Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 4 மே, 2024

மோட்சத்தின் பிணையாகிய பிறர்சிநேகம் - Charity

 

மோட்சத்தின் பிணையாகிய பிறர்சிநேகம்

"நீங்கள் ஒருவரை ஒருவர் சிநேகிக்கும்படியாக, நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன். நான் உங்களை சிநேகித்தது போல, நீங்களும் ஒருவர் ஒருவரை சிநேகிக்கக் கடவீர்கள்" (அரு.13:34).

 


சேசு தாம் கல்வாரியில் பலியாகப் போகுமுன் இராப்போஜன அறையில் பன்னிரு அப்போஸ்தலர்களையும் ஒன்றாகக் கூட்டிச் சொன்ன கனிவும், அன்பும், ஆழமும் மிக்க வாக்கியம் இது. சிநேகத் தால் மட்டுமே தூண்டப்பட்டு இவ்வுலகை சிருஷ்டித்த கடவுள்-மனிதர் கூறிய வாக்கியம் இது. ஒவ்வொரு மனிதனும் தன்னைப் போல பிறரை நேசிக்க வேண்டுமென்று அவர் காயீனுக்கு அறிவுறுத்து கிறார். பிறர்சிநேகமற்ற அவனைத் தண்டிக்கவும் செய்கிறார்.

புதிய ஏற்பாட்டில் சேசு இராப் போஜன அறையில், தம் சீடர்கள் தங்களைப் போல் பிறரையும் நேசிக்க அவர்களுக்குக் கட்டளையிடு கிறார். அவர்கள் வழியாக, சகல மனிதர்களுக்கும் இதை அவர் அறிவிக் கிறார். சீனாய் மலையில் தரப்பட்ட பத்துக் கற்பனைகளில் மூன்று, அவரைப் பற்றியவை, மீதமுள்ள ஏழு, நம் அயலார் மட்டில் நமக்குள்ள கடமைகளைக் குறிப் பவை. அதைத்தான் புதிய ஏற்பாட் டில், இராப் போஜன அறையில் அவர் புதுப்பிக்கிறார். நேசமே உருவானவர் தம்மையும், தம் நிமித்தமாக சகல மனிதரையும் நேசிக்கும்படி கட்டளையிடுகிறார்.

முதலில்: இன்று கத்தோலிக்கக் குடும்பங்களில் பிறர்சிநேகம் இல்லை. கணவனுக்கு மனைவி கீழ்ப்படியவும், கணவன் மனைவிக்குரிய மரியாதை தந்து அவளை நேசிக்கவும் மறுத்ததாலேயே பல பிரச்சினைகள், அதனால் சமாதானக் கேடு. பரஸ்பர முழு அன்பு, தாழ்ச்சி, பொறுமை, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், மொத்தத்தில், சிநேகமில்லை, முடிவில், விவாகரத்து, பிரிவினை, தகராறு.

இரண்டாவது, பெற்றோர், பிள்ளைகளிடம் உண்மையான அன்பு, சமாதானம் இல்லை. எல்லாருமே சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். கஷ்டப்பட்டுப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, ஒரு நல்ல சமூக அந்தஸ்தைக் கொடுத்த பெற்றோரைத் தவிக்கவிட்டு, சுயநலமாக வாழும் பிள்ளைகள், மருமக்கள். ஒரு சில பெற்றோரும் கூட நீதியோடு நடப்பதில்லை. சிநேகம் அங்கில்லை.

மூன்றாவதாக, எல்லாக் கத்தோலிக்க ஊர்களிலுமுள்ள பெரிய பிரச்சினை சமாதானக் கேடு, ஊர் இரண்டுபட்டிருக்கிறது. வடக்குத் தெருவுக்கும், தெற்குத் தெருவுக்கும் சண்டை, அல்லது மேற்குத் தெருக்கும், கிழக்குத் தெருவுக்கும் சண்டை. இங்கும் சிநேகமில்லை. முடிவில், ஊர்த் தகராறு, ஒரே ஊரில், ஒரே இனத்தில், ஒரே இரத்த உறவுகளிடையே குழப்பம், சண்டைகள், சமாதானக் கேடு!

நான்காவதாக, குருக்கள், மக்கள் என்ற இரு பிரிவுகள். குருவுக்கு ஆதரவாக ஒரு கூட்டம், எதிராக மற்றொரு கூட்டம். தவறான கணக்கு வழக்குகள், அன்பியங்கள் என்று பல காரணங்கள் இருக்கலாம். இங்கும் சிநேகமில்லை. தங்களை நேசித்து, தங்களுக்காக உயிரைக் கையளித்தவரைத் தங்கள் அயலாரில் நேசிக்க யாரும் இல்லை. முடிவில், சமாதானக் கேடு! குருக்களுக்கும் குருக் களுக்கும் இடையில் கூட சண்டை, ஆயரோ, தலையிட முடியாத நிலையில் இருக்கிறார்!

ஐந்தாவது, சாத்தானின் மிகப் பெரிய சதியின் உச்சக்கட்டம், சாதிகளை வைத்து மனிதர் களைப் பிரித்தாளுவது. சிநேகமானவர் சிநேகிக்கப்படாவிட்டால், சுபாவத்திற்கு மேலான சகோ தர அன்பு நம்மில் குடிகொண்டிருக்க முடியுமா? சாதிகள் சமாதானக் கேட்டின் பிறப்பிடங்கள்.

அன்பு இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார். அன்பு இல்லாத இடத்தில் சாத்தான் இருப் பான். எந்த ஓர் ஆன்மாவும் வெறுமையாய் இருக்க முடியாது. ஒன்றில், பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்து வாகிய சர்வேசுரன் இருப்பார், அல்லது சாத்தான் இருப்பான். இந்தியாவில் பல சாதிகள் இருந்தாலும், கிறீஸ்தவர்களாக மனம் மாறியபின், கிறீஸ்துவையும், அவரது போதனைகளையும் பின்பற்றுபவர் களில், "யூதனென்றும், கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை" (கலாத். 3:28); ஆனால் இவர்களோ அவரைப் பின்பற்றாமல், ஒவ்வொருவரும் தங்கள் சாதியே உயர்ந்தது என்று கொடி பிடிக்கிறார்கள். சேசு சிரசாயிருக்க, நாம் அவரில், திருச்சபையாகிய ஞான சரீரத்தின் உறுப்புகளாயிருக்கிறோம். சேசுவையும், மாதாவையும், கத்தோலிக்கத் திருச்சபையையும்விட இவர்கள் உள்ளத் திலும், இரத்தத்திலும் சாதி வெறி என்ற கொடிய, பிறரன்புக்கு எதிரான பெரிய பாவத்தைக் கொண் டிருக்கிறார்கள். இதில் பல குருக்களும் கூட முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். பலர் தங்கள் மக்களை இரகசியமாகத் தூண்டி விடுகிறார்கள். இது எல்லா மறை மாவட்டங்களிலும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இது சேசுவின் கட்டளைகளுக்கு எதிரானது. அந்த இனிய நேசரின் நேசத்திற்கு எதிரானது.

இந்தப் பிறரன்புக்கு எதிரான பாவம், மனம் பொருந்திச் செய்கிற, கனமான, சாவான பாவம் என்று 99% கிறீஸ்தவர்கள் சிந்திப்பதில்லை. இவர்கள் மனம் வருந்தாமலும், சமாதானம் செய்யா மலும், பகையை மறவாமலும், கசப்போடு வாழ்ந்து, மனஸ்தாபமின்றி இறந்தால், நேரே நரகத்திற்குத் தான் செல்வார்கள். நேசமானவர் மோட்சத்தில் நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஆனால் இவர்களோ லூசிபரையே தேர்ந்துகொள்கிறார்கள். நம் மீட்பிற்காக, மனிதாவதாரத்தின் துன்பத்தை யும், ஒரு மனித சரீரத்தின் பல துன்பங்களையும், இறுதியாக கசையடிகளையும், முள்முடியையும், சிலுவையின் அகோர வேதனைகளையும் சுமந்தவரை அவமானப்படுத்தும் விதமாக அவரிடமிருந்து விலகி, பரபாஸைத் தேர்ந்துகொண்ட யூதர்களைப் போல், இவர்கள் லூசிபரைத் தேர்ந்துகொள் கிறார்கள். மோட்சத்தை விட இவர்கள் நரகத்தையே அதிகம் நேசிப்பதாகத் தோன்றுகிறது!

அன்புச் சகோதரரே, மேற்கூறிய அனைத்திற்கும் முடிவில், நம்மிடம் மன்னிப்பில்லை, சகோதர அன்பில்லை, விட்டுக் கொடுத்தல், சமாதானமில்லை. அனைவரும் ஆலயத்திற்கு வருகிறோம், நன்மை வாங்குகிறோம். ஆனால் பாவத்தோடு தைரியமாய் வாழ்கிறோம். யாரும், திருந்தவோ, திருத்தவோ விரும்புவதில்லை. கல்வாரியைப் பாருங்கள்! திவ்ய நற்கருணையை உற்றுநோக்குங்கள். சிநேக மானவர் நம் மீதுள்ள சிநேகத்திற்காக மோட்சத்திலிருந்து நம்மிடம் வந்திருக்கிறார். அதே கல்வாரி வழியாகவும், திவ்ய பலிபூசை, திவ்ய நற்கருணை மூலமாகவும் நாம் பூமியிலிருந்து மோட்சத்திற்கு ஏறி வர வேண்டுமென்று அவர் ஏங்குகிறார்!

நம்மிடம் சிநேகமில்லாவிடில், அது நம்மில் தாழ்ச்சியை அழித்து, ஆங்காரத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். அதன் விளைவே யார் பெரியவன், யார் சிறியவன் என்னும் போட்டி மனப்பான்மையாகும்.

முடிவு: பிறரன்பு மிக எளிதானது, சுலபமானது. நாம் நம் பெற்றோரையும், உடன்பிறந்தவர்களை யும், உறவினர்களையும் நேசிப்பது சுபாவ அன்பு. நமக்குத் தெரியாதவர்களை, அன்னியர்களை, ஊழியர் களை, மற்ற இனத்தவரை, ஏன், நம் பகைவர்களையும் கூட, கடவுளின் பெயரால் நேசிப்பது, சுபாவத் திற்கு மேலான அன்பு. "என் நுகம் இனிது, என் சுமை எளிது" என்ற ஆண்டவர், நம்மால் முடியாததை ஒருபோதும் நமக்குக் கட்டளையாகத் தர மாட்டார். பிறர்சிநேகத்திற்கு எதிரான இப்பாவங்கள் எல்லா மேற்றிராசன குருக்கள், கன்னியர், துறவிகளிடமும், விசுவாசிகளிடமும் சர்வ சாதாரணமாகக் காணப்படுகின்றன. ஒளியையும் (சேசுவையும்), ஒளியைத் தாங்கியவர்களையும் (தேவ மாதாவையும்) நாம் பின்பற்றுகிறோம். மனந்திரும்புவோம், அதன் மூலம் நம் நாடும் விரைவில் கிறீஸ்து அரசரின் அரசாட்சியின்கீழ் வந்து சேரும். அங்கே சந்தோஷமும், சமாதானமும், அன்பும் பூரணமாய்த்துலங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக