Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 24 நவம்பர், 2017

St. Satrunius., November - 29-ம் தேதி




அர்ச்.சாற்றுர்னினுஸ், மேற்றிராணியார், வேதசாட்சி

                                                       (கி.பி.257)

                பிரான்ஸ் தேசத்திற்குப் போய் சத்திய வேதம் போதிக்கும்படி சாற்றுர்னினுஸ் என்பவர் அர்ச்.பாப்பாண்டவரால் அனுப்பப்பட்டார்அப்படியே இந்த மேற்றிராணியார் சில துணைவர்களுடன் அத் தேசத்திற்குச் சென்று, பலவிடங்களில் பிரசங்கம் செய்து, அநேகரை சத்திய வேதத்தில் சேர்த்து, கோவில்களைக் கட்டி வேத பரம்புதலுக்காக பிரயாசைப்பட்டு வந்தார்பிறகு துலூஸ் நகருக்குச் சென்று அதைத் தமது பிரதான இருப்பிடமாக்கிக்கொண்டார்அவருடைய முயற்சியால் திரளான அஞ்ஞானிகள் ஞானஸ்நானம் பெற்றார்கள்இதையறிந்த பொய் மதத்தார் சாற்றுர்னினுஸைப் பகைத்து வந்தார்கள்மேலும் இவர் இருக்கும் கோவிலுக்கு அருகாமையில் பசாசு கோவில் இருந்தமையால் அந்த வழியாய்த் தமது இருப்பிடத்திற்கு போகவும் வரவும் வேண்டியிருந்ததுஅவர் அந்த கோவில் வழியாய் செல்லும்போதெல்லாம் பசாசு விடை கொடுக்காமல் ஊமையாயிருக்கும்இதையறிந்த பூசாரி அர்ச்சியசிஷ்டவர் மேல் கோபம்கொண்டு அவரைப் பழி வாங்க சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்ஒரு நாள் அந்த பசாசு கோவிலில் திரளான ஜனங்கள் கூட்டம் கூடி பசாசு கொடுக்கும் விடையைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்அந்நேரத்தில் சாற்றுர்னினுஸ் அந்த வழியாய்ச் சென்றபோது பசாசு விடையை நிறுத்தி ஊமை போலாயிற்றுஇதன் காரணத்தை பூசாரி ஜனக் கூட்டத்திற்கு அறிவிக்கவே, அவர்கள் அவர் மேல் பாய்ந்து அவரைப் பசாசின் கோவிலுக்கு இழுத்துக்கொண்டு போய் தங்கள் தேவர்களுக்குப் பலியிடும்படி கூறினார்கள்தமக்குப் பயப்படும் பசாசுக்கு தாம் பலியிடுவதில்லையென்று கூறியதை அஞ்ஞானிகள் கேட்டு சினங்கொண்டு, பலியிடும்படி அங்கு கட்டிவைத்திருந்த ஒரு எருதின் வாலில் இவரைக் கட்டி அதைத் துரத்தவே, அது மிரண்டு காடு, மலை பக்கமாய் ஓடினதினால் அவர் சரீரம் முழுவதும் ஏக காயமாகி வேதனைப்பட்டு வேதசாட்சியானார்.



யோசனை

                பசாசு நமக்குத் தந்திர சோதனைகளை வரவிடும்போது அதைக் காலால் மிதித்து ஜெயித்த வேதசாட்சிகளின் உதவியை அடைய அவர்களை மன்றாடுவோமாக.

              


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக