Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 17 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 35 - அர்ச். பாஸ்கால் பயிலோன் (St. Paschal Baylon - May 17)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐ 

 மே 1️⃣7️⃣ம் தேதி


🌹மகா பரிசுத்த தேவநற்கருணையின்  சரீரமெடுத்த பக்திசுவாலகரும் ஸ்துதியருமான அர்ச். பாஸ்கால் பயிலோன் திருநாள்🌹



🌹பாஸ்கால், ஸ்பெயின் தேசத்திலுள்ள ஆரகன் நாட்டில் 1540ம் வருடம், மே 24ம் தேதி, பெந்தேகோஸ்தே திருநாளன்று, பிறந்தார்.  திவ்ய இஸ்பிரீத்து சாந்துவான சர்வேசுரனின் திருநாளை , ஸ்பெயின் நாட்டினர், திவ்ய இஸ்பிரீத்துவானவரின் பாஸ்கா என்று அழைப்பதால், இவருக்கு பாஸ்கால் என்று இவருடைய பெற்றோர்கள் பெயரிட்டனர். இவர் 22 வயது வரை ஆடு மாடு மேய்க்கும் தொழிலிருந்தார். ஆடு மேய்க்கும்போது, இவர் தன்னுடன் ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்று, வருவோர் போவோரிடம், ஏ பி சி டி எழுத்துக்களை தனக்குக் கற்பிக்கும்படிக் கேட்பார். தனக்கு புத்தகத்தை வாசிக்கக் கற்றுக் கொடுக்கும்படிக் கேட்பார். வயலில் வேலை பார்க்கும்போது, கத்தோலிக்க வேதப் புத்தகங்களையும், ஞான நூல்களையும் வாசிப்பார்.

இவர், அர்ச்.அல்காந்தரா இராயப்பரின் சீர்திருத்தப்பட்ட பிரான்சிஸ்கன் துறவற சபையில், ஒரு  பொது நிலை சகோதரராகச் சேர்ந்தார். வாயில்காப்போனாக ஸ்பெயினிலிருந்த அநேக பிரான்சிஸ்கன் துறவற மடங்களில் இவர் பணிபுரிந்தார். இவர் அர்ச்சிஷ்டனத்தனத்தினுடைய உத்தமதனத்தில் எவ்வளவுக்கு அதிகமாக முன்னேறினார் என்றால், காட்சிதியானியாகவும், தேவசிநேகத்தில், குறிப்பாக மகா பரிசுத்த தேவநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் திவ்ய சேசுகிறீஸ்து நாதர் மீது கொண்ட மாபெரும் சிநேகத்தினால், ஆழ்ந்த தியானியாகவும் ஜீவித்து வந்தார். அடிக்கடி பரலோகக் காட்சிகளால் பரவச நிலைமையினுள் மூழ்கி விடுவார். மகா பரிசுத்த தேவநற்கருணையின் முன்பாக இரவில் பல மணி நேரம் ஆழ்ந்த ஜெப தியானத்தில் மூழ்கியிருப்பார். 

1570ம் வருடம் பிரான்சிஸ்கன் துறவற சபையின் பொது தலைமை அதிபர், பாரீஸ் நகரத்திற்கு வர நேர்ந்தது. துறவற சபையின் ஒரு அவசியமான  காரியத்திற்காக, இவரை அதிபரிடம் அனுப்பி வைத்தனர்.  பிரான்சிலிருந்த அநேக நகரங்கள் வழியாக இவர் பயணிக்க நேர்ந்தபோது,  அந்நகரங்கள் எல்லாம் புராட்டஸ்டன்டு பதிதர்கள் கையிலிருந்தன!  அவர்கள் படைக் கருவிகளுடன் இருந்தனர். இருப்பினும்,  மகா பரிசுத்த தேவநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் நமதாண்டவரின் மெய்யான திவ்ய பிரசன்னத்திற்கு எதிரான புராட்டஸ்டன்டுகளின் தேவதூஷணமான கருத்துகளுக்கும் வாதங்களுக்கும் எதிராக அந்த புராட்டஸ்டன்டு பதிதர்களுடன், அர்ச்.பாஸ்கால் வாதாடினார்; மகா பரிசுத்த தேவநற்கருணையைப் பற்றிய கத்தோலிக்க வேதசத்தியங்களுடைய மேற்கோள்களுடன் இவர், மிகுந்த ஞானத்துடன், அப்பதிதர்களை, எதிர்வாதம் செய்ய விடாமல். திணறடித்தார்! தர்க்கவாதத்தில் முழு வெற்றியடைந்தார். இதைக் கண்டு சீற்றமடைந்து வெகுண்டெழுந்த பதிதக் கூட்டம், இவரைக் கற்களாலும் தடிகளாலும் அடித்தனர். அப்போது, அதனால். இவருக்கு ஒரு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது.  எஞ்சிய ஜீவிய காலம் முழுவதும் அந்த காயத்தினால் ஏற்பட்ட முடத்துடனேயே இவர் வாழ்ந்து வந்தார்.

அர்ச்.பாஸ்கால், 1592ம் வருடம் மே 17ம் தேதி பாக்கியமாய் மரித்தார்; வலேரிய நாட்டின்  அரண்மனை சிற்றாலயத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை , விரைவிலேயே திருயாத்திரை ஸ்தலமாயிற்று! இவருக்கு முத்திப்பேறு பட்டம் 5ம் சின்னப்பர் பாப்பரசர் 1618ம் வருடம் அளித்தார்; 8ம் அலெக்சாண்டர் பாப்பரசர், 1690ம் வருடம் அக்டோபர் 16ம் தேதி அர்ச்சிஷ்டப்பட்டம் அளித்தார்.

13ம் சிங்கராயர் பாப்பரசர், அர்ச்.பாஸ்கால் பயிலோன், “மகா பரிசுத்த தேவநற்கருணையின் பக்திசுவாலகர்!” என்றும் மகா பரிசுத்த திவ்ய நற்கருணை மாநாடுகள் , இனி வரவிருக்கும் மகா பரிசுத்த தேவநற்கருணை பக்திசபைகளுக்கும் பாதுகாவலர்” என்றும்  பிரகடனம் செய்தார். இவர்,  பிரான்சிஸ்கன் துறவ சபை உடுப்பை அணிந்தவராகவும், மகா பரிசுத்த தேவநற்கருணை கதிர் பாத்திரத்தை ஏந்தியவராகவும், ஓவியங்களில் சித்தரிக்கப்படுகிறார்! இது,  இவர் மகா பரிசுத்த தேவநற்கருணையின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பக்திபற்றுதலை நமக்கு உணர்த்துகிறது.🌹✝

(ஸ்பெயினின் உள்நாட்டுப்போரின்போது(1936-39) கம்யூனிஸ்டுகள் இவருடைய கல்லறையையும் பரிசுத்த அருளிக்கங்களையும் தீக்கிரையாக்கினர்)


🌹மகா பரிசுத்த தேவநற்கருணையின் பக்திசுவாலகரும் ஸ்துதியருமான அர்ச்.பாஸ்கால் பயிலோனே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹

 


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



Source:


🇻🇦

May 1️⃣7️⃣


Feast 🌟

ST. PASCHAL BAYLON

(Seraph of the Most Holy Eucharist)


Paschal was born in the Kingdom of Aragon, Spain on the Feast of Pentecost, 24 May 1540. He was named Paschal by his parents because in Spain, Pentecost is called "Pasch of the Holy Ghost".

He worked as a shepherd till the age of 22. He would carry a book with him and beg passersby to teach him the alphabet and to read, and as he toiled in the fields he would read religious books.

He joined the Reformed Franciscan Order (Alcantarine Reform) as a lay brother and served as a doorkeeper at various Franciscan monasteries in Spain.

He was a mystic and contemplative, and he had frequent ecstatic visions. He would spend hours in the night before the altar in prayer.

The General of the Franciscan Order happening to be at Paris in 1570. Paschal was sent to him for some necessary business of his province. Many of the cities through which he was to pass in France, were in the hands of the Protestants, who were then in arms, Paschal triumphantly defended the Catholic doctrine of the Real Presence of our Lord in the Most Holy Eucharist against the blasphemous assertions of Protestants. For this he was beaten up by Protestants with sticks and stones, and received a wound on one shoulder of which he remained lame as long as he lived.

Paschal died on 17 May, in AD 1592. His tomb in the Royal Chapel in Villareal in the old province of Valencia, immediately became an object of pilgrimage.

Paschal was beatified by Pope Paul V in 1618, & was canonized by Pope Alexander VIII on 16 October 1690 AD.


     🍁🍁🍁🍁🍁🍁🍁


Pope Leo XIII proclaimed St. Paschal Baylon, the "seraph of the Most Holy Eucharist", patron of Eucharistic congresses, and all contemporary and future Eucharistic associations.

Christian art usually depicts him wearing the Franciscan habit and bearing a monstrance, signifying his devotion to the  Most Holy Eucharist.

During the Red Terror at the time of the Spanish Civil War (1936-1939), his grave was desecrated and his relics were burned by the Communists.



To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக