Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 6 மார்ச், 2019

அர்ச். சூசையப்பர் பிரார்த்தனை

பரிசுத்த பிதா 10ம் பத்திநாதரால்
அங்கீகரிக்கப்பட்ட
அர்ச். சூசையப்பர் பிரார்த்தனை

சுவாமீ கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும் ... மற்றதும்
அர்ச். மரியாயே, எங்க...
அர்ச். சூசையப்பரே, எங்க...
தாவீது இராஜாவின் கீர்த்தி பெற்ற புத்திரனே, எங்க...
பிதாப்பிதாக்களின் மகிமையே, எங்க...
தேவதாயாரின் பத்தாவே, எங்க...
கன்னிமரியாயின் கற்புள்ள காவலனே, எங்க...
தேவகுமாரனை வளர்த்த தகப்பனே, எங்க...
கிறீஸ்துநாதரை உற்சாகப் பற்றுதலுடன் காப்பாற்றினவரே, எங்க ...
திருக்குடும்பத்தின் தலைமையானவரே, எங்க...
உத்தம நீதிமானான அர்ச். சூசையப்பரே, எங்க
உத்தம விரத்தரான அர்ச். சூசையப்பரே, எங்க...
உத்தம விவேகமுடைத்தான அர்ச். சூசையப்பரே, எங்க...
உத்தம் தைரியசாலியான அர்ச், சூசையப்பரே, எங்க...
உத்தம் கீழ்ப்படிதலுள்ளவரான அர்ச். சூசையப்பரே, எங்க...
உத்தம பிரமாணிக்கமுள்ளவரான அர்ச். சூசையப்பரே, எங்க...
பொறுமையின் கண்ணாடியே, எங்க...
வறுமையின் அன்பனே, எங்க...
தொழிலாளிகளுக்கு மாதிரிகையே, எங்க...
சமுசார வாழ்க்கையின் ஆபரணமே, எங்க...
கன்னிகைகளின் காவலனே, எங்க...
குடும்பங்களுக்கு ஆதரவே, எங்க..
கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே, எங்க...
வியாதிக்காரர்களுக்கு நம்பிக்கையே, எங்க...
மரிக்கிறவர்களுக்கு பாதுகாவலே, எங்க...
பசாசுகளை நடுநடுங்கச் செய்பவரே, எங்க...
பரிசுத்த திருச்சபையின் பரிபாலனே, எங்க...

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையான சேசுவே எங்கள் பாவங்களை பொறுத்தருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையான சேசுவே எங்கள் பிராத்தனையை கேட்டருளும் சுவாமி
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறி புருவையான சேசுவே எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
.
முதல் - கர்த்தர் அவரைத் தமது வீட்டின் எஜமானாக ஏற்படுத்தினார்.
துணை - அவருடைய உடைமைகளையெல்லாம் நடத்தி வரவும் ஏற்படுத்தினார்.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வேசுராசுவாமி, உம்முடைய மகா அர்ச்சியசிஷ்ட திருமாதாவின் பரிசுத்த பத்தாவாக முத்தனான சூசையப்பரை மனோவாக்குக்கெட்டாத பராமரிக்கையால் தெரிந்துகொள்ளத் திருவுளமானீரே. பூலோகத்தில் அடியோர்களை ஆதரிக்கிற "வரென்று எங்களால் வணங்கப்படுகிறவர், பரலோகத்தில் எங்களுக்காக மனுப்பேசுகிறவராயிருக்கும்படிக்கு நாங்கள் பாத்திரவான்கள் ஆகத்தக்கதாக தேவரீர் அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். பிதாவோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற ஆண்டவரே, - ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக