Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 3 பிப்ரவரி, 2024

அற்புத சீலி ஆனந்த வேலி - Tamil Catholic Songs Lyrics

அற்புத சீலி ஆனந்த வேலி

தாய் மனோகரி குணாகரி கிருபாகரி
 தாய் தயாபரி தயா நிதி நல் மாமரி

1. அற்புத சீலி ஆனந்த வேலி
    நற்கதி தாராயம்மா
    தற்பரன் தாயே அன்னாளின் சேயே
    ஆள்வா யென்னாளுமம்மா

2. தாவீது தந்த தாய் மரி எந்தன்
    தாயகம் நீரே யம்மா
    பாவிகள் தம்பம் பக்தியின் பிம்பம்
    பாதம் தொழுதோம் அம்மா

3. ஜென்மத்தின் தோஷம் இல்லா விசேஷம்
    கொண்டவர் நீரே யம்மா
    கன்ம வினைகள் என் மனம் கொள்ளா
     காப்பதும் கடனே அம்மா.


Our Lady Songs Lyrics 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக