Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 4 மார்ச், 2019

Sample

பழைய ஏற்பாட்டில் தேவதூதர்கள்.



தேவதூதர்களையும், அவர்கள் நம்மீது கொண்டுள்ள ஆழ்ந்த
அன்பையும் அறிந்து கொள்வதற்கு நமக்கு மிகச் சிறந்த, பரிசுத்தமான
ஆதாரமாக இருப்பது பரிசுத்த வேதாகமமே. அதில் இந்தப் பரிசுத்த
அரூபிகளைப் பற்றிய முழுமையான குறிப்புகளை நாம் காண்
கிறோம்.
எனவே இந்த அழகிய வேதாகமக் கதைகளில் ஒரு சிலவற்றை
நாம் எடுத்துக் கொள்வோம். அவற்றை தியானிக்கவும், அவை
கற்பிக்கிற பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் நம் வாசகர்களை
அழைக்கிறோம். நீங்கள் இவற்றை முன்பே வாசித்திருக்கலாம்.
ஆனால் உங்களில் பெரும்பாலானவர்கள் தேவ வார்த்தையாகிய
இந்த உயிரளிக்கும் ஊற்றிலிருந்து ஒருபோதும் ஆழமாகவும்,
அடிக்கடியும் அள்ளிப் பருகியிருக்க மாட்டீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக