Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 19 டிசம்பர், 2018

12-ம் சங்கீதம்

12-ம் சங்கீதம்

சோதனை வேளையில் தேவ உதவியைக் கேட்டு மன்றாடுவதின் பேரில்
பாடியிருக்கின்றது. 

1. ஆண்டவரே, கடைசியில் எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர்? எதுவரைக்கும் உமது முகத்தை என்னிடத்தில் நின்று திருப்பிக்கொள்வீர்.
2. எதுவரைக்கும் நான் என்னிருதயத்தில் சஞ்சல சிந்தனை வைத்து நாளளவும் என் ஆத்துமத்தில் துக்கித்திருப்பேன்.
 3. எதுவரைக்கும் என் சத்துரு என்பேரில் தன்னை உயர்த்துவான்.
4. என் தேவனாகிய ஆண்டவரே (என்னை) நோக்கி என் மன்றாட்டைக் கேட்டருளும். மரண அந்தகாரத்தில் நான் தூங்காதபடிக்கு என் கண்களுக்கு பிரகாசத்தைத் தந்தருளும்.
5. ( அ ப் ப டி ய ா னா ல் ) அ வ  ைன ஜெ ய ங் கொண் டே ன் எ ன் று எ ன் ப  ைக ய ா ளி சொல்லி, நான் தள்ளாடி போனால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் அனைவரும் மகத்துவங் கொண்டாடுவார்கள்.
6. நா னோ உ ம து கி ரு  ைப யி ன் பேரில் நம் பிக்  ைக வை த் தி ரு க் கி றே ன் ; உ ம து இரட் சி ப் பி ன் பேரி ல் எ ன் இ ரு த ய ங் க ளி கூ ரு ம் ; எ ன க் கு ந ன்  ைம க ளை ப் பொழிந்த ஆண்டவர்பேரில் கீர்த்தனம் பண்ணுவேன்; மகாமகத்துவம் பொருந்திய ஆண்டவர் நாமத்தைக் குறித்துச் சங்கீதம் பாடுவேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக