Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 6 மார்ச், 2019

புனிதர்களின் அழியாத சரீரங்கள் - Part 3

முத். பவுலா பிரெஸ்நேற்றி உலகப் | பிரசித்தி பெற்ற அர்ச். டோரொத்தி கன்னி யர் சபையை ஏற்படுத்தியவர் ஆவார். தமது நான்கு சகோதரர்களையும் குருக்களாகப் பெற பாக்கியம் பெற்ற இவள், இத்தாலியில் ஜெ னோவா நகரில் 1880 - ம் ஆண்டு பிறந்தாள். சிறு வயதிலேயே தாயை இழந்து குடும்பச் சுமையைத் தாங்கிய அவள் பொறுமையோடு துன்பங்களை ஏற்றுக் கொண்டாள். கடின உழைப்பால் உடல் நலிவுற்ற அவள்குயின்டோ பங்கின் குருவான த ன து சகோதரர்கள் உதவியால் குணமடைந்தாள். அங்கு அவருக்கு உதவிபுரிந்தும், ஞானோபதேசப் பணிபுரிந்தும் வந்த அவள் தேவ ஏவுதலால் தமது நண்பர்" களைக் கொண்டு புதிய சபையை ஏற்படுத் தினாள்.

அர்ச். டோரொத்தி கன்னியர் ச  ைப ஜெனோவா நகரில் முறையாக ஏற்படுத்தப்பட்டு பவுலா தாயாரின் கடின உழைப்பால் இத்தாலி பிரேசில் நாடு முழுவதும் பரவியது. புண்ணிய வாழ்விலும், தவத்திலும் ஈடுபட்ட அவள் மூன்று முறை பக்க வாத நோயால் பீடித்து துன்பப் பட்டாள். அவளது கடைசிக் காலத்தில் அர்ச். ஜான் போஸ் கோவைக் காணும் பேறு பெற்று அவர் முன்னுரைத்த நாளிலேயே பாக்கியமான மரண மடைத்தாள்.

அழியாத சரீரம்!

1906 - ஆம் ஆண்டில் அர்ச். 10-ம் பத்தி நாதர் பாப்பரசர் அவளது வீ ர விசுவாச வாழ்வை அங்கீகரித்து முத்திப் பேறு பட்ட நட வடிக்கைகளைக் துவக்கிவைத்தார். அதே ஆண் டில் சபையின் தலைமை மடத்தின் புதிய கல்ல றையில் ன வப்பதற்காக கல்லறை திறக்கப் பட்டது, அப்போது ச ரீ ர ம் எந்தவிதமான சேதமும் அழிவுமின்றி காப்பாற்றப்பட்டிருந்தது. சரீரம் மிகவும் நெகிழ்ச்சியுடையதாகவும் உயிருள்ளதைப்போலவும் காணப்பட்டது. சரீரத் திற்கு அணிவிக்கப் பட்டிருந்த உடுப்புகள் கூட எந்த விதமான சேதமுமின்றி இருந்தன. சரீரம் புதிய கல்லறையில் வைக்கப்பட்டது.
---
1930 -- ல் பரி. பாப்பு 11 - ம் பத்தி நாதர் - ஜீன் 8 -- ம் நாளன்று பவுலா பிரெஸ்நேற்றித் - தாயாருக்கு முத்தி பேறு பட்டம் வழங்கினார். - அதே நாளில் கல்லறை திறக்கப்பட்டு, - அவள் சரீரம் புதிய அழகிய வெள்ளிக் - கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு தலைமை மடத்தின் ஆலய பிரதானப் பீடத்தில் ஸ்தாபிக்கப் பட்டுள்ளது. எண்ணற்ற விசுவாசிகள் தங்களது வணக்கத்தை தெரிவிக்க அங்கு திரு யாத்திரை சென்ற வண்ணமாகவே உள்ளனர்.
- முத் பவுலா பிரெஸ்நேற்றியம்மாளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
மரியாயே வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக