Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 6 மார்ச், 2019

அர்ச். சூசையப்பர் பிரார்த்தனை

பரிசுத்த பிதா 10ம் பத்திநாதரால்
அங்கீகரிக்கப்பட்ட
அர்ச். சூசையப்பர் பிரார்த்தனை

சுவாமீ கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும் ... மற்றதும்
அர்ச். மரியாயே, எங்க...
அர்ச். சூசையப்பரே, எங்க...
தாவீது இராஜாவின் கீர்த்தி பெற்ற புத்திரனே, எங்க...
பிதாப்பிதாக்களின் மகிமையே, எங்க...
தேவதாயாரின் பத்தாவே, எங்க...
கன்னிமரியாயின் கற்புள்ள காவலனே, எங்க...
தேவகுமாரனை வளர்த்த தகப்பனே, எங்க...
கிறீஸ்துநாதரை உற்சாகப் பற்றுதலுடன் காப்பாற்றினவரே, எங்க ...
திருக்குடும்பத்தின் தலைமையானவரே, எங்க...
உத்தம நீதிமானான அர்ச். சூசையப்பரே, எங்க
உத்தம விரத்தரான அர்ச். சூசையப்பரே, எங்க...
உத்தம விவேகமுடைத்தான அர்ச். சூசையப்பரே, எங்க...
உத்தம் தைரியசாலியான அர்ச், சூசையப்பரே, எங்க...
உத்தம் கீழ்ப்படிதலுள்ளவரான அர்ச். சூசையப்பரே, எங்க...
உத்தம பிரமாணிக்கமுள்ளவரான அர்ச். சூசையப்பரே, எங்க...
பொறுமையின் கண்ணாடியே, எங்க...
வறுமையின் அன்பனே, எங்க...
தொழிலாளிகளுக்கு மாதிரிகையே, எங்க...
சமுசார வாழ்க்கையின் ஆபரணமே, எங்க...
கன்னிகைகளின் காவலனே, எங்க...
குடும்பங்களுக்கு ஆதரவே, எங்க..
கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே, எங்க...
வியாதிக்காரர்களுக்கு நம்பிக்கையே, எங்க...
மரிக்கிறவர்களுக்கு பாதுகாவலே, எங்க...
பசாசுகளை நடுநடுங்கச் செய்பவரே, எங்க...
பரிசுத்த திருச்சபையின் பரிபாலனே, எங்க...

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையான சேசுவே எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையான சேசுவே எங்கள் பிராத்தனையை கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையான சேசுவே எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
.
முதல் - கர்த்தர் அவரைத் தமது வீட்டின் எஜமானாக ஏற்படுத்தினார்.
துணை - அவருடைய உடைமைகளையெல்லாம் நடத்தி வரவும் ஏற்படுத்தினார்.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வேசுராசுவாமி, உம்முடைய மகா அர்ச்சியசிஷ்ட திருமாதாவின் பரிசுத்த பத்தாவாக முத்தனான சூசையப்பரை மனோவாக்குக்கெட்டாத பராமரிக்கையால் தெரிந்துகொள்ளத் திருவுளமானீரே. பூலோகத்தில் அடியோர்களை ஆதரிக்கிற "வரென்று எங்களால் வணங்கப்படுகிறவர், பரலோகத்தில் எங்களுக்காக மனுப்பேசுகிறவராயிருக்கும்படிக்கு நாங்கள் பாத்திரவான்கள் ஆகத்தக்கதாக தேவரீர் அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். பிதாவோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற ஆண்டவரே, - ஆமென்.

புனிதர்களின் அழியாத சரீரங்கள் - Part 3

முத். பவுலா பிரெஸ்நேற்றி உலகப் | பிரசித்தி பெற்ற அர்ச். டோரொத்தி கன்னி யர் சபையை ஏற்படுத்தியவர் ஆவார். தமது நான்கு சகோதரர்களையும் குருக்களாகப் பெற பாக்கியம் பெற்ற இவள், இத்தாலியில் ஜெ னோவா நகரில் 1880 - ம் ஆண்டு பிறந்தாள். சிறு வயதிலேயே தாயை இழந்து குடும்பச் சுமையைத் தாங்கிய அவள் பொறுமையோடு துன்பங்களை ஏற்றுக் கொண்டாள். கடின உழைப்பால் உடல் நலிவுற்ற அவள்குயின்டோ பங்கின் குருவான த ன து சகோதரர்கள் உதவியால் குணமடைந்தாள். அங்கு அவருக்கு உதவிபுரிந்தும், ஞானோபதேசப் பணிபுரிந்தும் வந்த அவள் தேவ ஏவுதலால் தமது நண்பர்" களைக் கொண்டு புதிய சபையை ஏற்படுத் தினாள்.

அர்ச். டோரொத்தி கன்னியர் ச  ைப ஜெனோவா நகரில் முறையாக ஏற்படுத்தப்பட்டு பவுலா தாயாரின் கடின உழைப்பால் இத்தாலி பிரேசில் நாடு முழுவதும் பரவியது. புண்ணிய வாழ்விலும், தவத்திலும் ஈடுபட்ட அவள் மூன்று முறை பக்க வாத நோயால் பீடித்து துன்பப் பட்டாள். அவளது கடைசிக் காலத்தில் அர்ச். ஜான் போஸ் கோவைக் காணும் பேறு பெற்று அவர் முன்னுரைத்த நாளிலேயே பாக்கியமான மரண மடைத்தாள்.

அழியாத சரீரம்!

1906 - ஆம் ஆண்டில் அர்ச். 10-ம் பத்தி நாதர் பாப்பரசர் அவளது வீ ர விசுவாச வாழ்வை அங்கீகரித்து முத்திப் பேறு பட்ட நட வடிக்கைகளைக் துவக்கிவைத்தார். அதே ஆண் டில் சபையின் தலைமை மடத்தின் புதிய கல்ல றையில் ன வப்பதற்காக கல்லறை திறக்கப் பட்டது, அப்போது ச ரீ ர ம் எந்தவிதமான சேதமும் அழிவுமின்றி காப்பாற்றப்பட்டிருந்தது. சரீரம் மிகவும் நெகிழ்ச்சியுடையதாகவும் உயிருள்ளதைப்போலவும் காணப்பட்டது. சரீரத் திற்கு அணிவிக்கப் பட்டிருந்த உடுப்புகள் கூட எந்த விதமான சேதமுமின்றி இருந்தன. சரீரம் புதிய கல்லறையில் வைக்கப்பட்டது.
---
1930 -- ல் பரி. பாப்பு 11 - ம் பத்தி நாதர் - ஜீன் 8 -- ம் நாளன்று பவுலா பிரெஸ்நேற்றித் - தாயாருக்கு முத்தி பேறு பட்டம் வழங்கினார். - அதே நாளில் கல்லறை திறக்கப்பட்டு, - அவள் சரீரம் புதிய அழகிய வெள்ளிக் - கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு தலைமை மடத்தின் ஆலய பிரதானப் பீடத்தில் ஸ்தாபிக்கப் பட்டுள்ளது. எண்ணற்ற விசுவாசிகள் தங்களது வணக்கத்தை தெரிவிக்க அங்கு திரு யாத்திரை சென்ற வண்ணமாகவே உள்ளனர்.
- முத் பவுலா பிரெஸ்நேற்றியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
மரியாயே வாழ்க!

செவ்வாய், 5 மார்ச், 2019

மார்ச் மாதம் அர்ச் சூசையப்பரின் மாதம்


மார்ச் மாதம் அர்ச் சூசையப்பரின் மாதம்.


பரிசுத்த தந்தை பாப்பரசர் 9-ம் பத்தி நாதர் மார்ச் மாதத்தை புனித சூசையப்பரின்
வணக்க மாதமாக பிரகடனம் செய்தார். நமது  ேநச தந்தையான புனித சூசையப்பரின்
மகிமை துலங்கிடும் மாதமிது! அவரது அடைக் கலத்தை நாடும் காலமிது!!
-


எனவே சிறப்பாக இம்மாதத்தில்: சங்கைக்குரிய குருக்களே! நற்கருணை
சேசுவை முதலில் கரங்களில் ஏந்திய புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.
துறவரத்தாரே! மு த ல் துறவர மடமாக விளங்கிய திருக்குடும்பத்தின்
அதிபரானபுனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.
இல்லத் தலைவிகளே!  ேத வ மாதாவை பராமரித்து காப்பாற்றிய
புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.


தொழிலாளர்களே! தொழிலாளர்களுக்கு பாதுகாவலரான
புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்!


வேலை தேடுபவர்களே! சேசுவுக்குத் தொழில் கற்றுக் கொடுத்த
புனித சூசையப்பரிடம் - மன்றாடுங்கள்.


இளைஞர்களே! குழந்தை சேசுவை இளைஞராக வளர்த்த
புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.


நங்கையரே! கற்பின் பாதுகாவலரான புனித சூசையப்பரிடம்
மன்றாடுங்கள்.


சாவைக்கண்டு கலங்குவோரே! சேசுவின் அரவணைப்பிலும்,
தேவ மாதாவின் பராமரிப்பிலும் நல்ல மரணமடைந்த புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.


திருச்சபையின் அங்கங்களான விசுவாசிகளே! உங்களுடைய கலக்கம்,
குழப்பமெல்லாம் நீங்கி சமாதான வெற்றி கிடைக்க விசேஷமாய்
இந்நேரத்தில் திருச்சபையின் பரிபாலகரான புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.

மரியாயே வாழ்க!

நம் கடமையைச் செய்வோம்!! (Do our Duty)

நம் கடமையைச் செய்வோம்!!
(திருச்சபையிலும், நம் சமுதாயத்திலும் நிலவும் குழப்பத்திற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்து
பார்த்தால் ! அதற்கு பதில் வெகு தெளிவானது. மக்கள் தங்கள் கடமைகளிலிருந்து தவறியதால்
ஏற்பட்ட விளைவே! தலைவர்கள் தங்கள் பொறுப்பை அலட்சியப்படுத்தியதால், பெற்றோர்கள்
தங்களுடைய கடமையை தட்டிக்கழித்ததால்... இப்படி பலர் செய்த தவறுகள்தான் இன்றைய
சீர்கேட்டிற்கு காரணம். இதை சீர்செய்ய நாம் செய்யவேண்டியது ! கடவுள் நமக்களித்த
பொறுப்பை சரியாய் செய்வதேயாகும். இதைத்தான் திருச்சபை நம்மிடம் எதிர்பார்க்கிறது.
இதைக் குறித்து சங். லெஞ் சுவாமிகள் எழுதிய பொதுக் கடிதத்தின் தமிழாக்கத்தை உங்களுக்கு
அளிக்கிறோம். வாசகர்களே, இதை நன்றாக சிந்திக்க உங்களை அழைக்கிறோம்! ஆசிரியர்)


நம் அன்றாட வாழ்க்கை போராட்டத்தின் மத்தியில், மனுக்குலத்தின் எதிரியின் தாக்குதலிலிருந்து
நம்மை அவசியம் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவேதான் ஒவ்வொரு நாளும் இரவு
கட்டளை ஜெபத்தில் நாம் "சகோதரர்களே Sobrii estote et vigilate” என்று பாடி ஜெபிக்கிறோம்.
|
இந்த போருக்காக சாத்தான் தனக்கு சாதகமாய் எல்லாவித போர்க்கருவிகளை பயன்படுத்துகிறான்.
வெற்றி ஒன்றே அவனது குறிக்கோள். அவனது இலக்கு: ஆன்மாக்களை வீழ்த்தி அவற்றை அடிமைப்
படுத்துவதே! அதற்காக அவன் தன்னிடமுள்ள பேய்தனமான வெறுப்புடன் படிப்படியாக புத்திசாலித்
தனத்துடன் நகர்கிறான். அழிவு பாதையில் அவன் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை.
ஆன்மாக்களை ஏமாற்றுவதற்காக அவன் பல வித்தைகளைப் பயன்படுத்தினாலும், ஒரேயொரு
வித்தையில் மட்டுமே பல வெற்றியுடன் ஜொலிக்கிறான். அது தன்னைத் தானே ஒளியின்
தூதனாய் மாற்றி மக்களை ஏமாற்றுவது. எளிதில் கண்டுபிடிக்க முடியாத தீங்கினை மக்களால்
எவ்வாறு தவிர்க்க முடியும்? மக்களை கனவு உலகத்திலே வாழவைக்கிறான். ஜெபத்தின்
வாழ்வில்கூட புகுந்து ஆன்மாக்களை ஏமாற்றி, அதன் மூலம் ஜெபத்தின் விளைவுகளை
வெகுவாக குறைக்கிறான்.
இக்கட்டான நிலையில் நாம் என்ன செய்வது? அவனுடைய புத்திசாலித்தனத்திற்கு எதிராய்
நம்மால் எதுவும் செய்ய இயலாது என்று இப்போரில் சரணடைவதா? புற முதுகு காட்டுவதா?
நம்முடைய ஜெபத்திலே ஊடுருவி நம்மை வீழ்த்த முடியும் என்றால் ! ஏன் ஜெயிக்க வேண்டும்? நாம்
வாழ்வது கனவு வாழ்க்கையா? நனவு வாழ்க்கையா? என்று தெரியாமலே எப்படி வாழ்வது?
இதற்கு பதில் மிக எளிமையானது. ஒருவேளை நம்முடைய சிக்கலான மூளைக்கு புரிந்துகொள்ள
முடியாத அளவு எளிமையானதாய் இருக்கலாம்.
நம்முடைய கடமையில் பிரமாணிக்கமாய் இருப்பதே ! கடவுளால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கையில்
நாம் சந்தேகமின்றி பயணிக்கிறோம் என்பதற்கு சாட்சியாய் அமைகிறது. வாழ்வின் தினசரி
போராட்டத்தினால், ஒரே பணியை அதே போல் செய்வதால் நம்முடைய கடமைகள் கவர்ச்சியற்று
தோன்றுகிறது. ஆனால் அச்செயல்களே கடவுள் விரும்பிய அந்த ஸ்தானத்தில் நம்மை நிலைநிறுத்த
செய்கிறது. கடவுள் சித்தத்துடன் நம்மை ஒன்றிணைப்பதே அர்ச்சியசிஷ்டதனத்தின் அடிப்படை கூறு.
அதுவே மோட்சத்திற்கு செல்ல நாம் செய்யவேண்டிய மிக முக்கிய காரியம்.
நம்முடைய கடமையைச் செய்வதற்கு கடவுள் நமக்கு அளிக்கின்ற விசுவாச ஒளியும்,
வரப்பிரசாதமுமே போதுமானது. நம்முடைய அன்றாட காரியங்களை துணிவுடன் எதிர்கொள்ளவும்
, கடவுள் சித்தத்தை நேசத்துடன் செயலாற்றவும் கடவுளின் உதவி நம்மோடு இருக்கத்தான்
செய்கிறது.
நம் முன்னோர்கள் இதனை நன்கு அறிந்திருந்தனர். செய்யும் தொழிலை அவர்கள் வணங்கினர்.
கடமையைச் சரியாய் செய்வது ஜெபத்தின் தொடர்ச்சி என்று கருதினர். தொடர்ச்சி மட்டுமல்லாது
அதுவே தயாரிப்பாய் அவர்களுக்கு அமைந்தது. |
கடமையை அலட்சியப்படுத்தும் தற்கால போக்கின் விளைவை நாம் திருச்சபையிலும்,
சமுதாயத்திலும், வன்மையாய் எதிரொலிப்பதை கண்டுகொண்டே இருக்கிறோம்.
நம்முடைய மதம் வாழும் மனிதாவதாரத்தின் தேவ இரகசியம். நம் கடமையை சரியாய் செய்வது
அத்தகைய அவதாரத்தின் நிச்சயமான வெளிப்பாடு. கடவுளை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்துவது
முக்கியமான செயல் அல்லவா? அவற்றை அலட்சியப்படுத்தலாமா?
ஒரு கிறீஸ்தவன் அவனுடைய அன்றாட செயலினால் சேசுநாதரின் பாடுகளிலும், அவருடைய
இரட்சிப்பு பணியிலும் பங்குபெறுகிறான். கடவுளின் சந்நிதானத்தில் நாம் தினமும் வளர
வேண்டுமானால், நம்முடைய ஆன்மாவில் அமைதி நிலவ வேண்டுமானால் ! நம்முடைய
கடமையை சிறப்பாய் செய்வோம்.


தேவ அன்னையை நோக்குவோமாக!

அர்ச். மரிய வியான்னி அருளப்பர் குருவாகும் முன்பு தோட்ட வேலை செய்து
வந்தார். ஒரு கம்பை நட்டி, அதன் மீது மாதாவின் சிறு சுரூபம் ஒன்றை வைப்பார்.
வேலை செய்யும்போது அடிக்கடி அதை நோக்குவார். இதனால் வேலை அவருக்கு
கடினமானதாகத் தெரியாது. வேலை முடிந்ததும் அந்த அன்னையை அன்புடன்
நோக்கி நன்றி தெரிவிப்பார்.


நாமும் நமது அன்றாட வேலையின் நடுவில் தேவ அன்னையை நினைப்
போமாக. அதனால் நமது வேலையின் சுமையை அவ்வன்னை
குறைப்பார்கள்.

புனிதர்களின் அழியாத சரீரங்கள் - Part 2




புனிதர்களின் அழியாத சரீரங்கள் கடவுளை மகிமைப் படுத்துகின்றன. Joan Carroll Cruz என்ற அமெரிக்க ஆசிரியரால் எழுதப்பட்ட 'The Incorruptibles'' என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. - P. பிரான்சிஸ் குமார்

*அர்ச். சியென்னா கத்தரீனம்மாள் (1347 - 1380)*

அர்ச். கத்தரீனம்மாள் இத்தாலி தேசத்தில் சியென்னா என்னுமிடத்தி ல் 1347 -ம் வருடம்
தனது பெற்றோருக்கு 23-வது பிள்ளையாகப் பிறந்தாள். சிறு வயதிலேயே ஞானத்தில்
தேர்ச்சி பெற்றிருந்த அவள் தனது கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணித்தாள். தமது
6-வது வய தில் தமது சகோதரனோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது
நமதாண்டவருடைய காட்சியைப் பெற்றாள். அதில் சேசுகிறிஸ்து பாப்பரசரின்
ஆடை அணிகளை அணிந்து புனித இராயப்பர், சின்னப்பர், அருளப்பர்புடைசூழ
பீடத்தில் அமர்ந்தவராய் காட்சியளித்தார். அந்தக் காட்சியின் பிறகு
அர்ச். சாமிநாதரின் தவத்தின் மூன்றாம் சபையில் சேரத் தீர்மானித்தாள்.
17 -வது வயதில் துறவற ஆடை அணிந்து மூன்று வருடம் ஜெபத் தபத்தில் ஈடுபட்டு
நோயாளிகளை பராமரிப்பதிலும், கைதிகளை சந்திப்பதிலும் தம்மையே
அர்ப்பணித்தாள்.
அர்ச். கத்தரீனம்மாள் எவ்வளவுக்கு நம்தாண்டவருடன் ஒன்றித்திருந்தாளெனில் ஒரு
காட்சியில் நமதாண்டவர் அவளுக்கு ஒரு வைரகற்களாலான தங்க மோதிரம் அணி
வித்தார். அது அவளுக்கு மட்டுமே தெரியும்படியாக அருளப்பட்டது அர்ச். கத்தரீனம்மாள்
ஆண்டவருடைய ஐந்து திருக்காயங்களையும் பெற்று அவருடைய பாடுகளையும்
சுவைக்கும் வரம் பெற்றாள். அவளது வேண்டுதலின்படி இத்திருக்காயங்கள் வெளியே
தெரியாமல் அருளப்பட்டது. அவளது இறப்பிற்  ப் பிறகே இக்காயங்கள் வெளிப்படை
யாக  சரீரத்தில் தோன்றின.
திருச்சபைக்காகவும், பாப்புவின் அப்போஸ் தலிக்க ஸ்தானத்தின் மகிமையை
நிலைநாட்டு வதற்காகவும் தமது இறுதி நாட்களை செலவழித்தாள். அச்சமயம் நாடு
கடந்து வாழ்ந்து வந்த 11-ம் கிரகொரியார் என்ற பாப்புவை மீண்டும் ரோமைக்கு வரச்
செய்ய தமது ஆலோசனைகளையும், எல்லா முயற்சிகளையும் செய்து வெற்றிப்
பெற்றாள். இறுதியில் 1380-ல் ஏப்ரல் 29-ல் திருச் சபையின் ஐக்கியத்திற்காக தன்னையே
தகனப் பலியாக ஒப்புக் கொடுத்து பாக்கியமான மரண மடைந்தாள்.

அவளது சரீரம் மூன்று நாட்களுக்கு விசுவாசிகளின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டு
பின்னர் புனித மரிய ஸ்போரா மினர்வா ஆலயத்தை ஒட்டிய கல்லறைத் தோட்டத்தில்
அடக்கம் செய்யப்பட்டது.
*அழியாத சரீரம் !*

சில காலங்களுக்குப்பின்னர் அவளது ஆன்ம குருவான முத்ரெய்மன்ட் கால்வாவால்
கல்லறை திறக்கப்பட்டது. சரீரம் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மீண்டும் சரீரம் ஜெபமாலை சிற்றாலயத்தின் தலைவாயிலில் அடக்கம் செய்யப்பட்டது
. இச்சமயத்தில் ப ா ப் ப ர ச ரி ன் உத்தரவுப் பெற்று முத். ரெய்மண்ட் சுவாமிகள்
புனிதையின் அழியாத சரீரத்திலிருந்து தலையை தனியே அகற்றி அழகியப் பேழை
யில் வைத்து சியென்னாவிலுள்ள சாமிநாதர் சபை மடத்திற்கு வழங்கினார். பின்னர்
1383-ல் சரீரம் காம்போ ரெஜியோ நகர் கன்னியர்மடத்திற்கு இரகசியமாக கொண்டு
செல்லப்பட்டு அங்குள்ள ஆலயத்தில் புனிதைக் கென்று ஏற்படுத்தப்பட்ட அழகிய
பீடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த வைபவத் தில் புனிதையின் வயதான தாயாரும்
கலந்து கொண்டார்.


1385-ல் சரீரத்திலிருந்து ஒரு கரம் பிரிக்கப்பட்டு சியென்னா நகருக்கு வழங்கப்பட்டது.
அதிலிருந்து மூன்று விரல்கள் வெனிசுக்கு அருளிக்கமாக (Relic) கொடுக்கப்பட்டது.
1430-ல் சரீரம் மீண்டும் அழகிய வேலைப் பாடமைந்த பெட்டியில் வைக்கப்பட்டது.
பின் வந்த நூற்றாண்டுகளில் அச்சரீரத்திலிருந்து பலப் பகுதிகள் ஐரோப்பா முழுவதற்கும்
அருளிக்கமாக வழங்கப்பட்டன. 1487ல் மற்றொரு கரம் ரோமையிலுள்ள சாமிநாதர்
சபைக் கன்னியர் மடத்திற்குக் கொடுக்கப்பட்டது. சரீரத்தின் இடது பாதம் வெனிஸ்
நகர புனிதர்கள் அருளப்பர், சின்னப்பர் ஆலயத்திற்கு கொடுக்கப் பட்டது. 1597-ல்
இந்தப் பாதத்தில் உள்ள காயம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு
ஆராயப் பட்டது.
பின்னர் 1855ல் ஏப்ரல் மாதத்தில் சரீரம் வைக்கப்பட்டுள்ள ஆலயம் விரிவுபடுத்தப்படும்
போது புனிதையின் அழியாத சரீரம் வைக்கப் பட்டிருந்த கல்லறைப் பீடம் பல
திருச்சபை அதிகாரிகள், சபை அதிபர் முன்னிலையில் திறக்கப் பட்டது. சரீரத்திலிருந்து
பல பகுதிகள் அருளிக் கமாக எடுக்கப்பட்டு விட்டாலும் சரீரத்தின் மற்றப் பகுதிகள்
அழியாமல் மிகவும் புதியனவாக இருந்தது. அச்சமயம் நம் தாண்டவரால் மோதிரம்
அணிவிக்கப்பட்ட விரல் ப்ளாரன் சுக்கு அருகில் உள்ள பொந்தியானோ என்னுமிடத்தினுள்
தேவாலயத்திற்கு வழங்கப்பட்டது
பின்பு சரீரம் மீண்டும் அதே பெட்டியில் வைத்து, அதே பீடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 4ம் தேதி அர்ச். சாமிநாதர் திரு நாளின் போது சரீரம்
விசுவாசிகளின் வணக் கத்திற்காக வைக்கப்பட்டு பின்னர் ரோமை செனட்
அதிகாரிகள் சூழ பவனியாக எடுத்துச் செல்லப்படும்.
தன து வாழ் நாளிலேயே புனிதை என்று மதிக்கப்பட்ட அர்ச். கத்தரீனம்மாள் 1461-ல்
2ம் பத்திநாதர் பாப்புவால் புனிதப் பட்டம் வழங்கப்பட்டார், 1939ல் பாப்பரசர் 12ம் பத்தி
நாதரால் இத்தாலி தேசத்தின் பரலோகப் பாது காவலியாக அறிவிக்கப்பட்டார்.
அர்ச். கத்த ரீனம்மாள் தேவ ஏவுதலினால் பல ஞான, வேத சாஸ்திர நூல்களை
எழுதியுள்ள தால், 1970-ல் பாப்பு 6-ம் சின்னப்பர் திருச்சபையின் வேத பாரகர் என்ற
சிறப்புப் பட்டம் வழங்கினார். அர்ச். கத்தரீனம்மாள் இப்பட்டத்தைப் பெறும்
இரண்டாவது புனிதையாவாள்.

அர்ச். சியென்னா கத்தரீனம்மாளே,
* எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். திரு நாள் : ஏப்ரல், 29.*

மரியாயே வாழ்க!

திங்கள், 4 மார்ச், 2019

புனிதர்களின் அழியா சரீரம் - பாகம் 1

அர்ச் பெனடிக்ட் மூர் (1526-1589)

அர்ச். பெனடிக்ட் நீக்ரோ அடிமைப் பெற்றோர்க்குப் பிறந்தவர். அவர் பிறந்த சில காலத்திற்குள் அவரது பெற்றோர் ஆப்பிரிக்காவிலிருந்து சிசிலி தேசத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கிறிஸ்தவ மதத்திற்கு மனந்திரும்பினர். அவர்களது முன்மாதிரிகையான ஜீவியத்தாலும் கடமைகளை பிரமாணிக்கமாக செய்வதாலும் எஜமானர்களிடம் நன் மதிப்பைப் பெற்றனர். இதனால் பெனடிக்ட் தமது 18-வது வயதில் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கே வேலை செய்து வந்த அவர் தமது எளிய வருவாயையும் ஏழை, எளியவர் களுக்கு வழங்கினார். அவருடைய பிறப்பு பற்றி பலராலும் கேலி செய்யப்பட்டாலும் அதை மிக பொறுமையோடு ஏற்றுக்கொண்டதால் “புனித கறுப்பர்'' என்று அழைக்கப்பட்டார்.
தமது 21-வது வயதில் எஞ்சிய உடமைகளை யெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு சான் பிராடிலோ என்னுமிடத்தில் உள்ள மடத்தில் சேர்ந்தார். மடத்தில் தமக்கு ஒதுக்கப்பட்ட சமையல் வேலையை மிகவும் மகிழ்ச்சியோடு செய்து வந்தார். ஆனால் அம் மடத்தின் தலைவர் இறந்ததும் பெனடிக்ட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நவ சந்நியாசிகளை நடத்துபவராக (Novice Master) ஏற்படுத்தப்பட்டார். படிப்பறிவில்லாத இவர், தேவ அருளால் வேதாகமத்தையும், வேத சாஸ் திரத்தையும் விளக்கிக்கூறும் ஆற்றல் பெற்றிருந்தார். அவரது புனிதத் தன்மை சிசிலி நாடெங்கும் பல்வேறு மக்களை அவரண்டையில் ஈர்த்தது. தாழ்ச்சியையே விரும்பும் பெனடிக்ட் தமது இறுதிக் காலத்தில் சமையல் வேலையை செய்யவே பெரிதும் விரும்பினார். தமது 63-வது வயதில் முன்னறிவித்தபடியே பாக்கியமான ம ர ண மடைந்தார். அவரது தூய. உடல் மடத்தின் ஆலய சாக்ரீஸ்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அழியாத சரீரம்!
அவர் இறந்த உடனே அவரது புனிதம் பற்றிய செய்தி உலகின் பல பாகங்களிலும் பரவி யது. அவருக்கு அர்ச் பட்டம் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் இறந்த மூன்று அண்டுகளுக்குப் பின் 1592, மே. 7-ம் நாளில் அவருடைய கல்லறைத் திறக்கப்பட் டது. அப்போது சரீரம் எந்தவிதமான அழிவும் இன்றி புதுமையாக பாதுகாக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சரீரம் முழுமையாக இருந்தது. சரீரம் அழகிய பெட்டியில் வைத்து திரும்பவும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
1611ல் ஸ்பெயின் தேசத்து மன்னனான 3-ம் பிலிப் என்பவர் அந்த ஆலயத்தை பெரிதாகக் கட்டினார். அங்கு அவரது அழியாத சரீரம் அழகிய வேலைப்பாடமைந்த பெட்டியில் மிகுந்த பக்தி வணக்கத்துடன் வைக்கப்பட்டது . இன்று வரை விசுவாசிகளின் வணக்கத்திற்காக சரீரம் அங்கு உள்ளது.

1743-ல் 14-ம் பெனடிக்ட் பாப்பரசரால் அவருக்கு முத்தி பேறு பட்டம் வழங்கப்பட்டது,
கி.பி. 1807ல் 7-ம் பத்திநாதர் பாப்புவால் அர்ச். பட்டம் வழங்கப்பட்டார். அர்ச். பெனடிக்ட்
வட அமெரிக்காவில் நீக்ரோ வேத போதகப் பணித்தளத்தின் பாது காவலாக
அறிவிக்கப் பட்டுள்ளார்.


அர்ச் பெனடிக்ட் மூர்



Sample

பழைய ஏற்பாட்டில் தேவதூதர்கள்.



தேவதூதர்களையும், அவர்கள் நம்மீது கொண்டுள்ள ஆழ்ந்த
அன்பையும் அறிந்து கொள்வதற்கு நமக்கு மிகச் சிறந்த, பரிசுத்தமான
ஆதாரமாக இருப்பது பரிசுத்த வேதாகமமே. அதில் இந்தப் பரிசுத்த
அரூபிகளைப் பற்றிய முழுமையான குறிப்புகளை நாம் காண்
கிறோம்.
எனவே இந்த அழகிய வேதாகமக் கதைகளில் ஒரு சிலவற்றை
நாம் எடுத்துக் கொள்வோம். அவற்றை தியானிக்கவும், அவை
கற்பிக்கிற பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் நம் வாசகர்களை
அழைக்கிறோம். நீங்கள் இவற்றை முன்பே வாசித்திருக்கலாம்.
ஆனால் உங்களில் பெரும்பாலானவர்கள் தேவ வார்த்தையாகிய
இந்த உயிரளிக்கும் ஊற்றிலிருந்து ஒருபோதும் ஆழமாகவும்,
அடிக்கடியும் அள்ளிப் பருகியிருக்க மாட்டீர்கள்

சனி, 2 மார்ச், 2019

Tamil Catholic Quotes

St. Joseph Quotes in Tamil

அர்ச். சூசையப்பருடைய அடைக்கலத்தை தேடி, 
அவரிடம் மன்றாடி கேட்டதையயல்லாம் நான் 
ஒருபோதும் அடையாமல் போனதில்லை.

          அர்ச். அவிலா தெரசம்மாள்.

அர்ச். சூசையப்பரிடம் செல்லுங்கள்.


WORDS OF ST. TERESA OF AVILA

ST. TERESA'S "GUARANTEE"

"To other Saints Our Lord seems to have given power to succor us in some special necessity-but to this glorious Saint, I know by experience, He has given the power to help us in all. Our Lord would have us understand that as He was subject to St. Joseph on earth-for St. Joseph, bearing the title of father and being His guardian, could command Him-so now in Heaven Our Lord grants all his petitions. I have asked others to recommend themselves to St. Joseph, and they, too, know the same thing by experience . . ." - Autobiography, VI, 9

வெள்ளி, 1 மார்ச், 2019

St. Joseph Tamil Quotes





Our lady Quotes on Tamil

இருதய தாழ்ச்சியும் சாந்தமுடைத்தான மாசற்ற இருதயமே

எங்கள் இருதயம் சேசுவின் திரு இருதயம்   போலாகும்படி கிருபை செய்யும்

Sacred Heart Quotes in Tamil

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள சேசுவே

எங்கள் இருதயம் உமது இருதயத்தை  போலாகும்படி கிருபை செய்யும்