Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 20 டிசம்பர், 2018

சேசுநாதருடைய திருநாமத்தின் பிரார்த்தனை (Litany of Holy Name of Jesus in Tamil)


சேசுநாதருடைய திருநாமத்தின் பிரார்த்தனை 
 
சுவாமீ கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
 சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும் பரலோகத்திலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைசெய்து இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டுரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்க... இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரா, எங்க..
அர்ச். தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்க..
நித்திய பிதாவின் திருச்சுதனாயிருக்கிற சேசுவே, எங்க...
பிதாவின் பிரகாசமாயிருக்கிற சேசுவே, எங்க...
நித்திய ஒளியின் தூய்மையாகிய சேசுவே, எங்க..
மட்டில்லாத மகிமை உடைய இராசாவாகிய சேசுவே,
எங்க. நீதி ஆதித்தனாகிய சேசுவே, எங்க.
பரிசுத்த கன்னிமரியாயின் குமாரனாகிய சேசுவே, எங்க..
மகா அன்புக்குரிய சேசுவே, எங்க...
ஆச்சரியத்திற்குரிய சேசுவே, எங்க.. மிகுந்த வல்லபக் கடவுளாயிருக்கிற சேசுவே, எங்க...
வரப்போகிறபாக்கியங்களுக்குக் காரணராயிருக்கிற சேசுவே, எங்க... பரம ஆலோசனைகளின் திவ்விய தூதரான சேசுவே, எங்க..
மகா சக்தியுடைத்தான சேசுவே, எங்க...
மகா பொறுமையுள்ள சேசுவே, எங்க..
மகா சிரவணம் பொருந்திய சேசுவே, எங்க...
மனத் தாழ்ச்சியையும் மதுர குணத்தையும் கொண்டிருக்கிற சேசுவே, எங்க..
கற்பை நேசிக்கிற சேசுவே, எங்க..
எங்கள் அன்பராகிய சேசுவே, எங்க..
சமாதான தேவனாகிய சேசுவே, எங்க...

சீவியத்திற்குக் காரணமாயிருக்கிற சேசுவே, எங்க...
சகல புண்ணியங்களுக்கும் மாதிரிகையாயிருக்கிற சேசுவே,
எங்க.. ஆத்துமங்களை இரட்சிக்கிறதிலே அதிக ஆர்வமுள்ள சேசுவே, எங்கள் தேவனாயிருக்கிற சேசுவே, எங்க..
எங்களுக்கு அடைக்கலமாயிருக்கிற சேசுவே, எங்க...
தரித்திரருடைய பிதாவாயிருக்கிற. சேசுவே, எங்க...
விசுவாசிகளுடைய பொக்கிஷமாயிருக்கிற சேசுவே, எங்க...
நல்ல ஆயராயிருக்கிற சேசுவே, எங்க..
உண்மையான பிரகாசமாயிருக்கிற சேசுவே, எங்க...
 நித்திய ஞானமாயிருக்கிற சேசுவே, எங்க...
மட்டில்லாத நன்மைத் தன்மையைக் கொண்டிருக்கிற சேசுவே,
எங்கள் சீவியமும் உண்மையும் வழியுமாயிருக்கிற சேசுவே, எங்க.. சம்மனசுகளுடைய சந்தோஷமாயிருக்கிற சேசுவே, எங்க... பிதாப்பிதாக்களுக்கு இராசாவாகிய சேசுவே, எங்க..
தீர்க்கதரிசிகளுக்கு ஞானம் கொடுக்கிற சேசுவே, எங்க.. அப்போஸ்தலருக்குக் குருவாகிய சேசுவே, எங்க...
சுவிசேஷகருக்குப் போதகரான சேசுவே, எங்க...
வேதசாட்சிகளுக்குப் பலமாயிருக்கிற சேசுவே, எங்க...
ஸ்துதியருடைய பிரகாசமான சேசுவே, எங்க...
விரத்தருடைய துப்புரவான சேசுவே, எங்க... சகல அர்ச்சியசிஷ்டவர்களுக்கு முடியான சேசுவே, எங்க...
தயாபரராயிருந்து, - எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி. தயாபரராயிருந்து, - எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமீ. சகல பாவங்களிலிருந்து - எங்களை இரட்சித்தருளும் சுவாமி. தேவரீருடைய கோபத்திலிருந்து, எங்க.. ,
பசாசின் தந்திரங்களிலிருந்து, எங்க...
மோக ஆசையிலிருந்து, எங்க...                                                                        
 நித்திய மரணத்திலிருந்து, எங்க...                                                                
தேவரீர் தருகிற தரும் விசாரங்களை அசட்டைபண்ணுகிற துர்க்குணத்திலிருந்து, எங்க..                                                                       தேவரீருடைய மனுஷாவதாரத்தின் பரம இரகசியத்தைப் பார்த்து, எங்க
தேவரீருடைய பிறப்பைப் பார்த்து, எங்க..
தேவரீருடைய குழந்தைப் பருவத்தைப் பார்த்து, எங்க..
தேவரீருடைய விருத்தசேதனத்தைப் பார்த்து, எங்க..
தேவரீருடைய திவ்விய நடத்தையைப் பார்த்து, எங்க...
தேவரீருடைய பிரயாசத்தையும் பிரயாணங்களையும் பார்த்து, எங்க.. தேவரீருடைய கலக்கத்தையும் இரத்த வேர்வையையும் பார்த்து, எங்க . தேவரீருடைய சிலுவையையும் பாடுகளையும் பார்த்து, எங்க... தேவரீருடைய உபத்திரவங்களையும் நிற்பந்தங்களையும் பார்த்து, எங்க...
தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து, எங்க... தேவரீருடைய சந்தோஷத்தையும் மகிமையையும் பார்த்து, எங்க.. தேற்றுகிறவராகிய இஸ்பிரீத்துசாந்துவின் வருகையைப் பார்த்து, எங்க நடுத்தீர்க்கிற நாளிலே, - எங்களை இரட்சித்துத்தருளும் சுவாமி. உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, - எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமீ.
 உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமீ. )
சேசுவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
சேசுவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
முதல்: இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும்,
துணை: ஆண்டவருடைய திருநாமம் வாழ்த்தப்படக்கடவது.
I
*,
பிரார்த்திக்கக்கடவோம்
எங்கள் திவ்விய இரட்சகருமாய் ஆண்டவருமாயிருக்கிற சேசு கிறிஸ்துவே! எங்கள் ஆத்துமத்தையும் சரீரத்தையும் புத்தி மனது நினைவையும் எங்களுக்குண்டான சகலத்தையும் உமக்குக் காணிக்கையாக வைக்கிறோம். நாங்கள் எங்கள் சிந்தனை வாக்குக்கிரியைகளினாலே முழுதும் உம்மைச் நேசிக்கவும், துதிக்கவும், உமது திவ்விய சிநேகத்தின் அக்கினியினால் எங்கள் இருதயம் பற்றி எரியவும் தயை செய்தருளும் சுவாமி, எங்களுக்கு இதுவே போதும். பிதாவோடேயும் இஸ்பிரீத்துசாந் து வோடேயும் சதாகாலஞ் சீவியருமாய் இராச்சிய பரிபாலகருமாயிருக்கிற ஆண்டவரே. ஆமென்.

 


புதன், 19 டிசம்பர், 2018

13-ம் சங்கீதம்

13-ம் சங்கீதம்

உலக இரட்சகர் பிறக்காமுன் மனிதர் இருதயக் கேடுகளைக் குறித்துப் பாடியிருக்கின்றது. 

1. தேவனில்லையென்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொன்னான்; சகலரும் கெட்டுப்போனார்கள்! அவர்கள் எண்ணங்கள் அக்கிரமம் நிறைந்தவைகள்! (அவர்களில்) நன்மை செய்கிறவனில்லை; ஒருவனாகிலும் இல்லை.
2. மனுபுத்திரர்களில் யார்தான் புத்திசாலியென்றும் நன்மை செய்தவன் என்றும் சோதிக்கும் வண்ணம் ஆண்டவர் பரலோகத்திலிருந்து உற்றுப்பார்க்கவே,
3. எல்லோரும் நல்வழியை விட்டுப் பிசகிப் பிரயோசனமற்றவர்கள் ஆனார்கள் என்றும் நன்மையைச் செய்கிறவன் ஒருவனாகிலும் இல்லையென்றும் அவர்கள் தொண்டை திறந்த பிரேதக்குழியாய் இருக்கின்றதென்றும் அவர்கள் தங்கள் நாக்குகளினால் வஞ்சகம் பண்ணுகிறார்களென்றும் அவர்கள் உதடுகளில் விஷ சர்ப்பத்தின் நஞ்சிருக்கின்றதென்றும் அவர்கள் வாயில் சாபமும் கடுஞ் சொல்லும் நிறைந்திருக்கின்றன வென்றும் அவர்கள் கால்கள் இரத்தஞ் சிந்தத் தீவிரிக்கின்றன என்றும் அவர்கள் வழிகளில் அழிவும் நிர்ப்பாக்கியமும் (இருக்கின்றனவென்றும்) சமாதானத்தின் வழியை அவர்கள் அறிந்ததில்லை என்றும் அவர்கள் கண்களுக்கு முன் தேவ பயமேயில்லை என்றும் உணர்ந்தார்.
4. அப்பத்தைப்போல் என் ஜனங்களைப் பட்சிக்கும் இந்த அக்கிரமாலிகள் யாவரும் (என்னைக்) கண்டுணர மாட்டார்களா?
5. அவர்கள் ஆண்டவரை வேண்டிக்கொள்ளாமலிருப்பதினால் பயப்படு வதற்கு யாதொரு முகாந்தரமில்லாமலிருக்க, அவர்கள் பயந்து ஒடுங்கினார்கள்.
6. ஏனென்றால் ஆண்டவர் நீதியினுடைய சந்ததிக்குச் சனுகாயிருக்கிறார்; நீங்கள் திக்கற்றவனுடைய ஆலோசனையைக் கலங்கடித்தீர்கள்; ஆனால் ஆண்டவர் அவனுடைய நம்பிக்கையாயிருக்கிறார்.
7. சீயோனிலிருந்து இஸ்ராயேலுக்கு இரட்சணியத்தைக் கொடுப்பவர் யார்? ஆண்டவர் தமது பிரஜையின் அடிமைத்தனத்தை நீக்கும்போது யாக்கோபு அகமகிழ்வார், இஸ்ராயேல் பூரிப்படையும்.




To Read More - Please Click Here

12-ம் சங்கீதம்

12-ம் சங்கீதம்

சோதனை வேளையில் தேவ உதவியைக் கேட்டு மன்றாடுவதின் பேரில்
பாடியிருக்கின்றது. 

1. ஆண்டவரே, கடைசியில் எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர்? எதுவரைக்கும் உமது முகத்தை என்னிடத்தில் நின்று திருப்பிக்கொள்வீர்.
2. எதுவரைக்கும் நான் என்னிருதயத்தில் சஞ்சல சிந்தனை வைத்து நாளளவும் என் ஆத்துமத்தில் துக்கித்திருப்பேன்.
 3. எதுவரைக்கும் என் சத்துரு என்பேரில் தன்னை உயர்த்துவான்.
4. என் தேவனாகிய ஆண்டவரே (என்னை) நோக்கி என் மன்றாட்டைக் கேட்டருளும். மரண அந்தகாரத்தில் நான் தூங்காதபடிக்கு என் கண்களுக்கு பிரகாசத்தைத் தந்தருளும்.
5. ( அ ப் ப டி ய ா னா ல் ) அ வ  ைன ஜெ ய ங் கொண் டே ன் எ ன் று எ ன் ப  ைக ய ா ளி சொல்லி, நான் தள்ளாடி போனால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் அனைவரும் மகத்துவங் கொண்டாடுவார்கள்.
6. நா னோ உ ம து கி ரு  ைப யி ன் பேரில் நம் பிக்  ைக வை த் தி ரு க் கி றே ன் ; உ ம து இரட் சி ப் பி ன் பேரி ல் எ ன் இ ரு த ய ங் க ளி கூ ரு ம் ; எ ன க் கு ந ன்  ைம க ளை ப் பொழிந்த ஆண்டவர்பேரில் கீர்த்தனம் பண்ணுவேன்; மகாமகத்துவம் பொருந்திய ஆண்டவர் நாமத்தைக் குறித்துச் சங்கீதம் பாடுவேன்


11-ம் சங்கீதம் (Psalms 11th)

11-ம் சங்கீதம்

கெட்டவர்கள் உபத்திரவம் பண்ணுகையில் நல்லவன் சுவாமியின் வாக்குத்தத்தத்தின் மட்டில் நம்பிக்கை வைப்பதின் பேரில் பாடியிருக்கின்றது.

1. ஆண்டவரே, என்னை இரட்சியும்; ஏனெனில் இப்போது பக்தியுள்ளவன் இல்லை, உண்மைகளும் மனுப்புத்திரருக்குள்ளே குறைந்துபோயின.
2. அவரவர்கள் தங்கள் புறத்தியானோடு வீணானவைகளைப் பேசினார்கள்; கவுத்துவம் பொருந்திய உதடுகளால் இரண்டகமாய்ப் பேசினார்கள்.
3. கவுத்துவம் பொருந்திய எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் ஆண்டவர் அழித்துப்போடக் கடவார்.
4. எங்கள் நாவுகளால் நாங்கள் பெருமை பாராட்டுவோம்; எங்கள் உதடுகள் எங்களுடையன; யார் எங்களுக்கு எஜமானென்று அவர்கள் சொன்னார்கள்.
5. ஏழைகளின் நிர்ப்பாக்கியத்தின் நிமித்தமும், திக்கற்றவர்களுடைய பெரு மூச்சியினிமித்தமும் இப்போதே நாம் எழுந்தருளுவோமென்று ஆண்டவர் திருவுளம்பற்றினார்; அவனைக் காத்து அவன் நம்பிக்கைக்குப் பழுது வராமல் நடத்துவோம் என்கிறார்.
6. ஆண்டவருடைய சொற்கள் மண்குகையில் ஏழு தரம் உருகிப் புடமிடப் பட்ட வெள்ளிக்கு ஒப்பான சுத்த சொற்களாயிருக்கின்றன. 7. ஆண்டவரே, தேவரீரே எங்களைக் காப்பாற்றி என்றென்றைக்கும் இந்தச் சந்ததியில் நின்று விலக்கிக்கொள்வீர்.
8. சண்டாளர் சுற்றிலுந் திரிகிறார்கள்; தேவரீருடைய பெருந் தன்மைக்குத் தக்கப்பிரகாரம் மனுப் புத்திரர்களைப் பலுகப் பண்ணினீர்.

செவ்வாய், 18 டிசம்பர், 2018

10-ம் சங்கீதம் (10th Psalms)

10-ம் சங்கீதம்

தருமவாளன் துன்பங்களில் சர்வேசுரனிடத்தில் நம்பிக்கை வைப்பதின் பேரில்
பாடியிருக்கின்றது. 

1. நான் ஆண்டவர்பேரில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்; பின்னே ஏன் என் ஆத்துமத்தை நோக்கி அடைக்கலான் குருவி போல மலைக்கு அகன்று போ என்கிறீர்கள்?*
2. இதோ பாவிகள் வில்லை வளைத்துச் செம்மையான இருதயத்தார் பேரில் அந்தகாரத்தில் எய்யத் தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
3. ஏனெனில் நீர் ஏற்படுத்தினவைகளை அவர்கள் அழித்துப்போட்டார்கள்; ஆனால் நீதிமார்க்கன் என்ன செய்தான்? 
4. ஆண்டவர் தமது பரிசுத்த ஆலயத்திலிருக்கிறார்; ஆண்டவர் தமது ஆசனமாகிய பரலோகத்திலிருக்கிறார். 
5. அவருடைய நேத்திரங்கள் தரித்திரவானை நோக்குகின்றன; அவருடைய இமைகள் மறுப்புத்திரரைச் சோதிக்கின்றன.
6. ஆண்டவர் நீதிமானையும் துர்மார்க்கனையுஞ் சோதிக்கிறார்; ஆகையால் தோஷத்தை விரும்புகிறவன் தன் ஆத்துமத்தைப் பகைக்கிறான்.
7. பாவிகள்பேரில் கண்ணிகளை வருவிப்பார்; அக்கினியும் கந்தகமும் புயல்களின் கொந்தளிப்பும் அவர்கள் பாத்திரத்தின் பங்காம்.*
8. ஆண்டவர் நீதியுள்ளவர், நீதிகளின் மேல் பிரியப்பட்டிருக்கிறார்; அவருடைய முகம் நியாயமானதைக் கிருபாகடாட்சித்துப் பார்த்தது.

9-ம் சங்கீதம் (9th Psalms)

9-ம் சங்கீதம்
கிறீஸ்துநாதர் திருச்சபையின் சத்துருக்களை
அடக்கி அதைப் பாதுகாப்பதின் பேரில் பாடியிருக்கின்றது

1. ஆண்டவரே, என் முழு இருதயத்தோடு நான் உம்மைத் துதிப்பேன்; உமது அதிசயங்களையெல்லாம் விவரித்துக் கூறுவேன்.
 2. நான் உம்மில் மகிழ்ந்து களிகூர்வேன்; மகா உந்நதமான தேவரீரே, உமது திருநாமத்தைக் குறித்து நான் கீர்த்தனம் பண்ணுவேன். 
3. என் சத்துரு பின்னாகத் திரும்பும்படி செய்தீர்; அவர்கள் உமது சமுகத்தில் பலமற்று அழிந்து போவார்கள்.
4. ஏனெனில் தேவரீர் என் நியாயத்தையும் வழக்கையும் தாபரித்தீர். நீதியைத் தீர்க்கிற நியாயாதிபதியே, சிங்காசனத்தில் எழுந்தருளினீர்.
5. தேவரீர் உலகத்தாரைக் கடிந்து கொண்டீர்; துர்மார்க்கன் அழிந்து போனான்; நீர் அவர்களுடைய நாமம் என்றென்றைக்கும் சதாகாலமும் இல்லாதபடி அழித்துப் போட்டீர்.
6. சத்துருக்களுடைய பட்டயங்கள் என்றென்றைக்கும் பலமற்றுப்போயின; அவர்கள் பட்டணங்களையும் நிர்மூலமாக்கினீர். அவர்கள் கீர்த்தி அமளியோடு அழிந்துபோயிற்று.
7, ஆண்டவரோ என்றைக்கும் இருக்கிறார்; தமது சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம் பண்ணினார். 
8. அவர் பூச்சக்கரத்திற்குச் சரி நியாயந்தீர்த்து, பிரஜைகளுக்கு நீதியோடு தீர்ப்பு செய்வார்.
 9. சிறுமைப்பட்டவனுக்கு ஆண்டவரே அடைக்கலமானார்; துன்பத்தின் தகுந்த காலத்தில் அவரே (அவனுக்குத்) தஞ்சமானவர்.
10. உமது திரு நாமத்தை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைக்கக் கடவார்கள். ஏனென்றால், ஆண்டவரே உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடு கிறதில்லை .
11. சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணி அவருடைய வழிகளைச் ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள். 
12. அவர்கள் சிந்தின இரத்தத்தைக் கணக்குக் கேட்க வேண்டுமென்று அவர் ஞாபகப்படுத்திக்கொண்டார்; எளியவர்களின் அபய சப்தத்தை அவர் மறந்ததில்லை . 
13. ஆண்டவரே, என்பேரில் இரக்கமாயிரும்; என் சத்துருக்களாலே எனக்கு வந்த தாழ்வைப் பாரும்.
14. நான் உமது துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விபரிக்கும்படி மரண வாசல்களில் நின்று நீர் என்னைத் தூக்கிவிடுகிறீர்.
15. உமது இரட்சிப்பில் நான் அகமகிழ்வேன்; ஜனங்கள் தாங்கள் வெட்டின குழிகளிலேயே விழுந்தார்கள்; அவர்கள் மறைவாய் வைத்த கண்ணியிலே அவர்கள் கால் அகப்பட்டுக்கொண்டது.
 16. ஆண்டவர் தீர்வையிடுகிறாரென்று அறியப்பட்டும் பாவிதன்கைகளின் செய்கைகளில் பிடிபட்டிருக்கிறான். 
17. பாவிகளும், சுவாமியை மறக்கிற சகல ஜனங்களும் நரகத்தில் தள்ளப்படக் கடவார்கள்.* 
18. ஏனெனில் எளியவன் எப்போதைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப் பட்டவர்களுடைய பொறுமை கடைசியில் அழிவதில்லை .
19. ஆண்டவரே, எழுந்தருளும்; மனிதன் பலங்கொள்ளாதபடியிருக்கட்டும்; ஜனங்கள் உமது சமுகத்தில் நியாயம் தீர்க்கப்படட்டும். 
20. ஆண்டவரே, ஜாதிகள் தாங்கள் நரர்களென்று அறியும்படிக்கு அவர்கள் மேல் அதிகாரியை ஏற்படுத்தும்.*
* கிறீஸ்தவ அரசர்களை 
21. ஆண்டவரே, ஏன் தூர அகன்று போனீர்? துன்பங்களிலும் என் அவசரங்களிலும் ஏன் என்னைப் புறக்கணிக்கிறீர்?
22. துன்மார்க்கன் கர்வங்கொள்கையில் தரித்திரன் நெருப்பாய் எரியப் படுகிறான்; அவர்கள் பண்ணுகிற சதி ஆலோசனைகளிலே அவர்களே பிடிபட்டு இருக்கின்றார்கள்.
23. ஏனென்றால் பாவி தன் ஆத்துமம் இச்சித்தவைகளில் புகழ்பெற்று இருக்கின்றான்; அநியாயமுள்ள மனிதன் வாழ்த்தப்பட்டிருக்கிறான். 
24. பாவி ஆண்டவருக்குக் கோபமூட்டினான்; அவன் மூர்க்கத்தனம் மிஞ்சிப் போனதால் அவரைத் தேடமாட்டான்.
25. அவன் தெய்வத்தைச் சிந்திக்கிறதில்லை; எக்காலத்திலும் அவனுடைய வழிகள் அசுத்தமானவைகளே; உம்முடைய நியாயத் தீர்ப்புகள் அவன் பார்வைக்கு அகன்று இருக்கின்றன; அவன் தன் எதிரிகள் எல்லோரையுங் கொடுமையாய் ஆள்வான்.
26. ஏனெனில் தலைமுறை தலைமுறையாய்த் தான் அசைக்கப்படுவதில்லை யென்றும், தனக்குப் பொல்லாப்பு வருவதில்லையென்றும் அவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொண்டான்.
27. அவன் வாய் சாபத்தினாலும், கொடுமையினாலும், கபடத்தினாலும் நிறைந்திருக்கின்றது; அவன் நாவின்கீழ் தீவினையும் கஸ்தியும் இருக்கின்றன.
28. மாசற்றவனைக் கொல்லும் பொருட்டு மறைவிடங்களில் ஐசுவரியவான் களோடு கண்ணி வைத்துகொண்டிருக்கிறான்.
29. ஏ  ைழ யி ன்  ேபரி லே ேய அ வ ன் க ண் க ள் ; த ன்  ெக பி யி லி ரு க் கி ற சி ங் க த் ைத ப் போல அவன் மறைவில் பதிவிருக்கிறான்.
30. தன் கண்ணியில் அவனை மடக்கி விழத்தாட்டி, ஏழைகளின்பேரில் அதிகாரங்கொண்டபின் அவர்கள்மேல் குனிந்து விழுவான்.
31. ஏனெனில் அவன் இருதயத்தில் அவன் சொல்லிக்கொண்டதாவது: சுவாமி மறந்துவிட்டார்; முடிவுபரியந்தம் பாராதபடி தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
32. தேவனாகிய ஆண்டவரே, எழுந்தருளும்; உமது கரம் உயர்த்தப் படட்டும்; எளியவர்களை மறந்துவிடாதேயும்.
33. என்னத்திற்காக துர்மார்க்கன் கடவுளுக்குக் கோபமூட்டினான்? ஏனெனில், அவன் தன் இருதயத்தில் அவர் இதைச் சட்டை பண்ணமாட்டாரென்று சொல்லிக்கொண்டான்.
34. தேவரீர் இதைப் பார்க்கிறீர்; தேவரீர் உமது கரங்களில் அவர்களை மடக்கும்படி அவன் தீவினையையுங் கஸ்தியையுங் கண்டு யோசிக்கிறீர்; ஏழைக்கு நீர்தான் அடைக்கலம்; திக்கற்றவனுக்கு நீர்தான் சகாயம் பண்ணுவீர். 
35. பாவியினுடைய கையையுங் கெட்டவனுடைய கையையும் முறியும்; அவன் பாவங்கள் தேடப்படும், அகப்படாது.*
36. ஆண்டவர் நித்திய காலத்திலும் ஆளுவார்; ஆம். சதா நித்திய காலத்திலும் ஆளுவார்; அக்கியானிகளே நீங்கள் அவர் பூமிக்கப்பால் நின்று கெடுவீர்கள்.
37. பூமியின் பேரில் மனிதன் தன்னைப் புகழ்ந்து கொள்ள நினையாத படிக்கும், யாருமற்றவனுக்கும், துன்பப்படுகிறவனுக்கும் நீதி செலுத்தும்படிக்கும் ஆண்டவர் எளியவர்களுடைய ஆசையைக் கேட்டருளினார்; உமது செவி அவர்கள் இருதயம் இச்சித்தவைகளைக் கேட்டருளினது.


8-ம் சங்கீதம் (8th Psalms)

8-ம் சங்கீதம்

சர்வேசுரன் தமது சிருஷ்டிப்பில் விசேஷமாய் மனிதனைச் செய்ததில் இன்னமும் அதிகமாய் அவரே மனுஷனானதில் எம்மாத்திரம் ஆச்சரியமுள்ளவராயிருக்கிறார் என்பதின்பேரிற் பாடியிருக்கின்றது.

1. எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூவுலகெங்கும் எம்மாத்திரம் ஆச்சரியத்துக்குரியதாயிருக்கின்றது! ஏனெனில் உம்முடைய மகத்துவம் பரமண்டலங்களுக்கு மேலே உயர்த்தப்பட்டிருக்கின்றது.
2. பகைவனையும், பழிக்காரனையும் அழிக்கத்தக்கதாகத் தேவரீருடைய சத்துருக்களின் நிமித்தம் குழந்தைகளுடைய வாயிலும் பாலர்களுடைய வாயிலும் நின்று உத்தமப் புகழுண்டாகப் பண்ணினீர்.
3. ஏனெனில், தேவரீருடைய கரங்களின் வேலைகளாகிய உமது வான மண்டலங்களையும் நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்குமிடத்தில்,
4. மனுஷனை நீர் நினைக்கிறதற்கும் மனுஷப் புத்திரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?
 5. நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றே தாழ்த்தி மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடி சூட்டினீர்.
 6. உமது கரங்களின் செய்கைகளின்மேல் அவனுக்கு அதிகாரங் கொடுத்தருளினீர்.
7-8. சகல ஆடுகள், காட்டு மிருகங்கள், ஆகாயத்துப் பறவைகள், சமுத்திரத்தின் விசாலத்தில் உலாவும் மச்சங்கள் முதலிய சகல ஜெந்துக்களையும் அவனுடைய கால்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
9. எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, பூவுலகெங்கும் உம்முடைய திரு நாமம் எம்மாத்திரம் ஆச்சரியத்துக்குரியதாய் இருக்கிறது!

சனி, 15 டிசம்பர், 2018

ஏழாம் சங்கீதம் (7th Psalms)

ஏழாம் சங்கீதம் 

அநியாயமாய் எதிர்க்கும் சத்துருக்களுக்கு விரோதமாய்த் தேவன் சகாயத்தைக் கேட்டு மன்றாடுவதின் பேரில் பாடியிருக்கின்றது.

1. என்னை விடுவித்துக் காக்கிறவன் இல்லாமையால் சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமத்தைப் பிடிக்காதபடிக்கு.
2. என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மை நம்பியிருக்கிறேனே; என்னைத் துன்பப்படுத்துகிற எல்லோரிடத்திலும் நின்று என்னைப் பாதுகாத்து இரட்சியும்.
3. என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என்கைகளில் தோஷமிருக்கிறதும்,*
4. தின்மை செய்வோரைப் பழிவாங்கினதும் உண்டாயிருந்தால், உள்ள படியே என் சத்துருக்கள் முன்பாக நான் வெறுமையாய்ப் போவேனாகவும்.
5. பகைஞனும் என் ஆத்துமத்தைத் தொடர்ந்து பிடித்து என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து என் மகிமையைத்தூசியோடு தூசியாய் ஆக்கக் கடவான்.
6. ஆண்டவரே, நீர் உமது கோபத்தில் எழுந்திருந்து என் சத்துருக்களுடைய எல்லைகளில் உமது வல்லபத்தைக் காட்டும், என் சர்வேசுரனாகிய கர்த்தாவே, தேவரீர் நிரூபித்த கற்பனையின் நிமித்தம் எழுந்தருளும்.
7. ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளும்; அதற்காகவே உன்னதத்தில் எழுந்தருளும்.
8. ஜனங்களுக்கு ஆண்டவர் நியாயந்தீர்க்கிறார்; ஆண்டவரே, என் நீதியின்படியும், என் மாசற்றதனத்தின்படியும் எனக்கு நியாயந் தீர்த்தருளும்.
9. இருதயங்களையும், உள்ளிந்திரியங்களையும் சோதித்து அறிகிறவர் சர்வேசுரன்; துர்மார்க்கருடைய தீங்கொழியும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீர்.
10. செவ்வையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் எனக்கு ஞாயமான நம்பிக்கையுண்டு.
11. சர்வேசுரன் நீதியுள்ள நியாயாதிபதியும், வல்லவரும் பொறுமையுள்ள வருமாயிருக்கிறார்; தினந்தோறுங் கோபங்கொள்ளுவாரா?
12. நீங்கள் மனந்திரும்பாதேபோனால் அவர் தமது பட்டயத்தைக் கருக் காக்குவார்; வில்லையும் நாணேற்றி அதை ஆயத்தப்படுத்தினார்.
13. அதற்காக மரண ஆயுதங்களை முஸ்திப்பு செய்து தம்முடைய அம்பு களை அக்கினி அம்புகளாக்கினார்.
14. இதோ அவன் அக்கிரமத்தை விரும்பித் தீயக் கருத்தைக் கர்ப்பங்கொண்டு பாவத்தைப் பெற்றான்.
15. குழியை வெட்டி அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியிலேதானே விழுந்தான்.
16. அவன் நினைத்த தின்மை அவன் தலையிலேயே விழும்; அதனுடைய அக்கிரமம் அவன் உச்சந்தலையில் இறங்கும்.
17. நான் ஆண்டவருக்கு நீதியின்படி துதி செலுத்துவேன்; உன்னதமான ஆண்டவருடைய திருநாமத்தைக் கொண்டாடிப்பாடுவேன்.

ஆறாம் சங்கீதம் (6th Psalms)

ஆறாம் சங்கீதம் 

வியாதியஸ்தன் வைத்தியனை மன்றாடுகிறது போல் பாவத்தில் மெலிந்து கலங்கின ஆத்துமமானது சர்வேசுரனைப் பிரார்த்தித்து, அவருடைய சந்நிதியிலே அழுது பிரலாபிக்கிறதைக் குறித்தும், ஆண்டவர் அந்தப் பிரலாபத்தைக் கேட்பதைக் குறித்தும் பாடியிருக்கின்றது.

1. சுவாமி, தேவரீர் கோபமாயிருக்கும்போது என்னைத் தண்டியாதேயும்; உமது கோபாக்கினிவேளையில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும், நான் வெகு பலவீனனாயிருப்பதால் என்மேல் இரக்கமாயிரும்.
2. என்னுடைய எலும்புகள் திகிலிட்டிருப்பதால் எனக்கு ஆரோக்கியங் கொடுத்தருளும்.
3. என் ஆத்துமமோ வெகுவாய்க் கலங்கியிருக்கிறது; ஆனால் சுவாமி, நீர் எந்த மட்டும் ( எனக்கு உதவி செய்யாமலிருப்பீர்?)
4. சுவாமி, தேவரீர் எனது முகமாய்த் திரும்பி என் ஆத்துமத்தை ஈடேற்றி உமது கிருபையைக் குறித்து என்னை இரட்சித்தருளும்.
5. ஏனெனில் மரண அந்தஸ்தில் உம்மை யாரும் நினைப்பாரில்லை; நரகத்தில் உம்மை துதிப்பவருமில்லை!
6. அகோர துக்கத்தால் பிரலாபப்பட்டு மிகவும் மெலிந்தேன்; இராத்திரி தோறும் என் கண்ணீரால் என் கட்டிலையும் என் படுக்கையையும் நனைத்துக் கொண்டு வருவேன். என் கண் கலங்கிப்போயிற்று. என் சகல சத்துருக்கள் நடுவில் விருத்தாப்பியன் போலானேன்!
7. ஆகையினால் அக்கிரமங்களைச் செய்பவர்களே நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள். ஏனெனில் தேவன் என் மன்றாட்டைக் கேட்டருளினார்.
8. ஆண்டவர் என் வேண்டுதலைக் கேட்டு எனது விண்ணப்பத்தைக் கையேற்றுக்கொண்டார்.

9. ஆகையால் என் சத்துருக்கள் எல்லோரும் நாணி மிகவுங் கலங்கக் கடவார்கள்; அதி சீக்கிரத்தில் அவர்கள் வெட்கமடைந்து பின்னிட்டுப் போகக் கடவார்கள்.


To Read More - Please Click Here...

ஐந்தாம் சங்கீதம் (5th Psalms)

ஐந்தாம் சங்கீதம் 

பொல்லாதவர்களின் பாவக்கேட்டில் நின்று காப்பாற்றப்பட வேண்டும்
என்பதின் பேரில் பாடியிருக்கின்றது.

1. ஆண்டவரே என் விண்ணப்பத்திற்கு செவிதந்தருளும்; என் அபய சப்தத்தின் பேரில் கவனங்கொள்ளும்.
2. என் இராஜாவே, என் கடவுளே, என் வேண்டுதலின் சப்தத்தைக் கேட்டருளும்.
3. ஏனெனில் நான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வேன்; (நீரோ வெனில்,) கர்த்தாவே காலை நேரத்தில் என் குரல் சத்தத்தைக் கேட்டருளுவீர்.
4. விடியற்காலையில் உமது சன்னிதானத்தில் நிற்பேன் (அப்போது) அக்கிரமத்தில் நீர் பிரியப்படுபவரல்ல என்று தியானிப்பேன்.
5. துர்மார்க்கனும் உமது அருகிலிருக்கமாட்டான்; அநீதனும் உமது நேத்திரங்களுக்கு முன் நிற்கமாட்டான்.
6. அக்கிரமசாலி பரிச்சேதம் உம்முடன் வாசஞ் செய்யான்; தீயோர்கள் உம்முடைய கண் பார்வைக்கு முன்பாக நிலைகொள்ளார்கள்!
7. அக்கிரமத்தைச் செய்பவன் எவனோ, அவனைப் பகைப்பீர். பொய்யை பேசுபவன் எவனோ! அவனை நாசப்படுத்துவீர். கொலைபாதகனையும் மோசக்காரனையும் அருவருப்பார் தேவன்.
8. ஆண்டவரே, என்னை உமது நீதி நெறியில் நடப்பியும்; என் சத்துருக் களின் நிமித்தம் உமது பார்வையில் என் வழியைச் செவ்வைப்படுத்தும்.
9. ஏனெனில் அவர்கள் நாவில் உண்மையில்லை; அவர்கள் உள்ளம் வஞ்சனையுள்ளது.
10. அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக் குழி; தங்கள் நாவைக் கொண்டு கட்டமாய் பேசினதினால், அவர்களுக்கு தீர்வையிடும். அவர்கள் எண்ணங்கள் வீணாகக் கடவன்! அவர்கள் கட்டிக்கொண்ட கணக்கிலடங்கா அக்கிரமங்களை பற்றி அவர்களை தள்ளிவிடும். ஏனெனில், கர்த்தாவே, அவர்கள் தேவரீருக்குக் கோபமூட்டினார்கள்.
11. (ஆனால்) உம்மை நம்பினவர்கள் அனைவரும் மகிழ்ந்து, சதாகாலமும் களிகூர்வார்கள். தேவரீர் அவர்களில் வாசம்பண்ணுவீர். உமது நாமத்தைச் சிநேகிக்கிறவர்கள் யாவரும் உம்மில் அகமகிழ்வார்கள்.
12. ஏனெனில் தேவரீர் நீதிமானை ஆசீர்வதிப்பீர்; ஆண்டவரே, உமது தயாளம் கேடயம் போல் எங்களை மூடிக் காப்பாற்றினது.*

To Read more - Please click here

4-ம் சங்கீதம் (4th Psalms)

4-ம் சங்கீதம்

துன்பங்களில் சுவாமியை நோக்கி நம்பிக்கையோடு போகவேண்டும்
என்பதின் பேரில் பாடியிருக்கின்றது.

1. நான் மன்றாடும்போது, என் நீதித்துவத்தை அறியும் தேவன் என் மன்றாட்டை கேட்டருளினார். நான் இடுக்கத்திலிருக்கையில் தேவரீர். என் நெருக்கத்தை நீக்கினீர். என்மேலிரங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
2. மனுமக்களே, எதுவரைக்கும் நீங்கள் கல்நெஞ்சுள்ளவர்களாயிருப்பீர்கள்? ஏன் நீங்கள் வீணானதை விரும்பிப் பொய்யை நாடுகிறீர்கள்?
3. கர்த்தர் தமது பக்தனை மகிமைப்படுத்தினாரென்று அறியுங்கள்; நான் ஆண்டவரை நோக்கி அபயமிடும்போது அவர் என் மன்றாட்டைக் கேட்டருளுவார்.
4. நீ ங் க ள் கோபி த் து க் கொ ள் ளு ங் க ள் ; ( ஆனா ல் ) பா வ ஞ் செ ய் ய ா தே யு ங் க ள் . உங்கள் இருதயங்களிலே எண்ணிக்கொண்ட கருத்துகளைக் குறித்து உங்கள் படுக்கைகளிலே துயரப்படுங்கள்.*
5. நேர்மையுள்ள பலியைச் செலுத்திக் கர்த்தர் பேரில் நம்பிக்கையாய் இருங்கள். (ஏனெனில்) எங்களுக்கு நன்மைகளைக் காட்டுகிறவர்கள் யாரென்று அநேகர் சொல்கிறார்கள்.*
6. ஆண்டவரே! உமது முகத்தின் ஒளி எங்கள்மேல் முத்திரிக்கப்பட்டிருக்கிறது. என்னிருதயத்திற்கு சந்தோஷத்தை பொழிகிறவர் நீரே!
7. தங்கள் தானியம், திராட்சைப்பழம், எண்ணெய் இவைகளின் பலனால் அவர்கள் திருப்தியடைந்தார்கள்.
8. நானோவெனில் சமாதானத்தில் நித்திரை செய்து இளைப்பாறுவேன்.
9. ஏனென்றால், ஆண்டவரே, நீர் என்னை நம்பிக்கையில் விசேஷமாக ஸ்திரப்படுத்தினீர்.


to Read more., Please Click here....

மூன்றாம் சங்கீதம் (3rd Psalms)

மூன்றாம்  சங்கீதம்


சத்துருக்களால் துன்பம் வந்திடுகையில் சுவாமியை நாடிப் போகிறவர்கள்
காக்கப்படுவதின் பேரில் பாடியிருக்கின்றது.

1. ஆண்டவரே, என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் ஏன் மிகுந்து போனார்கள்? அநேகர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்.
2. அவன் தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று என் ஆத்துமத்துக்கு அநேகர் சொல்கிறார்கள்.
3. ஆண்டவரே! என்னை ஆதரிக்கிறவர் நீரே! என் மகிமை நீரே! என் சிரசை உயர்த்துகிறவர் நீரே!
4. நான் ஆண்டவரை நோக்கி அபயமிட்டேன்; அவர் தமது பரிசுத்தப் பர்வதத்தில் நின்று என் மன்றாட்டைக் கேட்டருளினார்.
5. நான் படுத்து நித்திரை செய்தேன். ஆண்டவர் என்னை ஆதரித்தபடியால் (விழித்து) எழுந்திருக்கிறேன்.
6. என்னை வளைந்து கொண்டிருக்கும் ஆயிரமாயிரஞ் ஜனங்களுக்கும் பயப்படேன். ஆண்டவரே, எழுந்தருளும், என் சர்வேசுரா என்னை இரட்சித்தருளும்.*
7. ஏனெனில் நியாயமின்றி என்பேரில் எதிர்த்த யாவரையுஞ் சிதறடித்துப் போட்டீர். பாவிகளுடைய பற்களையுந் தகர்த்துப் போட்டீர்.
8. இரட்சிப்பு கர்த்தருடையது; உமது ஆசீர்வாதம் உமது பிரஜைகள்மேல் இருக்கின்றது.