Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 22 டிசம்பர், 2023

அருட்கருவிகள் - சாம்பிராணித் தூபம் (Incense)


நன்றி கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941




தேவ ஆராதனை முயற்சிகள் ஆடம்பரச் சிறப்புடன் நடைபெறுவதற்கு அல்லாமல்  செய்பவர்களும், அம்முயற்சிகளில் பங்கடைகிற  சகலரும் பக்தி பற்றுதலில் அதிகரிக்கும்படியாக சடங்குமுறை ஆசாரங்கள் மிகுந்த பிரயோசனமுள்ளவைகள் என்று திருச்சபை எப்போதும் அங்கிகரித்திருக்கிறது.

யாதாமொரு வேத ஆசாரமுறை அல்லது சடங்கு ஆரம்பத்தில் அஞ்ஞானிகளால் அல்லது யூதரால் அனுசரிக்கப்பட்டது என்கிற ஒரே காரணத்தின்பொருட்டு, அந்த ஆசாரம் அல்லது சடங்குமுறை நாம் அநுசரிக்கத் தக்கதல்லவென்று திருச்சபை விலக்கிவிடுகிறதில்லை. திருச்சபையில் இப்போது வழங்கி வருகிற ஆராதனை ஆசார முயற்சிகளிற் சில மோயிசன் சட்டத்தில் உள்ளவைகள். வேறு சில அஞ்ஞானிகள் அநுசரித்தவைகள். இதனிமித்தம், திருச்சபை விரோதிகள் சிலர் கத்தோலிக்க வேதம் கிறீஸ்தவ அஞ்ஞானம் என்று குறைகூறத் தலைப்பட்டார்கள். இது முழுவதும் தப்பறையானது. ஏனெனில் மனிதன் கடவுளை ஆராதிக்கிற வழிமுறைகளில் அநேக அநுஷ்டானங்கள். கடவுள் மட்டில் மனிதனுக்குள்ள பக்தி பற்றுதலை வெளியரங்கமாய்க் காட்டுபவைகள் என்கிற அளவில், அவைகள் குற்றமற்றவைகள் என்று திருச்சபை  அறிந்து, அவைகளில் சிறந்த சில அநுஷ்டானங்களைத் தனது ஆசாரமுறையில் ஏற்றுக்கொண்டது. அவ்வாறே, தீர்த்தப் பிரயோகம், சுருபங்கள் அணிவது. சாம்பிராணித் தூபம் ஆராதனையில் உபயோகிப்பது. இவை யாவும் ஏற்கனவே யூதர் அல்லது அஞ்ஞானிகள் அனுசரித்தவைகள்தான். இவைகளெல்லாம் பக்திப் பற்றுதலை மூட்டுவதற்குச் சிறந்த சாதனங்கள். இவைகளை உபயோகிப்பதில் அஞ்ஞானம் ஒன்றுமில்லை. ஞானமே முழுவதும் பொருந்தியிருக்கிறது.


சாம்பிராணி, ஆசியாவின் சில பாகங்களில் சாம்பிராணி ஜாதி மரங்களில் உண்டாகும் பிசின். இதைப் பொடித்து நெருப்புக் கங்குகளின் மேல் தூவினால், சுகந்தம் வீசும் வெள்ளை நிறமான புகை கிளம்புகிறது. இந்தப் புகைக்குத் தான் தூபம் என்று பெயர்.

பழைய ஆகமங்களில் இதன் பிரயோகத்தைப்பற்றிய குறிப்புகள் அநேகம் உண்டு. தேவ கூடார ஆலயத்தில், காலை மாலை சாம்பிராணி புகைப்பதற்கென்று ஒரு பீடம் ஏற்பட்டிருந்தது. யாத்திராகமத்தில் அதைக் குறித்துச் சொல்லியிருப்பதாவது: சுகந்த வர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும். எடுத்துப் பொடித்துத் தூளாக்கிக் கூடாரத்துக்கு முன்பாக வைப்பாயாக, இத்தர் சாம்பிராணித் தூபம் மகா பரிசுத்தமானதென்று உணரக்கடவாய். சங்கீதங்களிலும், இசாயாஸ், ஜெரேமியாஸ். மலக்கியாஸ் தீர்க்கத் தரிசனங்களிலும், அர்ச். ஸ்நாபக அருளப்பரின் தந்தையாகிய சக்கரியாஸ் கண்ட காட்சியை எடுத்துரைக்கிற சுவிசேஷ பாகத்திலும் சாம்பிராணித் தூபத்தைப்பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

அஞ்ஞானிகள் தங்கள் ஆராதனையில் அதை உபயோகித்தார்கள் என்பதற்கு ஒளிட், வீர்ஜில் என்னும் புலவர்கள் அத்தாட்சி கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது உரோமானருடைய ஆராதனையைப்பற்றி, அந்த வழக்கம் நமது நாட்டிலிருந்துதன் உரோமானருக்குள் பரவிவது என்று சொல்ல நியாயமுண்டு. சூடம், கற்பூரம், இவைகளின் உபயோகம் இக்காலத்திலும் இந்துமத ஆலயங்களில் வெகு சாதாரணம் என்பது நாமே அறிந்த விஷயம். எஜிப்து தேசத்து ஆலயங்களிலும் கல்லறைகளிலும் உள்ள சித்திரங்கள், இப்போது நாம். உபயோகிக்கிற தூபக் கலசங்களைப் போன்ற பாத்திரங்களில் சாம்பிராணியைப் புகைத்து அரசருக்குந் தேவர்களுக்குத் தூபங்காட்டி ஆராதனை செலுத்துவதைக் காட்டுகின்றன.

கத்தோலிக்கத் திருச்சபையில் தூபப்பிரயோகம்

எக்காலத்தில் ஏற்பாடாயிற்று என்று திட்டமாய்ச் சொல்ல முடியாது. ஐந்தாம் நூற்றாண்டுக்குமுன் அது பிரயோகிக்கப்பட்டதாகச் சொல்வதற்குக் தீட்டமான அத்தாட்சி இல்லை. ஆயினும் பழைய ஆகமங்களில் அதன் பிரயோகம் வெகு சாதாரணமாய் இருந்ததுபற்றி, கத்தோலிக்கத் திருச்சபையிலும் அது பூர்வீக காலந்தொட்டே வழங்கி வந்திருக்கும் என்று சொல்ல நியாய முண்டு, இது உரோமையிலும் ஐரோப்பாவின் மேற்பாகங்களிலும் ஆரம்பிக்கும் முன்னரே, ரஷ்யாவிலும் கீழ்திசை நாடுகளிலும் வழங்கி வந்தது என்பதற்குச் சந்தேகமில்லை. துவக்கத்தில், பூசையில் சுவிசேஷம் வாசிக்கையில் மாத்திரம் தூபம் பிரயோகித்தார்கள். நாளடைவில், பூசையின் வேறு  பாகங்களிலும் இதர ஆராதனை முயற்சிகளிலும் உபயோகிக்க லானார்கள்.

இக்காலத்தில், திருச்சபையின் ஆடம்பர ஆராதனை முயற்சிகளில் தூபம் காட்டுவது முக்கியமான அம்சங்களில் ஒன்றாய் விளங்குகிறது. இலத்தின் ரீதிப்பிரகாரம் தனிப்பூசையில் தூபம் உபயோகிப்பதில்லை. ஆடம்பர அல்லது பெரிய பாட்டுப்பூசையில், பிரவேச கீதத்துக்கு (Introit) முன்னும், சுவிசேஷ ஆரம்பத்திலும், பாத்திரம் ஒப்புக்கொடுத்த பின்னும், எழுந்தேற்ற சமயத்திலும் உபயோகிக்கப்படுகிறது. மரித்தவர்களுக்காகச் செய்யும் பாட்டுப்பூசையில், மேலே கூறின சமயங்களுள் முதல் இரண்டு வேளைகளிலும் உபயோகிப்பதில்லை பலி ஒப்புக்கொடுக்கிற குருவானவருக்கும் பணிவிடை செய்கிற உதவிக் குருக்களுக்கும் மரியாதையின் அடையாளமாகத் தூபங்காட்டுவது பாட்டுப்பூசைச் சடங்கில் ஏற்பட்டது. பூசையிலுமின்றி, சுற்றுப்பிரகாரங்கள், ஆசீர்வாதம், மரித்தோர் அடக்கச் சடங்கு முதலியவைகளிலும் தூபம் உபயோகிக்கிறார்கள். ஆட்களுக்கு மாத்திரமல்ல, அருளிக்கங்கள், சுரூபங்கள், படங்கள் முதலியவைகளுக்கும் தூபம் காட்டுவது உண்டு. சில பொருட்களை மந்திரிக்கையிலும் தூபம் உபயோகப்படுகிறது.

தூபங்காட்டுவதின் கருத்து என்ன? இது எளிதில் கண்டுபிடிக்கக்கூடியதே. சாம்பிராணி எரிவது. விசுவாசிகளிடம் இருக்கவேண்டிய பற்றுதலுக்கும், அதிலிருந்து கிளம்பும் சுகந்த வாசனை கிறீஸ்தவ புண்ணியத்தின் நறுமணத்திற்கும், மேலே எழும்பும் புகையானது. சர்வேசுரனுடைய சந்நிதானத்துக்கு ஏறிச் செல்லுகிற நமது ஜெபத்துக்கும் அடையாளமாம். அர்ச். அருளப்பர் காட்சியாகமத்தில் சொல்லியிருப்பது போல்,அர்ச்சியசிஷ்டவர்களின் ஜெபமாகிய தூபப்புகை சம்மனசுவின் கரத்திலிருந்து சர்வேசுரனுக்கு முன்பாக ஏறிச் சென்றது. தூபங்காட்டுவது மரியாதை வணக்கத்தின் அறிகுறி என்பதே பொதுக்கருத்து. ஆகையால் வெளிர் சிறப்புக்கும் பக்தி பற்றுதலை எழுப்புவதற்கும் சாம்பிராணித் தூபம் சிறந்த சாதனம் என்பதற்குச் சந்தேகமில்லை.

ஆண்டவரே என் விண்ணப்பம் தீபத்தூபமாகவும், என் கைகளை ஏந்துதல் அந்திப் பலியாகவும் உமது சமூகத்தில் ஏறக்கடவது (சங். 140:2)

அன்னையின் ஆரோபணத் திருநாள்(Assumption of Our Lady)

 

-சங் J.M. நிக்கொலாஸ் சுவாமி

சின்ன  ஆசியாவிலுள்ள கால்சிதன் என்னும் இடத்தில் கி.பி. 451 ம் ஆண்டில் திருச்சபையின் பேர்பெற்ற பொது சங்கம் ஒன்று நடைபெற்றது. திருச்சபையின் பிதாக்கள் திரளான பேர் அங்கு கூடியிருந்தனர். உரோமைச் சக்கரவர்த்தி மார்ஸியன் கூட்டத்தினுள் நுழைந்தார். பிதாக்களிடம் அவர் ஒரு காரியம் கேட்டார். "கடவுளுடைய மாதாவின் உடலை எப்படியாவது கண்டுபிடித்து என்னிடம் கொண்டு வாருங்கள். அத்திரு உடலுக்கென்று ஓர் அழகிய ஆலயம் அமைக்கத் தீர்மானித்திருக்கிறேன். அந்த மாசற்ற உடலே உலகில் மிக விலையேறப்பெற்ற அர்ச்சியசிஷ்ட பண்டம். ஆதலின் ஒரு மகா தேவாலயம் அதற்குத் நேசத்திரமாக எழுப்பப்படல் நியாயமே மரியாயின் மாசற்ற உடலை நீங்கள் கண்டுபிடித்துக் கொடுப்பீர்களானால், நான் அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து முத்திரையீட்டு, விலையேறுப்பெற்ற கற்களால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தின் கீழ் அதை வைப்பேன். வணக்கத்துக்குரிய பிதாக்களே, நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்: ஒரு காலத்தில் மாமிசமான கடவுளின் வார்த்தையானவருடைய உறைவிடமாயிருந்த அந்த சரீரத்தைக் கண்டுபிடியுங்கள்" என சக்கரவர்த்தி மன்றாடினார். கூட்டத்திலிருந்தவர்கள் திகைத்தார்கள். இராயப்பர். சின்னப்பர் இவர்களுடைய உடல்கள் எங்கிருந்தன என அவர்கள் அறிவார்கள். கொன்ஸ்தாந்தின் சக்கரவர்த்தியின் தாயான ஹெவேனா கண்டுபிடித்த கிறீஸ்துநாதருடைய சிலுவை இருந்த இடம் அவர்களுக்குத் தெரியும். கிறிஸ்தவ மறையின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட வேதசாட்சிகள். கன்னியர் இவர்களுடைய எலும்புகள் அழகிய பெட்டிகளிலும் ஆயிரக்கணக்கான பீடங்களிலும் இருந்தன. ஆனால் எந்தப் பட்டணமாவது; எந்த மேற்றிராசனக் கோவிலாவது, திருச் சேத்திரமாவது தேவதாயின் உடல் தன்னிடம் இருந்ததாகப் பாராட்டவில்லை. 

ஜெருசலேம் நகர் மேற்றிராணியாரான (அர்ச்) யுவெனால் கூட்டத்தின் மத்தியில் எழுத்து நின்றார்.

மரியம்மாளின் மரணத்திற்குப்பின் நிகழ்ந்ததை, ஜெருசலேம் கிறீஸ்தவர்கள் தலைமுறை தலைமுறையாய் அறிந்து வந்ததை யுவெனால் எடுத்துரைத்தார். அந்தச் சபையிலிருந்த பிதாக்களுக்கு அந்த வரலாறு ஏற்கனவே தெரியும்: ஆனால் சக்கரவர்த்தி ஆவலுடன் வரலாற்றுக்குச் செவிசாய்த்தார்.

ஆதாமுடைய பிள்ளைகள் யாவரும் சாகவேண்டும். அந்த நேரம் தேவதாய்க்கு அணுகி வந்தது. அவர்களுடைய மகன் இறந்தார். இப்பொழுது மரியம்மாள் அந்த நேரத்தை சுஎதிர்பார்த்து படுக்கையில் இருந்தார்கள். பாவமே மனிதனை உருக்குலைத்து சீரழிப்பது. தேவதாயோ தன் வாழ்வின் இறுகிக் கட்டக்கிலும் வெகு அழகுடனிருந்தார்கள். 

வேதம் போதிப்பதற்காக உலகின் பல திசைகளுக்கும் சென்றிருந்த அப்போஸ்தலர்கள் இஸ்பிரித்துசாந்துவின் ஏவுதால் தங்கள் அரசியின் மரணப் படுக்கையண்டை வந்து சேர்ந்தனர். கிறீஸ்துநாதருடைய மரணத்திற்குப்பின் அவர்களை விடாது பின்சென்ற அப்போஸ்தலர்கள். இஸ்பிரித்துசாத்துவின் வருகைக்குப்பின், அவர்களை அருளப்பருடைய பராமரிப்பில் விட்டுப் பிரிந்தனர். ஆனால் எப்பொழுதுமே அவர்கள் அப்போஸ்தலர்களுடைய தாய், அரசி, துயரத்தில் அவர்களது திடம்.

கிறிஸ்துநாதருடைய தூதர்களான அப்போஸ்தலர்கள் கிறிஸ்துநாதருடைய மாதா தன் மகனிடம் போகுமுன் அவர்களைப் பார்க்கவேண்டுமென்று வந்தார்கள். சேசுவுக்கு எத்தனையோ செய்திகள் சொல்லி அனுப்பினார்கள்.

அமைதியாய் யாதொரு அவஸ்தையுமின்றி அன்னை உயிர் வீட்டார்கள். கிறிஸ்துநாதருடைய முப்பத்துமூன்று வருட மறைந்த வாழ்க்கையைப்பற்றி இனி அவர்கள் வாயிலிருந்து ஒன்றும் கேட்க முடியாது. உலகத்தை அவரிடம் கொண்டு சேர்ப்பதில் அவளிடம் ஆலோசனைக் கேட்க முடியாது. இது அவர்களுக்கு விசனத்தைக் கொடுத்தது.

கிறீஸ்துநாதரின்றி மரியன்னைக்கு உலகம் வெறுமனாகக் காணப்பட்டதென அப்போஸ்தலர்கள் அறிவார்கள். சற்பிரசாதத்தில் அவர் இருந்தபோதிலும் நேரில் பாரப்பதற்குச் சமானமாகுமா? அவர் பரலோகத்திற்கு எழுந்த பிற்பாடு, அவருடன் தான் ஒன்று சேர அவர் எப்பொழுது அழைப்பார் என அவர்கள் பொறுமையாய்க் காத்திருந்தார்கள். வாழ்நாள் முழுவதுமே அவர்கள் அவரது அழைப்புக்கும் விருப்பங்களுக்கும் இணங்கி வந்தவர்களல்லவா? இப்பொழுதும் அவருடைய அழைப்பை, மரணத்தை, பொறுமையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

கடைசியாக அது வந்தது. அச்சத்துடன் நோக்கப்படும் வெற்றியாளனைப்போலல்ல. ஆனால் விடுதலை செய்பவனை போல் அது வந்தது. தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்ட போதிலும் அப்போஸ்தலர்கள் ஒருவிதத்தில் மகிழ்த்தனர். அவர்களை அழைத்துச்செல்ல வந்த தன் மகனுடன் மாமரி இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார்கள்.

அந்த நாட்டில் இறப்பவர்களது சடலங்களை நெடு நேரம் வைத்திருப்பதில்லை. அப்போஸ்தலர்கள் தங்கள் அன்னையின் சரீரத்தைத் தூக்கீச் சென்று கல்லறையில் வைத்தனர். அடக்கச் சடங்கின்போது, அவர்கள் நாங்கள் பங்கு பற்றாத இன்னொரு அடக்கத்தைப்பற்றி நினைத்தனர். கல்வாரியிலிருந்து அரிமத்தியா குசையின் கல்லறைக்குச் சென்ற அந்த சுற்றுப்பிரகாரத்தைப்பற்றி அன்னை அவர்களுக்குப் பலமுறை சொல்லியிருந்தார்கள். அந்நியரால் அவர் அடக்கம் செய்யப்படுகையில் தாங்கள் மறைந்திருந்ததைப்பற்றி அப்போஸ்தலர்கள் வெட்டு துக்கித்தனர். பெரிய வெள்ளிக் கிழமையன்று செய்த அந்த தவறுக்குப் பரிகாரமாயிருக்கும்படி. அவரது தாயாரை பரிவுடன் அடக்கம் செய்தனர்.

வழக்கம்போல் தோமையார் பிந்தி வந்தார். முக்கியமாக சம்பவங்களுக்கெல்லாம் அவர் பிந்திதான் வருவார் போலும். ஆனால் அவர் பிந்தியது நமக்கு நல்லதாயிற்று. உயிர்த்தெழுந்த கிறீஸ்துவை அப்போஸ்தலர்கள் முதன்முறை சந்தித்தபோது தோமையார் அங்கு இல்லை. கிறீஸ்துநாதர் உயிர்த்தெழுந்தார் என்பதை முதலில் சந்தேகித்தார். பின் அதை நாம் உண்மை என ஏற்றுக் கொள்ளுவதற்கான நிபந்தனைகளை விதித்தனர். கடைசியாக தம் விரல்களை கிறீஸ்துநாகருடைய காயங்களிலும், கரத்தை அவரது விலாவிலும் வைத்தார். சேசு உயிர்த்தெழுத்தார் என்பதற்கு நல்ல அத்தாட்சி தந்ததற்காக நாம் தோமையாருக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.

மாமரி இறந்தபோதும் அவர் பிந்திப் போனார். அடக்கத்துக்கு முன் அவர் வந்திருப்பாரானால் அன்னை கல்லறையிலிருந்து மோட்சத்திற்கு எடுக்கப்பட்டதை நாம் அறியாதிருக்கலாம்.

"அன்னையின் அந்திய காலத்தில் நான் இங்கு வரமுடியவில்லை. அவர்களது திரு முகத்தையாவது நான் பார்க்க வேண்டும். எல்லோரும் என்னுடன் வாருங்கள். கல்லைப் புரட்டிப் பார்த்துவிட்டு வருவோம்" என வற்புறுத்தினார். அந்த இனிய முகத்தை இன்னொரு முறை பார்க்க அப்போஸ்தலர்களுக்கு பெரும் ஆவல். தோமையாருடன் போய். கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டினார்கள். உடலைக் காணோம். எவரும் அதைத் திருடியிருக்க மாட்டார்கள். அது நிச்சயம். தன் மகனைப் போலவே, தாயும் சரீரத்துடன் மோட்சம் சேர்ந்தார்கள் என தீர்மானித்தனர்.

கல்லறை வெறுமையாயிருத்து. அவர்களது சடலம் இருந்த இடத்தில் அழகிய மலர்கள் காணப்பட்டன. மரண நாற்றம் அங்கு இல்லை. மலர்களின் மணமும் பரலோக வாசனையுமே வீசின.

உயிர்த்த சேசு தம் மாதாவையும் தம்முடன் இருக்கும்படி எடுத்துக்கொண்டார். கிறீஸ்துநாதருடைய உடல்மீது சாவு பெற்ற வெற்றி குறுகியது. கிறீஸ்துநாதருடைய உடலைச் சுமந்தவர்களுடைய உடல்மீது சாவு பெற்ற வெற்றி நீடிக்க முடியாத வெற்றி மாமரி பூமியிலிருந்து பரகதிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.

வெறுமையாயிருந்த கல்லறையருகில் அப்போஸ்தலர்கள் முழந்தாளிட்டு, தாயையும் மகனையும் ஒருங்கே கொண்டிருந்த மோட்சத்தை நோக்கினார்கள். பின் மன மகிழ்வுடன் வீடு திரும்பினர்.

அன்றிலிருந்து கிறீஸ்தவ உலகம் மரியாயின் உடலுக்காக தேடி அலைந்ததில்லை. அது தன் தூய ஆத்துமத்துடன் ஒன்றித்து கடவுளருகில் இருந்தது என அவர்கள் அறிந்திருந்தார்கள்.

அர்ச். யுவெனால், சக்கரவர்த்தி மார்ஸியனுக்கும் அவரது அழகிய மனைவி புல்க்கேரியாவுக்கும் கால்ஸிதளில் கூடிய பொதுச் சங்கத்தில் இருந்த திருச்சபையின் பிதாக்களுக்கும் காடுத்துரைத்த வரலாறு இதுதான். யாவகும் முழுத் திருப்தியுடன் தலைகுனிந்து தங்கள் அங்கீகாரத்தை வெளியிட்டனர்.

மரியாயி மோட்சத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட திருநாள்

(ஆகஸ்ட் 15)

பரிசுத்த கன்னிகையின் பாக்கியமான மரணம்

மரியாயி இறந்தது நோயினாலல்ல, முதிர்பீராயத்தால் அல்ல, பாவத்தின் தண்டனையாகவுமல்ல. ஏனெனில் அவர்கள் ஒருபோதுமே பாவம் செய்தவளல்ல. நேசத்தால் அவள் உயிர்விட்டாள். அவளுடைய நேச மகன் பரலோகத்துக்கு ஆரோகணமானதிலிருந்து நேசத்தால் அவரை நோக்கியே ஏங்கிக் கொண்டிருந்தார்கள். நன் நேச மகன் ஒன்றிக்கும். நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து நின்றார்கள். அவரைப் பிரிந்து வாழ்ந்த ஒவ்வொரு வினாடியும் அவர்களுக்கு வேதனையாயிருந்தது. அவரது ஆத்துமத்தை உடலுடன் பிணைத்திருந்த கட்டுகளை நேசமானது இறுதியாக அறுத்தது. அவர்களது தூய ஆத்துமம் பரலோகத்திற்கு பறந்து சென்றது. உலகப்பொருட்கள் மேல் பற்றின்றி வாழ்கிறவர்கள் பாக்கியவான்கள்; கடவுளைப் பார்த்து நித்தியத்திற்கும் அவரைக் கொண்டிருக்கும்படி அவர்கள் உயிர் ஆசையாயிருக்கிறார்கள்.

 பிதாப்பிதாக்களும் இவ்வித ஆசையுடன் இருந்தார்கள். அவர்களது கண்கள் எப்பொழுதும் தங்களது பரலோக வீட்டையே நோக்கி நின்றன. தாவீது அரசர் இப்பூமியில் தம்மை பரதேச வாசியாக மதித்து பரகதியை நாடினார். எனது தேகக்கட்டு அவிழ்ந்து, என் ஆத்துமம் தன் சிறையைவிட்டு வெளியேறி சேசுவுடன் ஒன்றிக்க வேண்டும் என அர்ச் சின்னப்பர் ஆசிந்தார்.  கிறீஸ்துவை அனுபவிப்பதே நமது ஏக ஆசை என் வேதசாட்சியான அர்ச். இஞ்ஞாசியார் மொழிந்தார். இப்பூமியின் பிரயாணி போல் எங்காதவன் மோட்சத்தில் பிரஜைபோல் வாழ மாட்டான் என அர்ச். அகுஸ்தீன் சொல்கிறார். அசிசி அர்ச். பிரான்சிஸ் எப்பொழுதும் பரகதியையே நோக்கி நின்றார் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

அர்ச். லொயோலா இஞ்ஞாசியார் இரவு நேரத்தில் அழகிய வானத்தை நோக்கிக்கொண்டிருப்பார்: “பரலோகத்தை நோக்கும் பொழுது பூமி எத்தனை நிர்ப்பாக்கியமாகத் தோன்றுகிறது" என்பார். மோட்சத்தை நினைத்து ஆசைப் படாதவன் கிறீஸ்தவனல்ல.

பரிசுத்த கன்னியின் உத்தானம்.

கடவுள் மீது மரியாய் கொண்டிருந்த நேசமானது. உடலினின்று அவர்களது ஆத்துமத்தை அகற்றியது. அவர்களது தூய்மையானது. அழியாமை என்னும் அரச ஆடையால் அவர்களைப் போர்த்தியது. இத்தனை பரிசுத்தமான உடல் கல்லறையில் அழிவது தகுதியல்ல, பாவத்தின் தண்டனையே இந்த அழிவு, கன்னிமாமரி பாவம் செய்தவர்களல்ல. இவ்விதம் சேசு தம்முடைய மாதாவை நித்திய மகிமைக்கு உயர்த்தினார், கற்பு குன்றா உடல்கள் மேலும் இருதயங்கள் மேலும் கடவுளுக்குள்ள நேசத்தைக் கண்டு நாம் அதிசயிப்போமாக. இனிமேலாக நாம் நமது உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருப்போமாக. அற்ப இன்ப சுகத்திற்காக அதை நரகத்திற்கு உள்ளாக்க மாட்டோம். மோட்ச மகிமையை இழக்க மாட்டோம். ஓ பரிசுத்த கற்பே, மரியாயின் உடலை நீ எவ்வளவு அழகுபடுத்தி யிருக்கிறாய்! எங்கள் மதிப்புக்கும் நேசத்திற்கும் நீ எவ்வளவோ உரிமை பெறுகிறாய்? மிக விலையுயர்ந்த திரவியமாக உன்னை நாங்கள் மதித்துக் காப்பாற்றி வரவேண்டும்.

மரியாயி மோட்ச அரசி

பூமியில் நாம் நம்மைத் தாழ்ந்தும் அளவு பரகதியில் நாம் உயர்த்தப்படுவோம். இது கடவுளது சட்டம் (லூக் 14:17). மரியாயி தன்னை எல்லா சிருஷ்டிகளுக்கும் கீழாகத் தாழ்த்தினார்கள். சுடவுளுடைய தாய் என்ற மட்டில் அரசியான அவர்கள் தன்னை ஓர் அடிமை என்றார்கள். சம்மனசுகளைவிடக் தூய்மை வாய்ந்த அவர்கள், சுத்திகர நாளன்று தேவாலயத்தில் சாதாரண பெண்களைப்போல் போய் நின்றார்கள். அரசர்களின் குமாரத்தியான அவர்கள், சாதாரண பெண்ணைப்போல் தன்னைத் தாழ்த்தி, உழைத்து வந்தார்கள். எல்லோருக்கும் கீழாக அவர்கள் தன்னைத் தாழ்த்தியமையால் எல்லா சிருஷ்டிகளுக்கும் மேலாக அவர்கள் உயர்த்தப்பட உரிமை பெற்றார்கள். இதை அவர்கள் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாளில் கடவுள் செய்தார். மகிமையுடன் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அவர்கள், மேகங்களுக்கு மேல் வெற்றி வீரப்பெண்போல் எழும்புகிறார்கள். சம்மனசுக்கள் அவர்களை எதிர்கொண்டழைக்கிறார்கள். "வனாந்தரத்திலிருந்து எழும்பி வருகிற இவள் யாரோ?" (உத், சங். 8:8) என்று அவர்களுடைய மகிமையைப் பாடுகிறார்கள். அவர்கள் மோட்சத்தில் நுழைந்ததும் தீர்க்கதரிசிகளும் பிதாப்பிதாக்களும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். மோயீசன், யாக்கோபின் நட்சத்திரம் என தாம் முன்னறிவித்தவளை வரவேற்கிறார். இசையாஸ், கன்னித் தாய் என தாம் முன்னறிவித்தவளை, எசேக்கியேல், கீழ்த் திசையின் வாசல் எனத் தாம் கூறியவளை, தாவீது மன்னன். அரசரின் வலது பக்கத்தில் நிற்கும் அரசி எனத் தாம் சொன்னவளை, குதூகலத்துடன் வரவேற்கின்றனர். இந்த மகிழ்ச்சிக் கீதங்களின் மத்தியில் மரியாயி தன் தேவகீதத்தை இசைத்து, "என் ஆத்துமமானது ஆண்டவரை மகிமைப் படுத்துகின்றது" என்கிறார்கள். இது தொடக்கமே. மரியாயிக்கென தயாரிக்கப்பட்டிருந்த சிம்மாசனத்தில் கடவுள் மரியாயை வைத்து, அவளது சிரசில் அரச கிரீடத்தைச் சூட்டி, அவள் பரலோக பூலோக அரசி என சம்மனசுக்களுக்கும் மனிதருக்கும் காட்டுகிறார். ஓ என் மாதாவே. ஓ என் அரசியே. ஓ என் ஆண்டவளே, மகிமையில் வீற்றிருக்கும் உம்மை நான் வணங்குகிறேன். என்னை முழுவதும் உமக்கு அர்ப்பணம் செய்து, உமது சிநேக ஆட்சியின் கீழ் என்னை வைத்து விடுகிறேன். நீர் உண்மையாகவே என்னுடைய பாதுகாவலியாகவும், அன்னையாகவும் இருப்பீராக. சமாதானமும் கத்தோலிக்க மறையும், கடவுள்மீது அன்பும், திருச்சபைமீது நேசமும் உமது மன்றாட்டால் எங்கும் அரசுபுரியச் செய்யும். ஆமென்.



Source: Sancta Maria 2012 - July August

வியாழன், 21 டிசம்பர், 2023

St. Thomas, Apostle

 

Saint Thomas, apostle

The unbelief of St. Thomas, by Erasmus Quellin the Younger





"Apostle and Martyr (1st century).

Feast on December 21.

When Our Lord, after spending thirty years in the humility of an obscure life, inaugurated His public mission and began to reveal to the world the mysteries of the kingdom of heaven, He chose, while passing through the towns of Palestine, disciples who accompanied Him in His apostolic journeys. Twelve of them were more intimately associated with His ministry: He instructed them with predilection, sent them to preach in His name, made them His messengers, friends, and apostles. Among these privileged ones who received more closely the sublime teachings of the Master and the secrets of His loving heart was Saint Thomas.

According to ancient documents, his real name was Judas; and it is probably because of the very common use of this name among the Jews that, to distinguish him from his namesakes, he was designated by the nickname Thomas, meaning twin, like the Greek name Didymus by which the evangelist Saint John also refers to him. According to tradition, he was born in Antioch, and apocryphal writings recount that he had a twin sister named Lydia. But one must turn to the Gospel to find episodes of undeniable authenticity from the life of Saint Thomas.

Courageous fidelity to the Master.

At the time he heard the call of Jesus, Thomas must have led, like most other apostles, a humble existence as a fisherman in Galilee. Later, indeed, after the Resurrection of Christ, we find him among the disciples who, having resumed their former trade, cast their nets into the waters of the Sea of Galilee and, favored by an appearance of the resurrected Savior, obtained, by His word, a miraculous catch of fish. His character is revealed in three facts related by Saint John.

Firstly, there is an episode where the apostle shows himself generously devoted to the Master and pushes fidelity to the extent of being willing to face death. Our Lord had publicly taught the Jews that He was equal to the Father and God like Him, and His listeners had gathered stones to stone Him as a blasphemer; but He had escaped their fury, for the time to suffer for the Redemption of the world had not yet come. When this hour approached, He said to His disciples, 'Let us go back to Judea.' These words frightened them. 'Master,' they exclaimed, 'just a few days ago, the Jews wanted to stone you, and you want to return to that place!' They feared, in a dual sense of love and fear, the mistreatment that was reserved for their Master and for themselves. It was then that Thomas, overcoming all fear, encouraged his companions to remain faithful to Jesus unto death. He said these courageous words to them: 'Let us also go, that we may die with him.' In this circumstance, as noted by Saint Vincent Ferrer, he showed more charity than the other apostles, for there is no greater love than to give one's life.

Love for truth.

Resolved to follow Christ even to the path of torment, Thomas was, beyond doubt, very attentive to divine teachings, and he wanted to understand them well. Little inclined to believe without understanding and wary of any assertion not supported by solid evidence, he loved truth and clung to it ardently as soon as it imposed itself on his mind. Far from being naively credulous, he reasoned about what he heard and yielded only to a doctrine that was clear and certain. Two episodes highlight this attitude of soul.

Let us transport ourselves to the Upper Room, where the Lord partook of His last supper with His disciples, this Paschal meal where, after giving them His Body and Blood through the institution of the Holy Eucharist, He imparted to them the most sublime teachings that have ever struck human ears. As He was about to offer Himself up to death, He comforted His disciples who were distressed at the thought of the imminent separation by announcing to them that He would prepare a place for them in His Father's house, saying to them: 'And if I go and prepare a place for you, I will come again and will take you to myself, that where I am you may be also. And you know the way where I am going.' But Thomas interrupted Him: 'Lord, we do not know where you are going; how can we know the way?' By these words, he humbly confessed that the Master's doctrine concerning the end of His mission had exceeded the scope of his understanding, and he asked to be better instructed. And Jesus answered him with these words that magnificently underscore His redemptive work: 'I am the Way, the Truth, and the Life; no one comes to the Father except through me...' No doubt, no apostle listened then with more attention to the doctrine of truth and life that the Savior continued to expound.

The hour of doubt and the hour of faith.

Because he loved truth, the apostle Thomas wanted it pure; he guarded against the illusion and imagination that distort it. In him, to the point of excess, there was a kind of intellectual prudence that prevented him from believing every human testimony that did not offer undeniable proofs. This becomes apparent in the well-known Gospel episode where he underwent a moment of doubt, even disbelief, before the exquisite hour of reassured and unwavering faith.

Jesus Christ, after His Resurrection, appeared to the disciples who, for fear of the Jews, had locked themselves in the Upper Room. Thomas, at that moment, was not with them. When he returned, they surrounded him and said, 'We have seen the Lord.' However surprising the fact of the glorious Resurrection of the Savior might have been, the apostle should have bowed before the unanimous affirmation of the disciples. He did not: he feared that they had been victims of an illusion. 'Unless I see in His hands the mark of the nails, and place my finger into the mark of the nails, and place my hand into His side, I will never believe.'


Eight days later, while the disciples were still gathered in the Upper Room and Thomas was among them, Jesus appeared to them again, saying, 'Peace be with you!' Then, addressing Thomas and showing him His wounds, He said, 'Put your finger here, and see my hands; and put out your hand, and place it in my side. Do not disbelieve, but believe.' Did the apostle touch the Savior's scars? The sacred text does not say, and one can believe that it was enough for Thomas to hear the testimony given by Jesus to the reality of His Resurrection to reject all doubt and disbelief and to express his faith, henceforth luminous and fervent, in this cry full of respect and love: 'My Lord and my God!' Jesus replied: 'Have you believed because you have seen me? Blessed are those who have not seen and yet have believed!' For any reproach, He opposed to the late submission of His apostle the merit and the happiness of souls who believe in Him without requiring to see Him.

The Fathers of the Church delighted in showing how the momentary disbelief of the disciple turned to the advantage of Christianity, by removing all reason to doubt the Resurrection, and consequently the divinity of Jesus. Saint Gregory the Great writes: 'The disbelief of Saint Thomas has done more to strengthen our faith than the faith of the disciples who believed.'

Saint Thomas exclaimed: 'My Lord and my God!'

The farewell of  the Savior to His disciples had a profound echo in the heart of Saint Thomas, who, during the last days of the life of his Master, must have retained a vivid memory of the celestial teachings that the Redeemer gave before His Passion and His ascension to the Father. These teachings resounded with particular strength during the mystical discourse pronounced at the Last Supper and the mandate of love which Jesus had given His apostles, saying: 'This is my commandment, that you love one another as I have loved you.' In His prayer to the Father, He manifested the sovereign will that all His followers 'may be one, even as We are one.' Then, He predicted His approaching Passion and His triumph over death, promising to send the Holy Spirit who, descending on the apostles and making them His courageous witnesses, would enable them to preach His doctrine with the force of miracles.

These words must have resounded powerfully in the heart of Saint Thomas when he saw himself invested with the mission of preaching the Gospel of salvation. And, to be the more docile to the inspirations of the Holy Spirit, the apostle retired into a profound solitude to pray, asking the divine Master for His assistance and the grace to fulfill well the work confided to him.

The apostolic missions and the martyrdom of Saint Thomas.

According to an ancient tradition accepted by the Church, Thomas left Judea and went to preach the Gospel in Parthia, Media, Persia, and finally in India, where the majority of authors place the term of his apostolic labors. What he had long ardently desired, and perhaps feared, became a reality: he was to bear the most beautiful title granted to a mortal, that of martyr, a title that he was going to seal with his blood, after the example of his Divine Master.

In India, the apostle preached the Gospel with apostolic fervor, confirming his words with miracles that touched the souls and hearts of his hearers. He converted to Christ not only simple people but also the children of kings, nobles, and women of the highest rank. He founded Christian communities, ordained priests and bishops, and entrusted to the faithful the deposit of the faith and the Holy Scriptures, which he had translated into the language of the country.

But among those he converted, there were enemies who, full of hatred, sought to take his life. It was in the year 72, while Saint Thomas, during a Eucharistic celebration, was absorbed in prayer, that the assassins arrived. They fell upon him and, brandishing their weapons, inflicted several blows on him, so that, according to tradition, the apostle fell to the ground and gave his soul to God. His death was the echo of his life: a life wholly consecrated to the service of the Divine Master, a life of love for truth, a life of apostolic zeal. His last words, uttered with fervor and carried to the heart of God, were the same as his first words pronounced under the touch of grace: 'My Lord and my God!'

The disciples of the apostle collected his remains and buried them with great veneration in the city of Calamina, in India, where a magnificent basilica was erected in his honor. A church was also dedicated to him in Edessa, where the Christians of Syria venerated the relics of Saint Thomas.

The cult of Saint Thomas spread quickly in the East and later in the West. Pope Urban VIII extended the feast of the Apostle Thomas to the entire Church on December 21. The Greeks, on the contrary, celebrated the feast of Saint Thomas on October 6, which is still done today by the Coptic Church. The church of Saint Thomas on the Palatine Hill in Rome is an indication of the cult that the West rendered to the apostle.

The apostle of Christ offers us several lessons: fidelity to the Master even to death, love for truth, and the courage to face doubt to attain a faith that enlightens the soul and vivifies it with the fullness of divine life."




கிறிஸ்துமஸ் குடிலின் முன் செபம் செய்வதன் மூலம் ஒரு பரிபூரண பலனை பெறலாம்!



உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் டிசம்பர் 8, 2023 முதல் பிப்ரவரி 2, 2024 வரை ஏதாவது ஒரு  பிரான்சிஸ்கன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடிலின் முன் செபம் செய்வதன் மூலம் ஒரு பரிபூரண பலனை பெறலாம்!

இந்த ஆண்டு, கத்தோலிக்கர்கள் அர்ச். கன்னி மரியாவின் அமல உற்பவ விழாவான டிசம்பர் 8 முதல், 2024 பிப். 2 வரை, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கோவிலில்  காணிக்கையாக ஒப்புக் கொடுத்த விழாவரை எதாவது பிரான்சிஸ்கன் சபையின் ஆலயத்தில்  குடிலின் முன் செபம் செய்வதன் மூலம் பரிபூரண பலனை பெறலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அர்ச். பிரான்சிஸ் அசிசியின் திருநாளில், இத்தாலியின் அசிசியில் உள்ள அர்ச். பிரான்சிஸ் பேராலயத்தில் விசுவாசிகள் கூடி, தங்கள் அன்பிற்குரிய இத்தாலிய துறவியைக் கௌரவிப்பதற்கும், அர்ச். பிரான்சிஸ் சபையின் 800 வது ஆண்டு 1223) மற்றும் கிரேசியோவில் கிறிஸ்து பிறப்பு காட்சியின் உருவாக்கம் (Nativity) நிறைவைக் கொண்டாடுவதற்கும் கூடினர். 

இந்த பிரான்சிஸ்கன் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரான்சிஸ்கன் குடும்பத்தின் மாநாடு போப் பிரான்சிஸிடம் இந்த முழுமையான ஆசீர்வாதத்திற்கு ஒப்புதல் கேட்டது.

 வழக்கமான நிபந்தனைகளின் கீழ் விசுவாசிகள் இந்த பரிபூரண பலனை பெற அனுமதித்தது.

நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது உடல் ரீதியாக பங்கேற்க முடியாதவர்கள் தங்கள் துன்பங்களை ஆண்டவரிடம்  சமர்ப்பிப்பதன் மூலமோ அல்லது "பக்தியின் நடைமுறைகளை மேற்கொள்வதன் மூலமோ" பரிபூரண பலனை பெறலாம்.


பரிபூரண பலனை பெற 

1. தேவஇஷ்ட பிரசாத அந்தஸ்தில் (ஆன்மாவில் சாவான பாவங்கள்) இன்றி இருக்க வேண்டும்.

2. பரிபூரண பலனைப் பெறுவதற்கான பொதுவான எண்ணம் இருக்க வேண்டும்.

தினசரி கூட, ஒருவரால் முடிந்த அனைத்து பரிபூரண பலனையும் பெற, ஒருவரின் நோக்கத்தை புதுப்பித்துக்கொள்வது ஒரு நல்ல நடைமுறையாகும்.

3. பரிபூரண பலனை பெற  விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

4. பரிந்துரைக்கப்பட்ட செபங்கள் வாய்வழியாக வாசிக்கப்பட வேண்டும்; அதாவது, சத்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் உதடுகளால் வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம். முடியாதவர்கள்  சொற்றொடரை வாய்வழியாக இல்லாமல் மனரீதியாகச் சொல்வதன் மூலம் ஒருவர் பரிபூரண பலனைப் பெறலாம்.

5. முழுமையான பரிபூரண பலனை பெற பொதுவாக "வழக்கமான நிபந்தனைகளின் கீழ்" வழங்கப்படுகின்றன.

 "வழக்கமான நிபந்தனைகளின் கீழ்"

 இந்த "வழக்கமான நிபந்தனைகள்" பாவ சங்கீர்த்தனம், திவ்ய நற்கருணை, ஒரு பிரான்சிஸ்கண் ஆலயத்திற்கு வருகை மற்றும் பரிசுத்த தந்தையின் நோக்கத்திற்காக செபம் செய்வது..



அருட்கருவிகள் - சிலுவையும் - பாடுபட்ட சுரூபமும் (Cross)

Source: Salve Regina May June -  12


சிலுவையும் பாடுபட்ட சுரூபமும்



நமது திவ்விய இரட்சர் சிலுவை மரத்தில் அறையுண்ட பாவனையாய்ச் செய்த சுரூபம் பாடுபட்ட சுரூபம். எனப்படுகின்றது; சுரூபம் இல்லாத வெறுஞ் சிலுவைக்குச் சிலுவை என்று பெயர். கிறீஸ்துவ ஆராதனை ஸ்தலங்கள், பள்ளிக்கூடங்கள், தர்ம ஸ்தாபனங்கள் முதலியவைகளை இதர மத ஸ்தாபனங்களினின்று பிரித்துக்காட்டுகிற வெளி அடையாளம் சிலுவையே.

பூர்வீக காலங்களில், பெரும் குற்றவாளிகளைச் சிலுவையில் அறைந்து கொல்வது அநேக நாடுகளில் வழக்கமாயிருந்தது. அதிக பழமையான வழக்கம் குற்றவாளியை ஓர் மரத்தில் ஆணிகளால் அல்லது கயிறுகளால் தொங்க விட்டு தூக்குப் போடுவதுதான். பின்னர் இரு மரத்துண்டுகளை உபயோகிக்கிற வழக்கம் ஏற்பட்டது. உரோமையர் அடிமைகளையும் சிலுவையில் அறைந்து கொல்வார்கள். இத்தகைய மரணத் தீர்ப்பு பெற்றவர்களின் கைகளைச் சிலுவையின் குறுக்குச் சட்டத்தில் விரித்து வைத்துக் கைகளையும் பாதங்களையும் இருப்பாணிகளால் சிலுவையோடு சேர்த்து அறைந்து தொங்கவிடுவார்கள். இது மிகவும் குரூரமான தண்டனை என்று சொல்லத் தேவையில்லை. நமது திவ்விய இரட்சகர் இப்போது சொன்ன குரூரமான விதமாய் அறையுண்டு மரித்தார்.

சிலுவையானது அக்காலங்களில் குரூர வாதனை செய்யும் ஆயுதமாக உபயோகிக்கப்பட்டாலும், அஞ்ஞானிகள் அதற்குச் சங்கை செலுத்திவந்தது குறிப்பிடத்தக்கது. அது சூரிய சுழற்சிக்கு அடையாளமாகவும் உயிருக்கு அறிகுறியாகவும் பாவிக்கப்பட்டு வந்தது. எஜிப்து தேசத்திலும் அசீரியா நாட்டிலும் சிலுவை உற்பத்தி, சக்திக்கு உருவமாக எண்ணப்பட்டது.

பௌத்த மதத்தினர் அதை மறு ஜீவியத்துக்கு அடையாளமாகக் கருதினதாகவும் சொல்கிறார்கள். ஆனால் நமது சிலுவைக்கும் அவர்கள் உபயோகித்த சிலுவைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பது உண்மை. ஆயினும் அந்த அஞ்ஞானிகள் அதே அடையாளத்தை இலௌகீக சீவியத்தின் குறியாகக் கொண்டிருந்தார்கள் என்பது ஒரு விசேஷந்தான். கிறீஸ்தவ வேதம் உரோமை இராச்சியம் முழுவதிலும் பரவத் துவக்கினதிலிருந்து, சிலுவையை விசுவாச சின்னமாகவும், பக்திக்குரிய பொருளாகவும், பகிரங்கமாய் எங்கும் உபயோகிக்கலானார்கள். திருச்சபை சிலுவையையும் பாடுபட்ட சுரூபத்தையும் மந்திரிப்பதற்கு விசேஷ ஜெபங்களை ஏற்படுத்தி, அவைகள் இரண்டையும் விசுவாசப் பற்றுதலோடு பிரயோகிக்கும்படி விசுவாசிகளைத் தூண்டினது.

மெய்யான சிலுவை:



நமது திவ்விய இரட்சகர் பாடுபட்ட சிலுவை இப்போது எங்கே இருக்கிறது? கொன்ஸ்தாந்தீன் மகா சக்கரவர்த்தியின் தாயாகிய ஹெலனம்மாள் 326-ம் ஆண்டில், எருசலேமுக்குத் திருயாத்திரையாகச் சென்றபொழுது, கல்வாரிமலையில் பல குழிகளைத் தோண்டிப் பரிசோதித்ததின் பயனாக மூன்று சிலுவைகள் அகப்பட்டன. அவைகளில் எது நமது திவ்விய இரட்சகருடையது என்று தெரிந்துகொள்ள இயலாததால் எருசலேம் நகர் மேற்றிராணியாராகிய மக்காரியுஸ் ஆண்டவர் சொன்ன யுத்திக்கிணங்கி, அந்தச் சிலுவைகள் ஒவ்வொன்றையும் வியாதியாயிருந்த ஓர் ஸ்திரியின்மேல் வைக்க, அவைகளில் ஒன்று அவளைத் தொட்டவுடன் அவள் திடீரெனப் புதுமையாய் சொஸ்தமடைந்ததினால், அச்சிலுவையே நமது திவ்விய இரட்சகர் பாடுபட்ட சிலுவை என்று தெரிந்துகொண்டார்கள். அந்த சிலுவையின் குறுக்குச் சட்டத்தை எருசலேமில் வைத்துவிட்டு, நீண்ட பாகத்தைக் கொன்ஸ்தாந்தீன்க்கு  (Constantinople) அனுப்பினார்கள். இதில் பெரிதான பாகம் சிறிது காலந்துக்குப் பிறகு உரோமைக்கு அனுப்பப்பட்டு பரிசுத்த சிலுவைக் கோவிலில் ஸ்தாபிக்கப்பட்டது. கொன்ஸ்தாந்தினோபிளில் இருந்த பாகத்தை 13-ம் நூற்றாண்டில் பிராஞ்சிய அரசராயிருந்த அர்ச். லூயிஸ் பாரீஸ் பட்டணத்துக்குக் கொண்டு போனதாகச் சொல்கிறார்கள். எருசலேமில் இருந்த பாகத்தை பெர்சியா தேசத்தார் அபகரித்துக் கொண்டுபோக. 628-ம் வருடத்தில் எராக்கிளியுஸ் (Heraclius) சக்கரவர்த்தி அதை மீட்டுக் கொண்டு வந்தார் ஆனால் முகமதியர் எருசலேமைத் தங்கள் வசமாக்கின பின், அது எங்கே போயிற்றென்று அறிய வழியில்லை.

ஆணிகள்:

நமது திவ்விய இரட்சகரை அறைந்த ஆணிகள் மூன்றா. நான்கா என்பதைப் பற்றி இன்னும் அபிப்பிராய பேதம் இருந்துவருகிறது. சில படங்களில், பாதங்களை அறைத்த ஆணி ஒன்றாகவும், வேறு சில பாடங்களில் இரண்டாகவும் காட்டியிருக்கிறது. பாதத்தைத் தாங்கும் பலகையொன்று சித்தரிக்கப்பட்ட படங்களில் பாதங்களை ஒன்றித்து ஒரே ஆணியால் அறைந்ததாகக் காட்டியிருப்பதைப் பார்க்கலாம். இந்த ஆணிகளைக் குறித்து அநேகர் பல சங்கதிகள் சொல்லிக் கொள்கிறார்கள். இவைகளையெல்லாம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கடமை இல்லை. அவைகள் விசுவாச சத்தியங்கள் அல்ல. ஆயினும், பற்பல இடங்களில் மெய்யான சிலுவையின் துண்டுகள் இருக்கிறன்றனவென்று சொல்வதை நம்ப இடமுண்டு.

பாடுபட்ட சுரூபம்:

திவ்விய பூசை செய்யும் பீடத்தில் பாடுபட்ட கரூபம் இருக்க வேண்டும் என்பதை திருச்சபையின் கட்டளை, கல்வாரி மலையில் நடந்த பலியைத் தொடர்ந்து நடத்தும் பலியே திவ்விய பூசையாகயால், இந்தக் கட்டளையின் கருத்து வெளிப்படையாயிருக்கிறது. சுற்றுப்பிரகாரங்களின் முன்னணியில் கொண்டுபோவது வழக்கமாய்ப் பாடுபட்ட சுரூபமே. கத்தோலிக்க இல்லங்களில் இதைப் பகிரங்கமான இடத்தில் வைத்துச் சங்கிக்கவேண்டும் என்பது திருச்சபையின் விருப்பம். பாடுபட்ட சுரூபத்தின் தலைப்பில் I.N.R.I. என்னும் நான்கு எழுத்துக்கள் வரைந்திருப்பது வழக்கம். "சேசு நசரேன் யூதர்களின் இராஜா" என்ற அர்த்தம் கொண்ட Iesus Nazarenus Rex Iudaeorum என்னும் இலத்தின் வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் இவை. பிலாத்துஸ் இட்ட கட்டளைப்படி நமதாண்டவரை அறைந்த சிலுவையின் தலைப்பில் இந்த வார்த்தைகள் செதுக்கப்பட்ட பலகை மாட்டியிருந்ததே இதற்குக் காரணம், சிலுவையின் அடிப்பாகத்தில் ஒரு மண்டையோடும் எழும்புகளும் காட்டியிருப்பதும் உண்டு. கல்வாரிமலை எபிரேய மொழியில் கோல்கோத்தா (Golgotha) என்பார்கள். இதற்கு அர்த்தம் “மண்டையோட்டின் ஸ்தலம்". ஆதி மனிதனாகிய ஆதாம் இவ்விடத்தில் புதைக்கப்பட்டாரென்று அவர் நிமித்தம் உண்டான பாவநோஷத்தை நீக்க வந்த சேசுநாதர் அதே இடத்தில் மரித்தார் என்றும் எடுத்துக் காட்டுவதற்காக, சிலுவையின் அடியில் ஆதாமின் மண்டை யோடு காட்டப்பட்டிருக்கிறதென்று சிவர் சொல்வார்கள்.

நன்றி: ஞானோபதேசக் கோர்வை: 3-ம் பாகம். பக். 281-284. கத்தோலிக்க களஞ்சியம் இரண்டாம் பதிப்பு. திருச்சி. 1941

Sacramentals - An explanation in Tamil

 அருட்கருவிகள் - ஓர் விளக்கம்
Sacramentals - An explanation


அருட்கருவிகள் - உதாரணங்கள்


1. நம்மை அர்ச்சிப்பதற்கு தேவதிரவிய அனுமானங்களைத் தவிர வேறே வெளி வழிவகைகள் உண்டா?

திருச்சபை உபயோகிக்கும் அருட்கருவிகள் உண்டு.

2. அருட்கருவிகள் என்பதற்கு அர்த்தமென்ன?

தேவதிரவிய அனுமானங்களின் பாவனையாக, திருச்சபை தனது மன்றாட்டினால் நமக்கு வேண்டிய சில நன்மை சகாயங்களை, விசேஷமாய் ஞான நன்மைகளை, அடைந்து கொடுக்கும்படி உபயோகிக்கும் பொருட்கள் அல்லது கிருத்தியங்களே (செயல்கள்) அருட்கருவிகள் எனப்படும்.

3. இவ்விடம் கிருத்தியங்கள் அல்லது செயல்கள் என்றால் என்ன?

அருட்கருவியின் தன்மையான விஷயம் தற்காலமாயிருந்து. அதற்குப்பின் நிலையற்றதாயிருந்தால் கிருத்தியம் அல்லது செயல்கள் எனப்படும். உதாரணமாக: மந்திரித்தல்.

4. இவ்விடம் பொருட்கள் என்றால் என்ன?

அருட்கருவியின் தன்மையான விஷயம் நிலையுள்ளதாயிருந்தால், அது பொருள் எனப்படும்.

உதாரணமாக: தீர்த்தம், மந்திரிக்கப்பட்ட சுரூபங்கள் முதலியவைகள்.

5. அருட்கருவிகள் எப்படித் தேவதிரவிய அனுமானங்களின் பாவனையாயிருக்கின்றன?

அருட் கருவிகளும் தேவதிரவிய அனுமானங்களைப் போல், தம் வழியாய் அடையக்கூடுமான இலௌகிக நன்மைகளையோ அல்லது ஞான நன்மைகளையோ குறித்துக்காட்டும் வெளியரங்கமான அடையாளங்களாயிருக்கின்றன.

6. தேவதிரவிய அனுமானங்களுக்கும் அருட்கருவிகளுக்குமுள்ள வித்தியாசம் என்ன?

(1) தேவதிரவிய அனுமானங்களெல்லாம் சேசு கிறீஸ்துநாதரால் உண்டாக்கப்பட்டன. அருட்கருவிகளோ திருச்சபையால் ஏற்படுத்தப்பட்டன. மேலும் திருச்சபை புதுத் தேவதிரவிய அனுமானங்களை ஏற்படுத்தக்கூடாது. ஆனால் புது அருட்கருவிகளை உண்டாக்கலாம்.

7. அருட்கருவிகள் எத்தனை வகைப்படும்?

அவைகளை ஆறு பிரிவாய்ப் பிரிக்கலாம்.

(1) செபங்கள் அதாவது திருச்சபையால் கற்பிக்கப்பட்டு அதன் பெயரால் சொல்லப்படும் செபங்கள். உதாரணமாக: ஞானஸ்நானம், அவஸ்தைப்பூசுதல் கொடுக்கப்படும்போது சொல்லப்படும் கர்த்தர் கற்பித்த செபம், பூசைச் செபம், திருச்சபையின் கட்டளைப்படி குருக்கள் செபிக்கும் சங்கீதமாலை முதலியவைகள். ஒவ்வொருவரும் தனித்தனியே செபிக்கும் செபம் அருட்கருவியல்ல.

(2) தீர்ந்தத் தெளித்தலும், திருப்பூசுதலும்,

(3) மந்திரிக்கப்பட்ட பதார்த்தங்களைப் புசித்தல்

(4) பூசையின் துவக்கத்திலும், திவ்விய நன்மை கொடுக்கும்போதும், கட்டளை செபம் செபிக்கும்போதும் சொல்லப்படுகிற பாவசங்கீர்த்தன மந்திரம்.

(5) திருச்சபை கற்பிக்கிற தானதர்மங்களும், ஆத்தும சரீர சம்பந்தமான சகல தமக்கிரியைகளும்,

உதாரணமாக: விசுவாசப்பரம்புதல், பாலர் சபை, அர்ச். இராயப்பர் காசு முதலியவைகளுக்குச் செய்யும் தர்மம், ஞானோபதேசம் கற்றுக் கொடுத்தல், வியாதிக்காரரைச் சந்தித்தல் முதலியவைகள். மற்றப்படி ஒவ்வொருவரும் தன் இஷ்டப்படி செய்யும் தானதர்மம் அருட்கருவியல்ல.

(6) திருச்சபையால் ஏற்படுத்தப்பட்டு ஜனங்கள் பேரிலாவது, யாதொரு பொருள் பேரிலாவது, அர்ச். பாப்பாண்டவர். மேற்றிராணிமார்கள், குருக்கள் கொடுக்கிற சகலவித ஆசீர்வாதங்களும், அவ்விதமாய் மந்திரிக்கப்பட்ட பொருட்களும்.

8. அருட்கருவிகளால் விசேஷமாய் விளையும் நன்மைகள் எவை? 

பலவித நன்மைகளை, விசேஷமாய் ஞான நன்மைகளை வருவிக்க அருட்கருவிகளுக்குச் சக்தியிருக்கின்றது. (1) நம்மிடத்தில் ஸ்திரமான பக்திப் பற்றுதலை எழுப்பி, நாம் பாவத்தை விலக்கிப் புண்ணியத்தைச் செய்யும்படி வேண்டிய உதவி வரப்பிரசாதத்தைப் பெறுவிக்கிறதுமின்றி, பாவப்பொறுத்தலை அடைய நம்மை ஆயத்தப்படுத்துகின்றன.

(2) மனப்பற்றுதலற்ற சகல அற்பப்பாவங்களும் மன்னிக்கப்படும்.

(3) பசாசானது இருக்கக்கூடிய இடங்களிலும், ஆட்களிலும், பொருட்களிலும் நின்று அதைத் துரத்துகின்றன.

(4) அநேக பிரபஞ்சத் தீமைகளினின்று இரட்சிக்கின்றன. இப்படியே வியாதி, தொத்துநோய், இடி, பஞ்சம் முதலிய துன்ப துரிதங்களிலும், ஆபத்து விபத்துக்களிலும் நின்று காப்பாற்றுகின்றன. மேலும் பற்பல இலௌகீக நன்மைகளையும் அளிக்கின்றன. உதாரணமாக: மழை, சௌக்கியம், வெள்ளாண்மை.

(5) மன்னிக்கப்பட்ட பாவங்களுக்கு இன்னும் வரவேண்டிய அநித்திய ஆக்கினையும் நீங்கிப்போகலாமென்பது சில சிறந்த வேதசாஸ்திரிகளின் அபிப்பிராயம்.

9. அருட்கருவிகளுக்குரிய நன்மைகளைப் பெறுவதற்கு வேண்டிய ஆயத்தம் என்ன?

விசுவாசம், பக்தி, பாவங்களின் மேல் மனஸ்தாபம் முதலிய பற்றுதல்கள் அவசியம். மெய்யான மனஸ்தம் இல்லாமல் யாதொரு அற்பப்பாவமும் மன்னிக்கப்படாது. அருட்கருவிகளைப் பெறுபவர்களின் ஆயத்தத்துக்குத் தகுந்தபடி அதிகமான பலனைப் பயக்குவதினால், அவைகளால் வரும் நன்மைகளை ஏராளமாய் அடையும்படி நல்ல ஆயத்தமாயிருக்க வேண்டியது

புதன், 20 டிசம்பர், 2023

சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம்! - Feast of Annunciation (March - 25)

Source: Salve Regina, March 2007 


சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம்!

வார்த்தையானவர் மாமிசமாகி, இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார் (அரு. 1:14)


ரலோகமும், பூலோகமும் ஆவலோடும் ஆர்வத்தோடும் காத்திருந்த நிகழ்ச்சி அது! மகா பரிசுத்த தமதிரித்துவ தேவனின் இரக்கமுள்ள மீட்பு திட்டத்தின் துவக்கமே அந்த திருநிகழ்ச்சி! ஆதாமின் மீறுதலால் மாசுபட்டு. மோட்சம் அடைபட்டுபோன மனுக்குலம் அங்கலாய்த்து எதிர்பார்த்தி ருந்த நிகழ்வு அது! பாதாளத்தின் இருளில் விடப்பட்டிருந்த பழைய ஏற்பாட்டின் தீர்க்கத்தரிசிகளும், பிதாபிதாக்களும் சர் வேசுரனை தயவோடு மன்றாடி கேட்டுக் கொண்டிருந்த மகா பெரிய நிகழ்ச்சி அது!!

அது என்ன நிகழ்ச்சி?! அதுவே, சேசுகிறிஸ்துவின் மனிதாவதார திரு நிகழ்ச்சி!  ஆம். அதுவேதான் ஆதியில் சிங்காரவனத்தில் பரமபிதா, சர்ப்பத்தைச் சபித்து மனுக்குலத்திற்கு வாக்களித்த மீட்பரின் அவதார திருநிகழ்ச்சி. பாவத்தால் இருளடைந்து போன உலகிற்கு ஒளியாக சேசு மீட்பர் தோன்றிய நன்னாள். மனித புத்திக்கு எட்டாத மகா பரிசுத்த தேவ இரகசியமான வார்த்தையான சர்வேசுரன் மனுவுருவெடுத்த அற்புத நாள். அந்த நாளே கிறிஸ்மஸ் என்றால் மிகையாகாது. 

ஆம்! அன்றுதான் சர்வேசுரனாலே அனுப்பப்பட்ட கபிரியேல் தூதர் அர்ச். கன்னிமாமரியிடம் இரட்சகர் சேசுகிறீஸ்துவின் பிறப்பின் மங்கள செய்தியை அறிவித்து; இஸ்பிரீத்துசாந்துவானவர் எழுந்தருள, உன்னதருடைய வல்லமை அர்ச். கன்னிமரியம்மாளுக்கு நிழலிட, நித்திய வார்த்தையான தேவன் மாமரியின் திருஉதரத்தில் கருவாக உருவானார் (காண்க. லூக். 1:35). உருவில்லா தேவன் உருவெடுக்க மகா பரிசுத்த கன்னி தாயிடம் குடிகொண்டார்! "வார்த்தையானவர் மாமிசமாகி இஷ்டப்பிரசாதமும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசமாயிருந்தார்" (அரு. 1: 14)

மாமரியின் தகுதி!

சுதனாகிய சர்வேசுரனையே கருவாக, மகவாக தமது திருவுதரத்தில் பெற்றுக்கொண்ட மாமரி எத்தகையவர்கள் அவர்களது உயர்வு மகிமை எத்துணை மேன்மையானது? அவர்களது பரிசுத்ததனம் எத்தகையது? என்று யாராலும் எடுத்துரைக்க முடியுமா? என்றால் “ஒருபோதும் முடியாது" "Nun quam satis De Maria" தாழ்ச்சியோடு  என்று கூறுகிறார் திருச்சபையின் வேதபாரகரான அர்ச். பெர்னார்ட் . ஏனெனில், பரமபிதாவே கபிரியேல் சம்மனசானவரை அவர்களிடம் அனுப்பி, "பிரிய தத்ததினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே. ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே..."(லூக். 1:28) என்று வாழ்த்தியுள்ளார். இப்படி அனுப்பப்பட்ட கபிரியேல் தூதரும் மாமரியிடம்.. "சர்வேசுரனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறீர்.. (லூக். 1:30) என்று போற்றுகிறார். இஸ்பிரீத்து சாந்துவானவரோ எலிசபெத்தம்மாள் வழியாக, "ஸ்திரீகளுக் குள்ளே ஆசி வதிக்கப்பட்டவள். நீரே பாக்கியவதி.... (லூக், 1:42)என வாழ்த்துகிறார். அதுமட்டுமல்லாமல் அர்ச். கன்னிமரியம்மாளே தமது தெய்வீக தாய்மையால் தமக்கு வந்த உயர்வை எண்ணி மகிழ்ந்து ஆண்டவரை மகிமைப்படுத்தும் படியாக பாடிய பாடலில், “இக்கால முதல் எல்லா தலைமுறைகளும் என்னை பாக்கியவதி என்பார்கள்..." (லூக். 1:48) என்று உரைத்துள்ளார்கள். தாய்த்திருச்சபையும்கூட தமது பாஸ்குகால திரிகால ஜெபத்தில் "பரலோகத்துக்கு இராக்கினியே! பாக்கியவதியான உமது திரு உதரத்தில் அவதரித்தவர். திருவுளம்பற்றின வாக்கின்படியே உயிர்த்தெழுந்தருளினார் என்று போற்றி ஜெபிக்கிறது.

திருச்சபையின் தலைசிறந்த வேதசாஸ்திரியான அர்ச். தாமஸ் அக்வினாஸ். "நமதாண்டவராகிய சேசுவை பெற்றெடுக்க கன்னிமரியாய் பாக்கியம் பெற்றார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதத்தால் சர்வேசுரனுடைய தாயாவதற்கு தகுதியுடையவர்களாகவும், அதற்கேற்ற தூய்மையும், பரிசுத்தத்தனத்தையும் அடைந்திருந்தார்கள்” என்று கூறுகிறார். இதைவிட மேலாக மாதா தமது தெய்வீகத் தாய்மையின் அந்தஸ்திற்காக ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்தப்பட்டதை உணர்த்தும் வண்ணம் அர்ச். சியென்னா பெர்னார்டின், "ஒரு மாது சர்வேசுரனைக் கர்ப்பந்தரித்து பெற்றெடுக்க வேண்டுமானால், அவள் ஒரு வகையில் அளவற்ற வரப்பிரசாதங்களின் உதவியால் கடவுளுக்கு சமமாக உயர்த்தப்பட் டிருக்க வேண்டும்!" என்று கூறி வியந்து போகிறார்.

மீட்பு திட்டத்தில் மாதாவின் பங்கு!

கபிரியேல் தூதர் அர்ச், கன்னிமரியம்மாளுக்கு சேசுவின் பிறப்பின் மங்கள வார்த்தையை அறிவித்தபின், மாதாவின் சம்மதத்திற்கு காத்திருந்தார். தேவதூதரிடம் தமது ஐயங்களைக் கேட்டுத் தெளிந்த மாமரி, ஒரு கணமும் தாமதியாமல “...இதோ. நான் ஆண்டவருடைய அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது." (லூக், 1.38) என்று பதிலளித்தார்கள். அக்கணத்திலேயே மாதாவின் மகா பரிசுத்த இரத்தத்திலிருந்து இஸ்பிரீத்துசாந்துவின் செயலால் கிறீஸ்து கருவானார். அர்ச். கன்னிமரியாயின் திருவுதரத்தில் தேவகுமாரனான சேசுகிறீஸ்துவின் மனிதாவதாரம் தேவமானிட ஒன்றிப்பு (Hypostatic union) நிறைவேறியது! பரலோகத்தையும் பூலோகத்தையும் அதன் சத்துவங்கள் யாவற்றையும் உண்டாக்கி, காத்து பராமரித்து வருகிற எல்லாம் வல்ல தேவன், மனுக்குலத்தின் மீது தாம் கொண்டிருக்கும் அளவற்ற இரக்கத்தினாலும், நேசத்தினாலும் ஒன்றுமே இயலாத ஒரு மகனாக உருவெடுக்கிறார். இதனால் அர்ச். கன்னிமரியம்மாள் "Theotokose" "தேவதாய்" ஆனார்கள்! மனுக்குலத்திற்கு சேசு மீட்பரை பெற்றுத் தந்து மாமரி மீட்பரின் தாய் ஆனார்கள். முதல் ஏவாளின் கீழ்ப்படியாமையால் வரப்பிரசாத வாழ்வை இழந்து போன மனுக்குலத்திற்கு இரண்டாம் ஏவாளாக தமது "Fiat"- "உமது வாக்கின்படியே ஆகட்டும்" என்ற தாழ்ச்சி நிறைந்த கீழ்ப்படிதலால், தேவவரப்பிரசாதத்தின் ஊற்றானவரையே (மீட்பர்) தம்முள் ஈர்த்துக்கொண்டு மனுக்குலத்திற்கு மீண்டும் உயிரளித்த ஜீவியத்தின் தாயாகவும் ஆனார்கள். தேவசித்தத்தின்படியே. சர்வேசுரனின் மீட்பு திட்டத்தில் அவருடைய சகல பாடுகளிலும் பங்கேற்று சிலுவையில் மீட்பை நிறைவேற்றும் வியாகுலத் தாயாகவும் ஆனார்கள்.

கிறீஸ்தவர்களாகிய நாம் வார்த்தை மனுவுருவெடுத்த திருநிகழ்ச்சியின் மீது பக்தி கொள்ளவேண்டும். சேசுவும் தேவமாதாவும் நம்மீது கொண்ட இரக்கத்தையும், அன்பையும் உணர்ந்து, அறிந்து அதற்காக நன்றியறிந்து அவர்களை நேசித்து நமது மீட்புக்காக மன்றாடி வரவேண்டும். மனிதாவதார திருநிகழ்ச்சியை நினைவுகூற ஜெபிக்கப்படும் திரிகால ஜெபத்தை தவறாமல் நன்றி உருக்கத்தோடு ஜெபித்து வருவோமாக. நமதன்னையைப் போன்று நமக்கு வரும் துன்பத்துயரங்களை அமைதலோடு "அப்படியே ஆகக்கடவது என்று ஏற்று உத்தம கிறீஸ்தவ வாழ்வு வாழ்வோமாக.

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 18 - அர்ச். மோனிக்கம்மாள் (St. Monica)

 அர்ச். மோனிக்கம்மாள்

"ஆண்டவரே, உமது அடியாளை இனி எடுத்துக்கொள்ளும். ஏனெனில் உமது இரட்சண்யத்தின் பலனை என் கண்கள் கண்டுவிட்டன"




பிரசித்திப்பெற்ற வேதபாரகரும் திருச்சபைத் தூண்களில் ஒருவருமாகிய அர்ச். அகுஸ்தீன் என்பவரின் தாயாகிய மோனிக்கம்மாள், ஆப்பிரிக்காவின் வடபாகத்தில் பக்தியுள்ள குடும்பத்தில் 332-ம் ஆண்டில் பிறந்தவள். மோனிக்காவின் தாய் தந்தையர் தங்கள் பிரிய குமாரத்தியைப் புண்ணியவதியான ஓர் வேலைக்காரி வசம் சிறு வயதிலேயே ஒப்படைத்திருந்தனர். இந்த வேலைக்காரி புகட்டிய நற்புத்திமதி, மோனிக்கம்மாள் தெய்வபயத்திலும் தல்லொழுக்கத்திலும் நாளடைவில் அபிவிருத்தியடைய தூண்டுகோலாயிருந்தது. திருமண பருவம் வந்தவுடன், மோனிக்கம்மாள் பத்ரீசியுஸ் என்னும் பிற மத வாலிபனை மனம்புரிய நேர்ந்தது. இவள் தனது அடக்கவொடுக்கம், கீழ்ப்படிதல், அன்பு, தயை, தாட்சண்யம் முதலிய அருங்குணங்களால் தன் கணவனின் நேசபாசத்தையும் மதிப்பையும் பெற்றுக்கொண்டாள். கணவன் அன்புடையவனாயிருந்த போதிலும் மிகவும் உணர்ச்சிவசப்படுபவன். அவன் கோபமாயிருக்கும்போது மோனிக்கம்மாள் எதிர்த்துப் பேசாமல் பொறுமையாயிருப்பாள். கோபம் தணிந்தவுடன் மிக்க அன்புடன் அவனுக்கு தற்புத்தி புகட்டி அவனது சீர்கேடான நடத்தையைச் சீர்திருத்த முயற்சிப்பாள். கடைசியாக இப்பதி விரதையின் ஜெகுபத்தினால் பத்ரீசியுள் மனத்திரும்பி பாக்கியமான மரணம் அடைந்தான். மோனிக்கம்மாளின் அயல் வீட்டுப் பெண்கள் தங்கள் கணவரோடு சண்டையிட்டு அடி உதை பட்டு முகத்தில் காயங்களோடு வந்து அவளிடம் முறையிடுவர். "உங்கள் நாவை அடக்கினால் இத்தகைய கேடு உங்களுக்கு வராது" என்பதே மோனிக்கம்மாள் இப்பெண்களுக்கு அடிக்கடி கூறும் புத்திமதி. இந்தப் புத்திமதியை நன்குணர்ந்து இதன்படி நடந்து கொண்டவர்களின் குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்கி சமாதானம் நிலைபெறும். மற்றவர்கள் குடும்பங்களோ ஓயாத போர்க்களமாகவே இருக்கும். மோனிக்கம்மாளுக்கு ஏழை

களின் மீது அணைகடந்த இரக்கமுண்டு. தனது கையினால் அவர்களுக்கு உணவு, உடை அளிப்பது அவளுக்கு ஆனந்தம். அனுதினமும் திவ்விய பலிபூசை காணத் தவறமாட்டாள். காலை மாலை தேவாலயத்தில் நடக்கும் பொது ஜெபத்திற்கு போவது இவ்வுத்தமியின் சிறந்த வழக்கம்.

மோனிக்கம்மாளுக்கு மோட்சவாசிகள்மீது உருக்கமுள்ள பக்தி பற்றுதலுண்டு, வேதசாட்சிகளின் கல்லறைக்குச் சென்று அவர்களுடைய உதவியை அடிக்கடி இரந்து மன்றாடுவாள். வேத அனுசாரத்தைச் சார்ந்த எதையும் சிறிதாக எண்ணி அலட்சியம் செய்யமாட்டாள். சர்வேசுரனுக்கடுத்த காரியங்களில் சகலமும் பெரிதே என்று மதித்து நடந்துவந்தாள். தேவ சிநேகத்தை முன்னிட்டுச் செய்யும் அற்ப நற்கிரிகைகூட தேவ சமுகத்தில் மிக்கப் பேறுபெற்ற மகத்தான புண்ணிய முயற்சியாக மாறிவிடுமென்பது அவளின் திடமான நம்பிக்கை.

மோனிக்கம்மாள் ஜெபத்திலும் தபத்திலும் வெகுநேரம் செலவழித்த போதிலும் தனது பிள்ளைகளைத் தெய்வபக்தியில் வளர்ப்பது கிறீஸ்தவத் தாயின் கடமை என எண்ணியிருந்தான். இவளுக்கு அகுஸ்தீன், நவீஜியுஸ் என்னும் இரண்டு புத்திரர் இருந்தனர். மூத்த குமாரனாகிய அகுஸ்தீன் கல்வி கற்க கார்த் தேஜ் நகர் கல்லூரிக்கு அனுப்பப்பட்டிருந்தான். இவ்வாலிபன் பக்தியுள்ள தாயின் கண்காணிப்பிலிருந்து வெகு தூரம் சென்ற பின் மனிக்கேயர் என்னும் பதிதர் வலையில் சிக்கித் தனது ஞானக் கடமைகளைக் கைநெகிழ்ந்து எதேச்சையாய்த் திரிந்து தன் அன்புள்ள தாயின் இருதயத்திற்கு அளவற்றத் துயரத்தை வருவித்தான். மோனிக்கம்மாள் தனது மகனுக்கு எவ்வளவுதான் நற்புத்தி கொல்லியும் பயனற்றுப்போனதை கண்டு, அவனுக்காக அழுது கண்ணீர் சிந்தி இடைவிடாது தேவ இரக்கத்தை மன்றாடுவாள்.

அகுஸ்தீன் உலக சாஸ்திரங்களில் மிக்க தேர்ச்சிபெற்று பட்டங்களைப் பெற்ற பின்னர், தாய்க்குத் தெரியாமல் கப்பல் ஏறி அன்னியதேசம் சென்று தனது இஷ்டப்படி திரியலாம் என்றெண்ணி இத்தாலிக்குப் பயணமானான். மகன் தப்பித்து ஓடிவிட்டான் என்று அறித்த அன்புள்ள அன்னை அவனைத் தேடிப்பிடிக்கும்படி மறு கப்பலில் ஏறி அவனைத் தொடர்ந்து சென்றாள். மிலான் பட்டணத்தில் தாயும் மகனும் ஒருவரை யொருவர் சந்தித்தனர். வேதபாரகராகிய அர்ச். அம்புரோஸ் அச்சமயம் மிலான் நகர் ஆயராயிருந்தார். இந்தப் பரிசுத்த ஆயரின் புத்திமதிகளையும், போதனைகளையும் கேட்டு அகுஸ்தீன தன் பதித அபத்தங்களை விலக்கி, கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வக் குமாரன் ஆனார். இந்த ஊதாரிப் பிள்ளை மனந்திரும்பி தந்தை வீடு சேர்ந்ததை அறிந்த பக்தியுள்ள தாய் ஆண்டவருக்குத் தாழ்மையுடன் நன்றி சமர்ப்பித்து, "ஆண்டவரே, உமது அடியாளை இனி எடுத்துக்கொள்ளும். ஏனெனில் உமது இரட்சண்யத்தின் பலனை என் கண்கள் கண்டுவிட்டன" என்று மன்றாடினான். 

அகுஸ்தீன் தன் தீய வழியை விட்டு மனந்திரும்பியதுமன்றி. குருப்பட்டம் பெற்று. தன் கல்வி, சாதுரியம், திறமை, சத்துவம் சகலத்தையும் தேவ ஊழியத்தில் செலவிடத் தீர்மானித்திருப்பதாக தனது அன்பு தாய்க்குத் தெரிவித்தார். இதைக் கேட்ட உத்தம தாய் ஆனந்தக் கண்ணீர் சொரித்து, தனது மகனை தோக்கி: “அப்பா, மகனே. என் வேலை முடித்துவிட்டது. நீ கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்து சர்வேசுரனுடையப் பிள்ளையாயிருப்பதைப் பார்க்கும் பொருட்டே சிறிதுகாலம் இவ்வுலகில் வாழ ஆசைப்பட்டேன். நல்ல ஆண்டவர் நான் கேட்டதற்கு மேல் எனக்கு அளித்தருள கிருபை செய்திருக்கிறார். நீ திருச்சபையில் சேர்ந்தது மாத்திரம் போதாதென்றாற்போல் உன்னைத் தமது திவ்விய ஊழியத்திற்கும் தெரிந்துகொண்டார். எனது பாக்கியமே பாக்கியம்" என்றாள். மோனிக்கம்மாளின் அந்தரங்க ஆவல் முற்றிலும் நிறைவேறியது. இனி மரணத்திற்கு ஆயத்தம் செய்தாள். அவளுடைய குமாரர் இருவரும் தங்கள் சொந்த தேசமாகிய ஆப்பிரிக்காவுக்குத் தாயை அழைத்துச் செல்லத் தீர்மானித்தனர். ஆனால் இத்தாலியின் துறைமுகப்பட்டனமாகிய ஓஸ்தியாவில் மோனிக்கம்மாளுக்கு கடின ஜுரம் கண்டது. பிள்ளைகள் தன்னைச் சொந்த தேசத்திற்கு அழைத்துச்செல்ல ஆவலாயிருப்பதை அறிந்து மோனிக்கம்மாள் சொல்வாள்: "என் பிரிய மக்களே. தான் அன்னிய நேசத்தில் இறந்து என் சரீரம் நமது நாட்டிற்குத் தூரமான நாட்டில் புதைக்கப்பட்டாலென்ன? ஆண்டவருக்குத் தூரம், சமீபம் உண்டோ? உலக முடிவில் மாமிச உத்தான நாளில் என் சரீரம் இருக்குமிடம் ஆண்ட வருக்குக் தெரியாதோ? மற்றவர்களோடு என்னையும் எழுப்பி எனக்கு மோட்ச பாக்கியம் அளித்தருளுவாரன்றோ? உங்கள் தாயை எவ்விடத்திலென்கிலும் அடக்கம் பண்ணுங்கள். என் சரீரத்தைப்பற்றி எனக்கு யாதொரு கவலையுமில்லை. ஆனால் ஒரேயொரு மன்றாட்டு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நான் மரித்தபின் என்னை மறவாமல் என் ஆன்ம இளைப்பாற்றிற்காக திவ்விய பலிபூசை ஒப்புக்கொடுங்கள். எனக்காக அடிக்கடி வேண்டிக்கொள்ளுங்கள்." 

இவ்வாறு மோனிக்கம்மாள் தனது அருமைப் பிள்ளைகளுக்குக் கடைசி அறிவுரை கூறிய ஐந்தாம் நாள் இக்கண்ணீர் கணவாயை விட்டு கருணா கரத்து கடவுளாகிய தனது கர்த்தர் பதம் சென்றாள். அவள் மரித்தது

387-ம் வருடம். தாயை அடக்கம் பண்ணியபின் இரு சகோதரரும் தங்கள் சொந்த தேசம் திரும்பினர். மூத்தவர் தனது தீர்மானப்படி குகுப்பட்டம் பெற்றார். அவருடைய பரிசுத்த தனத்தையும் அபாரக் கல்வியறிவையும் அறிந்த பரிசுத்த பாப்பரசர் அவரை ஆயராக நியமித்தார். அருஸ்தின் தேவ ஊழியத்தில் அயராது உழைத்து அதேக அரிய நூல்களை எழுதித் திருச்சபையின் புகழ்பெற்ற வேதபாரகராக இன்றும் விளங்குகிறார்


அர்ச். மோனிக்காம்மாளுக்கு புனிதர் பட்டம் 390ம் ஆண்டு Pope . Siricius  அவர்களால் கொடுக்கப்பட்டது. 

அவளுடைய திருநாள் மே மாதம் 4ம் தேதி.


Source: Sancta Maria 2018 - April - June