Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 7 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 28 - அர்ச். ஸ்தனிஸ்லாஸ் (St. Stanislaus - May 7)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐ 

 மே 0️⃣7️⃣ம் தேதி

🌹ஸ்துதியரும் மேற்றிராணியாரும் வேதசாட்சியுமான அர்ச். ஸ்தனிஸ்லாஸ் திருநாள்🌹




🌹இவர் போலநது நாட்டில், ஸெப்பானோவ் என்ற நகரில் 1030ம் வருடம் பிறந்தார். துவக்கக் கல்வியை போலந்து நாட்டில் கற்றபிறகு, பாரீஸ் நகரில் உயர்கல்வியை முடித்து, குருப்பட்டம் பெற்றார். கிராகோ நகர மேற்றிராணியார் 1072ம் வருடம் இறந்த பிறகு, அர்ச்.ஸ்தனிஸ்லாஸை ஒரு மனதாக அந்நகரின் அடுத்த மேற்றிராணியாராகத் தேர்ந்தெடுத்தனர்.  அச்சமயம் அப்பதவியை இவர் மறுத்து வந்தார்;  அப்போது பாப்பரசராக இருந்த 2ம் அலெக்சாண்டரின் நேரடிக் கட்டளை வந்தபிறகே, மேற்றிராணியார் பதவியை அர்ச்.ஸ்தனிஸ்லாஸ் ஏற்றுக் கொண்டார்.

போலந்து நாட்டின் அரசனான 2ம்போலஸ்லாசுடன் இவருக்கு ஏற்பட்ட முதல் முரண்பாடு, ஒரு நிலத்தகராறின்போது, துவங்கியது. மேற்றிராணியாரான அர்ச். ஸ்தனிஸ்லாஸ் தனது மேற்றிராசனத்திற்காக விஸ்டுலா நதியின் கரையில் லுப்லின் நகருக்கு அருகில் பியோடர் என்பவரிடமிருந்து, சிறிதளவு நிலத்தை வாங்கியிருந்தார். பியோடர் இறந்தபிறகு, அந்த நிலத்தை அவருடைய குடும்பத்தினர் அந்த நிலத்தின் மீது உரிமை கொண்டாடி வழக்கு தொடுத்தனர். இதில், அரசன், மேற்றிராணியாருக்கு எதிராக தீர்ப்பு வழங்கினான். 

இதற்குத் தேவையான சாட்சியை, அதாவது, தான் நிலத்தை வாங்கிய பியோடரையேக் கூட்டி வருவதற்கு, அர்ச்சிஷ்ட மேற்றிராணியார் அரசனிடம் மூன்று நாள் அவகாசம் கேட்டார்! உடனே, இறந்தவனைக் கூட்டி வருவதாக, மேற்றிராணியார் கேட்கும் இந்த அபத்தமான விண்ணப்பத்தின் பேரில், அரசனும், அவனுடைய அவையிலிருந்தவர்களும் கேலி செய்து நகைத்தனர்; இருப்பினும், அரசன் அதற்கு சம்மதித்து மூன்று நாள் அவகாசம் கொடுத்தான்.

மூன்று நாட்களுக்குப் பின், அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், பியோடருக்கு மறுபடியும் உயிர் கொடுத்து, போலஸ்லாஸ் அரசன் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினார். அதைக்கண்ட அரசனும் அவனுடைய அவையிலிருந்தவர்களும் ஆச்சரியத்தினால் வாயடைத்துப் போயினர்! பியோடர், தன் மூன்று மகன்களையும் கடிந்து கொண்டார்; பின் அரசனிடம், பியோடர், மேற்றிராணியார் உண்மையாகவே தன் நிலத்தைத் தன்னிடமிருந்து,, விலைக்கு வாங்கியிருந்தார், என்ற வாக்குமூலத்தை அளித்தார். அரசனும் வேறுவழியில்லாமல், மேற்றிராணியாருக்கு எதிரான இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தான். பின் அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், தேவ உதவியால், புதுமையாக கல்லறையிலிருந்து உயிருடன் எழுப்பி தன்னுடன் கூட்டி வந்திருந்த, பியோடரிடம் இன்னும் கொஞ்சம் காலம் உயிருடனிருப்பதற்கு ஆசையிருந்தால், வாழலாம், என்று கூறினார். பியோடர், “ஆண்டகையே! வேண்டாம்! என்னை திரும்பவும் கல்லறையிலேயே விட்டு விடுங்கள்”  என்று கூறினார். அதன்படி, அவரை கல்லறைக் குழியினுள் கிடத்தியவுடன், அவருடைய சரீரம், மறுபடியும் எலும்புக்கூடாக மாறியது; கல்லறையில் மறுபடியும் அவரை அடக்கம் செய்தனர்.

அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், அரசனுடைய ஒழுக்கக் கேட்டைக் குறித்து, அவனைக் கண்டித்து, திருச்சபை விலக்கம் செய்தபோது, மிகப் பெரிய முக்கியமான முரண்பாடு அரசனுடன் ஏற்பட்டது.

இதன் காரணமாக, அரசன் மூர்க்க வெறிகொண்டவனாக, தனது காவலர்களை, மேற்றிராணியாரான அர்ச். ஸ்தனிஸ்லாஸை கொல்வதற்காக, அனுப்பி வைத்தான். ஆனால், அவர்கள், அர்ச்சிஷ்டவரைத் தொடுவதற்கு துணியாமலிருந்தனர். இதைக் கண்ட அரசன் தனது சொந்த கரங்களினாலே, அர்ச்சிஷ்டவரைக் கொன்றான். 1079ம் வரும் அர்ச்.ஸ்தனிஸ்லாஸ் திவ்யபலிபூசை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அரசன் அவரை நெருங்கிச் சென்று, தன் வாளால் அவருடைய தலையை வெட்டிக் கொன்றான். கிராகோ நகர மேற்றிராணியாரான அர்ச்.ஸ்தனிஸ்லாஸ் இவ்விதமாக மகிமைமிகு வேதசாட்சிய முடியைப் பெற்றுக் கொண்டார்.

போலஸ்லாஸ் அரசன், செய்த இக்கொலை, போலந்து நாடுமுழுவுதும், அவனுக்கு எதிராகக் கலகம் ஏற்படுவதற்குக் காரணமாயிற்று: அதனால், அவன் அரசபதவியிலிருந்து அகற்றப்பட்டான். நாட்டு மக்களிடமிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஹங்கேரி நாட்டில் தஞ்சம் அடைந்தான்.  இவனுக்குப் பிறகு, இவனுடைய சகோதரன் முதலாம் விலாடிஸ்லாஸ் ஹெர்மன் போலந்து நாட்டின் அரச பதவியிலமர்ந்தான். அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், 4ம் இன்னசென்ட் பாப்பரசரால், அசிசி நகரில், 1253ம் வருடம் அர்ச்சிஷ்டவராக பீடத்திற்கு உயர்த்தப்பட்டார். 🌹✝


🌹அர்ச்.ஸ்தனிஸ்லாஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹



--


🇻🇦

May 0️⃣7️⃣


Martyrdom 🌟🌹

ST. STANISLAUS

Stanislaus was born in AD 1030 at Szczepanów, in Poland. After initial studies in Poland, he completed his education in Paris, and was ordained a priest.

When the bishop of Cracow died in 1072, Stanislaus was unanimously elected as his successor, but accepted the office only at the explicit command of Pope Alexander II.

The first conflict of Bishop Stanislaus with King Bolesław of Poland was over a land dispute. The Bishop had purchased for the diocese a piece of land on the banks of the Vistula River near Lublin from a man named Piotr, but after Piotr's death the land had been claimed by his family. The king gave the verdict against Stanislaus.

Bishop Stanislaus asked the King for three days to produce his witness, Piotr himself. The King and his court laughed at the absurd request, but granted Stanislaus the three days.

After 3 days Stanislaus brought Piotr back to life & brought him  before King Bolesław. The dumbfounded court heard Piotr reprimand his three sons and testify that Stanislaus had indeed paid for the land. Unable to give any other verdict, the King dismissed the suit against Bishop Stanislaus.

A more substantial conflict with King Bolesław arose after Stanislaus criticized the King for his immorality &  excommunicated him.

King Bolesław was furious and sent his guards to kill Bishop Stanislaus, but when the guards didn't dare to touch the Bishop, the King killed him with his own hands by striking Stanislaus on the head with a sword while Mass was being celebrated in the year 1079.

The murder stirred outrage throughout Poland and led to the dethronement of King Bolesław II, who had to seek refuge in Hungary and was succeeded by his brother, Władysław I Herman.

St. Stanislaus was canonized in 1253 by Pope Innocent IV at Assisi.





🔵




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக