Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 20 ஜனவரி, 2024

தேவதிரவிய அநுமானங்கள் II - உறுதிபூசுதல் (Confirmation)

உறுதிபூசுதல் 

நன்றி: கத்தோலிக்கக் களஞ்சியம், 
திருச்சி, 1941 




சாதாரணமாய் உறுதிபூசுதல் கொடுப்பதற்கு உரிமை உள்ளவர் மேற்றிராணியாரே, விசேஷ அனுமதியின் பேரில் மாத்திரம் குருக்கள் உறுதிபூசுதல் கொடுக்கலாம் (தி. ச. 772). உறுதிபூசுதல் கொடுக்க வேண்டிய மேற்றிராணியார், அமிஸ், ஸ்தோலா, வெள்ளைக்காப்பா இம்மூன்றும் அணித்து கொண்டு பீடத்தின் நடுவில் ஓர் ஆசனத்திலே அமர்ந்து கரங்களைக் கழுவின பின்னர், எழுந்து, ஜனங்கள் பக்கமாய் நின்று, உரத்த சத்தமாய், "திவ்விய இஸ்பிரீத்துசாத்துவானவர் உங்கள் பேரில் இறங்கி வருவாராக; அதி உன்னதமானவரின் வல்லபம் பாவத் தினின்று உங்களைப் பாதுகாப்பதாக" என்று சொல்கிறார். பிறகு, உறுதிபூசுதல் பெறவேண்டியவர்களை நோக்கிச் சிலுவை அடையாளம் வரைந்து அவர்கள் மேல் தமது சுரங்களை விரித்து, மன்றாடுவதாவது: "வல்லமுள்ள நித்திய சர்வேசுரா. உமது அடியார் களாகிய இவர்களை தண்ணீராலும் இஸ்பிரித்துசாந்துவினாலும் புதுப்பித்தருளினீரே, இவர்களுடைய பாவங்களை யெல்லாம் மன்னித்து கொண்டீரே; இவர்கள் மேல் பரலோகத்திலிருந்து தேற்று கிறவராகிய ஏழு வரங்களைக் கொடுக்கும் உமது இஸ்பிரீத்துவை அனுப்பியருளும், ஆமென். ஞானம், அறிவு என்பனவகளின் இஸ்பிரித்துவை, ஆமென். விமரிசையும் திடனுமுள்ள இஸ்பிரித் துவை, ஆமென். புத்தி பக்திக்குரிய இஸ்பிரித்துவை, ஆமென். உமது பயத்தின் இஸ்பிரித்துவால் அவர்களை நிரப்பி, நித்திய சீவியத்தை அடையும்படி கிறீஸ்துநாதருடைய சிலுவையால் அவர்களை வரந்தருளும்."


மேலே குறிப்பிட்டவைகளை மேற்றிராணியார் சொல்லுகையில், உறுதிபூசுதல் பெறவேண்டியவர்கள் தங்கள் பெயர் எழுதியிருக்கிற சீட்டைக் கையில் வைத்துகொண்டு இரு வரிசையாய் கோவில் நடுவில் அல்லது கிராதியருகில், முழந்தாளிலிருந்து, தலைகுனிந்து, மேற்றிராணியாரோடு ஒன்றித்து, தங்கள்பேரில் திவ்விய இஸ்பிரித்துசாந்துவானவர் தமது ஏழு வரங்களுடன் எழுந்தருளி வரும்படியாக மன்றாட வேண்டும். முன் கூறிய செபம் முடிந்ததும், அவர்கள் ஒவ்வொருவராக சீட்டை உதவி செய்யுங் குருவானவரிடம் கொடுத்து விட்டு, நிமிர்ந்து நெற்றியைக் காட்ட வேண்டும். அப்போது, மேற்றிராணியார் தமது வலது கரத்துப் பெரு-விரலைப் பரிமளதைலத்தில் தோய்த்து, நெற்றியில் சிலுவை அடையாளமாகப் பூசி. "(பெயர் சொல்லி) நான் உன்னை சிலுவை அடையானத்தால் குறியிட்டு, பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்துசாந்துவுடையவும் நாமத்தினாலே இரட்சண்ய தைலத்தால் உன்னை உறுதிப்படுத்துகிறேன்” என்று சொல்லுவார். “உனக்குச் சமாதானம் உண்டாவதாக" என்று சொல்லிக்கொண்டு, கன்னத்தில், இலேசாய்த் தட்டுவார். உதவிபுரியும் குருக்களில் ஒருவர், பஞ்சால் தைலத்தைத் துடைத்து விடுவார். உறுதிபூசுதல் பெறவேண்டியவர்களுக் கெல்லாம் இவ்விதம் செய்துமுடித்ததும், மேற்றிராணியார் முன்போல் தமது ஆசனத்தில் அமர்ந்து தமது சுரங்களைக் கழுவுவார். அச்சமயத்தில், உதவிபுரியும் குருக்கள் பின்வரும் வாக்கியத்தைப் பாடுவார்கள் அல்லது வாசிப்பார்கள்: “சர்வேசுரா சுவாமி, ஜெருசலேமிலுள்ள உமது பரிசுத்த ஆலயத்திலிருந்து, எங்களிடமாய்ச் செய்தருளின இக்கிரிகையை உறுதிப்படுத்தியருளும்." 

கடைசியாய், மேற்றிராணியார் பின்வரும் செபத்தைச் சொல்லி, ஆசீர்வாதம் அளிப்பார். "ஆண்டவரே, எங்களுக்கு உமது இரக்கத்தைக் காண்பித்து, உமது இரட்சண்யத்தைத் தந்தருளும்.... சர்வேசுரா சுவாமி, உமது அப்போஸ்தலர் களுக்கு திவ்விய இஸ்பிரீத்துசாந்துவை அளித்து, அவர்களாலும் அவர்களைப் பின் தொடர்ந்து வருகிறவர்களாலும் மற்ற விசுவாசிகளுக்கு அவர் அளிக்கப்பட வேண்டுமென்று சித்தமாயிருக்கிறீரே; எங்கள் தாழ்மையின் செயலைத் தயவாய்க் கண்ணோக்கி, நாங்கள் யார் யாருடைய நெற்றிகளில் பரிசுத்த தைலத்தை பூசி சிலுவை அடையாளம் வரைந்திருக்கிறோமோ. அவர்கள்மேல் அந்த இஸ்பிரீத்துவானவர் இறங்கி வந்து, அவர்கள் இருதயங்களைத் தமது மகிமையின் ஆலயமாக்கியருளும்படி அநுக்கிரகித்தருளும்... ஆண்டவருக்குச் செவிகொடுக்கிற ஒவ்வொருவனும் இவ்விதமே ஆசீர்வதிக்கப்படுவான்."  "ஆண்டவர் சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதித்து நீங்கள் உங்கள் சீவிய கால மெல்லாம் ஜெருசலேமின் நல்ல காரியங்களைக் கண்டு நித்திய சீவியத்தை அடைவீர்களாக ஆமென்.” ஆசிர்வாதம் அளித்தானபின், உறுதிபூசுதல் பெற்றவர்களெல்லோரும் ஒன்று சேர்ந்து உரத்த சத்தமாய், விசுவாச மந்திரம், பரலோக மந்திரம், அருள்நிறை மந்திரம் சொல்வார்கள். 

உறுதிபூசுதல் ஏழு தேவதிரவிய அநுமானங்களில் ஒன்று. அது நமதாண்டவர் தாமே ஏற்படுத்தினது என்று தவறாத திருச்சபை போதிக்கிறது. நமது திவ்விய இரட்சகர் அதை எச்சமயத்தில் ஏற்படுத்தினார் என்பதைப்பற்றி சுவிசேஷங் களில் யாதொரு வார்த்தையுங் கிடையாது; ஆயினும், ஆண்டவர் உயிர்த்தபின், இவ்வுலகில் இருந்த நாற்பது நாட்களில்  காலத்தில்தான் அதை ஏற்படுத்தினார் என்பது வேதபாரகரின் பொதுவான அபிப்பிராயம், சுவிசேஷங்களில் உறுதி பூசுதலைப்பற்றிச் சொல்லாவிடினும், அப். நடபடி ஆகமம் எட்டாவது அதிகாரத்தில் இதைப்பற்றிக் கூறியிருக்கிறது. அர்ச். பிலிப்பு (தியாக்கோன்) சமாரித்தனரிற் சிலரை மனந்திருப்பி, இதை அர்ச். இராயப்பருக்கும் அர்ச். அருளப்பருக்கும் தெரிவித்தபொழுது, இந்த அப்போஸ்தலர்கள் ஜெருசலே மிலிருந்து அவர்களிடம் போய், அவர்கள்பேரில் தமது கரங்களை விரித்தார்கள். அவர்களும் இஸ்பிரீத்துசாந்துவைப் பெற்றுக்கொண்டார்கள் என்று எழுதியிருக்கிறது. அர்ச். சின்னப்பர் தமது நிருபங்களில் பல இடங்களிலும் இதைப்பற்றிப் பேசுகிறார். திருச்சபையின் ஆரம்பத்தில், ஞானஸ்நானம் கொடுத்தவுடன் உறுதிபூசுதலும் கொடுக்கப்பட்டது என்று தெரியவருகிறது. 

திவ்விய இஸ்பிரித்துசாத்துவைப் பெற்று, அவரது வரங்களின் பலனைக் கொண்டு விசுவாசத்தில் உறுதியும் திடனும் அடைவதே இந்தத் தேவதிரவிய அநுமானத்தால் உண்டாகும் விசேஷ வரப்பிரசாதம். ஞானஸ்நானத்தால் சர்வேசுரனுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகள் ஆகிறோம். கிறீஸ்தவர்கள் ஆகிறோம்: உறுதிபூசுதலினால், சேசு கிறீஸ்துநாதரின் படை வீரர் ஆகிறோம். உறுகிபூசுதலுக்குரிய சடங்குகளும் ஜெபங்களும் சுருக்கமானவைகள். அவைகளின் விபரமும் எளிதானது. 
  1. ஆரம்பத்தில் மேற்றிராணியார் கரங்களை விரித்து மன்றாடுவதும், பின்னர் பரிமள தைலத்தால் நெற்றியில் பூசுவதும் திவ்விய இஸ்பிரீத்து சாந்துவை அளிப்பதற்கான வெளிச் சடங்குகள்.
  2. கன்னத்தில் தட்டுவதினால், நமது விசுவாசத்தினிமித்தம் எவ்வித உபத்திரவங்களுக்கும் அஞ்சாமல் சேசு கிறீஸ்துநாதருக்காகத் துன்பமும் மரணமுமே அடைய, நாம்: பயப்படாதிருக்கவேண்டுமென்று நமக்கு நினைப்பூட்டுகிறார். 


உறுதிபூசுதலிலும் ஒரு ஞானத்தாய் அல்லது தகப்பன் இருக்கவேண்டுமென்று திருச்சபை சுட்டளையீடுகிறது. உறுதிபூசுதல் பெறப்போகிற ஆண்பிள்ளைகள் எல்லோருக்கும் ஒரே ஞானத்தகப்பனும், பெண்பிள்ளைகள் எல்லோருக்கும் ஒரே ஞானத்தாயும் இருப்பது போதுமானது; இதுவே அநேக இடங்களில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஞானத்தாய் அல்லது ஞானத்தகப்பன் உறுகிபூசுதல் பெறுகிறவர்களுடைய தோளின் மேல் தனது கையை வைத்திருப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவேண்டியதில்லை. ஞானத்தாய் அல்லது ஞானத்தகப்பன் கத்தோலிக்கராகவும் உறுதிபூசுதல் பெற்றவர் களாகவும் இருக்க வேண்டும் என்று சொல்லாமலே விளங்கும். 


உறுதிபூசுதல் பெறப்போகிறவர்கள் அனுசரிக்க வேண்டியவை

  1. ஐந்து மந்திரங்களும், பிரதான சத்தியங்களும், விசேஷமாய் உறுதிபூசுதல் பெறுவது எதற்காக என்பனதயும் அறிந்திருக்கவேண்டும். 
  2. முந்தினநாள் பாவசங்கீர்த்தனம் செய்து உறுதிபூசுதல் பெறுகிற அன்று திவ்விய நற்கருணையும் உட்கொள்வது நல்லது. 
  3. முந்தின நாளிலேயே பங்கு குருவானவரிடமிருந்து உறுதிபூசுதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். 
  4. உறுதிபூசுதல் பெறவேண்டிய தினத்தன்று, ஆலயத்திற்கு போகையில் கூடியமட்டும் சுத்தமாகவும், தலை முடி அலங்கோலமாய்த் தொங்களி டாமல் விசேஷமாய் நெற்றியில் விழாமல், ஒழுங்காய்ச் தலை வாரியிருத்தல் நல்லது. 
  5. வழக்கமாய் திவ்விய பலிபூசை முடிவில் மேற்றிராணியார் உறுதிபூசுதல் கொடுப்பதால் பூசை முடியும் போது. அவர்கள் முன்கூறிய வண்ணம் இரு வரிசையாய் கோவில் நடுவில் அல்லது கிராதியில் சப்தம் செய்யாமல் முழந்தாளில் இருக்கவேண்டும். 
  6. உறுகிபூசுதலின் இறுதியில் மேற்றிராணியார் அளிக்கும் ஆசீர்வாதத் திற்கு எல்லோருமிருந்து, அதற்குப்பின் விசுவாச மந்திரம், பரலோக மந்திரம், அருள்நிறை மந்திரத்தை எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து சொல்லவேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக