Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 11 நவம்பர், 2017

St.Stanislas, நவம்பர் 13-ம் தேதி



                    அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், துதியர் 

                                                       (கி.பி.1567)

                இவர் பக்தியுள்ள தாய் தந்தையரிடத்தினின்று பிறந்து, புண்ணிய வழியில் கவனத்துடன் வளர்க்கப்பட்டார்.  இதனால் அவர் சிறு வயதிலேயே ஒரு அர்ச்சியசிஷ்டவரைப் போலக் காணப்பட்டார்.  கல்விப் பயிற்சி பெறும்படி தன் சகோதரனுடன் ஒரு பட்டணத்திற்கு அனுப்பப்பட்டார்.  அவ்விடத்தில் ஸ்தனிஸ்லாஸ்  புண்ணியத்தில் அதிகரித்து வந்தார். 
நாள்தோறும் திவ்விய பூசை காண்பார்.  வாரந்தோறும் தேவநற்கருணை உட்கொள்வார்.  கல்விச்சாலைக்குச் செல்வதற்கு முன்னும் பின்னும் தேவநற்கருணை சந்திப்பார்.  கெட்ட தோழருடன் சேர மாட்டார்.  யாதொருவன் தகாத வார்த்தைப் பேசக் கேட்டால், ஸ்தனிஸ்லாஸ் அவ்விடத்தை விட்டு அகன்று போவார்.  இரவு வேளையில் விழித்து ஜெபஞ் செய்வார்.  முள்ளொட்டியாணம் முதலிய தபயத்தனங்களை உபயோகிப்பார். உலக புத்தியுள்ள இவருடைய தமயன் ஸ்தனிஸ்லாஸ் தன்னைப் போல ஆடல் பாடலுக்கு வராமலும் கெட்ட சிநேகிதருடன் சகவாசம் செய்யாமலும் இருப்பதைப் பற்றிப் பல முறை அவரைத் திட்டி அடித்து உபாதித்தும், அவர் அவைகளை எல்லாம் பொறுமையுடன்  அனுபவிப்பார்.  அவர் கடிய வியாதியாய் விழுந்தபோது தேவநற்கருணை வாங்க ஆசித்தும் அவர் இருந்த பதித வீட்டுக்காரன் அவ்விடத்திற்குக் குருவானவர் வரச் சம்மதிக்கவில்லை.  அப்போது அவர் விசுவாசத்துடன் வேண்டிக் கொண்டபோது இரு சம்மனசுகள் அவருக்கு தேவநற்கருணை கொண்டு வந்து கொடுத்தார்கள்.  தேவமாதா ஸ்தனிஸ்லாஸ{க்குத் தோன்றி சேசு சபையில் சேரும்படி அறிவித்ததின் பேரில், ஸ்தனிஸ்லாஸ் உரோமைக்குச் சென்று மேற்கூறிய சபையில் சேர்ந்தார்.  அவர் நவ சன்னியாசியாயிருந்த ஒன்பதரை மாதங்களுக்குள் சகல புண்ணியங்களையும் உத்தமமாக அனுசரித்து இவர் விரும்பியபடி மோட்ச இராக்கினி மாதா திருவிழாவன்று மரித்து மோட்ச ஆனந்தத்திற்குள்ளானார். 

யோசனை
                கல்விச்சாலைகளில் கற்கும் வாலிபர் அர்ச்.ஸ்தனிஸ்லாஸின் மாதிரிகையைப் பின்பற்றக் கடவார்களாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக