Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 17 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 36 - அர்ச். நெபுமுசேன் அருளப்பர் (St. John of Nepomuk May 16)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐ 

 

🇻🇦மே 1️⃣6️⃣ம் தேதி

🌹பாவசங்கீர்த்தன இரகசியத்தைப் பாதுகாப்பதற்காக முதல் வேதசாட்சியாக மரித்த அர்ச். நெபுமுசேன் அருளப்பர் திருநாள்.🌹

🌹இவருடைய இயற்பெயர் ஜான் வெல்ஃப்லின்; 1345ம் வருடம்  பொஹேமியா  (இப்போது செக்கோஸ்லோவாகியா) நாட்டில்,  போமுக் என்ற சந்தை நகரத்தில், பிறந்தார். இந்நகரம் பின்னாளில் நெபோமுக் என்று மாற்றப்பட்டது.

இவர் பிராக் நகரிலுள்ள பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார்; 1383ம் வருடம் முதல் 1387ம் வருடம் வரை, பதுவா பல்கலைக்கழகத்தில் வேத சட்டத்திற்கான பட்டப்படிப்பைப் பயின்றார்.

1393ம் வருடம், பிராக் நகர அதிமேற்றிராணியாரால், அர்ச்.ஜைல்ஸ் கதீட்ரல் தேவாலயத்தில், பங்கு சுவாமியார்களின் அதிபர் சுவாமியாராக நியமிக்கப்பட்டார். 

பொஹேமியா நாட்டின் அரசியின் ஆன்ம குருவாக இவர் நியமிக்கப்பட்டார். ஒருநாள்,  அந்நாட்டின் அரசன், இவரிடம் , தன் மனைவியான அரசியார், பாவசங்கீர்த்தனத்தில் கூறிய பாவங்களை தன்னிடம்,வெளிப்படுத்தும்படி கட்டாயப்படுத்தினான்!

அதற்கு இவர் மறுத்து விட்டார். உடனே, இவரை அரசன் கொடூரமாக உபாதித்தான்.1393ம் வருடம் மே 16ம் தேதியன்று, ஆண்டவருடைய மோட்சாரோகணத் திருநாளுக்கு முந்தின திருவிழிப்பு நாளன்று, பொஹேமியா அரசனான 4ம் வென்செஸ்லாஸின் உத்தரவின்பேரில், இவர் கைகால்கள் கட்டப்பட்டவராக வில்டாவா ஆற்றின் மீது  பிராக் நகரில் கட்டப்பட்டிருந்த சார்லஸ் பாலத்திலிருந்து, ஆற்றினுள் எறியப்பட்டார்.  பின்னர், இவருடைய உடல்  தண்ணீர் மேல் மட்டத்தைத் தொட்டபோது, அந்த இடத்தின் மேல் புதுமையாக ஐந்து நட்சத்திரங்கள் தோன்றின! இந்த அற்புதத்தை பிராக் நகர் மக்கள் திரளான கூட்டமாக வந்து பார்த்தனர். இதைப் பற்றி, அரசி, அரசனிடம் தெரிவித்தாள்;  இதைக் கேட்டுப் பேரச்சமடைந்த அரசன்,  தன் அறைக்குள் சென்று அடைபட்டவனாக பல நாட்கள் உள்ளேயே இருந்தான்.

300 வருடங்களுக்குப் பின், 1719ம் வருடம் , இவருடைய பரிசுத்த சரீரம் மோல்டாவு ஆற்றில் அழியாமலிருப்பதைக் கண்டறிந்தனர். இப்போது தான் அது ஆற்றில் எறியப்பட்டதுபோல் புதுப்பொலிவுடன் இருந்தது! 

இவருடைய கல்லறை பல வருடங்களுக்குப் பின் திறக்கப்பட்டபோது, இவருடைய நாக்கு புதுமையாக அழியாமல் இருந்தது!  அதனுடைய வீரத்துவம் வாய்ந்த வேதசாட்சிக்குரிய பரிசுத்த மவுனமே, இத்தகைய மாபெரும் மகிமையை, சர்வேசுரனிடமிருந்து பெற்றுக் கொடுத்திருந்தது.

  அர்ச்.நெபுமுசேன் அருளப்பர், பொஹேமியா நாட்டின் அரசாங்கத்தினுடைய அர்ச்சிஷ்டவராகப் போற்றி ஸ்துதிக்கப்படுகிறார்! பாவசங்கீர்த்தனத்தின் இரகசியமான உடைபடா முத்திரையைக் காப்பாற்றுவதற்காக  தன் உயிரை விட்ட முதல் வேதசாட்சியாக இவர் திகழ்கிறார்! புறணிப்பேச்சுகளுக்கு எதிரான புண்ணியங்களின் பாதுகாவலராகவும், இவர் இறந்த விதத்தின் மூலமாக, வெள்ள அபாயத்திலிருந்தும், தண்ணீரில் மூழ்கும் ஆபத்திலிருந்தும் பாதுகாக்கும் அர்ச்சிஷ்டவராகவும், இவர்  விளங்குகின்றார்.

அர்ச்.நெபுமுசேன் அருளப்பர், “புதுமைகளால் மின்னுகிற நமதாண்டவரான திவ்ய சேசுகிறீஸ்துநாதருடைய மகிமைமிக்க வேதசாட்சி” என்று வர்ணிக்கப்படுகிறார்.🌹✝


🌹அர்ச்.நெபுமுசேன் அருளப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹

🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹


🌹பாவசங்கீர்த்தனத்தின் உடைபடா முத்திரை🌹

🌹இந்த தேவதிரவிய அனுமானத்தின் முத்திரை உடைபடக்கூடாதது! மீற முடியாதது!  திருச்சபைச் சட்டம் 983.1ன் படி, ஞான உபதேசம், பாவசங்கீர்த்தனத்தில், பாவியானவனை, எந்த விதத்திலும், பாவசங்கீர்த்தனத்தைக் கேட்ட ஆன்ம குருவானவர், வார்த்தையினாலோ, அல்லது வேறு எந்த விதத்திலோ, அல்லது எந்த காரணத்திற்காகவோ ( எண் 2490), காட்டிக் கொடுத்தால், அது அவருக்குப் பெரிய பாவாக்கிரமமாகும்.  ஆதலால், தன் சொந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ, அல்லது, தனது நற்பெயரைக் காப்பாற்றுவதற்காகவோ, அல்லது தன் மீது அநியாயமாக சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டை, அது பொய்யானது  என்று  நிரூபிப்பதற்காகவோ,இன்னொருவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காகவோ, நீதிமன்ற வழக்கிற்கு உதவி செய்வதோ, பொது மக்களுக்கு எதிராக வரவிருக்கும் பேரழிவைத் தடுத்து நிறுத்தவோ என்று எந்த காரணத்திற்காகவும், ஒரு குரு, பாவசங்கீர்த்தன இரகசியத்தின் உடைபடா முத்திரையை, முறிக்கக் கூடாது! பாவசங்கீர்த்தனத்தில் கேட்டதை வெளியிடக் கூடாது!

ஒருவனுடைய பாவசங்கீர்த்தனத்தை, வெளிப்படுத்துவதற்குக் குருவானவர்,  மனித சமூக சட்டத்தினால்,  வலுவந்தம் செய்யக்கூடாதவராக இருக்கிறார்!  அல்லது இவர் வேறு எந்த வார்த்தைப்பாடு எடுத்தாலும், உதாரணமாக,  நீதிமன்றங்களில் இவர் சாட்சியாக சொல்லும்போது அங்கு, பரிசுத்த வேதாகமத்தின் மீது சத்தியம் செய்தால் கூட, அதுவும்,  இந்த  பாவசங்கீர்த்தன இரகசியத்தைப் பாதுகாப்பதிலிருந்து . இவரை விடுவிக்கக் கூடாமலிருக்கிறது! பாவசங்கிர்த்தனத்தில் கூறியவற்றை அப்படியே திரும்பக் கூறுவதன் மூலமாகவோ, அல்லது சில மறைமுகமான அடையாளங்கள் மூலமாகவோ, ஆலோசனை மூலமாகவோ, அல்லது செய்கை மூலமாகவோ ஒரு குருவானவர், பாவசங்கீர்த்தனத்தை வெளிப்படுத்தக் கூடாதவராக இருக்கிறார்! 

பாப்பரசரின் அலுவலகத்திலிருந்து ஒரு தவறா வரம்பெற்ற ஆணை (நவம்பர் 18, 1682ம் வருடம் வெளியிடப்பட்டது), “பாவசங்கீர்த்தனம் செய்தவரின் மனம் நோகச் செய்யும்படி, அல்லது அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்தும்படியாக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப்படுத்துவதும்,  பாவசங்கீர்த்தனத்திலிருந்து பெற்ற அறிவைப் பயன்படுத்தி  வெளிப்படுத்துவதும், ஒரு குருவானவருக்குக் கட்டாயமாக தடை செய்யப்பட்ட காரியங்களாகும்” என்று பிரகடனம் செய்கிறது.🌹✝


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



🇻🇦

May 1️⃣6️⃣


Martyrdom 🌟🌹

ST. JOHN OF NEPOMUK

(The first martyr of the Confessional Seal)




Jan Velflín was born in AD 1345, in the small market town of Pomuk (later renamed Nepomuk) in Bohemia, now in the Czech Republic


He studied at the University of Prague, then furthered his studies in canon law at the University of Padua from 1383 to 1387.

In 1393, John was made the vicar-general of Saint Giles Cathedral by Jan of Jenštejn, Archbishop of Prague

St. John was confessor of the queen of Bohemia, and a day came when the King demanded from him to tell what the queen had said in the confessional!

St. John refused to divulge the secrets of the confessional to the King. Hence St. John was tortured and then with his hands and feet tied, on the vigil of Ascension, 16 May 1393, he was thrown into the river Vltava from Charles Bridge in Prague at the behest of Wenceslaus IV, King of Bohemia.

Later at the place where his body had hit the water, five stars appeared over the spot. The people of Prague came in great numbers to witness the marvel. The Empress pointed out the miracle to the King, who became terrified and closed himself in his room for several days.

In 1719, about 300 years later his body was found intact in the Moldau River, as if it had been thrown into it minutes before. 

When his tomb was opened again many years later, his tongue was found incorrupt, which for its silence, gave such a great glory to God.

St. John of Nepomuk  is the national saint of Bohemia and is considered the first martyr of the Confessional Seal, a patron against calumnies and, because of the manner of his death, a protector from floods and drowning

🎯

St. John of Nepomuk is described as "gloriosum Christi martyrem miraculisque coruscum"

("a glorious martyr of Christ and sparkling with miracles")



    🍁🍁🍁🍁🍁🍁🍁


THE CONFESSIONAL SEAL❗


The sacramental seal is inviolable. Quoting Canon 983.1 of the Code of Canon Law, the Catechism states, "...It is a crime for a confessor in any way to betray a penitent by word or in any other manner or for any reason" (No. 2490). A priest, therefore, cannot break the seal to save his own life, to protect his good name, to refute a false accusation, to save the life of another, to aid the course of justice (like reporting a crime), or to avert a public calamity. He cannot be compelled by law to disclose a person's confession or be bound by any oath he takes, e.g. as a witness in a court trial. A priest cannot reveal the contents of a confession either directly, by repeating the substance of what has been said, or indirectly, by some sign, suggestion, or action. A Decree from the Holy Office (Nov. 18, 1682) mandated that confessors are forbidden, even where there would be no revelation direct or indirect, to make any use of the knowledge obtained in the confession that would "displease" the penitent or reveal his identity.




🔵




To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக