Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 11 நவம்பர், 2017

St.Martin of Tours, B. நவம்பர் 11


மிகவும் கீர்த்தி பெற்ற மார்ட்டின் என்பவர் பிரான்ஸ் தேசத்திற்குச் சிறந்த ஆபரணமாய் ஜொலித்தார்.  அஞ்ஞானியான இவர் கல்விப் பயிற்சி பெறும்போது, சத்திய வேதத்தையறிந்து ஞானோபதேசங் கற்கையில், அவர் தகப்பனார் அவரைப் படையில் சேர்த்துக்கொண்டார்.  ஒரு நாள் மார்ட்டின் மற்றச் சேவகருடன் பயணம் போகையில், குளிரால் நடுங்கும் ஒரு ஏழை, சேசுநாதர் பெயரால் தருமங் கேட்டான்.  தமது கையில் ஒன்றுமில்;லாததினால் தமது மேற்போர்வையைக் கழற்றி இரண்டாகக் கிழித்து பாதியை அவனுக்குக் கொடுத்தார்.  அன்றிரவு சேசுநாதர் மேற்கூரிய போர்வையை போர்த்தியவராய் அநேக சம்மனுசுக்களுடன் அவருக்குத் தோன்றி ~~இது மார்ட்டின் எனக்குக்கொடுத்த போர்வை|| என்றார்.  இதற்குப் பின் மார்ட்டின் பட்டாளத்தை விட்டு விலகி, ஞானஸ்நானம் பெற்று, அர்ச்.இலாரி என்பவருக்கு சீஷனாகி, வேத சாஸ்திரங்களைக் கற்று, குருப்பட்டம் பெற்று, ஒரு சன்னியாச மடத்தைக் கட்டி, 400 சன்னியாசிகளுடன் ஜெபதபத்தால் சர்வேசுவரனுக்கு ஊழியஞ் செய்து வந்தார்.  இவருடைய புண்ணியங்களினிமித்தம் இவருக்கு மேற்றிராணியார் பட்டங் கொடுக்கப்பட்டது.  மார்ட்டின் சில சன்னியாசிமாருடன் ஊரூராய்ப் போய் வேதம் போதித்தார்.  இவர் புதுமை வரம் பெற்று இறந்தவர்களுக்கு உயிரும் குருடருக்குப் பார்வையும் கொடுத்து பசாசை விரட்டியதைக் கண்ட கணக்கில்லாத அஞ்ஞானிகள் ஞானதீட்சை பெற்றார்கள்.  இவர் அவர் நாட்டிலுள்ள பேய்க் கோவில்களை இடித்து, சோலைகளை அழித்து, சத்திய வேதக் கோவில்களைக் கட்டினார்.  இவரால் செய்யப்பட்ட புதுமைகளுக்குக் கணக்கில்லை.  இவருடைய விடாமுயற்சியாலும் ஜெபதபத்தாலும் அநேக அஞ்ஞான நாடுகளை கிறீஸ்துவ நாடுகளாக்கி, தமது ஞானப் பிரசங்கத்தால் அவர்களை சத்திய வேதத்தில் உறுதிப்படுத்தி, பிரான்ஸ் தேசத்தின் அப்போஸ்தலரென்றும் பெயர் பெற்று அர்ச்சியசிஷ்டவராய்க் காலஞ்சென்றார். 




யோசனை


                நாம் தர்மம் புரியும்போது முகத்தாட்சண்யத்தையும் வீண் பெருமையையும் பாராமல் சர்வேசுவரனைக் குறித்து அதைச் செய்ய வேண்டும்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக