Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 24 நவம்பர், 2017

St. James., November 27 ம் தேதி


27-ம் தேதி
                             

அர்ச்.ஜேம்ஸ், வேதசாட்சி

                                                       (கி.பி.421)

                யாகப்பர் என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் என்பவர் பெர்சியா தேசத்தில் மிகவும் கீர்த்தியும் வெகுமானமும் மகிமையும் பெற்ற ஓர் பிரபுஇவருடைய சிறந்த பிறப்பைப் பற்றியும் அவரடைந்த வெகுமானங்களைப் குறித்தும் இராயனுடைய அரண்மனையில் மேலான உத்தியோகம் பெற்றிருந்தார்இராயனும் இவரை நேசித்து சிறந்த விருதுகளையும் இவருக்கு அளித்திருந்தான்அத் தேசத்தில் கிறீஸ்துவர்களுக்கு விரோதமாய் வேதகலகம் உண்டானபோது ஜேம்ஸ் என்பவர் இராயனுடைய உறவை முறிக்க மாட்டாதவராய் சத்திய வேதத்தை மறுதலித்தார்இதையறிந்த அவருடைய தாயாரும் மனைவியும் வெகு துக்கங் கொண்டு அவர் மனந்திரும்பும்படி சர்வேசுவரனைப் பார்த்து பிரார்தித்து வந்தார்கள்சில காலத்திற்குப் பின் இராயன் இறந்து புது இராயன் சிம்மாசனம் ஏறினான்அப்போது அவ்விரு ஸ்திரீகளும் ஒரு கடிதம் எழுதி ஜேம்ஸ{க்கு அனுப்பினார்கள்அது யாதெனில்: இராயனுக்குப் பிரியப்படும்படி உன் தேவனை மறுதலித்தாய்அந்த இராயன் இப்போது எங்கே இருக்கிறான்மண்ணிலிருக்கிறான்இவனுடைய வெகுமானத்தை விரும்பி நித்திய கேட்டுக்கு உள்ளான உனக்கும் எங்களுக்கும் இனி யாதொரு சம்பந்தமுமிராது என்று எழுதினார்கள்அவர் இதை வாசித்த பின் சொல்லி முடியாத துக்கப்பட்டு, அக்கணமே அஞ்ஞான வேதத்தை விட்டு சத்திய வேதத்தை அனுசரிக்கத் துவங்கினார்இதையறிந்த புது இராயன் சினங்கொண்டு ஜேம்ஸை நிஷ்டூரமாய் அடித்துக் கொல்லும்படி கட்டளையிட்டான்அவர் கட்டளைப்படியே சேவகர் வேதசாட்சியை உபாதித்து அவருடைய கை, கால்களை கணுக்கணுவாய் நறுக்கினதினால், வேதசாட்சி சொல்லிமுடியாத வேதனை அனுபவித்து தன் ஆத்துமத்தைத் தன் சிருஷ்டிகர் கையில் ஒப்படைத்து நித்திய சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்



யோசனை
                யாதொருவன் வேதத்திற்கு விரோதமாய் நடப்பதை அவனுடைய பெற்றோர், உறவினர்கள் அல்லது சிநேகிதர் பார்க்கும்போது அந்தப் புண்ணிய ஸ்திரீகளைக் கண்டுபாவிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக