Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 5 ஜூன், 2024

Tamil Catholic Songs Lyrics - தேவபாலன் பிறந்தாரே

 தேவபாலன் பிறந்தாரே
தேவுலகோர் வெகுவாய்க் களிகூர
தேவபாலன் பிறந்தாரே
சேர்ந்தவரைத் தொழ வாரீரே


1. நாலாயிரம் வருஷமளவாய்
நாதன் வருகையை முன்னுரைத்தாரே
நாலாயிரம் வருஷமளவாய்
நாமவர்க்காகக் காத்திருந்தோமே


2.மாட்டுக் கொட்டில் அரண்மனையோ
மாடு மிதிக்கும் வைக்கோல் பஞ்சணையோ
மாட்டுக் கொட்டில் அரண்மனையோ
மாட்சிமை நிறை சேசு ராஜனுக்கு


3. எவ்வளவோ அழகுள்ள முகம்
எவ்வளவோ குண மதுர சிங்காரம்     
எவ்வளவோ அழகுள்ள முகம்
எவ்வளவோ அருள் சிறந்த தயாளம்


4. கீழ்த்திசை மன்னரே நீர் வாரீர்
கிறீஸ்தெனும் பாலனை வணங்கிடவே
கீழ்த்திசை மன்னரே நீர் வாரீர்
கிளர் ஒளிர்மீன் வழி பின்சென்று


5. நம்முளமே இவர் தேடுகிறார்.
நம் முளமே இவர் கைவசமாக்க
நம் முளமே இவர் தேடுகிறார்
நாம் அதை அவர்க்கின்று அளிப்போமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக