Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 17 நவம்பர், 2017

St. Catherine., Virgin, Martyr. November 25-ம் தேதி


அர்ச்.கத்தரீனம்மாள்,
கன்னிகை, வேதசாட்சி (கி.பி.311)

                கத்தரீனம்மாள் அலெக்சாந்திரியா நகரில் செல்வந்தரும் உயர்குலத்தாருமான தாய் தகப்பனிடத்தினின்று பிறந்து, மகா திறமையுடன் கல்வி சாஸ்திரங்களைக் கற்று வந்தாள்.  இவளுக்கு அதிசயத்திற்குரிய ஞானமும் புத்தியுமிருந்தமையால் கலைகளையும் தத்துவ சாஸ்திரங்களையும் கற்றறிந்து அந்நகரில் பெயர்பெற்று விளங்கினாள்.  சத்திய வேதத்தின் உண்மையை அறிந்து ஞானஸ்நானம் பெற்று புண்ணிய வழியில் நடந்து வந்தாள்.  அக்காலத்தில் உண்டான வேதகலகத்தில் கத்தரீனம்மாள் பிடிபட்டு, இராயன் முன்னிலையில் நிறுத்தப்பட்டபோது அவளுடைய புத்தி ஞானத்தை இராயனறிந்து அதிசயித்து அவளுடன் வேததர்க்கம் செய்யும்படி சாஸ்திரிகளான 50 பேரை கத்தரீனம்மாளுக்கு முன் நிறுத்தினான்.  அர்ச்சியசிஷ்டவள் கூறிய வேத நியாயங்களை அந்த சாஸ்திரிகள் கேட்டு அதிசயித்து கிறீஸ்துவ வேதமே சத்திய வேதமென்று நன்றாயறிந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.  அப்போது இராயன் அந்த 50 சாஸ்திரிகளையும் கொலை செய்து விட்டு, கத்தரீனம்மாளுக்கு அதிக பட்சத்தைக் காட்டி, அவளைத் தனக்கு வாழ்க்கைப்படும்படி கேட்டான்.  சேசுநாதரான தன் ஞானப் பத்தாவுக்குத் தன் கன்னிமையை ஒப்புக்கொடுத்ததாக அறிவித்து, கலியாணத்திற்கு சம்மதிக்கவில்லை.  இதைக் கேட்ட இராயன் அவளைச் சிறையிலடைக்கக் கட்டளையிட்டான்.  இரவு வேளையில் இராயனுடைய மனைவியும் தளபதியும் சிறைச்சாலைக்குச் சென்று வேதசாட்சியுடன் பேசியபோது, அவள் கூறிய புத்திமதியால் இருவரும் கிறீஸ்துவர்களானார்கள்.  அவ்விருவரையும் வேதத்திற்காக இராயன் கொல்லக் கட்டளையிட்டு கத்தரீனாளை சக்கர இயந்திரத்தில் கட்டி உபாதிக்கும்படிக் கட்டளையிட்டான்.  அவள் அந்த இயந்திரத்தின் அருகில் போய்  ஜெபித்த மாத்திரத்தில் அது துண்டு துண்டாய் உடைந்து போயிற்று.  இராயன் சினங்கொண்டு அவள் தலையை வெட்டும்படி கட்டளையிட்டான்.



யோசனை

                நாம் இதர மதத்தாருடன் வேததர்க்கம் செய்யாத போதிலும் அவர்கள் மனந்திரும்பும்படிக்காவது வேண்டிக்கொள்வோமாக. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக