமான விதமாய் விளங்கிற்று.


அப்பட்டணத்தில் 1228-ம் வருஷம் பெப்ரவரி மாதம் 9-ந் தேதி விபூதித் திருநாளன்று தபசுகாலப் பிரசங்கங்களை அந்தோனியார் ஆரம்பித்தார். பிரிவினைக்காரர் நிறைந்திருந்த அவ்விடத்தில் அவர்களை இரக்ஷிப்பதற்காக அந்தோனியார் வெகு ஆவலுடன் தேடித் தம்மாலான பிரயாசப்பட்டு அவர்களெல்லோரையும் நல்வழியிற் சேர்க்கவேண்டுமென்கிற கவலைகொண்டு பிரசங்கிக்கவே, முதற் பிரசங்கத்தைக் கேட்டபோதே அநேகர் அவர் போதனைகளையும் நாவன்மையையும் கண்டு அதிசயித்துத் திரள் திரளாய் அவருடைய பிரசங்கத்தைக் கேட்க வரத் தொடங்கினார்கள்.


அவர் பிரசங்கம் பண்ணும்போதோ அவ்வளவுபெரிய சனக்கும்பலில் யாதொரு முறைப்பாடோ, பரிகாசமான வார்த்தையோ, சிரிப்போ, அல்லது வேறெவ்விதமான சத்தமோ கேட்கப்படாமல் எல்லோரும் வெகு அமரிக்கையாயிருந்தார்கள். புத்தியில்லாத சிறு குழந்தைகள் முதலாய் அழுதாவது சந்தடி செய்தாவது அமரிக்கையை கெடுக்காமல் பெரியவர்களைப் போலவே இருந்தார்கள்.


ஆனதால் அநேகானேக ஆச்சரியமான பிரயோசன முண்டாகித் திரளான பேர் மனந்திரும்பினார்கள். பகையினால் நெடுங்காலம் பிரிந்திருந்தவர்கள் சமாதானத்தில் ஒன்றித்தார்கள். அறியாய வட்டி வாங்கினவர்கள் தாங்கள் அக்கிரமமாய்ச் சம்பாதித்த பொருட்களை உத்தரித்தார்கள். கடன் பட்டிருந்தவர்கள் தாங்கள் வாங்கின கடன்களைத் திரும்பக் கொடுத்துவிட்டார்கள். சிறையிலிருந்தவர்கள் அநேகர் விடுதலை செய்யப்பட்டார்கள். சகல வழக்குகளிலும் அந்தோனியாரை மத்தியஸ்தராகத் தெரிந்துகொண்டார்கள்..


அவருடைய பெயர் எவ்வளவு தூரம் பிரபல்வியமான தென்றால், அடுத்த விடங்களில் வழிப்பறிசெய்து கொள்ளையடித்து வந்த திருடர் முதலாய் அவருடைய பிரசங்கத்தை கேட்டுத் தங்களுடைய திருட்டுத் தொழிலை விட்டார்கள். ஒரு நாள் பன்னிரண்டு திருடர், சேர்ந்து கொள்ளையடித்தவர்கள், அர்ச்சியசிஷ்டவருடைய பிரசங்கத்தைக் கேட்க வந்தார்கள். அவர்களில் ஒருவன் வெகு காலத்துக்குப் பிறகு 1292-ம் ஆண்டில் தன்னுடைய முதிய வயதில் பிரான்சீஸ்கு சபைச் சந்நியாசியார் ஒருவரிடத்தில் சொன்னதாவது: *காட்டில் நாங்கள் பன்னிரண்டு பேர் வழிப்போக்கரைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அர்ச். அந்தோனியார் செய்துவந்த நன்மைகளையும் அற்புதங்களையும் பற்றிக் கேள்விப்பட்டு, ஒருநாள் வேஷமாற்றிக்கொண்டு அவர் செய்த பிரசங்கத்தைக் கேட்கப் போனோம். அவர் செய்த உருக்கமான பிரசங்கத்தைக் கேட்டு எங்களுடைய மனதில் திகிலும் வெட்கமுமுண்டாகி அவருடைய பிரசங்கம் முடிந்தபோதே எங்களுடைய அக்கிரமச் செயல்களுக்காக நாங்கள் மிகவும் மனஸ்தாபப் பட்டழுது ஒருவனுக்குப்பின் னொருவனாய் அவரிடத்தில் பாவசங்கீர்த்தனம் பண்ணினோம். திரும்பவும் நாங்கள்21ஆம் நான்


கொள்ளையடிக்காதபடிக்கும் எங்கள் அனியாயனை விட்டுவிடும் படிக்கும் அந்தோனியார் கட்டளையிட்டு அவர் கட்டலையிட்ட பிரகாரஞ் செய்கிறவர்கள் இரசூலினியம் அடைவார்களென்றும் கட்டளையிழி நடத்தவர்களோ நித்திய தரகாக்கினைக்கு உள்ளாவார்களென்றும் அறிவித்தார். சிவர் இட்டாக்கியமாய் அவருடைய கட்டளையை மீறி அவலான மரண மடைந்தார்கள். வேறுசிலர் சமாதானத்தில் மரித்தார்கள். எங்களுடைய பாவங்களுக்கு அபராதமாகப் பன்விரண்டுவிசை அப்போஸ்தலர்களுடைய கல்லறையைச் சந்திக்க வேண்டுமென்று அர்ச்சியகிஷ்டவர் கட்டளை பிட்டிருந்தார். இதோ இன்றையத்தினம் நான் பன்னிரண்டாம் முறை கல்லறையைச் சந்திக்கிறேன் என்று திரளான கண்ணீர் சொரிந்து சொன்னான்,


ஒருநாள் பிரசங்கம் கேட்டிருந்தவர்களில் ஒருவன் அந்தோனியாரிடம் வந்து அழுது புலம்பித் தேம்பித் தேம்பித் தன்பாவங்களைச் சொல்லும் போது, அவன் தன் பாவங்களையெல்லாம் ஒரு கடுதாசியில் எழுதச் சொல்லி, அதை அவர் வாசிக்க வாசிக்க, கடுதாசி வெற்றுக் கடுதாசி யானதைக் கண்டு அதிசயித்துத் தன் பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டனவென்று உறுதியாய் எண்ணினான்.


பாவசங்கீர்த்தனத்தை நாம் சரியாய்ச் செய்வதினால நமக்குண்டாகும் நன்மையை நாம் நன்றாய் யோசித்துக் கண்டுணாரக்கடவோம். ஐயோ. நமக்குள்ளாக எத்தனையோ பேர், தம்முடைய ஆத்துமத்தைச் சரியாய்ச் சோதிக்காமலும். மனஸ்தாபமில்லாமலும், பிரதிக்கினையில்லாமலும் சரியாய் வெளிப்படுத்தாமலும், கள்ளப் பாவசங்கீர்த்தனம் பண்ணித் தேவத் துரோகம் கட்டிக்கொள்ளுகிறோம். அதற்கு விரோதமாய் நல்ல பாவசங்கீர்த்தனத்தால் நமது ஆத்துமங்களைக் கழுவி சேசுநாதருடைய திரு இரத்தப் பலன்களை அடையப் பிரயாசைப்படக்கடவோம்


செபம்


எஸ்பாஞா தேசத்தின் ஆச்சரியத்துக்குரிய ஜெயவீரரே, அவிசுவாசிகளின் பயங்கரமே, இத்தாலியாவின் தீபமே, பதுவா பட்டணத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷமே, சர்வேசுரன் எங்களுக்குக் கொடுத்திருக்கும் சீவியகாலத்தை நாங்கள் உத்தம விதமாய்ப் பிரயோகித்துத் தபசின் நல்ல கனிகளை நாங்கள் பெறுவிக்கும் வரம் எங்களுக்கு அடைந்தருள தயை செய்யும். ஆமென்.


நற்கிரியை: நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது. 

மனவல்லயச் செபம்: பாவிகளுக்கு அடைக்கலமான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Devotion to St. Antony (Day 22)

 இருபத்திரண்டாம் நாள்


ரிமீனி (Rimini) பட்டணத்தில் நடந்த நிகழ்ச்சிகள்


சேசு கிறிஸ்துநாதர் தமது மிகவும் பிரமாணிக்கமுள்ள ஊழியரான அந்தோனியாருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைப் புத்தியில்லாத அற்ப சிருஷ்டிகளைக்கொண்டு மற்ற மனிதருக்கு முன்பாக வெளிப்படுத்தி அவர்களுக்குப் புத்தி படிப்பித்து மனந்திரும்பும் படி செய்யச் சித்தமானார். எப்படியென்றால், பிரிவினைக்காரர் பெருமளவு இருந்த ரிமினி பட்டணத்துக்கு அர்ச். அந்தோனியார் சென்று அவர்களை மனந்திருப்புவதற்கு வேண்டிய பிரயத்தனமெல்லாம் செய்தும் அவர்கள் கல்நெஞ்சராய்த் தமது பிரசங்கங்களை முதலாய்க் கேட்க மனமில்லாமல் வராதிருக்கிறதைக் கண்டு, அர்ச்சியசிஷ்டவர் சர்வேசுரனை நோக்கி மன்றாடி. அபரிமிதமான கண்ணீர் சொரிந்து, இஸ்பிரீத்துசாந்துவினால் ஏவப்பட்டு, சுற்றி நின்றவர்களை நோக்கிப் புத்தியுள்ள மனிதருக்குத் தேவ வாக்கியங்களைக் கேட்க 

மனமில்லாதிருந்ததால் புத்திரில்லாத அற்பப் பிராணிகளுக்குச் சர்வேசுரனுடைய மகத்துவத்தை வெளிப்படுத்தப் போகிறதாகச் சொல்லி கடலோரம் சென்றார். அவர் அவ்விடத்தில் செய்யப்போவதென்னவென்று அறிய ஆசையினால் அநேகர் அவரைத் தூரத்திற் பின் சென்றார்கள். அவர் கடலோரம் சேர்ந்தபோது மீன்களெல்லாவற்றையுந் தமது பிரசங்கம் கேட்க வரவழைத்தார். உடனே மீன்களெல்லாம் சிறிதும் பெரிதுமாய் கரையோரம் வந்து சின்ன மீன்கள் வரிசை வரிசையாய் மணலோரத்திலும், அவைகளுக்குப் பின்னால் நடுத்தரமான மீன்களும், கடைசியில் பெரிய மீன்களும் வரிசைக் கிரமமாயிருந்து தலையெடுத்து அவர் பக்கமாய் வெகு கவனத்தோடு பார்த்துக்கொண்டிருந்தன. அப்போது அந்தோனியார் அவைகளுக்குப் பிரசங்கம் பண்ணினார். இந்த ஆச்சரியத்தைக் கண்ட பிரிவினைக்காரர் அர்ச்சியசிஷ்ட வருடைய பாதத்தில் விழுந்து மன்றாடவே அவர் அவர்களுக்கு வெகு உருக்கமாய்ப் பிரசங்கம் பண்ணி அவர்கள் தப்பறைகளையும் துர்நடத்தையையும் எடுத்துக்காட்ட அவர்களில் அநேகர் மனந்திரும்பினார்கள். பிறகு அவர் மீன்களை ஆசீர்வதித்து அனுப்பிவிட்டு ரிமினி பட்டணத்தில் சில நாள் தங்கி எல்லோரையும் வேத சத்தியங்களில் உறுதிப்படுத்தினார்.


ஆனாலும் மனந்திரும்பாத சில கொடிய பாவிகள் அவைரப் பழிவாங்கி அவரைக் கொல்ல நினைத்து அன்பு காண்பிப்பவர்களைப் போல அவரை விருந்துக்கு அழைத்து விஷங்கலந்த பதார்த்தங்களை அவருக்கு முன்பாக வைத்து அவைகளைச் சாப்படும்படி அவரைக் கேட்டார்கள். ஞான திருஷ்டியால் அவர்களுடைய மோசக் கருத்தை அறிந்த அவர் அவர்கள் மோசக் கருத்தை வெளிப்படுத்தி, அவர்கள் செய்தது அக்கிரமமென்று அவர்களுக்குச் சொன்னபோது "விஷத்தையுண்ட போதிலும், அதனால் அவர்களுக்கு யாதொரு தீங்கும் நேராது" என்று சேசுநாதர் தமது அப்போஸ்தலருக்கு சொன்னதில்லையோ? அதன் உண்மையைப் பரிட்சை பார்க்கிறதற்காகத்தான் இப்படிச் செய்தோமென்று சொன்னார்கள். உடனே நமது அர்ச்சியசிஷ்டவர் ஆண்டவரை நோக்கி வேண்டிக்கொண்டு, அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: 'நீங்கள் கேட்கிற பிரகாரம் நான் செய்யப் போகிறேன். சுவாமியைச் சோதிப்பதற்காக அல்ல, ஆனால் உங்களுடைய இரக்ஷணியத்தையும், திருச்சபையின் மகிமையையும் நான் எவ்வளவு ஆசிக்கிறேன் என்றால் அதற்காக எதுவும் செய்யத் துணிந்திருக்கிறேன் என்று காண்பிக்கிறதற்காகவே நீங்கள் கேட்ட பிரகாரஞ் செய்யப் போகிறேன் என்று சொல்லி, விஷங்கலந்த பதார்த்தத்தைக் கையிலெடுத்து சிலுவை அடையாளம் வரைந்து அவரைக் கொல்ல நினைத்தவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்க அதைச் சாப்பிட்டார். ஆனால் அவருக்குக் கெடுதியொன்றும் உண்டானதில்லை. அதற்கு விரோதமாய் வர அவரைக் கொல்லத் தேடினவர்களெல்லோரும் மனந் பது திரும்பினார்கள். இந்தப் பிரகாரமே வேறநேக சமயங்களிலும் அவரைக் கொல்லத் தேடினவர்கள் முயற்சி வியர்த்தமாய்ப் போய் நன்மையே விளைந்தது.


நமது சீவியக்காலத்தில் உண்டாகும் இக்கட்டுகளால் நமக்கு அதைரியம் உண்டாகும் போது அர்ச் அந்தோனியாரை நினைத்து அவருடைய பொறுமை சாந்தகுணத்தைக் கண்டு ஆறுதலடையக்கடவோம்.


செபம்


புத்தியுள்ள மனிதர் உமது அருமையான பிரசங்கங்களைக் கேட்க மனமிராதிருந்தபோது, சர்வேசுரனுடைய ஏவுதலாற் கடலின் மச்சங்களுக்குப் பிரசங்கம் பண்ணின அர்ச் அந்தோனியாரே! எங்கள் புத்தி, மனது, நினைவு இவைகளைச் சர்வேசுரனுடைய சித்தத்துக்கு எப்போதும் கீழ்ப்படுத்தி நடந்து நித்திய மோட்சம் இராச்சியஞ் சேரக் கிருபை அடைந்தருளும். ஆமென்.


நற்கிரியை: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்காகப் பூசை செய்து வைக்கிறது.


மனவல்வயச் செபம்: புதுமைகளால் பிறந்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

Devotion to St. Anthony (Day 21) in Tamil

 அர்ச். அந்தோனியார் வணக்கமாதம்

இருபத்தோராம் நாள்


உரோமாஞா நாட்டில் நடந்த நிகழ்ச்சிகள்


சங்கத்தில் சபை அதி சிரேஷ்டரைத் தெரிந்துகொண்டு, அர்ச். பிரான்சீஸ்குவுக்கு அர்ச்சியசிஷ்ட பட்டங் கொடுக்கவேண்டுமென்று எல்லோரும் விண்ணப்பம் செய்துகொண்ட பிறகு அர்ச். அந்தோனியார் உரோமாஞா விலுள்ள அர்ச். பிரான்சீஸ்கு சபை மடங்களுக்குச் சிரேஷ்டராக நியமனம் பெற்றார். அப்போது அவருக்கு முப்பத்திரண்டு பிராயம் நடந்து வந்தது.

மரணமட்டுங் கீழ்ப்படிந்த சேசுகிறீஸ்து நாதரைத் தமது உன்னத மாதிரியாகத் தெரிந்துகொண்டிருந்த அந்தோனியார், சனங்களை மனந்திருப்ப வெகு ஆவல் கொண்டவரானாலும், பெரியோர்கள் கட்டளைக்குச் சந்தோஷமான மனதோடு கீழ்ப்படிந்து தமது அதிகாரத்துக்கு உட்பட்ட மடங்களைச் சந்தித்து விசாரிக்கத் தொடங்கினார். உரோமாஞா நாட்டிலுள்ள மடங்களுக்கு அநேக வருஷகாலம் சிரேஷ்டராக இருந்து அம்மடங்களை அடிக்கடி சந்தித்து வெகு பக்தி விமரிசையோடும் அன்போடும் சந்நியாசிகளை விசாரித்து தமது உத்தம மாதிரியினாலும், சாந்த குணத்தினாலும் எல்லோரும் புண்ணிய வழியில் நடப்பதற்கு ஏவி வந்தார். தமது உத்தியோகத்தினுடைய கடமைகளை நிறைவேற்றின பிறகு ஆத்துமங்களை இரட்சிக்கிற வேலையை விடா முயற்சியோடு செய்யத் துவக்கினார். பலவிடங்களைச் சந்தித்து, பிரிவினைக்காரர் அநேகரை மனந்திருப்பி, எளியவர்களை வலியவர்களுடைய கொடுமையினின்று விடுவித்து, பகையாளிகளைச் சமாதானப்படுத்திப் பலவித நன்மை உபாகாரங்களைச் செய்து வந்தார்.

ஜெமோனா (Gemona) பட்டணத்து மடம் கட்டும்போது அந்தோனியார் வேலையாட்களோடு தாமும் சேர்ந்து வேலை செய்து கொண்டு வருகையில், அவ்வழியாய் ஒருவன் வெற்று வண்டியொன்று ஓட்டிப்போகக் கண்டு, அவனிடம் போய் கற்கள் கொண்டு வருகிறதற்காக கொஞ்ச நேரத்துக்கு வண்டி வேண்டுமென்று கேட்டார். அவனுக்கோ வண்டி கொடுத்துதவ மனதில்லாதவனாய் வண்டியிற் படுத்திருந்த ஒருவனை அவருக்குக் காண்பித்து மரித்தவன் ஒருவனை ஏற்றிப்போகிறேனென்று சொன்னான். அதன் பேரில் அந்தோனியார் அவனை விட்டுப் போய்விட்டார். வண்டிக்காரன் வண்டியைக் கொஞ்சந்தூரம் ஓட்டிப்போய் நடந்த சங்கதியை வண்டியில் தூங்கிக்கொண்டிருந்த தன் மகனுக்குச் சொல்லவேண்டுமென்று அவனைத் தட்டி எழுப்ப, அவன் மெய்யாகவே செத்தப் பிரேதமாக இருக்கிறதைக்கண்டு அழுது புலம்பி செத்தப் பிரேதத்தைக் கொண்டுவந்து அந்தோனியார் பாதத்தில் கிடத்தி, தானும் அவருடைய பாதத்தில் விழுந்து அவர் தன்மேல் இரக்கம் வைக்க வேண்டும் என்று அவரைக் கெஞ்சி மன்றாடினான். அப்போது அந்தோனியாருக்கு மனதிளகி செத்தவனை உயிர்ப்பித்து அவனுடைய தகப்பனிடத்தில் ஒப்புவித்து நல்ல புத்திமதி சொல்லி அனுப்பினார்.

நாம் புண்ணிய வழியில் நடக்க ஆசைப்பட்ட போதிலும் நமது ஆத்துமத்தை மாசுப்படுத்தும் அற்பப் பாவங்களை நாம் கொஞ்சங் கூடச் சட்டைபண்ணாமல் நடந்து வருகிறோம். செபத்தினாலும், தர்மத்தினாலும், நற்கிரியைகளினாலும் நமது அற்பக் குற்றங்களைப் பரிகரிக்கப் பிரியாசப்படக்கடவோம். உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுடைய உதவியைக் கேட்போம். அவர்கள் வேதனை குறைய வேண்டிக் கொள்ளக்கடவோம்.


செபம்

மகா வல்லமையுள்ள எங்களுடைய சகல அவசரங்களிலும் எங்களுக்கு நீர் உதவி புரிய உம்மை மன்றாடுகிறோம். எங்கள் கஸ்திகளிலும், வியாதிகளிலும், இக்கட்டுகளிலும் ஆறுதலும் துணையுமாயிருந்து, இவ்வுலகில் எங்களுக்குப் பசாசினாலும் துர்மார்க்கராலும் உண்டாக விருக்கிற தின்மைகளை அகற்றி எங்களை மோட்ச இராச்சியம் சேர்த்தருள உம்மை மன்றாடுகிறோம். ஆமென்


நற்கிரியை : உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்காகப் பூசை செய்துவைக்கிறது.

மனவல்லயச் செபம்: கீழ்ப்படிதலின் கண்ணாடியான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்,


St. Anthony Devotion (Day 20) in Tamil

 இருபதாம் நாள்


உரோமாபுரியில் நடந்த நிகழ்ச்சிகள்


இஸ்பிரீத்துசாந்துவினால் ஏவப்பட்ட அர்ச்சியசிஷ்ட பிரான்சீஸ்கு சபையின் ஒழுங்குகளை அங்கீகரித்த 3-ம் ஒனோரியுஸ் என்னும் பாப்பானவர் அந்த ஒழுங்குகளை தாழ்ச்சியுடன் அனுசரித்துவந்த அர்ச். அந்தோனியாரை உரோமாபுரியில் கண்ட பிறகு மரித்தார். அவருக்குப் பிற்பாடு அர்ச். பிரான்சீஸ்குடையவும், அர்ச். சாமிநாதருடையவும் உற்ற சிநேகிதரான யுகோலின் (Hugolin) என்னும் கர்தினால் பாப்பானவராகத் தெரிந்துகொள்ளப்பட்டு 9-ம் கிறகோரியார் என்னும் பெயர் பூண்டு திருச்சபைக்குத் தலைவரானார். ஏற்கனவே அவர் பாப்பானவர் பட்டந்தரிக்கப்போவதை அர்ச். பிரான்சீஸ்கு என்பவர் அவருக்குத் தீர்க்கதரிசனமாய் அறிவித்திருந்தார். அர்ச். அந்தோனியாருடைய மகிமையும், கீர்த்தியும் அவர் பிரிவினைக்காரரை வென்று அவர்களுக்குப் பயங்கரத்தை வருவித்து அவர்களுடைய கர்வத்தை அடக்கும் சம்மட்டியென்பதும் எங்கே பார்த்தாலும் பரவியிருந்த படியால் அர்ச். பாப்பானவர் உரோமாபுரியில் பிரசங்கம் பண்ணும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். படித்தவர் களுக்கும், படிக்காதவர்களுக்கும், பிரபுக்களுக்கும், எளியவர் களுக்கும், பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் தகுந்த வண்ணம் அர்ச்சியசிஷ்டவர் பிரசங்கம் பண்ணினபடியால் அவருடைய கல்வித் திறமையையும், வாய்ச்சாலகத்தையும், புத்தி சாதுரியத்தையும் கண்டு ஆச்சரியப்படாதவர் ஒருவருமில்லை. ஆனதால் உரோமாபுரி சனங்களெல்லாரும் புது மனிதரானதுபோல் தங்கள் பக்தியினாலும், விசுவாசத்தினாலும், பக்தி ஒறுத்தல் கிருத்தியங்களினாலும் அக்காலத்தில் விளங்கி வந்தார்களென்று சொல்லலாம்.

அர்ச். பாப்பானவர் முதல் சகல கர்தினால்மார்களும், மேற்றிராணிமார்களும், குருப்பிரசாதிகளும், அந்தோனியாருடைய பிரசங்கங்களைக் கேட்க வெகு ஆவவோடு போவார்கள். அவர் வேத வாக்கியங்களை எவ்வளவு தெளிவாய் வியாக்கியானம் பண்ணி அடிக்கடி அவைகளைப் பிரயோகித்து வந்தார் என்றால், அரிசி, பாப்பானவர் ஆச்சரியமிகுந்து 'பழைய புதிய ஏற்பாடுகளின் பெட்டகம்' என்று அவரை அழைப்பார். ஏனெனில், பழைய ஏற்பாடு புது ஏற்பாடு முழுமையுமே அர்ச்சியசிஷ்டவருடைய ஞாபகத்தில் பதிந்திருந்தது.

பாஸ்கா  நாள் அடுத்து வந்த போது பரிபூரணப் பலனடைய நாலாபக்கத்துச் சனங்களும், பல சாதியாரும் பல தேசத்தாரும் திரண்டு உரோமை நகர் சேர்ந்த சமயத்தில் அந்தோனியார் பரிபூரணப்பலனைப் பற்றி பாப்பானவருடைய கட்டளை மின்மேல் பிரசங்கித்தார். அப்போது அர்ச். பாப்பானவரும், கர்தினால்மார்களும், மேற்றிராணிமார்களும், குருப்பிர சாதிகளும் திரண்டு வர, எண்ணிக்கையில்லாத சனங்கள். பல மொழிக்காரர், இவர்களுக்கு முன்பாக அவர் பிரசங்கம் பண்ணினதை ஒவ்வொருவருந் தங்கள் தங்கள் மொழிகளில் அவர் பேசினதுபோலத் தெளிவாய்க் கண்டுபிடித்தார்கள். இஸ்பிரீத்துசாந்துவை அடைந்தபின் அப்போஸ்தலர் காலத்தில் நடந்த அற்புதமே அப்போதும் நடந்ததென்று எண்ணி அர்ச். பாப்பானவர் சொன்னதென்னவெனில்: மெய்யாகவே, இவர் உடன்படிக்கையின் பெட்டகமும், வேத வாக்கியத்தின் திரவியமுமாயிருக்கிறார்" என்றார். அந்தோனியாரை எப்போதும் உரோமாபுரியிலேயே நிறுத்திக்கொள்ள அர்ச். பாப்பானவருக்கும் மற்றவர்களுக்கும் இஷ்டமிருந்தபோதிலும், அந்தோனியார் தாழ்ச்சி மிகுதியினால் அப்பேர்ப்பட்ட மகிமையிலிருந்து தப்பித்துக் கொள்ள, சிரேஷ்டர்களுடைய அனுமதியின்பேரில் சபைப் பொதுச் சங்கங் கூடவேண்டிய முதன்மையான சம்மனசுகளின் மாதா மடத்துக்குப் (Notre-Dame des Anges) போனார்.

உரோமைபுரியிலும், பிரஞ்சு தேசத்திலும், இத்தாலியா தேசத்திலும் இன்னும் மற்ற இடங்களிலும் அவ்வளவு பேர் பெற்று விளங்கின போதகரான அந்தோனியாரே சொல்வதைக் கேளுங்கள். 'நமதாண்டவரான சேசு கிறீஸ்துநாதருடைய வாக்கியத்தை நன்றாய்க் கண்டுபிடித்து அதைக் கேட்பதில் பிரியங் கொள்ளுகிறதுக்கு உனக்கு ஆசையுண்டோ? அவருடைய சீவியத்துக்கு ஒத்த பிரகாரம் உன் சீவியத்தையும் ஒழுங்குபடுத்தப் பிரயாசைப்படு' என்றார்.

பிரசங்கம் கேட்கும்போதும், ஞான வாசகங்கள் வாசிக்கும்போதும் நம்முடைய ஆத்தும நன்மையை நினைத்துக் கொள்ளக்கடவோம். பிரசங்கங்களில், ஞான வாசகங்களில் சொல்லப்படுவது மற்றவர்களுக்குத் தான் என்று நாம் எண்ணாமல், நமக்குத்தானே என்று நிச்சயித்து நாம் கேட்கும் பிரசங்கங்களினாலும் வாசிக்கும் ஞான வாசகங்களினாலும் நமது ஆத்துமங்களுக்கு ஞானப் பிரயோசனமுண்டாகும்படி அர்ச். அந்தோனியாரைப் பிரார்த்திக்கக்கடவோம்.


செபம்

சேசுநாதருடைய பிரிய நேசரான அர்ச். அந்தோனியாரே, துர்க்குணங்களை ஒழித்துப் புண்ணியங்கள் வளரும்படி செய்தவரே, என் சீவிய நடத்தையை உமது அடைக்கலத்தில் வைக்கிறேன். நான் சாவான பாவத்தில் ஒருபோதும் விழாமல் நீரே எனக்குப் புண்ணிய வழி காட்டியருளும். என் வார்த்தைகளினாலும், நடத்தையினாலும் பிறருடைய ஆத்தும இரக்ஷணியத்தை நான் தேடும்படி செய்தருளும். ஆமென்.


நற்கிரியை: வேதத்தை அசட்டைப்பண்ணுகிறவர் களுக்குப் புத்தி சொல்லுகிறது.

மனவல்லயச் செபம்: பாவிகளை மனந்திருப்பினவரான அர்ச் அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Devotion to St. Anthony (day 19) - அர்ச். அந்தோனியார் வணக்கமாதம்

அர்ச். அந்தோனியார் வணக்கமாதம் 
பத்தொன்பதாம் நாள் 


அர்ச். தேவமாதா தரிசனையானது. 



அர்ச் அந்தோனியார் செய்துவந்த பிரசங்கங்களினாலும், புதுமைகளினாலும் அநேகமான பாவிகளும் பிரிவினைக்காரரும் மனந்திரும்பித் தன்னுடைய கைகளின்று தப்பித்துப் போகிறதைக்கண்ட பசாசு அவர்மேல் கோபங்கொண்டு அவரைக் கொலை செய்யத் தேடினது. 
அர்ச்சியசிஷ்டவர் பிரிவ் கெபிகளில் தங்கி ஏகாந்தத்திலிருந்து, தன் சரீரத்தை வருத்திக் கடின தபசு செய்து, செபத்திலுந் தியானத்திலுங் காலத்தைச் செலவழித்து வந்தார். அப்போது ஒரு நாள் களைத்து அவர் இளைப்பாறக் கட்டிலின்மேற் படுத்தவுடனே பசாசு குரூர முகத்தோடு அவருக்கு முன்பாகத் தோன்றி அவர்மேல் பாய்ந்து அவருடைய கழுத்தைப் பிடித்து நெருக்கி அவர் உயிரைப் போக்கத் தேடினது. அர்ச்சியசிஷ்டவர் வாய் திறக்க மாட்டாமலும், மூச்சுவிட மாட்டாமலுமிருக்க வெகு பிரயாசையோடு திணரிக் கொண்டு "ஓ! மகிமை பொருந்திய ஆண்டவளே (0 golriosa Domina) என்று சொன்ன மாத்திரத்திலே மகா ஒளி பொருந்திய பிரகாசத்தோடு சம்மனசுகள் சூழ மோக்ஷ இராக்கினி தமது திருக்குமாரனைக் கரங்களிலேந்திக்கொண்டு அவர் பக்கத்தில் நின்று, பசாசைக் கோப முகத்தோடு பார்த்து ஓடிப்போகும்படி கட்டளையிடவே, பசாசு ஓடி நரக பாதாளத்தில் விழுந்தது. அந்தோனியார் ஆண்டவளுடைய பாதத்தில் முழங்காலிலிருந்து "நல்ல ஆதரவின் மாதாவே" (Notre-Dame de Bon Secours) என்னும் நாமத்தால் அவளை வாழ்த்தி அவளுக்கு நன்றியறிதலான தோத்திரங்கள் செலுத்தினார். 
இந்தப் புதுமையை ஞாபகப்படுத்த அந்தக் கெபியில் மாதாவின் சுரூபம் ஒன்று பசாசுகளை மிரட்ட வாய் திறந்த பிரகாரமும், அவைகளை ஓட்டத் தமது கையிலிருந்த செங்கோலால் சைகை" காட்டுகிற பிரகாரமும் செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சுரூபம் வைக்கப்பட்ட பீடத்தண்டை அர்ச்சியசிஷ்டவர் காலத்திலும், விசேஷமாய் அவர் மரித்த பிறகும் அநேகமாயிரம் சனங்கள் போய் மாதாவை நோக்கி வேண்டிக்கொண்டு தங்களுக்கு வேண்டிய மன்றாட்டுகளைக் கேட்பார்கள். பிரஞ்சு தேசத்தில் 18-ம் நூற்றாண்டின் கடைசியில் கொடிய வேத கலாபம் நேரிட்டபோது வேத விரோதிகள் அர்ச். பிரான்சீஸ்கு சபைச் சந்நியாசிகளைத் துரத்திவிட்டு மடத்தை இடித்துப்போட்டு, கெபிகளை விற்றுவிட்டபோதிலும், நல்லாதரவு மாதாவினுடையவும், அர்ச் அந்தோனியாருடை யவும் ஞாபகமும், வணக்கமும் நில்லாது நிலைநின்று, சனங்கள் இராக்காலத்தில் அவ்விடத்துக்குப் போய் வேண்டிக்கொண்டு, ஊற்றின் தண்ணீரெடுத்து வந்து தங்களுக்கு அந்த மாதாவின் மட்டிலும், புதுமை விளங்குகிறவரான அந்தோனியார் மட்டிலும் உண்டான பக்தி நம்பிக்கையை விடாது காட்டி வந்தார்கள். 
1874-ம் வருஷம் அந்தோனியார் பேரில் பக்தியுள்ள சில புண்ணியவான்கள் உதவியைக் கொண்டு அர்ச். பிரான்சீஸ்கு சபைச் சந்நியாசிகள் அத்திரு யாத்திரை ஸ்தலத்தைத் திரும்பவும் அடைந்து ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி துல் (Tulle) நகரத்து மேற்றிராணியார் அதை மந்திரித்து அவர்கள் கைவசப்படுத்தினார். பிறகு புதிதாய் மடங் கட்டப்பட்டது. கோயில் புதுப்பிக்கப்பட்டது. வியாதிக்காரர் சாலைகளும், அநாதப் பிள்ளைகள் மடங்களும் ஏற்பட்டன. இன்னும் வேறே அநேக நூதன ஏற்பாடுகளும் உண்டாயின. பூலோகமெங்கும் அர்ச் அந்தோனியாரைக் கொண்டு சர்வேசுரன் செய்துவரும் நன்மைகளுக்காகவும் அற்புதங்களுக்காகவும் நாம் அவருக்கு நன்றியறிந்த தோத்திரங்கள் செலுத்தி இனிமேலும் அப்படியே செய்து வரும்படி மன்றாட வேண்டியது. அந்தோனியாரைட் போலவே நாமும் நமக்குப் பசாசினால் வரும் ஆபத்துக்களிலும் சரி, வேறே எந்தக் கஷ்ட துன்பங்களிலுஞ் சரி நல்லாதரவின் மாதாவை, உம்முடைய தாயாரை, வேண்டிக் கொள்வோமேயானால் அவள் நமக்குத் தம்மைத்தானே காண்பிக்காமற்போன போதிலும் நமது மன்றாட்டுக்கு இரங்குவாளென்பதற்குச் சந்தேகமில்லை. அர்ச். பிரான்சீஸ்கு அசிசி (1181-1226) மரித்த பிறகு அந்தோனியாரை இத்தாலியா தேசம் போகச் சிரேஷ்டவர்கள் கட்டளையிட்ட மாத்திரத்தில் அவர் உடனே கீழ்ப்படிந்து போகிறார். உரோமாபுரியையும், அஸ்ஸீஸ் பட்டணத்தையும் நோக்கி கால்நடையாக வழியில் பிச்சை இரந்து சாப்பிட்டு தேவ சங்கீதங்களைப் பாடிக்கொண்டு செல்லுகிறார். 
ஓ! அவருடைய கீழ்ப்படிதலானது எவ்வளவோ ஆச்சரியத்துக் கூரியது! அதைக் கண்டு அதிசயித்து நாமும் உலக காரியங்களின்மட்டில் பற்றுதல் வைக்காமல் சர்வேசுரனுடைய சித்தத்துக்கு மாத்திரம் சந்தோஷமாய்க் கீழ்ப்படிந்து நடக்கக்கடவோம். 

  செபம் 
 ஓ! அர்ச். அந்தோனியாரே, சேசுவின் மாதாவுடைய பிரமாணிக்கமான ஊழியரே, நல்லாதரவு மாதாவினிடத்தில் எனக்காகப் பரிந்து பேசி, அவள் என்மட்டில் தயவுகூர்ந்து என் பாவங்களுக்குப் பொறுத்தல் அடையவும், நான் புண்ணிய நெறி நடக்க வரப்பிரசாதந் தந்தருளவும் எனக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென். 

நற்கிரியை: அநாதைப் பிள்ளையை ஆதரிக்கிறது. 
மனவல்லயச் செபம்: பசாசுகளுக்குப் பயங்கரமான அர்ச் அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாழன், 24 பிப்ரவரி, 2022

அர்ச். சாமிநாதரின் ஜீவிய சரித்திரம் : அத்தியாயம் 46


பார்த்தோ நகர மேற்றிராணியாரைப் பின்பற்றி, மொதேனா நகரின் மேற்றிராணியாரான வந்.வில்லியம் ஆண்டகையும் (பிற்காலத்தில் சபினா நகரின் கர்தினாலாக பொறுப்பேற்றார்) சாமிநாதரை அணுகி, தம்மையும் அவருடைய சபையின் சகோதரராக ஏற்கும்படி விண்ணப்பித்தார். உடனே அர்ச். சாமிநாதர், அவரை தமது சபையில் ஏற்றுக்கொண்டு, தந்தைக்குரிய பொறுப்புகளை அவருக்கு அளித்தார். தமது ஜீவியகாலம் முழுவதும் வந். வில்லியம் ஆண்டகை அர்ச்.சாமிநாத சபைத் துறவியாகவே புண்ணியத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து, நன்மரணம் அடைந்தார். ஒரு சமயம், ஒரு பங்கு குருவானவர் பிரான்சு நாட்டிலிருந்து ரோம் நகரத்துக்கு வந்தார். வரும் வழியில், மொதேனா நகரத்தில், அவர் அர்ச். சாமிநாதர் பிரசங்கித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். பிரசங்கம் முடிந்ததும், அவர் சாமிநாதரைத் தனியாக சந்தித்து, தனக்கு வரும் பலவிதமான சோதனைகளைப் பற்றியும், அவற்றில் முக்கியமாக சரீரத்துக்கு அடுத்த பாவசோதனைகளைத் தம்மால் மேற்கொள்ள முடியாத நிலைமையைப் பற்றியும் கூறினார். இச்சூழ்நிலையில், தனது ஆத்துமத்தை நித்தியத்திற்கும் இழக்க நேரிடுமோ என்று அஞ்சினார். 

இதனால், மற்ற ஞானமேய்ப்பனுக்குரிய நல்ல அலுவல்களை தாம் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் கூறினார். உடனே சர்வேசுரனின் பரிசுத்த மனிதரான அர்ச். சாமிநாதர், அவரிடம், "சர்வேசுரனுடைய அளவற்ற இரக்கத்தின் மேல் முழு நம்பிக்கையுடன் உங்களுடைய பங்குக்குச் செல்லுங்கள். அங்கு உங்களுடைய ஞானமேய்ப்பனுக்குரிய நல்ல அலுவல்களை தொடர்ந்து நிறைவேற்றி வாருங்கள். நானே உங்களுக்குத் தேவையான இச்சையடக்கம் என்னும் புண்ணியத்தை சர்வேசுரனிடம் மன்றாடிப் பெற்றுத் தருவேன்" என்று கூறினார். அவரும் அர்ச்சிஷ்டவருடைய வார்த்தையை முழுதும் நம்பியவராக, திருப்தியுடன் சென்றார். அர்ச். சாமிநாதர் இரவுபகலாக தேவாலயத்தில் திவ்ய நற்கருணைப் பேழையின் முன்பாக இக்கருத்துக்காக ஜெபத்திலும் தபசிலும் ஈடுபட்டு வந்தார். ஆண்டவரும் அவருடைய மன்றாட்டுக்கு செவிசாய்த்தார். அதன்விளைவாக, இதுவரைக்கும், மாமிசத்துக்கு எதிரான பாவசோதனைகளை எதிர்ப்பதில் மிகவும் பலவீனராக இருந்த இக்குருவானவர் சிறிது காலத்திலேயே, இச்சையடக்கம் நிறைந்தவராக , நிறைகற்பு என்னும் புண்ணியத்தை நுட்பமாக அனுசரித்து, தன் சரீரத்தை ஒடுக்கி அநேக நற்புண்ணியங்களை அனுசரிக்கலானார். உத்தம ஞானமேய்ப்பராக ஜீவித்தார்.

லோம்பார்டி என்ற நகரில் ஒரு சமயம் பலருடைய விண்ணப்பத்திற்கு இசைந்து, அர்ச். சாமிநாதர், அநியாய வட்டி வாங்கி அநீத செல்வத்தைப் பெருக்கி வந்த ஒரு சட்ட ஆலோசகனைக் காண வந்தார். அவன் சாகும் தருவாயில் இருந்தான். அவனுக்கு அவஸ்தைக் கொடுப்பதற்காக ஒரு குருவானவர் ஏற்கனவே அங்கு இருந்தார். அவர் முன்னிலையில், அர்ச். சாமிநாதர், அவனிடம், அவன் இதுவரை வசூலித்திருந்த அநியாய வட்டிகளை அவரவரிடம் திருப்பிக் கொடுக்கும்படி கூறினார். அதற்கு அவன் இணங்கவில்லை. தனது பிள்ளைகள் அதனால் தரித்திரநிலையை அடைந்துவிடுவார்கள் என்று கூறி, அவன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. உடனே அங்கிருந்த குருவானவருடன் அர்ச்.சாமிநாதர் அங்கிருந்து சென்று விட்டார். அவனுக்கு திவ்ய நன்மையும் கொடுக்காமல் சென்று விட்டார். அவனுடன் இருந்த மற்றவர்கள், அவன் திவ்ய நன்மை வாங்காமல் இறந்தால் அவனுக்கு கிறிஸ்துவ அடக்கம் கிடையாது என்று கூறினர். உடனே அவன் அங்கு கூடியிருந்தவர்களை ஏமாற்றும்படியாக, இறுதியாக சாகுமுன் உட்கொள்வதற்காக ஒரு குருவானவரை வரவழைத்து திவ்ய நன்மை உட்கொண்டான். உடனே, "ஐயோ, நான் முழுவதும் எரிகிறேனே ! நரகமே எனது வாய்க்குள் இறங்கிவிட்டதே ! இதோ நாம் எல்லாரும் எரிந்து கொண்டிருக்கிறோமே! இதோ , பாருங்கள் ! இங்கு எல்லாம் நெருப்பாக இருக்கிறது!'' என்று அலறினான். இவ்வாறு அலறிக்கொண்டே அவன் அவலமாய் மரித்தான். இதேபோல வேறு ஒருநாள், ஒரு அநீதவட்டிக்காரன், தான் தேவப்பிரசாத அந்தஸ்தில் இருப்பதாக நடித்துக் கொண்டே, அர்ச். சாமிநாதரிடம் வந்து திவ்ய நன்மை உட்கொண்டான். அப்பொழுது, அவனுடைய நாக்கில் ஒரு நெருப்புக்கரி வைத்தது போல துடிதுடித்தான். தனது பாவங்களுக்காக உடனே மனஸ்தாபத்தால் நிறைந்தவனாக அர்ச்சிஷ்டவரிடம் மன்னிப்புக் கேட்டான். அதன்பிறகு தான் வாங்கிய அநியாய வட்டித் தொகையை அவரவரிடம் திருப்பித் தந்தான். இறுதிவரை திருந்திய நல்ல கத்தோலிக்கனாக ஜீவித்தான்.

St. Anthony Devotion (Day 18) in Tamil

 பதினெட்டாம் நாள்


வெங்காயத்தின் புதுமை


அர்ச். அந்தோனியார் சபையின் ஒழுங்குப் பிரகாரம் வயல்களின் லீலிப் புஷ்பங்களை உடுத்தி வானத்தின் பறவைகளைப் போஷித்து வரும் வல்லமை பொருந்திய சர்வேசுரனுடைய கிருபைகடாக்ஷத்தையே தம்முடைய மடத்துச் சவரக்ஷணைக்காக எப்போதும் நம்பியிருப்பார். அநேகாநேக சமயங்களில் மடத்தில் ஒன்றுமில்லாமலிருப்பதும் உண்டு. அப்படியே சாப்பாட்டுக்கு ஒன்றும் அகப்படாத ஒருநாள், அர்ச். அந்தோனியார் ஒரு பக்தியுள்ள ஸ்திரீயிடம் சொல்லி அவளுடைய தோட்டத்திலிருந்து ஏதாவதது மரக்கறி பதார்த்தங்கள் அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். அப்போது அந்தப் புண்ணியவதி உடனே தன்னுடைய வேலைக்காரியை அழைத்துத் தோட்டத்தில் காய் வகைகள் பறித்து மடத்துக்குக் கொண்டுபோய்க் கொடுக்கவேண்டுமென்று கட்டளை மிட்டாள். ஆனால் அச்சமயம் அசாத்தியமான மழை விடாமற் பெய்துகொண்டிருந்ததால் வேலைக்காரி சாக்குப் போக்குச் சொன்னபோது, அவசியம் கொண்டுபோகத்தான் வேண்டுமென்று எசமானி திரும்பவும் கட்டளையிட்டதால், வேலைக்காரி ஒரு பெருங் கொத்து வெங்காயமும், கிழங்கும், காய்களும் பறித்துத் தொலைவிலிருந்த மடத்துக்கு எடுத்துப் போனாள். மழை ஓயாமற் பெய்து கொண்டிருந்தபோதிலும் ஒரு துளி தண்ணீர் முதலாய் அவள் மேற்படவில்லை, அவள் திரும்பி வந்தபோது நடந்த அற்புதத்தைத் தன் எசமானி யிடத்திற் சொல்ல இருவரும் சுவாமிக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணினார்கள். அந்தப் புண்ணிய வதியின் குமாரன் ஒரு மடத்துக்குச் சிரேஷ்டராயிருந்தவர், வெகு சந்தோஷத்தோடு இந்த அற்புதத்தைப்பற்றி அடிக்கடி பேசி வருவார்.

இந்த விசேஷத்தைப் பற்றித்தான், இந்தப் புதுமையை ஞாபகப்படுத்துவதற்காகத் தான், பிரிவ் பட்டணத்தில் ஆகஸ்டு மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்காயச் சந்தை வெகு வருஷ காலமாய்க் கூடி நடந்து வருகிறதென்று அநேகர் எண்ணுகிறார்கள். அர்ச்சியசிஷ்டவருடைய சரித்திரத்தை எழுதினவர் இந்தப் புதுமையைப் பேசும்போது வேலைக்காரர், வேலைக்காரிகள் தங்கள் எசமான்களுக்குக் கீழ்ப்படிந்து அவர்கள் தங்களுக்கு இடும் கட்டளைகளை நல்ல மனதோடு நிறைவேற்றினால் அவர்களுக்கு இவ்வுலகத் திலேயே சர்வேசுரன் வெகுமதி அளிப்பாரென்று எழுதி வைத்திருக்கிறார். இந்தக் காலத்திலோ, வேலைக்காரரும் பிள்ளைகளும் எசமான்கள் பெரியவர்கள் என்கிற எண்ணமில்லாமல் இருக்கிற காலமாயிருக்கின்றது. பரலோகத்தையும் பூவோகத்தையும் படைத்த சேசுநாதசுவாமியே கீழ்ப்படிடத்த நடந்தார். ஆனதால் கீழ்ப்படிந்து நடக்கிறவர்களை கடவுள் ஆசிர்வதிப்பார்.

'காணாமற்போன பொருளைக் கண்டுபிடிக்கும்படி அர்த் அந்தோனியார் செய்கிறார்" என்பது எல்லோரும் அறிந்த காரியம். அவருக்கு இந்த வரம் எப்போது சுலாம் அளித்தாரென்றால், அவர் மடத்திலிருந்த ஒரு நவசந்தியாகி மடத்திலிருக்க மனதில்லாமல் அதை விட்டு இரகசியமா ஓடிப்போகும்போது அவர் எழுதி வைத்திருந்த பிரசங்ல பிரதிகளையும் திருடிக்கொண்டு போய்விட்டார் அந்தோனியார் அவர் ஓடிப்போனதைப்பற்றியும், மேலும் திருடினதைப் பற்றியும் கவலைப்பட்டு வேண்டிக்கொண்டார் திருடி ஓடிப்போகத் தந்திரம் பண்ணின பசாசே நவசந்நியாசியைக் கொன்றுபோடுவதாகப் பயமுறுத்தி திருடின பொருளோடு திரும்பவும் மடம் சேரக் கட்டாயப்படுத்தியதால் சந்நியாசி பயந்து மனஸ்தாபப்பட்டுத் திரும்பி வந்து அர்ச்சியசிஷ்டவருடைய பாதத்தில் விழுந்து தன்னை மடத்தினின்று தள்ளிவிடாதபடிக்கு அவரைக் கெஞ்சி மன்றாடினார். அக்காலமுதல் இக்காலம் வரைக்குங் காணாமற்போன பொருளைக் கண்டடைய அர்ச், அந்தோனியார் உதவி புரிந்து வருகிறார். 13-ம் சிங்கராயர் என்னும் அர்ச். பாப்பானவர் அர்ச். அந்தோனியார் பூலோக முழுமைக்கும் அர்ச்சியசிஷ்டவர் என்கிறார். மெய்யாகவே அந்தோனியார் எத்தேசங்களிலும் எந்தச் சாதி மனிதரிடத்திலேயும் தமது வல்லமையைக் காட்டிப் புதுமை செய்துகொண்டு வருகிறார். ஆனால் அவர் இவ்வுலகத்தில் எளியவர்களையும், தாய் தகப்பனற்ற பிள்ளைகளையும் சகலராலுங் கைவிடப்பட்டவர் களையும் விசேஷ விதமாய் நேசித்தவராதலால், இப்போதும் அவருடைய மன்றாட்டுகளைக் கேட்கும்  நாமும் விசேஷமான பிரகாரம் எளியவர்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும், சகலராலும் கைவிடப்பட்டவர்களுக்கும் நல்ல மனதோடு நம்மாலான உதவி செய்யும்படி சித்தமாயிருக்கிறார். அப்படி நாம் செய்வோமேயானால் நாம் அவரைக் கேட்கும் அனுக்கிரகத்தைத் தவறாமல் கட்டளையிடுகிறார். ஆனதால் நாம் அவருடைய சலுகையைத் தேடி நமது இரட்சணியத்துக்கும் அர்ச்சியசிஷ்டத்தனத்துக்கும் அவசியமான வரங்களை அவரிடத்தில் கேட்கக்கடவோம்.


செபம்

கவலைப்படுகிறவர்களுக்கு ஆறுதல் தருகிற அர்ச். அந்தோனியாரே, என்னைச் சுற்றிலும் வருத்தும் இக்கட்டுகளைப் பார்த்து என்னை இரக்ஷித்தருளும். அவைகளை நான் நல்ல மனதோடு சகிக்கும் கிருபை செய்யும். என் ஆபத்துக்களில் என்னை ஒருபோதும் கைவிடாமல் காப்பாற்றும். நாங்கள் எங்கள் கவலை துன்பங்களில் சுவாமிக்குப் பிரமாணிக்கமாயிருந்து நித்திய மோக்ஷானந்த ஆறுதலுக்குப் பாத்திரவான்களாகும்படி எங்களுக்காக மன்றாடியருளும். ஆமென்.


நற்கிரியை: ஒரு எளியவனுக்குச் சாப்பாடு போடுகிறது. 

மனவல்லயச் செபம்: கஸ்திப்படுகிறவர்களுக்குத் தேற்றரவான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


புதன், 23 பிப்ரவரி, 2022

St. Anthony Devotion (day 17) in Tamil

 பிரில் பட்டணத்துக் கெபிகள்


அர்ச். அந்தோனியாருடைய தாழ்ச்சியையும், புண்ணியங்களையும் அவர் செய்துவந்த அற்புதங்களையும் பசாசுகள் கண்டு கலங்கி அவருடைய உயிரை வாங்கத் தேடின சேன் ஜூனியன் (St. Junien) என்னும் ஊரில் பிரசங்கம் கேட்கவந்த திரனான சனங்களுக்குக் கோயிலில் இடமில்லாமையால் வெளியில் ஒரு மைதானத்தில் மேடைபோட்டு அம்மேடைமேல் குருப்பிரசாதிகளும் பிரபுக்களும் அந்தோனியாரைச் சுற்றி நின்றிகொண்டிருக்கும் படியான ஏற்பாடு செய்தார்கள். அர்ச்சியசிஷ்டவர் பிரசங்கம் துவக்குகிறதுக்குமுன் அதைக் கெடுக்க நினைத்திருந்த பசாசுகளின் மோசக் கருத்தை ஞான திருஷ்டியால் அறிந்து சனங்களைப் பார்த்து; பிரசங்கத்தின்போது என்ன சம்பவித்தபோதிலும் அதனால் யாதொரு கெடுதியும் நடவாதென்று அறிவித்தபிறகு பிரசங்கத்தை ஆரம்பித்தார். நடுச்சமயத்தில் மேடை அதிர்ந்து விழ அதைப்பற்றி ஒருவரும் கவனிக்கவுமில்லை, ஒருவருக்கும் சேதமும் இல்லை. அந்தோனியார் மற்றொரு உயர்ந்த ஸ்தலத்தில் ஏறி துவக்கின பிரசங்கத்தை முடித்தார். சனங்கள் அவருடைய ஞான திருஷ்டிகைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.



கடைசியில் பிரிவ் பட்டணம் வந்து சேர்ந்தார். அவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்த ஐசுவரியவான் ஒருவர் அவ்விடத்தில் அவர் ஒரு மடங் கட்டுவதற்கு வேண்டிய ஆஸ்தி வைப்பதாகச் சொன்னார். ஆனால் தனிவாசத்தை நேசித்த அர்ச்சியசிஷ்டவர் அடுத்தாற்போலத் தனித்துக் கெபிகள் இருப்பதாகக் கண்டு அங்கே அடிக்கடி போய்க் கொண்டிருப்பார். அந்தத் தனித்தவிடத்தில்தான் தம்முடைய ஆசைக்குத் தக்க அளவு செபத்திலும், தியானத்திலும், தவத்திலும், ஏகாந்தத்திலும் எப்போதும் சர்வேசுரனுடைய சமூகத்தில் காலத்தைச் செலவழித்தார். பாறையினின்று துளித்துளியாய் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தபடியால் தமது கையால் ஒரு குழி தோண்டி தண்ணீரைத் தாம் உபயோகப்படுத்தி வந்தார். "பாறையில் உன் வாசஸ்தலத்தைத் தெரிந்து கொள்" என்றாற் போல அந்தோனியார் தமது வாசஸ்தலத்தை ஸ்தாபித்தார். சேசுநாதரே அந்தப் பாறை, அவரிடத்தில் தான் உன் வாசஸ்தலமும், உன் நினைவுகளும், உன் பட்சமும் இருக்கவேண்டியது. வனாந்தரத்தில் யாக்கோபு பாறையின்மேல் தலைவைத்து நித்திரை போகையில், பரமண்டலந் திறந்து அதனின்று இறங்கின சம்மனசுகளோடு சம்பாஷணைசெய்து ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டார். அதுபோலவே சேசுநாதரிடத்தில் தன் வாசஸ்தலத்தைத் தெரிந்துகொள்ளும் ஆத்துமமும் ஆசீர்வதிக்கப்படும். அர்ச். அந்தோனியார் தமது விரலினால் பள்ளம் தோண்டி தண்ணீரை அதில் விழும்படி செய்தார். திருயாத்திரை ஸ்தலங்களில் அர்ச்சியசிஷ்டவர்களுடைய பாதத்தின் அடியிலோ, வேறெந்த அற்புத விதமாகவோ உண்டான ஊற்றின் நீரைக்கொண்டு சர்வேசுரன் அநேகம் புதுமைகளைச் செய்யத் திருவுளமானார். 13-ம் நூற்றாண்டு முதல் பிரிவ் பட்டணத்தை அடுத்த கெபியின் ஊற்றில் அநேக அற்புதங்கள் நடந்து வருகின்றன. ஞானஸ்நானத்துக்குச் சேசுநாத சுவாமி தண்ணீரைத் தெரிந்துகொண்டார். கடல் நீரின்மேல் நடந்தார். தாமே தண்ணீரால் ஞானஸ்நானம் பெறத் திருவுளமானார். கடலின் அலைகளுக்குக் கட்டளையிட்டார். உடனே அமரிக்கை உண்டானது. இக்காலத்திலும் 1858-ம் வருஷம் பிரஞ்சு தேசத்தில் லூர்துமாநகரில் மஸபியேல் கெபியில் அர்ச். தேவ மாதா பெர்நதெத்தம்மாளுக்குக் காட்சி தந்த ஸ்தலத்தில் ஏற்பட்ட ஊற்றுநீரைக்கொண்டு அவ்விடத்தில் மாத்திரமல்ல, அந்த அற்புதமான தண்ணீர் எந்தெந்தத் தேசங்களுக்குக் கொண்டு போகப்படுகின்றதோ, அவ்விடங்களிலெல்லாம் வருஷாவருஷம் நடந்து வரும் புதுமைகளுக்குக் கணக்குண்டோ?


மந்திரிக்கப்பட்ட தீர்த்தத்தை நாம் தொட்டு சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளும்போது அதனால் நமக்கு அநேகம் பலன்களுண்டு. அந்தோனியார் இத்தாலியா தேசத்தில் அநேகவிடங்களில் கிணறுகளும் ஊற்றுகளும் எடுக்கச் செய்து அத்தண்ணீரால் அநேக வியாதிஸ்தரை குணப்படுத்தினார். பிரிவ் கெபி தண்ணீருக்கு விசேஷ குணம் கட்டளையிட்டிருக்கிறார். அதனால் அநேகர் சௌக்கியப்பட்டிருக்கிறார்கள். நாமும் கூடுமானபோது நம்பிக்கையோடு அதைப் பிரயோகித்துக்கொள்ளக்கடவோம். தீர்த்தத்தினாலும், சிலுவையினாலும், மற்ற அநேக புண்ணிய முயற்சிகளாலும் நமது அற்ப குற்றங்களை நிவாரணஞ் செய்யக்கடவோம். எவ்வளவுக்கு நம்முடைய ஆத்துமம் பரிசுத்தமாயிருக்கின்றதோ, அவ்வளவுக்கு அர்ச்சியசிஷ்டவருடைய உதவியை அடையப் பாத்திரவான் களாவோம்.


செபம்


ஓ வல்லமையும் பிறசிநேகமும் உள்ளவரான அரிச் அந்தோனியாரே, பிரிவ் நகரத்துக் கெபிகளின் தண்ணீரால் ஆத்தும வியாதிகளையும் சரீர நோய்களையும் தீர்த்தீரே, வியாதியினால் பலமற்றிருக்கும் அடியேன் மேல் இரக்கமாயிரும். ஆங்காரம், கோபம், மோகம் இவை முதலானவைகளே என் தீராத வியாதி. எனக்கு ஆத்தும சரீர சுகத்தை நீர் அடைந்து அடியேன் என்றென்றைக்கும் சர்வேசுரனுக்கு ஊழியம் செய்யும்படிக்குக் கிருபை செய்தருளும் ஆமென்.


நற்கிரியை: தர்மம் செய்கிறது.,


மனவல்லயச் செபம்: புதுமைகளால் விளங்கினவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.