Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

ஞாயிறு, 10 மார்ச், 2019

Marriage at Cana




திராட்ச ரசம் அவர்களுக்குக் குறைவாய்ப் போனதினாலே, சேசுநாதருடைய தாயார் அவரை நோக்கி:  அவர்களுக்கு ரசமில்லை என்றாள். அதற்கு சேசுநாதர்: ஸ்திரீயே, எனக்கும் உமக்கும் என்ன?  என்னுடைய காலம் இன்னும் வரவில்லையே என்று அவளுக்குத் திருவுளம்பற்றினார்.  (அரு. 2: 3‡4)


எனக்கும் உமக்கும் என்ன” என்னும் இந்த வாக்கியத்தை “என்னோடு உனக்குக் காரியமென்ன” என்பதாகச் சிலர் அர்த்தம்பண்ணி, இவ்விதமாய் சேசுநாதர் தம்முடைய தாயாரை இகழ்ந்ததாகச் சொல்லிக்காட்டுகிறார்கள்.  ஆனால் இந்த வாக்கியத்தை மூல பாஷையாகிய எபிரேய பாஷையில் பார்க்குமிடத்தில் கலியாணக்காரர் வி­யத்தில் கலந்துகொள்வது “நம்மிருவருக்குங் காரியமில்லையே” என்கிற அர்த்தத்தில் சொல்லப் பட்டிருக்கிறதாக நிச்சயமாயிருக்கிறது.
அன்றியும் தாயைநோக்கி: ஸ்திரீயே என்பது கிரேக்கருக்குள்ளும் கீழ்த்திசைகளிலும் மரியாதையான வார்த்தையேயயாழியத் தாழ்மையான வார்த்தையல்ல.
மேலும் சேசுநாதர் தம்மைப் பெற்ற பரிசுத்த தாயின் விண்ணப்பத்துக்கு இரங்கித் தமது காலம் வருமுன்னே தண்ணீரை இரசமாக மாற்றின புதுமையைச் செய்தபடியால், அவர் அந்த ஆண்டவளைச் சங்கித்துக் கனம்பண்ணினாரென்று சொல்லவேணுமே ஒழிய அவளுக்குக் கனக்குறை செய்தாரென்று எவரும் நினைப்பதற்கு இடமில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக