Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 22 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 21-ம் தேதி*



*St. Agnes, V.M.*
*அர்ச். ஆக்னேஸ்*
*கன்னிகை, வேதசாட்சி - (கி.பி. 304).*
ஆக்னேஸ் உரோமையில் பிறந்து, சிறுவயதிலேயே தன் கன்னிமையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தாள்.  இவளுடைய உயர்குலப் பிறப்பையும், அழகையும், மிகுந்த செல்வத்தையும் பார்த்து பிரபுக்களான அநேக வாலிபர் இவளை மணமுடித்துக்கொள்ள விரும்பியபோது “என் கன்னிமையை என் தேவ பத்தாவுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன்’’என்று கூறினாள். அவர்கள் இதைக் கேட்டு சினங்கொண்டு இவள் கிறீஸ்தவளென்று நியாயாதிபதிக்கு அறிவித்தார்கள். நியாயாதிபதி ஆக்னேஸிடம் நயமாகப் பேசியும், பயமுறுத்தியும் கிறீஸ்தவ வேதத்தை மறுதலிக்கும்படி கட்டாயப்படுத்தினான். இவள் அதற்குச் சம்மதியாதிருப்பதை அவன் கண்டு, இவள் கண்ணுக்கு முன் நெருப்பை மூட்டி, ஆணி, குரடு முதலிய ஆயுதங்களைப் பழுக்கக் காய்ச்சும்படி கட்டளையிட்டான். ஆக்னேஸ் அவைகளைக் கண்டு சற்றும் கலங்காதிருப்பதை அவன் கண்டு, இவளை அஞ்ஞான கோவிலுக்கு இழுத்துக்கொண்டு போய் பொய்த் தேவர்களுக்குத் தூபம் காட்டும்படி கட்டளையிட்டான். இவளோ தன்மேல் சிலுவை வரைந்துக் கொண்டாளேயன்றி, தூபக்கலசத்தைத் தொடவில்லை. இதனால் அதிகாரி கோபவெறி கொண்டு, இவளை ஒரு விலைமாதர் வீட்டுக்கு இழுத்துக்கொண்டுபோய் அங்கே இவள் கற்பை அழிக்கும்படி உத்தரவிட்டான். அப்போது அநேக வாலிபர் இவளைப் பின்தொடர்ந்தும் ஒருவித பயத்தால் அவர்கள் பின்வாங்கினார்கள். ஆனால் ஒருவன் மாத்திரம் இவளை அணுகின மாத்திரத்தில் மின்னலைப் போன்ற ஒருவித பிரகாசமான ஒளியால் அவன் குருடனாகி, கீழே விழுந்தான். அவனுடைய நண்பர்களின் மன்றாட்டின்பேரில், ஆக்னேஸ் அவனுக்குப் பார்வைக் கொடுத்தாள். இதையெல்லாம் கண்ட அதிகாரி வெட்கமும் சினமும் கொண்டு, அவளைச் சிரச்சேதம் பண்ணும்படி கட்டளையிட, ஆக்னேஸ் தலை வெட்டுண்டு, கன்னிமை முடியும் வேதசாட்சி முடியும் பெற்று தன் தேவ பத்தாவிடம் சென்றாள்.            

*யோசனை*

தங்கள் கன்னிமையைத் தங்கள் தேவ பத்தாவுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள், அதை சாகும் வரையில் பழுதின்றிக் காப்பாற்றுவார்களாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக