Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 13 ஜனவரி, 2024

திரிகால ஜெபம் - The Angelus





(இந்த ஜெபத்தை முழங்காலிலிருந்து வேண்டிக்கொள்ள வேண்டும். ஆனால் சனிக்கிழமை சாயந்திரமும், ஞாயிற்றுக்கிழமையிலும் இதை நின்று கொண்டு சொல்ல வேண்டியது)

ஆண்டவருடைய சம்மனசானது மரியாயுடனே விஷேஷ் சொல்லிற்று.
 அவள் இஸ்பிரீத்துசாந்துவினாலே கர்ப்பிணியானாள். (அருள்)

இதோ ஆண்டவருடைய அடிமையானவள் உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது" (அருள்)

வார்த்தையானது மாம்சமாகி,
எங்களுடனே கூட வாசமாயிருந்தது (அருள்)

முதல்: சேசு கிறீஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.

எல்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! சம்மனசு சொன்னதினாலே உமக்கு குமாரனாகிய சேசு கிறீஸ்து மனுஷனானதை அறிந் திருக்கிற நாங்கள், அவருடைய பாடுகளினாலேயும், சிலுவையினாலேயும் உத்தானத்தின் மகி மையை அடையத் தக்கதாக, எங்களுக்கு அநுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று தேவரீரை வேண்டிக்கொள்கிறோம். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.



பாஸ்கு காலத்தின் திரிகால ஜெபம்

(இது பெரிய சனி மாலை முதல் அர்ச். தமதிரித்துவத்தின் திருநாள் வரைக்கும் நின்றுகொண்டு சொல்லத்தக்கது )

பரலோகத்துக்கு இராக்கினியே ! மனங் களிகூறும் அல்லேலூயா அதேதெனில் பாக்கியவதியான உமது திரு உதரத்தில் அவதரித்தவர் - அல்லேலூயா

திருவுளம்பற்றின வாக்கின்படியே உயிர்த்தெழுந்தருளினார் - அல்லேலூயா
எங்களுக்காக சர்வேசுரனை மன்றாடும்- அல்லேலூயா 

எப்போதும் கன்னிகையான மரியாயே அகமகிழ்ந்து பூரிக்கக்கடவீர் - அல்லேலூயா
அதேதெனில் ஆண்டவர் மெய்யாகவே உத்தான மானார் - அல்லேலூயா.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! உம்முடைய திருக்குமாரனுமாய், எங்கள் ஆண்டவருமாயிருக்கிற சேசு கிறீஸ்துவின் உத்தானத்தினாலே உலகங்களிக்கச் சித்தமானீரே. கன்னி மரியாயாகிய அவருடைய திருத்தாயாராலே நித்திய ஜீவியமான பரலோக வாழ்வை நாங்கள் அடையும்படிக்கு அநுக்கிரகம் பண்ணியருளும். இந்த 
மன்றாட்டுக்களை யெல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுநாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் - ஆமென்.


The Angelus prayer in Tamil (Paschal time)

The Angelus Prayer in Tamil


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக