Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 23 டிசம்பர், 2021

சிலுவை அடையாளம்


அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும்.

எங்கள் சர்வேசுரா! பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரித்து சாந்துவுடையவும் நாமத்தினாலே. ஆமென்.



1. “அர்ச்சியசிஷ்ட” என்ற வார்த்தைக்கு அர்த்தமென்ன?

வணக்கத்துக்குரிய என்று அர்த்தமாகும்

2. “சிலுவை” என்பது எது?

நம்மை இரட்சிக்கிறதற்காக சேசுநாதர்சுவாமி அறையுண்ட மரமாம்.

3. சேசுநாதருடைய சிலுவையை அர்ச்.சிலுவை என்று சொல்வானேன்?

சேசுநாதர் சிலுவையிலே அறையுண்டு அதில் மரணமானபடியால் அதை அர்ச்சியசிஷ்ட சிலுவை என்கிறோம்.

4. அடையாளம் என்றால் என்ன?

குறிப்பு

5. சத்துரு என்றால் யார்?

ஒருவனுடைய பகையாளி அல்லது விரோதியே அவனுடைய சத்துரு.

6. இவ்விடத்தில் சத்துரு என்னும் பதத்தால் குறிப்பிடப்பட்டவர்கள் யார்?

உலகம், பசாசு, சரீரம் ஆகிய இம்மூன்றுமே மனிதனின் பகையாளிகளாகும்.

7. எங்களை இரட்சித்தருளும் என்பதற்கு அர்த்தம் என்ன?

எங்களை மீட்டுக் காப்பாற்றியருளும் என்று அர்த்தமாம்.

8. “சர்வேசுரன்” என்றால் யார்?

சர்வத்துக்கும் கர்த்தாவான ஆண்டவரே சர்வேசுரன்.

9. “பிதா” என்னும் பதத்துக்கு அர்த்தம் என்ன?

தகப்பன்

10. “சுதன்” என்பதற்கு அர்த்தம் என்ன?

குமாரன், மகன் என்று அர்த்தமாம்.

11. “இஸ்பிரீத்து சாந்து” என்னும் வார்த்தைக்கு அர்த்தமென்ன?

இலத்தின் மொழியில் இஸ்பிரீத்து சாந்து என்கிற பதத்துக்கு பரிசுத்த ஆவி என்று அர்த்தமாகும்.

12. “நாமத்தினாலே” என்றால் என்ன?

பெயரால் மன்றாடுகிறோம் என்று அர்த்தமாகும்.

13. “ஆமென்” என்பதற்கு அர்த்தமென்ன?

யூத மொழியிலே அப்படியே ஆகக்கடவது என்று அர்த்தம


14.சிலுவை அடையாளத்தை வரைவதெப்படி?

இடது கைகளின் விரல்களை ஒன்றாகச் சேர்த்து மார்பின் மேல் வைத்துக் கொண்டு, வலது கையின் பெருவிரலால் நெற்றியிலும், வாயிலும், மார்பிலும் சிலுவை வரைந்து கொண்டு, கடைசியிலே எலலா  விரல்களையும் நீட்டி ஒன்று சேர்த்து நெற்றியையும், நடு மார்பையும், இடது தோளையும், வலது தோளையும் தொட்டு உடலின் மேல் பெரிய சிலுவை போட்டுக் கொள்ள வேண்டும்.

வலது கை பெருவிரலால் நெற்றியில் சிலுவை அடையாளத்தை வரைந்துகொள்ளும்போது:

“அர்ச்.சிலுவை அடையாளத்தினாலே” என்றும், வாயில்: “எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும்” என்றும், மார்பில்: “எங்கள் சர்வேசுரா” என்றும் சொல்லியபின், மற்ற விரல்களை நிட்டி ஒன்று சேர்த்து நெற்றியைத் தொட்டு: “பிதாவுடையவும்” என்றும், மார்பின் அடிபாகத்தைத் தொட்டு: “சுதனுடையவும்” என்றும், இடது தோளைத் தொட்டு: “இஸ்பிரித்து” என்றும், வலது தோளைத் தொட்டு: “சாந்துடையவும்” என்றும் சொல்லி, பிறகு இரண்டு கைகளையும் மார்பின் முன் குவித்து “நாமத்தினாலே,ஆமென்.” என்றும் முடிக்க வேண்டும்.

15.நெற்றியில் ஏன் சிலுவை போட்டுக் கொள்கிறோம்?

(1) வேதத்தைக் குறித்து மனிதருக்கு முன்பாக வெட்கப்படுகிறதில்லையென்று காட்டும்படிக்கும்,

(2) ஆங்காரம்,கோபம், மோகம் முதலியவைகளைப்பற்றிய கெட்ட நினைவுகள் நம் புத்தியில் உண்டாகாமல், சர்வேசுரனைப் பற்றிய நல்ல எண்ணங்கள் நமது புத்தியில் ஏற்படும்படிக்கும் நெற்றியில் சிலுவை வரைந்து கொள்கிறோம்.

16. வாயில் சிலுவை வரைந்துகொள்வானேன்?

(1) வேதத்திற்கு தைரியத்தோடு சாட்சியம் சொல்வேன் என்று காட்டவும்,

(2) வாயில் பொய், புரட்டு, கோள்குண்டணி, துர்ப்பாஷை முதலிய பாவங்களைக் கட்டிக் கொள்ளாமல், ஜெபத்தாலும் யோக்கியமான வார்த்தைகளாலும் சர்வேசுரனைத் தோத்தரிக்கும்படிக்கான ஆசீர்வாதம் நமக்கு உண்டாகும்படிக்கும் வாயில் சிலுவை வரைந்துகொள்கிறோம்

17. மார்பில் ஏன் சிலுவை போட்டுக் கொள்கிறோம்?

(1) மன உறுதியோடு வேதத்தை அனுசரிப்போம் என்று காட்டவும்,

(2) நமது இருதயத்தில் கெட்ட ஆசை, பகை, வைராக்கியம் முதலிய பாவங்கள் உண்டாகாமல், சர்வேசுரனுடைய சிநேகம் நமக்குள் அதிகரிக்கும்படியாகவும் மார்பில் சிலுவை வரைந்துகொள்கிறோம்.

18.கடைசியாய் உடலின் மேல் போடும் பெரிய சிலுவை எதற்கு?

சர்வேசுரனே நமக்குக் கொடுத்த சரீரத்தால் நாம் அவருக்கு விரோதமாய் பாவத்தைக் கட்டிக்கொள்ளாமல், அவருடைய கட்டளைப்படி நடப்பதற்கான சகாயம் நமக்கு உண்டாகும்படி நமது சரீரத்தின் மேல் சிலுவை போட்டுக் கொள்கிறோம்.

19. சிலுவை வரையும்போது நம் எதை ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்?

முன் சொன்னபடி பிதா, சுதன், இஸ்பிரித்து சாந்துவாகிய தமதிரித்துவத்தையும், சுதனாகிய சர்வேசுரனுடைய மனித அவதாரத்தையும், மனித இரட்சணியத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.

20. தமதிரித்துவப் பரம இரகசியத்தை நாம் ஞாபகப்படுத்துவதெப்படி?

பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்து சாந்துவுடையவும் நாமத்தினாலே என்று சொல்லும்போது தேவசுபாவத்திலே ஒருவராயிருக்கிற சர்வேசுரன் ஆள் வகையிலே மூவராயிருக்கிறாரென்று ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.

21. சிலுவையடையாளத்தால் சுதனாகிய சர்வேசுரனுடைய மனித அவதாரத்தையும் மனித இரட்சணியத்தையும் எப்படி ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்?

சிலுவை வரையும்போது சுதனாகிய சர்வேசுரன் சேசுகிறிஸ்துநாதர் மனுஷ அவதாரமெடுத்து நமக்காகச் சிலுவையில் அறையுண்டு மரித்தாரென்று ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.

22. சிலுவை வரைந்து கொள்ளும் வழக்கம் எப்போது ஆரம்பமானது?

இவ்வழக்கம் அப்போஸ்தலர்கள் காலத்தில் ஆரம்பமானது. சுவிசேஷகரான அர்ச்.அருளப்பர் சாகிறதற்கு முன் தமது பேரில் சிலுவை வரைந்து கொண்டாரென்று நிசேபோருஸ் என்பவர் எழுதியிருக்கிறார். அப்போஸ்தலரான அர்ச்.சின்னப்பரும் சிலுவை அடையாளத்தால் குருடருக்குப் பார்வை கொடுத்தாரென்று இல்துயின் என்பவர் எழுதிவைத்திருக்கிறார்.

23. பூர்வ கிறீஸ்துவர்கள் சிலுவை போட்டுக் கொண்டார்களோ?

கி.பி. 211ம் வருஷத்தில் இருந்த பேர்பெற்ற சஸ்திரியான தெர்த்துல்லியன் என்பவர்  எழுதிவைத்திருக்கிறதாவது:;நாங்கள் வெளியே போகும் போதும், உள்ளே பிரவேசிக்கும்போதும், யாதொரு காரியத்தைத் தொடங்கும்போதும், எவ்விடத்திலும், எப்பேர்பட்ட சமயத்திலும், நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளுகிறோம்.;

24. இப்போது தேவாராதனை நேரத்திலும் மற்ற சமயங்களிலும் திருச்சபை சிலுவை அடையாளம் போடும் ஆசாரத்தை அனுசரித்து வருகிறதா?

அனுசரித்து வருகிறது. பூசை நேரத்தில் குருவானவர், 50 விசை சிலுவை போடுகிறார். யுரதொன்றை மந்திரிக்கும்போதும் அதன்மேல் சிலுவை அடையாளம் போடுகிறார். தேவத்திரவிய அனுமானங்களை நிறைவேற்றும் போதும் பலதடவை சிலுவை போடுகிறார். உதாரணமாக: ஞானஸ்நானம் கொடுக்கும்போது 14 விசை, அவஸ்தைப்பூசுதலிலே 17 விசை. இன்னும் மற்றுமுள்ள திருச்சபையின் எல்லாப்பரிசுத்த சடங்குகளிலும் குருவானவர் சிலுவை அடையாளத்தை உபயோகித்து வருகிறார்.

25. நமதுபேரில் சிலுவையை அடிக்கடி வரைந்துகொள்வது நல்லதா?

சிலுவை அடிக்கடி பக்தியுடன் நம்மேல் வரைந்துகொள்வது மகா பிரயோசனமான சுகிர்த வழக்கம். ஏனெனில், சிலுவையை வரைவதால் ஆத்துமத்துக்கும் சாPரத்துக்கும் அநேக நன்மைகள் உண்டாகும்.

26. சிலுவை வரைவதால் ஆத்துமத்துக்கு உண்டாகும் நன்மைகள் எவை?

பக்தியோடு சிலுவை வரைந்துகொள்ளுதல் நம் உள்விசுவாசத்தின் வெளி அடையாளம் ஆனதால், நமது விசுவாசத்தைத் தூண்டவும், முகத் தாட்சணியத்தை வெல்லவும், பசாசையும் அதின் தந்திர சோதனைகளையும் துரத்தவும், பாவ சமயங்களை அகற்றவும், சர்வேசுரனிடமிருந்து மற்ற வரப்பிரசாதங்களை அடையவும்  சக்தியுள்ளதாயிருக்கிறது.


சரித்திரம்


அர்ச்.பெரிய அந்தோணியார் மலையில் ஒதுங்கித் தவம் புரிந்துவந்த காலத்தில், பசாசானது பலரூபங்கொண்டு அவரை பயமுறுத்தி உபாதைப்படுத்தி, அவலட்சணமான தந்திர சோதனைகளை அவருக்கு வருவித்தபோதும், அவர் சிலுவை அடையாளத்தால் அவைகளைத் துரத்துவார். “பசாசானது ஜெபத்துக்கும், சசுகிறிஸ்துநாதருக்கும் பயப்படுகிறது0 சிலுவை அடையாளத்தால் மிரண்டோடும்”; என்று இந்த மகாத்துமா, தமது சீஷருக்குச் சொல்லி வருவார்.

27. சிலுவை அடையாளத்தால் சாPரத்துக்கு உண்டாகும் நன்மை என்ன?

விசுவாசத்தோடும் பக்தியோடும் சிலுவை வரைவதால் வியாதிகள் குணப்பட்டன0 பலமுறை சரிர ஆபத்துக்கள் நிக்கப்பட்டன. அர்ச். லவுரெஞ்சியார் ஒரு குருடன்மேல் சிலுவை அடையாளத்தை வரைந்த மாத்திரத்தில் அந்த மனிதனுக்குப் பார்வை உண்டானது. 

அர்ச்.ஆசீர்வாதப்பர் ஒரு மலைக் கெபியில் ஒதுங்கி கடின தபசு செய்து கொண்டிருந்தபோது, ஒரு நாள் ஒரு சந்நியாச மடத்தை சந்திக்கப் போனார். அம்மடத்து சிரேஷ்டர் இறந்துபோயிருந்தபடியால் அம்மடத்தார் அவரை சிரேஷ்டராகத் தெரிந்து கொண்டனர். தங்கள் மடத்தின் ஒழுங்குபடி சரியாய் நடக்க இவர்களுக்கு இவர் இடைவிடாமல் புத்தி சொல்லிக் கொண்டு வந்ததைப்பற்றி, அம்மடத்தார் சிலர் சலிப்படைந்து, அவரைக் கொல்ல தீர்மானித்து, அவருடைய பானபாத்திரத்தில் நஞ்சு கலந்து அவருக்குக் கொடுத்தனர். ஆசீர்வாதப்பர் புசித்தாலும் பானம் பண்ணினாலும் சிலுவைப் போட்டுக் கொள்ள, வழக்கப்பட்டிருந்தபடியே, அன்றும் சிலுவை போட்டுக் கொள்ள, நஞ்சிட்ட பாத்திரம் உடைந்து கீழே விழுந்தது. இவ்வற்புதத்தைக் கண்ட அத்துஷ்டர் ஆசீர்வாதப்பருடைய பாதத்தில் விழுந்து தங்களுடைய பாதகத்தை அவருக்குத் தெரியப்படுத்தி பொறுத்தல் கேட்டனர்.

28. சிலுவை வரைவதற்கு திருச்சபை ஏதாவது பலன் அளித்திருக்கிறதா?

அர்ச்.சிலுவை அடையாளத்தை நமது பேரில் பக்தி வணக்கத்துடன் வரைந்துகொள்ளும்போதெல்லாம் ஐம்பதுநாட்பலனும், தீர்த்தத்தோடு வரைந்து சொன்னால் நுரறு நாட்பலனும் நாம் அடைந்து கொள்ளலாம்.

29. சிலுவையானது எப்போதாகிலும் புதுமையாகக் காணப்பட்டதுண்டோ?

சுமார் கி.பி. 303ம் வருஷத்தில் கொன்ஸ்தாந்தின் என்னும் பேரரசன் தன் எதிரிகளுக்கு விரோதமாய் ரோமையில் சண்டை செய்ய போனபோது, ஒரு மத்தியான வேளையில் ஆகாயத்தில் பிரகாசமான ஒரு சிலுவையும், அதின் மத்தியில், “இதனால் நீ வெற்றியடைவாய்” என்னும் வாக்கியமும் எழுதப்பட்ட மேரையாய்க் காணப்பட்டது. அன்று இரவு நித்திரையில் அரசருக்கு நமது திவ்ய கர்த்தர் சிலுவை அடையாளத்துடன் காணப்பட்டு, ஒரு சிலுவைக் கொடியை செய்விக்கவும், மறுநாள் சண்டைக்குப் போகும்போது அதைப் படைக்குமுன் கொண்டு போகவும் கற்பித்தார். விழித்தபின் அரசர் தன் தரிசனையில் கண்டபடி ஒரு சிலுவைக் கொடியைச் செய்வித்துப் போர் பொருதியபோது அதிசயமான ஜெயம் கொண்டார்.

இப்பேர்பட்ட ஜெயம் கிறிஸ்துவர்களுடைய தேவனால் உண்டானதென்று நிச்சயித்து, கிறிஸ்துவர்களுக்கு விரோதமாய் வரையப்பட்ட வேதகலக சட்டத்தை இரத்து செய்து, பேய்க் கோவில்களைத் தகர்த்துச் சத்திய வேத தேவாலயங்களைக் கட்ட கற்பித்ததுடன் சிலகாலத்துக்குப் பின் அரசர் சத்தியவேதத்தில் சேர்ந்தார். † 


30. இனிமேலும் ஆகாயத்தில் சிலுவை காணப்படுமா?

உலக முடிவில் சேசுநாதர்சுவாமி மனிதரை நடுத்தீர்க்க வரும்போது, அவருடைய அடையாளமாகிய திருச்சிலுவை மேகத்தில் காணப்படும் என்று அவரே சொல்லியிருக்கிறார் (மத்:24:30).

31. சிலுவை அடையாளத்தை எந்தச் சமயத்தில் வரையவேண்டும்?

நல்ல கிறிஸ்துவன் நித்திரைக்கு முன்னும் பின்னும், சாப்பிடும் முன்னும் பின்னும், பிரதான வேலை ஆரம்பிக்கும்போதும், ஆபத்து, சோதனை முதலிய சமயங்களிலும் சிலுவை வரையவேண்டும்.

32. இன்னும் வேறு எந்த சமயங்களில் சிலுவை வரையவேண்டும்?

கோவில் மணிச் சத்தம் கேட்கும்போதும், கோவிலிலே பிரவேசிக்கும் போதும், ஜெபத்துக்கு முன்னும் பின்னும், சர ஆபத்து நேரிடும்போதும் சிலுவை போட்டுக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக