Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 10 மார்ச், 2019

வெரோணிக்கம்மாள், ஆண்டவரின் முகத்தைத் துணியால் துடைக்கிறாள்


..
.;

பிறர் கேலி செய்வார்களே, திட்டுவார்களே என்பதை பொருட்படுத்தவில்லை. தைரியத்துடன் அவள் - தனியே வருகிறாள் ; கூட்டத்தைத் தாண்டி. சேசுமீது தனக்குள்ள நேசத்தை வெளிக்காட்ட அவள் அஞ்சவில்லை. நல்ல யேசுவே, முகத் தாட்சணியத்தை முன்னிட்டு நன்மை செய்ய பின்வாங்குவேனானால், வெரோனிக்கம்மாளின் நன்மாதிரியை நான் பின்பற்றும் வரத்தை எனக்குத் தாரும். மனிதர் என்ன நினைப்பார்கள், என்ன சொல்வார்கள் என்பதை நான் பொருட்படுத்தாமல், உம்மையும் உமக்கு மகிழ்ச்சி தருவதையுமே நான் நினைத்து அதைத் துணிந்து செய்ய எனக்கு உதவி செய்வீராக.


என் அயலாரைப்பற்றி.. நான் அநியாயமாக தீர்ப்புக் கூறாதிருப்பேனாக. அங்கு இருந்த
உம்முடைய ஏனைய நண்பர்கள் யாரும் உம்மைத் தேற்ற முன்வரவில்லையே என
வெரோணிக்கம்மாள் தீர்ப்புக் கூறவில்லை... அவள் செய்தது போல் செய்ய வேறு யாருக்கும்
நினைவு வராதிருந்திருக்கலாம்; பிறர் உமக்கு சேவை செய்தாலும் செய்யாவிட்டாலும் நான்
ஆர்வத்துடன் உம்மைச் சேவிக்க எனக்கு உதவி செய்வீராக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக