Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

August 4 - St. Dominic (அர்ச். சாமிநாதர்)

ஆகஸ்டு 4ம் தேதி

போதக துறவியர் சபையின் ஸ்தாபகரும், மகா பரிசுத்த ஜெபமாலையின் மூலம் ஆல்பிஜென்சிய பதிதத் தப்பறையிலிருந்து, உலகத்தைக் காப்பாற்றிய மகிமைமிகு பிதாப்பிதாவுமான அர்ச். சாமிநாதர் திருநாள்

 

 அர்ச்‌.தோமினிக்‌ என்கிற அர்ச்‌. சாமிநாதர்‌, கி.பி.1170ம்‌ வருடம்‌, ஸ்பெயின்‌ நாட்டில்‌ பிறந்தார்‌. கர்ப்பஸ்திரீகளான தாய்மார்களுக்குப்‌ பாதுகாவலரான அர்ச்‌. சீலோஸ்‌ தோமினிக்கின்‌ பெயரையே இவருக்கு வைத்தனர்‌.பலேன்சியா பல்கலைக்கழகத்தில்‌, கல்வி பயின்றார்‌; 24வது வயதில்‌,குருப்பட்டம்‌ பெற்றார்‌. 1199ம்‌ வருடம்‌, ஓஸ்மா நகர கதீட்ரல்‌ தேவாலய அதிபராக நியமிக்கப்பட்டார்‌. 1203ம்‌ வருடம்‌, ஓஸ்மா நகர மேற்றிராணியாருடன்‌ பிரான்சின்‌ தெற்குப்‌ பகுதிகளுக்குச்‌ சென்றபோது, அப்பகுதிகளில்‌, ஆல்பிஜென்சியப்‌ பதிதத்தப்பறை, பிரான்ஸ்‌ மக்களுடைய ஞான ஜீவியத்தில்‌ ஏற்படுத்திய மாபெரும்‌ ஆத்தும சேதத்தையும்‌, சீரழிவையும்‌, துயரமான சூழலையும்‌ கண்டு பெரிதும்‌ மனச்‌ சஞ்சலமடைந்தார்‌.

1208ம்‌ வருடம்‌, பிரான்‌சின்‌ தெற்குப்பகுதியை ஆக்ரமித்‌ திருந்த ஆல்பிஜென்சியரிடமிருந்து கத்தோலிக்க மக்களைப்‌ பாதுகாக்கும்படி அனுப்பப்பட்ட பாப்பரசரின்‌ தூதுவரான காஸ்டெல்னெனின்‌ பீட்டர்‌ என்பவர்‌, ஆல்பிஜென்சியரால்‌ கொல்லப்பட்டபோது, 3ம்‌ இன்னசென்ட்‌ பாப்பரசர்‌,ஆல்பி ஜென்சிய பதிதர்களுக்கு எதிரான ஒரு சிலுவைப்போரை, 4ம்‌ சைமன்‌ டி மோன்ஃபோர்ட்‌ என்ற பிரபுவின்‌ தலைமையில்‌ துவக்கி வைத்தார்‌; இப்போர்‌ அடுத்த ஏழு வருடகாலம்‌ நீடித்தது. இவருடைய படை வீரர்களுடன்‌ அர்ச்‌.சாமிநாதர்‌ கூட சென்று, அப்பகுதியிலிருந்த ஆல்பிஜென்சிய பதிதர்களுக்கு ஞானப்பிரசங்கங் கள்‌ நிகழ்த்தினார்‌. இச்சமயம்‌, அர்ச்‌.சாமிநாதர்‌ நிகழ்த்திய பிரசங்கங்களால்‌, அதிக நன்மை ஏற்படவில்லை!

1214ம்‌ வருடம்‌,சைமன்‌ பிரபு, காஸ்ஸெனேவுயில்‌ என்ற இடத்திலிருந்த ஒரு கோட்டையை அர்ச்‌. சாமிநாதருக்கு அளித்தார்‌. இங்கு, சத்திய கத்தோலிக்க வேத சத்தியங்களைப்‌ பாதுகாப்பதற்கும்‌, ஆல்பிஜென்சிய பதிதத் தப்பறையை அழிப்பதற்கும்‌, ஆல்பிஜென்சிய பதிதர்களை மனந்திருப்புவதற்குமாக, ஆறு துறவியருடன்‌, அர்ச்‌. சாமிநாதர்‌ போதக துறவியர்‌ சபையை ஸ்தாபித்தார்‌; அதே சமயம்‌, ஆல்பிஜென்சிய பதிதம்‌ வளர்ந்ததற்குக்‌ காரணம்‌, பாவம்‌ தான்‌! என்பதையும்‌, அவர்கள்‌ மனந்திரும்புவதற்குத்‌ தடையாயிருப்பதும் பாவம்‌ தான்!‌ என்பதையும்‌ உணர்ந்த அர்ச்‌. சாமிநாதர்‌, ஆல்பிஜென்ய பதிதத்தை, அழித்து ஒழிப்பதற்காகவும்‌, இப்பதிதர்கள்‌ மனந்திரும்புவதற்காகவும்‌, தூலோஸ்‌ நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு காட்டில்‌, மூன்று இரவும்‌ மூன்று பகலுமாக தொடர்ந்து, ஜெபத்திலும், தபசிலும்‌ ஈடுபட்டிருந்த போது, அர்ச்‌.சாமிநாகருக்கு,மகா பரிசுத்த தேவ மாதா காட்சியளித்து, இப்பதிதத்தை அழிப்பதற்காகவும்‌ ஆல்பிஜென்‌ சியப்‌ பதிதர்களையும்‌, பாவிகளையும்‌ மனந்திருப்புவதற்காகவும், மகா பரிசுத்த ஜெபமாலையை அளித்தார்கள்‌. மகா பரிசுத்த தேவமாதா, அப்போது, அர்ச்‌.சாமிநாதரிடம்‌, “இத்தகைய போராட்டத்தின்போது, புதிய ஏற்பாட்டின்‌ அஸ்திவாரக்கல்லாகத்‌ திகழ்கிற சம்மனசானவரின்‌ சங்கீதமாலை (அருள்நிறை மந்திரம்‌) தான்‌, எப்போதும்‌ முதன்மையான ஆயுதமாகக்‌ திகழ்கிறது! என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டுமென்று நான்‌ விரும்புகிறேன்‌.

ஆகவே, இந்த கடினப்பட்ட ஆத்துமங்களை அணுகுவதற்கும்‌, அவர்களை, சர்வேசுரனிடம்‌ மனந்திருப்பிக்‌ கொண்டு வருவதற்கும்‌, என்னுடைய சங்கீத (அருள்‌ நிறை மந்திர மாலை) மாலையை அவர்களுக்குப் பிரசங்கி!” என்று கூறினார்கள்‌. அதன்படியே, மகா பரிசுத்த ஜெபமாலையின்‌ மூலமாக, ஆல்பிஜென்சிய பதிதத்தை, பிரான்ஸ்‌ நாட்டில்‌ அழித்தொழித்தார்‌; 3ம்‌ ஹொனோரியுஸ்‌ பாப்பரசர்‌, போதகர்‌ துறவற சபையை (இப்போது அர்ச்‌.சாமிநாதர்‌ சபை என்று அழைக்கப்படுகிறது), 1217ம்‌ வருடம்‌ அங்கீகரித்து, அகில உலகத்திலும் போதிப்பதற்கான அதிகாரத்தை, போதகத்‌ துறவியருக்கு அளித்தார்‌. (பிற்காலத்தில்‌ வரவிருந்த பதிதத்‌ தப்பறைகளையும்‌, அர்ச்‌.சாமிநாதர்‌ சபையினர்‌, மகா பரிசுத்த ஜெபமாலையின்‌ உதவியினால்‌, உலகத்தில்‌ அழித்தொழிப்பதை, திருச்சபையின்‌ சரித்திரத்தில்‌ காணலாம்‌).அர்ச்‌. சாமிநாதா்‌, தனது ஜீவிய காலத்தின் இறுதி வருடங்களை,தனது துறவற சபையை, நிர்வகிப்பதிலும்‌, சீரமைப்பதிலும்‌,ஸ்திரப்படுத்துவதிலும்‌, புதிய உறுப்பினர்களை ஏற்‌றுக்கொண்டு, அவர்களுக்கான புதிய மடங்களை ஸ்தாபிப்பதிலும்‌, இத்தாலி,ஸ்பெயின்‌,பிரான்ஸ் நாடுகளெங்கும்‌, இதற்காக பயணிப்பதிலும்‌, ஈடுபட்டிருந்தார்‌. ஒரு இலட்சம்‌ பதிதர்களை, மனந்திருப்பி, சத்திய திருச்சபையில்‌ சேர்த்தார்‌. அர்ச்‌.சாமிநாதர்‌,தனது 51வது வயதில்‌, 1221ம்‌ வருடம்‌, ஆகஸ்டு 6ம்‌ தேதியன்று, இத்தாலி, பொலோஞா நகரில்‌, பாக்கியமாய்‌ மரித்தார்‌. 9ம்‌ கிரகோரி பாப்பரசரால்‌, 1234ம்‌ வருடம்‌, ஐூலை 13ம்‌ தேதியன்று, இவருக்கு,அர்ச்சிஷ்டப்பட்டம்‌ அளிக்‌கப்பட்டது.

 

ஆல்பிஜென்சியப்‌ பதிதம்‌ என்றால்‌ என்ன?

இத்தப்பறை, மத்திய நூற்றாண்டுகளில்‌, ஆல்பி என்ற ஒரு தெற்குப்‌ பிரான்சின்‌ நகரத்திலிருந்து தோன்றிய தப்பறையாகும்‌. இப்பதிதத்‌ தப்பறை, இரண்டு கடவுள்கள்‌ இருப்பதாகவும்‌, அதில்‌, நமதாண்டவரை நல்லகடவுள்‌ என்றும்‌, பழைய ஏற்பாட்டின்‌ கடவுளை கெட்ட கடவுளாகவும்‌, பசாசையே அந்த கெட்டகடவுளாகவும்‌ கூறி பிதற்றியது. இந்த தப்பறையை , மகா பரிசுத்த ஜெபமாலை அழித்து நிர்மூலமாக்கியது; அர்ச்‌.சாமிநாதர்‌ சபைத்துறவியர்‌ மூலமாகவே, மகா பரிசுத்த ஜெபமாலை மீதான பக்தி உலகம்‌ முழுவதும்‌ பரவியது. அர்ச்‌.சாமிநாதர்‌ துறவற சபைத்‌ துறவியருக்கும்‌, மால்டா தீவின்‌ அரசாங்கத்திற்கும்‌, மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது; அர்ச்‌.சாமிநாதர்‌ துறவற சபையைச்‌ சேர்ந்த துறவியும்‌, மாபெரும்‌ அர்ச்சிஷ்டவருமான அர்ச்‌. 5ம்‌ பத்திநாதா் பாப்பரசர்‌, மால்டா தீவிலுள்ள அர்ச்‌.அருளப்பரின்‌ வீரர்கள்‌ வலெட்டா என்ற நகரத்தைக்‌ கட்டுவதற்கு உதவினார்‌.

“தன்‌ ஆசாபாசங்களை ஆண்டு நடத்துகிற ஒரு மனிதன்‌, உலகத்தினுடைய அதிபதியாகத்‌ திகழ்கிறான்‌; ஒன்றில்‌ நாம்‌, நம்‌ ஆசாபாசங்களைக்‌ கட்டாயமாக ஆண்டு நடத்த வேண்டும்‌; அல்லது. அவை நம்‌மை ஆண்டு நடத்திவிடும்‌! ஆகவே, அடிக்கப்படுகிற ஒரு பட்டறைக்‌ கல்லாக இருப்பதைவிட, அடிக்கிற ஒரு சுத்தியலாக இருப்பதே மேல்‌!” 📚🏻 + அர்ச்‌.சாமிநாதர்‌.

 

காண்பவர்‌ இருதயங்களில்‌ தேவசிநேக நெருப்பைத்தூண்டுகிறவரும்‌, மகா பரிசுத்த ஜெபமாலை மூலமாக பதிதத்‌ தப்பறைகளை அழித்தவரும்‌, போதக துறவியர்‌ சபையின்‌ ஸ்தாபகரும்‌, சரீரமெடுத்த பக்தி சுவாலகரும்‌, மகிமை மிகுந்த பிதாப்பிதாவுமான அர்ச்‌.சாமிநாதரே! எங்களுக்காக வேண்டிக்‌ கொள்ளும்‌!  

Aug. 5 - Our Lady of Snows (பரிசுத்த பனிமய மாதாவின்‌ பசிலிக்கா பேராலயம்‌ (மகா பரிசுத்த தேவமாதாவின்‌ தலைமை பசிலிக்கா தேவாலயம்‌)அபிஷேகம்‌ செய்யப்பட்ட திருநாள்‌.)

 

ஆகஸ்டு 05ம்தேதி .

மகா பரிசுத்த பனிமய மாதாவின்பசிலிக்கா பேராலயம்‌ (மகா பரிசுத்த தேவமாதாவின்தலைமை பசிலிக்கா தேவாலயம்‌)அபிஷேகம்செய்யப்பட்ட திருநாள்‌.

 


இந்த பசிலிக்கா தேவாலயம்உலகிலேயே மிகப்பழமையானதும்மிக முக்கியமானதுமான தேவமாதாவிற்கு தோத்திரமாகக்கட்டப்பட்ட தேவாலயங்களில்‌, திருயாத்திரை ஷேத்திரங்களில்‌, ஒன்றாகக்திகழ்கிறது! மகா பரிசுத்த தேவமாதா தாமே கேட்டுக் கொண்டதன்பேரில்தான்‌, இந்த பசிலிக்கா தேவாலயம்கட்டப்பட்டது; இவ்வற்புத நிகழ்வு, “பனிமயமாதா!” என்கிற மகா பரிசுத்த தேவமாதாவின்மிகப்பழமையான பட்டத்தை , நாம்அறியும்படிச்செய்தது! பாரம்பரியத்தின்படி, உரோமையைச்சேர்ந்த ஒரு பத்ரீசியரான ஜியோவான்னியும்அவருடைய மனைவியும்‌, குழந்தை யில்லாமல்‌, தங்களுடைய உடைமைகளை நிர்வகிப்பதற்குத்தங்களுக்கு ஒரு வாரிசு வேண்டுமென்று, மகா பரிசுத்த தேவமாதா விடம்‌, பக்திபற்றுதலுடன்ஜெபித்து வேண்டிக்கொண்டிருந்தனர்‌. மகா பரிசுத்த தேவமாதா, 352ம்வருடம்‌, ஆகஸ்டு 4ம்தேதிக்கும்‌ 5ம்தேதிக்கும்இடையில் இரவின்போது, இத்தம்பதியருக்குக்காட்சியளித்து, தமக்குத்தோத்திரமாக உரோமையிலுள்ள எஸ்குயிலின்குன்றின்மீது, ஒரு தேவாலயத்தைக்கட்ட வேண்டும்என்றும்‌, அக்குன்றின்மேல்தேவாலயம்கட்ட வேண்டிய இடம்‌, மிகச்சரியாக, பனியினால்குறிக்கப்பட்டிருக்கும்‌, என்றும்கூறினார்கள்‌. அச்சமயம்‌, இத்தாலியில்கடுமையான கோடைகால உஷ்ணம்நிலவியது. அதே சமயம்‌, மகா பரிசுத்த தேவமாதா கூறியதுபோல்‌, புதுமையாக தேவாலயம்கட்டப்பட வேண்டிய இடத்தை, பனி மூடியிருந்தது. மகா பரிசுத்த தேவமாதா, பாப்பரசர்லிபேரியசுக்கும்அதே இரவில்தோன்றி இதைப்பற்றி அறிவித்திருந்ததால்‌, தேவாலயம்கட்டப்பட வேண்டிய இடம்‌, புதுமையாகப்பனிபடர்ந்து இருப்பதை, அவரும்வந்து பார்த்தார்‌.

352ம்வருடம்‌, ஆகஸ்டு, 5ம்தேதியன்று, காலையில்‌, ஜியோவான்னியும்‌, அவருடைய மனைவியும்எஸ்குயிலின்குன்றிற்கு விரைந்து சென்றனர்‌; அச்சமயம்‌, பாப்பரசர்லிபேரியுசும்தமது பரிவாரங்களுடன்ஆடம்பர பவனியாக, அந்த குன்றிற்கு வந்தார்‌. இப்புதுமையைக்காண்பதற்கு அங்கு திரளான மக்கள்கூடியிருந்தனர்‌; பளிச்சிடும்வெண்பனி புதுமையாக அக்குன்றின்மீது படர்ந்திருந்ததை அனைவரும்கண்டனர்‌; சூரிய ஒளி கடுமையாக இருந்தபோதிலும்‌, அந்த இடத்திலிருந்த பனி புதுமையாக உருகாமல்‌, படர்ந்திருக்கிறதைக்கண்டு எல்லோரும்ஆச்சரியப்பட்டனர்‌! தேவாலயத்திற்கான அளவு குறிக்கப்பட்டது; அதன்பின்பனி உருகியது; மகா பரிசுத்த தேவமாதா பசிலிக்கா தேவாலயம்‌, இரண்டு வருடங்களுக்குள்கட்டி முடிக்கப் பட்டது; பாப்பரசர்லிபேரியுசினால்‌, அபிஷேகம்செய்யப்பட்டது.

எஃபேசுஸ்நகரில்‌ 431ம்வருடம்நிகழ்ந்த திருச்சபையின்பொதுச்சங்கம்‌, மிகவும்பரிசுத்த கன்னிமரியம்மாளை, சர்வேசுர னுடைய மகா பரிசுத்த மாதா, என்று அதிகார பூர்வமாகப்பிரகடனம்செய்தபோது, 3ம்சிக்ஸ்துஸ்பாப்பரசர்‌(432- 440), இந்த பசிலிக்கா தேவாலயத்தை திரும்பக்கட்டி, அழகுப்படுத்தினார்‌; அர்ச்‌. 5ம் பத்திநாதர்பாப்பரசர்‌, 1568ம்வருடம்‌, திரிதெந்தீன்பொதுச்சங்கத்தின் போது, உறுப்பினர்கள்கோரிய விண்ணப்பத்தின்படி, இத்திருநாளை பொது உரோம திருவழிபாட்டின்காலண்டரில்சேர்த்தார்‌. 18ம்நூற்றாண்டின்போது, இப்பசிலிக்கா தேவாலயம்‌, முழுமையாக மறுபடியும்புதுப்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது! இந்த பசிலிக்கா தேவாலயத்தின்முகப்பின்தோற்றமும்‌, இதன்உள்தோற்றத்தின்அலங்காரங்கள்எல்லாமும்‌, இக்காலத்தைச்சேர்ந்த வேலைப்பாடு களாக இருக்கின்றன! இருப்பினும்‌, பண்டைக்காலத்தில்மேற்கொள்ளப் பட்ட வேலைப்பாடுகளும்‌, சலவைக்கற்தூண்களும்‌, அநேக 5ம்நூற்றாண்டின்மொசைக்கற்களும்‌, அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கின்றன! உரோமாபுரியிலேயே, அதிக உயரமான மத்திய நூற்றாண்டைச்சேர்ந்த 240 அடி உயர  கோபுர மணியையும்,‌ இந்த பசிலிக்கா தேவாலயம்கொண்டிருக்கிறது. 

மகா பரிசுத்த தேவமாதாவின்இந்த தலைமை பசிலிக்கா தேவாலயம்‌, உலகத்திலேயே மிக நேர்த்தியான கலை வேலைப்பாடு களையும்‌, கட்டிடக்கலையின்அதிசய நுட்பங்களையும்கொண்டிருக்கிறது! தேவாலய உட்கூரையில்காணப்படும்ஓவியம்‌, மத்திய நூற்றாண்டுகளின்மறுமலர்ச்சியின்காலத்தைச்சேர்ந்த ஜூலியானோ சங்கல்லோ என்பவரின்தலைசிறந்த கைவேலைப் பாடாகத்திகழ்கிறது! அச்சமயம்‌, அமெரிக்கக்கண்டத்தைக்கண்டுபிடித்த கிறிஸ்டோஃபர்‌, அமெரிக்காவிலிருந்து ஸ்பெயின்நாட்டிற்குக்கொண்டு வந்ததும்‌, ஸ்பெயின்நாட்டின்அரசரான ஃபெர்டினான்டினாலும்‌, அரசி இசபெல்லாவினாலும்‌, 6ம்அலெக்சாண்டர்பாப்பரசருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டதுமான தங்கத்தினாலான பூச்சு வேலைப்பாட்டுடன்‌, உள்தேவாலயத்தின்மேற்கூரையில்தீட்டப்பட்ட வண்ண ஓவியம்இன்னும்அழகுற மெருகேற்றப்பட்டது!

இப்பசிலிக்கா தேவாலயத்தில்இன்னும்இரண்டு முக்கியமாகக்குறிப்பிடத்தக்க கிறீஸ்துவ பொக்கிஷ திரவியங்கள்உள்ளன: முதலாவதாக, நமதாண்டவர்‌, திவ்ய பாலனாக கிறீஸ்துமஸ்அன்று பெத்லகேம்குகையில்பிறந்து, கிடத்தப்பட்டிருந்த அந்த மாட்டுக்கொட்டில்அல்லது முன்னிட்டியே, ஒரு அருளிக்கமாக, இத்தேவால யத்தில்ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற அருளிக்கங்களில்,‌ மகாக்குறிப்பிடத்தக்க அருளிக்கமாகத்திகழ்கிறது. ஏழாம்நூற்றாண்டின்போது, பாலஸ்தீனத்தை மகமதியர்கைப்பற்றியபோது, அகதிகளாக உரோமைக்கு வந்த கிறீஸ்துவர்கள்இந்த பரிசுத்த முன்னிட்டியை, ஒரு அருளிக்கமாகத்தங்களுடன்கொண்டு வந்தனர்‌. இப்பரிசுத்த முன்னிட்டியானது, ஒரு மகா பெரிய அருளிக்கமாக, இந்த பசிலிக்கா தேவாலய முதன்மைப்பெரிய பீடத்தின்அடியில்ஸ்தாபிக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது!

மாட்சிமிக்க இவ்வருளிக்கத்தை நோக்கியபடி, அதற்கு எதிரில்‌, 1854ம்வருடம்மகா பரிசுத்த தேவமாதாவின்மகிமை மிகுந்த அமலோற்பவத்தை ஒரு விசுவாசப்பிரகடனமாக அறிவித்த முத்‌.9ம்பத்தி நாதர்பாப்பரசரின்சலவைக் கற்சுரூபம்ஸ்தாபிக்கப்பட்டிருக் கிறது. உரோமை மக்களுடைய இரட்சணியம்என்று அழைக்கப்படுகிறதும்‌, உரோமை மக்களுடைய தன்னிகறற்ற தனிச்சிறந்த பக்தி முயற்சிக்குரியதுமான மகா பரிசுத்த தேவமாதாவின்வரைபடத்தினுடைய ஓவியம்தான்‌, அந்த இரண்டாவது மகா விலையுயர்ந்த பொக்கிஷ திரவியமாக விளங்குகிறது! இந்த ஒவியத்தை வரைந்தவர்அர்ச்‌. லூக்காஸ்என்று பாரம்பரியம்அறிவிக்கிறது. மகா பரிசுத்த தேவமாதாவின்இந்த அரிதான உன்னத ஓவியப்படத்தை, புண்ணிய பூமியிலிருந்து, மகா கான்ஸ்டன்டைன்சக்கரவர்த்தியின்தாயாரான அர்ச்ஹெலன்உரோமாபுரிக்குக்கொண்டு வந்தார்கள்‌.  அர்ச்‌. கிரகோரியார்பாப்பரசர்‌ (590-604) ஆண்ட காலத்தில்‌, உரோமை நகரத்தை ஒரு கொள்ளை நோய்தீண்டியபோது, உரோமை நகர மக்கள்‌,தங்களை மோட்சத்திலிருந்து பாதுகாக்கிறவர் களான மகா பரிசுத்த தேவமாதாவிடம்‌, ஜெபித்து வேண்டிக்கொள்ளும் படியாக, இவ்வற்புதப்படத்தை, பாப்பரசர்பக்தி பற்றுதலுடன்‌, உரோமை நகரின்தெருக்களில்‌, சுற்றுப்பிரகார பவனியாகக்கொண்டு சென்றார்‌.

இதன்பலனாக, புதுமையாக கொள்ளை நோய்‌, நின்று போனவுடன்‌, பாப்பரசர்‌, மகா பரிசுத்த தேவமாதாவிற்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம்செலுத்துவதற்காக ஏற்பாடு செய்திருந்த ஒரு மகா ஆடம்பரமான சடங்கின்போது, இந்த அற்புதப்படத்திலுள்ள மகா பரிசுத்த தேவமாதாவினுடைய திருத்தலையிலும்‌, தேவபாலனுடைய திருத்தலையிலும்‌, விலையுயர்ந்த மாணிக்கக்கற்களால்அலங்கரிக்கப்பட்ட தங்கத்தினாலான கிரீடங்களை சூட்டினார்‌. இந்த பசிலிக்கா தேவாலயத்தில்அர்ச்‌. 5ம்சிக்ஸ்துஸ்பாப்பரசரும்‌, அர்ச்‌. 5ம்பத்திநாதர்பாப்பரசரும்அடக்கம்செய்யப்பட்டிருக்கின்றனர்‌, என்பதும்குறிப்பிடத்தக்கவையாகும்‌.  திருச்சபையின்பரிசுத்தப்பாரம்பரிய சடங்குகளை நேசிப்பதற்கும்அவற்றிற்காகப்போராடுவதற்கும்‌, பாத்திமாவில்‌, மகா பரிசுத்த தேவமாதா, தீர்க்கதரிசனமாகக்கூறியதன்பிரகாரம்‌, துப்புரவு தண்டனைக்கால நாட்களில்‌, நிகழவிருக்கும்மகா வியக்க வைக்கும்புதுமைகளுக்கு நம்முடைய ஆத்துமங்களைத்திறப்பதற்கும்‌, மகா பரிசுக்த தேவமாதா நமக்கு உதவி செய்யும்படியாக, நாம்‌, மகா பரிசுத்த பனிமய மாதா என்கிற மகிமைமிகு பட்டத்தினால்‌, அவர்களை நோக்கிக்கூவி அழைத்து மன்றாடி ஜெபிப்போமாக!

! மகா பரிசுத்த பனிமய மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்‌!             

சனி, 3 ஆகஸ்ட், 2024

July 31 - St. Ignatius of Loyalo - அர்ச்‌. இலொயோலா இஞ்ஞாசியார்‌

 

ஜூலை 31ம்தேதி

புராட்டஸ்டன்டு பதிதத்தப்பறையிலிருந்து திருச்சபையைக்காப்பாற்றும்படியாக, சர்வேசுரனுடைய விசேஷ தேவ வரப்பிரசாதத் தைப்பெற்று, சேசு சபையை ஸ்தாபித்தவரும்‌, வேத இயல்அறிஞரும்‌, ஸ்துதியருமான அர்ச்இலொயோலா இஞ்ஞாசியார்திருநாள்‌.

 

அர்ச்‌. இஞ்ஞாசியாருடைய பெயர்‌, இக்னேஷியஸ்லோபெஸ்‌. இவர்‌, 1491ம்வருடம்‌, அக்டோபர்‌ 23ம்தேதியன்று, ஸ்பெயினிலுள்ள இலொயோலா என்ற கோட்டையில்பிறந்தார்‌. இவருடைய பெற்றோர்களுக்கு, இவர்‌ 19வது கடைசி மகனாகப்பிறந்தார்‌. 17 வயதில்‌, இராணுவத்தில்சேர்ந்தார்‌. ஒரு சமயம்ஒரு மகமதியன்‌, நமதாண்ட வருடைய தேவத்துவத்தை மறுத்தபோது, அர்ச்‌. இஞ்ஞாசியார்‌, அவனை சாகும்வரைப்போரிடக்கூடிய தனிச்சண்டைக்கு அழைத்தார்‌. கத்திச்சண்டையின்இறுதியில்‌, அவனை வீழ்த்தி, அவன்மேல்வெற்றிகொண்டார்‌. 1509ம்வருடம்‌, நவார்வைஸ்ராயாக இருந்த அன்டோனி யோ டி லாரா என்பவருக்காக, பாம்பலூனா கோட்டையைப்பாதுகாப்பதற்காக, பிரஞ்சுப்படைக்கு எதிராகப்போரில்பங்கேற்றார்‌;

1527ம்வருடம்மே 20ம்தேதியன்று, பாம்பலூனா கோட்டை கைப்பற்றப்பட்டது! ஒரு பீரங்கிக்குண்டு, இக்கோட்டையைத் தாக்கியபோது, இவர்பெரிதும்காயப்பட்டு, உயிருக்கே ஆபத்தாகி, மருத்துவமனையில்‌, சிகிச்சைபெற்றார்‌. இவருடைய ஒரு கால்‌, காயமடைந்தது! இது, இவருடைய ஜீவிய காலமெல்லாம்ஊனமாகவே இருந்தது. மருத்துவமனையிலிருந்தபோது, நமதாண்டவருடைய ஜீவிய சரித்திரம்‌, என்கிற புத்தகமும்‌, அர்ச்சிஷ்டவர்களின்ஜீவிய சரித்திரமும்,‌ இவருக்கு வாசிக்கக்கிடைத்தன.

இவ்விரு புத்தகங்களும்‌, இவருடைய ஜீவியத்தையே, முழுமையாக மாற்றின! அர்ச்‌. இஞ்ஞாசியார்‌, இராணுவத்தைத்துறந்தார்‌. சர்வேசுரனுக்குத்தன்னையே முழுமையாக அர்ப்பணித்தார்‌; 1522ம்வருடம்‌, மார்ச்மாதத்தில்‌, மோன்செராத்திலுள்ள மகா பரிசுத்த தேவமாதா வின்திருயாத்திரை ஸ்தலத்தில்‌, தேவ பாலனுடன்‌, பரலோக இராக்கினி, இவருக்குக்காட்சியளித்தார்கள்! பிறகு, இவர்‌, மன்ரேசா என்ற இடத்திலுள்ள ஒரு குகைக்குச்சென்று, ஏகாந்தத்தில்ஜெப தப ஜீவியத்தில்‌, ஒரு வருட காலம்ஜீவித்தார்‌.  1523ம்வருடம்‌, செப்டம்பர்மாதம்‌, அர்ச்இஞ்ஞாசியார்‌, நமதாண்டவர்ஜீவித்த புண்ணியபூமிக்கு திருயாத்திரை சென்றார்‌: 1531ம்வருடம்‌, பாரீஸ்நகரை அடைந்தார்‌; அச்சமயம்‌, பிரான்ஸ்நாட்டில்குழப்பத்தையும்‌, பதிதத்தப்பறை களையும்ஏற்படுத்திக்கொண்டிருந்த புராட்டஸ்டன்டுகளுக்கு எதிராக, பிரஞ்சுக்கத்தோலிக்கர்கள்போராட்டத்தில்‌, கால்வினிஸ்டு பதிதத் தப்பறையை பரப்பி வந்த ஜான்கால்வின்‌, பிரான்சை விட்டு ஓடிப் போனான்‌.  பாரீஸ்நகரப்பல்கலைக்கழகத்தில்‌, அர்ச்‌. இஞ்ஞாசியார்‌, வேத இயலில்முனைவர்பட்டம்பெற்றார்‌; அச்சமயம்‌, இவர்சர்வேசுரனுடைய அதிமிக மகிமைக்காக, புராட்டஸ்டன்டு போன்ற பதிதத்தப்பறைகளிலிருந்து, திருச்சபையைப்பாதுகாக்கும்படி, சர்வேசுரனுடைய வேத சத்தியங்களையும்‌, ஞான உபதேசத்தையும்‌, உலகமெங்கும்கற்பிக்கும்படியான உத்தமமான கத்தோலிக்க பள்ளிக் கூடங்களையும்‌, கல்லூரிகளையும்கட்டும்படியாகவும்‌, எல்லாவற் றிற்கும்மேலாக, சேசு சபையை ஸ்தாபிக்கவும்‌, தன்னுடன்சேசுசபையில்துறவிகளாக சேர்ந்து, ஆத்துமங்களை இரட்சணியப்பாதைக்குக்கூட்டி வரும்படியாக உழைப்பதற்கு, தன்பிறகே வரக்கூடிய ஆறு  பேரைக்கவர்ந்திழுத்தார்‌:

அர்ச்‌. பிரான்சிஸ்சவேரியார்‌, அல்ஃபோன்சோ சால்மரான்‌, தியகோ லேனெஸ்‌, நிக்கோலாஸ்போபாடில்லா ஆகிய நான்கு இஸ்பானியர்களையும்‌, பீட்டர்ஃபேபர்என்கிற ஒரு பிரஞ்சு நாட்டினரும்‌, சிமாவோ ரொட்ரிகஸ்என்கிற ஒரு போர்த்துக்கல்நாட்டினரும்‌, அர்ச்‌. இஞ்ஞாசியாரைப்பின்பற்றி, முதன் முதலில்சேசுசபையில்,‌ ஏழ்மை, கற்பு, கீழ்ப்படிதல்என்கிற வார்த்தைப்பாடுகள்கொடுத்து துறவிக ளாகச்சேர்ந்த ஆறு பேர்களாவர்‌. 

1539ம்வருடம்ஆகஸ்டு 15ம்தேதியன்று, அர்ச்‌.இராயப்பர்தேவாலயத்தில்‌, மோன்மாத்தர்என்ற இடத்தில்‌, அர்ச்‌. இஞ்ஞாசியாரும்‌, இந்த ஆறு பேர்களும்‌, சேசு சபை என்கிற துறவற சபையை ஸ்தாபித்தனர்‌. இதில்சங்‌. பீட்டர்ஃபேபர்மட்டுமே ஒரு குருவாக இருந்தார்‌. மற்றவர்கள்எல்லாரும்‌, பின்னாளில்குருப்பட்டம்பெற்றனர்‌. 1580ம்வருடம்‌, 3ம்சின்னப்பர்பாப்பரசர்‌, சேசு சபைக்கு, அங்கீகாரம்அளித்தார்‌. சேசு சபை உலகெங்கிலும்பரவி, துறவற மடங்களையும்‌, தேவாலயங்களையும்‌, கல்விநிலையங்களையும்கட்டி, சகல பதிதத்தப்பறைகளிலிருந்தும்‌, சத்திய கத்தோலிக்க திருச்சபையைப்பாதுகாத்து வந்தது! அர்ச்‌. பிரான்சிஸ்சவேரியார்‌, இந்தியாவிற்கும்‌, ஐப்பான்போன்ற கீழை நாடுகளுக்கும்வந்து, சத்திய வேதத்தைப்பரப்பினார்‌.

அர்ச்இஞ்ஞாசியார்‌, 1556ம்வருடம்‌, ஜுலை 31ம்தேதியன்று பாக்கியமாய்மரித்தார்‌; 1609ம்வருடம்ஜூலை 27ம்தேதியன்று, 2ம்சின்னப்பர்பாப்பரசரால்‌ , முத்திப்பேறு பட்டமும்‌, 1622ம்வருடம்மார்ச்‌ 12ம்தேதியன்று, 18ம்கிரகோரி பாப்பரசரால்அர்ச்சிஷ்டப்பட்டமும்அளிக்கப்பட்டது! அர்ச்இலொயோலா இஞ்ஞாசியார்‌, மருத்துவமனை யில்வாசித்த தே வீடா கிறிஸ்தி என்கிற புத்தகம்‌, அதாவது நமதாண்டவராகிய திவ்ய சேசுகிறீஸ்துநாதருடைய ஜீவிய சரித்திரம்என்கிற புத்தகமானது, ஆதித்திருச்சபையின்தந்தையர்களான மாபெரும்அர்ச்சிஷ்டவர்கள்‌ 60 பேர்எழுதிய நூல்களிலிருந்து கையாளப்பட்ட மேற்கோள்களுடன்‌, சுவிசேஷ புத்தகங்களின்விளக்க வுரை நூலாகத்தொகுக்கப்பட்டிருந்தது! எளிய தியானம்என்கிற ஜெப முறையானது, அர்ச்‌. இஞ்ஞாசியார்‌, தனது ஞான முயற்சிகள்என்கிற தியான பயிற்சிக்காக ஏற்படுத்திய அடிப்படை பயிற்சிமுறையாக விளங்குகிறது!

அகில திருச்சபையெங்கிலும்தேவசிநேக நெருப்பைப் பற்றி யெரியச்செய்த சேசு சபையின்ஸ்தாபகரும்‌, வேத இயல்அறிஞரும்‌, ஸ்துதியருமான அர்ச்இலொயோலா இஞ்ஞாசியாரே! எங்களுக் காக வேண்டிக்கொள்ளும்! 




Life History of St. Ignatius of Loyala in Tamil.