Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 15 டிசம்பர், 2018

4-ம் சங்கீதம் (4th Psalms)

4-ம் சங்கீதம்

துன்பங்களில் சுவாமியை நோக்கி நம்பிக்கையோடு போகவேண்டும்
என்பதின் பேரில் பாடியிருக்கின்றது.

1. நான் மன்றாடும்போது, என் நீதித்துவத்தை அறியும் தேவன் என் மன்றாட்டை கேட்டருளினார். நான் இடுக்கத்திலிருக்கையில் தேவரீர். என் நெருக்கத்தை நீக்கினீர். என்மேலிரங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
2. மனுமக்களே, எதுவரைக்கும் நீங்கள் கல்நெஞ்சுள்ளவர்களாயிருப்பீர்கள்? ஏன் நீங்கள் வீணானதை விரும்பிப் பொய்யை நாடுகிறீர்கள்?
3. கர்த்தர் தமது பக்தனை மகிமைப்படுத்தினாரென்று அறியுங்கள்; நான் ஆண்டவரை நோக்கி அபயமிடும்போது அவர் என் மன்றாட்டைக் கேட்டருளுவார்.
4. நீ ங் க ள் கோபி த் து க் கொ ள் ளு ங் க ள் ; ( ஆனா ல் ) பா வ ஞ் செ ய் ய ா தே யு ங் க ள் . உங்கள் இருதயங்களிலே எண்ணிக்கொண்ட கருத்துகளைக் குறித்து உங்கள் படுக்கைகளிலே துயரப்படுங்கள்.*
5. நேர்மையுள்ள பலியைச் செலுத்திக் கர்த்தர் பேரில் நம்பிக்கையாய் இருங்கள். (ஏனெனில்) எங்களுக்கு நன்மைகளைக் காட்டுகிறவர்கள் யாரென்று அநேகர் சொல்கிறார்கள்.*
6. ஆண்டவரே! உமது முகத்தின் ஒளி எங்கள்மேல் முத்திரிக்கப்பட்டிருக்கிறது. என்னிருதயத்திற்கு சந்தோஷத்தை பொழிகிறவர் நீரே!
7. தங்கள் தானியம், திராட்சைப்பழம், எண்ணெய் இவைகளின் பலனால் அவர்கள் திருப்தியடைந்தார்கள்.
8. நானோவெனில் சமாதானத்தில் நித்திரை செய்து இளைப்பாறுவேன்.
9. ஏனென்றால், ஆண்டவரே, நீர் என்னை நம்பிக்கையில் விசேஷமாக ஸ்திரப்படுத்தினீர்.


to Read more., Please Click here....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக