Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 30 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 29-ம் தேதி*

*St. Francis Sales, B.C.*
*அர்ச். பிரான்சிஸ் சலேசியார்*
*ஆயர், துதியர் - (கி.பி. 1622).*


இவர் உயர்ந்த குடும்பத்திலுள்ள, பக்தியுள்ள தாய் தந்தையரிடமிருந்து பிறந்தார். இவர் பாரிஸ், பதுவா முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு, கல்வி சாஸ்திரங்களைத் திறமையுடன் கற்றறிந்தார். தம்மைப் போல பிரபு குடும்பத்திலுள்ள ஒரு பெண்ணை தனது தந்தை தனக்கு மணமுடித்து வைக்க ஏற்பாடு செய்ததையறிந்து, அதற்குச் சம்மதிக்காமல் குருத்துவத்திற்கு படித்து, குருவாகி, ஊர் ஊராயும், கிராமம் கிராமமாயும் சுற்றித் திரிந்து அநேகரை நேர்மையாய் வாழ மனந்திருப்பினார். இவருக்கு இயற்கையாகவே முன்கோபம் அதிகமாயிருந்ததால், அத்துர்குணத்தை தம் இடைவிடா முயற்சியால் முற்றிலும் ஜெயித்து சர்வ சாந்தமும், பொறுமையுமுள்ளவரானார். இவருடைய புண்ணியங்களினிமித்தம் பரிசுத்த பாப்பரசராலும், அரசர்களாலும் இவர் வெகுவாய் மதிக்கப்பட்டார். கல்வீன் என்னும் பதிதர் இவரைப் பகைத்து, இவரைக் கொல்வதற்குப் பலமுறை முயற்சித்தனர். ஆனால் இவர் அற்புதமாய்க் காப்பாற்றப்பட்டார். இவர் ஆயராக நியமிக்கப்பட்டபின், முன்னிலும் அதிக ஊக்கத்துடனும் பிரயாசையுடனும் சத்திய வேதத்திற்காக உழைத்துவந்தார். 72000 பதிதரைச் சத்திய வேதத்தில் சேர்த்து கணக்கற்றப் பாவிகளை மனந்திருப்பினார். அர்ச். ஷாந்தாள் பிரான்சிஸ்காவோடு, “தேவதாய் எலிசபெத்தம்மாளைச் சந்தித்த கன்னியர் சபையை” உண்டாக்கினார். கடைசியாய் இவர் புண்ணியங்களை ஒழுங்காய் அநுசரித்து 56-ம் வயதில் தமது ஆன்மாவை, நமது கர்த்தர் கையில் ஒப்படைத்தார்.

*யோசனை*

நாமும் இந்த அர்ச்சியசிஷ்டவரைப் பின்பற்றி பொறுமையுள்ளவர்களாக முயற்சிப்போமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக