Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 2 ஜூன், 2014

மலை பிரசங்கம்


                           
யூத மக்கள் சேசு செல்லும் இடமெல்லாம் சென்றார்கள்.  அவர் பல புதுமைகளைச் செய்தார்.  உடல் நலமில்லாதவர்களுக்கு உடல் நலம் அளித்தார்.  ஒரு சமயம் மக்களின் கூட்டத்தை கண்டார்.  மலைக்குச் சென்றார்.  அவருடைய சீடர்கள் அவரது பக்கத்தில் இருந்தார்கள்.  தம்மைச் சூழ்ந்து வந்த மக்களுக்கு அவர் போதித்தார்.

1. மனத்தரித்தர் பாக்கியவான்கள்.
 ஏனெனில் மோட்ச இராட்சியம் அவர்களுடையது.

2. சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்:
 ஏனெனில் அவர்கள் பூ மியை சுதந்தரித்துக் கொள்வார்கள்.

        3. அழுகிறவர்கள் பாக்கியவான்கள்:
 ஏனெனில் அவர்கள் ஆறுதலடைவார்கள்.

        4. நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.
 ஏனெனில் அவர்கள் திருப்தியடைவார்கள்.

         5. இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.
 ஏனெனில் அவர்கள் இரக்கமடைவார்கள்.

         6. தூய இருதயமுள்ளவர்கள் பாக்கியவான்கள்,
 ஏனெனில் அவர்கள் சர்வேசுரனை துதிப்பார்கள்.

         7.  சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்.
 ஏனெனில் அவர்கள் சர்வேசுரனுடைய மக்கள் எனப்படுவர்.

          8. நீதியினிமித்தம் உபத்திரவப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்:
 ஏனெனில் மோட்ச இராட்சியம் அவர்களுடையது.

உங்கள் பகைவர்களை நேசியுங்கள்.  உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.  உங்களை துன்புறுத்துகிறவர்களுக்காகவும, உங்கள் மேல் அபாண்டஞ் சொல்லுகிறவர்களுக்காகவும் வேண்டுங்கள். இவ்விதம் செய்தால், நல்லோர் மேலும் தீயோர் மேலும் தமது சூரியன் உதிக்கவும், நீதிமான்கள் மேலும் அநீதர்கள் மேலும் மழை பொழியவும் செய்கிற பரலோகத்திலுள்ள உங்கள் தந்தைக்கு ஏற்ற பிள்ளைகளாயிருப்பீர்கள்.

ஆகையால் பரமண்டலங்களிலேயிருக்கிற உங்கள் பிதா உத்தமராயிருக்கிறதுபோல நீங்களும் உத்தமராயிருங்கள்.



Click here to Download Tamil Catholic Songs .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக