Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 30 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 27-ம் தேதி*


St. John Chrysostom, A.B.M.*
*அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர்*
*மடாதிபதி, ஆயர், வேதசாட்சி*
*(கி.பி. 407)*
இவர் அந்தியோக்கியா நகரில் 344-ம் வருடம் பிறந்து, சிறு வயதில் கல்வி சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்து சகலராலும் புகழப்பட்டார். இவர் சிறந்த பேச்சாளராக சிறப்புடன் பிரசங்கித்ததினால் கிறிசோஸ்தோம் அதாவது “பொன் வாயோன்” என்னும் சிறப்பு பெயர் பெற்றார். இவர் தமக்குக் கிடைத்துவந்த பெயரையும் புகழையும் விட்டொழித்து, ஆறு வருட காலம் மௌனத்தை அனுசரித்து, தனிமையாக காட்டில் வாழ்ந்துவந்தார். உத்தமதனத்தை அடைந்தபின் குருப்பட்டம் பெற்று, பிறகு கான்ஸ்தாந்திநோப்பிள் நகருக்கு ஆயர் ஆனார். இவர் தமது வாக்கு சாதுரியத்தினால் பிரசங்கங்கள் பல செய்து, அநேக மக்களை மனந்திருப்பினார். நாள்தோறும் திவ்விய பலிபூசை காணும்படி சகலருக்கும் புத்திமதி கூறினார். பெருமை பாராட்டிக்கொண்டு ஆடைகளையும் ஆபரணங்களையும் அணியும் ஸ்திரீகளைக் கண்டித்தார். ஏழைகள்மேல் அதிக இரக்கம் காட்டி, தமது கையில் பணமில்லாதபோது தமது வீட்டிலுள்ள பாததிர பண்டங்களை விற்று அவர்களுக்கு உதவி செய்தார். இவர் முகத்தாட்சண்யமின்றிப் பாவிகளைத் தமது பிரசங்கத்தால் கண்டித்தபடியால், துஷ்ட மந்திரிகளின் துர் ஆலோசனைப்படி, சக்கரவர்த்தி அருளப்பரை நாடுகடத்திவிட்டான். அன்றிரவே பயங்கரமான பூகம்பம் உண்டானதால் அருளப்பர் மறுபடியும் நாட்டுக்குள் வரவழைக்கப்பட்டார். ஆனால் சில காலத்திற்குபின் இவருடைய விரோதிகளின் முயற்சியால் இவர் மறுபடியும் நாடுகடத்தப்பட்டார். அப்போது பிரயாணத்தில் ஏற்பட்ட கஷ்டத்தால் வழியில் நோயுற்று, கடைசி தேவதிரவிய அனுமானங்களைப் பெற்று உயிர் துறந்து மோட்சம் சேர்ந்தார். 

*யோசனை*

நாள்தோறும் திவ்விய பலிபூசை காண முயற்சிப்போமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக