Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 24 நவம்பர், 2017

St. Silvester., November 26-ம் தேதி




அர்ச்.சில்வெஸ்தர், மடாதிபதி

                                                       (கி.பி.1267) 

                சில்வெஸ்தர் லொரேத்தோ நகருக்கு அருகாமையிலுள்ள ஊரில் உயர்ந்த குலத்தாரான தாய் தந்தையரிடத்தினின்று பிறந்தார்இவர் பெயர்போன கல்விச்சாலைக்குச் சென்று நீதி சாஸ்திரத்தையும் தேவசாஸ்திரத்தையும் முழுமையாக கற்றறிந்து குருப்பட்டம் பெற்று பாவிகளுக்குப் புத்தி சொல்லி பிறருடைய ஆத்தும இரட்சணியத்திற்காக ஊக்கத்துடன் உழைத்து வந்தார்இதனால் சில பாவிகள் இவரை விரோதித்து துன்பப்படுத்தி வந்தார்கள்உலகில் கீர்த்தி பெற்றவனும் தனவந்தனும் அழகனுமான ஒரு துரையின் சாவுச் சடங்குக்கு சில்வெஸ்தர் போயிருந்தபோது, அவனுடைய முகம் மாறி அவலட்சணமாயிருப்பதைக் கண்டு சற்று நேரம் சாவைப் பற்றி தியானித்து, அன்று இரவே தூரமான வனாந்தரத்திற்குச் சென்று கடினமான தபஞ் செய்து வந்தார்இவருடைய புண்ணியங்களையும் அர்ச்சியசிஷ்டதனத்தையும் பற்றிக் கேள்விப்பட்ட அநேகர் அவருக்குச் சீஷர்களானார்கள்சில்வெஸ்தர் தம்மிடம் வந்த திரளான துறவிகளுக்கு ஒரு மடம் கட்டி, அவர்களுக்கு புண்ணிய மார்க்கத்தைப் போதித்து வந்தார்சில காலத்திற்குள் திரளான பேர் அவருக்கு சீஷரானதால், சில்வெஸ்தர் 25 மடங்களைக் கட்டி வைத்தார்இவர்களுடைய புண்ணியங்களையும் தவக்கிருத்தியங்களையும் கண்ட துர்மனப்பசாசு   பலவிதமாய் அவர்களை துன்பப்படுத்தி அவர்களை அவ்விடத்தினின்று அப்புறப்படுத்தும்படி பிரயாசைப்பட்டதுஆனால் அர்ச்சியசிஷ்டவர் ஜெபத்தாலும் ஒருசந்தியாலும் தேவதாயார் மீது வைத்த மிகுந்த பக்தியினாலும் அதை ஜெயித்தார்.  90 வயது மட்டும் சில்வெஸ்தர் தாழ்ச்சி, கீழ்ப்படிதல் முதலிய புண்ணியங்களையும் அநேக புதுமைகளையும் செய்து அர்ச்சியசிஷ்டவராய்க் காலஞ் சென்று மோட்ச சம்பாவனையைச் சுதந்தரித்துக்கொண்டார்



யோசனை

                நமது சத்துருவாகிய சரீரத்தில் ஆசாபாசம் கிளம்பி நம்மைக் கெடுக்கப்பார்க்கும்போது, அழுகி, நாறி, புழுவுக்கு இரையாகும் அதன் இஷ்டத்திற்குச் சம்மதியாமல் அச் சோதனைகளை ஜெபிப்போமாக.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக