Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 5 ஜூன், 2024

Tamil Catholic Songs Lyrics - மனோமகிழ்வோடே அனைவரும் வாரும்

 பாலனை ஆராதித்தல்

Adeste Fideles (யாழ்ப்பாணம்)

1. மனோமகிழ்வோடே அனைவரும் வாரும்
வாரும் வாரும் பெத்லகேம் ஊருக்கு
பாருங்கள் தேவ தூதரின் ராஜாவை
வாரும் வணங்குவோமே. (3) பாலனை

2. மந்தையை விட்டேதான் மாட்டுத் தொட்டி நோக்கி
வந்து இடையர்கள் வணங்குகிறார்
சந்தோஷமாக நாமும் போவோம் வாரும்
வாரும் வணங்குவோமே (3) பாலனை

3. அநாதி பிதாவின் அநாதிச் சுடரை
மனித வேஷமாகக் காணுவோம்
கந்தைகளாலே சுற்றிய பாலனை
வாரும் வணங்குவோமே (3) பாலனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக