Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 29 டிசம்பர், 2018

How to say Rosary in Tamil (Glorious Mysterious)

மகிமைத் தேவ இரகசியங்கள்

1-ம் தேவ இரகசியம் 
உஷ்ண காலமும் குளிர் காலமும் நீங்கிப்போக வசந்த காலம் வருகிறபோது பிரசன்னமாயிருக்கிற மோட்சத்தினுடைய இராக்கினியே, உம்முடைய திருக்குமாரனாகிய சேசுநாதர் பாடுபட்டு மரித்த துக்கக் காலத்திற்குப்பின் மூன்றாம் நாள் கல்லறையை விட்டுச் செயசீலராய்ச் சூரியனிலும் அதிகப் பிரகாசமான சுப சௌந்தரிய சுடராய் உயிர்த்தெழுந்து அவரை நீர் கண்டதினாலே உமக்கு அளவற்ற மகிமை பொருந்திய சந்தோஷ காலம் வந்ததே, அந்த மகிமையைப் பார்த்து நாங்கள் பாவமாகிய மரணத்தை விட்டு ஞான விதமாய் உயிர்த்தெழுந் திருக்கத் தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும், - ஒரு பர. பத்து அருள். ஒரு திர்.

2-ம் தேவ இரகசியம்
முழுமையும் பரிசுத்தமுமாயிருக்கிற அர்ச். தேவமாதாவே மட்டில்லாத மகிமையும் மாறாத திருச் செயமுங்கொண்ட உம்முடைய திருக்குமாரனாகிய சேசுநாதர் உத்தானமாயின நாற்பதாம் நாள் வானவர் அணியாகச் சூழ ஆதிபிதாக்களோடே மா-மாகிமையுடன் பரலோகத்திற்கு ஆரோகணமானதைக் கண்டு அத்தியந்த சந்தோஷ மகிமை அடைந்தீரே, அந்த மகிமையைப் பார்த்து இவ்வுலகத்தில் பரதேசிகளாயிருக்கிற நாங்கள் பரலோகத்தையே வருந்தி நாடிப் பரலோக பாக்கியமான மோட்ச ஆனந்தத்தைப் பெறத் தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.

3-ஆம் தேவ இரகசியம்
தேவ நன்மைகளால் நிறைந்தவளுமாய் வானோர்களுக்கு அரசியுமாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, உம்முடைய திருக் குமாரனாகிய சேசுநாதருடைய சீடர்களோடு நீர் தியானத்தில் இருக்கிறபோது அக்கினி நாக்கு ரூபமாய் இஸ்பிரீத்துசாந்து இறங்கிவந்து, உமது இருதயத்தையும் சீடர்கள் இருதயத்தையும் அருள் வரங்களினாலே நிரப்பினதினால் அத்தியந்த சந்தோஷ் மகிமை அடைந்தீரே, அந்த மகிமையைப் பார்த்து இஸ்பிரீத்து சாந்துவின் வரப்பிரசாதத்தை நாங்கள் அடைந்து தேவ சித்தத்தின் படி யே நடக்கத்தக்கதாக உம்முடைய திருக்குமார னை வேண்டிக்கொள்ளும். - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.

4-ம் தேவ இரகசியம்
பூசிக்கப்படத்தக்க தகுதியுடையவராயும் புண்ணிய வழிக்கு மாதிரிகையுமாயிருக்கிற 
அர்ச். தேவமாதாவே, உமது திரு ஆத்துமம் திருச் சரீரத்தை விட்டுப் பிரிந்து 
உம்முடைய திருக்குமாரன் சேசுநாதருடைய திருக் கரம் சேர்ந்த மூன்றாம் நாள்
 திவ்விய சுகந்த பரிமள வாசமும் அதிப் பிரகாசமும் உடைத்தான உமது திருச் 
சரீரத்தோடுங்கூடக் கல்லறையை விட்டு வானோர்களுடைய பரிவாரஞ் சூழ்ந்து 
மதுரமான கான சங்கீதங்கள் தொனிக்கப் பரலோகத்திற்கு எழுந்தருளி அத்தியந்த
 சந்தோஷ மகிமை அடைந்தீரே, அந்த மகிமையைப் பார்த்துப் பூலோகம் என்கிற 
துக்க சாகரத்திலே மிகுந்த ஆபத்துக்குள் இருக்கிற எங்களை உமது கிருபாகடாட்
சத்தினாலே நோக்கிப் பாவிகளாயிருக்கிற நாங்கள் மோட்சக்கரை ஏறத்தக்கதாக 
உம்முடைய திருக் குமாரனை வேண்டிக்கொள்ளும். - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.

5-ம் தேவ இரகசியம்
நன்மைக் கடலுமாய் நம்பினவருக்கு ஆதாரமுமாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, சிருஷ்டிக்கப்பட்ட சர்வ பொருட்களுக்கும் மேலான சகல சுகிர்தங்களினாலே நீர் நிறைந்தலங்கரிக்கப் பட்டவளாகையால் பரலோகத்திற்கு எழுந்தரு
ளியவுடனே சகல அர்ச்சியசிஷ்டவர்களையும்விட அதிகமான மோட்ச சம்பாவனைப் பெற்று, அர்ச். தமதிரித்துவத்தினால் வானோர்களுக்கெல்லாம் இராக்கினியாகக் கிரீடம் தரிக்கப்பட்டு, சம்மனசுக்கள் மோட்ச வாசிகள் எல்லோருக்கும் மேலாக உயர்த்தி ஸ்தாபிக்கப்பட்டு, நித்திய பேரின்ப வாழ்வு நிறைந்த மகிமை அடைந்தீரே, அந்த

மகிமையைப் பார்த்து நீர் அனுபவிக்கிற மோட்சானந்த பாக்கியத்தில் ஓர் அற்ப பங்கு பாவிகளாயிருக்கிற அடியோர்களும் பெறத்தக்கதாக உம்முடைய திருக் குமாரனை வேண்டிக் கொள்ளும். - ஒரு பர. பத்து அருள். ஒரு திரி.

அ. முடிக்கிற வகையாவது
அதிதூதரான அர்ச். மிக்கேலே, தேவதூதர்களான அர்ச். கபிரியேலே, இரஃபாயலே,
 அப்போஸ்தலர்களான அர்ச். இராயப்பர், சின்னப்பர், அருளப்பரே, நாங்கள்
எத்தனைப் பாவிகளாயிருந் தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த நூற்று
 ஐம்பத்து மூன்று மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப் பாதத்திலே 
உங்கள் தோத்திரங்களோடே கூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக 
வைத்து உங்களைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். - ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக