Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வியாழன், 23 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 7:

 அர்ச்.பெர்னார்டின் சபையினரை சந்தித்தல்

ரோமாபுரியில் சிலவாரங்கள் தங்கியபிறகு, 1205ம் ஆண்டு மார்ச்சு மாதம், வந்.டீகோ ஆண்டகையும் அர்ச்.சாமிநாதரும் பிரான்சு நாட்டிற்கு சென்றனர். அங்கு அர்ச்.பெர்னார்ட் ஏற்படுத்திய சிஸ்டர்ஷியன் துறவற மடமான சிட்யோக்ஸ் மடத்திற்கு சென்றனர். அங்கு தபசுகாலத்தின் பெரிய வார திருச்சடங்குகளில் பங்கேற்றனர். அத்துறவற சபையினரின் ஒழுங்குகள் மற்றும் பரிசுத்த துறவற ஜீவியமானது வந்.டீகோ ஆண்டகையை மிகவும் ஈர்த்தது. அவர் அச்சபையில் தானும் உட்பட மிகவும் ஆசித்தார். அத்துறவறசபை ஒழுங்குகளை நன்கு அறிந்துகொள்ளும் பொருட்டும் அச்சபையை தனது மேற்றிராசனத்தில் நிறுவுவதற்காகவும் ஓஸ்மா மேற்றிராசனத்திற்கு தன்னுடன் அச்சபைத் துறவிகள் சிலரையும் அழைத்துச் செல்லத் திட்டமிட்டார்.

அதன்பிறகு, அங்கிருந்து மோன்ட்பெல்லியர் நகருக்கு அத்துறவியர் சிலருடன் இருவரும் சென்றனர். அங்கிருந்த அச்சபைமடத்தில் தான், பாப்பரசரால் ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் தலைவரும் சபையின் அதிபருமான சங்.ஆர்னால்ட் சுவாமியாரும் மற்றும் மற்ற இரு உறுப்பினர்களான சங்.ருடால்ஃப் சங்.பீட்டர் என்ற இரு துறவியரும் இருந்தனர். அந்த மடாதிபதியான சங்.ஆர்னால்ட் சுவாமியார் வந்.டீகோ ஆண்டகையிடம், “பரிசுத்த தந்தை பாப்பரசர் மட்டும் இம்மக்களை மனந்திருப்பும் அலுவலை எங்களுக்குக் கட்டளையிட்டிராவிட்டால், நாங்கள் உடனே சிட்யோக்ஸ் மடத்திற்கு திரும்பி சென்றிருப்போம். இதுபோன்ற இருதயத்தைக் கசக்கிப் பிழியும் அலுவலை இதுவரை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை” என்று கூறினார். வந்.டீகோ ஆண்டகையும் அர்ச்.சாமிநாதரும் அத்துறவியர் ஆல்பிஜென்சிய பதிதத்தை ஒழிக்கும் அலுவலில் உற்சாகமிழந்ததற்கான காரணத்தை உணர்ந்தனர். 50 வருடங்களுக்கு முன்பு தான் அச்சபையின் நிறுவனரும் அத்துறவற சபைக்கு மாபெரும் ஒளியாகவும் திகழ்ந்த அர்ச்.பெர்னார்ட் இதுபோன்றகாரணத்தினாலே மனமுடைந்து போனதை அவருடைய சரித்திரத்தில் பார்க்கிறோம். 

காலம் இன்னும் மாறவில்லை. அப்போது கிறீஸ்துவர்களெல்லாரும் ஒன்று சேர்ந்து மோன்பெல்லியர் நகரில் ஒரு கூட்டத்தை நடத்தினர். அதில் பாப்பரசரால் ஏற்படுத்தப்பட்டதுறவியருடைய தூதுக்குழுவினர், ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் அவற்றின் தோல்விக்கான காரணங்களைப்பற்றியும் தர்க்கித்தனர். அச்சமயம் அந்நகருக்கு புதிதாக வந்திருக்கும் வந்.டீகோ ஆண்டகை மற்றும் அர்ச்.சாமிநாதரைப் பற்றிக் கேள்விபட்ட கூட்டத்தினர், அவர்கள் இதற்கு முன்பு ஒரு சமயம் அங்கு வந்தபோது ஏற்பட்ட நிகழ்வுகளையும் அறிந்திருந்ததால் (அத்தியாயம் 4iபார்க்கவும்) அவர்களையும் தங்களுடைய கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தனர். 

அதனை ஏற்று இருவரும் கூட்டத்திற்கு வந்தனர். இதுவரை ஆல்பிஜென்சிய பதிதர்கள் ஏற்படுத்திய நாசகரமான சீரழிவுகள், அப்பதிதத்தை அழிப்பதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள், அதனால் ஏற்பட்ட விளைவுகள், ஏமாற்றங்கள் தோல்விகள் பற்றியெல்லாம் மிக விரிவாக இவ்விருவருக்கும் எடுத்துரைக்கப்பட்டன. உத்தம கத்தோலிக்கு வேத விசுவாசம் தனிப்பட்ட மனிதரின் துர்மாதிரிகையையோ அல்லது நன்மாதிரிகையையோ மட்டும் சார்ந்திருக்கவில்லை. மாறாக திருச்சபையால் வெளிப்படுத்தப்பட்ட தவறா வரம்பெற்ற சர்வேசுரனுடைய உன்னத வார்த்தையை மட்டும் தான் சார்ந்திருக்கின்றது. வந்.டீகோ ஆண்டகை பதிதர்களை முறியடிக்க முற்பட்ட துறவியரின் ஜீவியமுறையைப்பற்றியும் பதிதர்களின் ஜீவிய முறையைப் பற்றியும் விசேஷமாக விசாரிக்கலானார். 

அவர் உடனே கூட்டத்தினரிடம், “கத்தோலிக்கு வேதபோதகத்தில் ஈடுபட்டிருந்த துறவியா;, சுவிசேஷத்தில் கூறப்பட்ட தரித்திரத்தை அணிந்து கொள்ளாததால், ஆன்ம இரட்சணிய அலுவலுக்கு அதுவே மாபெரும் தடையாக இருந்தது” என்று கூறினார். முத்.ஜோர்டன் சகோதரர் இதைப்பற்றி தன் அர்ச்.சாமிநாதசபை வரலாற்றின் குறிப்பேட்டில், “ வந்.டீகோ ஆண்டகை அக்கூட்டத்தினரிடம், “பதிதர்கள் தங்களுடைய கவர்ச்சியான போதகங்களையும், வெளியரங்கத்தில் மாபெரும் பரிசுத்தமான தோற்றத்தையும் கொண்டு எளிய மனிதரையும் வசிகரித்தனர். ஆனால் நமது கத்தோலிக்க வேதபோதக துறவியர் மாபெரும் பரிசாரகக் கூட்டத்தினருடனும் பல குதிரைவிரர்கள் புடைசுழ்ந்துநிற்கஆடம்பரமான ஆடைகளுடன் அங்கு போதித்து வந்துள்ளனர். எனவே சகோதரரே! இவ்வாறு நிங்கள் செயல்படுவது நன்றல்ல. அப்பதிதர்கள் எளிய ஆத்துமங்களை தரித்திரமும் தபசும் நிறைந்த வெளித்தோற்றத்துடன் தங்கள் பக்கம் இழுக்கின்றனர். அதற்கு மாறான ஆடம்பரமான தோற்றத்தில் இருக்கும் நிங்கள் அவர்களுக்கு எந்த ஞான உபதேசத்தையும் பயனளிக்கும் விதத்தில் போதிக்கமுடியாது. அவர்கள் அதனால் இடறல்பட்டு அழிந்து போவார்கள்.  ஆனால், உங்களால் அவர்களுடைய இருதயங்களைத் தொட முடியாது” என்று கூறினார்” என்று குறிப்பிடுகின்றார். 

வந்.டீகோ ஆண்டகையின் இவ்வார்த்தைகள் அக்கூட்டத்தினரை ஓரளவிற்கு தேற்றின. ஆனால் அத்தகைய கடினமான ஆலோசனைகளைப் பின்பற்ற யாருக்கும் துணிவு வரவில்லை. அக்கூட்டத்தினர், உடனே அத்தகைய தவக்கோலத்துடன் தங்களை வழிநடத்துபவர் யாரும் இல்லையே என்று உணர்ந்தனர்.“மிக அருமை ஆண்டவரே! நாங்கள் என்ன செய்ய விரும்புகிறிர்கள்?” என்று ஆண்டகையிடம் கேட்டனர். ஆண்டவரின் இஸ்பிரீத்துவானவர்  தன் மேல் இறங்கியவராக, வந்.ஆண்டகை “இப்பொழுது நான் செய்வதைச் செய்யுங்கள்” என்றார். பிறகு, தன் பரிசாரகர் அனைவரையும் ஓஸ்மா மேற்றிராசனத்திற்கு அனுப்பிவிட்டார்.

அர்ச்.சாமிநாதரும்,சில திருச்சபை அதிகாரிகளும் மட்டுமே அவருடன் இருந்தனர். வேதசத்தியங்களைக் கொண்டு பதிதர்களிடம் வாதிக்கும்படியாக வேத புத்தகங்களையும், கட்டளை ஜெபம், தேவசங்கீத பாடல்களை ஜெபிப்பதற்கு தேவையான ஜெபபுத்தகங்களை மட்டும் தங்களுடன் வைத்துக் கொண்டனர். அக்கூட்டத்தினர் ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்கான தங்களுடைய  நன்மாதிரிகையுள்ள தலைவராக, வந்.டீகோ ஆண்டகையையே, ஒருமுகமாக பாப்பரசருடைய அனுமதியுடன் தேர்ந்தெடுத்தனர். † (தொடரும்)


அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 8

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 6


செவ்வாய், 21 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 6

 

பாப்பரசர் 3ம் இன்னசென்ட்டை சந்திக்கின்றார்



1204ம் ஆண்டில் அர்ச்.சாமிநாதருடன் ரோமாபுரியை வந்தடைந்த வந்.டீகோ ஆண்டகை, கிழக்கத்திய நாடான ஹங்கேரி மற்றும் அதைச் சுற்றியிருந்த கிறிஸ்துவ நாடுகளை அடிக்கடி கொள்ளையடித்து சீரழித்து வந்த டார்டார் கூமன் இனத்தவரை மனந்திருப்புவதற்காக அங்கு சென்று வேதபோதக அலுவலை மேற் கொள்வதற்காகவும் அவ்வுன்னத அப்போஸ்தலிக்க அலுவலில் வேதசாட்சிய முடிபெறுவதற்கான தன் ஆன்ம இரட்சணிய ஆவலின் பொருட்டு தன்னை ஓஸ்மா நகர மேற்றிராணித்துவ அந்தஸ்திலிருந்து விடுவிக்கும் படியாக பாப்பரசர் 3ம் இன்னசென்ட்டிடம் (Pope Innocent III)அனுமதி கோரினார். ஆனால் பாப்பரசர் இவ்விண்ணப்பத்தை நிராகரித்தார். பாப்பரசர் தான் பதவியேற்றதிலிருந்து கடந்த 6 வருடங்களாக திருச்சபைக்கு பெரும் திங்கு விளைவித்து வந்த ஆல்பிஜென்சிய பதிதத்தை பிரான்சின் தெற்கு பகுதியிலிருந்து ஒழித்து அகற்றுவதற்காக பாப்பரசருடைய குழு (Commision) ஒன்றை ஏற்படுத்தினார். அர்ச்.பெர்னார்ட் ஏற்படுத்தியிருந்த சிஸ்டர்ஷியன் சபையின் அதிபரான சங்.ஆர்னால்ட் சுவாமியாரும் சங்.ருடால்ஃப், சங்.பீட்டர் என்ற அச்சபையின் இருகுருக்களும் மற்றும் அச்சபையைச் சேர்ந்த சில மடத்து அதிபர்களும் அக்குழுவில் இருந்தனர். அவர்கள் பிரான்சு நாட்டின் தெற்கு பகுதிக்குச் சென்று அங்கு நுற்றுக்கணக்கான ஞானபிரசங்கங்களை இதுவரை நிகழ்த்தியுள்ளனர். 

ஆனால், அதனால் அவர்கள் வெகு சொற்ப பலனையே கண்டனர். இப்பதிதத்தை ஒடுக்குவது அவர்களுக்கு மிகக்கடினமாக இருந்தது. ஏனெனில் அப்பகுதியின்பங்குகுருக்களும் மேற்றிராணிமார்களும் மிதமிஞ்சிய உலகப்பற்றுமிக்கவர்களாக ஆடம்பரமாக ஜீவித்தனர். தங்கள் பொறுப்பிலுள்ள விசுவாசிகளின் ஞானஜீவியத்தைப்பற்றி யாதொரு கவலையுமின்றி இருந்தனர். தூலூஸ் நகரத்தின் சிற்றரசன் ரேமண்ட் தன் செல்வாக்கைக் கொண்டு ஆல்பிஜென்சிய பதிதத்தின் வல்லமைவாய்ந்த பாதுகாவலனாக திகழ்ந்தான். பாப்பரசர் 3ம் இன்னசென்ட இந்த சு+ழலைப் பற்றி, “இப்பகுதியில் ஞானமேய்ப்பர்களான பங்கு குருக்கள் சம்பளத்திற்கு மட்டும் பணிபுரியும் கூலிக்காரர்களாக செயல்பட்டனர். 

அவர்கள் தங்களுடைய மந்தைகளுக்கு ஞானஉணவு அளிக்கவில்லை. மாறாக அவர்கள் தங்கள் வயிற்றை நிரப்புவதிலேயே கருத்தாயிருந்தனர். ஓநாய்கள் உள்ளே புகுந்தன. சர்வேசுரனுடைய இல்லத்தின் எதிரிகளை எதிர்த்து நிற்கும் தடைச்சுவராக இந்த ஞான மேய்ப்பர்கள் செயல்படாமல் அவர்களை உள்ளே நுழைய விட்டுவிட்டனர்” என்று குறிப்பிடுகின்றார். திருச்சபையின் ஞான மேய்ப்பர்களின் இத்தகைய துர்மாதிரிகையான ஜீவியமே ஆல்பிஜென்சிய பதிதத்தை எளிதாக பரப்புவதற்கான ஏற்புடைய சாதனமாக இருந்ததாக அப்பதிததர்கள் பாப்பரசரின் குழுவினரான அத்துறவியரிடம் வெளிப்படுத்தினர். “அவர்களுடைய கனிகளைக் கொண்டே அவர்களை அறிந்துகொள்ளுங்கள்” என்ற ஆண்டவருடைய திவ்ய வார்த்தைகளையே மேற்கோளாகக் கூறி ஞானமேய்ப்பர்களின் பொறுப்பற்ற உலகப்பற்றுள்ள ஜீவியத்தை அவர்கள் சுட்டிக்காட்டலாயினர். 

இதைக்குறித்து பெரிதும் கவலையும் துயரமும் அடைந்தவராக, பாப்பரசர் வந்.டீகோ ஆண்டகையை நோக்கி, “என் மகனே! உமது அலுவல் மேற்கில் உள்ளது. (வந்.டீகோ ஆண்டகை பாப்பரசரிடம் விண்ணப்பித்த டார்டார் இனத்தவரை மனந்திருப்பும் வேதபோதக அலுவல் கிழக்கில் இருந்தது). உடனே அங்கு திரும்பிச் செல்லுங்கள். பல்லாயிரக்கணக்கான மக்களின் இரட்சணியம் ஆபத்தில் உள்ளது” என்றார். மேலும் பாப்பரசர்;, “சில வருடங்களுக்கு முன்பு பிரான்சின் தெற்கு பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் ஆல்பிஜென்சிய பதிதத்தை அழிப்பதற்காக சிஸ்டர்ஷியன் துறவியர் சென்றனர். அங்கு அவர்கள் ஆற்றிவரும் ஞானபிரசங்கங்கள் மற்றும் வேதபோதக அலுவல்கள் அவர்களுக்கு இதுவரை சொற்ப வெற்றியை மட்டுமே பெற்றுத்தந்துள்ளன. இதனால் அத்துறவியர் மிகவும் உற்சாகமிழந்துள்ளனர். நீங்கள் தான் அவர்களுக்கு உதவ முயலவேண்டும்” என்றார்.

பரிசுத்த கீழ்படிதல் சர்வேசுரனுக்கு மிகஉகந்த பலியாகும் என்று நன்கறிந்த வந்.டீகோ ஆண்டகை உடனே பாப்பரசரிடம், “பரிசுத்த தந்தையே! நல்லது. அத்துறவிகளுக்கு உதவ முற்படுவேன்!” என்றார். பிறகு பாப்பரசர் தன் கவலையிலிருந்து மிண்டவராக, அருகிலிருந்த அர்ச்.சாமிநாதரிடம், “ என் மகனே! நிங்களும் இவருடன் சேர்ந்து அத்துறவிகளுக்கு உதவிடுங்கள்” என்றார். “ஆமாம். பரிசுத்த தந்தையே! தாங்கள் அதை விரும்புவீர்களானால், நானும் அவர்களுக்கு உதவிடுவேன்” என்றார் அர்ச்.சாமிநாதர்.

(தொடரும்) †



அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 5







Please Join our Telegram Channel

அர்ச்.சாமிநாதரின் ஜீவிய சரித்திரம்: அத்தியாயம் 5

 -ப்ளாஞ்ச் அரசியை சந்திக்கிறார்


முதன் முதலாக ஒரு ஆல்பிஜென்சிய பதிதனை மனந்திருப்புவதில் அடைந்த வெற்றியைக் குறித்து அர்ச்.சாமிநாதரின் இருதயம் விவரிக்கமுடியாத நன்றியினாலும் உறுதியான திர்மானத்தினாலும் நிறைந்திருந்தது. நம் சத்திய வேத விசுவாசத்தை பிரசங்கிப்பதையே வேதபோதக அலுவலாகக் கொண்ட ஒரு சந்நியாச சபையை நிறுவுவதற்கான திர்மானம் அவரிடம் ஏற்பட்டது. வந்.டீகோ ஆண்டகையும் அர்ச்.சாமிநாதரும் காஸ்டிலின் அரசனுடைய தூதுவர்களாக பிரான்சு நாட்டின் அரசனையும் காணச்சென்றனர். அப்போது 8ம் லூயிஸ் அரசன் அந்நாட்டை ஆண்டு வந்தான். அவனுடைய மனைவி ப்ளாஞ்ச் அம்மாள் ஒரு பக்திமிகுந்த நல்ல கத்தோலிக்க பெண்மணி. ப்ளாஞ்ச் அரசிக்குக் குழந்தை இல்லாததால் மிக துயரத்தில் இருந்தாள்.

அதைக்கண்ட அர்ச்.சாமிநாதர் அவள் மேல் இரங்கி, அவளிடம் ஜெபமாலையைப் பற்றிக் கூறினார். அவ்வுன்னத ஜெபமாலையை தினமும் செய்து வரும்படி அவளுக்கு அறிவுரை கூறினார். அர்ச்சிஷ்டவருடைய புத்திமதியை, ப்ளாஞ்ச் அரசி உடனே முழுமனதுடன் கடைபிடித்து தினமும் ஜெபமாலையை பக்தியுடன் ஜெபித்து வந்தாள். ஜெபமாலை பக்தியை தன் நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் பரப்பினாள். குழந்தை வரத்திற்காக ஜெபமாலையில் தனக்காக வேண்டிக் கொள்ளுமாறு தன் நாட்டு பிரஜைகளிடம் விண்ணப்பித்தாள். அவர்களும் தன்னுடன் சேர்ந்து ஜெபமாலை செய்யும்படி ஏற்பாடு செய்தாள். பிரான்சு நாட்டு அரசனும், அரசியும், அந்நாட்டு மக்கள் அனைவரும் இவ்வாறு சேர்ந்து ஜெபமாலை ஜெபித்ததின் விளைவாக அந்த அரசதம்பதியருக்குப் பிறந்தவர்தான் மாபெரும் அர்ச்சிஷ்டவரான அர்ச்.லூயிஸ் அரசர். இவர் 9ம் லூயிஸ் அரசராக பிரான்சை ஆண்டார். 1215ம் ஆண்டு பிறந்தார். ப்ளாஞ்ச் அம்மாள் தன் குழந்தைக்கு உத்தம கத்தோலிக்க வேதத்தின் ஞானஉபதேசத்தைக் கற்பித்து வந்தாள்0 தன் மகன் லூயிஸ் ஒரு பட்சமுள்ள, பக்தியுள்ள அரசனாக நீதியுடன் பிரான்சை ஆளவேண்டுமென்று ஆசித்தாள். 

அவள் தன் மகனிடம், “மகனே! பாவமே உலகத்தில் மாபெரும் திமை என்பதை ஒருபோதும் மறவாதே! நான் உன்னை நேசிப்பது போல எந்தத் தாயும் தன் மகனை நேசித்ததில்லை. என்றாலும் நீ ஒரு சாவான பாவம் செய்து நம் நேச ஆண்டவரை மனநோகச் செய்வதை விட நீ சாவதைப் பார்க்க ஆசிப்பேன்” என்று அடிக்கடி கூறுவாள். இவர் தனது 12ம் வயதிலேயே, தன் தந்தையான 8ம் லூயிஸ் இறந்ததால், பிரான்சின் அரசரானார். அதாவது 1227ம் ஆண்டு முதல் 1270ம் ஆண்டு வரை உத்தமமான விதத்தில் மெய்யான கத்தோலிக்க அரசராக பிரான்சை ஆண்டு வந்தார். தினமும் காலையில் திவ்யபலிபூசையை பக்தியுடன் கண்டு தன் நாட்டிற்காக ஒப்புக் கொடுப்பார். அதன் பிறகே, தன் அரச அலுவல்களைக் கவனிப்பார். விசுவாச பிரமாணத்தில் “வார்த்தையானவர் மாமிசமானார்”என்று கூறும்போதும் ஆண்டவரின் திவ்ய பாடுகளில் “ஆண்டவர் மரித்தார்” என்ற சுவிசேஷம் வாசிக்கப்படும்போதும் முழந்தாளிடும் வழக்கத்தை துவக்கியவர் இவரே.

இவர் தன் பிறந்த நாளைக் கொண்டாட மாட்டார். தான் ஞானஸ்நானம் பெற்ற நாளையே ஆடம்பரமாகக் கொண்டாடுவார். தினமும் 100 ஏழைகளுக்கு உணவைஅளிப்பார். திமைகளையும் பாவத்தையும் அகற்றி பிரான்சு நாட்டை நல்லொழுக்கமுள்ள கத்தோலிக்க நாடாக மாற்றுவதில் அரும்பாடு பட்டார்.தேவதூஷணமாக பேசுபவர்களுக்கும் தியவார்த்தைகளைப் பேசுபவர்களுக்கும் மிகக் கடுமையான தண்டனைகளை விதிக்கும் சட்டத்தை ஏற்படுத்தினார். இவ்வாறு இவருடைய காலம் கத்தோலிக்க நாடான பிரான்சின் பொற்காலம் என்று அழைக்கப் படுகின்றது.

இவ்விருபெரும் அர்ச்சிஷ்டவர்களையும் இணைத்த இந்நிகழ்வை எப்போதும் நினைத்து மகிழும் அர்ச்.சாமிநாதர் சபையினர் அர்ச்.லூயிஸ் அரசரை “மகா பரிசுத்த ஜெபமாலையின் குழந்தை” என்று அழைக்கின்றனர். அடுத்த கோடைகாலத்தில் காஸ்டிலின் இளவரசனுடன் டென்மார்க்நாட்டின் இளவரசியின் திருமணமானது நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் டென்மார்க் நாட்டின் இளவரசி திடீரென்று இறந்து போகவே வந். டீகோ ஆண்டகை அரசனுடைய தூதுக்குழுவிலிருந்து விடுபட்டவராக அப்போதைய மூன்றாம் இன்னசன்ட் பாப்பரசரை சந்திப்பதற்காக அர்ச்.சாமிநாதருடன் ரோமாபுரிக்கு சென்றார். † (தொடரும


அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 4

திங்கள், 20 டிசம்பர், 2021

அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 4

  ஆல்பிஜென்சிய பதிதர்களின் அட்டூழியம்


காஸ்டிலின்
அரசனான 8ம் அல்போன்ஸ் தன் மூத்த மகனுக்கு டென்மார்க் நாட்டின் அரசனான வால்டேமாரின் மகளான இளவரசிக்கு திருமணம் ஏற்பாடு செய்வதற்காக அந்நாட்டு அரசனிடம் தன் நாட்டின் பல உயர்குல அரண்மனை அதிகாரிகள் மற்றும் குருக்கள் அடங்கிய தூதுக்குழு ஒன்றை அனுப்பினான். வந். டீகோ மேற்றிராணியாரையும் அவர்களுடன் செல்வதற்கு அரசன் ஏற்பாடு செய்தான். எனவே 1203ம் ஆண்டில் டென்மார்க் செல்வதற்கான பயணத்தில் தன்னுடன் தன் உற்ற நண்பரான அர்ச்.சாமிநாதரையும் மேற்றிராணியார் அழைத்துச் சென்றார். வடக்கு ஐரோப்பிய நாடான டென்மார்க்கை நோக்கி அரசாங்க தூதுக்குழு பயணம் செய்தபோது 300 மைல் தூரம் சென்றபோது பிரான்சின் தெற்கு பிராந்தியத்தை அடைந்தனர். அப்பகுதியிலுள்ள கத்தோலிக்கு தேவாலயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு கிராமங்களும் நகரங்களும் சு+றையாடப்பட்டிருப்பதையும் வயல்வெளிகள் எரிக்கப்பட்டு கருமையாக காட்சியளிப்பதையும் மிகவும் அதிர்ச்சியுடனும் துயரத்துடனும் பார்த்தனர். அதற்கான காரணத்தை வினவியபோது, ஆல்பி என்ற நகரில் உருவாகி பிரான்சு நாடு முழுவதையும் சீர்குலைத்து வரும் ஆல்பிஜென்சிய பதிதர்கள் கத்தோலிக்கு வேதத்தை அழிப்பதற்காக கையாண்ட வெறியாட்ட செயல்முறையே அது என்று கண்டறிந்தனர்.

அப்பதிதர்கள் கத்தோலிக்கர் வசிக்கும் ஊர்களைக் கொள்ளையடித்து சுறையாடுவது மட்டுமல்லாமல் அங்கிருக்கும் சிறுவர்களையும் சிறைபிடித்துச் சென்றனர் என்பதையும் கண்டறிந்தனர். சில வருடங்களாகவே ஆல்பிஜென்சிய பதிதர்கள் கத்தோலிக்கருக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டிருப்பது இவர்களுக்குத் தெரிய வந்தது. ஏற்கனவே கிழக்கு ஐரோப்பாவில் டைனிப்பர், ஓல்கா ஆற்றங்கரைகளில் வசித்துவரும் டார்டார் என்ற காட்டுமிராண்டி இனத்தவர்கள் அவ்வப்போது மேற்கத்திய கிறிஸ்துவ நாடுகளைக் கொள்ளையடித்து பெரும் சேதத்தை விளைவித்துவருவதைக் குறித்து அக்காட்டுமிராண்டிகளிடம் சென்று வேதபோதக அலுவலை மேற்கொள்வதற்காக மேற்றிராணியார் வந்.டீகோ ஆண்டகையை பாப்பரசர் அனுமதிப்பாரேயாகில் அவருடன் அவ்வுன்னத அப்போஸ்தலிக்க அலுவலை நிறைவேற்றுவதில் என் ஜீவியத்தின் எஞ்சிய காலத்தை அகமகிழ்வுடன் கழிப்பேன். அதுவே என் பெரும் பாக்கியமாகும்என்று அர்ச்.சாமிநாதர் அடிக்கடி தனக்குள் சொல்லிக் கொள்வார். ஆல்பிஜென்சியர்களையும் டார்டார் இனத்தவரையும் மனந்திருப்புவதற்கான ஆன்ம இரட்சணிய அலுவலை உடனே துவக்குவதற்கான உன்னத தேவசிநேக நெருப்பினால் இருவருடைய இருதயங்களும் பற்றியெரிந்தன.

அரசாங்க திருமண ஏற்பாட்டிற்காக சென்று கொண்டிருந்த அரண்மனைக் குழுவிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, மேற்றிராணியாரும் சாமிநாதரும், ஆல்பிஜென்சிய பதிதர்களால் நலிவடைந்திருந்த ஏழைக் குடியானவர்களுக்கு உதவிடும்வகையில் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பண உதவி செய்தனர். அர்ச்.சாமிநாதர் மேற்றிராணியாரிடம், “ஆண்டவரே! அந்தப் பதிதர்களைப் பற்றி நன்கு அறியும்படியாகவும் அவர்களால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு நாம் உதவும் வகையில் சிறிது நேரம் நம் பயணத்தை ஒத்தி வைப்போம். நன்றாக சாப்பிட்டவுடன் நடந்ததைப்பற்றி அவர்கள் நமக்கு விளக்கமாகக் கூறமுடியும். அதனால் நம்மாலான உதவியை அவர்களுக்கு அளிக்கலாம்என்றார்

அதற்கு மேற்றிராணியாரும் சம்மதித்தார். அர்ச்.சாமிநாதர் கொடுத்த் உணவை உண்டபிறகு, புத்துணர்வை அடைந்த அந்த எளிய குடியானவர்களிடம், வந். டீகோ ஆண்டகை, “ அன்பான பிள்ளைகளே! அந்தப் பதிதர்களைப்பற்றி விரிவாகக் கூறுங்கள்என்றார். அதற்கு அவர்கள், “ ஆண்டவரே! ஆல்பிஜென்சிய பதிதர்கள் இரண்டு கடவுள்கள் இருக்கிறார்கள் என்றும் ஒரு கடவுள் நல்லவர் என்றும் மற்றொருவர் கெட்டவர் என்றும் போதிக்கிறார்கள். நல்ல கடவுள் ஆத்துமத்தையும் கெட்ட கடவுள் சாPரத்தையும் படைத்தாரென்றும் ஆனால் கெட்ட கடவுள் படைத்த சாPரம் கெட்டதாக இருப்பதால் அதை அழிக்க வேண்டும் என்ற கொள்கையை பரப்பி அவர்கள் தற்கொலை செய்வதை நடைமுறைபடுத்தி வருகின்றனர். அவர்கள் திருமணத்தையும் மற்ற எந்த தேவதிரவிய அனுமானத்தையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள். சுவிசேஷத்தையும் திவ்யபலிபூசையையும் அவர்கள் ஏற்காமல் பகைக்கிறார்கள். நாங்கள் அவர்களுடைய பதித போதனைகளை ஏற்காததால் எங்களுடைய வயல்களை எரித்தனர். தேவாலயங்களையெல்லாம் அழித்துப் போட்டனர்என்றனர். இதைக் கேட்ட மேற்றிராணியாருடைய முகம் துயரத்தால் கருத்தது.

அவர்களிடம் அவர் பின்வருமாறு உரையாடினார்:

பரிசுத்த ஸ்தலங்களை கொள்ளையிட்ட பொருட்களை வைத்து அவர்கள் என்ன செய்கின்றனர்?”

ஆண்டவரே! அவற்றை அவர்கள் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்துகின்றனர்

பரிசுத்த பண்டங்களையுமா?”

ஆமாம்

அது அவசங்கையாயிற்றே!”

ஆமாம். ஆண்டவரே

அப்பகுதியைச் சேர்ந்த தூலோஸ் மற்றும் பெசியர்ஸ் குறுநிலங்களின் பிரபுக்களும் இந்த பதிதர்களின் வஞ்சக வலையில் சிக்குண்டு பதிதர்களாக ஜீவிக்கலாயினர். அவர்கள் அந்தப் பதித மத வளர்ச்சிக்காக தங்களுடைய பதவி பெயர் கீர்த்திபணத்தைக் கொண்டு உதவிவந்தனர். தன் பேரப்பிள்ளைகளை பதிதர்கள் சிறைபிடித்துச் சென்றதால் மிகவும் வருத்தத்துடன ஒரு வயதுமுதிர்ந்த குடியானவன், மேற்றிராணியாரிடம் வந்து, “ ஆண்டவரே, இப்போது உங்களுடைய உதவி மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ஆல்பிஜென்சியர் மீண்டும் இங்கு திரும்பி வருவார்கள். எங்களுக்கு என்ன நேருமோ என்று பயமாயிருக்கிறதுஎன்றார்.

மேற்றிராணியார் அவர்களை திடப்படுத்தி ஆறுதல் சொல்ல முற்பட்டபோது, அரசனுடைய தூதுக் குழுவினரை அழைத்துச் சென்ற படைவீரர்கள் இருவர் குதிரையில் வந்து மேற்றிராணியாரிடம்,“ஆண்டவரே உங்களுக்காக இரண்டு மணி நேரம் காத்திருக்கிறோம். என்ன நேர்ந்தது?”என்றுவினவினர்.

அதற்குமேற்றிராணியார்

நானும் சங்.தோமினிக் சுவாமியாரும் இந்த விவசாயிகள் தங்களுக்கு பதிதர்களால் நிகழ்ந்த கொடுமைகளையும் இழப்புகளையும் பற்றி கூறக் கேட்டுக் கொண்டிருந்தோம்என்றார்.

அதற்கு அவ்வீரர்கள், “இது போல ஆயிரக்கணக்கான மக்கள் அவதியுறுகின்றனர். ஆல்பிஜென்சிய பதிதர்களோ அதிக படைபலம் மிக்கவர்கள். நாம் ஒன்றும் செய்ய முடியாதுஎன்று கூறினர்.

ஆனால் அதைப்பற்றி நாம் சிந்தித்தால் ..”

அதற்கு நமக்கு நேரமில்லை ஆண்டவரே! நாம் நமது பயணத்தைத் தொடரவேண்டும்டென்மார்க் நாட்டைஅடைவதற்கு இன்னும் ஆயிரக்கணக்கான மைல் தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் மேற்றிராணியார் குடியானவர்களிடம், “ என் பிரியமான பிள்ளைகளே! உங்களுக்கு எங்களால் தற்போது செய்யக்கூடிய மிகச்சிறந்த உதவி ஜெபமாகும்என்று கூறிக்கொண்டே தனது வலது கரத்தை அவர்களுக்கு மேல் உயர்த்தி சிலுவை அடையாளமிட்டு ஜெபம் சொல்லி ஆசீர்வதித்தார். இதுவரை தன் ஜீவியத்தில் யாதொரு நிச்சயமான குறிக்கோளும் இல்லாமல் இருந்ததை உணர்ந்திருந்த அர்ச்.சாமிநாதர்

இப்பொழுது ஆல்பிஜென்சிய பதிதத்தை வேருடன் அழிக்கும்படியாகவும் அப்பதிதர்களை மனந்திருப்பும்படியாகவும் மாபெரும் அப்போஸ்தலிக்க அலுவலுக்காகவே தான் விசேஷமாக அழைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தார்.

தூலோஸ் நகரிலிருந்த ஒரு இல்லத்தில் ஒரு இரவு தங்க நேரிட்ட போது, அந்த வீட்டுக்காரன் ஆல்பிஜென்சியன் என்பதை அறிந்தனர். இந்த ஒரு ஆத்துமத்தையாவது ஆண்டவரிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று அர்ச்.சாமிநாதர் மிகவும் ஆவல் கொண்டார். அன்று இரவு முழுவதும் அவன் அர்ச்.சாமிநாதரிடம் தர்க்கம் செய்வதில் ஈடுபட்டான். அர்ச்.சாமிநாதரின் தெளிந்த மகோன்னதமான ஞானஉபதேசத்தினாலும் பக்தி பற்றுதலினாலும் அடுத்த நாள் காலையில் அப்பதிதன் தன் கல்நெஞ்சு இளகியவனாக சர்வேசுரனிடம் மனந்திரும்பி திருச்சபைக்குள் சேர்க்கப்பட்டான்.†

அர்ச்.அமலோற்பவ மாமரியே வாழ்க! (தொடரும்)


அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 2


அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 3

   ஓஸ்மா மேற்றிராசனத்தில் சாமிநாதர்

மற்றொரு சமயம், குருமடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, அர்ச். சாமிநாதர் ஒரு ஏழைப் பெண்ணை சந்தித்தார். அவள் மீளாத் துயருடன் இருந்தாள். அவளுடைய மகன் மகமதியரான மூர் இனத்தாரால் அடிமையாக பிடிபட்டு கொண்டு செல்லப்பட்டதால், அவள் அளவில்லாத வேதனை அடைந்தாள். இதை அறிந்தவுடன் அர்ச்.சாமிநாதர் அவள் மேல் மிகுந்த இரக்கம் கொண்டார். அவளுடைய மகனை மீட்பதற்கு தன்னிடம் போதிய பணம் இல்லாததை உணர்ந்தவராக, அர்ச்.சாமிநாதர் அவளிடம் தன்னை அவளுடைய மகனுக்கு பதிலாக அந்த மகமதியர்களிடம் விற்றுக் கொள்ளும்படி வேண்டினார். ஆனால் அந்தப் பெண் அதற்கு உடன்படிவில்லை. இந்நிகழ்ச்சி அர்ச்.சாமிநாதரின் அளவற்ற இரக்க சிந்தையை நமக்கு எடுத்துரைக்கின்றது. அவருடைய இளமையில் ஏற்பட்ட கிறிஸ்துவ அடிமைகளை மீட்கும் ஆவல், பின்னாளில் அவர் கிறிஸ்துவ அடிமைகளை
மகமதியர்களிடமிருந்து மீட்பதற்காகவே ஒரு துறவற சபையை ஏற்படுத்துவதற்கான திட்டங்களில் ஈடுபடலானார். ஆனால் அத்தகைய துறவற சபை அர்ச்.மாத்தா அருளப்பரால் ஏற்படுத்தப்பட்டது.

அர்ச்.சாமிநாதர் தமது 25வது வயதில் 1195ம் ஆண்டில் குருப்பட்டம் பெற்றார். அப்போது வந்.மார்டின் டி பாசான் ஆண்டகை ஓஸ்மா நகரத்து மேற்றிராணியாராக இருந்தார். அவருடைய விருப்பத்தின்படியும், மேற்றிராசனத்தின் சு+ழல்கள் மற்றும் தேவைகளின் பேரில் சாமிநாதர் மேற்றிராணியாருடைய இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டார். மேற்றிராசனத்தின் துறவற மடங்களுக்கு மேற்றிராணியாரே மடாதிபதியாக பொறுப்பேற்றிருந்தார். அதற்கு உதவும் பொருட்டு அனேக குருக்கள் மேற்றிராணியாருடைய இல்லத்தில் தங்கியிருந்தனர். திருச்சபையின் சட்ட திட்டங்களையும் ஒழுங்குகளையும் தனது மேற்றிராசனத்தில் நிலைநிறுத்தி அதனை சீர்திருத்துவதில் இந்த மேற்றிராணியார் பெரிதும் அயராமல் உழைத்தார். இவ்வலுவலில் மேற்றி;ராணியாருக்கு சங். டான் டீகோ டி

அஸ்வெடோ சுவாமியார் உறுதுணையாக இருந்தார். இக்குருவானவரும் மேற்றராணியாரும் அர்ச்.சாமிநாதரைப் பற்றிக் கேள்விபட்டு அவரை தங்களுடைய இல்லத்திற்கு வரவழைத்தனர். இங்குதான் சாமிநாதர் ஜெபத்திலும் வேதசாஸ்திரநுரல்களைப் படிப்பதிலும் ஆழ்ந்து ஈடுபடலானார்.

கிராமபுற பங்குகளை சந்தித்து வந்தார். அவருடைய அர்ச்சிஷ்டதனமும் அவரிடம் மறைந்திருந்த அற்புதமான திறமைகளும் ஞானமும் உலகத்திற்குப் புலப்படும்படி வெளிப்படலாயின. இரண்டு வருடங்களுக்குள் அங்கிருந்த உதவி செய்யும் குருக்களின் மடத்தின் துணை அதிபராக நியமிக்கப்பட்டார். மற்ற எல்லாரையும் விட இவரே வயதில் இளையவராக இருந்தார். 2 வருடங்களுக்குப் பிறகு, வந்.மார்டின் ஆண்டகை இறந்தார். சங்.டான் டீகோ சுவாமியார் ஓஸ்மா நகர மேற்றிராணியாரானார். இவர் ஆன்ம இரட்சணிய ஆவல் மிக்கவர். அர்ச்சிஷ்ட ஜீவியம் ஜீவித்து வந்தார். 9 வருடங்கள் ஓஸ்மா மேற்றிராசனத்தை சீர்திருத்தும் அலுவலில் அர்ச்.சாமிநாதர் மேற்றிராணியாருக்கு உதவிபுரிந்து வந்தார். சாக்சனி ஜோர்டான் என்ற சாமிநாதசபைத் துறவி இக்காலத்தில் அர்ச்.சாமிநாதர் வாழ்ந்த ஜீவியத்தைப் பற்றி பின்வருமாறு விவரிக்கின்றார்:

அர்ச்.சாமிநாதர், சகோதர குருக்களிடையே எல்லாருக்கும் முன்பாக செல்லும் ஒரு பற்றி எரிந்து சுடர்விடும் தீப்பந்தம் போல பரிசுத்த தனத்தில் முதன்மையாக விளங்கினார். தாழ்ச்சிமிகுந்த அர்ச்.சாமிநாதர் மற்ற எல்லாரைவிட தன்னை கடையராக நிறுத்திக் கொள்வார்.

கோடைகால குளிர்தரும் இனிய நறுமணத்தை வீசுபவராக எல்லாருக்கும் ஞான ஜீவியம் தரும் ஜீவிய மணத்தை தன்னைச் சுற்றி ஒளிரச் செய்பவராக திகழ்ந்தார். பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் எப்பொழுதும் இடைவிடாமல் தேவாலயத்தில் ஜெபத்தில் ஈடுபட்டிருப்பார். பாவிகளுக்காகவும்  துன்பப்படுகிறவர்களுக்காகவும் அழுது மன்றாடுவதற்கான தேவவரப்ரசாதத்தை

சர்வேசுரன் சாமிநாதருக்குக் கொடுத்திருந்தார். வேதனைபடுபவர்களின் துயரங்களை, அர்ச்.சாமிநாதர் தனது பரிசுத்த இரக்கத்தினுடைய அந்தரங்க சன்னிதானத்திற்குள் வைத்துத் தாங்கிக் கொண்டிருந்தார்.

எனவே இந்த உன்னதமான இரக்க சுபாவ மிகுதியினால் அவருடைய இருதயம் அழுத்தப்பட்டபோதெல்லாம் கண்ணீராக அவ்விரக்கம் அவருடைய கண்களிலிருந்து வழிந்தோடியது. அவர் தன் அறையில் கதவை மூடிக் கொண்டு ஜெபம் செய்வதிலும், சர்வேசுரனிடம் உரையாடுவதிலும் இரவு நேரத்தை செலவிடுவது அவருடைய அன்றாட வழக்கமாகும். ஆனால் அவருடைய விருப்பத்திற்கு மாறாக அவருடைய முனகல்களும் பெருமூச்சுகளும் வெளியே கேட்கும். மெய்யான தேவசிநேகமே அவர் சர்வேசுரனிடம் மன்றாடிக் கேட்ட நிலையான வரமாகும். நமது இரட்சணியத்துக்காக தமக்காக ஒன்றையும் ஒதுக்காமல் தம்மை முழுவதுமாக பலியிட்ட நமது திவ்ய இரட்சகரின் முன்மாதிரிகையைப் பின்பற்றி கிறிஸ்துவின் உண்மையான அங்கத்தினராகும் வண்ணம் அர்ச். சாமிநாதர் ஆத்தும இரட்சணிய அலுவலுக்காக தன்னை அர்ப்பணிப்பதில் எப்பொழுதும் பிரமாணிக்கமுடன் ஈடுபட்டிருந்தார்” (தொடரும்)

 



அர்ச்.கன்னிமாமரியே வாழ்க!


அர்ச்.சாமிநாதர் ஜீவிய சரித்திரம் அத்தியாயம் 2: