Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 31 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 30-ம் தேதி*

*St. Bathildes, Q.*
*அர்ச். பத்தில்தேஸ்*
*அரசி - (கி.பி. 680).*

பத்தில்தேஸ் என்ற இந்தப் பெண்மணி இங்கிலாந்தில் பிறந்து, சிறு வயதில் பிரான்ஸ் தேசத்துக்குக் கொண்டுபோகப்பட்டு, அடிமையாக விற்கப்பட்டாள். இவளை விலைக்கு வாங்கின பிரபு, இவளுடைய புண்ணிய வாழ்வையும் ஒழுக்கத்தையும் அறிந்து, இவளைத் தன் அரண்மனைக்குத் தலைவியாக நியமித்தான். இவளுடைய புகழ் அத்தேசமெங்கும் பரவியதினால், பிரான்சு தேசத்து அரசனான  2-ம் குளோவிஸ் என்பவர், தன் தேசம் முழுவதும் சந்தோஷித்து மகிழ அப்புண்ணிய மாதை மணமுடித்துக்கொண்டார். பத்தில்தேஸ் இராணி தனக்கு உண்டான உந்நத மகிமையால் பெருமை கொள்ளாமல், முன்னிலும் அதிகமாய் நற்குணத்தில் சிறந்து விளங்கி, அரசனுடைய அனுமதியுடன் அநேக கோவில்களையும், மடங்களையும் கட்டினாள். தன் கணவன் இறந்தபின், பட்டத்திற்குரிய தன் மகன் இளைஞனானபடியால், இப்புண்ணியவதியே அரசு புரிந்து, தன்னால் இயன்ற நன்மைகளையெல்லாம் அத்தேசத்திற்குச் செய்துவந்தாள். ஆயர் வேத விஷயமாக செய்த திருத்தங்களை நிலைநிறுத்தப் பிரயாசைப்பட்டாள். தம் குமாரனுக்கு பட்டாபிஷேகம் செய்தபின் பத்தில்தேஸ் இராணி கன்னியர் மடத்தில் சேர்ந்து, அங்கே தாழ்ச்சிக்குரிய அலுவல்களையும் அரிதான புண்ணியங்களையும் செய்துவந்தாள். இவளுக்கு அடிக்கடி உண்டான கடின நோய் நொடிகளைப் பொறுமையுடன் சகித்துப் பெரிய புண்ணியவதியாய் மரித்தாள். 

*யோசனை*


சர்வேசுரன் நமக்கு அளிக்கும் புத்தி, திறமை, அழகு, படிப்பு, செல்வம் முதலியவைகளைப்பற்றி பெருமை கொள்ளாமல் தாழ்ச்சியாயிருப்போமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக