Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 5 மார்ச், 2019

மார்ச் மாதம் அர்ச் சூசையப்பரின் மாதம்.


பரிசுத்த தந்தை பாப்பரசர் 9-ம் பத்தி நாதர் மார்ச் மாதத்தை புனித சூசையப்பரின்
வணக்க மாதமாக பிரகடனம் செய்தார். நமது  ேநச தந்தையான புனித சூசையப்பரின்
மகிமை துலங்கிடும் மாதமிது! அவரது அடைக் கலத்தை நாடும் காலமிது!!
-


எனவே சிறப்பாக இம்மாதத்தில்: சங்கைக்குரிய குருக்களே! நற்கருணை
சேசுவை முதலில் கரங்களில் ஏந்திய புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.
துறவரத்தாரே! மு த ல் துறவர மடமாக விளங்கிய திருக்குடும்பத்தின்
அதிபரானபுனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.
இல்லத் தலைவிகளே!  ேத வ மாதாவை பராமரித்து காப்பாற்றிய
புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.


தொழிலாளர்களே! தொழிலாளர்களுக்கு பாதுகாவலரான
புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்!


வேலை தேடுபவர்களே! சேசுவுக்குத் தொழில் கற்றுக் கொடுத்த
புனித சூசையப்பரிடம் - மன்றாடுங்கள்.


இளைஞர்களே! குழந்தை சேசுவை இளைஞராக வளர்த்த
புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.


நங்கையரே! கற்பின் பாதுகாவலரான புனித சூசையப்பரிடம்
மன்றாடுங்கள்.


சாவைக்கண்டு கலங்குவோரே! சேசுவின் அரவணைப்பிலும்,
தேவ மாதாவின் பராமரிப்பிலும் நல்ல மரணமடைந்த புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.


திருச்சபையின் அங்கங்களான விசுவாசிகளே! உங்களுடைய கலக்கம்,
குழப்பமெல்லாம் நீங்கி சமாதான வெற்றி கிடைக்க விசேஷமாய்
இந்நேரத்தில் திருச்சபையின் பரிபாலகரான புனித சூசையப்பரிடம் மன்றாடுங்கள்.

மரியாயே வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக