Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 22 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 18-ம் தேதி*



*St. Peter’s Chair at Rome*
*உரோமையில் அர்ச். இராயப்பருடைய* 
*பத்திராசனத் திருநாள்.*

நமது கர்த்தராகிய சேசு கிறீஸ்துநாதர் அர்ச். இராயப்பரை திருச்சபைக்குத் தலைவராக ஸ்தாபித்தார். ஆகையால் அப்போஸ்தலர்களும், விசுவாசிகளும அர்ச். இராயப்பரை சேசுநாதருக்குப் பதிலாகப் பாவித்து, அவருக்குக் கீழ்ப்படிந்துவந்தார்கள். அவர் தமது சிம்மாசனத்தை அந்தியோக்கியா நகரில் ஸ்தாபித்து, அங்கிருந்து திருச்சபையை நடத்திக்கொண்டு வந்தார். ஆனால் அக்காலத்தில் உலகத்தின் முக்கிய பாகத்தை அரசாண்ட உரோமைச் சக்கரவர்த்திகள் உரோமையைத் தங்களுக்குத் தலைநகரமாக ஸ்தாபித்ததினாலும், உலகத்தின் நான்கு திசைகளிலுமிருந்து சகல ஜாதி ஜனங்கள் அவ்விடத்திற்கு அடிக்கடி வந்து போயிருந்ததினாலும், அவ்விடத்தில் தமது பத்திராசனத்தை ஸ்தாபித்தால் திருச்சபைக்கு அதிக நன்மை உண்டாகும் என்று                                                                                                                                                                            அர்ச். இராயப்பர் கருதி, உரோமையில் தமது பத்திராசனத்தை ஸ்தாபித்தார். அவர் அவ்விடத்தில் அநேகரை மனந்திருப்பி, அர்ச். சின்னப்பருடன் அவ்விடத்தில் வேதசாட்சியாக மரணமடைந்தார். அது முதற்கொண்டு சகல பாப்பரசர்களும்                                 அர்ச். இராயப்பருடைய சிம்மாசனத்தில் வீற்றிருந்து திருச்சபையை நடத்தி வருகிறார்கள்.           

*யோசனை*

திருச்சபைப் போதகர்களாகிய ஆயர், குருக்கள் இவர்களை நாம் மதித்து இவர்களுக்குக் கீழ்படியவேண்டும்.

சனி, 18 ஜனவரி, 2020

ஏழு தேவதிரவிய அனுமானங்கள்




  • ஞானஸ்தானம்
  • உறுதிபூசுதல்
  • தேவநற்கருணை
  • பாவசங்கீர்த்தனம்
  • மெய்விவாகம்
  • குருத்துவம்
  • அவஸ்தை பூசுதல்


வெள்ளி, 17 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 17-ம் தேதி

**

*St. Antony, A.*
*அர்ச். பெரிய அந்தோணியார்*
*மடாதிபதி - (கி.பி. 356).*
இவர் எஜிப்து தேசத்தில் செல்வந்தரான பெற்றோரிடமிருந்து பிறந்து புண்ணியவாளராய் வாழ்ந்துவந்தார். இவருடைய பெற்றோர் இறந்தபின்  “நீ உத்தமனாக வேண்டுமானால் உனக்குள்ளதை விற்று கேட்பவருக்கு கொடுத்துவிட்டு என்னைப் பின்செல்” என்னும் சுவிசேஷ வாக்கியத்தைக் கேட்டு, தனக்கு இருந்த மிகுதியான செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, காட்டிற்குச் சென்று ஆண்டவருக்கு ஊழியம் செய்தார்.  கெட்ட எண்ணம் கொண்ட பசாசோவெனில், இவருடைய அரிதான புண்ணியங்களைக் கண்டு காய்மகாரப்பட்டு பலவிதத்திலும் இவரைத் துன்புறுத்தியது. பயங்கரமும் அவலட்சணமுமான தோற்றங்கள் எடுத்து இவரை அடிக்கடிப் பயமுறுத்தியது.  பெண்போல் வடிவமெடுத்து இவரைப் பாவத்தில் விழத்தாட்ட முயன்றது. அந்தோணியார் ஜெபத்தாலும் ஒருசந்தியாலும், விசேஷமாய் சிலுவை அடையாளத்தாலும் துஷ்டப் பேயைத் துரத்தினார். இந்த சோதனைகளுக்கு இவர் உட்படாததைக் கண்ட பசாசு, இவரை ஒருநாள் கடுமையாக அடித்துவிட்டு ஓடிப்போனது. அப்போது நமதாண்டவர் இவருக்குத் தரிசனையாகி, இவருக்கு சந்தோஷத்தையும், ஆறுதலையும் அளித்தார். அந்தோணியார் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை கொஞ்சம் அப்பமும், தண்ணீரும் புசித்துவந்தார். ஆட்டுத்தோலை ஆடையாகத் தரித்துக்கொண்டு வெகு நேரம் ஜெபம் செய்வார். பலமுறை சாயங்காலம் தொடங்கி விடியற்காலம் வரை முழந்தாளிலிருந்து ஜெபிப்பார். இவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைக் கண்டுணர்ந்த அநேக மக்கள் இவரது ஆசீர்வாதத்தைப் பெறும்படி இவரிடம் போவார்கள். அர்ச். அந்தோணியார் சகல புண்ணியநெறிகளையும் ஒழுங்காய் அநுசரித்து,  105-ம் வயதில் உயிர் துறந்து மோட்ச சம்பாவனையை அடைந்தார்.         

*யோசனை*

பசாசால் நமக்கு உண்டாகும் சோதனைகளை ஜெபத்தாலும், ஒறுத்தலாலும் ஜெயிப்போமாக.

வியாழன், 9 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 8-ம் தேதி*

*

*St. Apollinaris, B.*
*அர்ச். அப்போலினார் - ஆயர்*
*(கி.பி. 175).* 
ஆதியில் வேதக் கலாபனைக் கொடுமையாய் நடந்தேறி வந்தது.  அப்போலினார் காலத்தில் அரசரும் பிரஜைகளும் உண்மையான கிறீஸ்தவர்களை வேதத்தினிமித்தம் கொடூரமாய் வதைத்துக் கொன்றார்கள். அக்காலத்தில் உரோமை இராயனான மார்க்குஸ் அவ்ரேலியஸ், ஜெர்மன் தேசத்தின்மேல் படையெடுத்துப் போனான். அவனுடைய படைகள் தங்கியிருந்த இடம் மலைகளால் சூழப்பட்டு, பின்னடைவதற்கு வசதியற்ற இடமாய் இருந்தபடியால், அங்கிருந்து தப்பித்துக்கொள்ள வழியில்லாதிருந்தது. மேலும் தண்ணீர் பற்றாக்குறையினாலும் அவனுடைய படைகள் வருந்தித் தவித்தது. அந்நேரத்தில் எதிரிகள் போரைத் தொடங்க, கிறீஸ்தவர்களாயிருந்த இவனுடைய சேனையின் ஒரு பகுதியார் முழந்தாளிலிருந்து ஆண்டவரைப் பார்த்துப் பிரார்த்திக்கவே, இடிமுழக்கத்துடன் ஓரு பெரும் மழை பெய்தது.  மழைத் தண்ணீரால் உரோமையர் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு எதிரிகளை எதிர்த்துப் போரிட்டார்கள்.  இந்த மழையால் எதிரிகளுக்கு மிகுந்த சேதமுண்டாக, அவர்கள் புறங்காட்டி ஓட்டம் பிடித்தார்கள். இந்த அற்புதத்தைக் கண்ட உரோமை இராயன் அதிசயித்து, அந்தக் கிறீஸ்தவ படைக்கு “இடிமுழக்கப் படை” என்று பெயர் கொடுத்தான். அர்ச். அப்போலினார், இராயனுக்கு ஓரு விண்ணப்பம் எழுதி, அதில் கிறீஸ்தவ வேதத்தின் படிப்பினையை விவரித்துக் காட்டினதுடன், கிறீஸ்தவ சேவகர்களுடைய வேண்டுதலால் அவனுடைய கண்ணுக்குமுன் நடந்த அற்புதத்தையும் எடுத்துக்காட்டி, வேத கலாபனையை நிறுத்தும்படி அவனைக் கேட்டுக்கொண்டார். இதனால் இராயனுடைய மனம் இளகி, வேதத்தினிமித்தம் எந்த கிறீஸ்தவர்களையும் கொலை செய்யக்கூடாதென்று ஒரு சட்டத்தை வெளியிட்டான். அர்ச். அப்போலினார் பல நூல்களை வெளியிட்டு, இறுதியில் அர்ச்சியசிஷ்டவராக மரித்தார்.

*யோசனை*

சத்திய வேதத்தைப்பற்றிப் பேச நமக்கு சமயம் வாய்க்கும்போது, வெகு விமரிசையுடன் பேசுவோமாக.

*ஜனவரி மாதம் 7-ம் தேதி*



*St. Lucian, P.M.*
*அர்ச். லூசியான் - குரு,வேதசாட்சி*
*(கி.பி. 312).* 

இவர் சிரியா தேசத்தில் பிறந்தார். இவர் வாலிபனாயிருந்தபோதே இவருடைய தாயும் தந்தையும் இறந்துபோனபடியால், தனக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு,         புண்ணியவாளரான மக்காரியுஸ் என்பவருக்கு சீஷனாகி, வேதாகமங்களை வாசிப்பதிலும் புண்ணியச் செயல்களைச் செய்வதிலும் காலத்தைச் செலவிட்டார்.  இவர் சாஸ்திரங்களைப் படித்தபின், குருப்பட்டம் பெற்று வேதம் போதித்துவந்தார்.  அக்காலத்தில் எழுந்த வேத கலகத்தில்             அர்ச். லூசியான் பிடிபட்டு, சிறைப்படுத்தப்பட்டு, வெகு கொடூரமாய் உபாதிக்கப்பட்டார். அநேக நாட்களாய் இவருக்கு உணவு கொடுக்கப்படாததால், இவர் இளைத்து, களைத்துக் குற்றுயிராய் இருந்தார். அந்நேரத்தில், பசாசுக்குப் படைக்கப்பட்ட பண்டங்களை இவருக்குக் கொடுக்க, இவர் அவைகளை உண்ணாமல் ஒதுக்கிவைத்தார். மேலும் இவர் சங்கிலியால் கட்டப்பட்டு சிறையில் இருந்தபடியால், கிறீஸ்தவர்கள் கொண்டுவந்த அப்பத்தையும் இரசத்தையும் தமது நெஞ்சின்மேல் வைத்து தேவ வசீகரம் செய்து கிறீஸ்தவர்களுக்கு கொடுத்துவந்தார்.  மறுபடியும் இவர் நடுவனுக்குமுன் நிறுத்தப்பட்டு, வேதத்தை மறுதலிக்கும்படி பயமுறுத்தி உபாதிக்கப்பட்டபோது இவர் எதற்கும் அஞ்சாமல் தாம் கிறீஸ்தவன் என்று தைரியமாக சாட்சி கூறினார். இவரை சித்திரவதை செய்துக் கொலைசெய்யும்படி நடுவன் தீர்ப்பிட்டான். அதன்படியே சேவகர் இவரை வதைத்துக் கொல்லும்போது, தான் கிறீஸ்தவன் என்று சொல்லிக்கொண்டே உயிர்விட்டு வேதசாட்சி முடி பெற்றார்.

*யோசனை*

நமது சத்திய வேதத்தை சாக்குபோக்குச் சொல்லி ஒருபோதும் மறுதலிக்காதிருப்போமாக.

திங்கள், 6 ஜனவரி, 2020

திருச்சபை வழிபாட்டு நிறங்கள்



திவ்விய பலி பூசையின் பொது பல்வேறு நிறங்களில் பூசை ஆயத்தங்களை பயன்படுத்துவார்கள். அந்த நிறங்கள் திருச்சபையின் ஒவ்வொரு காலங்களை அல்லது திருவிழாக்களை குறிக்கும்.

1. வெள்ளை

2. சிகப்பு

3. பச்சை

4.  ஊதா

5. கருப்பு




*ஜனவரி மாதம் 6-ம் தேதி*

*The Epiphany of our Lord*
*கர்த்தர் மூன்று இராஜாக்களுக்குத்* 
*தம்மைக் காட்டியத் திருநாள்.* 



நமது கர்த்தராகிய சேசு கிறீஸ்துநாதர் பிறந்தபோது நடந்த பல அற்புத அதிசயங்களை தீர்க்கதரிசிகள் அவர் பிறப்பதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தார்கள். அவைகளுள் ஒன்று புது நட்சத்திரம். கர்த்தர் பிறந்தபோது அற்புதமாய்க் காணப்பட்ட புது நட்சத்திரத்தை சகல மனிதரும் கண்டபோதிலும், சோதிட சாஸ்திரிகளான மூன்று இராஜாக்கள் மாத்திரம், பிறந்த உலக இரட்சகரை உடனே சந்திக்கத் தீர்மானித்தார்கள். இவர்கள் இந்த நெடும் பிரயாணத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் அவைகளைப் பொருட்படுத்தாமல், நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து பெத்லகேம் என்னும் ஊருக்குச் சென்று, சிறு குடிசையில் சேசு பாலனைக் கண்டு மகிழ்ந்தார்கள். அங்கு காணப்பட்ட வறுமையையும், தரித்திரத்தையும் பார்த்து சற்றும் மனம் சோர்ந்து சந்தேகியாமல் அந்த பாலனே பரலோக பூலோக இராஜாவென்றும், மெய்யான தேவனென்றும் நம்பி விசுவசித்து, பொன், தூபம், மீறை முதலியவைகளை அவர் பாதத்தில் சமர்ப்பித்து அவரை ஆராதித்தார்கள்.  கர்த்தர் மோட்ச ஆரோகணமானபின் அப்போஸ்தலரான அர்ச். தோமையாரால் இம்மூவரும் ஞானஸ்நானமும், பிறகு ஆயர் பட்டமும் பெற்று, வேதத்தைப் போதித்து, வேதத்திற்காக இரத்தம் சிந்தி வேதசாட்சி முடி பெற்றார்கள்.

*யோசனை*

நமக்கு ஆண்டவர் பலவிதத்திலும் அருளும் ஞான ஒளியில் பிரமாணிக்கமாய் நடப்போமாக.


ஞாயிறு, 5 ஜனவரி, 2020

*ஜனவரி மாதம் 5-ம் தேதி*



*St. Simeon Stylites, C.*
*தூணில் நின்று தவம் புரிந்த* 
*அர்ச். சிமெயோன் - துதியர்.* 

இவர் சிறு வயதில் ஆடு, மாடுகளை மேய்த்துவந்தார்.  தமது 13-ம் வயதில், இவர் நமது கர்த்தரின் மலைப் பிரசங்கத்தைக் கேட்டு, அவைகளின்படி நடக்க
விருப்பம்கொண்டு, இடைவிடாமல் ஜெபமும் தியானமும் செய்து கண்ணீர் சிந்தி அருந் தவம் புரியத் தொடங்கினார். இதில் திருப்திகொள்ளாமல் ஒரு மலையின் மேல் ஒதுங்கி கடின தவம் செய்துவந்தார். இவருடைய பிரசங்கத்தைக் கேட்க ஏராளமான ஜனங்கள் அவ்விடம் சென்று இவருடையப் புண்ணியங்களையும் புதுமைகளையும் கண்டு அதிசயப்பட்டார்கள். இவர் மேலும் கடின தவம் புரிய தீர்மானித்து 60 அடி உயரமுள்ள தூண் ஒன்றின்மேல் ஏறித் தவம் புரிந்துவந்தார். ஆட்டுத் தோலை ஆடையாக உடுத்தி, கடுமையாக ஒருசந்தி இருப்பார். ஒரு நாளைக்கு அநேகத் தடவை முழந்தாற்படியிட்டு ஆண்டவரை ஆராதிப்பார். ஒவ்வொரு நாளும் இருமுறை தூணைச் சுற்றிக் கூடியிருக்கும் திரளான ஜனங்களுக்குப் பிரசங்கம் செய்வார். இவருடையப் புண்ணியச் செயல்களைப் பரிசோதிக்கும் எண்ணத்துடன் அருகாமையில் இருந்த மேற்றிராணிமார் சிலர், இவரைத் தூணிலிருந்து இறங்கி வரும்படி கட்டளையிட்டார்கள். உடனே சிமெயோன் இறங்க முயற்சிப்பதை அவர்கள் கண்டு, இவர் தேவசித்தப் பிரகாரம் நடக்கிறாரென்று அறிந்து, இவரைத் தூணிலேயே இருக்கும்படி சொன்னார்கள். இவர் செய்துவந்த கடின தபசையும் பல புதுமைகளையும் கண்ட அரசர்கள் இவரைச் சந்தித்து, இவர் ஆலோசனையைக் கேட்டுவந்தனர். இவர் ஒருநாள் தூணில் அசைவற்று இருந்ததைக் கண்ட சிலர், அதன்மேல் ஏறிப் பார்த்தபோது இவர் மரித்திருப்பதைக் கண்டார்கள். அர்ச். சிமெயோன் தமது 69-ம் வயதில் இவ்வாறு மரித்து வெகு ஆடம்பரமாக அடக்கம் செய்யப்பட்டார்.

*யோசனை*

நாம் கடினத் தவம் செய்யாவிடினும் நமது ஐம்புலன்களையும், உணர்ச்சிகளையும் அடக்கி ஒறுக்கப் பழகுவோமாக.

சனி, 4 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 4-ம் தேதி*

*ஜனவரி மாதம் 4-ம் தேதி*

*St. Titus, B.*
*அர்ச். தீத்துஸ் - ஆயர்*. 
அஞ்ஞானியாயிருந்த இவர் அர்ச்.சின்னப்பரால் ஞானஸ்நானம் பெற்று அவருக்கு சீஷனாகி அவர் வேதம் போதிக்கச் சென்ற ஊர்களுக்கெல்லாம் அவருடனே சென்றார். பிறகு இவர் விசுவாசிகளை விசாரித்து வரும்படி அர்ச். சின்னப்பரால் பல ஊர்களுக்கு அனுப்பப்பட்டார். வேதத்தில் தத்தளித்து துர்மாதிரிகையாய் வாழ்ந்த கொரிந்தியரை திருத்தும் பொருட்டு தீத்துஸ்  அவர்களிடம் அனுப்பப்பட்டபோது, அவர் அவர்களுக்கு அன்போடு புத்திமதி சொல்லி அவர்களை நல்வழிக்கு கொண்டுவந்தார். இந்த நல்ல செய்தியைக் கேள்விப்பட்ட அர்ச். சின்னப்பர் சந்தோஷத்தால் பூரித்து ஆறுதல் அடைந்தார்.  தீத்துஸ் அர்ச். சின்னப்பரின் உத்தரவின்படி ஆங்காங்கு தர்மம் எடுத்து ஜெருசலேமிலுள்ள ஏழைகளுக்கு அனுப்பிவந்தார். சில காலத்துக்குப்பின் அர்ச். சின்னப்பர் தீத்துசுக்கு ஆயர் பட்டம் கொடுத்து கிரேத் என்னும் தீவில் வேதம் போதிக்கும்படி அனுப்பினார். ஆயர்களின் மேலான கடமைகளைக் குறித்தும், விசுவாசிகளை நடத்திச்செல்ல வேண்டிய ஒழுங்கு திட்டங்களைக் குறித்தும் ஒரு நிருபத்தை அர்ச். சின்னப்பர் எழுதி இவருக்கு அனுப்பினார். தம் குருவும் ஆசிரியருமான அர்ச். சின்னப்பர் போதனைக்குத் தீத்துஸ் இணங்கி புண்ணிய வழியில் நடந்து, மிக்க ஊக்கத்துடன் வேதம் போதித்து, நல்ல மரணமடைந்து, மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டார். 

*யோசனை*

நாம் செய்யும் தவறுகளை அறியும் நமது ஞானப் போதகர்கள், நமக்கு அறிவுரை கூறும்போது, நமது தவறுகளை விட்டொழித்து அவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்.

வெள்ளி, 3 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 3-ம் தேதி


*St. Genovieve, V.*
*அர்ச். ஜெனோவியேவ் அம்மாள் - கன்னிகை*

*(கி.பி. 422).* 


அர்ச். ஜெனோவியேவ் அம்மாள் 422-ம் வருஷம் பிரான்சு தேசத்தில் பிறந்தாள். அவள் ஏழு வயதில் தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தாள். தன் 15-ம் வயதில் கன்னியர் உடுப்பு தரித்துக்கொண்டாள்.  நாளுக்கு நாள் புண்ணியத்தில் வளர்ந்து 50 வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சிறிது ரொட்டியும், பருப்பும் அருந்திவந்தாள்.  மயிர் ஒட்டியாணம் தரித்துக் கடுமையாக தவம் புரிவாள். மிகவும் பக்தி உருக்கத்துடன் இடைவிடாமல் ஜெபத் தியானம் செய்வாள். பிறர் சிநேகத்தை மனதில் கொண்டு பெரிய பட்டணங்களுக்குப் பயணமாய் போய் அநேக புதுமைகளைச் செய்து, தீர்க்கதரிசனங்களைக் கூறி, எல்லோராலும் வெகுவாய் மதிக்கப்பட்டாள். இந்தப் புண்ணியவதியின் மீது காய்மகாரம் கொண்டவர்கள் இவளைப் பலவிதத்திலும் துன்பப்படுத்தினபோதிலும், இந்த அர்ச்சியசிஷ்டவள் சற்றும் கலங்காமல் தன் நம்பிக்கையை ஆண்டவர் மீது வைத்து, ஜெப தபத்தால தன் பகைவர்களை வென்றாள். அச்சமயம் அத்தில்லா என்னும் கொடுங்கோலன் பாரிஸ் நகரைக் கொள்ளையடிக்க வந்தபோது அவள் உரைத்த தீர்க்கதரிசனத்தின்படி அந்தப் பெரும் பொல்லாப்பு நீங்கியது. ஜெனோவியேவ் அம்மாள் தன் 89-ம் வயதில் அர்ச்சியசிஷ்டவளாக மரித்தாள்.

*யோசனை*

நாமும் இந்த அர்ச்சியசிஷ்டவளைக் கண்டுபாவித்து, துன்ப துரிதத்தாலும் பொல்லாதவர்களுடைய தூற்றுதலாலும் மனம் சோர்ந்துபோகாமலும் உலக உதவியை விரும்பாமலும் ஜெபத்தால் தேவ உதவியை மன்றாடுவோமாக.

வியாழன், 2 ஜனவரி, 2020

ஜனவரி மாதம் 2-ம் தேதி

*ஜனவரி மாதம் 2-ம் தேதி*
*St.Macarius, A.*
*அர்ச்.மக்காரியுஸ் - மடாதிபதி*
*(கி.பி.394)*

அலெக்சாந்திரியா என்னும் பட்டணத்தில் பிறந்து, பழம் வியாபாரம் செய்து வந்த மக்காரியுஸ் உலக வாழ்வில் கசப்புற்று சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்ய தீர்மாணித்து, நாட்டை விட்டு காட்டுக்குச் சென்று அவ்விடத்தில் கடும் ஜெப தபங்களை நடத்தி வந்தார். அவருக்கு சீஷர்களான அநேகர் அக்காட்டில் சிறு குடிசைகளில் வசித்து, தங்கள் சிரேஷ்டரான மக்காரியுஸின் தர்ம செயல்களைப் பின்பற்றி, புண்ணியவாளராய் வாழ்ந்தார்கள்.

மக்காரியுஸ் இடைவிடாமல் ஜெபம் செய்வார். கூடைகளை முடைவார்.  கனி, கிழங்கு, கீரை முதலியவற்றை ஒரு நாளைக்கு ஒரு தடைவ மாத்திரம் புசிப்பார். பல முறை இரவில் நித்திரை செய்யாமல் சங்கீதங்களைப் பாடி ஜெபிப்பார். ஒருநாள் இவருக்கு அனுப்பப்பட்ட ஒரு திராட்சைக் குழையைப் புசிக்காமல் தமது சன்னியாசிகளுக்கு அனுப்பினார். அவர்களும் அதை புசிக்காமல் மக்காரியுசுக்கு அனுப்பி விட்டார்கள். அவரும் தமது சன்னியாசிகள் மட்டசனம் என்னும் புண்ணியத்தைக் கண்டிப்பாய் அனுசரிப்பதை அறிந்து சந்தோஷமடைந்தார். வனவாசிகளுக்குள் ஒருவர் தான் முடைந்த பாய் கூடைகளை விற்றதினால் வந்த பணத்தை தம்மிடம் வைத்துக்கொண்டு இறந்ததினால், அப்பணத்தை அவருடைய பிரேதக் குழியில் அவரோடு போட்டுப் புதைக்கும்படி அர்ச்.மக்காரியுஸ் கட்டளையிட்டார். இவர் இவ்வளவு கடின தவம் செய்துவந்தும், இவருக்குப் பல சோதனைகளுண்டாக, அவைகளை ஜெபத்தால் ஜெயித்தார். ஆரிய பதிதர் வயோதிகரான அர்ச்.மக்காரியுஸை பல விதத்தில் துன்பப்படுத்தினார்கள். இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து கி.பி.394-ம் வருடம் மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டார்.

*யோசனை*

நாமும் இந்தப் பரிசுத்த வனவாசிகளைப் பின்பற்றி போசனப்பிரியத்துக்கு இடம் கொடாமல், மட்டசனமென்னும் புண்ணியத்தை கடைபிடிப்போமாக.

ஜனவரி மாதம் 1-ம் தேதி* *The Circumcision of Our Lord*. *விருத்தசேதனத் திருநாள்

*LIVES OF SAINTS*
*அர்ச்சியசிஷ்டவர்களின் சரித்திரம்*

ஒவ்வொரு தேதியிலும் வாசிக்க வேண்டிய அந்தந்த  அர்ச்சியசிஷ்டவரின் சரித்திரம் சுருக்கமாய் கொடுக்கப்பட்டிருப்பதின் காரணம் யாதெனில், பலர் தங்களுக்கு வாசிக்கப் போதுமான நேரமில்லையென்று சொல்லி அதை வாசியாமல் விட்டுவிடக்கூடாதென்பதற்காகவே.  நாலைந்து நிமிடங்கூட கிடைக்கப் பெறாமற் போகிறவர்கள் யாருமிரார். மேலும் அந்தந்த தேதியில் குறிக்கப்பட்டிருக்கின்ற யோசனையை விசுவாசிகள் தங்கள் மனதில் வைத்து, அதை அந்தந்த நாளில் அப்போதைக்கப்போது சிந்திப்பார்களேயானால், பெரிதும் ஞானப்பிரயோசனமடைவார்கள்.

*ஜனவரி மாதம் 1-ம் தேதி*
*The Circumcision of Our Lord*
*விருத்தசேதனத் திருநாள்*
  
*திவ்விய பாலகனுக்கு விருத்தசேதன சடங்கு*
*நிறைவேற்றப்படுகிறது.*

விருத்தசேதனமானது அபிரகாமுடைய சந்ததியை மற்ற ஜனங்களினின்று பிரித்துக் காட்டும் அடையாளச் சடங்கு.  மோசஸ் பத்துக் கற்பனையைப் பெறுவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே விருத்தசேதனச் சடங்கு சர்வேசுவரனால் ஏற்படுத்தப்பட்டது.  இதை யூதர்கள் வெகு கண்டிப்பாய் அநுசரித்து வந்தார்கள்.  இச் சடங்கை நிறைவேற்றும் போது குழந்தையின் சரீரத்தில் கொஞ்சம் சதை அறுக்கப்படும்.  நமது திவ்விய
கர்த்தர் இச் சடங்கை அநுசரிக்க கடமைப்படாவிடினும் தாம் எடுத்த சரீரம் மெய்யான மனித சரீரமென்று காட்டி, சகலரும் தேவ கட்டளைக்கு அமைந்து நடக்க வேண்டுமென்று நமக்கு படிப்பிக்கும் பொருட்டு, அவர் தமது மாசற்ற சரீரத்தில் காயப்பட்டு இரத்தம் சிந்த சித்தமானார்.  நாமும் நமதாண்டவருடைய திவ்விய மாதிரியைக் கண்டுபாவித்து, வேத கற்பனையையும், திருச்சபைக் கட்டளையையும் பக்தியோடு அநுசரிப்போமாக.  மேலும் நமது இருதயத்தில் கிளம்பும் ஆசாபாசங்களையும், ஒழுங்கற்ற நாட்டங்களை ஒறுத்தலாகிய கத்தியால் அறுத்துக் காயப்படுத்தி, ஞானவிதமாக இரத்தம் சிந்தப் பழக வேண்டும்.  கண், காது, வாய் முதலிய ஐம்புலன்களை அடக்கி ஒறுப்பவன் பாவத்திற்கு உடன்பட மாட்டான். ஆகையால் இந்த ஒறுத்தல் முயற்சியை ஜெபத்தால் அடைவோமாக.

இந்தப் புது வருடத் துவக்கத்தில் நமது பழைய பாவ நடத்தையை விட்டொழித்து, துர்ப் பழக்கங்களை மாற்றிவிட்டு, புது வாழ்க்கை வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளக்கடவோம்.

*யோசனை*

நாம் இந்தப் புதுவருடத்தில் எந்தெந்தப் பாவத்தை விட்டொழித்து, எந்தெந்தப் புண்ணியத்தைச் செய்ய தீர்மாணித்தோமோ, அதை இன்றே செய்ய முயற்சிப்போமாக.

செவ்வாய், 24 டிசம்பர், 2019

அர்ச், அந்தோனியார் வணக்கமாதம் பதிமூன்றாம் நாள்



அர்ச். அந்தோனியார் பூர்ஜ் பட்டணத்திலிருந்த காலத்தில் அவ்விடத்தில் பேர்போன அவிசுவாசியொருவனிருந்தாள். அவனுடைய பெயர் கய்யார். (Guyard) அவன் கத்தோலிக்கருடைய விசுவாச சத்தியங்களெல்லாம் மறுத்து அநேகருக்குத் தூர்மாதிரிகை காட்டிவந்தான். ஒருநாள் அந்தோனியாருடன் வேத சத்தியங்களைக் குறித்து வெகுநேரம் தர்க்கமாடன்பிறகு தன் தப்பறைகளைக் கொஞ்சம் கண்டுபிடித்தான். ஆனாலும் தேவநற்கருணையில் சேசுநாதர் சுவாமி மெய்யாகவே எழுந்தருளியிருப்பதைப் பற்றி அவன் சந்தேகமுள்ளவனாய், ஒருதாள் அர்ச்சியசிஷ்டவரை நோக்கி அவன் சொன்னதாவது: நீர் ஏதாவது ஒரு பிரசித்தமான அடையாளத்தைக் கொண்டு நீர் போதிப்பதெல்லாம் உண்மைதானென்று ருசுப்படுத்தினால் நானும் என்னைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் உம்முடைய வேதத்தை அனுசரிக்க ஏற்றுக்கொள்ளுகிறோம். என்னிடம் ஒரு கோவேறு கழுதையிருக்கின்றது. மூன்றுநாள் வரைக்கும் நான் அதற்குத் தீனி ஒன்றும் வைக்காமல் சகல சனங்களுக்கும் முன்பாக விஸ்தாரமான ஸ்தலத்துக்கு அதையோட்டிவந்து, கொள்ளை அதற்கு முன்பாக வைக்கிறேன். அதே சமயத்கில் சேசுநாதருடைய சரீரமென்று நீர் 'சொல்லுகிற தேவ நற்கருணையைக் கொண்டுவந்து அதற்குக் காண்பியும். அந்த மிருகம் கொள்ளைச் சட்டைசெய்யாமல் தன் கால்களை மடித்துத் தேவநற்கருணைக்கு முன்பாகச் வணக்கம் செய்தால் நான் உடனே கத்தோலிக்கு வேதத்திற்கு சேருகிறேன் என்றான். |

Redmi Note 4 Cover
பக்தி விசுவாசம் நிறைந்த அர்ச்சியசிஷ்டவர் அதற்குச் சம்மதித்துப் போய் அந்த மூன்று நாளும் செபத்திலும், தவத்திலும் செலவழித்தார். குறிக்கப்பட்ட நேரத்தில் ஏற்கனவே திரளான பிரிவினைக்காரரும் மற்றவர்களும் கூடியிருந்த ஸ்தலத்துக்குத் தேவ நற்கருணை வைத்திருந்த கதிர்ப்பாத்திரத்தை எடுத்து வந்தார். அதே தருணத்தில் பட்டினியால் மெலிந்து இளைத்துப்போயிருந்த கோவேறு கழுதைக்கு முன்பாகக் கொள் இருந்த தொட்டியைக் சுய்யாரென்பவன் வைத்தான். அந்தோனியார் கழுதையைப் பார்த்து: நான் அபாத்திரனானாலும் என் கையிலிருக்கிற உன் சிருஷ்டிகருடைய நாமத்தால், புத்தியில்லாத மிருகமே. நான் உனக்குக் கட்டளையிடுகிற தென்னவென்றால், எங்கள் பீடங்களின் மேற் பலியிடப்படும் திவ்விய செம்மறியாட்டுக் குட்டிக்குச் சிருஷ்டிப்புக்கள் யாவும் கீழ்ப்பட்டிருக்கின்றன
வென்று அவிசுவாசிகள் கண்டுபிடிக்கத்தக்கதாக, நீ அவருக்கு முன்பாக உடனே வந்து வணக்கம் பண்ணக்கடவாய் என்றார். அந்த க்ஷணத்திலே தானே கோவேறு கழுதை கொள்ளைத் தொடாமல் தேவதற்கருணைக்கு முன்பாக வந்து தன் கால்களை மடித்து வணக்கம் செய்கிற பாவனையாக இருந்தது. கய்யாரும் அவனைச் சேர்ந்தவர்களும் தங்கள் அபத்த மார்க்கத்தை மிட்டு வேறு அநேகரோடு மனந் திரும்பினார்கள். இந்தப் புதுமை நடந்த போதுதான் "பிரிவினைக்காரருடைய சம்மட்டி' என்கிற மகிமையான பெயர் அந்தோனியாருக்கு ஏற்பட்டதென்று அநேக சொல்லு கிறார்கள். இந்தப் புதுமை நடந்த விடத்திலே சேம் பியேர் லெ கய்யார் (St.Pierre Is Guyard) என்ற கோயில் கட்டப் பட்டிருக்கிறது. திரளான பாவிகளை, பிரிவினைக்காரரை மனந்திருப்ப அர்ச், அந்தோனியார் முன் சொன்ன பிரகாரம் அநேகாநேகம் புதுமைகளைச் செய்து வந்தார்.
அர்ச். அந்தோனியார் பிரகங்கம் செய்வதற்குமுன், தன்னைத்தானே தாழ்த்துவார். வேண்டிக்கொள்ளுவார், தன் சரீரத்தை ஒறுத்துக் கடினமாய்த் தண்டிப்பார். பிறகு ஆண்டவருடைய பேரால் பிரசங்கம் செய்வார். மோசேஸ் என்பவர் சர்வேசுரனுடைய பலத்தால் தமது கோலைக் கொண்டு கற்பாறையில் அடிக்கவே, நீருற்றுண்டானதுபோல, அர்ச். அந்தோனியாரும் ஆண்டவருடைய வல்லமையைக் கொண்டு பிரிவிளைக்காரரை மளந்திருப்ப அநேகமான ஆச்சரியங்களைச் செய்து வந்தார். பூர்ஜ் நகரத்தில் நடந்த புதுமையைக்கொண்டு தேவநற்கருணையின் மட்டில் அந்தோனியாருக்குண்டான பக்தி விசுவாச நம்பிக்கை எவ்வளவென்று நாம் அறிந்து கொள்ளலாம். நம் இருதயத்திலும் அவர் அந்தப் பக்தி எழும்பும்படி அவரை நோக்கி மன்றாடக்கடவோம்.

செபம்
மகா வணக்கத்துக்குரிய அர்ச், அந்தோனியாரே, பிரிவினைக்காருடைய அவிசுவாசத்தைப் போக்க, தேவ நற்கருணையில் சேசுநாதசுவாமி மெய்யாகவே எழுந்தருளி யிருக்கிறதை ஒரு மிருகத்தைக் கொண்டு அதை வணங்கச் செய்து ருசுப்படுத்தின நீர், உயிருள்ள விசுவாசத்தோடு அந்தத் திவ்விய நற்கருணையை நாங்கள் ஆராதிக்கக் கிருபை அடைந்தருளும். - ஆமென் .

நற்கிரியை: திவ்விய நற்கருணையைச் சந்திக்கிறது.
மனவல்லயச் செபம்: தேவ சிநேகத்தால் பற்றி எரிந்த அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செவ்வாய், 26 நவம்பர், 2019

ஆண்டவர் உங்களை அன்பு செய்கிறார்.

ஆண்டவர்  உங்களை அன்பு செய்கிறார்.

சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால் தம்முடைய  ஏக சுதனைத் தந்து, அவர்மேல் விசுவாசமாயிருக்கிற எவனும் கெட்டுப்     போகாமல் நித்திய ஜீவனை அடையும் படி அருளியிருக்கிறார். (1 அரு. 4:9;  உரோ. 5:8.)
உலகத்துக்கு ஆக்கினைத் தீர்வையிடும்படி சர்வேசுரன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், உலகம் அவராலே இரட்சிக்கப்படு வதற்காகவே அவரை அனுப்பினார்.

நாம் அனைவரும் நமது கெட்ட சிந்தனைகளாலும் செயல்களாலும் பாவம் செய்கிறோம். அந்த பாவங்கள் நம்மை ஆண்டவரிடம் இருந்து பிரித்து விடுகிறது.

 நம்முடைய பாவங்களுக்காக மரிக்க சர்வேசுரன் தமது ஒரே மகனை இந்த உலகத்திற்கு அனுப்பினார்.

சேசுநாதர் பரிசுத்த தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆள். அவர் பாவமில்லாத வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் நம்முடைய பாவங்களை கழுவ அவர் ;சிலுவை மரத்தில் மரித்தார். "நாம் இன்னும் பாவிகளாயிருக்கும்போதே, குறிக்கப்பட்ட காலத் தில் நமக்காகக் கிறீஸ்துநாதர் மரித்த தினாலே சர்வேசுரன் நமதுபேரில் வைத்திருக்கிற அன்பை விளங்கப் பண்ணுகிறார்." (Rom.5:8)
 சேசுநாதர் மரித்த மூன்றாம் நாள் உயிர்த்து, நாற்பதாம் நாள் பரலோகத்துக்கு ஆரோபணமாகி பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது  பக்கத்தில் இருக்கிறார். அவர்களே நமக்கு நித்திய ஜீவனை தருபவர்கள். 

 சேசுநாதர் திருவுளம் பற்றினத்தாவது :  "வழியும், சத்தியமும், ஜீவனும் நானே. என் வழியாய் அல்லாதே பிதாவினிடத்தில் சேருகிறவன் ஒருவனுமில்லை"( Jn . 14 : 6)

சேசுநாதர் சுவாமி நம்மை எல்லாம் அழைக்கிறார். நாம் அவரது அழைப்பை ஏற்று என்றும் அவரது பிள்ளைகளாக இருக்க வேண்டும்
  
யாரார் அவரை ஏற்றுக்கொண்டு, அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களானார்களோ, அவர்கள் தேவ புத்திரராகும்படி அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார். (Jn . 1: 12)