Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 25 மார்ச், 2019

அர்ச். அந்தோணியார் வணக்கமாதம் - *ஆறாம் நாள்*


ஆறாம் நாள்
மோந்ததே பாவோலோ மடத்தில் நடந்த வரலாறு
பாவிகளை மனந்திருப்புவதற்கும், பிரிவினைக்காரரை வெட்கப்படுத்திக் கலங்க அடிக்கிறதற்கும் அர்ச். அந்தோனியாரைத் தெரிந்துகொண்ட கடவுள், கொஞ்ச காலம் அவர் தனிவாசத்திலும் தாழ்மையிலும் இருக்கும்படி சித்தமானார்,
அர்ச், அந்தோனியார் மோந்த்தே பாவோலோ மடம் சேர்ந்தபோது சமையற் சாலையில் தரைகளையும், சமையல் பாத்திரங்களையும் கழுவுகிற வேலையையும், கூட்டிச் சுத்தம் பண்ணுகிற வேலையையும் தமக்குக் கொடுக்கவேண்டுமென்று சிரேஷ்டரை மன்றாடி அந்தத் தாழ்மையான வேலைகளை மகா சுறுசுறுப்போடு செய்து வந்தார். சகோதரர் ஒருவர் அருகிலிருந்த ஒரு கெபியில் ஒரு சிறு குடிசை கட்டிருந்தார், அந்தக் குடிசையை அந்தோனியார் பார்த்தபோது அதைத் தனக்குக் கொடுத்து , விடச் சகோதரரை மன்றாடி, அவருடைய சம்மதத்தின் பேரில் நடுச் சாமத்துச் செபத்துக்குப் பிறகு அந்தோனியார் அந்தக் குடிசைக்குள் போய் செபத்தியானம் பண்ணுவார். கொஞ்சம் உரொட்டியும் தண்ணீருமாத்திரம் சாப்பிட்டு தமக்கு ஒழிந்த உத்தரவான நேரமெல்லாம் அந்தக் குடிசையில் தன்னைத் தானே ஒறுத்துத் தபசு செய்துகொண்டு வந்தார். பசாசுகள் அவரைச் சும்மா விடவில்லை. அவைகள் அவருக்குச் செய்துவந்த தந்திரங்கள் எவ்வளவு பெரிதானாலும் தமது தவ முயற்சிகளாலும், செபத்தினாலும் அவைகளை வென்று பசாசுகளைத் துரத்தியடிப்பார்.
உயர்ந்த குலத்திற் பிறந்த அவர், மேலான சாஸ்திரம்களைக் கற்றறிந்த அவர், அநேகரைத் தமது அருமைப் பிரசங்கங்களால் மனம் திருப்ப வேண்டிய அவர், பதிதருடைய சம்மட்டியென்று அழைக்கப்பட வேண்டிய  அவர், சர்வேசுரன் அவருக்கு அருளிய வரத்தால் அதிக அற்புதங்களைச் செய்ய வேண்டிய அவர், இப்படி தம்மை தானே தாழ்த்தி நீசத் தொழில்களைச் சந்தோஷமாய்ச் செய்து வந்தது எவ்வளவோ ஆச்சரியத்துக்குரிய தாயிருக்கின்றது. அர்ச். அந்தோனியார் தம்முடைய புண்ணியத்துக்காகவும், அர்ச்சியசிஷ்டதனம் அடையவும், பிறர் ஆத்துமங்களை ஈடேற்றத் துக்கு முந்தியும் (செய்துவந்த புண்ணியங்களை நாம் கண்டு அதிசயிக்கத்  தான் செய்வோம். ஆத் (At) என்னுங் குருவானவர் சொல்லியிருக்றெதென்னவென்றால், தாழ்ச்சியென்னும் புண்ணியம் அர்ச். அந்தோனியாரிடத்தில் விசேஷமான விதமாய் விளங்கிற்று. (கொத்திர மகிமையையும், சாஸ்திரத் திறமையையும் கொஞ்சமாவது யோசிக்காமல் தன்னை அற்பமாகவே எப்போதும் எண்ணி வந்தார் என்கிறார்,
தாழ்ந்த வேலைகளை மனச் சந்தோஷத்தோடு செய்து வருவார். இஸ்பிரீத்துசாந்துவானவருடைய நல்ல ஏவுதல்களை அறிந்து தம் இருதயத்தில் அவைகளைப் பதியவைக்க கெபிகளையும் தனி இடங்களையும் தேடித் தியானஞ் செய்வார்,
இந்த அர்ச்சியசிஷ்டவரிடத்தில் விளங்கின புண்ணிய மாதிரிகளை, மட்டற்ற தாழ்ச்சியை, உலக மகிமை கீர்த்தியின்மேல் வெறுப்பைக் கண்ட நாம் நம்மிடத்திலும் அந்தப் புண்ணியங்கள் கொஞ்சமாவது விளங்குவதற்குப் பிரயாசைப்படாதிருக்கலாமோ. பிரயாசைப்பட்டால் அவருடைய ஒத்தாசையைக் கொண்டு நமது பிரயாசைக் களவு அந்தப் புண்ணியங்களை அடைவோம்.
செபம்
உலக வீண் பெருமை சிலாக்கியங்களை அகற்றி நிந்தித்துத் தள்ளின அர்ச். அந்தோனியாரே, தாழ்ச்சியின் உத்தம மாதிரியான சேசுநாதரை பணிவுடன் கண்டுபாவித்த நீர், நாங்களும் எங்கள் ஆங்காரப் பெருமை சிலாக்கியத்தைத் தள்ளி, உம்மை எங்களால் கூடுமான மட்டும் கண்டு பாவிக்கத் தயை செய்தருளும். - ஆமென்.
நற்கிரியை - தாழ்ச்சி முயற்சி ஏதாவது செய்கிறது
மளவல்லயச் செபம் - உத்தம் தாழ்ச்சியிள் மாதிரி யான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக