Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 13 ஜனவரி, 2024

அர்ச். கொந்திறான் - ST. GONTRAN.

 மார்ச் மாதம் 28-ம் தேதி.

அர்ச். கொந்திறான் இராசா


ST. GONTRAN.

கிளோத்தேமென்னும் பிரெஞ்சு இராசாவின் குமாரனாகிய அர்ச்சியசிஷ்ட கொந்திறான் மிகப் பேர்பெற்ற குளோவிஸ் இராசாவுக்கும் அர்ச்சியசிஷ்ட குளோத்தில்தம்மாளுக்கும் பேரனாய் இருந்தார். அவருடைய தகப்பனாகிய இராசா இறந்த பிறகு தன் சகோதரர்களோடு இராச்சியத்தைப் பங்கிட்டு ஒர்லெயான் பகுதிக்கும் புர்கொஞ் பகுதிக்கும் இராசாவானார். தன் சகோதரர்களால் அவர்களோடும் லொம்பாரென்னும் மக்களோடுஞ் சண்டை போடக் கட்டாயப்பட்டு வெற்றி கொண்டிருந்தாலும் வெற்றி பெற்றவர்களைத் தயவோடே நடத்தித் தன் சகோதார்களுடைய மக்களை ஆதரித்துச் சமாதானத்திற்குரிய சாந்த குணத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கினார்.

 தமது பிரசைகளை பாக்கியவான்களாக்க மாத்திரம் ஆசைப்பட்டு நல்ல தகப்பனாரைப்போல் அவர்களை விசாரித்து நடத்துவார். அவரிடத்தில் தயை  பத்தி விசுவாசம் நிறைந்ததினால் தரித்திரர்களை மிகுந்த தயவோடு விசாரித்து அவர்களுக்கு மிகுந்த தர்ம நன்மைகளைச் செய்து கொண்டு வருவார்.

விசேஷமாய்த் தொற்று வியாதி காலத்திலும் பஞ்சத்திலும் எளியோர்கள் பேரிலும் மற்றவர்கள் பேரிலும் அவருடைய பிறசிநேகம் மிகவும் விளங்கினது. வியாதிக்காரர்களுக்கு குறைவற்ற உதவி செய்யப்படும் பொருட்டு அவர் கண்டிப்பான கட்டளை இட்டதுமல்லாமல் தமது செபங்களினாலும் ஒருசந்தி முதலான தவங்களினாலுந் தேவ கோபத்தைத் தணிக்கவும் பிரயாசைப் படுவார். அந்த ஆக்கினை தமது பாவங்களினால் வந்ததென்றெண்ணி அதை ஒழிக்கும்படி இரவும் பகலுந் தவத்தினால் தம்மைச் சர்வேசுரனுக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பார். அவருக்குப் பிறந்த பிள்ளைகளெல்லாரும் இள வயதிலே மரித்திருந்தாலுந் தமது இராச்சியத்தைச் சுதந்தரித்துக்கொள்ள வேறு பிள்ளை இல்லையென்று அவர் கண்டிருந்தாலும், அதினால் புத்தி மயங்காமலுஞ் சுகிர்த ஒழுக்கம் விடாமலும் பொறுமையோடே தேவசித்தத்திற்குக் கீழ்ப்படிந்து சர்வேசுரனுக்குப் பத்திப் பிரமாணிக்கமாய் இருந்தார்.

போர்ச் சேவகர்களுடைய துர் நடத்தைகளை அடக்க அவர் மிகவும் விவேக முள்ள நல்லொழுக்கக் கட்டளைகளை ஏற்படுத்தினார். அவரிடத்தில் நீதி நியா யப் பற்றுதலிருந்தமையால் பாதகங்களைக் கண்டிப்பாய்த் தண்டிப்பார். ஆயினும் தமக்கே செய்யப்பட்ட குற்றங்களை மிகுந்த தயவோடே பொறுப்பார். பிறே தெகொந்தென்னுங் கொடிய இராக்கினி தம்மைக் கொல்ல அனுப்பின இரண்டு கொலைப்பாதகர்களில் ஒருவனை மாத்திரம் சிறையிலே போட்டு, மற்றொருவன் ஓர் கோவிலில் அடைக்கலமாய்ப் போனதைப் பற்றி அவனை விடுதலையாக்கினார். தம்மைக் கொல்ல அனுப்பியிருந்த இராக்கினிக்கும் பொறுத்தல் கொடுத்து அவளிடத்தில் பழிவாங்காமலும் அவளைப் பகையாளிகளுக்குக் கையளியாமலும் ஆதரித்துக் காப்பாற்றினார். அரசருக் குரிய பெருந்தன்மையுடன் சிறப்பான அநேகங் கோவில்களையும் மடங்களை யும் கட்டுவித்தார். மேற்றிராணிமார்களை மிகுந்த வணக்கத்தோடே சங்கித்து அவர்களைத் தகப்பன்மார்களாக எண்ணி அவர்களுடைய புத்தி யோசனைக ளைக் கேட்டு அனுசரிப்பார். சுகிர்த சற்குணமுள்ள இந்த நல்ல இராசா முப்பத்திரண்டு வருஷம் ஆட்சி செய்த பின்பு 595-ம் வருஷத்தில் அர்ச்சியசிஷ்டராக மரித்துத் தாம் கட்டுவித்திருந்த ஓர் கோவிலில் அடக்கஞ் செய்யப்பட்டார். அவருடைய கல்லறையில் நடந்த அநேகம் புதுமைகளை டூர்ஸ் நகரத்து மேற்றிராணியாராகிய அர்ச். கிறகோரியார் எழுதி வைத்தார்.

கிறீஸ்துவர்களே! இந்த அர்ச். இராசாவிடத்தில் எத்தனையோ புண்ணியங்கள் விளங்குகின்றன. நீதியுள்ள சண்டையில் அடைந்த வெற்றிகளால் பிற தேசங்களை அபகரிக்கத் தேடாமல், தமது பிரசைகளை மகிழ்விக்க மாத்திரம் விரும்புவார். அப்படியே பெரியோர்கள் பிறர் உடமையை அபகரிக்கத் தேடாமல், தங்கள் சொந்தப் பொருளைக்கொண்டு தர்மங்களைச் செய்யக் கடவார்கள். விசேஷமாய் இந்த அர்ச்சியசிஷ்டவரைப்போல் கொள்ளை நோய் பஞ்சம் முதலிய பொதுத் துன்பம் வருகிறபோது, தரித்திரர்களுக்கும் வியாதிக் காரர்களுக்கும் கூடியமட்டுந் தர்மஞ் செய்ய முயற்சி பண்ணக்கடவார்கள். இராசாக்கள் தங்கள் இராச்சியத்தைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுவிடவுந் தங்கள் சந்ததி இராசாங்கத்திலே நீடித்திருக்கவும் ஆசைப்படுகிறது வழக்க மானாலும் பத்தியுள்ள இந்த இராசா தன் மக்கள் எல்லாரும் இளவயதில் சாவதைக் கண்டு பொறுமையோடே தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்தாரே. நீங்களோவெனில், உங்கள் பிள்ளைகள் இறந்து போகிற சமயத்திலே தேவ சித்தத்திற்கு விரோதமாய் முறையிட்டுச் சர்வேசுரனைத் தூஷணிப்பது எவ்வளவு பாவம்!

பிள்ளையில்லாதவர்கள் தேவசித்தத்திற்கு விரோதமாய் முறைப்படுகிறதும், தங்களுக்குப் பிள்ளைகள் உண்டாகும்படிக்கு வேதத்திற்குத் துரோகமான காரியங்களைச் செய்கிறதும் அவர்கள் ஆத்துமத்திற்குத் தின்மையாகு மொழிய நன்மையாகமாட்டாது. தக்க முறையாய்ச் சர்வேசுரனிடத்திலுந் தேவமாதா முதலிய அர்ச்சியசிஷ்டர்கள் மூலமாகவும் பிள்ளை வரம் கேட்ட பின்பு, அதற்குத் தேவ சித்தம் இல்லாமற் போனால் பொறுமையோடே கீழ்ப்படிந்து, ஓர் அநாதைப் பிள்ளையை தனக்குப் பிள்ளையாகச் சுவீகரித்துக் கொண்டு வளர்ப்பது உத்தம புண்ணியமாகும். இந்த இராசா தம்மைக் கொலை செய்விக்கத் தேடினவளுக்கு முதலாய் மன்னிப்பு கொடுத்து நன்மை செய்தார். அப்படியிருக்கத் தனக்குச் சொல்லப்பட்ட சில தூஷணம் முதலான அற்ப முகாந்தரங்களைப்பற்றி, மாறாத பகை வர்மம் வைத்திருப்பவர்கள் தேவ கற்பனை மீறுவதற்கு என்ன நியாயஞ் சொல்லக்கூடும். அவர்கள் தங்கள் பாவங்களுக்குத் தேவனிடத்தில் பொறுத்தலை அடையும் படி தாங்களுந் தங்கள் பகையாளிகளுக்கு மெய்யாகவே பொறுத்தலைக் கொடுக்க வேண்டுமென்பது திண்ணம்.

திரிகால ஜெபம் - The Angelus





(இந்த ஜெபத்தை முழங்காலிலிருந்து வேண்டிக்கொள்ள வேண்டும். ஆனால் சனிக்கிழமை சாயந்திரமும், ஞாயிற்றுக்கிழமையிலும் இதை நின்று கொண்டு சொல்ல வேண்டியது)

ஆண்டவருடைய சம்மனசானது மரியாயுடனே விஷேஷ் சொல்லிற்று.
 அவள் இஸ்பிரீத்துசாந்துவினாலே கர்ப்பிணியானாள். (அருள்)

இதோ ஆண்டவருடைய அடிமையானவள் உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது" (அருள்)

வார்த்தையானது மாம்சமாகி,
எங்களுடனே கூட வாசமாயிருந்தது (அருள்)

முதல்: சேசு கிறீஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.

எல்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! சம்மனசு சொன்னதினாலே உமக்கு குமாரனாகிய சேசு கிறீஸ்து மனுஷனானதை அறிந் திருக்கிற நாங்கள், அவருடைய பாடுகளினாலேயும், சிலுவையினாலேயும் உத்தானத்தின் மகி மையை அடையத் தக்கதாக, எங்களுக்கு அநுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று தேவரீரை வேண்டிக்கொள்கிறோம். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.



பாஸ்கு காலத்தின் திரிகால ஜெபம்

(இது பெரிய சனி மாலை முதல் அர்ச். தமதிரித்துவத்தின் திருநாள் வரைக்கும் நின்றுகொண்டு சொல்லத்தக்கது )

பரலோகத்துக்கு இராக்கினியே ! மனங் களிகூறும் அல்லேலூயா அதேதெனில் பாக்கியவதியான உமது திரு உதரத்தில் அவதரித்தவர் - அல்லேலூயா

திருவுளம்பற்றின வாக்கின்படியே உயிர்த்தெழுந்தருளினார் - அல்லேலூயா
எங்களுக்காக சர்வேசுரனை மன்றாடும்- அல்லேலூயா 

எப்போதும் கன்னிகையான மரியாயே அகமகிழ்ந்து பூரிக்கக்கடவீர் - அல்லேலூயா
அதேதெனில் ஆண்டவர் மெய்யாகவே உத்தான மானார் - அல்லேலூயா.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! உம்முடைய திருக்குமாரனுமாய், எங்கள் ஆண்டவருமாயிருக்கிற சேசு கிறீஸ்துவின் உத்தானத்தினாலே உலகங்களிக்கச் சித்தமானீரே. கன்னி மரியாயாகிய அவருடைய திருத்தாயாராலே நித்திய ஜீவியமான பரலோக வாழ்வை நாங்கள் அடையும்படிக்கு அநுக்கிரகம் பண்ணியருளும். இந்த 
மன்றாட்டுக்களை யெல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுநாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் - ஆமென்.


The Angelus prayer in Tamil (Paschal time)

The Angelus Prayer in Tamil


அருட்கருவிகள் - திரிகால ஜெபம் (The Angelus)

 திரிகால ஜெபம்

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941

இந்த  ஜெபம் காலை. நடுப்பகல், மாலை இம்மூன்று  வேளைகளிலும் சொல்லப் படுவதால் திரிகால ஜெபம் என்றழைக்கப்படுகிறது. நமதாண்டவர் மனித அவதாரமான சம்பவத்தை இது நமக்கு நினைப்பூட்டுகிறது. இந்தப் பக்தி முயற்சிக்கு ஆரம்பம் யாதொன்றும் திட்டமாய் சொல்ல முடியாது. ஆயினும் சில குறிப்புகளை உத்தேசமாய் எடுத்துரைக்கலாம். முன்னாட்களில் ஜனங்கள் எல்லோரும் விளக்கை அனைத்துவிட்டு நித்திரைக்குப் போகும்படி மணிக் கணக்கு சில நேரங்களில் ஏற்பட்டிருத்தது. அது எவ்வாறெனில் குறிப்பிட்ட நேரத்தில் பட்டணக்கிலுள்ள பெரிய மணி அடிக்கப்படும் அந்த மணிச் சத்தம் கேட்ட பிறகு, எந்த வீட்டிலும் வெளிச்சம் இருக்கக் கூடாது. ஒருவரும் விழித்து இருக்கக்கூடாது என்ற சட்டம் ஏற்பட்டிருந்தது. நாளடைவில் இந்த மணியே கிறிஸ்தவ தேசங்களில் இராச் செபத்துக்கு ஜனங்களை அழைக்கும் அடையாளமாயிற்று. 

காலையில் மணி அடித்தவுடன் சமாதானத்துக்காக மூன்று பர. மூன்று அருள் நிறை மந்திரம் சொல்லும்படியாக முதன் முதல் 1318-ம் ஆண்டில் இத்தாலியா தேசத்தைச் சேர்ந்த பார்மாவில் உண்டான கட்டளையே, அதிகாலை மணி அடித்து ஜெபம் சொல்வதற்கு ஆரம்பம் என்று கூற நியாயமுண்டு, மத்தியான வேளையில் மணி அடித்தது. ஆரம்பத்தில் வெள்ளிக் கிழமைகளில் மாத்திரம் நமதாண்டவருடைய பாடுகளின்பேரில் தியானிக்க வேண்டுமென்று இது ஜனங்களுக்கு ஞாபகப் படுத்திக் கொண்டு வந்தது. சிறிது காலத்துக்குப் பிறகு, மற்ற நாட்களிலும் மத்தியான மணி அடித்துக் காலை, மாலை சொல்கிற ஜெபங்களையே சொல்லும்படி, 1456-ம் ஆண்டின் 3-வது கலிஸ்துஸ் என்னும் பாப்பானவர் கட்டளையிட்டார்.

துவக்கத்தில், அருள் நிறை மந்திரத்தின் முதற்பாகத்தை மும்முறை ஜெபிப்பதே திரிகால ஜெபமாயிருந்தது. திரு ஸ்தல மீட்புக்காக இது கட்டளையிடப்பட்டது. நாளடைவில்தான் இப்போது இருக்கிற பிரகாரம், மூன்று வசனங்களும், மூன்று அருள் நிறை மந்திரமும், மன்றாட்டும் சேர்த்துச் சொல்கிற வழக்கம் உண்டானது. ஒவ்வொரு நாளும் மும்முறை நமதாண்டவரின் மனித அவதாரத்தை ஞாபகப்படுத்தி நமது சீவியமும் தஞ்சமும் மதுரமுமாகிய தேவதாயின் சலுகையைத் நேடுவதற்கு நம்மை ஏவித் தூண்டுகிற இந்த ஜெபம் வெகு பிரயோசனமானதென்று சொல்லத் தேவையில்லை.

பாஸ்கு காலத்தில் அதாவது உயிர்த்த சனிக்கிழமை மாலையிலிருந்து அர்ச் தமதிரித்துவத்தின் திருநாள் வரைக்கும் “ஆண்டவருடைய சம்மனசானது" என்னும் செபத்துக்குப் பதிலாக, "பரலோகத்துக்கு இராக்கினியே மனங்களிகூரும்" என்னும் ஜெபத்தைச் சொல்லிவருகிறோம். 596-ம் ஆண்டில். அர்ச். கிரகோரியார் பாப்புவாயிருந்த பொழுது உரோமை நகரில் உண்டான கொள்ளைநோய் அகன்று போகும்படியாக அர்ச். பாப்பானவரும் விசுவாசிகளும் ஜெபித்துக்கொண்டு சுற்றுப்பிரகாரமாய் வருகையில், வானத்திலிருந்து சம்மனசுக்கள் இந்த வசனங்களைப் பாடினார்கள் என்றும், அந்த கணமே கொள்ளை நோய் விலகிப் போயிற்றென்றும் சிலர் சொல்லி இருக்கிறார்கள். ஆணால். இந்த ஜெபம் மத்திய நூற்றாண்டு காலத்தில் உண்டானதென்று மாத்திரம் நிச்சயமாய்ச் சொல்லக்கூடும்.

பலன்கள்: 


திரிகால ஜெபம் சொல்கிற ஒவ்வொரு தடவைக்கும்  
நூறு நாள் பலனும், அநுதினமும் மும்முறை சொல்லி வருகிறவர்களுக்கு மாதக்கடைசியில் பரிபூரண பலனும் 1724-ம் ஆண்டிலேயே, 13 ம் ஆசிர்வாதப்பர் என்னும் பாப்பானவர் கட்டளையிட்டருளினார். இந்தப் பலன்களை அடைவதற்கு நியமித்திருந்த நிபந்தனைகளை 13 ம் சிங்கராயர் 1884 in ஆண்டில் மாற்றி இலகுவாக்கினார். இதனிமித்தம் இப்பலன் களை அடைவதற்கு அவசியம் முழந்தாளிலிருந்து மணிச் சத்தம் கேட்கிற வேளையில் திரிகால ஜெபம் சொல்லவேண்டுமென்று நிபந்தனை யில்லை. சனிக்கிழமை சாயந்திரமும் ஞாயிற்றுக் கிழமையும். நீங்கலாக மற்ற நாட்களில் முழந்தாளிலிருந்து சோல்வதே ஒழுங்கு. ஆயினும் பலனை அடைவதற்கு இது அவசியமில்லை. ஆகையால் பகிரங்கமான பொது ஸ்தலங்களில் இருக்க நேரிடும் காலங்களிலும் இத்த ஜெபத்தைச் சொல்வது எளிதாயிருக்கிறது. மேலும், மணிச்சத்தம் கேட்கையில் ஜெபித் தால்தான் பலன் உண்டு என்கிற நிபந்தனையும் எடுபட்டுப் போனதினால், மணிச்சத்தம் கேட்கக்கூடாத இடங்களில் இருப்பவர்களும் காலை, மாலை, மத்தியானம் இந்த ஜெபத்தைச் சொல்லி அதற்குக் குறிக்கப்பட்ட பலன்களை யெல்லாம். அடைந்துகொள்ளலாம். ஆண்டவருடைய சம்மனசானது என்கிற ஜெபம் தெரியாதவர்கள் 5 தடவை அருள் நிறை மந்திரம் சொன்னால், அந்தப் பலன்களை அடையக்கூடும்
.


வெள்ளி, 12 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - St. Isaac

 மார்ச் மாதம் 27-ந் தேதி.

அர்ச். ஈசாக்

St. ISAAC.


அர்ச், ஈசாக் என்பவர் உலகத்தை வெறுத்து, வனாந்தரத்தில் போய் அங்கே கடின தபம் செய்து வாழ்ந்தார். அவருடைய நாளிலே கொன்ஸ்தான்டி னோப்பிள் இராயனாகிய வலேன்ஸ் என்பவன் பதிதனாக இருந்ததினாலே கத்தோலிக்கு சபையார்களுக்கு பற்பல இடைஞ்சல்களைப் பண்ணி, அவர்களுடைய கோயில்களை எல்லாம் மூடிவிடச் சொல்லித் தன் எதிரிகளின் பேரில் சண்டைக்குப் பயணப்பட்டான்.

இப்படி இருக்கையிலே சர்வேசுரன் அர்ச், ஈசாக்குக் கற்பித்ததாவது: நீ இராயனிடத்தில் போய், அவன் கருதிப்போகிற காரியம் அநுகூலமாக வேண்டு மானால், அடைபட்டிருக்கிற தேவாலயங்களைத் திறக்க வேண்டுமென்று சொல்லென்றார். அவ்வாறே அவர் இராயனிடம் போய் நடந்த சேதி சொல்லுமிடத்தில் அவர் ஓர் பைத்தியக்கார னென்று இராயன் அவரைப் புறக்கணித்தான். மறுபடி அவர் சென்று அப்படி பேசினதற்கு இராயன் இசைவது போல் தோன்றினான். ஆயினுந் தன் ஆலோசனைக்காரரிடம் யோசனை கேட்ட போது பதிதர்களாயிருந்த அவர்கள் சொன்ன துர்ப் புத்தியினாலே இராயன் மனது கலங்கிச் சம்மதிக்க மாட்டோம் என்றான்.

மூன்றாம் முறையும் ஆண்டவர் கட்டளையிட்டபடி யே அர்ச், ஈசாக்கு இராயனிடத்தில் போய்ப் பேசிய போது, இராயன் கோபித்து அவரைப் பிடிக்கவும் முட்புதரில் தள்ளிப் போடவுங் கட்டளையிட்டான். ஆயினும் அவர் மீண்டும் திரும்பி வந்து சொன்னதாவது : நான் சொன்ன காரியத்திற்கு நீர் உடன்படா திருந்தால், இப்போது நீர் தொடுக்கப் போகிற சண்டையிலே உமது இராணுவமெல்லாம் நிர்மூலமாய்ப் போவதுந் தவிர எதிரிகள் உம்மைப் பிடித்து அக்கினி யிலே சுட்டுப்போடுவார்கள் என்றார். இராயன் தபோதனர் சொன்னதை நம்பாமல், அவரைக் கோபித்து காவலிலே வைக்கக் கட்டளையிட்டு, நாம் சண்டைக்கு போய் வந்த பிறகு இந்த முனிவர் பொய்யான தீர்க்கத் தரிசனஞ் சொன்னதினாலே இவனுக்கு ஆக்கினையிடுவோம் என்று சொல்லித் தன் பயணந் தொடர்ந்து பாளையத்திற்குப் போனான். அங்கே அவன் சண்டை தொடுத்த போது, அர்ச். ஈசாக் சொன்னபடியே சத்துருக்களாலே அவன் படை யெல்லாம் நிர்மூலமான தன்றி, இராயனோ அவன் கையில் அகப்பட்டான். அவர்கள் இரக்கமில்லாமல் அவனை அக்கினியில் தள்ளி சுட்டுப் போட்டார்கள்.

இந்தச் சேதிகளெல்லாங் கொன்ஸ்தான் டினோப்பிள் என்னும் தலைநகரில் அறியப்பட்ட பிறகு, அங்கே இராயனுடைய கட்டளையின்படியே அர்ச். ஈசாக்கைக் காவலில் வைத்துக் கொண்டிருந்த பெரிய உத்தியோகஸ்தர் அவர் மெய்யான தீர்க்கதரிசியென்று விசுவசித்து, அவருக்குச் சங்கை பண்ணி, அவரைக் காவலிலே நின்று விடுதலையாக்கினதுமன்றி, அவர் இருக்க ஒரு மடமுங் கட்டுவித்தார்கள். அவர் வேறு முனிவர்களோடு அதிலிருந்து தவ முதலிய புண்ணியங்களைச் செய்துகொண்டிருக் கிறபோது, நான்காம் நூற்றாண்டில் அர்ச்சியசிஷ்ட சாக மரணம் அடைந்தார்.

கிறீஸ்துவர்களே! அர்ச். ஈசாக் தேவ ஏவுதலால் சொன்ன புத்திக்கு இராயன் உடன்படாதகினாலே அவன் தனக்குப் பெரிய தண்டனை யாகிய தோல்வியும் சாவும் வர இடங்கொடுத்தான். இக்காலத்தி லேயுஞ் சில முறை இப்படிச் சம்பவிக்கின்றது. ஆண்டவர் சம்மனசுக்கள் வழியாகவும், குருக்கள் வழியாகவும், புண்ணியவான் கள் வழியாகவும் பாவிகளுக்குப் புத்திமதி சொல்லி வருகிறார். அவர்கள் சில பாவங்களை விட்டு விடாதிருந்தால் ஆக்கினை வருமென்று அநேகம் விசை அவர்கள் எச்சரித்து வந்தபடியே நல்ல புத்திக்கு அவர்கள் இடங்கொடாதிருக்கிறகினால் தாங்கள் தானே தங்களுக்கு ஆக்கினை வர வழிசெய்கிறார்கள். 

ஆண்டவர் நமக்கு மனச் சுதந்தரங் கட்டளையிட்டதினால், வேண்டுமானால் அந்தந்த நல்ல புத்திக்கு இடங் கொடுக்கலாம். தலையெழுத்தினாலே அந்த நல்ல புத்திக்கு நான் இடங்கொடுக்க விக்கினப்பட்டேன் என்று உலகத்தார் சொல்லுகிறது அபத்தம். தலையெ ழுத்தென்பது பிரம லிபியென்று சொல்லுகிறார்கள். தலையெழுத்து உண்டென்று உலகத்தார் சொல்லுகி றது பெரும் அபத்தமொழிய மற்றப்படியல்ல. 

அர்ச் ஈசாக் காவலிலே இருந்தபோது மிகுந்த கஸ்திப்பட் டிருந்தாலும் அந்தக் கஸ்தி கொஞ்ச நாளிலே முடிந்ததல்லாமல், அது முகாந்தரமாக இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் அவருக்கு மிகுந்த நன்மை வந்தது. அவ்வண்ணமே நீங்கள் சர்வேசுரனைக் குறித்துக் கஸ்தி அனுபவித் தால் இவ்வுலகத்திலேயாவது மறுவுலகத்திலேயாவது அதனால் உங்களுக்குத் தப்பா மல் நன்மை வருமென்று உணரவேண்டும்.

Lives of Saint in English 2 - Saint Colombe

 Virgin and Martyr in Sens (circa 273).

Celebrated on December 31.

Of Spanish origin, the holy martyr, whose life we will summarize based on Acts written in the 8th century, should not be confused with another saint of the same name. This other saint, also a virgin and martyr, is highly venerated in Cordoba, especially, and died in 853, nearly six centuries later. The account of the passion of the Senonian martyr has not reached us in its entirety, especially not in its original text, which provided more accuracy in its details. Added to the ancient version are episodes that seem inspired by other martyr passions. Here again, we recount the tradition without being able to affirm the historical truth of each detail.

Saint Colombe, instructed by the Holy Spirit.

Colombe was born in the 6th century, under the sky of Spain, to a noble but pagan family. Nevertheless, the Holy Spirit chose the child as a chosen bride.

From her birth, he filled her with his light and love. By divine instinct, Colombe, still in the cradle, knew the vanity of idols. When they tried to make her worship them, she expressed her repugnance with such cries and moans that they dared not force her. "It's just a passing whim," they said, and willingly forgave her.

However, the horror that the young virgin felt for idols grew within her with age. She even shared her feelings with her playmates: Augustin, Sanctien, Béate, all of whom were to be placed on the altars and venerated by the Church of Sens on September 7.

One day, they learned that the worship of the true God was growing in Gaul, amidst bloody persecutions. Urged by grace, they secretly fled, leaving behind their wealth, homeland, and parents forever.

Two thirsts quenched.

During this long journey, exhausted and thirsty, they stopped when they could no longer go on. Colombe, kneeling, prayed to the Master of the earth and waters. She had not yet risen when a clear spring gushed at her feet.

But the devout travelers still craved the living waters that spring forth to eternal life. It was in Vienne, in Dauphiné, that they could quench their thirst. There, they were instructed in the mysteries of the faith, then baptized, becoming the children of Christ and the Church.

How one sanctifies oneself and becomes an apostle.

The neophytes, to better understand the sacred truth, subjected their bodies to fasting and disciplines. Their souls, liberated from the yoke and obscurities of the flesh, persevered in contemplation long into the night. Thus, their prayers and examples had strengthened the Viennese Christianity when God called them to other labors.

Colombe, increasingly enamored of the truth, learned that it had further developed in the Senonian region, and she led her companions there.

In Sens, the young travelers were again an edification for the faithful. They devoted themselves to penance and prayer day and night. They went on pilgrimages to seek virtue at the tombs of martyrs.

The crown of martyrdom is denied to Saint Colombe.

At that time, Emperor Aurelian visited Gaul, and he stopped in Sens. To earn his favor, the magistrates denounced Colombe and her companions as the most fervent proselytes of Christianity. The tyrant summoned the audacious ones to his court and condemned them all to the ultimate punishment. However, out of respect for her birth and nobility, he wanted to save Colombe. Led with her companions outside the city walls, the virgin saw them all die, joy on their faces, hope in their hearts. But when it was her turn to present her head to the executioners, she was chained and taken to a dungeon located, according to tradition, at the site of the Sainte-Colombe-la-Petite church, at the corner of Grande-Rue and Rue de l'Ecrivain.

Thus, the crown of martyrdom escaped her just when she thought she could feel it on her forehead. At this thought, torrents of tears flowed from the eyes of the young girl. Aurelian believed she was shaken in her faith, and he convinced himself that a little anger would be enough to overcome her. Therefore, he had the virgin brought back before him.

Saint Colombe appears before the emperor.

The dialogue that unfolds between the tyrant and the young Christian resembles several others found in the Acts of the Martyrs. It is always, on one side, the initially insinuating tone that will be followed by violence; on the other side, firmness, both gentle and unyielding, resisting with serenity both flattery and threats.

- What is your name? the emperor said, casting an irritated look at Colombe.

And she replied calmly:

- My name is Colombe. Your anger does not frighten me, for the love of Christ strengthens me.

- This love for Christ is your condemnation, Aurelian retorted. But why let yourself be deceived by false beliefs?

- It is your religion that is false, while my faith rests on the truth. I worship the one God who created us in His image. I worship and confess Jesus Christ, the eternal Son of the Father, who became man to save us...

- And thus, you defy our decrees that order the worship of only the gods of the empire?

- These gods are the work of your hands. They will perish, and their worshippers with them. Burn these vain images, inventions of the demon, who, through this senseless worship, wants to attach your hearts. As for me, I give all honor and glory to the God of truth, to Jesus Christ, who gives eternal life.

- But, unfortunate child! Will you prefer these illusions to the sweet joys that your youth and illustrious birth can provide? Become faithful to our gods, and you will see the highest dignitaries of my court vie for your hand.

The prudent virgin did not want to listen further to the seductive serpent.

- The examples of my Jesus teach me to scorn your dangerous offers, she said to the emperor. Could I leave a divine spouse to take a mortal one? No, I will not be foolish enough to exchange the joys of eternity for a day's pleasure. You who want to seduce me will suffer endlessly with Satan, your master, if, before you die, you do not bear witness to the truth.

- That's too many words! Sacrifice to the gods, or I will have you dishonored and perish in the flames.

- God is good and powerful; He will grant me to go to martyrdom still a virgin.

An ironic laughter greeted these words, and Colombe was immediately locked in one of the cages of the amphitheater. This spectacle place, elliptically shaped, was located at the site later called "le Clos des Arènes."

A bear serves God against the impious.

Meanwhile, Aurelian had left the captive to the violence of a young debaucher. Colombe was in prayer when he entered the prison. The virgin stopped him with just one of her looks, where a ray of the divine greatness and majesty, drawn from prayer, still shone.

Recovered from his stupor, the guilty one advanced, but Colombe recoiled invoking the name of Jesus. Immediately, a bear appeared between the victim and her persecutor; the animal overcame the latter and lifted its gaze toward the prisoner, as if to ask her to decide the fate of her tormentor.

- In the name of Him who sent you to save my virginity, said the servant of Christ, spare this guilty one for a moment.

Then, addressing the young man:

- Understand the power and goodness of Jesus Christ, who sends me this animal to rescue me from your outrages. Open your eyes to the truth, say sincerely: "I am a Christian," or else you will become the prey of this ferocious beast.

Fear, the miracle, and undoubtedly the secret wishes of the virgin had changed the soul of the criminal.

- I am a Christian! he said, imploring Colombe's forgiveness; I am a Christian!

Hardly liberated, he proclaimed in the city what had happened to him, repeating endlessly:

- The God of the Christians is the only true God.

The miracle, far from appeasing Aurelian, only enraged him further.

- Let this sorceress be put to death in the flames! he exclaimed in fury.

So, they came to fetch Colombe to lead her to the stake. But the bear was there, lying in front of the door, ready to pounce on the first who entered the cell.

Moreover, the executors of the imperial order rejoiced at this obstacle. The face of Colombe, so gentle, so calm, so full of majesty, had touched them, and the visible protection she had received so far made them fear drawing down the wrath of the Almighty God, who put wild beasts in the service of His own.





Saint Colombe and the Bear in the Flames.

It was reported to the emperor that the bear was defending the condemned, and it was impossible to approach her. Aurelian refused to listen.

- Let her die, he said, or I will make sure all of you perish with her.

The executioners were frightened by the threat of a powerful man. They surrounded the cage where Colombe, kneeling, continued to pray, and soon set it on fire.

As the flames approached and grew, the bear, frightened, licked Colombe's hands and seemed, through cries, to ask her to save him from death. With a sign of the cross, the virgin opened a passage for him in the midst of the bonfire: the animal rushed in, joyful. The frightened crowd let him pass and saw him disappear into the nearby forests.

Soon, from a clear and serene sky, torrents of rain descended, and, like Daniel and his companions of old, Colombe, more beautiful than ever, reappeared, triumphant and unharmed, in the extinguished furnace.

How to describe the joy and enthusiasm of the people at this happy moment? "I am a Christian!" they shouted from all sides. "Let's break our false gods! And let's die for Christ with the blessed Colombe!"

Aurelian condemns Saint Colombe to death.

Those who knew Aurelian knew that, despite everything, Christians could not find favor with him. Indeed, as soon as he learned that Colombe had escaped the fire, he had her brought back to him.

- What tricks do you use, he cried, to escape all the punishments that are prepared for you?

- The victorious arm of Jesus Christ alone protected me from your outrages and cruelty.

- And you push insolence to the point of insulting the emperor! But this time, nothing can take you from my hands. Lictors, untie your bundles. Flog this impious one, tear her with iron nails, and when her body is nothing but a wound, go behead her.

A celestial joy shone in the eyes of the virgin, but out of pity for her persecutor, she left him with these last words:

- I do not fear death. But I tremble at the thought of the sentence that will strike the damned on the last day. You will be among the damned if you do not expiate your crimes in penance.

But Aurelian remained unmoved. Many martyrs had already uttered similar threats in his ears, and he had come to despise them. Thus, the sentence was not changed; Colombe was led to the scaffold.

The Joys of Martyrdom.

She was laid on the rack: her flesh was torn with iron nails, she was flogged to the point of blood, but the generous martyr was not on earth; her spirit was fixed in heaven. Not a complaint came from her lips, not a tear flowed from her eyes.

However, tired of striking, the executioners dragged their victim outside the walls of Sens, north of the village of Saint-Clément, to the fountain of Azon. The virgin's prayer still lasted when they arrived there. Colombe asked for a few moments to finish it. The executioners refused her at first. They were eager to finish their hideous mission as murderers of an innocent. But greed made them overcome this reluctance. The virgin stripped herself of the rich cloak with which she had adorned herself to go to Jesus Christ, her Spouse.

- Take it, she said to them, it is all that remains to me, but at least let me finish my prayer.

And, prostrate on the ground, she invoked for the last time Him for whom she was about to shed her blood, then, rising, she ran to present her head to the soldiers' sword herself, saying:

- My God, forgive them, for they do not know what they are doing.

The sound of the fatal blow mixed with these last words. It was December 31, 273 or 274.

Brutes restore to Saints the honor denied them by men.

Not content with slaughtering the faithful servants of Christ, Aurelian also attacked their corpses. He wanted Colombe's body to be abandoned to the wild beasts. The land on which the virgin had been sacrificed was the property of the noble Aubertus, chief of the legion of Sens. The eyes of his soul and those of his body were closed to the light, as he was blind and a pagan.

One day, while grazing his herds near the fountain of Azon, the slaves saw an ox kneeling beside a bush; from its horns emanated a dazzling light. Surprised, they ran and found Colombe's remains. They prostrated themselves before this chaste body, then hurriedly went to tell their master about the miracle.

As they speak, divine grace descends into Aubertus' heart. The spirit of light reveals to him the futility of idols and inspires in him a burning love for the Church of Christ. The new convert also conceives hope of regaining his sight through the merits of generous Colombe. Led to the sacred remains of the virgin, he bends down to touch them, and immediately, his eyes open and are healed.

In gratitude, he had the body of the Saint honorably buried in his own palace. At the very place where the remains of the martyr had been abandoned, he built a church adjacent to the fountain of Azon and gave for its maintenance a vast meadow designated in ancient documents as "Pré-Aubert."

Popularity of the cult of Saint Colombe in the Middle Ages.

The influx of pilgrims to the tomb of Saint Colombe had become too strong for the secular priests, attached to the church founded by Aubertus, to be able to receive them all. Clotaire II, king of the Franks, erected a monastery there in 620, endowing it with a piece of land from his estate called Cuy. Saint Didier, bishop of Auxerre, and especially Saint Loup, bishop of Troyes, increased the income of the abbey with their generosity. Their example was followed by King Dagobert, who entrusted Saint Eloi with the administration of the monastery's possessions.

Around the middle of the 9th century, the monks, wanting to use part of the wealth of the abbey for the glory of God, replaced the ancient church of Aubertus with a spacious basilica consecrated in 853 by Wénilon, archbishop of Sens, and placed under the common patronage of Saint Colombe, Saint Loup buried nearby, and Sainte Croix. The next day, the bodies of Saint Colombe and Saint Loup were brought out of the crypt where they were enclosed, to be placed in a more accessible location. It is in this abbey that the last competitor of Charles the Simple, Raoul, duke of Burgundy, who died in Auxerre in 936, received burial. He had given it his own crown and enriched it with lands and all kinds of gifts.

During his stay in the province of Sens, Saint Peter Damian († 1072) came on a pilgrimage to the tomb of Saint Colombe, and his works contain the eulogy of the Saint that he delivered, undoubtedly, on this occasion.

In the 12th century, the basilica of Sainte-Colombe was rebuilt for the third time and consecrated by Pope Alexander III on April 26, 1164. The influx of pilgrims was such that thirty thousand were counted that day. Arriving in Sens at the end of September 1163, the Pope extended his stay there until April 1165. It was around the same time that the famous archbishop of Canterbury, Saint Thomas Becket, forced to seek refuge in France to escape the blows of the king of England, Henry II, visited this place.

Like so many other revered relics of our medieval ancestors, those of Saint Colombe were scattered in the 16th century by the Protestant upheaval. Nevertheless, the memory of the glorious victim of Aurelian is still alive not only in Sens but also in more than thirty parishes in France that have chosen her as their patron saint. The feast is celebrated on July 28 in Sens, under the double rite of the second class, and on December 31 in Meaux and Lyon.

In popular art, Saint Colombe is often depicted with attributes such as an angel, a bonfire, a dove, a crown, and a bear.


A. L.


Consulted sources: Mgr Paul Guérin, Les Petits Bollandistes (Paris, 1897). Canon Blondel, Vie des Saints du diocèse de Sens et Auxerre (Sens and Auxerre, 1885). (V. S. B. P., n° 203.)


Source: https://laportelatine.org/spiritualite/vies-de-saints/sainte-colombe

புதன், 10 ஜனவரி, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - St. Hyginus

சனவரி மாதம் 11-ந் தேதி 
பா. வே 
அர்ச். இஜினார் 
St. Hyginus 


அர்ச். இஜினார் அக்தேன் பட்டணத்திலே பிறந்தார். அவருடைய ஆச்சரியமான புண்ணியங்கள் முகாந்தரமாக அக்காலத்திலிருந்த அர்ச். தெலெஸ் போர் என்னும் பாப்பாண்டவர் இறந்த பிறகு அந்தப் பட்டம் அவருக்கு வந்தது. அவர் அந்தப் பட்டத்திலிருக்கிறபொது உலகத்துக்கு அநேக கடின பொல்லாப்புகள் உண்டாயின. பிற 

மதத்தார் இதைக் கண்டு  சர்வேசுரனுடைய வேதம் பரம்பி மிஞ்சினதினாலே அந்தப் பொல்லாப்பெல்லாம் வருகின்றதென்றும், கிறீஸ்துவர்கள் தங்கள் பலதேவர்களை விட்டுவிட்டதினாலே அந்தத் தேவர்கள் பூலோகத்தின் பேரிலே மகா கோபமாயிருந்து இத்தனை பொல்லாப்புகளை ஆக்கினையாகக் கட்டளையிட்டார்களென்றும், அவர்களுடைய கோபத்தை அமர்த்த இந்த வேதக்காரர் எல்லாரையும் நிர்மூலம் பண்ணவேண்டுமென்றும் அநீயாயமாய்ச் சொல்லித் திருச்சபைக்குக் கனமான கலாபனைகளை  பண்ணினார்கள். அந்தக் கலாப முகாந்தரமாகக் கிறீஸ்தவர்கள் வெகு உபத்திரியப்பட்டாலும் பாப்பாண்டவராகிய இஜினாரென்கிறவர் சொல்லிய புத்தியைக் கேட்டு  வேதத்திலே உறுதியாயிருந்தார்கள். அதல்லாமல் அவருடைய நாளிலே இரண்டு பதிதமதத் தலைவர்களாகிய வலாந்தீனென்கிறவனும், சேர்தோனென்கிறவனும் ரோமாபுரிக்கு வந்து வேதத்துக்கு விரோதமான அநேகத் தப்பறைகளைக் கிறீஸ்துவர்களுக்குள்ளே போதித்துக் கொண்டு வந்தார்கள், தாங்கள் சொல்லுகிற விஷமுள்ள துர்ப்புத்திகளை நல்ல கிறீஸ்துவர்கள் விசுவசிக்குமாறு தங்களைக் கத்தோலிக்குத் திருச்சபையில் உட்பட்டவர்களைப்போலே கபடாய் மற்றவர்  களுக்குக் காண்பிப்பார்கள். 

அர்ச். இஜினாரென்னும் பாப்பாண்டவர் இவற்றை அறிந்து திருச்சபைக்கு நிருபங்களை அனுப்பி அப்போஸ்தலர்களான அர்ச் இராயப்பர் சின்னப்பர் படிப்பித்த சத்திய வேதத்திலே எல்லாருந் தைரியமும் நிலைமையுமாயிருந்து முன் சொல்லப்பட்ட துர்ப்புத்திகளில் அகப்படாதபடிக்கு பத்திரம்பண்ணினார். மிகுந்த எச்சரிக்கையுள்ள இடையன் ஆடுகளின்மேலே பாய்ந்து வருகிற ஒனாய்க்கு எதிராய்ப்போய் அதைத் துரத்துவதுபோல் பாப்பாண்டவர் அந்த இரண்டு பதிதருடைய பொல்லாப்புக்கு எதிராய்ப் போய் அவர்களைத் துரத்தின படியினாலே தமது ஆடுகளாகிய கிறீஸ்துவர்களுக்கு மோசம் வரவிடாமல் நன்னெறியிற் காப்பாற்றினார். 

மேலும் இந்த பாப்பு ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு ஒரே ஞானத் தாய் ஒரே ஞானத்தகப்பன் இருக்க வேண்டுமென்றும், திருச்சபையிலே வழங்கும் மற்ற அநேகஞ் சடங்குகளையுங் கட்டளையிட்டார். அவர் பாப்பு பட்டத்திலே நான்கு வருஷம் மூன்று மாதம் நான்கு நாளும் இருந்தபிறகு கர்த்தர் பிறந்த நூற்றைம்பத்தெட்டாம் வருஷம் அந்தோனினுஸ் என்கிற இராயன் காலத்திலே திருச்சபைக்கு பிறமதத்தார் பண்ணின கலாபத்தில் சனவரிமாதம் பதினோராந் தேதியிலே வேதசாட்சியாகி மகிமையுள்ள மரணத்தை யடைந்தார். 

கிறீஸ்துவர்களே! இப்போது நீங்கள் கேட்ட இந்தச் சுருக்கமான சரித்திரத்திலே ஞான புஷ்பங்களை எடுக்குமாறு அதற்கடுத்த சில புத்திகளைக் கேளுங்கள். இப்போது சொல்லப்பட்ட அர்ச். பாப்பு நாளிலே உலகத்துக்கு வந்த நிற்பந்தங்களை பிறர் கண்டு அவை கிறீஸ்துவர்களுக்குத் தாங்கள் செய்த அநீத உபத்திரியங்களுக்கு ஆக்கினையாக வந்ததென்று ஒத்துக்கொள்ளாமல் சர்வேசுரனுடைய வேதம் பரம்பினதினாலே தங்கள் தேவர்கள் உலகத்துக்கு ஆக்கினையாக அந்தப் பொல்லாப்புகளை வரப்பண்ணினார்களென்று அக்காலத்திலே அவர்கள் சொன்னதுபோல் இக்காலத்திலேயுஞ் சிலர் சொல்வார்கள். அதெப்படி யென்றால் தேவர்கள் தங்களை வணங்குகிறதை அநேகர் விட்டுச் சர்வேசுரனுடைய வேதங் கேட்டதினாலே மழை பெய்ய வில்லையென்றும், பஞ்சம் படை வியாதி முதலான ஆக்கினைகளை உலகத்துக்கு வரப் பண்ணுகிறார்களென்றுஞ் சொல்லுகிறார்கள். ஆனால் அது தப்பிதமாய் இருக்கிறதொழிய நியாமாய் இருக்க வில்லை. அதெப்படி யென்றால் அந்தத் தேவர்களைவிட்டுச் சத்திய வேதங்கேட்கிறது குற்றமானால் அந்தக் குற்றங் கட்டிக்கொண்டவர்களாகிற கிறீஸ்துவர்களை மாத்திரந் தண்டிக்கிறதே நியாயமாய் இருப்பதொழிய அந்தக் குற்றமில்லாதவர்களாகிய புறமதஸ்தர்களைத் தண்டிக்கிறது அநியாயம். பஞ்சம் படை முதலிய பொதுவான நெருக்கடிகள் வந்தால் கிறீஸ்துவர்களும் புறமதஸ்தர்களும் அவதிப்படுகிறார்களென்பதற்குச் சந்தேகமில்லை. ஆகையால் முன் சொல்லப்பட்ட காரணத்தால் அந்தத் தேவர்கள் அந்த நெருக்கிடைகளை வரப்பண்ணுவது அநியாயமென்று சொல்லவேண்டும். அநியாயம் பண்ணுகிறவன் மெய்யான தேவனல்ல. அத்தகைய ஆக்கினை எந்த முகாந்தரத்தினால் வருகிற தென்று அறியவேண்டுமானால் இப்போது சொல்லப் போகிறதைக் கேளுங்கள். 

மெய்யான சர்வேசுரனுடைய சொற்படி கேளாதிருக்கிற பாவமே முன் சொல்லப்பட்ட ஆக்கினைக்குக் காரணமாயிருக்கும். கிறீஸ்துவனானாலும் பிறனானாலும் ஏதேனும் பாவஞ் செய்தால் அவர்களுடைய பாவத்துக்கு ஆக்கினையாக நியாயத்தின்படியே ஆண்டவர் அந்த நெருக்கிடைகளை வரப்பண்ணுவார். இத்தேசத்திலே கிறீஸ்துவர்கள் சிறுபான்மையோர், பிறமதத் தினர் மிகுதியாய் இருக்கிறார்கள். கொஞ்சம்பேருடைய குற்றங்களைப்பற்றிக் கடவுள் திரளான பேரைத் தண்டிப்பாரென்பதைவிடத் திரளான குற்ற வாளிகளின் ஆக்கினையில் அந்தக் குற்றமில்லாத சிலர் வேறு குற்றத்தைப் பற்றி உட்பட்டிருக்கலாமென்பது நியாயம். சனத்தொகையைப் பற்றிக் கிறீஸ்துவர்களிடத்திலே இருக்கிற பாவங்களைவிட பிறரிடத்திலே இருக்கிற பாவங்கள் அதிகம். விசேஷமாய்ப் பசாசைக் கும்பிடுகிற பாவம் அதிகமாய் இருக்கிறபடியினாலே முன் சொல்லப்பட்ட ஆக்கினைகள் வருகிறதற்கு அவர் கள் அதிககாரணமாய் இருக்கிறார்களென்னத்தகும். சத்திய வேதத்துக்கு முழுதும் உட்பட்ட கிறீஸ்துவர்களுடைய இராச்சியங்கள் பிற இராச்சியங்களை விட மிகவும் அதிக செல்வபாக்கிய வல்லமைகொண்டிருக்கிறது. யாவர்க்குந் தெரியும், அதினால் சர்வசந்தேகமுந் தீரலாம். மேலும் கிறீஸ்துவர்களிடத்தில் இருக்கிற புண்ணியங்கள் இத்தேசத்தில் அதிக ஆக்கினைவராத படிக்குஞ் சிலவிசை ஆக்கினை முழுதுந் தீர்ந்துபோகவுங் காரணமாய் இருக்கும். இந்த நிடாயத்தை வேறே தேசங்களில் புறமதஸ்தர்களான சில இராசாக்கள் கண்டு பிடித்துப் பரிசோதித்துப் பார்த்துத் தங்களுடைய இராச்சியங்களில் நடக்கிற சர்வேசுரனுடைய வேதத்துக்கு விக்கினம் பண்ணாமல் இந்த வேதம் பரம்பச் சம்மதித்தார்கள். 

இதன்றியே ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு ஒரே ஞானத்தாய் ஞானத்தகப்பன் மாத்திரமிருக்க முன் சொல்லப்பட்ட அர்ச். பாப்பு கட்டளையிட்டா ரென்று சொன்னோமே நீங்கள் எவருக்கேனும் ஞானத்தாய் ஞானத்தகப்பனாய் இருந்தால் அது நல்லதென்று நீங்கள் நினைக்கக்கடவீர்கள், ஆனால் அதற்குண்டான கடனை நிங்கள் தீர்க்கவேண்டும். அதாவது: ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு வேறு யாறும் வேதத்தின் மந்திரங் குறிப்பிடம் படிப்பியாதிருந்தால் ஞானத்தாய் ஞானத்தகப்பன் அவற்றை அவர்களுக்குப் படிப்பிக்கக்கடவார்கள். மேலும் இந்த அர்ச்சியசிஷ்டர் நாளிலே இரண்டு பதிதமதத் தலைவர்கள் நல்ல கிறீஸ்துவர்கள்போல் வெளியே காண்பித்தாலுந் தங்கள் இருதயத்தில் இருந்த விஷ நிறைந்த துர்ப்புத்தி சொல்லுவார்களே. 

அப்படியே இக்காலத்திலே சில ஊர்களிலேயுள்ள பதிதர், நாடுகளிலே வந்து தாங்கள் மெய்யான கிறீஸ்துவர்களைப்போல் காண்பிக்க கழுத்திலே செபமாலை தரித்துச் சுரூபமும் வைத்து கொண்டு செபம் பண்ணுவதுபோலே திரிகிறார்கள். பத்தியுள்ள அத்தகைய அடையாளங்களை நீங்கள் கண்டு அவர்களுக்கு இடங்கொடுத்துப் பட்சத்தை காண்பித்தபிறகு அவர்கள் சுரூப வணக்கமாகாதென்றுந் தேவமாதாவை வணங்க வேண்டாமென்று. துர்ப் புத்தியாகிய விஷத்தை வீசுவார்கள். ஓனாயானது ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு ஆட்டுக்கிடையிலே போகிறபோது உடனே ஆடுகளைக் கடியாதிருந்தாலும் பிற்பாடு கடித்து வெகு சேதம் வருவிக்கிறாப் போலே இந்தப் பதிதர் செய்கிறார்கள். ஆதலால் அவர்கள் வழியாக உங்கள் ஆத்துமத்துக்கு மோசம் வராதபடிக்கு முன் சொல்லப்பட்ட அர்ச். இஜினாரென்கிவரைப்போலே நீங்கள் பதிதர் மட்டில் மிகவும் எச்சரிக்கையாய் இருப்பதுமன்றியே வேதகாரியங்களிலே ஒருக்காலும் உங்கள் காதிலே விழாத வார்த்தையாகிய நூதனபோதகம் கேள்விப்பட்டால் அதை விசுவசிக் வேண்டாமென்று அறியக்கடவீர்களாக. ஆனால் சாதாரண திருச்சபை படிப்பிக்கிற சத்தியங்களை உறுதியாக விசுவசிப்பதே கடமை.

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் - 21 அப்போஸ்தலரான அர்ச். மத்தியாஸ். (ST. MATHIAS)

பெப்ரவரி மாதம் 24-ந் தேதி. 
அப்போஸ்தலரான அர்ச். மத்தியாஸ் திருநாள்.
 ST. MATHIAS.

சேசுநாதருடைய பன்னிரண்டு சீஷர்களுக்குள்ளே யூதாஸென்கிற ஒருவன் சேசுநாதரால் அப்போஸ்தலனாகத் தெரிந்துகொள்ளப்பட்டிருந்தாலும், அவன் ஆண்டவரோடு இருக்கிறபோது கர்த்தர் அவனுக்குக் கொடுத்த வல்லமை யினால் அவன் சில புதுமைகளைப் பண்ணியிருந்தாலும் நன்றிகெட்டவனாய் முப்பது வெள்ளிக் காசுக்காகச் சேசுநாதருக்குத் துரோகம் பண்ணி மாசில்லாதவரை அவருடைய சத்துருக்களுக்குக் காட்டிக்கொடுத்தான். அத்தகைய பெரிய பாவத்தால் அவன் ஆத்துமமுங் கெட்டு மதியுங் கெட்டுத் தான் செய்த துரோகத்தின் கனத்தைப்பற்றி அவநம்பிக்கைப்பட்டுத் தன்னைச் சகிக்கமாட்டாமல் நான்று கொண்டு நிர்ப்பாக்கியனாய்ச் செத்து நரகத்திலே விழுந்தான் . 

சேசுநாதர் கல்லறையை விட்டு உயிர்த்து மோட்சத்திற்கு எழுந்தருளிப் போன பிறகு அவருடைய சீஷர்களுக்குத் தலைவராகிய அர்ச். இராயப்பர் நேர்த்தியான பிரசங்கம் பண்ணிக் கெட்டுப்போன யூதா ஸென்கிறவனுடைய ஸ்தானத்திலே வேறொருவரை வைக்கவேண்டுமென்று மற்றச் சீஷர்களுடன் சொன்னார். ஆதலால் கர்த்தருடைய எழுபத்திரண்டு சீஷர்களுக்குள்ளே ஆண்டவர் அறிவித்தபடியே அர்ச். மத்தியாஸென்கிறவரைத் தெரிந்து கொண்டார்கள். கர்த்தர் பூலோகத்தில் இருக்கிறபோது அவர் பண்ணின புதுமைகளையும் புண்ணியங்களையும் மத்தியாஸென்கிறவர் கண்டு யேசுநாதருடைய ஞானப் பிரசங்கங்களையும் நல்ல மனதோடு கேட்டதினாலே புண்ணியத்திலே வளர்ந்து மகாத்துமாவாயிருந்தார். இது முகாந்தரமாய் அப்போஸ்தலர் பட்டத்திற்குக் குறிக்கப்பட்டார். 

இத்தகைய மகிமையுள்ள பட்டம் ஆண்டவர் தமக்குக் கொடுத்தார் என்று அர்ச். மத்தியாஸ் கண்டு கர்த்தருக்கு வெகு தோத்திரம் பண்ணினது மல்லாமல் அந்தப் பட்டத்திற்கு உண்டான கடன்களைத் தாம் நிறைவேற்ற சுவிசேஷத்தைச் சுறுசுறுப்போடு சனங்களுக்குப் பிரசங்கித்துச் சத்திய வேதத்தைத் தம்மால் இயன்ற மட்டும் பரப்பப் பிரயாசைப் பட்டார். அர்ச். மத்தியாஸ் முதலில் யூதேயா தேசத்திலே பிரசங்கித்தார். அதற்குப் பிறகு கலிலேயா தேசத்திலே போய் ஆங்கங்கே தான் சொன்ன புத்தி பிரசங்கங் களினாலேயும் பண்ணின ஆச்சரியமான புதுமைகளினாலேயும் அநேகரைச் சேசுநாதருடைய வேதத்தில் உட்படுத்தினார் . 

பின்னும் அத்தேசத்தை விட்டு எத்தியோப்பியா என்னும் பெரிய இராச்சியத் திற்குப் போனார். அவர் அதிலே சத்திய வேதத்தைப் போதிக்கிறபோது பட்ட பிரயாசையினால் அநேகம் பேர் வேதத்தில் உட்பட்டதைக் கண்டு வெகு சந்தோஷப்பட்டார். பசாசு தன் பாரிசமாயிருந்த அநேகம் பேர் தன் ஊழியத்தை விட்டு அர்ச். மத்தியாஸ் சொல்லிய புத்தியைக் கேட் டுச் சர்வேசுரனுக்கு ஊழியம் பண்ணுகிறதை கண்டு காய்மகாரத்சினாலே அந்த அப்போஸ்தலரைக் கொன்றுபோடத் துணிந்தது. அதற்குப் பசாசு சொன்ன துர்ப்புத்தியினால் சில பொல்லாதவர்கள் அர்ச். மத்தியாஸ் குடிக்கிற தண்ணீரிலே விஷத்தைக் கலந்து கொடுத்தார்கள். அவர் அதைக் குடித்திருந் தாலும் புதுமையாகச் சாகாதிருந்தார். பின்பு அக்கியானிகள் கூட்டங்கூடி அவரைக் கல்லால் எறிந்து கொல்ல அநேகம் பெரிய கற்களை அவர்மேலே எறிந்தார்கள். அதினாலே அவர் சாகாதிருக்கிறதைக் கண்டு அவரைச் சிலுவை யில் அறைந்தார்கள். அந்த வேதனை வழியாகவுஞ் சீக்கிரத்திலே அவருக்குச் சாவு வரவில்லையென்று பார்த்து அவர்கள் கடைசியாய் அவர் தலையை வெட்டினார்கள். 

ஆகையால் சேசுநாதர் அனுபவித்த சிலுவை வேதனையும் அர்ச், முடியப்பர் அனுபவித்த கல்லெறி உபத்திரவமும் அப்போஸ்தலராகிய அர்ச். சின்னப்பர் தலை வெட்டப்பட்டு அனுபவித்த பாடும் வேதத்திற்காக அர்ச். மத்தியாஸ் அனுபவித்துக் கர்த்தர் பிறந்த அறுபத்து மூன்றாம் வருஷத்திலே வேதசாட்சியாக மரணமடைந்தார். 


கிறீஸ்துவர்களே! அர்ச். மத்தியாஸென்கிறவர் சேசுநாதரோடு இருந்து கர்த்தருக்கு ஏற்ப  அநேக நாள் நடந்த பிறகு ஆண்டவர் அவருக்கு அப்போஸ்தல பட்டம் கட்டளையிட்டார். சேசுநாதர் உங்களுக்கு இற்றை வரைக்குங் கொடுத்தருளின வரப்பிரசாதங் களைவிட இன்னம் அதிக வரப்பிரசாதங் கட்டளை யிடுவதற்கு நீங்கள் அவருடைய புத்தியைக் கேட்டு வழி செய்ய வேண்டும். ஒரு சேவகன் துரை கிட்டக் காத்திருந்து குறையின்றி அநேக நாள் ஊழியம் பண்ணுகிறபோது, தனக்குத் துரை இனிமேல் சம்பாவனை கொடுக்க வழி பண்ணுகிறானல்லவோ? பின்னையும் அர்ச். மத்தியாஸென்கிறவருக்கு வந்த மகிமையான பட்டத்தை யூதாசென்கிறவன் இழந்துபோனா னென்று நீங்கள் நினைத்து, ஆத்துமப் பிரயோசனம் அடைய வேண்டும். கர்த்தர் பண்ணின எண்ணப்படாத புதுமைகளையும், புண்ணியங்களையும் யூதாசென்கிறவன் கண்டிருந்தாலும், அவருடைய அமிர்தமான பிரசங்கங்களையும் அவன் கேட்டிருந்தாலும், அவர் கொடுத்த வல்லமையால் அவன் அநேகம் புதுமைகளைச் செய்திருந்தாலும், அவன் சாவான பாவத்தினாலே கெட்டு நிர்ப்பாக்கியனாய் நரகத்திற்குப் போனானல்லவோ? 

அதை நீங்கள் அடிக்கடி நினைத்து, உங்களிடத்திலே எத்தனை புண்ணியம் இருந்தாலும், நீங்கள் புதுமைகளைத் தானே பண்ணினாலும் இனிமேல் உங்கள் ஆத்துமத்திற்குப் பாவத்தினாலே மோசம் வருமோவென்று பயந்து, நீங்களே உங்களை நம்பாமல் ஆண்டவர் பேரிலே நம்பிக்கை வைத்தப் பயத்தோடும் எச்சரிக்கையோடும் நடக்கவேண்டும். பலவீனமுள்ளவனும் பலமுள்ளவனும் நடக்கிற போது, பலமுள்ளவன் சேற்றிலே விழுந்ததைப் பல வீனமுள்ளவன் கண்டு, தன்னை நம்பாமல் எச்சரிக்கை யோடு நடப்பா னல்லவோ ? நான் சர்வேசுரனுக்கு இன்னின்ன ஊழியம் பண்ணினேன்; நான் தள்ளப் பட்டால் என்னுடைய ஸ்தானத்திலிருக்கிறதற்கு வேறே ஆள் கிடையா தென்கிற ஆங்காரமுள்ள விசாரத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம்.

 ஏனென்றால், யூதாஸ் தன் பாவத்தினாலே அப்போஸ்தலப் பட்டத்தினின்று தள்ளப்பட்டபிறகு அவனுடைய ஸ்தானத்திலே கெட்டிக்காரரான அர்ச். மத்தியாசை ஆண்டவர் வைத்ததுபோல் உன் பாவத்தினாலே நீ தள்ளப்பட் டால் உன்னைவிடக் கெட்டிக்காரன் உன்னுடைய ஸ்தானத்திலே ஆண்டவராலே வைக்கப்படுவான். கெட்டிக்காரனான ஓர் சேவகன் தன்னுடைய இராசா முன் பாகவும், அநேகந் துரை மக்கள் முன்பாகவுந் தன் வீர சூர செய்கைகளை விபரித்துச் சண்டையிலே இராசாவைப்பற்றி இந்தக் காயங்களைப் பட்டேன் என்று சொல்லுமிடத்தில் வெகு சந்தோஷப் படுவானேயல்லாமல், அவன் பட்ட பிரயாசைக்குத் தக்க வெகுமானத்தையும் பெறுவானல்லவோ? அவ்வாறே அர்ச், மத்தியாஸென்கிறவர் பரமண்டலங்களிலே ஆண்டவருடைய சந்நிதியில் மோட்ச வாசிகள் முன்பாகத் தாம் பட்ட பாடுகளைச் சொல்லி என் சரீரத்தின் மேலே எதிரிகள் எறிந்த கல்லுகளாலே என் உடம்பிலே எத்தனை நோவுகளை யுங் காயங்களையுஞ் சேசுநாதரைக் குறித்துப் பட்டேன். 

எதிரிகள் என்னைச் சிலுவையில் அறைந்தபோதுகர்த்தரைப்பற்றி இத்துணை வேதனையும் உபத்திரவங்களையும் அனுபவித்தேன். தலை வெட்டப் போகிற போது சேசுநாதரைத் துதித்து, இவ்வளவு உபாதை சகித்தேனென்று சொல்லுகிற போது அவர் வெகு சந்தோஷப்பட்டது மல்லாமல், தாம் அனுபவித்த கஸ்திகளுக்குத் தக்க மோட்ச ஆனந்தத்தை அனுபவிக்கிறார்.


 தம்பி தங்கை மாரே! பரமண்டலங்களிலே உங்களுக்கு அத்தகைய சந்தோஷமும் ஆனந்தமும் நிரம்ப வருமாறு நீங்கள் இப்போது கர்த்தரைக் குறித்து புண்ணியஞ் செய்ய பிரயாசைப்படவும், இவ்வுலகத்தில் வருகிற துன்ப துரிதங்களை அவரைப்பற்றிப் பொறுமையோடே அனுபவிக்கவும் வேண்டும்.

அருட்கருவிகள் - அர்ச்சியசிஷ்ட எண்ணெய் (Holy Oils)

 அர்ச்சியசிஷ்ட எண்ணெய்

VI நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், திருச்சி, 1941











ருடந்தோறும் பெரிய வியாழக்கிழமை அன்று ஒவ்வொரு மேற்றிராசனக் கோவிலிலும் வெகு நேர்த்தியும் ஆடம்பரமுமான சடங்கு ஒன்று நடை பெறுகிறது. அன்று முதல் அடுத்த வருடம் பெரிய வியாழக்கிழமை வரையிலும் உள்ள நாட்களில், தேவதிரவிய அநுமா னங்களை நிறைவேற்றுவதிலும் ஆட்களையும் பொருட்களையும் அர்ச்சிக்கும் பலவித சடங்குகளிலும் உபயோகிக்க வேண்டிய எண்ணெயை இத்தினத்தில் மேற்றிராணியார் மந்திரிக்கிறார்.

எண்ணெய் மந்திரிக்கும் சடங்கில் பலவித ஞான கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன. இச்சடங்குக்கு குருக்கள் அநேகர் தேவை. ஏனெனில், அர்ச்சியசிஷ்ட எண்ணெய் திருச்சபை சடங்கு முறையில் உபயோகிக்கிற மற்றப் பொருட்களையெல்லாம்விட அதிக முக்கிய மானது. ஞானஸ்நானம், உறுதிபூசுதல், குருத்துவம், அவஸ்தைப் பூசுதல் ஆகிய இந்நான்கு தேவதிரவிய அநுமானங்களிலும் அர்ச்சிய சிஷ்ட எண்ணெய் பிரயோகிக்கப்படுகிறது. ஆகையால், அதன் தன்மை, பயன், கருத்து முதலியவைகளை அறிந்திருப்பது மிகவும் பிரயோசனமாய் இருக்கும்.

எண்ணெய் உபயோகத்தின் கருத்து: 

கீழ்த்திசை நாடுகளிலும், ஐரோப்பாவின் தென் பாகங் களிலும் ஒலிவ எண்ணெய் அநுதினமும் உபயோகிக்கப்படுகிறது. போஜன பதார்த்தங்களை சமைப்பதற்கு உதவுகிறது மன்றி, மருந்தாகவும் பயன் படுகிறது. முந்தின காலங்களில் தீபங்களுக்கு விசேஷமாய் உபயோகப் படுத்தப்பட்டது இந்த எண்ணெயே. பூர்வத்தில், மல்லக்கச் செட்டிகள், தசை வளம் பெறுவதற்காக இந்த எண்ணெயை உபயோகித்தார்கள். இப்போது கூறின உபயோகங்களை அநுசரித்துத் திருச்சபை ஞான உணவையும், மருந்தையும், அருட்பிரகாசத்தையும், ஞான வல்லபத்தையும் குறிப்பிடுவதற்காக, எண்ணெயை உபயோகிக்கிறது. ஞான வல்லபத்தை அளிக்கும் குறியாக எண்ணெயை உபயோகிப்பது வெகு பொருத்தமுள்ள தென்பதின் நிமித்தம், ஜீவியருக்குமட்டுமின்றி ஜீவனற்றவைகளாகிய மணிகள், பாத்திரங்கள், முதலியவைகளுக்கும் எண்ணெய் பூசி அர்ச்சிப்பது திருச்சபையில் ஏற்படலாயிற்று.

பெரிய வியாழக்கிழமையில் மந்திரிக்கிற எண்ணெய் மூவகைப் படும். ஞான தீட்சைத் தைலம், பரிமளத் தைலம், வியாதியஸ்தர் தைலம். இம்மூன்றும் ஒலிவ எண்ணெய்தான். ஆனால் பரிமளத் தைலத்தில் பால்சம் என்னும் பரிமளவர்க்கம் கலந்திருக்கிறது. மேற்றிராணியார் இம்மூவித எண்ணெய் ஒவ்வொன்றையும் அததற்குரிய விசேஷ ஜெபங்கள் சொல்லி மந்திரிக்கிறார்.

1. ஞானதீட்சைத் தைலம்: 

இந்த அர்ச்சியசிஷ்ட எண்ணெய் விசேஷமாய் ஞானஸ்தானம் பெறப் போகிறவனுடைய நெஞ்சிலும் முதுகிலும் பூகவதற்கு உபயோகப் படுவதினால் இந்தப் பெயர் உண்டாயிற்று. ஞானஸ்நான தீர்த்தம் மந்திரிப்பதற்கும், கோவில் அபிஷேகத்திற்கும், பீடம் அல்லது அர்ச்சியசிஷ்ட கல் மந்திரிப் பதற்கும், குருப்பட்டம் கொடுப்பதற்கும், கத்தோலிக்க இராஜா அல்லது இராணியின் பட்டாபிஷேகத்திற்கும் இந்த எண்ணெய்தான் பிரயோகிக்கப்படுகிறது.

2. பரிமளத் தைலம்: 

முன் கூறிய வண்ணம் பால்சம் என்னும் பரிமளவர்க்கம் இதில் கலந்திருப்பதினால் இதற்கு இப்பெயர் கொடுக்கலாயிற்று. இந்தத் தைலத்தில் பால்சம் கலக்கிற வழக்கம் ஆறாவது நாற்றாண்டில் ஆரம்பமானது. யூதேயா, அரேபியா நாடுகளில் வளருகிற தைல பசையுள்ள ஓர் வகை மரங்களிலிருந்து உண்டாகிற பிசின் போன்ற பொருள்தான் பால்சம் என்று கூறப்படுகிறது. தேவதிரவிய அநுமானத்தால் அருளப்படுகிற வரப்பிரசாதத்துக்கு எண்ணெய் அடையாளமாய் இருப்பது போல், பாவ நாற்றமின்றி புண்ணிய நறுமணம் கமழுவதற்குப் பால்சம் அடையாளமாயிருக்கிறது. பரிமளத் தைலம் என்னும் அர்ச்சியசிஷ்ட எண்ணெய் விசேஷமாய் உறுதிபூசுதல் கொடுப்பதற்கு உபயோகப்படுகிறது. உறுதிபூசுதல் பெறுகிறவனுடைய நெற்றியில் இந்தத் தைலத்தால் தான் மேற்றிராணியார் சிலுவை அடையாளமாகப் பூசுகிறார். ஞானஸ் நானத்தில் தண்ணீர் வார்த்தவுடன், உச்சந்தலையில் தடவப் படுவதும் இதுவே. மேற்றிராணியார் அபிஷேகத்திலும் கோவில் அபிஷே கத்திலும், பாத்திரங்கள், பத்தேன, ஞானஸ்நானத் தீர்த்தம், கோவில் மணிகள் முதலியவைகளை மத்திரிப்பதிலும் இது உபயோகிக் கப்படுகிறது.

3. வியாதியஸ்தர் தைலம்: 

அவஸ்தைப்பூசுதலுக்கு அவசியமாய் வேண்டிய பொருள் இது. மணி மந்திரிப்பதிலும் இது தேவை. இலத்தீன் ரீதியைப் பின்பற்றுகிற ஆலயங்களில் இந்த எண்ணெய் யாதொரு கலப்பின்றி சுத்தமானதாயிருக்கும். கீழ் நாட்டு ரீதியைப் பின்பற்றுகிற சில சபைகளில் இந்த எண்ணெயில் சிறிதளவு இரசம் அல்லது சாம்பல் கலப்பதுண்டு.

அவஸ்தைப்பூசுதலில் எண்ணெய் உபயோகிப்பது அப்போஸ்தலர் காலந்தொட்டு நடந்தேறி வருகிறது என்பதற்கு அர்ச். இயாகப்பர் நிருபமே போதுமான அத்தாட்சி, அவர் சொல்வதாவது: “உங்களில் எவனாவது லியாதியாயிருந்தால், குருக்களை வரவழைப்பானாக. அவர்கள் ஆண்டவருடைய நாமத்தால் அவன் பேரில் தைலம் பூசி பிரார்த்திப்பார்களாக." அவஸ்தைப்பூசுதலுக்கு அவசியமான பொருளாக இதை ஏற்படுத்தினவர் நமது திவ்விய இரட்சகரே, ஏனெனில் தேவதிரவிய அநுமானங்களை ஏற்படுத்தின ஆண்டவர் தாமே அவைகளுக்குரிய பொருளையும் திட்டம் பண்ணியிருக் கிறாரே யொழிய திருச்சபைக்கு இவ்விதம் செய்ய அதிகாரமில்லை.

பூர்வீக அநுஷ்டானம்: 

ஞானஸ்தானம், குருப்பட்டம், கோவில் அபிஷேகம் முதலியவைகளில் எண்ணெய் உபயோகிக்கும் வழக்கம் பெரும்பாலும் அப்போஸ்தலர் காலத்திலேயே உண்டாயிற்று என்று சொல்ல நியாயமுண்டு. பழைய ஏற்பாட்டில், குருக்களையும் இராஜாக்களையும் அபிஷேகம் பண்ணுவதிலும், பலிகளிலும், சில சுத்திகரச் சடங்குகளிலும் எண்ணெய்ப் பிரயோகம் வெகு சாதராணமாயிருந்தது. திருச்சபை சடங்கு முறைகளில் எண்ணெய்ப் பிரயோகம் உண்டாவதற்கு இதுவே ஆதாரம் என்று சொல்லத்தகும். 

ஞானஸ்நான தீர்த்தம் மந்திரிப்பது 2-ம் நூற்றாண்டிலேயே ஏற்பட்ட தாயினும், அதில் எண்ணெய் உபயோகிக்கத் துவக்கினது பிற்காலங் களில்தான். 4-ம் நூற்றாண்டிலிருந்தே. பெரிய வியாழக்கிழமையில் அர்ச்சியசிஷ்ட எண்ணெய் மந்திரிக்கிற வழக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அக்காலங்களில் ஞான தீட்சைத் தைலமும் பரிமளத் தைலமும் மாத்திரம் பெரிய வியாழக்கிழமையில் மந்திரிக் கப்பட்டன. வியாதியஸ்தர் தைலத்தை அவசியத்துக்குத் தகுந்தாற்போல் அந்நாளிலாவது, வேறு தினங்களிலாவது, சில இடங்களில் குருக்களே மந்திரித்து வந்தார்கள். இப்போது இந்த வழக்கம் நீக்கப்பட்டு திருச்சபையின் சட்டப்படி மேற்றிராணியார் மாத்திரம் பெரிய வியாழக்கிழமையில் இம்மூன்றையும் மந்திரிப்பதற்கு அதிகாரம் பெற்றவராய் இருக்கிறார்.

அர்ச்சியசிஷ்ட எண்ணெய் மந்திரிக்கும் சடங்கு:

மேற்றிராணியாரும் அவரது பரிசாரகருமல்லாமல், கூடுமான இடங்களில் ஒழுங்குப் பிரகாரம், பன்னிரண்டு குருக்களும், ஏழு தியாக்கோன்மாரும், ஏழு சப்தியாக்கோன் மாரும், இச்சடங்கில் கலந்து கொள்வார்கள். மேற்றிராணியார் வெள்ளை அல்லது தங்க ஆயத்தம் அணிந்து வழக்கம்போல் பூசை செய்வார். நடுப்பூசைக்குப் பிறகு பரலோக மந்திரம் துவக்குமுன், பிரத்தியேகமாய்த் தயாரித்து வைத்திருக்கிற மேசை முன்பாக நின்று, வியாதியஸ்தர் தைலம் கொண்டுவரக் கற்பிப்பார். அப்போது சப்தியாக்கோன் ஒருவர் அதைக் கொண்டுவந்து அவர் எதிரில் வைப்பார். மேற்றிராணியார் துஷ்ட அரூபி விலகிப் போவதற்காகச் சொல்லும் ஜெபத்தை அதன் பேரில் உச்சரித்து, ஆத்தும சரீர ஆறுதலுக்காக திவ்விய இஸ்பிரித்து சாந்துவானவர் அதன்மேல் எழுத்தருளி வரும்படி மன்றாடி, சகலவித வியாதி நோவு பலவீனத்துக்கு அது பரம மருந்தாக வேண்டுமென்று பிரார்த்திக்கிறார். 

பின்னர், திவ்விய பூசையைத் தொடர்ந்து நடத்தி நற்கருணை உட்கொண்டபின், பரிமளத் தைலத்தையும் ஞானதீட்சைத் தைலத்தையும் மந்திரிப்பார். இரண்டு தியாக்கோன்மார் தோள்பட்டு (Humeral Veil) அணிந்து, இவ்விரண்டு தைலத்தையும், சப்தியாக்கோன் பால்சத்தையும் சக்கிரீஸ்தியிலிருந்து எடுத்துக் கொண்டு வருவார்கள். அவர்கள் முன்பாக, சுற்றுப்பிரகார சிலுவையுடன் ஒரு சப்தியாக்கோனும், எரிகிற மெழுகுதிரிகளுடன் இரு சீடர்களும், மேலே சொல்லப்பட்ட குருக்கள், தியாக்கோன்மார், சப்தியாக்கோன்மார் சகலரும் நடந்து செல்ல, பாடகர் இருவர் சில ஸ்துதிகளைப் பாடிக்கொண்டு போவார்கள். மேற்றிராணியார் பால்சத்தையும் மந்திரித்து, அதோடு சிறிது எண்ணெயைக் கலந்து யார் யார் இந்த எண்ணெயால் பூசப்படுகிறார்களோ அவர்கள் மோட்ச இராச்சி யத்தில் பங்கடையும்படி அவர்களது உள்ளமும் பூசப்படுவதாக என்னும் கருத்துள்ள ஒரு ஜெபத்தைச் சொல்லி எண்ணெயில் மும்முறை சுவாசிப்பார். 

அவருக்குப்பின், பன்னிரு குருக்களும் அவ்வாறே சுவாசிப்பார்கள். துஷ்ட அரூபி விலகிப் போவதற்காக ஜெபம் சொன்னபிறகு பழைய ஆகமத்தில் இருந்த எண்ணெய்ப் பிரயோகங்களை விவரித்துக் காட்டி, தண்ணீராலும் இஸ்பிரித்துசாந்துவினாலும் நலமாய்ப் பிறந்தவர்களின் இரட்சண்யத் தைலமாக உபயோகிக்கப் போகிற இந்த அர்ச்சியசிஷ்ட எண்ணெயை சர்வேசுரன் ஆசீர்வதித்தருள வேண்டுமென்று மன்றாடுகிற, முகவுரையை மேற்றிராணியார் பாடுவார். அதன்முடிவில், எண்ணெயும். பால்சமும் கலந்ததை, பரிமளத் தைலம் இருக்கும் பாத்திரத்தில் வார்த்து, பரிசுத்த பரிமளத்தைலமே வாழ்க என்று மும்முறை பாடி பாத்திரத்தின் ஓரத்தை முத்தி செய்வார். பன்னிரு குருக்களும் அவ்வாறே பாடி முழந்தாட்படியிட்டு வணங்கி முத்தி செய்வார்கள். இவ்வண்ணமே ஞானதீட்சை தைலமும் அதற்குரிய வேறு ஜெபங்களுடன் மந்திரிக்கப்படும். இறுதியில்,

முன்போல் தியாக்கோன்மார் ஆடம்பரமாய் எண்ணெயை எடுத்துக்கொண்டு சக்ரீஸ்தியில் வைப்பார்கள்.

திருச்சபை அர்ச்சியசிஷ்ட எண்ணெயை எவ்வளவு மதிக்கிறதென்று அறிவதற்கு இப்போது சொன்ன சுருக்கமான விபரம் போதுமானதென்று நினைக்கிறோம். ஒவ்வொரு பங்கு கோவிலிலும், சக்ரீஸ்தி சுவரில் அமைத்திருக்கும் பெட்டியில் பத்திரமாய் இந்த எண்ணெயை வைத்திருப்பது வழக்கம். குருக்களல்லாதார் எவரும் இதைத் தொடுவது முறையல்ல. நமது ஆத்தும இரட்சண்யத்துக்கு அவசியமான வரங்களை அடைவதற்காக, தேவதிரவிய அநுமானத்தில் உபயோகிக்கப்படும் எண்ணெயை சங்கையுடன் கையாள வேண்டுமென்பது திருச்சபையின் கருத்து. இதனாலேயே இதை அர்ச்சியசிஷ்ட எண்ணெய் என்று சொல்கிறோம்.

சனி, 6 ஜனவரி, 2024

அர்ச்.குழந்தை சேசுவின் தெரசம்மாள்: வேதபோதக நாடுகளின் பாதுகாவலி

 எஸ்கிமோக்கள் என்ற உறைபனி நாட்டில் வாழும் மனிதர்களிடம் சத்திய வேதத்தைப் போதிப்பதற்காக அமலோற்பவ மாதாவின் சபையைச் சேர்ந்த வேதபோதக சபைக் குருக்கள் (Oblates of Mary Immaculate) கனடா நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஹட்சன் வளைகுடாவில் தங்கள் வேதபோதக அலுவலை துவக்கியிருந்த போது, சங். ஆர்சின் டர்குவெடில் O.M.I சுவாமியார் 1911ம் வருடம் முதல் 1915 அங்கு சென்று அவர்களுடைய மொழியைக் கற்றுக் கொண்டு அவர்களுக்கு நம் ஆண்டவரைப்பற்றிய சுவிசேஷத்தையும் நம் வேதத்தின் ஞானஉபதேசத்தையும் கற்பித்து வந்தார். 1916ம் ஆண்டு வந்தது. அந்த ஆண்டில், அவருடைய வேதபோதக அலுவலினால் அங்கு எந்த ஒரு வெளிப்படையான ஞானபலனும் ஆத்தும ஆதாயமும் இல்லாமல் போனது. அந்த ஹட்சன் வளைகுடாக் கடல் உறைந்து போகக்கூடிய பனிக்காலத்திற்கு முன் அக்டோபர் மாதத்தில் ஒரு விநோதமான அதிசயம் நிகழந்தது.

அம்மாதத்தில் அப்பகுதிக்கான கடைசி படகு வந்து சேர்ந்தது. அதில் யாரோ ஒருவர் சுவாமியாருக்கு இரு கடிதங்கள் அனுப்பியிருந்தனர். முதல் கடிதத்தில் "ஒரு சிறிய ஆன்மாவின் வரலாறு" என்ற அர்ச்.குழந்தை சேசுவின் தெரசம்மாளைப்பற்றிய ஒரு சிறிய குறிப்பேடு இருந்தது. அதில் அந்த சிறிய அர்ச்சிஷ்டவள் வேதபோதக அலுவல்மீது கொண்டிருந்த உன்னதமான ஆர்வத்தைப்பற்றியும் பனிமீது அவள் கொண்டிருந்த நேசத்தைப்பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தன. மற்றொரு கடிதத்தில் சிறுமலர் அர்ச்,தெரசம்மாளின் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட தூசி இருந்தது. உடனே சங். டர்குவெடில் சுவாமியாரின் மனதில் ஒரு எண்ணம் தூண்டப்பட்டது. அன்று மாலையே சில எஸ்கிமோக்களை தன் அறைக்கு வந்து அங்கிருக்கும் அடுப்பினருகில் அமர்ந்து தங்களை சூடுபடுத்திக்கொள்வதற்காக அழைத்தார். அவர்களும் வந்தனர். அவர் அவர்கள் முன்பாக சிறு ஹார்மோனியத்தைக் கொண்டு இசையை வாசித்தார். அப்போது சுவாமியாரின் திட்டப்படி, சகோதரர் ஜிரார்ட் அந்த எஸ்கிமோக்களின் பின்புறமாக வந்து அர்ச்.குழந்தை தெரசம்மாளின் கல்லறை தூசியை அந்த எஸ்கிமோக்கள் மேல் தூவினார். பிறகு, அந்த இரு ஓப்லேட் துறவியரும் அன்று இரவு முழுவதும் தேவநற்கருணை பேழைமுன்பாக நீண்ட ஜெபத்தில் ஈடுபட்டு உருக்கமாக அந்த எஸ்கிமோக்களின் மனந்திரும்புதலுக்காக மன்றாடினர்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலையில், எஸ்கிமோக்கள் சுவாமியாரிடம் வந்து தங்களுக்கு ஞானஉபதேசம் கற்பிக்கும்படி விண்ணப்பித்தனர். தனக்குள் ஏற்பட்ட அளவில்லா வியப்பை அடக்கியவராக உடனே அவர்களுக்கு சங்.டர்குவெடில் சுவாமியார் ஞானஉபதேசத்தைக் கற்பிக்கலானார். எஸ்கிமோக்கள் சென்றதும், அவர் சிறுமலரான அர்ச்.குழந்தை தெரசம்மாளை நோக்கி "சிறுமலரே! நீர் மிக நேர்த்தியான வேதபோதகர். உமது இந்த உன்னத அலுவல் தொடரட்டும்!" என்று மிக தாழ்ந்த குரலில் ஜெபித்தார். இதன்பிறகு அப்பகுதியில் ஏராளமான எஸ்கிமோக்களுடைய மனந்திரும்புதல்கள் ஸ்திரமாக தொடர்ந்து ஏற்பட்டன. 1925ம் ஆண்டு ஜூலை 15ம் நாளன்று அப்பகுதியின் அப்போஸ்தல அதிபராக சங். டர்குவெடில் சுவாமியார் நியமிக்கப்பட்டார். விரைவில் அது ஒரு மேற்றிராசனமாக உயர்த்தப்பட்டு அதன் முதல் மேற்றிராணியாராக சங். டர்குவெடில் சுவாமியார் நியமிக்கப்பட்டார். எஸ்கிமோக்களின் அப்போஸ்தலராக விளங்கும் வந். டர்குவெடில் ஆண்டகையும் அவருக்கு எஸ்கிமோக்களிடம் ஏற்பட்ட அற்புதமான அனுபவங்களுமே 1923ம் ஆண்டு அர்ச்சிஷ்ட பட்டம் பெற்ற அர்ச்.குழந்தை தெரசம்மாள் வேதபோதக நாடுகளின் பாதுகாவலி என்ற பட்டத்துடன் அழைக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களாக விளங்குகின்றனர். Courtesy: "Mid Snow and Ice" - Rev. Fr. Pierre Douchaussois, O.M.I

தேவமாதாவின் மகிமைமிகு மோட்சாரோபணம்

 "ஆதித்திருச்சபையின் மகாத்துமாவானவரும் வேதவல்லுனருமான ஓரிஜன் என்பவர் தேவமாதாவின் மோட்சாரோபணத்தை பின்வருமாறு விவரிக்கின்றார்: " மோட்சத்தில் மகிமையுடன் தேவமாதா பிரவேசிப்பதைக் கண்ணுற்ற பரிசுத்த ஆத்துமங்கள், "முள்ளும் உபாதனைகளும் நிறைந்த பூமியாகிய பாலைநிலத்திலிருந்து, நமது நேச ஆண்டவரே வெகுவாய் களிகூர்ந்து தம்முடன் மாபெரும் மகிமையுடன் அழைத்துவரும் பேரெழில் மிக்க இப்பெண்மணி யார்? (உன்னத சங்கீதம் 8:5)
ஆண்டவர் தமது திருத்தோள்மேல் சாய்ந்து கொண்டு வருபவர்களும் மகா பரிசுத்தமும் அதிஉன்னத புண்ணியங்களும் நிறைந்தவர்களுமான இவர்கள் யார்?" என்று ஒருமித்தகுரலில் வினவியபோது, தேவமாதாவுடன் சூழ்ந்து வந்த சம்மனசுகள், "அவர்கள், நமது தேவாதி தேவனும் ராஜாதி ராஜாவுமான சர்வேசுரனின் தாயார்' பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், பிரியதத்தத்தினால் பூரணமானவர்களுமான அவர்கள் நம் இராக்கினி' அர்ச்சிஷ்டவர்களுக்கெல்லாம் மேலானவர்களும் நம் சர்வேசுரனின் பிரிய நேசமான பத்தினியும் அமல உற்பவியும் பரிசுத்த புறாவுமாக விளங்குகின்றார்கள்' சகல சிருஷ்டிகளிலும் அதி உன்னத மேன்மைமிகுந்த சிருஷ்டியாக திகழ்கிறார்கள் என்று பதில் கூறினர். உடனே சகல மோட்சவாசிகளும் தேவமாதாவைப் போற்றிப் புகழ்ந்து ஆர்ப்பரித்து, "ஓ! எங்கள் ஆண்டவளே! எங்கள் இராக்கினியே! நீரே எங்கள் பரலோக நாட்டின் மகிமையும் மகிழ்ச்சியுமாகவும் எங்கள் அனைவருக்கும் மகிமையாகவும் விளங்குகின்றீர். உமது வரவு நல்வரவாகுக! நீர் எப்போதும் ஆசீர்வதிக்கப்படுவீராக! இதோ உமது அரசு! இதோ உமது ஊழியரான நாங்கள் எப்போதும் உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய காத்திருக்கிறோம்!" என்று பாடினர்.

தேவமாதாவை தங்களுடைய இராக்கினியாக வணங்கி வாழ்த்தி வரவேற்பதற்காக எல்லா அர்ச்சிஷ்டவர்களும் அங்கு ஒன்று கூடி வந்தனர். அப்போது பரிசுத்த கன்னியர்கள் தங்களுடைய திவ்ய இராக்கினியிடம்," ஓ மிகவும் பரிசுத்த ஆண்டவளே! நாங்களும் இப்பரலோகத்தின் அரசிகள் தான். ஆனால் நீரே எங்கள் அனைவருக்கும் இராக்கினி! ஏனென்றால், நீரே முதலில் உமது பரிசுத்த கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து, எங்கள் அனைவருக்கும் மேன்மைமிகுந்த நன்மாதிரிகையாக திகழ்கின்றீர்! அதற்காக உம்மைப் போற்றி உமக்கு நன்றி செலுத்துகின்றோம்!" என்று கூறினர். அதன் பிறகு ஸ்துதியர்களும் வேதபாரகருமான சகல அர்ச்சிஷ்டவர்களும், தமது பரிசுத்த ஜீவித்தினால், தங்களுக்கு மிக அழகிய உன்னதமான நற்புண்ணியங்களைக் கற்பித்து அவற்றில் நடப்பித்த தங்கள் தேவ ஆண்டவளுக்கு நன்றியும் வாழ்த்துதலும் வணக்கமும் செலுத்தினர்.

பிறகு, சகல வேதசாட்சிகளும் தங்களுடைய திவ்ய இராக்கினியிடம் வந்தனர். தமது திவ்ய குமாரனின் பரிசுத்த பாடுகளின் மீதான வேதனைகள் மற்றும் வியாகுலங்களில் இவ்வுலக ஜீவியம் முழுவதும் நிலைத்திருந்த தேவமாதா தங்களுடைய தேவஆசிரியையாகவும் வேதசாட்சியத்தில் திவ்ய சேசுநாதர் சுவாமிக்காக தங்கள் உயிரை விடுவதற்கு தேவையான ஞானபலத்தை தமது பேறுபலன்களினால் பெற்றுத் தந்ததற்காகவும் தங்களுடைய திவ்ய இராக்கினிக்கு நன்றியும் ஸ்துதியும் தோத்திரமும் செலுத்தினர்” அர்ச்.கன்னிமாமரியின் மகிமைகள்- அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார் +


எல்லா அப்போஸ்தலர்களுடைய சார்பில் அர்ச். யாகப்பர் தேவமாதாவிடம் வந்து இவ்வுலகில் இருந்தபோது தங்களுக்கு தேவமாதா செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி செலுத்தினார். அடுத்ததாக தீர்க்கதரிசிகள் வந்தனர். தேவமாதாவை அவர்கள் வணங்கி வாழ்த்தி, "எங்கள் ஆண்டவளே! எங்களுடைய எல்லா தீர்க்கதரிசனங்களும் முன்குறிக்கும் அடையாளங்களாக உம்மையே சுட்டிக் காட்டின” என்றனர். பிறகு, பிதாப்பிதாக்கள் வந்தனர். தேவமாதாவிடம் அவர்கள், "ஓ மிகவும் பரிசுத்த மரியாயே! நீரே எங்கள் நம்பிக்கையாக விளங்கினீர். உமது வரவிற்காக நாங்கள் நீண்ட காலம் வெகு பக்திபற்றுதலுடனும் பெருமூச்சுகளுடனும் காத்திருந்தோம்" என்று கூறினர். அவர்களுடன் நமது ஆதிப்பெற்றோரான ஆதாமும் ஏவாளும் வந்தனர். அவர்கள் மாதாவுக்கு மகா பிரியத்துடன் நன்றிசெலுத்திக் கொண்டே தேவமாதாவிடம், "ஆ பிரிய குமாரத்தியே! நாங்கள் மனுக்குலத்திற்கு ஏற்படுத்திய காயத்தைக் குணப்படுத்தினீர். எங்கள் அக்கிரமத்தினால் இழந்துபோன தேவஆசீரை மனுக்குலத்திற்கு நீர் பெற்றுக் கொடுத்தீர்! உம்மாலேயே நாங்கள் இரட்சணியமடைந்தோம். அதன்பொருட்டு நீர் நித்தியத்திற்கும் ஆசீர்வதிக்கப்படுவீராக!" என்று கூறினர். அர்ச். சிமியோன் தேவமாதாவின் திவ்ய பாதங்களை முத்தமிட்டார். அதன்பிறகு, தன் கைகளில் திவ்ய பாலனை ஏந்திய நாளைப்பற்றி மிக ஆனந்த அகமகிழ்வுடன் தேவமாதாவிடம் ஞாபகப்படுத்தினார். அர்ச். சக்கரியாஸ்,

அர்ச். எலிசபெத்தம்மாளுடன் வந்தார். மகா தாழ்ச்சியுடனும் உத்தம சிநேகத்துடனும் தங்களை சந்திக்க தங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்தமைக்காக மாதாவுக்கு நன்றி செலுத்தினர். அதனால் தாங்கள் திரளான தேவவரப்ரசாதங்களைப் பெற்றதாகக் கூறினர். அர்ச்.ஸ்நாபக அருளப்பரும் அங்கு வந்தார். மாதா, தமது திவ்ய குரலினால் தன்னை அர்ச்சித்ததற்காக அவர் மிகுந்த சிநேகத்துடன் தேவமாதாவுக்கு நன்றி செலுத்தினார். மாதாவுடைய பரிசுத்த பெற்றோர்களான அர்ச். ஜோக்கிம், அர்ச். அன்னம்மாள் மாதாவை அணுகி, ஓ ஆண்டவரே! எத்தகைய கனிவுடன் அவர்கள் தேவமாதாவை ஆசீர்வதித்தனர்! அவர்கள் மாதாவை வாழ்த்திக் கொண்டே, “ஓ நேச குமாரத்தியே! உம்மை எங்கள் குழந்தையாகப் பெற்றது எத்தகைய பெரிய பாக்கியம்! இப்பொழுது நீர் எங்களுடைய இராக்கினியாக இரும். ஏனெனில் நீர் எங்கள் சர்வேசுரனுடைய தாயார்! உம்மை வணங்கி தோத்தரித்து ஸ்துதிக்கிறோம்!" என்றனர்.

அர்ச்.சூசையப்பர் அங்கு தோன்றுகிறார். அவர் எத்தகைய உன்னதமான சிநேகத்துடன் மாதாவிடம் வருகிறார் என்று யாரால் சரிவர உணரக்கூடும்? பரிசுத்த பிதாப்பிதாவான அர்ச். சூசையப்பர், தமது திவ்ய பத்தினி மகத்தான வெற்றி வாகையுடன் பரலோக மகிமைக்குள் நுழைவதையும் அங்கு பரலோக இராக்கினியாக முடிசூட்டப்படுவதையும் காணும்போது, எத்தகைய ஆனந்த அக்களிப்பு எய்தினார் என்பதை யாரால் விவரிக்கமுடியும்? அவர் மகா கனிவுடன், "ஓ என் ஆண்டவளே! என் பிரிய பத்தினியே! நமது ஆண்டவரின் தாயாரான உம்மை எனது பத்தினியாக ஏற்படுத்தத் திருவுளமான நமது சர்வேசுரனுக்கு நான் எவ்வாறு நன்றி செலுத்தப்போகிறேன? நித்திய வார்த்தையானவரின் திவ்ய பாலத்துவத்தைப் போஷித்து அவருக்கு பணிவிடைசெய்தும் அவரை எனது கரங்களில் ஏந்தியும் மகிழ்ந்தேன். அதனால் வெகுவான விசேஷ தேவவரப்ரசாதங்களைப் பெற்றுக் கொள்ள தேவையான உன்னத அந்தஸ்தை உமது வழியாகவே நான் அடைந்தேன். திவ்ய சேசுவுக்கும் என் பரிசுத்த பத்தினியான உமக்கும் நான் இப்பூமியில் ஊழியம் செய்த அந்த மணித்துளிகள் எப்பொழுதும் ஆசீர்வதிக்கப்படுவனவாக! இதோ நம் சேசு! பெத்லேகமில் நாம் அவரைப் பார்த்தது போல இனி அவர் மாட்டுக் கொட்டிலில் வைக்கோலின் மேல் படுத்துறங்க மாட்டார். நசரேத்தில் ஒரு தச்சுக்கூடத்தில் நம்முடன் வாழ்ந்தது போல அவர் யாவராலும் வெறுக்கப்பட்ட ஒரு தரித்திரராக இருக்க மாட்டார். உலகின் இரட்சணியத்திற்காக அந்த அவமான மரத்தில் இனி அவர் அறையப்படமாட்டார். ஆனால், அவருடைய தந்தையான பிதாவாகிய சர்வேசுரனின் வலது பாரிசத்தில் பரலோக பூலோக அரசராகவும் ஆண்டவராகவும் முடிசூட்டப்பட்டு வீற்றிருக்கிறார். மேலும், இப்பொழுது என் இராக்கினியே! இனிமையான அவருடைய திவ்ய பாதங்களைவிட்டு நாம் ஒருபோதும் பிரிக்கப்பட மாட்டோம்! அங்கு அவரை நாம் நித்தியத்திற்கும் ஸ்துதித்துக்கொண்டும் சிநேகித்துக் கொண்டும் இருப்போம்" என்றார்.
பிறகு, எல்லா சம்மனசுக்களும் வந்து, சம்மனசுக்களின் இராக்கினியை வணங்கினர். அவர்களைக் கண்ட தேவமாதா பூமியில் அவர்கள் தமக்களித்த அனைத்து பணிவிடைகள் மற்றும் உதவிகளுக்கு நன்றி செலுத்தினார்கள். விசேஷமாக மாதாவின் மகிமைகளை சுமந்து சென்றவரான அர்ச்.கபிரியேல் அதிதூதர், தம்மிடம் மகிழ்ச்சியின் துாதுவராக வந்து, தான் சர்வேசுரனின் தாயாராக சர்வேசுரனாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட சுபசெய்தியை அறிவிக்க வந்ததற்காக நன்றி செலுத்தினார்கள். அதன்பிறகு, தாழ்ச்சி மிகுந்த மகா பரிசுத்த கன்னிகை சர்வேசுரனின்தேவமகத்துவத்தை முழங்காலில் இருந்து ஆராதித்தார்கள். தனது ஒன்றுமில்லாமையில் மூழ்கியவர்களாக, தேவமாதா, தனக்கு சர்வேசுரனுடைய பரிசுத்த நன்மைத்தனம் அளித்த எல்லா தேவவரப்ரசாதங்களுக்காகவும் விசேஷமாக நித்திய வார்த்தையானவருக்கு தன்னை தாயாராக ஏற்படுத்தியமைக்காகவும் நன்றி செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

பிறகு, மகாபரிசுத்த அர்ச்.தமதிரித்துவம் எத்தகைய அளவில்லா சிநேகத்துடன் மாதாவை ஆசீர்வதித்ததை யாரால் புரிந்து கொள்ளக் கூடும்? அவ்வாறு புரிந்து கொள்பவரால் மட்டுமே பரமபிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்ய குமாரத்தியையும், திவ்ய சுதனாகிய சர்வேசுரன் தமது பரிசுத்த மாதாவையும், திவ்ய இஸ்பிரீத்துசாந்துவான சர்வேசுரன் தமது பரிசுத்த பத்தினியையும் எவ்வாறு வரவேற்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பிதாவாகிய சர்வேசுரன் தமது வல்லமையை அளித்து மாதாவுக்கு முடிசூட்டினார். அவ்வாறே, சுதனாகிய சர்வேசுரன் தமது ஞானத்தைக் கொண்டும் திவ்ய இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் தமது சிநேகத்தைக் கொண்டும் மாதாவுக்கு முடிசூட்டினார்கள். மூன்று தேவஆட்களும் சேசுநாதர்சுவாமியின் வலதுபக்கத்தில் மாதாவை அமரச் செய்தனர். அங்கு பரலோக பூலோக இராக்கினியாக தேவமாதாவுக்கு முடிசூட்டினர். மகாபரிசுத்த அர்ச்.தமதிரித்துவம், சும்மனசுக்களுக்கும் எல்லா சிருஷ்டிகளுக்கும் தேவமாதாவை தங்கள் இராக்கினியாக ஏற்றுக் கொள்ளவும் மாதாவுக்கு ஊழியம் செய்து மாதாவுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் கட்டளையிட்டனர்.

சேசுசபையை உண்டாக்கின அர்ச்.இலொயோலா இஞ்ஞாசியார் (St. Ignatius of Loyalo)

 திருநாள் ஜூலை 31ம் தேதி.



ஸ்பெயின் நாட்டில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த உத்தம கத்தோலிக்க கிறிஸ்துவ பெற்றோர்களுக்கு மகனாக அர்ச்.இஞ்ஞாசியார் 1491ம் வருடம் பிறந்தார். இஞ்ஞாசியார் மேல் அந்நாட்டின் அரசன் மிகவும் பிரியமாயிருந்ததினால் அரண்மனையில் இருந்த அரச அலுவலர்களிடையே அவர் மிகுந்த மகிமையுடன் திகழ்ந்தார். இராணுவத்தில் சேர்ந்து வீர தீரச் செயல்கள் புரிந்து புகழ்பெற்றார். "பாம்பலோனா" என்ற கோட்டையை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகப் போரிட்டபோது இவர் கால்முறிபட்டு கடினக் காயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 அப்போது அவர் அங்கு, அர்ச்சிஷ்டவர்களுடைய சரித்திரத்தை வாசிக்கிறபோது இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்டவர்களைப் அனுக்கிரகத்தினாலேயே பின்பற்றி ஜீவிப்பதற்கு தீர்மானித்தார். பிரதான அப்போஸ்தலரான அர்ச்.இராயப்பர் அவருக்குத் தோன்றி புதுமையாக அவருடைய காலைக் குணப்படுத்தினார். மேலும் மோட்ச இராக்கினியான தேவமாதாவும் அவருக்குத் தோன்றி, பசாசு அவரை உபாதித்து வந்த கற்புக்கு எதிரான சோதனைகளையும், பாவநாட்டங்களையும் அவரிடமிருந்து அகற்றினார்கள். தேவமாதா செய்த புதுமையினால், அன்றிலிருந்து சாகுமட்டும், அர்ச்.இஞ்ஞாசியார் அத்தகைய சோதனைகளிலிருந்து ஜீவியகாலம் முழுவதும் காப்பாற்றப்பட்டார். தன் அரண்மனை ஜீவியத்தை விட்டு விட்டு, சாங்கோபாங்கமான அர்ச்சிஷ்ட ஜீவியத்தைக் கடைபிடிக்கும் பொருட்டு மோன்செராத் என்ற தேவமாதாவின் தேவாலயத்திற்கு தவயாத்திரையாகச் சென்றார். பயணத்தின்போது ஒரு பிச்சைக்காரனுக்கு தன்னுடைய நல்ல உடைகளைக் கொடுத்தார். அவனுடைய தரித்திர உடையை வாங்கி அணிந்து கொண்டார். இத்தரித்திர கோலத்திலேயே தேவமாதாவின் கோவிலுக்குச் சென்றார். தன்னுடைய போர்வாளை தேவமாதாவின் சந்நிதியில் வைத்தார். பிறகு மிகுந்த மனஸ்தாபத்துடன் பொதுப் பாவசங்கீர்த்தனம் செய்தார். தன் ஆத்துமத்தைப் பரிசுத்தப்படுத்தினார். தன் ஜீவியகாலம் முழுவதும் கற்புநிறை விரத்தனாயிருப்பதாக வார்த்தைப்பாடு கொடுத்தார். நித்தியத்திற்கும் தேவமாதாவின் சொந்த அடிமையாக தன்னை ஒப்புக்கொடுத்தார். பரிசுத்த கற்புநிறை விரதத்துவ ஜீவியம் தனக்குக் கிடைக்கும்படி ஒரு இரவு முழுவதும் தூங்காமல் தேவமாதாவின் சுரூபத்தின்முன் அழுதுகொண்டே மன்றாடிக் கொண்டிருந்தார். அந்த தயைமிகுந்த திவ்ய மோட்ச இராக்கினி அவருடைய மன்றாட்டை ஏற்றுக் கொண்டதினால் அவர் பெரிய அர்ச்சிஷ்டவரானார். அதன்பிறகு இஞ்ஞாசியார் வியாகுலமாதாவின் சுரூபத்தை தன் கழுத்திலே தரித்துக் கொண்டார். அநேக ஆபத்துக்களிலிருந்து வியாகுல மாதா தன்னைக் காப்பாற்றினார்கள் என்று அவரே வெளிப்படுத்தினார்.
மன்ரேசா என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்த நோயாளிகளுக்கும் தரித்திரர்களுக்கும் ஊழியம் செய்து வந்தார். கடின தபசும் அனுசரித்து வந்தார். ஆனால் அவ்வூர் மக்கள், தரித்திர கோலத்தில் இருந்த போதிலும் அவர் ஒரு உயர்குடிமகன் என்று அறிந்து அவருக்கு மிகவும் சங்கை மரியாதை செய்தனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு உடனே, இஞ்ஞாசியார் ஊரை விட்டு வெளியேறி, அருகிலிருந்து மலைக்குகைக்குச் சென்று மறைந்து ஜீவித்தார். நேச ஆண்டவருடைய பாடுபட்ட சுரூபத்தை தன் கழுத்தில் அணிந்து கொண்டார். அவர் அங்கு மிகுந்த கடினமான தபசுகளை அநுசரித்து வந்தார். பிச்சையெடுத்தே உண்டு வந்தார்.

 ஞாயிற்றுக் கிழமைதவிர மற்ற நாட்களில் ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே உட்கொண்டு ஒருசந்தியிருப்பார். நித்திரையை மிகவும் ஒறுத்துக் குறைப்பார். காயம் வருத்துவிக்கிற இரும்புமுள் ஒட்டியானத்தையும் மகா வேதனை வருத்துவிக்கிற சங்கிலியையும் இடுப்பிலே கட்டிக் கொள்வார். தினமும் தன் சரீரத்தை இரத்தம் புறப்படுகிறவரை அடித்துக் கொள்வார். இவ்வாறாக ஒருவருட காலம் அந்த "மன்ரேசா" குகையிலே கடின தபசு செய்தார்.

அப்படி ஒரு தபசில் ஈடுபட்டிருந்தபோது, விசேஷ தெளிவும் ஞான வெளிச்சமும் அடைந்து ஆண்டவராலே பிரகாசிக்கப்படுகிற போது வெகு ஆனந்தத்தை அவர் அனுபவித்ததுமல்லாமல் மேலான உன்னதமான உணர்ச்சிகள் அவருக்கு உண்டாயிற்று. இதைப்பற்றி குறிப்பிடுகையில் அவர், "அந்தக் குகையில் பரிசுத்த வேதாகமங்கள் இல்லாமல் போனாலும், ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தின வேதகாரியங்களைப் பற்றி மாத்திரம், வேதத்திற்காக என் உயிரைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறேன்" என்று கூறினார். அர்ச். பரமதிரித்துவ இரகசியத்தை அவர் தரிசனமாகக் காட்சி கண்டார். தேவமாதாவும் அநேகமுறை அவருக்கு அக்குகையில் தோன்றினார்கள்.
அப்போது அதுவரை கல்வி சாஸ்திரங்களைப் படியாமல் இருந்த இஞ்ஞாசியார், அந்தக் குகையிலே "ஞான தியான பயிற்சிகள்" என்ற ஞானதியானத்திற்குரிய ஆச்சரியமான புத்தகத்தை எழுதினார். ஞானத்துக்கு இருப்பிடமான தேவமாதாவே அப்புத்தகத்தை அவர் எழுதும்படிச் செய்தார்கள். அத்தியானங்களின் வழியாக அர்ச்.இஞ்ஞாசியார் வெகு பக்தி சுறுசுறுப்பும் அடைந்ததுமல்லாமல் எண்ணமுடியாத அநேக ஆத்துமங்கள் அப்புத்தகத்தினால் ஞான நன்மையடைந்தன. பாப்பரசர் அதனால் ஏற்படும் ஞானநன்மைகளின் பொருட்டு, உடனே அப்புத்தகத்தை அங்கீகரித்தார். ஆத்துமங்களை இரட்சிக்க கல்வி சாஸ்திரம், முக்கிய தேவை என்று தீர்மானித்த அர்ச். இஞ்ஞாசியார் சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து பள்ளிக்கூடத்தில் தனது 30வது வயதில் சேர்ந்து கல்வி பயின்றார். அதற்குள்ளாக தான் உண்டாக்கின ஞான தியானங்களைக் கொண்டு அநேக பாவிகளை மனந்திருப்பினார். அதனால் காய்மகாரம் கொண்ட பசாசினாலேயும், மனந்திரும்பாத பாவிகளினாலேயும் அவருக்கு வந்த உபாதைகளுக்குக் கணக்கில்லை. அவரை மாயவித்தைக்காரன் என்று சொல்லி விலங்கிட்டு காவலிலே வைத்தார்கள். ஒருசமயம் பாவிகள் அவரைக் கொடூரமாய் அடித்ததினால் அவர் நினைவில்லாமல் கீழே விழுந்து கிடந்தார்.
ஒரு பாவியை மனந்திருப்புவதற்காக பனிஉறைந்திருக்கிற ஆற்றுத்தண்ணீரிலே வெகுநேரம் நின்றார். அதனால் அவருக்கு ஏற்பட்ட கடின அவஸ்தையையும் சட்டைபண்ணாமல் பாவியின் ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு மிகப் பொறுமையுடன் சகித்துக் கொண்டார். இஞ்ஞாசியார், தன் நல்ல நேச ஆண்டவரான சேசுநாதர்பேரில் கொண்டிருந்த சிநேகத்தின்பொருட்டு அளவற்ற ஜெருசலேமுக்கு திருயாத்திரையாகச் சென்றார். அங்கிருந்த திவ்ய கர்த்தர் பாடுபட்ட ஸ்தலங்களுக்கு சென்று அவற்றை, மகா உருக்கத்துடனும்அழுகையுடனும் சேவித்தார்.

இஞ்ஞாசியார் தவயாத்திரையை முடித்துக் கொண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாரீஸ் நகருக்குச் சென்றார். அங்கு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி சாஸ்திரங்களைப் பயின்றார். அங்கிருந்த பல்கலைக்கழக மாணவர்களான இளைஞர்கள் சிலரைக் கொண்டு ஒரு துறவற சபையை உருவாக்க திட்டமிட்டார். தனது ஞானதியானங்களின் வழியாக அவர்களை ஞானஒடுக்கம் செய்ய வைத்தார். அதன்விளைவாக அவ்விளைஞர்கள் பக்தி சுறுசுறுப்புள்ளவர்களானார்கள். அர்ச். பிரான்சிஸ் சவேரியாரும் அந்த இளைஞர்களில் ஒருவர். அவர் அதே பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராக பணியாற்றினார். உலக மகிமையைத் தேடி தீவிரமாக அவர் அலைந்தபோது தான் இஞ்ஞாசியார் அப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவராக சேர்ந்தார்.
 "ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆத்துமத்தை இழந்துபோனால் அதனால் அவனுக்கு என்ன பயன்" என்ற சுவிசேஷ வார்த்தைகளின் போதனையைக் கொண்டு அர்ச்.இஞ்ஞாசியார் யார் அவரை மனந்திருப்பியிருந்தார். அந்த இளைஞர் களுடன் இஞ்ஞாசியாரும் சேர்ந்து 7 பேராக வேதசாட்சிகளின் இராக்கினியான தேவமாதாவின் தேவாலயத்திற்குச் சென்று கற்பு, கீழ்படிதல், தரித்திரம் என்ற மூன்று வார்த்தைப்பாடுகள் கொடுத்து இஞ்ஞாசியார் தொடங்கவிருந்த சந்நியாச சபைக்கு அஸ்திவாரமிட்டனர்.

 இஞ்ஞாசியார், தன் படிபபை முடித்ததும், குருப்பட்டம் பெற்றார். நம் ஆண்டவர் மேல் அவர் வைத்திருந்த அளவில்லாத நேசத்தின் பொருட்டும், தாழ்ச்சியினிமித்தமும், இஞ்ஞாசியார், தனது சபைக்கு "சேசுசபை" என்று பெயரிட்டார். பிறகு, ரோமாபுரிக்குச் சென்று தனது சபைக்கு பாப்பரசரிடத்தில் அங்கீகாரம் பெற்றார். பிறகு தன் சபையார் மூலம் சத்தியவேதம் போதிக்கவும் அப்பொழுதுதான் திருச்சபையை உலகெங்கும் சீர்குலைக்கும்படியாக தோன்றியிருந்த புரோட்டஸ்டான்ட் பதிதங்களை நிர்மூலம் பண்ணவும் கிறிஸ்துவர்களை சாங்கோபாங்கத்தின் சுகிர்தநெறியில் திருப்பவும் வேண்டிய அலுவல்களில் ஈடுபடலானார். சிந்துதேசமான இந்தியாவிற்கு அர்ச். பிரான்சிஸ் சவேரியாரின் தலைமையில் சில குருக்களை அனுப்பி அங்கு சத்திய வேதத்தைப் போதிக்கச் செய்தார். தேவபராமரிப்பினால் சேசுசபை உலகெங்கும் வெகுவிரைவாக பரவி ஆங்காங்கே சத்தியவேதம் போதிக்கப்பட்டது. “எல்லாம் சர்வேசுரனுடைய அதிமகிமைக்காக" A.M.D.G (AD MAJOREM DEI GLORIAM) என்பதையே விருதுவாக்காகக் கொண்டு இஞ்ஞாசியாரால் நிறுவப்பட்ட சேசுபையால் உலகம் முழுவதிலும் இருந்த அஞ்ஞானத்துக்கும் பதிதங்களுக்கும் குறிப்பாக லுாத்தரன் என்ற பதிதத்திற்கும் பசாசின் இராஜ்யங்களுக்கும் பெரும் அழிவு ஏற்பட்டது.
கிறிஸ்துவர்களிடையே தாழ்ந்து குளிர்ந்து போயிருந்த பக்திபற்றுதலை மறுபடியும் தூண்டி உயர்த்தும்படியாக அர்ச். இஞ்ஞாசியார் வெகுவாய் உழைத்தார். தேவாலயங்களை புதுப்பித்து வேதத்தைக் கடைபிடியாதவர்களுக்கு ஞானஉபதேசம் கற்பிக்கிறதும், ஞானபிரசங்கங்கள் கொடுப்பதும், பாவசங்கீர்த்தனத்தின் வழியாக ஆத்தும சுத்தம் பண்ணி திவ்ய நற்கருணை பந்திக்கு கிறிஸ்துவர்களை ஆயத்தம் செய்வதுமான பல்வேறு ஞான காரியங்களெல்லாம் அர்ச். இஞ்ஞாசியாராலே எங்கும் முக்கியமாக புண்ணிய பழக்க வழக்கங்களாக அனுசரிக்கப்படலாயின. இஞ்ஞாசியாரின் கட்டளையின்படி சேசுசபையார் அனைவரும் உலகெங்கும் பல நாடுகளில் மடங்களைக் கட்டி இளைஞர்களுக்கு இலவசமாக கல்விக் கற்பித்தனர். வேதசாஸ்திரங்களில் அவர்களைப் பயிற்றுவித்தனர்.
சேசுசபையில் உட்படும்படியாக ஏராளமான இளைஞர்கள் முன் வந்தனர். ஜெர்மனி தேசத்திலிருந்து சேசுசபையில் சேர்வதற்காக வந்த ஏராளமான அரசகுலத்தைச் சேர்ந்த ஆண்களுக்காக ரோமாபுரியில் ஒரு பெரிய குருமடத்தை நிறுவினார். அங்கு மற்ற நாடுகளினின்று வரும் இளைஞர்களுக்கும் வெவ்வேறு சிறு மடங்களையும் கட்டினார். திருமணமாகியும் இல்லறத்தில் ஈடுபடாமல் போன ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய பரிசுத்த கற்பைக் காப்பாற்றும்படியாகவும் அவர்கள் உத்தம கிறிஸ்துவ ஜீவியம் ஜீவிப்பதற்காகவும் அவர்களுக்கும் தனித்தனியாக மடங்களை ஏற்படுத்தினார். மேலும், அனாதை பெண்களுக்கும், சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும் ஞான உபதேசம் கற்பவர்களுக்கும் தனித்தனியாக மடங்களை நிறுவினார்.
 திருச்சபையிடமிருந்தும், பல்வேறு உபகாரிகளின் உதவியினாலும் இஞ்ஞாசியார், தான் நிறுவிய எல்லா மடங்களையும் போஷித்து வந்தார். பசாசுகளை ஓட்டுவதிலே இஞ்ஞாசியார் எவ்வளவுக்கு வல்லமை வாய்ந்தவரென்றால் அவருடைய உருவத்திற்கும் அவர் எழுதிய கடிதத்திற்கும் பயந்து பசாசுகள் ஓடின என்பதை அவருடைய சபைக்குருக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தேவசிநேகத்தின் சுவாலை அவருடைய இருதயத்திலே அடிக்கடி கொளுந்து விட்டு எரியும். அப்போதெல்லாம் அவர் அடைந்த ஞான சந்தோஷத்தினாலே தன் இரு கண்களும் குருடாகும் அளவிற்கு வெகுவாய் கண்ணீர் விடுவார்.

அவர் திவ்யபலிபூசை நிறைவேற்றும்போது தேவசிநேக சுவாலை அவருடைய இருதயத்தில் மிகுதியாக கிளம்பினதால், திவ்யபலிபூசை முடிந்தவுடன் நடக்கக்கூட முடியாதபடிக்கு மிகவும் பலவீனமாகி சோர்ந்து போவார். அப்போது அவரை அவருடைய அறைக்குத் தூக்கிக் கொண்டு போவார்கள். அவர் தியானத்தில் இருக்கும்போது அநேகமுறை பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார். ஒருமுறை இஞ்ஞாசியார் அவ்வாறு ஒன்றும் சாப்பிடாமலும், பேசாமலும் 8 நாட்கள் தொடர்ந்து பரவசநிலையிலேயே இருந்தார். ஒருசமயம் இஞ்ஞாசியார் ரோமாபுரிக்கு போகிறபோது நம் ஆண்டவர் சிலுவை சுமந்த பிரகாரமாக அவருக்குக் காட்சி தந்து, "நாம் உனக்கு ரோமாபுரியில் பிரசன்னமாயிருப்போம்" என்றார். அன்றிலிருந்து இஞ்ஞாசியாரின் முகத்தைச் சுற்றிலும் ஒளிக்கதிர் புதுமையாக வீசுகிறதை அர்ச். பிலிப் நேரியார் முதலிய சிலர் கண்டனர். அர்ச். சவேரியார் இஞ்ஞாசியாரை மிகவும் சங்கை செய்தவராதலால் அவருக்குக் கடிதம் எழுதும்போது முழங்காலில் இருந்து எழுதுவார். அவரை அர்ச்சிஷ்டவரென்றே அழைப்பார். வேறுபெயரினால் அழைக்கமாட்டார். அர்ச்.இஞ்ஞாசியார் எழுதிய கடிதத்தின் இறுதியில் இருந்த அவருடைய கையொப்பத்தை சவேரியார் கத்தரித்து எடுத்து அதை ஒரு அர்ச்சிஷ்ட பண்டமாக தன் கழுத்திலே தரித்துக் கொண்டார். இதைப்பற்றிக் குறிப்பிடுகையில் சவேரியார், அவருடைய கையொப்பத்தை நம்பிக் கொண்டு பூமியிலேயும் கடலிலேயும் யாதொரு பயமுமின்றி பயணம் செய்யலாம். மேலும் நான் புண்ணியத்தில் உயர்வதற்கும் என்னுடைய வழியாக சிந்துதேசத்தாருக்கு வருகிற ஞான நன்மைகள் எல்லாவற்றிற்கும் அர்ச். இஞ்ஞாசியாருடைய புண்ணியங்கள் காரணமாயிருக்கின்றன. அவர் மகாபெரிய அர்ச்சிஷ்டவர்” என்றார்.

 அர்ச். இஞ்ஞாசியார் வாக்குக்கெட்டாத பக்திசுறுசுறுப்போடே புண்ணிய ஜீவியம் ஜீவித்தார். 65வது வயதில் அவஸ்தைபட்டு அர்ச்சிஷ்டவராக மரித்தார். அவரால் திருச்சபைக்கு விளைந்த திரளான ஞான நன்மைகளையும் அவர் செய்த எண்ணற்ற புதுமைகளையும் கண்ட 15ம் கிரகோரியார் பாப்பரசர் இஞ்ஞாசியாருக்கு 1622ம் ஆண்டு அர்ச்சிஷ்ட பட்டம் அளித்தார். தேவமாதாவின் கட்டளையின்படியே அர்ச். இஞ்ஞாசியார் ஒருதடவை உலகிற்கு வந்து அப்போது ஜீவித்துக்கொண்டிருந்த அர்ச். பாசி மரியமதலேனம்மாளுக்கு தாழ்ச்சி என்ற புண்ணியத்தின்பேரிலே ஞான பிரசங்கம் செய்தார். சேசுசபை என்ற இந்த மாபெரும் உன்னத சந்நியாச சபையினாலே இதுவரைக்கும் உண்டான மகாத்துமாக்களான அர்ச்சிஷ்டவர்களும் வேதசாஸ்திரிகளும் எவ்வளவு பேர் என்றும் இதனால் உலகிற்கு விளைந்த ஞான நன்மைகள் எவ்வளவு என்றும் மனிதரால் சொல்லமுடியாது. சம்மனசுக்குரிய உயர்ந்த புத்தியும் வார்த்தையும் தான் அந்த ஞானநன்மைகளைப்பற்றி விவரிக்கக்கூடும். A.M.D.G.t