Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 28 ஜூன், 2014

தனிமையில் வேதனை

வேதனையைக் கண்டு நம் சுபாவம் நடுங்குகிறது.  தனிமையில் வேதனைப்படுவது  இன்னும் அதிக பயங்கரமானது.  வேதனை நேரத்தில் நண்பர்கள் கிடைப்பது வரமாகும்.  துயரம் என் உள்ளதை வாட்டும் போது அல்லது உடல் நோவுடன் படுக்கையில் புரள நேரிடும் போது உள்ள துயரத்தை அன்பு என்னும் தைலத்தால் அகற்ற முயலும் நண்பன் கிடைப்பானாகில், அல்லது உடல் நோவை நான் தைரியத்துடன் சகிக்க தன் பிரசன்னத்தால் துணை புரியும் சிநேகிதி கிடைப்பாளாகில், இத்தால் கிடைக்கும் ஆறுதல் வர்ணிக்க முடியாது.
tamil catholic prayers

வேதனை நேரத்தில் தோழர் கிடைப்பது பெரும் பேறாகும். தனிமையில் உள்ளத் துயரத்தால் நான் அவதிபடும் போது உற்ற நண்பனும் அதில் பங்குபெற முடியாமல் போனால், வேதனைப் படுக்கையில் அந்நியர்கள் என்னைக் கடந்து போனால் அனுதாபமின்றி என்னை நோக்குவார்களானால்,இது எத்துனை பரிதாபத்துக்குரியது?  கிறிஸ்தவ மேறையாக நான் வேதனையை நான் சகிக்க வேண்டுமானால், நினைவால் நான் ஒலிவமரத் தோப்புக்கு  நான் செல்ல வேண்டும்.  தனியாக உபாதைப்பட்ட சேசுவின் அருகில் நான் முழந்தாளிட வேண்டும்.  ஐத்செமணியில் நடுசாம அவஸ்தையை உள்ளத்தை அழுத்திய கொடிய துயரத்தையும் உடலை நசுக்கிய வேதனையையும் தனிமையில் சகித்தவரே, தனிமையில் நான் படும் வேதனையை கண்டுப்பிடிப்பார்.  தமது அன்பு நிறை  ஆறுதலால் என்னைத் தேற்றுவார்.


வாழ்வில் வேதனை இருக்கும்.  யேசுவுடன் சேர்ந்து யேசு பருகியது போல, தனிமையில், ஐத்செமணியின் கசப்பு நிறை பாத்திரத்திலிருந்து பருகியதுபோல நான் பருகுவேனானால் கசப்பான பாத்திரத்தில் இனிமையையும் காண்பேன்.


ஓ மிகவும் இனிய சேசுவே, உம்மை நான் அதிகமதிகமாக நேசிக்கும் வரத்தை அருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக