Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

மூன்றாம் பிரிவு (Tamil Catechism - III)


மூன்றாம் பிரிவு

மனிதனுடைய இரட்சிப்பு

22.  நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாய் பிறந்தவர் யார்?
 
      அர்ச். தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் தான்

23.   அவர் எப்படி உற்பவித்துப் பிறந்தார்?

       இஸ்பிரித்து சாந்துவினாலே கர்ப்பமாய் உற்பவி;த்து அற்புதமாய் பிறந்தார்.

24.   யாரிடத்தினின்று பிறந்தார்?

        ஒருக்காலும் கன்னிமை கெடாத அர்ச். கன்னிமரியம்மாளிடத்திலே நின்று பிறந்தார்.

25.   சுவாமி பிறந்த எட்டாம் நாள் அவருக்கு என்ன பெயரிட்டார்கள்?

         சேசு என்னும் பெயரிட்டார்கள்.

26.   சேசு என்னும் பெயருக்கு அர்த்தமென்ன?

         நம்மை இரட்சிக்கிறவர்.

27.  ஆகையால் சேசு கிறிஸ்துநாதர் யார்?
 
           நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாய் பிறந்த இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனேயாம்.

28.   சேசுநாதர் சுவாமி இவ்வுலகில் எத்தனை ஆண்டுகாலம் இருந்தார்?

         33 ஆண்டுகாலம் இருந்தார்.

29.  இவ்வுலகத்தில் என்ன செய்து கொண்டு வந்தார்?
     
            சகல புண்ணியங்களையும் அற்புதங்களையும் செய்து நம்முடைய திவ்விய வேதத்தை போதித்து அப்போஸ்தலர்களை ஏற்படுத்தினார்.

30.  சேசுநாதர் சுவாமிக்கு எத்தனை சுபாவங்கள் உண்டு?

       தேவசுபாவம் மனித சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள் உண்டு.


31. எந்த சுபாவத்திலே பாடுபட்டார்?

       மனித சுபாவத்திலே பாடுபட்டார்.

32.  யாருக்காக பாடுபட்டார்?

       நமக்காக பாடுபட்டார்.

33.  என்ன பாடுபட்டார்?

        போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் மிகுந்த பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தை அடைந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

34.  அப்போது சுவாமியுடைய திரு ஆத்துமம் எங்கே போனது?

       பாதாளங்களிலே இறங்கி அங்கே இருந்த புண்ணிய ஆத்துமாக்களுக்கு மோட்சபாக்கியம் கொடுக்கப் போனது

35. சேசுநாதர் சுவாமி கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்தருளினாரா?

        மரித்த மூன்றாம் நாள் கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்தருளினார்.

36.  உயிர்த்த பிற்பாடு பூலோகத்திலே எத்தனை நாள் தங்கியிருந்தார்?
 
        40 நாட்கள்.

37.  அந்த நாற்பது நாளும் என்ன செய்து கொண்டு வந்தார்?

       அநேகம் விசை தம்முடைய சீடர்களுக்கு தரிசினையாக தம்மை காண்பித்து அவர்களை வேத சத்தியங்களில் ஸ்திரப்படுத்திக் கொண்டு வந்தார்.

38. நாற்பதாம் நாள் எங்கே எழுந்தருளிப் போனார்?

        பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலதுப் பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

39.  இப்போது சேசுநாதர் சுவாமி எங்கே இருக்கிறார்?

       சர்வேசுரானாகிய மட்டும் எங்கும் இருக்கிறார்.  சர்வேசுரனும் மனிதனுமாகிய மட்டும் பரலோகத்திலும் திவ்விய நற்கருணையிலும் இருக்கிறார்.





வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

சின்னக் குறிப்பிடம் II

இரண்டாம் பிரிவு 


உலக சிரிஸ்டிப்பின் பேரிலும் மனிதனுடைய கேட்டின் பேரிலும் 



14.  சர்வேசுரன் எல்லாத்துக்கும் ஆதி காரணமாய் இருப்பது எப்படி?
           
           பரலோகத்தையும் பூலோகத்தையும் அவற்றில் அடங்கிய சகலத்தையும் உண்டாக்கி காப்பாற்றுகிரதினாலே எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாய் இருக்கிறார்.

15.  சர்வேசுரன் உண்டாக்கினவைகளில் பிரதான வஸ்துக்கள் எவை?

            சரீரமில்லாத சம்மனசுக்களும் சரீரமும் ஆத்துமமும் உள்ள மனிதர்களும் தான்.

16.  சம்மனசுக்கள் எல்லாரும் தங்கள் மேன்மையான அந்தஸ்திலே நிலைக் கொண்டார்களா?

           இல்லை.   சிலர் ஆங்கரதினாளே மோட்சத்தை இழந்து நரக ஆக்கினைக்கு உள்ளானார்கள்.

17.  இப்படி கேட்டுப் போன சம்மனசுக்கள் பெயர் என்ன?

          பசாசுக்கள்.

18.  சர்வேசுரன் மனிதனை எதற்காக உண்டாக்கினார்?

          தம்மை அறிந்து சிநேகித்து சேவிக்கவும் அதனால் மோட்சம் அடையவும் உண்டாக்கினார்.

19.  அவர் எந்த அந்தஸ்திலே ஆதிப் பெற்றோரை உண்டாக்கினார்?

        பரிசுத்தமும் பாக்கியமுமான அந்தஸ்திலே அவர்களை உண்டாக்கினார்.

20.    அவர்கள் அதை போக்கடித்ததெப்படி?
           
            பசாசை நம்பி சர்வேசுரனால் விலக்கப்பட்ட கனியை தின்றதினாலே அதைப் போக்கடித்தார்கள்.

21.  அதனால் அவர்களுக்கும் அவர்கள் சந்ததியர்ருக்கும் வந்த கேடு என்ன?

       பசாசுக்கு அடிமையாகி, சாவு நரகம் முதலிய ஆக்கினைக்கு பாதிரவான்கள் ஆனார்கள்.


மூன்றாம்  பிரிவு 


புதன், 6 ஆகஸ்ட், 2014

சின்னக் குறிப்பிடம்

சின்னக் குறிப்பிடம் Tamil Catechism Book
முதல் பிரிவு 
ஏக திரித்துவ சர்வேசுரன் பேரில் 

1. சர்வத்துக்கும் கர்த்தாவாயிருக்கிறவர்  யார் ?
      
    சர்வேசுரன் 

2. எத்தனை சர்வேசுரன்?

     ஒரே சர்வேசுரன் 

3. அவர் தேவ சுபாவத்திலே ஒருவராய் இருந்தாலும் ஆள் வகையிலே எப்படி இருக்கிறார்?
  
     திரித்துவமாய் இருக்கிறார்.

4. திரித்துவமாய் இருக்கிறார் என்பதற்கு அர்த்தம் என்ன?

     ஆள் வகையிலே மூவராய் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

5. இந்த மூன்று ஆட்களுக்கு பெயர் என்ன?

     பிதா, சுதன், இஸ்பிரித்து சாந்து.

6.  பிதா சர்வேசுரனா?

     சர்வேசுரன்.

7.  சுதன் சர்வேசுரனா?

    சர்வேசுரன் 

8.  இஸ்பிரித்து சாந்து சர்வேசுரனா?

    சர்வேசுரன் 

9/ மூவரும் மூன்று சர்வேசுரனா? ஒரே சர்வேசுரனா?

    ஒரே சர்வேசுரன்.

10.  எப்படி ஒரே சர்வேசுரன்?

      இந்த மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம்,ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவம் இருக்கிறபடியினலே மூவரும் ஒரே சர்வேசுரன் தான்.

11.  இவர்களுக்குள்ளே வல்லமை மகிமை முதலான இலட்சனத்தில்  வித்தியாசம் உண்டோ?

      இல்லை.  மூவரும் எல்லாத்திலும் சமமாயிருக்கிரார்கள்.

12.  இப்படி ஏகமும்  திருத்துவமாய் இருக்கிற சர்வேசுரனுக்கு பிரதான இலட்சணங்கள் எத்தனை?

     ஆறு.

13.   ஆறும் சொல்லு?
  
  1. சர்வேசுரன் தாமாய் இருக்கிறார்.
  2. தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்.
  3. சரீரம் இல்லாமலிருகிறார்.
  4. அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராய் இருக்கிறார்,
  5. எங்கும் வியாபித்திருக்கிறார்.
  6. எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாய் இருக்கிறார்.


Download Catholic Tamil Documents in PDF pls Click Here....


இரண்டாம் பிரிவு 

 மூன்றாம் பிரிவு .

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

Life History of St. Antony in Tamil mp3 Download

Download Life History of St. Antony in Tamil.


This sermons were recorded in a Festival of St. Antony.  This sermons were preached by the priest Rev. Fr. Parnabas...  Who is known as great Narrator & Preacher.


I have uploaded His preaching on Life History of St. Antony in Tamil.  He has explained the Life History of St. Antony in a great manner.  Every one can understand easily....


It has 12 parts.



You can download all the Sermons from here...
Its very useful for Catholics.   You can know more about St. Antony and His Miracles

சனி, 28 ஜூன், 2014

தனிமையில் வேதனை

வேதனையைக் கண்டு நம் சுபாவம் நடுங்குகிறது.  தனிமையில் வேதனைப்படுவது  இன்னும் அதிக பயங்கரமானது.  வேதனை நேரத்தில் நண்பர்கள் கிடைப்பது வரமாகும்.  துயரம் என் உள்ளதை வாட்டும் போது அல்லது உடல் நோவுடன் படுக்கையில் புரள நேரிடும் போது உள்ள துயரத்தை அன்பு என்னும் தைலத்தால் அகற்ற முயலும் நண்பன் கிடைப்பானாகில், அல்லது உடல் நோவை நான் தைரியத்துடன் சகிக்க தன் பிரசன்னத்தால் துணை புரியும் சிநேகிதி கிடைப்பாளாகில், இத்தால் கிடைக்கும் ஆறுதல் வர்ணிக்க முடியாது.
tamil catholic prayers

வேதனை நேரத்தில் தோழர் கிடைப்பது பெரும் பேறாகும். தனிமையில் உள்ளத் துயரத்தால் நான் அவதிபடும் போது உற்ற நண்பனும் அதில் பங்குபெற முடியாமல் போனால், வேதனைப் படுக்கையில் அந்நியர்கள் என்னைக் கடந்து போனால் அனுதாபமின்றி என்னை நோக்குவார்களானால்,இது எத்துனை பரிதாபத்துக்குரியது?  கிறிஸ்தவ மேறையாக நான் வேதனையை நான் சகிக்க வேண்டுமானால், நினைவால் நான் ஒலிவமரத் தோப்புக்கு  நான் செல்ல வேண்டும்.  தனியாக உபாதைப்பட்ட சேசுவின் அருகில் நான் முழந்தாளிட வேண்டும்.  ஐத்செமணியில் நடுசாம அவஸ்தையை உள்ளத்தை அழுத்திய கொடிய துயரத்தையும் உடலை நசுக்கிய வேதனையையும் தனிமையில் சகித்தவரே, தனிமையில் நான் படும் வேதனையை கண்டுப்பிடிப்பார்.  தமது அன்பு நிறை  ஆறுதலால் என்னைத் தேற்றுவார்.


வாழ்வில் வேதனை இருக்கும்.  யேசுவுடன் சேர்ந்து யேசு பருகியது போல, தனிமையில், ஐத்செமணியின் கசப்பு நிறை பாத்திரத்திலிருந்து பருகியதுபோல நான் பருகுவேனானால் கசப்பான பாத்திரத்தில் இனிமையையும் காண்பேன்.


ஓ மிகவும் இனிய சேசுவே, உம்மை நான் அதிகமதிகமாக நேசிக்கும் வரத்தை அருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன்.

வியாழன், 12 ஜூன், 2014

பத்துக் கட்டளை விளக்கம்

  

    சர்வேசுரனுடைய கற்பனைகளையும், திருச்சபைக் கட்டளைகளையும் அநுசரித்து பாவத்தைப் புறம்தள்ளி புண்ணியத்தைச் செய்யவேண்டியது.

இரட்சண்யம் அடைவதற்கு தேவ கற்பனைகளை அநுசரிக்க வேண்டியது அவசியமோ?
   
    புத்தி விவரமடைந்த சகல மனிதர்களும் இரட்சணியமடைவதற்கு தேவ கற்பனைகளை அநுசரிப்பது அத்தியாவசியமாகும்.  "சீவியத்திற் விரவேசிக்க உனக்கு மனதனால் கற்பனைகளை அநுசரி".( மத். 19:17)

புத்தி விவரமடைந்த கிறீஸ்தவர்கள் இரட்சணியமடைவதற்கு ஞானஸ்தானமும் விசுவாசமும் போதாதா?

    போதாது.  ஏனெனில் கிரியைகள் இல்லாத விசுவாசம் உயிரற்றது. (யாக. 2: 20).  தேவனில் விசுவாசங்கொண்டிருப்பது நல்லதுதான்.  ஆனால் அந்த விசுவாசத்திற்கு தக்கவாறு நமது நடத்தையை சீர்படுத்தி பாவத்தை வட்டு ஒழுக வேண்டும்.  இதுதான் கற்பனைகளை அநுசரிக்கும் விதமாகும்.  ஆதலால் விசுவாசத்தோடு கற்பனைகளையும் அநுசரித்தால் தான் புத்தி விவரமடைந்த மனிதர் இரட்சணியமடையலாம்.

பத்து கற்பனைகளும் விசுவாசத்திற்கு அத்தியாவசியமோ?

    அவசியந்தான்.  விசுவாச மந்திரத்தில் நாம் விசுவசிக்க வேண்டிய சத்தியங்கள் எவ்வாறு சுருக்கமாய் கூறப்பட்டுள்ளதோ, அப்படியே நாம் அநுசரிக்க வேண்டிய நல்லொழுக்க சட்டங்கள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.  மேலும் இந்தப் பத்துகற்பனைகளே, சத்திய கடவுளை நம்பி அவரது படிப்பினைகளை விசுவசிக்கவும், அவரது கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கவும் போதிக்கின்றன.  நித்திய நன்மைசுசூரூபியான சர்வேசுரன் நமக்கு இக்கட்டளைகளை அருளிச்செய்து நாம் இவ்வுலகிலே சந்தோஷத்தையும், நன்மையையும் அடையும்பொருட்டே.  ||நீதியானது சாதியை உயர்த்துகிறது.  பாவமோவெனில் பிரசைகளை நிற்பாக்கியராக்குகிறது. (பழ. 14:34).


சர்வேசுரன் நமக்கு அருளிச்செய்த கற்பனைகள் பத்து.

    1.  உனக்கு கர்த்தாவான சர்வேசுரன் நாமே.  நம்மை தவிர வேறு சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக.    
மோட்சத்தை அடைகிறததற்கு வேத சத்தியங்களை விசுவசிக்கிறதல்லாமல் இன்னுஞ் செய்யவேண்டியதென்ன?
    2.  சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாக சொல்லாதிருப்பாயாக.
    3.  சர்வேசுரனுடைய திருநாள்களை பரிசுத்தமாய் அநுசரிக்க மறாவாதிருப்பாயாக.
    4.  பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக.
    5.  கொலை செய்யாதிருப்பாயாக.
    6.  மோக பாவம் செய்யாதிருப்பாயாக.
    7.  களவு செய்யாதிருப்பாயாக.
    8.   மோக பாவம் செய்யாதிருப்பாயாக.
    9.   பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.
    10.  பிறர் உடமையை விரும்பாதிருப்பாயாக.

இந்த பத்து கற்பனைகளும் இரண்டு கட்டளைக்குள் அடங்கும். 
   
    1. எல்லாத்தையும் பார்க்க சர்வேசுரனைச் சிநேகிக்கிறது.

    2. தன்னைத் தான் சிநேகிக்கிறது போல் பிறரையும் சிநேகிக்கிறது.


    இந்தப் பத்துக் கற்பனைகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.  முதல் மூன்று கற்பனைகளும் தேவ ஆராதனைகளும், தேவ வழிப்பாட்டிற்கும் உரித்தானவை: மற்றவை நாம் நம் மீதும் புறத்தியார் மீதும் செலுத்தவேண்டிய கடமைகளைப் போதிக்கின்றன.

திங்கள், 9 ஜூன், 2014

அர்ச். ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி (Saint John Baptist Mary Vianney




அர்ச். ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி (Saint John Baptist Mary Vianney, மே 8 1786 - ஆகஸ்ட் 4 1859) பிரான்சு நாட்டில் உள்ள ஆர்ஸ் எனும் சிற்றூரின் பங்கு குருவாய் இருந்தவர். பிரெஞ்சுப் புரட்சியின் காரணமாக விசுவாசமும் இறை நம்பிக்கையும் குறைந்து போய் இருந்தது  அப்பங்கு, இவரின் கடின செபத்தினாலும், உழைப்பாலும்  மனம் மாறியது . மரியன்னை மீதும் தேவ நற்கருணை மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர்,  மக்களிடம் பாவசங்கீர்த்தனம் கேட்பதில் மிகுந்த நேரத்தை செலவிட்டார். இவர் கத்தோலிக்க குருக்களின் பாதுகாவலர் ஆவார்.








பொருளடக்கம்

1 தொடக்க காலம்
2 குருப் பட்டம்
3 ஆர்சின் குருவாக
4 புனிதர் பட்டம்


தொடக்க காலம்


ஜான் மரிய வியான்னி லயன்ஸ் நகருக்கு அருகில் டார்டில்லி என்னும் இடத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் மத்தேயு - மேரி என்ற பெற்றோருக்கு மகனாக 1786 மே 8ந்தேதி பிறந்தார். இவருக்கு 3 வயதாக இருக்கும்போது பிரஞ்சு புரட்சி வெடித்தது. இவரது குழந்தைப் பருவத்தில் அவருடைய பெற்றோர்கள் மட்டுமே ஞான உபதேசம்  கற்றுக்கொடுத்தனர். இவர் வாழ்ந்த சூழலில் திவ்யபலிப்பூசையில்  பங்கேற்பது எளிதானதாக இல்லை.

இருப்பினும் இரு துறவற சகோதரிகள் வியான்னியின் முதல் தேவ நற்கருணை  வாங்க ஏற்பாடு செய்தனர். அந்நிகழ்வு 1799ல் இவருக்கு 13 வயது நிகழ்ந்தபோது, அதிகாரிகளுக்குப் பயந்து மூடப்பட்ட ஓர் இல்லத்தில் நிகழ்ந்தது. இவர் தன்னுடைய தோட்ட இல்லத்தை ஒரு சிறுவர்களின் ஞான உபதேசம் கூடமாக மாற்றினார். நெப்போலியன் மன்னன் புரட்சியாளர்களைத் தோற்கடித்து பரிசுத்த பாப்பரசுடன்  உடன்படிக்கை செய்துகொண்டதால் கத்தோலிக்க வேதம் பிரான்சு நாட்டில் 1802ஆம் ஆண்டு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அப்பொழுது 16 வயதான வியான்னி, ஒரு குருவாக வேண்டும் என்று விரும்பினார்.

 குருப் பட்டம்


மூன்று ஆண்டுகளுக்கு பிறகே, வியான்னியின் தந்தை இவரது விருப்பத்துக்கு இணங்கி தோட்ட வேலையிலிருந்து இவருக்கு விடுதலை அளித்தார். பிறகு இவர், தனது பங்குத்தந்தையே நடத்தி வந்த வகுப்புகளுக்கு சென்று குருத்துவப் பயிற்சி பெற்றார். அங்கு பயின்றவர்களிலேயே வியான்னிக்குதான் வயது அதிகம்; படிப்பிலும் கடைசி நிலையில் இருந்தார். இலத்தீன் மொழி கற்பது இவருக்கு மிகவும் கடினமாக இருந்தது; தன் தாய் மொழியான பிரெஞ்சு மொழியிலும் போதிய அறிவு இல்லை. இவருடைய ஞாபக சக்தியும் மிகவும் பலவீனமாக இருந்தது. எனவே அர்ச்  ஜான் பிரான்சிஸ் ரெஜிஸ் என்பவருடைய திருத்தலத்திற்கு சென்று வேண்டினார். இவருடைய பங்குத்தந்தையின் ஆதரவே இவருக்கு ஊக்கம் ஊட்டியது.

1809-ல் நெப்போலியன் ஸ்பெயின் நாட்டின்மீது படையெடுத்தார். அப்பொழுது 23 வயதான வியான்னி, படையில் சேர்ந்து யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க விதி விலக்கு கேட்டார்; அது மறுக்கப்பட்டது. எனவே வீரர் உடை அணிவிக்கப்பட்டு பிரணி மலைக்கு அனுப்பப்பட்டார். அப்பொழுது அதிக மன வேதனை அடைந்தார். அங்கு இவர் சுகம் இல்லாதிருந்தபோது படையெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; படைகளுடன் சென்றபோது வழி தவறி நெப்போலியனுக்கு எதிரான மக்கள் வாழ்ந்த பகுதிக்குச் செல்ல நேர்ந்தது. எனவே அங்கு மக்களோடு இரண்டு ஆண்டுகள் தங்கிவிட்டார். பின்பு நெப்போலியன் உடன்பாட்டுக்கு பின்பு 1811-ல் அவர் வீடு திரும்பினார்.

இவருக்கு 25 வயதானபோது, உயர்நிலைப் பள்ளி கல்வி தொடங்கும் கட்டத்தில் இருந்தார்; மீண்டும் தன் பங்குத் தந்தையிடம் சென்று குருத்துவப் பணிக்குத் தயாரித்தார். 1812ல் இளம் குரு மாணவர் இல்லத்தில் சேர்ந்தார். அங்கு இருந்த 200 மாணவர்களில் இவரே கடைசியாக இருந்தார். பின்பு குருத்துவக் கல்லூரிக்குச் சென்று கற்க வேண்டியிருந்தது. ஆனால் பங்குத் தந்தையின் பரிந்துரையால்தான் அவர் குருப்பட்டம் பெற்றார். தன் பங்குத் தந்தைக்கே உதவியாக இருந்து மூன்று ஆண்டுகள் பணி புரிந்தார்.

ஆர்சின் குருவாக


வியான்னியின் பங்குத் தந்தை இறந்த பின்பு இவரை எங்கு அனுப்புவது என்று தெரியவில்லை. இறுதியாக மக்கள் அதிகம் இல்லாத ஆர்ஸ் என்ற கிராமத்தின் ஆலயத்துக்கு பங்குத்தந்தையாக அனுப்பப்பட்டார். அப்போது அந்த பங்கு ஆலயம் இடிந்து கிடந்தது. எனவே அதற்கு அருகில் இருந்த சிற்றாலயம் இவருடைய பங்கு ஆனது. அந்த ஆலயத்தைச் சார்ந்தவர்கள் 200 பேர் மட்டுமே இருந்தனர். அவர்கள் அனைவரும் கிறிஸ்துவ  பற்று இல்லாதவர்கள்.

அந்த மறைமாவட்டத்தின் தலைமை குரு வியான்னியிடம் அப்பணியைக் கொடுத்தபோது, “கடவுள் அன்பற்ற மக்களிடம், அவர் அன்பை உணரச் செய்வதே உமது பணியாகும்” என்று கூறினார். இத்தகைய மேலான ஆன்மீகப் பணியையே இவர் தனது உடனிருப்பாலும், போதனைகளாலும், தவ முயற்சிகளாலும் மக்களிடையே ஆற்றினார். அதிகாலையில் எழுந்து திருப்பலி நிறைவேற்றிவிட்டு பாவசங்கீர்த்தன இருக்கையில் அமரும் இவரிடம், எண்ணற்றோர் பாவசங்கீர்த்தனம் பெற வந்தனர்.

நாட்கள் உருண்டோடின. பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இவரைத் தேடி வந்தனர். உணவு உண்பதற்கும் நோயாளிகளைச் சந்திப்பதற்கும், ஞான உபதேச வகுப்புகள் கற்றுக் கொடுப்பதற்கும் மட்டுமே வியான்னி சிறிது நேரம் ஒதுக்குவார்; மற்ற நேரங்களில் எல்லாம் பாவசங்கீர்த்தனம் வழங்கிக் கொண்டே இருந்தார். இவருடைய போதனைகள் , மக்கள் மனதை ஆழமாகத் தொட்டன. குறிப்பாக இவர் மக்களைப் பாதித்த பாவங்களைப் பற்றியே எடுத்துரைத்தார்; அங்கு வாழ்ந்த விவசாயக் குடும்பத்தினர் மத்தியில் பரவிக் கிடந்த குடிப் பழக்கம், இரவு நடனங்கள், பக்தியற்ற நிலைமை ஆகியவற்றை மிகவும் அழுத்தமாக மக்கள் மனதில் பதிய வைத்தார். மக்கள் படிப்படியாக மனம் மாறினர்.
அர்ச். அல்போன்ஸ் லிகோரி எழுதிய அறநெறிப் பாடங்களைக் கற்று இவர் தன் பணியில் பயன்படுத்தினார். குருக்கள் மக்களுக்காகத் தவம் செய்ய வேண்டும் என்ற அவசியத்தை இவர் உணர்த்தினார். இவர் ஆன்மாக்களின் பாவங்களைக் கண்டுகொள்ளும் வரம் பெற்றிருந்ததால், பாவிகளிடம் கண்டிப்புடனும் கனிவுடனும் நடந்துகொண்டார். இவர் பாவிகளிடம் மிகவும் கனிவுடன் இருப்பதாக பல குருக்களின் குற்றச்சாட்டுக்கும் ஆளானார்.

 

புனிதர் பட்டம்



பிரான்சு நாட்டில் உள்ள ஆர்ஸ் நகரில் இருக்கும் புனித ஜான் மரிய வியான்னியின் அழியாத உடல்
வியான்னி பலவிதங்களில், சாத்தானின் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். ஏறத்தாழ 20 வருடங்கள் சாத்தான் இவரைத் தூங்கவிடாமல் தடுத்தான்; சில சமயங்களில் இவருடைய உடலை வதைத்தான்; இவருடைய பொருட்கள் பலவும் எரிந்து போகும்படி செய்தான்; இருப்பினும் விடாமுயற்சியுடனும் துணிவுடனும் போராடி செபத்தினால்  வெற்றி கண்டார்.

இறை ஞானத்தின் எளிய வடிவமாக விளங்கிய ஜான் மரிய வியான்னி, இறுதியாக 1859 ஆகஸ்ட் 4ந்தேதி மரணம் அடைந்தார். 1905ஆம் ஆண்டு, திருத்தந்தை 10ம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கி இவரைப் ‘பங்குத்தந்தையரின் முன்மாதிரி’ என்று அறிக்கையிட்டார். 1925ல், திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். பங்குத்தந்தையரின் பாதுகாவலரான அர்ச். ஜான் மரிய வியான்னியின் அழியாத உடல் இன்றளவும் ஆர்ஸ் தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இவரது இறப்பின் 150வது ஆண்டு நினைவை சிறப்பிக்கும் விதத்தில், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஜூன் 2009 - ஜூன் 2010 காலத்தை கத்தோலிக்க திருச்சபையில் குருக்களின் ஆண்டாக அறிவித்தார். அச்சமயம் வத்திக்கான் இவரின் உருவம் கொண்ட தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது.

தூசியாயிருக்கிறாய், திரும்பவும் தூசியாய்ப் போவாய் ( மரணம் பற்றி )

 தூசியாயிருக்கிறாய், திரும்பவும் தூசியாய்ப் போவாய் ( மரணம் பற்றி )


நீ தூசியாயிருக்கிறாய், திரும்பவும் தூசியாய்ப் போவாய் என்ற உண்மையை தீர்க்கமாய் தியானி.  நீ செத்துக் கல்லறையில், அழுகி, நாறி, புழுக்கள் உன் மூடு போர்வையாகும் என்ற இசையா வசனத்திருக்கிறார்.  இதே கதி பிரபுக்கும், குடியானவருக்கும்,  அரசனுக்கும், அழமைக்கும் சம்பவிக்கும்ää நீர் அவாகளின் உயிரைப் பறித்தால்? அவர்கள் மாண்டு, மண்ணாய்ப் போவார்கள். என்று தாவீது அரசன் பாடியபடி, ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிந்த உடனே நித்தியத்தில் பிரவேசிக்கும்.  சரீரம் அழிந்து, மக்கி தூசியாய்ப் போகும்.

இப்போது ஒரு உயிர்விட்ட மனிதனை பார்ப்பதாக நினைத்துக்கொள்.  படுக்கையில் கிடக்கும் அவன் பிரேதத்தைப் பார்.  தலையானது மார்பில் சாய்ந்து கிடக்கிறது.  தலைமயிர் மரண வேதனையால் நணைந்து, அலோங்கோலமாய் கிடக்கிறது.  கண்விழிகள் துவாரத்துக்குள் மூழ்கிப்போயின.  உதடும் நாக்கம் உறுதியாகி, சரிரம் குளிர்ந்து பளுவாகி, பார்வைக்கு அலங்கோலமாய்க் கிடக்கிறது.  சவத்தை சூழ்ந்து நிற்பவர்கள் துக்கத்தால் முகம் மாறி புலம்பி அழுகிறார்கள்.  என்ன அவலக் காட்சி.  எத்தனையோ பேர் தங்கள் சுற்றத்தார், சிநேகருடைய மரணத்தைப் பார்த்தப்பின் உலகத்தைத் துறந்துவிட்டார்கள்.

சரிரம் அழிந்து நாறத் துவக்கும்போது அதை பார்ப்பவர்களுக்கு எவ்வளவோ அறுவறுப்பும் அச்ச நடுக்கமும் உண்டாகும்.  இதோ இந்த வாலிபன் இறந்து பத்து நாழிகை கூட ஆகவில்லை.  அதற்குள்ளாக வயிறு ஊதி பொறுக்க முடியாத நாற்றம் விசுகிறது.  அதனால் கதவு வாசலை விசாலமாய் திறந்துவிட்டு ஏராளமான வாசனை ஊதிபத்திகளை புகைக்க வேண்டி இருக்கிறது.  அந்த வியாதி விட்டிலுள்ள மற்றவர்களுக்கு பிடிக்காதபடி, பிரேதத்தை கல்லறையில் புதைக்க தீவிரிக்கிறார்கள்.

தனவந்தனுடைய சரீரம் அதிகமாய் புழுத்து நாறும் என்ற ஞானி எழுதியபடி, செத்தவன் ஐசரியனாய் இருந்தால் அவன் சரிரத்தினின்று அதிக நாற்றம் உண்டாகும்.  பெருமை சிலாக்கியத்திலும், தாறுமாறிலும் சிற்றின்ப சுகத்திலும் சீவித்து வந்த இந்த நிர்பாக்கிய மனிதனுடைய முடிவைப்பார்.  இவன் சாவதற்குமுன் மற்றவர்கள் கண்டு பேச மிக்க ஆவலுடன் காத்துகொண்டிருந்தார்கள்.  இப்போதோ வெறுப்புடன் தூரத்தில் நின்று பார்க்கிறார்கள்.  அவன் உயிரோடும் இருக்கும் போது அவன் புத்தி சாமர்த்தியம் திறமை முதலிய குணங்களை பற்றிச் சகலரும் பேசி புகழ்ந்தார்கள்.  ஆனால் அவன் மரித்த பின் அவன் ஞாபகம் ஓர் சத்தத்தால் அழிந்து போயிற்று.  என்னும் தீர்க்கதரிசன வாக்கியத்தின் படி அவனை சகலரும் வெகு சீக்கிரத்தில் மறந்து போவார்கள்.  அவன் குடும்பத்துக்கு மகிமை ஆபரணமாய் இருந்தான் என்றும்ää சிலர் தங்களுக்கு அவனால் ஏதாவது நன்மை வந்தபடியால் துக்கிப்பார்கள்.  இன்னும் சிலர் அவன் செத்ததினால் உண்டான லாபத்தைப் பற்றி சந்தோஷிப்பார்கள்.

ஆனால் சிறிது காலம் சென்ற பின் ஒருவரும் அவனைப்பற்றி நிணைக்கமாட்டார்கள்.  உன் உற்றார் சிநேகதருடைய மரண வேளையில் நீ எவ்விதமாக நடந்து கொண்டாயோ அவ்விதமே நீ சாகும்போதும் மற்றவர்களும் நடந்து கொள்வார்கள்.  ;இவ்விதமாக உன் மரணமானது வெகு சீக்கிரத்தில் பெரும் சந்தோஷத்திற்கு காரணமாகும்.  நீ உயிர் விட்டு யேசுகிறிஸ்துநாதரால் நடுதீர்க்கப்பட்ட அதேயிடத்தில் மற்றவர்கள் ஆடிப்பாடி, சிரித்து உல்லாசம் கொள்வார்கள்.  அப்போது உன் ஆத்துமம் எங்கே இருக்குமென்று சற்று யோசித்துப் பார்.


DownLoad Tamil Catholic Songs Here


Tamil Catholic Blog: Download Tamil Catholic Song

Tamil Catholic Blog: Download Tamil Catholic Song: You can download the Tamil Catholic old songs.  This blog is created to spread the catholic old songs.  Now a days the songs which we  li...

செவ்வாய், 3 ஜூன், 2014

Download Tamil Catholic Song

You can download the Tamil Catholic old songs.  This blog is created to spread the catholic old songs.  Now a days the songs which we  listening is like Cinema or Csi or Pentocost sons.


Here is some link so that you can download catholic songs.  Here is a link for which is about life history of St. Antony of Padua.  which was preached by Rev. Fr. Pancras.
He preached very clearly about st. Antony.  which has 12 parts.  You can download from Here.

Life History of St. Antony Part 1

Life History of St. Antony Part 2

Life History of St. Antony Part 3


Life History of St. Antony Part 4

Life History of St. Antony Part 5

Life History of St. Antony Part 6

Life History of St. Antony Part 7

Life History of St. Antony Part 8

Other part will be uploaded soon....


Download Catholic Tamil songs.  

Download the Matha Padalgal. ( Our Lady Songs)

தேவதாயின் மாதம் 

இந்த பூவிலே

கலங்கரை தீபமே

மாசில்லா கன்னியே

For More Pls Click Here..



சிறுவர்களும் சேசுவும்



              ஒரு சமயம் தாய்மார் சிலர் தங்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு சேசுவிடம் வந்தார்கள்.  ஆண்டவரது ஆசிரை பெற விரும்பினார்கள்.  அவர் இருந்த இடத்தை அனுகினார்கள்.  சீடர்கள் அதைக் கண்டு அவர்கள
அதட்டினார்கள்.  ஆண்டவர் சீடர்களைப் பார்த்து, "பாலர்களை என்னிடத்தில் வரவிடுங்கள்.  அவர்களை தடுக்காதேயுங்கள்.  ஏனெனில் சர்வேசுரனுடைய இராச்சியம் இப்படிப் பட்டவர்களுடையதே.  சிறுபிள்ளையைப் போல் சர்வேசுரனுடைய இராச்சியத்தை ஏற்றுக் கொள்ளாத எவனும் சர்வேசுரனுடைய இராச்சியத்தில் பிரவேசியானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்". என்று கூறினார்.  பின் அக்குழந்தைகளை அரவணைத்தார்.  அக்குழந்தைகளின் தலைமீது கை வைத்து ஆசிரளித்தார்.

நாம் எப்போதும் சிறு குழந்தைக்குரிய தூய உள்ளம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.  எப்போதும் சேசுவை நாம் நேசிக்க வேண்டும்.  சேசுவும் எப்போதும் நம்மை தமது அரவணைப்பில் வைத்திருப்பார்.

திங்கள், 2 ஜூன், 2014

மலை பிரசங்கம்


                           
யூத மக்கள் சேசு செல்லும் இடமெல்லாம் சென்றார்கள்.  அவர் பல புதுமைகளைச் செய்தார்.  உடல் நலமில்லாதவர்களுக்கு உடல் நலம் அளித்தார்.  ஒரு சமயம் மக்களின் கூட்டத்தை கண்டார்.  மலைக்குச் சென்றார்.  அவருடைய சீடர்கள் அவரது பக்கத்தில் இருந்தார்கள்.  தம்மைச் சூழ்ந்து வந்த மக்களுக்கு அவர் போதித்தார்.

1. மனத்தரித்தர் பாக்கியவான்கள்.
 ஏனெனில் மோட்ச இராட்சியம் அவர்களுடையது.

2. சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்:
 ஏனெனில் அவர்கள் பூ மியை சுதந்தரித்துக் கொள்வார்கள்.

        3. அழுகிறவர்கள் பாக்கியவான்கள்:
 ஏனெனில் அவர்கள் ஆறுதலடைவார்கள்.

        4. நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.
 ஏனெனில் அவர்கள் திருப்தியடைவார்கள்.

         5. இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.
 ஏனெனில் அவர்கள் இரக்கமடைவார்கள்.

         6. தூய இருதயமுள்ளவர்கள் பாக்கியவான்கள்,
 ஏனெனில் அவர்கள் சர்வேசுரனை துதிப்பார்கள்.

         7.  சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்.
 ஏனெனில் அவர்கள் சர்வேசுரனுடைய மக்கள் எனப்படுவர்.

          8. நீதியினிமித்தம் உபத்திரவப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்:
 ஏனெனில் மோட்ச இராட்சியம் அவர்களுடையது.

உங்கள் பகைவர்களை நேசியுங்கள்.  உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.  உங்களை துன்புறுத்துகிறவர்களுக்காகவும, உங்கள் மேல் அபாண்டஞ் சொல்லுகிறவர்களுக்காகவும் வேண்டுங்கள். இவ்விதம் செய்தால், நல்லோர் மேலும் தீயோர் மேலும் தமது சூரியன் உதிக்கவும், நீதிமான்கள் மேலும் அநீதர்கள் மேலும் மழை பொழியவும் செய்கிற பரலோகத்திலுள்ள உங்கள் தந்தைக்கு ஏற்ற பிள்ளைகளாயிருப்பீர்கள்.

ஆகையால் பரமண்டலங்களிலேயிருக்கிற உங்கள் பிதா உத்தமராயிருக்கிறதுபோல நீங்களும் உத்தமராயிருங்கள்.



Click here to Download Tamil Catholic Songs .....

ஞாயிறு, 1 ஜூன், 2014

மரியாள் எலிசபெத்தம்மாளை சந்தித்தது



                       
  தன் உறவினர் எலிசபெத்தம்மாள் கருத்தரித்திருக்கிறாள் என்று கேள்விப்பட்ட மரியாள் அவளை பார்க்க விரும்பினாள்.  யூதேயா நாடு தெற்கே நெடும் தொலையிலிருந்ததது.  அங்கே செல்வதென்றால் பலநாள் பயணம் செய்ய வேண்டும்.  மலைப்பாங்கான இடம்.  எனினும் மரியாள் விரைந்து சென்றாள்.  எலிசபெத்தம்மாளின் வீட்டை அடைந்தாள்.  அப்போது அவள் திவ்விய இஸ்பிரித்து சாந்துவீனால் ஏவப்பட்டு மரியாள் கடவுளின் தாய் என்பதை உணர்ந்தாள். பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே: உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.  என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் எழுந்தருளிவர எனக்கு கிடைத்தத்தெப்படி?  என்று உரைக்க கூறினாள்.  அவ்வேளை அவள் வயிற்றிலுள்ள குழந்தை களிப்பால் துள்ளியது.

கன்னி மரியாள் கடவுளைக் கொண்டாடி என் ஆத்துமம் ஆண்டவரை மகிமைப்படுத்துகிறது.  என் இரட்சணியமாகிய சர்வேசுரனிடத்தில் என் மனமும் ஆனந்தமாய் எழுந்து மகிழ்கின்றது.  ஏனெனில் தமது அடியாருடைய தாழ்மையை கிருபாகடாட்சத்தோடு பார்த்தருளினார்.  ஆகையால் இக்காலமுதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள என்று தீர்க்கத்தரிசனமாய் உரைத்தார்கள்.  

மரியாள் மூன்று மாத காலம் அந்த இல்லத்தில் தங்கினார்.  கடவுளின் தாயாயிருந்தும் வீட்டு வேலைகளைச் செய்து உதவினாள்.  பிறர் சிநேகத்தோடு அவர்களோடு பழகினாள். அவர்களோடு கடவுளின் அரிய செயல்களையும் அளவிலா அன்பைப் பற்றியும் உரையாடினாள்.  மூன்று மாதங்கள் முடிந்தபின் தம் வீடு திரும்பினாள்.

தேவமாதா எலிசபெத்தம்மாளை சந்தித்த திருநாளை ஜீலை மாதம் 2ம் தேதி நாம் கொண்டாடுகிறோம்.


சனி, 10 மே, 2014

Hyperdulia – A Necessary Devotion

           
What do we owe our Blessed Mother?  Any answer to this question is the fathometer that measures our depth of Marian spirituality.   The traditional Mariology is divided into three aspects.  I) Our Lady in relation to God (ad Deum), where we devote our study of almost all Marian privileges.  It starts with Divine maternity and continues looking at her some of the extraordinary privilege with which she is vested with her Creator.  II) Our Lady in relation to us – here we look at the prerogative of Our Lady under the title of Co-Redemptrix, Mediatrix of all graces, etc.., and III) finally our cult towards her (ad eam), and this is designated as ‘Hyperdulia’
It is obvious, if we browse through various theological manuals and distinguished mariologist, to find the stress is laid on the 1st two aspects.  It is not inaccurate to do so.  It is the duty of the sacred science to establish the truths of the catholic faith.  But, unfortunately, they do not spend enough focus on the last aspect. I say it is unfortunate, because it is also a very important part of the doctrine that is intimately associated with our salvation.  This part of the sacred science answers exactly what do we owe Blessed Mother.
Here we will briefly synthesize the doctrine of De cultuMariae, with the guidance of the Angelic Doctor.  Since it is the key to possess true piety with doctrine.
            Before answering the question, let us briefly draw a very brief sketch of St. Thomas treatise on potential parts of Justice in his Summa Theologica[1]. There are several distinct virtues all of which participate in certain manner in the very definition of Justice. I say ‘certain manner’ because they lack something of the full perfection of the definition. It is why they are called Potential Parts.: Now, Justice is defined as a virtue that disposes man to render each one his due (2a 2ae q.58.a.1) Any virtue that operates along the same path, but cannot give to other all that is due or when the very nature of that debt does not allow an exact rendering is classified as its potential part. (2a 2ae. q80) The Doctor Communis gives a list of them and analyzes them individually- Religion, Piety, Observance, Gratitude, Veracity, Affability & Liberality. These are the subject matter of his 2a, 2ae question 80 to 120. Among all other potential parts, Religion, Piety, Observance have are thing in common, that is they deal with debts which man owes but cannot possibly return in full.
                                 i.            Religion – deals with man’s obligation towards God.
                                ii.            Piety     - With man’s relation with those from whom he has derived his life.
                              iii.            Observance – towards his superior or to those who excel in some kind of dignity. (q. 102 art 2. sed contra.)
It is also obvious that the obligations of religion are given only to God Himself. For He alone Supreme Being bound as to our unfailing principle resolutely directed as at to our last end. It is wrong to give the same cult to any creature even if it is the most excellent of all the immaculate Mother of God.  For it is reserved to the creator alone, as St. Augustine says (de verarelig. 55) may religion bind us to the one Almighty God[2]
However there is a certain cult we owe to certain men because of the position they occupy or the excellence with which they are endowed. This is what St. Thomas calls the virtue of observance. Under this every human being has an objective obligation to render due honor to Blessed Virgin Mary.
Now the virtue of observance is divided into two parts – dulia & obedience. The latter deals with those who have to right to command us – superiors in both civil and ecclesiastical sphere.
The other part of observance interests us, because while dealing with the question of dulia, St. Thomas States, “Hyperdulia is the highest species of dulia taken in the wide sense[3]”. Dulia is simply Latinized form of a Greek word[4].  In Christian terminology it is defined as a virtue that disposes men to render honor or service to creatures because of the perfection of their position of all creature that should deserve this honor the citizens of heavenly kingdom stands first in the list. By their perfection they deserve veneration and certain cult and this honor is what we call ‘dulia’. But the dignity of the perfection of the Mother of God surpasses every creature and thus deserving a special honor[5]- something above dulia –‘hyperdulia’.  This is what asserted in the Code of the canon law (CIC 1255 §1). And it is DoctrinaCatholica[6]
Our Lady

In order to understand this very special prerogative, spiritual authors draw a beautiful analogy that exists between the supreme cult of latria and the hyperdulia, keeping always in mind that both are essentially and completely distinctfrom each other and any confusion would result in grave injustice.
            “God has a dominion over all creatures in a special & singular way, because he made all things and has supreme dominion over all, consequently a special kind of service is due to him – which is known as latria.”(q.82, ad 3um).In other words, it is an act of will by which men are prompt to do whatever belongs to the service of God.
By analogy, we can say that hyperdulia is an act of willingness to do whatever is needed to pay the debt of acknowledgement owed to Blessed Virgin Mary by reason of her gloriousposition above all saint on the account of three reasons[7]: (a) by reason of her excellent dignity – as mother of the Word Incarnate. (b) by reason of her exceeding glory,  (c) by reason of her exalted glory – as queen of heaven and earth.Besides the notion of acknowledgement there is a second element – Petition of Prayer – not as to one who made all things (latria) but as to one whose intercession is so strong, so powerful that ‘never was it known that anyone who fled to her protection, implored her help, sought her intercession was left unaided’. (St. Bernard)
It is true that she is not the only intercessor we have before the throne of almighty, but hers is the only intercession that is most powerful and most universal in extent. (The extent of Ste. Thérèse of Lisieux orSt. John Bosco arelimited to the Theresian or Salesian circles). This even is intensified by the fact that she is the dispenser &mediatrix of all graces. Thus what we owe to Blessed Virgin through hyper dulia is truly of the ‘highest species of dulia’.
In conclusion, what do we owe her through Hyperdulia?
A Dominican theologian lists 4 points:
We owe Blessed Virgin Mary
a)       Veneration and reverence, by reason of her superiority and excellence and especially by reason of her dignity as the Mother of God.
b)      Confidence and invocation, because she is the most powerful and most merciful mediatrix with God.
c)       These two suppose a love for the most perfect Mother of God and filial love, because the Mother of God is our spiritual Mother.
d)      And they connaturally incite us to imitateher virtues and her holiness[8].
            Let us therefore develop in us agreater willingness to pay ‘the highest species of dulia’to our Blessed Mother, the tribute that is due to her.




[1] All quotations of Summa Theologicaare taken from the English translation of the Fathers of the English Dominican Province.
[2] 2a.2ae.q.81.a.1. corpus
[3] 2a.2ae.q.103.a.4.ad 4
[4] Class notes from Fr. Patrick Abbet, St. Thomas Aquinas Seminary, Winona
[6]Cf. AugustimaeVirginis (12 Sept, 1897), Ad diemIllum (2 Feb, 1904), Lux veritatis (25 Dec, 1931) and Sacra RituumCongregatio, 1 June 1884 – quoted by Augustus Ferland, de Marialogia, Montréal, 1945. Pg. 438
[7]Hervé, ManualetheologiaeDogmaticae, éd.Paris Vol.2. De BVM, pars III, cap. 2. pg. 603
[8]Merkelbach, O.PMariologia,page 206. (2007 edition, reprinted by www.medru.be).Augustus Ferland has the same thing but in different order. 1.  Honor – on the account of the singular privilege of Divine Maternity, 2. Imitation – on the account of her exceeding holiness, 3.Invocation - on the account of her being the merciful mediatrix and co-redemptrix, and the Universal dispensatrix of grace, 4.Tender love - because the Mother of God is our beloved spiritual mother. (Augustus Ferland, ibid, pg. 439)

ஞாயிறு, 4 மே, 2014

யார் இந்த குருக்கள்


      வின்சென்ட் தே பவுல், கிளாவர் இராயப்பர், டொன்போஸ்கோ முதலிய அர்ச்சிஷ்ட குருக்கள் மேல்நாடுகளில் அநேகமாயிரம் பேரை மனந்திருப்பி உத்தம கிறீஸ்தவர்களாக்கியிருக்கிறார்கள்.  நம் நாட்டிலும் அர்ச். சவேரியார், அர்ச். அருளானந்தர் போன்ற அர்ச்சிஷ்ட குருக்கள் தேவ சிநேகத்தினால் ஏவப்பட்டு நமது முன்னோரின் ஆத்தும இரட்சண்யத்தில் ஈடுபட்டு உழைத்தனர்.  கத்தோலிக்க தேசங்களிலும் வேத போதகநாடுகளிலும் ஆயிரக்கணக்கான அர்ச்சிஷ்ட குருக்களை இன்றைக்கும் காணலாம்.  கத்தோலிக்கத் திருச்சபையே சர்வேசுரனால் ஸ்தாபி;க்கப் பட்ட மெய்யான திருச்சபை என்று சுட்டிக் காட்டும் நான்கு பிரதான இலட்சணங்களும் "அறுப்பு மிகுதியாயிருக்கிறது,  வேலையாட்களோ சொற்பம்: ஆகையால் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுப்பின் எஜமானை மன்றாடுங்கள்”.(மத். 9:37) என்று திவ்விய சேசு திருவுளம்பற்றியிருக்கிறார் அல்லவா? சத்தியத்தைக் கைக்கொள்ள ஆவலாயிருப்பவர் அநேகர்.  அவர்களுக்கு வேத சத்தியங்களைப் போதிக்கும் குருக்களின் தொகையோ சொற்பம்.  இன்னும் அநேக குருமார்களைத் தெரிந்து அனுப்பும்படி இவ்வுலகிலுள்ள அமைத்து மக்களுக்கும் ஏக கர்த்தரும் எஜமானருமாகிய பரம பிதாவை நோக்கிப் பிரார்த்திக்கும்பழ திவ்விய இரட்சகர் நம் எல்லோரையும் அன்புடன் அழைக்கிறார்.
அர்ச்சிஷ்டதனம் ஒனறல்லவா? அப்படியானால் கிறிஸ்துராஐ சேவையில் பரிசுத்த குருக்கள் இல்லாதிருக்க முடியுமா?  திருச்சபை உண்டானது முதல் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பரிசுத்த குருக்கள் இருந்திருக்கிறார்கள், எப்போதுமிருப்பார்கள்.  ஆனால் இன்னும் அதிக பரிசுத்த குருக்கள் இருப்பார்களேயானால், அஞ்ஞான மக்கள் சீக்கிரம் மனம் திரும்புவார்கள்.  பாவிகள் தங்கள் துன்மார்க்க சீவியத்தை விட்டொழித்து சன்மார்க்க சீவியத்தை கடைப்பிடித்து வாழ்வார்கள்.  நல்ல கிறிஸ்தவர்கள் புண்ணிய சாங்கோபாங்கத்தில் உயர்ந்தோங்கி வளர்ந்து திருச்சபைக்கு ஆபரணமாகவும் மனுக்குலத்திற்கு முன் மாதிரிகையாகவும் விளங்குவர். உலகிலுள்ள சீர்கேடுகள் பெரும்பாலும் மறைந்தொழியும்: திவ்விய இரட்சகர் தமது இரத்ததை சிந்தி உயிரைக் கொடுத்த பரித்தியாகப் பலியின் பலனையும் மக்கள் அடைந்து இம்மையிலும் மறுமையிலும் பாக்கியமாய் வாழ்வார்கள்.  இத்தகைய உன்னத பாக்கியம் உலகத்திலுள்ள சகலருக்கும் கிடைக்க வேண்டுமானால் சத்திய வேதக் குருக்கள் தொகையிலும் அர்ச்சியசிஷ்டதனத்திலும் அதிகரிப்பது அவசியம்.  இக்கருத்து நிறைவேறுமாறு கத்தோலிக்கராகிய நாம் சேசுவின் திரு இருதயத்தை நோக்கி இரந்து மன்றாட வேண்டும்.


             குருத்துவத்தின் மகத்துவ மேன்மையும் குருக்களினால் நமக்கு வரும் எண்ணிறைந்த உந்நத நன்மை வரங்களும் இன்னவையென்று எவ்வளவுக்கு நாம் நன்கறிந்திருக்கிறோமோ அவ்வளவுக்கு, “இன்னும் அதிக குருக்களை, அதிலும் பரிசுத்த குருக்களை, எங்களுக்கு தந்நருளும்” என்று பரம பிதாவை நோக்கி நாமெல்லோரும் பக்தியுருக்கத்தோடும் ஆவலோடும் நம்பிக்கையோடும் வேண்டிக்கொள்வோம் என்பது திண்ணம்.




            குருத்துவத்தின் மகத்துவ மேன்மையை ஐயம் நீங்கக் கண்டுணர்ந்து மதிக்கவேண்டுமாகில் நாம் கத்தோலிக்க குருவானவர் நிறைவேற்றிவரும் வேலை இன்னதென்று அறிந்திருப்பது அவசியம்.  குருவானவர் சர்வேசுரனுடைய பிரதிநிதி. தமது காரியங்களையெல்லாம் இவ்வுலகில் அவர் கண்காணிக்க சர்வேசுரனால் நியமிக்கப்பட்டவர்.  “சர்வேசுரனைச் சார்ந்த வேலைகள் தெய்வீக வெலைகளாம்.  தெய்வீக வேலைகளைச் செய்யும் குருவானவரின் பதவி தெய்வீகப் பதவி” என்கிறார் அர்ச். அம்புரோஸ். சர்வேசுரனுக்கு பகிரங்க ஆராதனை செலுத்தி அவரை இவ்வுலகில் மகிமைப்படுத்துவதும் அவரிடமிருந்து உன்னத நன்கொடைகளைப் பெற்று இவ்வுலக மக்களுக்கு கொடுப்பதும் சர்வேசுரனைச் சார்ந்த வேலைகளல்லவா? சகல சம்மனசுகளும் அர்ச்சிஷ்டவர்களும் சேர்ந்து தேவ மகத்துவத்திற்கு வருவிக்கும் மேலான ஆராதனை ஸ்துதி தோத்திரங்களைவிட குருவானவர் தாம் நிறைவேற்றும் ஒரேயொரு திவ்விய பூசை பலியினால் மேலான ஆராதனை ஸ்துதி வணக்கம் தேவ மகத்துவத்துக்குச் செலுத்துகிறார்.   மோட்சவாசிகள் சர்வேசுரனுக்கு வருவிக்கக் கூடிய மகிமை வணக்கமெல்லாம் ஒன்றுசேர்ந்தாலும் அவையாவும் மட்டுள்ளவை, அளவு உள்ளவையே குருவானவர் ஒப்புக்கொடுக்கும் திவ்விய பூசை பலியினால் சர்வேசுரனுக்கு உண்டாகும் மகிமை வணக்கமோ அளவு கடந்தது. கரைகாணா சமுத்திரம் போன்றது:  தேவ சமுகத்தில் அளவற்ற மதிப்புள்ளது.  மோட்சவாசிகளுக்கும் இவ்வுலக மக்களுக்கும் சர்வேசுரன் அளித்திருக்கும் எண்ணற்ற நன்கொடைகளுக்கு ஏற்றவாறு நன்றிசெலுத்த அர்ச்சியசிஷ்டவர்களாலும் முடியாது.  ஆனால் குருவானவர் நிறைவேற்றும் பூசைப்பலியோ சர்வேசுரனிடமிருந்து சம்மனசுக்களும் மனுமக்களும் பெற்றிருக்கும் சகல உபகார சகாயங்களுக்கம் யோக்கியமான நன்றி சமர்ப்பிக்கப் போதுமானது.  ஆதலால் பரலோக பதவிகளுக்கொல்லாம் மேலானது குருத்துவப் பதவி என்று வேதசாஸ்திரிகள் கூறுவதில் ஆச்சரியப்பட இடமில்லை.


           இது மாத்திரமின்றி மனதர் செய்யும் பாவங்களை மன்னிக்கவும் மன்னியாதிருக்கவும் பாவங்களுக்குத் தக்க பரிகாரம் செய்யவும் சர்வேசுரன் தமது குருக்களுக்கு வல்லமையும் அதிகாரமும் அளித்திருக்கிறார். “எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவைகள் மன்னிக்கப்படும். எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவர்களுக்கு அவைகள் மன்னியாதிருக்கப்படும்” (அரு. 20:23) பாவங்களை மன்னிப்பதும் மன்னியாதிருப்பதும் தெய்வீக வேலையல்லவா?  இந்த வேலையைச் செய்துவரும் குருவானவரின் பதவியை தெய்வீகப் பதவி என்று அர்ச். அம்புரோசியார் அழைப்பதில் என்ன ஆட்சேபனை?


              மரணத்தருவாயிலிருக்கும் கிறீஸ்தவனுடைய மன்றாட்டுக்கிணங்கி அர்ச். மிக்கேல் அவனிடமிருந்து நரகப் பேயை அடித்துத் துரத்திவிடுவார்;: ஆனால் அவனுடைய ஆத்துமத்தைக் கட்டியிருக்கும் பாவச் சங்கிலியைத் துண்டித்து எறிய அவரால் முடியாது.  சங்கிலியைத் துண்டித்டிதறிந்து பாவியைப் பசாசின் அடிமைத்தனத்திலிருந்து காப்பாற்ற வல்லமை பூண்டவர் கத்தோலிக்கக் குரு.  கோவிலில் ஒரு பாவசங்கீர்த்தன தொட்டியில் நமது தேவ இரட்சகர் உட்கார்ந்து கொண்டு தம்மிடம் வரும் பாவியைப் பார்த்து “உன் பாவங்களைப் பொறுக்கிறேன்” என்று சொல்வாராகில் அவனுடைய பாவங்கள் உடனே பொறுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.  அதேபொல் மற்றொரு பாவசங்கீர்த்தனத் தொட்டியில் ஒரு குருவானவர் உட்கார்ந்து கொண்டு தம்மிடம் வரும் பாவியைப் பார்த்து, “உன் பாவங்களை பொறுக்கிறேன்” என்றால் அதே விதமாய் பொறுக்கப்படும்.  இவ்வுலகில் குருவானவர் செய்யும் நியாயத் தீர்ப்பைக் கிறீஸ்து ராஜா பரலோகத்தில் உறுதிப்படுத்துகிறார்.


             அர்ச். சின்னப்பர் சத்தியவேதக் குருக்களை சர்வேசுரனுடைய பரம இரகசியங்களை மனிதருக்குப் பகிர்ந்து கொடுக்கிறவர்கள் என்று கூறுகிறார். திவ்விய பலிபூசையில் குருவானவர் நமது தேவ இரட்சகரின் பரிசுத்த சரீரத்தைத் தமது கரங்களினால் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுப்பதுமன்றி விசுவாசிகளுக்கும் அதைக் கொடுத்து அவர்க்ள ஆத்துமங்களை போஷிக்கிறார்.  மனிதன் பிறந்ததிலிருந்து மரிக்கும் வரையில் அவனுக்கு உனனத உதவி சகாயங்களை புரிந்துவருபவர் இவ்வுலகில் சர்வேசுரனுடைய ஸ்தானதிபதியாயிருந்து அவருடைய தெய்வீக வேலையைச் செய்ய அவரால் நியமிக்கப்பட்டக் கத்தோலிக்க குருவானவர்தான்.  குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுத்து அவனைச் சர்வேசுரனுடைய பிள்ளையாக்குகிறவர் குருவானவர்.  அவனுடைய ஆத்துமத்திற்குத் தெய்வீக மன்னாவாகிய தேவநற்கருணையை அளித்து அதைப் போஷிப்பவர் குருவானவர்.  ஆத்தும நோய்களைப் பாவசங்கீர்த்தனத்தின் வழியாய் குணப்படுத்தி ஆத்துமத்தை ஞான ஜீவியத்தில் ஸ்திரப்படுத்துகிறவர் குருவானவர்.  கடைசியாக மனிதன் மரித்தப் பின் தேவ சந்நிதானத்தில் அச்சமின்றி சென்று தனது சீவியத்தின் கணக்கைக் கொடுக்க அவருடைய மரணப்படுக்கையினருகில் நின்று அவனுக்கு அவஸ்தைக் கொடுத்து ஆறுதல் அளித்து ஆயத்தப்படுத்துபவர்கள் குருவானவர்.  மெய்யாகவே சகல நன்மைகளும் குருவானவர் மூலமாகவே நமக்கு வருகின்றன.  கத்தோலிக்க குரு இவ்வளவு மகத்துவமும் மகிமையும் கௌரவமும் பொருந்தி மேலான பதவியை வகித்து வருபவரென்றால் அதற்கு தகுந்த அர்ச்சியசிஷ்டத்தனம் அவரிடத்தில் விளங்க வேண்டும்.
அர்ச்சியசிஷ்ட குரு சர்வேசுரன் தமது மக்கள் மீது தயைபுரிந்து அளித்தருளும் விலைமதிக்கப்படாத ஒரு நன்கொடை என்பதை விசுவாசிகள் ஞாபகத்தில் வைத்திருப்பது அவசியம்.  நன்கொடை என்றால் அதைப் பக்தி விசுவாசமுள்ள ஜெபத்தினால் சர்வேசுரனிடமிருந்து இரந்து மன்றாடிஅடைந்து கொள்ள வேண்டும்.


        ஏனெனில் விசுவாசிகள் எப்படியோ அப்படியே குருக்களும்.  விசுவாசிகளின் பிள்ளைகள் தானே குருமடத்தில் சேர்ந்து குருப்பட்டம் பெறுகிறார்கள்.  நல்ல மரம் நல்ல கனியை கொடுக்கும்.  கிறீஸ்தவர்கள் பக்தி விசுவாசமுள்ளவர்களாயிருந்தால் அவர்களிடமிருந்து உற்பத்தியாகும் பிள்ளைகளும் உத்தம கிறீஸ்தவர்களாய் வளர்ந்து சேசுவின் திரு இருதயத்திற்கு உகந்த அர்ச்சியசிஷ்ட குருக்களாய் விளங்குவார்கள்.  கத்தோலிக்க தாய் தந்தையர் தங்கள் பிள்ளைகளுள் ஒருவரையாகிலும் தமது குருவானவராக திவ்விய சேசு ஏற்றுக்கொள்ளக் கிருபை புரியுமாறு மன்றாட வேண்டும்.  குருத்துவ அழைத்தலை அபிவிருத்தி செய்ய ஏற்படுத்தப்பட்டிருக்கும் அர்ச். பத்தாம் பத்திநாதர் சபையில் சேர்ந்துள்ள குருத்துவ மாணவர்களுக்கு தங்கலான உதவிகளை செய்யும் கிறீஸ்தவர்கள் நன்கொடைகளைப் பெறுவார்கள்.  மாதத்தின் முதல் சனி குருக்களின் தினமாக திருச்சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நாள்.  நமது நாட்டிலும் அர்ச்சியசிஷ்ட குருக்கள் அதிகரிக்க வேண்டுமென்று நாமெல்லோரும் தினந்தோறும் திரு இருதயத்தை நோக்கிப் பிராத்திக்க வேண்டும். விசேஷமாய் மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமைகளில் இந்த மேலான கருத்துக்காக நமது ஜெப தபங்களை ஒப்புக் கொடுப்போமாக.