Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 18 டிசம்பர், 2018

10-ம் சங்கீதம் (10th Psalms)

10-ம் சங்கீதம்

தருமவாளன் துன்பங்களில் சர்வேசுரனிடத்தில் நம்பிக்கை வைப்பதின் பேரில்
பாடியிருக்கின்றது. 

1. நான் ஆண்டவர்பேரில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்; பின்னே ஏன் என் ஆத்துமத்தை நோக்கி அடைக்கலான் குருவி போல மலைக்கு அகன்று போ என்கிறீர்கள்?*
2. இதோ பாவிகள் வில்லை வளைத்துச் செம்மையான இருதயத்தார் பேரில் அந்தகாரத்தில் எய்யத் தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
3. ஏனெனில் நீர் ஏற்படுத்தினவைகளை அவர்கள் அழித்துப்போட்டார்கள்; ஆனால் நீதிமார்க்கன் என்ன செய்தான்? 
4. ஆண்டவர் தமது பரிசுத்த ஆலயத்திலிருக்கிறார்; ஆண்டவர் தமது ஆசனமாகிய பரலோகத்திலிருக்கிறார். 
5. அவருடைய நேத்திரங்கள் தரித்திரவானை நோக்குகின்றன; அவருடைய இமைகள் மறுப்புத்திரரைச் சோதிக்கின்றன.
6. ஆண்டவர் நீதிமானையும் துர்மார்க்கனையுஞ் சோதிக்கிறார்; ஆகையால் தோஷத்தை விரும்புகிறவன் தன் ஆத்துமத்தைப் பகைக்கிறான்.
7. பாவிகள்பேரில் கண்ணிகளை வருவிப்பார்; அக்கினியும் கந்தகமும் புயல்களின் கொந்தளிப்பும் அவர்கள் பாத்திரத்தின் பங்காம்.*
8. ஆண்டவர் நீதியுள்ளவர், நீதிகளின் மேல் பிரியப்பட்டிருக்கிறார்; அவருடைய முகம் நியாயமானதைக் கிருபாகடாட்சித்துப் பார்த்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக