Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 7 மார்ச், 2019

புனிதர்களின் அழியாத சரீரங்கள் - Part 4 ஆஞ்சலா மெர்சி

தேவாலயத்தில் பக்தியோடு ஜெபித்துக் கொண்டிருந்த அந்த 32 வயது பெண் - மணிக்கு ஓர் காட்சி அருளப்பட்டது! மோட்சத்துக்கும் பூமிக்குமாக ஓர் அழகிய ஏணி காணப்பட்டது அதில் ஏராளமான பெண்களும், சம்மனசுக்களும் - எறிச் செல்வதுபோல இருந்தது. அவர்களில் ஓர் ' அழகிய பெண் படியிலிருந்து இறங்கி ஜெபித்துக் ' கொண்டிருந்த பெண்மணியிருகில் வந்து ஆஞ்சாலா , “நமது ஆண்டவர் தமது சித்தத்தை உனக்குக் காட்டவே இந்தக் காட்சியை வழங்கி உள்ளார். நீ மரிப்பதற்கு முன்பு, இது போலவே பல இளம் கன்னியர்களை பிரெஸ்சியா நகரத் தில் உருவாக்குவாய்'' என்று கூறி மறைந்தாள். அந்தக் காட்சி கண்ட பெண்தான் திருச்சபையிலேயே முதல் முதலாக கல்விப் பணியை தன் அப்போஸ்தலமாகக் கொண்ட அர்ச். ஊர்சுலா - வின் கன்னியர்சபையை ஏற்படுத்திய புனித ஆஞ்சலா மெர்சியாவாள்.
இக்காட்சிக்குப்பின் தேவ ஏவுதலுக் கொத்திருந்த ஆஞ்சலா, பிரஸ்ெஸீயா நகரத்தி ன் ஓர் செல்வந்த குடும்பத்தின் பெண்களிடம் இருந்து அழைப்புப் பெற்றாள். அக்குடும்பத்தின் இரு ஆண் மக்களும் சமீபத்தில் இறந்ததால், பெண்கள் துறவற வாழ்வை மேற்கொள்ள விரும்பினர். எனவே ஆஞ்சலா 1531 - ஆம் | ஆண்டில் தன் அப்போஸ்தலப் பணியை அக்குடும்பத்துப் பெண்களுடன், அவ்வில்லத்திலேயே தொடங்கினாள். சிறியவர்களுக்கு ஞானோபதேசம் போதிப்பதே அவர்களது முதல் பனியாயிருந்தது. அவர்களது புனித துறவற வாழ்வைக் கண்டு அந்நகரத்தின் ஏராளமான பெண்களும் அதில் சேர்ந்தனர். இது '' அர்ச். உர்சுலா சமூகம்'' என்று அழைக்கப்பட்டது.
ஆஞ்சலா 1474 ஆம் ஆண்டில் மரண - மடைந்தாள். அவளது மரணத்திற்குப் பிறகு மிலான் மேற்றிராசனத்தின் ஆயரான அர்ச்.. சார்லஸ் பொரோமியோவால் அச்சபை அதிகார பூர்வமாக அங்கிகரிக்கப்பட்டு அர்ச். உர்சுலா, கன்னியர் சபை என அழைக்கப்பட்டது, - - . ,
--

அழியாத சரீரம் :
- இறந்த ஆஞ்சுலாவின் சரீரத்தை, அடக்கம் செய்ய 30 நாட்களாகியது, அவ்வளவு கூட்டம். இருப்பினும் சரீரத்தில் எந்த விதமான - துர்வாடேையா, அழிவோ ஏற்படவில்லை. புனி) தையின் கல்லறை பிற்காலத்தில் பற்பல சமயங் களில் திறக்கப்பட்டது. சரீரத்தில் எந்தவித மான அழிவும் ஏற்பட்டிருக்கவில்லை. புதி தாகவே இருந்தது. - 1907-ஆம் ஆண்டு மே, 28-ம் நாளன்று . திருச்சபையின் அதிகாரிகளின் முன்னிலை யில் கல்லறை திறக்கப்பட்டு சான்று எழுதப்பட் டது. 1930ல் மீண்டும் கல்லறைத் திறக்கப்பட்டு புனிதையின் அழியாத சரீரம் அழகிய கண்ணா டிப் பேழையில் 'பிரெஸ்சியா' நகரின் பேரால யத்தில் நடுப்பீடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. --- ஆஞ்சலா மெர்சி 1807ம் ஆம் ஆண்டு மே, 24-ம் நாளன்று அர்ச். பட்டம் கொடுக்கப் பட்டாள்!

அரச். ஆஞ்சலா மெர்சியம்மாளே! எங்க ளுக்காக வேண்டிக் கொள்ளும்!.

- மரியாயே வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக