Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 24-ம் தேதி*

*ஜனவரி மாதம் 24-ம் தேதி*



*St. Timothy, B.M.*
*அர்ச். திமோத்தி*          
*ஆயர், வேதசாட்சி - (கி.பி. 97).*
திமோத்தியின் தந்தை அஞ்ஞானியும், தாய் யூத இனத்தைச் சேர்ந்தவர்களுமாய் இருந்தார்கள். அர்ச். சின்னப்பர் காடு காடாய்ச் சென்று பிரசங்கித்தபோது, திமோத்தியும் இவருடைய தாயும் மற்றும் பாட்டியும் அவ்விடத்தில் ஞானஸ்நானம் பெற்றார்கள். திமோத்தியின் பக்தி, அறிவை அறிந்த அப்போஸ்தலர், இவருக்கு குருப்பட்டம் கொடுத்து தமது பிரயாணங்களில் இவரைத் தமது துணைவராகத் தெரிந்துகொண்டார். அர்ச். சின்னப்பர் இவரைத் துன்பப்படும் கிறீஸ்தவர்களிடம் அனுப்பினார். சில சமயங்களில் வேதத்தில் தத்தளிக்கும் விசுவாசிகளிடமும் இவரை அனுப்பிவந்தார். தமது குருவும், ஆசிரியருமான அர்ச். சின்னப்பரின் புத்திமதியை கேட்டு, அவருடைய ஆலோசனைப்படி திமோத்தி நடந்துகொண்டபடியால், எபேசு நகருக்கு ஆயராக இவர் நியமிக்கப்பட்டார். அர்ச். சின்னப்பர் வேதத்தினிமித்தம் சிறையிலிருந்த காலத்தில், தமது சீஷனாகிய திமோத்திக்கு வேத விஷயமாக இரு நிருபங்களை எழுதி அனுப்பினார். இவர் அநேக புண்ணியங்களையும் தவச்செயல்களையும் செய்து, பிறமதத்தினரால் வேதத்திற்காக தடிகளால் அடிக்கப்பட்டு மரித்து, வேதசாட்சி முடி பெற்றார்.            

*யோசனை*

அர்ச். திமோத்தியைப் போல நாமும் குருக்கள் முதலிய பெரியோர்களுடைய புத்திமதிகளைக் கேட்டு நடப்போமாக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக