Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 5 மார்ச், 2019

புனிதர்களின் அழியாத சரீரங்கள் - Part 2




புனிதர்களின் அழியாத சரீரங்கள் கடவுளை மகிமைப் படுத்துகின்றன. Joan Carroll Cruz என்ற அமெரிக்க ஆசிரியரால் எழுதப்பட்ட 'The Incorruptibles'' என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. - P. பிரான்சிஸ் குமார்

*அர்ச். சியென்னா கத்தரீனம்மாள் (1347 - 1380)*

அர்ச். கத்தரீனம்மாள் இத்தாலி தேசத்தில் சியென்னா என்னுமிடத்தி ல் 1347 -ம் வருடம்
தனது பெற்றோருக்கு 23-வது பிள்ளையாகப் பிறந்தாள். சிறு வயதிலேயே ஞானத்தில்
தேர்ச்சி பெற்றிருந்த அவள் தனது கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணித்தாள். தமது
6-வது வய தில் தமது சகோதரனோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது
நமதாண்டவருடைய காட்சியைப் பெற்றாள். அதில் சேசுகிறிஸ்து பாப்பரசரின்
ஆடை அணிகளை அணிந்து புனித இராயப்பர், சின்னப்பர், அருளப்பர்புடைசூழ
பீடத்தில் அமர்ந்தவராய் காட்சியளித்தார். அந்தக் காட்சியின் பிறகு
அர்ச். சாமிநாதரின் தவத்தின் மூன்றாம் சபையில் சேரத் தீர்மானித்தாள்.
17 -வது வயதில் துறவற ஆடை அணிந்து மூன்று வருடம் ஜெபத் தபத்தில் ஈடுபட்டு
நோயாளிகளை பராமரிப்பதிலும், கைதிகளை சந்திப்பதிலும் தம்மையே
அர்ப்பணித்தாள்.
அர்ச். கத்தரீனம்மாள் எவ்வளவுக்கு நம்தாண்டவருடன் ஒன்றித்திருந்தாளெனில் ஒரு
காட்சியில் நமதாண்டவர் அவளுக்கு ஒரு வைரகற்களாலான தங்க மோதிரம் அணி
வித்தார். அது அவளுக்கு மட்டுமே தெரியும்படியாக அருளப்பட்டது அர்ச். கத்தரீனம்மாள்
ஆண்டவருடைய ஐந்து திருக்காயங்களையும் பெற்று அவருடைய பாடுகளையும்
சுவைக்கும் வரம் பெற்றாள். அவளது வேண்டுதலின்படி இத்திருக்காயங்கள் வெளியே
தெரியாமல் அருளப்பட்டது. அவளது இறப்பிற்  ப் பிறகே இக்காயங்கள் வெளிப்படை
யாக  சரீரத்தில் தோன்றின.
திருச்சபைக்காகவும், பாப்புவின் அப்போஸ் தலிக்க ஸ்தானத்தின் மகிமையை
நிலைநாட்டு வதற்காகவும் தமது இறுதி நாட்களை செலவழித்தாள். அச்சமயம் நாடு
கடந்து வாழ்ந்து வந்த 11-ம் கிரகொரியார் என்ற பாப்புவை மீண்டும் ரோமைக்கு வரச்
செய்ய தமது ஆலோசனைகளையும், எல்லா முயற்சிகளையும் செய்து வெற்றிப்
பெற்றாள். இறுதியில் 1380-ல் ஏப்ரல் 29-ல் திருச் சபையின் ஐக்கியத்திற்காக தன்னையே
தகனப் பலியாக ஒப்புக் கொடுத்து பாக்கியமான மரண மடைந்தாள்.

அவளது சரீரம் மூன்று நாட்களுக்கு விசுவாசிகளின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டு
பின்னர் புனித மரிய ஸ்போரா மினர்வா ஆலயத்தை ஒட்டிய கல்லறைத் தோட்டத்தில்
அடக்கம் செய்யப்பட்டது.
*அழியாத சரீரம் !*

சில காலங்களுக்குப்பின்னர் அவளது ஆன்ம குருவான முத்ரெய்மன்ட் கால்வாவால்
கல்லறை திறக்கப்பட்டது. சரீரம் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மீண்டும் சரீரம் ஜெபமாலை சிற்றாலயத்தின் தலைவாயிலில் அடக்கம் செய்யப்பட்டது
. இச்சமயத்தில் ப ா ப் ப ர ச ரி ன் உத்தரவுப் பெற்று முத். ரெய்மண்ட் சுவாமிகள்
புனிதையின் அழியாத சரீரத்திலிருந்து தலையை தனியே அகற்றி அழகியப் பேழை
யில் வைத்து சியென்னாவிலுள்ள சாமிநாதர் சபை மடத்திற்கு வழங்கினார். பின்னர்
1383-ல் சரீரம் காம்போ ரெஜியோ நகர் கன்னியர்மடத்திற்கு இரகசியமாக கொண்டு
செல்லப்பட்டு அங்குள்ள ஆலயத்தில் புனிதைக் கென்று ஏற்படுத்தப்பட்ட அழகிய
பீடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த வைபவத் தில் புனிதையின் வயதான தாயாரும்
கலந்து கொண்டார்.


1385-ல் சரீரத்திலிருந்து ஒரு கரம் பிரிக்கப்பட்டு சியென்னா நகருக்கு வழங்கப்பட்டது.
அதிலிருந்து மூன்று விரல்கள் வெனிசுக்கு அருளிக்கமாக (Relic) கொடுக்கப்பட்டது.
1430-ல் சரீரம் மீண்டும் அழகிய வேலைப் பாடமைந்த பெட்டியில் வைக்கப்பட்டது.
பின் வந்த நூற்றாண்டுகளில் அச்சரீரத்திலிருந்து பலப் பகுதிகள் ஐரோப்பா முழுவதற்கும்
அருளிக்கமாக வழங்கப்பட்டன. 1487ல் மற்றொரு கரம் ரோமையிலுள்ள சாமிநாதர்
சபைக் கன்னியர் மடத்திற்குக் கொடுக்கப்பட்டது. சரீரத்தின் இடது பாதம் வெனிஸ்
நகர புனிதர்கள் அருளப்பர், சின்னப்பர் ஆலயத்திற்கு கொடுக்கப் பட்டது. 1597-ல்
இந்தப் பாதத்தில் உள்ள காயம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு
ஆராயப் பட்டது.
பின்னர் 1855ல் ஏப்ரல் மாதத்தில் சரீரம் வைக்கப்பட்டுள்ள ஆலயம் விரிவுபடுத்தப்படும்
போது புனிதையின் அழியாத சரீரம் வைக்கப் பட்டிருந்த கல்லறைப் பீடம் பல
திருச்சபை அதிகாரிகள், சபை அதிபர் முன்னிலையில் திறக்கப் பட்டது. சரீரத்திலிருந்து
பல பகுதிகள் அருளிக் கமாக எடுக்கப்பட்டு விட்டாலும் சரீரத்தின் மற்றப் பகுதிகள்
அழியாமல் மிகவும் புதியனவாக இருந்தது. அச்சமயம் நம் தாண்டவரால் மோதிரம்
அணிவிக்கப்பட்ட விரல் ப்ளாரன் சுக்கு அருகில் உள்ள பொந்தியானோ என்னுமிடத்தினுள்
தேவாலயத்திற்கு வழங்கப்பட்டது
பின்பு சரீரம் மீண்டும் அதே பெட்டியில் வைத்து, அதே பீடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 4ம் தேதி அர்ச். சாமிநாதர் திரு நாளின் போது சரீரம்
விசுவாசிகளின் வணக் கத்திற்காக வைக்கப்பட்டு பின்னர் ரோமை செனட்
அதிகாரிகள் சூழ பவனியாக எடுத்துச் செல்லப்படும்.
தன து வாழ் நாளிலேயே புனிதை என்று மதிக்கப்பட்ட அர்ச். கத்தரீனம்மாள் 1461-ல்
2ம் பத்திநாதர் பாப்புவால் புனிதப் பட்டம் வழங்கப்பட்டார், 1939ல் பாப்பரசர் 12ம் பத்தி
நாதரால் இத்தாலி தேசத்தின் பரலோகப் பாது காவலியாக அறிவிக்கப்பட்டார்.
அர்ச். கத்த ரீனம்மாள் தேவ ஏவுதலினால் பல ஞான, வேத சாஸ்திர நூல்களை
எழுதியுள்ள தால், 1970-ல் பாப்பு 6-ம் சின்னப்பர் திருச்சபையின் வேத பாரகர் என்ற
சிறப்புப் பட்டம் வழங்கினார். அர்ச். கத்தரீனம்மாள் இப்பட்டத்தைப் பெறும்
இரண்டாவது புனிதையாவாள்.

அர்ச். சியென்னா கத்தரீனம்மாளே,
* எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். திரு நாள் : ஏப்ரல், 29.*

மரியாயே வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக